அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
ஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரும் என்.கே. அஷோக்பரன் / 2019 ஓகஸ்ட் 19 திங்கட்கிழமை, பி.ப. 01:14 அடுத்த ஜனாதிபதித் தேர்தல் களம், சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. சில நாள்களுக்கு முன்பு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது பெரும் மாநாட்டில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில், ஜனாதிபதி வேட்பாளராகத் தன்னுடைய தம்பியும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ களம் காண்பார் என்று, மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார். இது, பலரும் எதிர்பார்த்த அறிவிப்புத்தான். ராஜபக்ஷ குடும்பத்தைத் தாண்டி, வேறு நபரைத் தெரிவு செய்வதில், ராஜபக்ஷ குடும்பம் தயாராகவில்லை என்பதை, இது சுட்டி நிற்பதையும் நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. மறுபுறத்தில், ஐக…
-
- 0 replies
- 377 views
-
-
இலங்கையில் அதிகாரப்பரவலாக்கலுக்கான வாய்ப்புக்களை மேலும் மங்கச்செய்யும் காஷ்மீர் நிகழ்வுகள் பி.கே.பாலச்சந்திரன் கொழும்பு, ( நியூஸ் இன் ஏசியா ) இந்தியாவில் சமஷ்டிமுறைக்கும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட ஜம்மு -- காஷ்மீர் பிராந்தியத்துக்கான அதிகாரப் பரவலாக்கத்துக்கும் நடந்திருப்பவை இலங்கையின் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் கீழ் வழங்கப்பட்டிருப்பவற்றையும் விட கூடுதலான அதிகாரப்பரவலாக்கலை இலங்கைத் தமிழர்கள் பெறுவதற்கான வாய்ப்புகளை மேலும் மங்கச்செய்யக்கூடும். பலம்பொருந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசாங்கம் ஜம்மு -- காஷ்மீர் மாநிலத்துக்கு பெருமளவு சுயாட்சியை வழங்கியிருந்த இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவையும…
-
- 0 replies
- 324 views
-
-
தனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்? நிலாந்தன் August 18, 2019 சில வாரங்களுக்கு முன்பு டான் டிவியின் அதிபர் குகநாதன் முகநூலில் பின்வருமாறு ஒரு குறிப்பை எழுதி இருந்தார்……… ‘சிங்கள மக்கள் தெரிவு செய்யப் போகும் அடுத்த ஜனாதிபதி! சிறுபான்மையினரின் வாக்குகள் இல்லாமல் யாரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று பலரும் எழுதி வருகின்றனர்.ஒரு சின்னக் கணக்கு. பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்-15,992,096. வாக்களிப்பவர்கள் அதிகபட்சம் 80 வீதம்-12,793,676. வெற்றிபெறத் தேவையானது-6,396,839. தனிச்சிங்கள் வாக்காளர்கள்-11,302,393. அவர்களில் வாக்களிப்பவர்கள் 80 வீதம்-9,041,914. இந்த வாக்குகளில் 70.74 வீதம்-6,396,839. ஆக சிங்கள மக்க…
-
- 0 replies
- 608 views
-
-
களமிறங்கினார் கோத்தா விடாப்பிடியில் ரணில் - சஜித் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பின் ஜனாதிபதி வேட்பாளராக அவரின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக் ஷ களமிறக்கப்படுவார், பெயரிடப்படுவார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டிருந்த சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அது நடந்தது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ உத்தியோகபூர்வமாக கடந்த ஞாயிற்றுக் கிழமை அறிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேசிய சம்மேளனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்…
-
- 0 replies
- 936 views
-
-
