அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
மலையக அரண் சாய்ந்துவிட்டது க.ஆ.கோகிலவாணி மலையக மக்களின் ஏகோபித்தக் குரலாக, நாடாளுமன்றம் முதல் உலகளவில் ஓங்கி ஒலித்த குரல், இன்று ஓய்ந்துவிட்டது. மலையகத்தைக் கட்டிக்காத்துவந்த மாபெரும் அரண் சாய்ந்துவிட்டது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் மலையக கிராமங்கள் அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், தனது 55ஆவது வயதில், தலங்கம வைத்தியசாலையில், நேற்று முன்தினம் (26) மாலை காலமானார். அவரது இழப்பால், மலையகப் பெருந்தோட்ட மக்கள், ஆதரவாளர்கள், இ.தொ.காவின் அரசியல்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட முழு இலங்கை மக்களும் பெரும் துயர்கொண்டுள்ளனர். அரும்பெரும் தலைவர்களின் இழப்புகளால் மலையகம் அண்மைக் காலமாக சாபக்கேட்டை எதிர்கொண்டுள்…
-
- 0 replies
- 606 views
-
-
புதிய அரசியலமைப்பும் அரசியல் தீர்வும் புதிய அரசியலமைப்பின் பூர்வாங்க வரைவு எதிர்வரும் நவம்பர் மாதம் வரவு–செலவுத்திட்டம் மீதான விவாதம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசாங்கத்தலைவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த வருடத்துக்கான அரசாங்கத்தின் வரவு–செலவுத் திட்டம் நவம்பர் 10 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என்றும் தொடர்ந்து ஒருமாத காலத்துக்கு அதன் மீதான விவாதம் நடைபெறும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறானால், அரசியலமைப்பு வரைவு இன்னமும் 6 வார காலத்திற்குள் பாராளுமன்றத்தில் சம…
-
- 0 replies
- 294 views
-
-
-
இல்லாத விடுதலைப் புலிகளிற்கு எவ்வாறு ஆதரவு வழங்க முடியும்.? சந்தேகத்தின் பேரில் கைதானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கேள்வி! இல்லாத விடுதலைப்புலிகளிற்கு எவ்வாறு ஆதரவு வழங்க முடியும் என சந்தேகத்தின் பேரில் கைதானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் தெரிவித்த கருத்தின் முழு வடிவம் வருமாறு. ஆட்சிமாற்றத்தின் பின்பு கைது செய்யப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே? இலங்கை ஜனாதிபதியாக அதிமேதகு கோட்டாபய ராஜபக்ச அவர்கள், ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் எமது உறவுகள் 14பேர் கைது செய்யப்பட்டு விசாரணை இன்றிய நிலையில் தடுத்து வைக்…
-
- 0 replies
- 545 views
-
-
13ஆவது திருத்தமும் புதிய யாப்பும்! - நிலாந்தன். October 17, 2021 ஒரு புதிய யாப்பை இந்த ஆண்டின் இறுதிக்குள் கொண்டு வரப்போவதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருக்கிறார். இலங்கை ராணுவத்தின் 72வது ஆண்டு நிறைவையொட்டி அனுராதபுரத்தில் உள்ள ஒரு படை முகாமில் நடந்த ஒரு வைபவத்தில் அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இது அரசாங்கம் அதன் யாப்புருவாக்க முயற்சியில் மெய்யாகவே ஈடுபடுகிறதா என்ற கேள்வியை மேலும் வலிமைப்பப்படுத்தியிருக்கிறது. யாப்புருவாக்கத்திற்கான நிபுணர் குழுவை சேர்ந்த ஒருவர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் ஒரு புதிய யாப்புக்கான சட்ட வரைபை அரசாங்கம் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. அதை நம்…
-
- 0 replies
- 420 views
-
-
வரலாற்றுப் பழியை சுமக்குமா கூட்டமைப்பு? பௌத்த பீடங்கள் மற்றும் சங்க சபாக்களின் ஒருங்கிணைந்த கூட்டத்தில், புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு மாற்றத்துக்கு எதிரான முடிவு எடுக்கப்பட்ட பின்னர், அரசாங்கத்தில் உள்ள தலைவர்கள் அனைவரும் ஒற்றையாட்சி புராணத்தைப் படிக்கத் தொடங்கியுள்ளனர். அஸ்கிரியவில் நடந்த மேற்படி கூட்டத்தை அடுத்து, கண்டியில் ஜனாதிபதி மாளிகையில் பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து தமது நிலைப்பாட்டை விளக்கியிருந்தனர். இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சிக்கோ, பௌத்த மதத்துக்கான முன…
-
- 0 replies
- 399 views
-
-
ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,G.L.PEIRIS'S FACEBOOK படக்குறிப்பு, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இலங்கை அரசு வெளிநாடுகளிடம் இருந்து வாங்கியிருக்கும் கடனுதவிகளால் எதிர்காலத்தில் பலவித தாக்கம் ஏற்படலாம் என்று பல்துறை நிபுணர்களும் கவலை தெரிவிக்கின்றனர். இலங்கை உலகின் பல்வேறு நாடுகளிடமிருந்து பில்லியன் கணக்கான டாலர்கள் உதவிகளை பெற்று வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சமீபத்தில் கூறியிருந்தார். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சனிக்கிழமை சந்தித்துப் பேசிய அவர், சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதிய…
-
- 0 replies
- 329 views
-
-
சிறிலங்கா அரசாங்கமானது தொடர்ந்தும் இவ்வாறான அழுத்தங்களைத் தட்டிக்கழித்தால், வரும் மார்ச்சில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் மிகக் கடுமையான நிலையை எதிர்நோக்க வேண்டிவரும் என பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இவ்வாறு IPS Inter Press Service செய்தி நிறுவனத்திற்காக ஆய்வாளர் Amantha Perera எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அந்த ஆய்வின் முழுவிபரமாவது: கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமானது டிசம்பர் 20 அன்று, மறைந்த முன்னாள் தென்னாபிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவை நினைவுகூரும் முகமாக சந்திப்பொன்றை ஒழுங்குபடுத்தியிருந்தது. இந்த நினைவு வணக்க நிகழ்வில் மறைந்த நெல்சன் மண்டே…
-
- 0 replies
- 482 views
-
-
பயங்கரவாதத் தடைச்சட்டடத்துக்கு எதிராக... தமிழரசுக்கட்சி தனியோட்டம் ? -நிலாந்தன்- தமிழரசுக்கட்சி பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக ஒரு கையெழுத்து வேட்டைப் போராட்டத்தை நடத்திவருகிறது.இப்போராட்டத்திற்கு மூவினத்தவர்கள் மத்தியிலும் ஆதரவு இருக்கிறது.தமிழ் பகுதிகள் எங்கும் தமிழரசுக்கட்சியினர் பொது இடங்களில் நின்று கையெழுத்துக்களை வாங்கிவருகிறார்கள். சுமந்திரன் தென்னிலங்கையில் உள்ள பிரமுகர்களைத் தேடிச்சென்று கையெழுத்து வாங்கிவருகிறார். அவருடைய இம்முயற்சிக்கு விக்னேஸ்வரன் உட்பட கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் ஆதரவைக் காட்டியுள்ளன. ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின்னர் பயங்கரவாதத் தடைச்சட்டம் முஸ்லிம்களுக்கும் எதிராகத் திரும்பியது. அதனால் இப்பொழுது சுமந்திரனின் ப…
-
- 0 replies
- 383 