ஜனாதிபதி தேர்தலும் அரசியல் மருட்சியும்! அடுத்த ஜனாதிபதி யார் என்பதைவிட அடுத்த ஜனாதிபதிக்கான வேட்பாளர்கள் யார் என்பதில் இப்போது கூடிய கவனம் செலுத்தப்படுகின்றது. குறிப்பாக தமிழ் மக்கள் இது விடயத்தில் அதிக ஆர்வமுடையவர்களாகக் காணப்படுகின்றார்கள். ஜனாதிபதி ஆட்சி முறைமையில் கடந்த காலங்களில் அவர்களுக்கு எற்பட்டுள்ள கசப்பானதும், மறக்க முடியாததுமான அரசியல் அனுபவங்களே இதற்கு முக்கிய காரணம். அரசியல் கட்சிகளே ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்கின்றன. வழமையாக முக்கிய கட்சிகளின் தலைவர்களே வேட்பாளர்களாக களமிறங்குவார்கள். அதனால் கட்சிகளின் தலைவர் மீது மக்கள் ஏற்கனவே கொண்டிரு…
-
- 0 replies
- 454 views
-
-
அரசியல்வாதி கோட்டாவின் அவலம் கே. சஞ்சயன் / 2019 ஓகஸ்ட் 16 வெள்ளிக்கிழமை, மு.ப. 08:29 Comments - 0 சிறுபான்மையினரின் ஆதரவு இன்றி, சிங்களவர்களின் ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று, சில ஆண்டுகளாகக் கூறிவந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டதும், பதற்றமடைந்து போயிருக்கிறார். அண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தனை, அழைத்துப் பேசியிருந்தார் கோட்டாபய ராஜபக்ஷ. இந்தச் சந்திப்புத் தொடர்பாக, அரசல்புரசலாகத் தகவல்கள் வெளியானதும் சித்தார்த்தன், ஊடகங்களிடம் உண்மையைக் கக்கினார். அதில், “தமிழ் மக்களின்…
-
- 0 replies
- 538 views
-
-
மிகக் கவனமாக சிந்திக்க வேண்டிய முஸ்லிம்கள் மொஹமட் பாதுஷா / 2019 ஓகஸ்ட் 16 வெள்ளிக்கிழமை, மு.ப. 06:51 ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் முன்னரே, ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக, கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யார் என்றும் சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்குமென்றும் அரசியல் அரங்கில், கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. தங்களது எதிர்பார்ப்புகள் எல்லாம், நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில், முஸ்லிம்கள் முழுமூச்சாக நின்று, ஆட்சிபீடமேற்றிய தற்போதைய அரசாங்கமானது, அந்த எதிர்பார்ப்புகளைத் திருப்திப்படுத்தும்…
-
- 0 replies
- 1k views
-
-
- இலட்சுமணன் முள்ளிவாய்க்காலில், 2009ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் ஸ்தம்பிக்கச் செய்யப்பட்டதன் பின்னர்தான், தாம் முழுநேரப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும் விடுதலைப் புலிகள் காலத்தில், பகுதி நேரமாகத்தான் அரசியலில் ஈடுபட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக்கட்சி, புதுக் கதையொன்றைச் சொல்லி வருகின்றது. இந்தக் கருத்துத் தொடர்பில், தமிழ் மக்களிடம் பல்வேறுபட்ட ஐயப்பாடுகள் எழுந்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில், மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்களுக்குத் தெளிவூட்டும் வகையிலமைந்த, விழிப்புணர்வுக் கருத்தரங்கு, களுவாஞ்சிக்குடி, கிரான் ஆகிய இடங்களில் திங்கட்கிழமை (12) நடைபெற்றிருந்தது. இதன் முதலாவது கூட்டம், க…
-
- 0 replies
- 381 views
-
-
‘நேர் கொண்ட பார்வை’ காரை துர்க்கா / 2019 ஓகஸ்ட் 13 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:53 Comments - 0 நாங்கள், பாடசாலையில் கல்வி கற்ற காலம்; அன்று தமிழ்ப் பரீட்சை; ‘நான் விரும்பும் பெரியார்’ பற்றி எழுதுமாறு கட்டுரை எழுதும் பகுதியில் கேட்கப்பட்டிருந்தது. உடனடியாகவே, ‘நான் விரும்பும் பெரியார் மஹாத்மா காந்தி’ எனத் தொடங்கி, விரல்கள் எழுதிச் சென்றன. அவ்வாறாக, இலங்கைத் தமிழர்களின் மனங்களில் இந்தியப் பெரியார்கள் கொலுவீற்றிருந்தார்கள். இலங்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டே, தமிழர்கள் மீதான பேரினவாதத்தின் கொடூரக் கரங்கள் நீளத் தொடங்கிவிட்டன. எனவே, இதிலிருந்து இந்தியா எங்களைப் பாதுகாக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, காலங்காலமாகவே இலங்கைத் தமிழ் மக்கள் மனங்களில் குடிகொண்ட…
-
- 1 reply
- 784 views
-
-
ரணிலின் கைகளில், கோட்டாவின் வெற்றி-தோல்வி புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஓகஸ்ட் 14 புதன்கிழமை, மு.ப. 04:37 Comments - 0 எதிர்பார்க்கப்பட்டது போல, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக, நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷக்கள் தோற்கடிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட்ட போது, அவர்களின் மீளெழுகை இவ்வளவு துரிதமாக நிகழும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதுவும், ஐந்து வருடங்களுக்குள்ளேயே, ‘ராஜபக்ஷக்கள் எதிர் இன்னொருவர்’ என்கிற நிலையை, ஜனாதிபதித் தேர்தல் களத்தில் உருவாக்கி இருக்கிறார்கள். ஆட்சியில் இருக்கும் தரப்புக்கு எதிராக, வேட்பாளர்களைக் கண்டுபிடிப்பதும், அவரை மக்களிடம…
-
- 0 replies
- 981 views
-
-
மஹிந்தவும் 13 பிளஸூம் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஓகஸ்ட் 14 புதன்கிழமை, மு.ப. 03:29 Comments - 0 “இரண்டு வருடங்களில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும்” என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த மாதம் வடக்கில், கந்தரோடையில் நடைபெற்ற பாடசாலை வைபவமொன்றின் போது கூறியிருந்தார். தமது அரசாங்கத்துக்கு, நாடாளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை பலம் இல்லாதிருந்தமையே, கடந்த காலத்தில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க முடியாமல் போனதற்குக் காரணம் எனவும் பிரதமர் அக்கூட்டத்தில் கூறினார். அதேபோல், எதிர்க்கட்சிக் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, தாம் தலைமை தாங்கப் போகும் பொதுஜன பெரமுன பதவிக்கு வந்தால், இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, தமது ஆட்சிக்காலத்தில், தாம் வ…
-
- 0 replies
- 946 views
-
-
கோட்டா Vs சஜித் தெரிவுக்காக காத்திருக்கும் தமிழ்ப் பேசும் சமூகம் Editorial / 2019 ஓகஸ்ட் 13 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:59 Comments - 0 -அ. அகரன் அதிகாரமிக்கவர்களுக்கான போட்டியில்; இலங்கையின் அரசியல் களம் சூடுபிடித்து, நாளுக்குநாள் புத்தம் புதிய தகவல்கள், சுவாரஸ்யமிக்கதாக வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்தவகையில், ஜனநாயகத்துக்கான போராக, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் இருக்கவேண்டும் என்கின்ற கோரிக்கை, தற்போது வலுப்பெற்றுள்ள நிலையிலேயே ஜனாதிபதிக்கான வேட்பாளர்கள் தொடர்பில் சிந்திக்கத் தலைப்பட்டுள்ளோம். இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்னவென இருந்துவிட்டுப் போகும் நிலையில் சிறுபான்மைச் சமூகம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் இருந்துவிட முடியாது என்பதே யதார…
-
- 0 replies
- 847 views
-
-
பிரித்தானியாவின் புதிய சிக்கல் – போரிஸ் ஜோன்சன் August 8, 2019 159 . Views . பிரக்சிட் நெருக்கடியினால் முன்னால் பிரதமர் தெரேசா மே பதவி விலகியதைத் தொடர்ந்து போரிஸ் ஜோன்சன் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இப்சோஸ் மோரி (Ipsos Mori) என்னும் நிறுவனம், இவ்னிங் ஸ்டாண்டர்ட் (Evening Standard) பத்திரிகைக்காக நடத்திய கருத்துக் கணிப்பின்படி கன்சர்வேடிவ் கட்சிக்கான ஆதரவு தற்பொழுது பத்துப் புள்ளிகளால் அதிகரித்துள்ளது எனக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பினை விட முன்னணியில் அவர் நிற்பதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. பிரக்சிட்டினால் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாகவே அடுத்த பிரதமராக வரக்கூடிய சாத்தியம் அதிகமாயிருந்த ஜெரமி கோர்பின் பின்னுக்கு தள்ளப்பட்டு …
-
- 0 replies
- 668 views
-
-
நல்லூர் முருகனுக்கு வந்த சோதனை: ‘காக்கக் காக்க ஆமி காக்க நோக்க நோக்க ஸ்கானர்நோக்க’? நிலாந்தன்… August 10, 2019 ஈஸ்டர் குண்டு வெடிப்பையடுத்து ஐரோப்பாவில் விமான பயணங்களுக்கான டிக்கெட் ஏஜென்ட் ஆக இருக்கும் ஒருவர் தனது நண்பருக்குக் கூறிய தகவல்களின்படி ஓகஸ்ட் விடுமுறையில் தாயகத்துக்கு வர விரும்பிய புலம்பெயர்ந்த தமிழர்களில் கிட்டத்தட்ட 90 வீதத்துக்கும் அதிகமானவர்கள் தமது பயணச்சீட்டுகளை ரத்து செய்துவிட்டார்களாம்.தாயகத்தில் வாழும் அவர்களுடைய உறவினர்களும் நண்பர்களும் இங்கு வரவேண்டாம் என்று அவர்களுக்கு ஆலோசனை கூரியதாகவும் தெரியவந்தது. ஆனால் குண்டு வெடிப்பு நடந்த அடுத்தடுத்த மாதங்களில் நிலைமை ஒப்பீட்டளவில் வழமைக்கு திரும்பியது போல ஒரு தோற்றம் உண்டாக்கி…
-
- 3 replies
- 790 views
- 1 follower
-
-
காஷ்மிர் சிறப்பு அந்தஸ்து இரத்து: வரலாற்றில் புதிய அத்தியாயம் எம். காசிநாதன் / 2019 ஓகஸ்ட் 12 திங்கட்கிழமை, மு.ப. 04:26 Comments - 0 இந்தியாவின் புதிய வரலாறு, சுதந்திரப் போராட்டத்துக்குப் பிறகு தொடங்குகிறது. ஒரு மாநிலத்தை, இந்தியாவுடன் இணைப்பதற்காக அளிக்கப்பட்ட சிறப்புச் சலுகை, இரத்துச் செய்யப்பட்டுள்ளது. அரசமைப்பின் பிரிவு 370இல் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துக்கு, பாரதிய ஜனதாக் கட்சி, ஜனசங்க காலத்திலிருந்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக, “காஷ்மிருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கூடாது” என்று எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த, டொக்டர் ஷ்யாம் பிராசாத் முகர்ஜி, இராஜினாமாச…
-
- 0 replies
- 387 views
-
-
விக்னேஸ்வரனும் தீர்ப்பும் என்.கே. அஷோக்பரன் / 2019 ஓகஸ்ட் 12 திங்கட்கிழமை, மு.ப. 01:20 Comments - 0 இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால், அண்மையில் அரசமைப்பு ரீதியாகவும் தமிழர் அரசியல் தொடர்பிலும் இனப்பிரச்சினைத் தீர்வுடன் தொடர்பு மிக்கதுமானதொரு தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்புக்குள் பொதிந்துள்ள அரசமைப்பு முக்கியத்துவம், வௌிப்பார்வைக்குப் பலருக்குப் புலப்படாது போயிருக்கலாம். அது, இந்தத் தீர்ப்பின் முக்கியத்துவத்தை, தனிநபர்களின் அரசியல் பிரச்சினையாகப் பார்க்கும், அணுகும் போக்கை ஏற்படுத்தியிருக்கலாம்; ஆனால், இவற்றைத் தாண்டி, இந்தத் தீர்ப்பு, இந்த நாட்டின் அரசமைப்பையும் அதிகாரப் பகிர்வுக் கட்டமைப்பையும் அரசியலையும் குறிப்பாக, இனப்பிரச…
-
- 0 replies
- 441 views
-
-
தமிழ் - முஸ்லிம் இனவுறவு: பிள்ளையை கிள்ளிவிட்டுத் தொட்டிலை ஆட்டும் அரசியல் மொஹமட் பாதுஷா / 2019 ஓகஸ்ட் 11 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 05:56 Comments - 0 இனங்களுக்கு இடையிலான உறவு பற்றி, ஒவ்வொரு பருவகாலத்திலும் பேசப்படுகின்றது. குறிப்பாக, தமிழ்பேசும் சூழலில், தமிழர் - முஸ்லிம்களுக்கு இடையிலான உறவு பற்றிய கருத்தாடல்கள், தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. உண்மையில், பெரும்பாலான சாதாரண, அடிமட்டத் தமிழ், முஸ்லிம் மக்களிடையே, சொல்லிக் கொள்ளும்படியாக எந்தவித இனமுறுகலும் குரோதமும் கிடையாது. இவ்வாறிருக்கையில், அரசியல், மார்க்கம், இயக்கம் ஆகிய பின்னணிகளைக் கொண்ட, இனக் குழுமத்தினரிடையே, மேலும் இனவுறவைப் பலப்படுத்துவதற்கா…
-
- 0 replies
- 833 views
-
-
இலங்கைப் பொதுமக்கள் முன்னணி சார்பில் அடுத்த தேர்தலில் களமிறங்கப்போகும் அரச தலைவர் வேட்பாளர் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலரும் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்சதான் என்பது நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டாயிற்று. மகிந்த குடும்பத்தில் இருந்து அதிகார நாற்காலிக்காக வந்திருக்கக்கூடிய மற்றொரு நபராக மீண்டும் குடும்ப ஆதிக்கத்தின் வெளிப்பாடாக வந்திறங்கியிருக்கிறார் கோத்தபாய. மகிந்த அணியிலிருந்து அடுத்த வேட்பாளராக அவர் களமிறங்குவார் என்கிற எதிர்பார்ப்பும் எதிர்வுகூறல்களும் நீண்ட நாள்களாகவே இருந்து வந்திருக்கின்றன. …
-
- 0 replies
- 465 views
-
-
மஹிந்தவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தல் பரப்பு அதிகரித்து வருகின்ற சூழலில் நாளை 11ஆம் திகதி வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பானது நாட்டின் தேசிய அரசியலில் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாளைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளதாக மிகப்பரவலாக அந்தத் தரப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழலிலேயே நாளை வெளியாக இருக்கின்ற இந்த அறிவிப்பானது மிக முக்கியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய அரசியல் சூழலில் இரண்டு பிரதான முகாம்களிலிருந்த…
-
- 0 replies
- 1k views
-
-
சூடு பிடிக்கும் தேர்தல் களம் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் களம் என்றும் இல்லாதவாறு சூடு பிடித்துக் காணப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் தொடர்பில் ஏட்டிக்குப் போட்டியான நிலையில் கொந்தளிப்பும், பொதுஜன பெரமுன வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார் என்ற முடிவை அறிய எதிரணித் தரப்பினரும் குழம்பிப் போயிருக்கும் நிலையில் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரும் சமரில் ஈடுபட்டு வரும் நிலையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டும் அறிவிக்கப்படாமலும் காணப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலை…
-
- 0 replies
- 451 views
-
-
நான் ஜே.வி.பி. இற்கே வாக்களிப்பேன் – | அருந்ததி சங்கக்கார [இக்கட்டுரை அருந்ததி சங்கக்கார என்பவரால் ‘Colombo Telegraph’ பத்திரிகைக்காக எழுதப்பட்டது. இந்த ‘கூகிள்’ யுகத்தில் அரசியல் சிந்தனைகளின் மீளொழுங்கிற்கான அவசியம் இக் கட்டுரையில் தொனிக்கிறது. இயன்றவரை அர்த்தம் பிசகாது தமிழிலும் தர முயற்சித்திருக்கிறோம். தமிழில்: சிவதாசன். நன்றி: Colombo Telegraph’/ Arundathie Sangakkara] https://www.colombotelegraph.com/index.php/i-will-vote-for-jvp/ நான் ஜே.வி.பி.யிற்கே வாக்களிப்பேன் – அருந்ததி சங்கக்காரஐ.தே.கட்சி என் இரத்தத்தில் இருக்கிறது. சரத் பொன்சேகாவிற்கா…
-
- 0 replies
- 601 views
-
-
சர்வதேச பழங்குடிகள் தினம் இன்று அனுஷ்டிப்பு உயிர் வாழ்வதற்காக போராடும் அவலம்! சர்வதேச பழங்குடிகள் தினம் இன்று (ஓகஸ்ட் 9) உலகில் கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் 9ஆம் திகதியன்று இத்தினம் அனுஷ்டிக்கப்படுமென்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் 1994ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது. இது, 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் திகதியன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த வருடத்திலிருந்து தொன்மைமிகு பழங்குடிகளின் உரிமைகளை ஊக்குவிக்கவும், அவ்வுரிமைகளைப் பாதுகாக்கவும் இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது. உலக மக்கள்தொகையில் 5 சதவீதத்தினர் பழங்குடியினர். ஆனால், மொத்த ஏழைகளில் இவர்கள் 15சதவீதம் அளவில் உள்ளனர். குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் இந்த மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். இவ…
-
- 0 replies
- 968 views
-
-
‘ஒப்பரேசன் கிழக்கு’ - நோக்கம் என்ன? Editorial / 2019 ஓகஸ்ட் 08 வியாழக்கிழமை, பி.ப. 07:32 Comments - 0 -இலட்சுமணன் ‘எனது வாழ்நாளில் இந்த நாளைத் தான் காணக் காத்திருந்தேன்’ என, காஷ்மிர் பிரிக்கப்பட்ட விவகாரம் குறித்து, தனது ட்விட்டரில் கருத்திட்ட சுஷ்மா சுவராஜ் மறைந்துவிட்டார். 2019 ஓகஸ்ட் மாதத்தின் முதல்வாரத்தில், காஷ்மிர் விவகாரத்தில், இந்தியா எடுத்திருக்கும் நடவடிக்கைகள், உலகத்திலேயே ஒரு களேபரத்தைத் தோற்றுவித்திருக்கிறது. இது வரலாற்றுப் பதிவாகிவிட்டது. உலகம் முழுவதுமே, தேசியவாதமும் பாதுகாப்புவாதமும் தலைதூக்கி வருகின்றன. இஸ்ரேலின் பாலஸ்தீனம் மீதான நிலைப்பாடு, இலங்கையின் தமிழ் ஈழம் மீதான நிலைப்பாடு, மியான்மரின் றோஹிஞ்யா முஸ்லிம்கள் மீதான நிலை…
-
- 0 replies
- 569 views
-
-
புதிய அரசமைப்பின் கனவும் அரசியல் தீர்வில் கபடமும் Editorial / 2019 ஓகஸ்ட் 08 வியாழக்கிழமை, பி.ப. 07:24 Comments - 0 2015ஆம் ஆண்டு, ஆட்சிமாற்றம் உருவாக்கிய மிகப்பெரிய நம்பிக்கைகளில் ஒன்று, தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தரக்கூடிய புதிய அரசமைப்பு ஆகும். ‘நல்லாட்சி அரசாங்கம்’ நல்லாட்சியைத் தராவிட்டாலும், தமிழர்களுக்கு நல்வாழ்வைத் தருவார்கள் என்று, தமிழ் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்தார்கள். ‘தீபாவளிக்குள் தீர்வு, ‘பொங்கலுக்குள் புதிய அரசமைப்பு’ என்று ‘புலுடா’க்கள் தொடர்ந்தன. இன்று, புதிய அரசமைப்புக்கான வாய்ப்பு, முழுமையாக இல்லாது போய்விட்டது. புதிய அரசமைப்பின் சாத்தியமின்மையை, இலங்கை அரசியலைப் புரிந்தவர்கள், இலகுவாக அறிந்து கொள்வர். நல்ல…
-
- 0 replies
- 446 views
-
-
ஜம்மு - காஷ்மிர்: இந்தியாவின் வஞ்சனையும் எதிர்காலமும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஓகஸ்ட் 08 வியாழக்கிழமை, பி.ப. 07:16Comments - 0 உரிமைப் போராட்டங்கள், காலக்கெடு வைத்து நடத்தப்படுவதில்லை. சில பின்னடைவுகள், விடுதலைப் போராட்டங்களை முன்னரிலும் பார்க்க வேகமாக முன்தள்ள உந்தும். உரிமைக்கான குரல்கள், ஏன் எழுகின்றது என்பதை, அதிகாரம் எப்போதுமே விளங்கிக் கொள்வதில்லை. அதனாலேயே காலப்பொருத்தமற்ற, அபத்தமான அதேவேளை, ஆபத்தான முடிவுகளை அது எடுக்கிறது. இவ்வாறான முடிவுகள், பலத்தின் குறியீடல்ல; பலவீனத்தின் குறியீடு. திங்கட்கிழமை (05) இந்திய மத்திய அரசாங்கம், ஜம்மு - காஷ்மிர் மாநிலத்துக்கு அரசமைப்பு ரீதியாக, இருந்து வந்த தன்னாட்சி அதிகாரத்தை, இரத்துச் செ…
-
- 0 replies
- 501 views
-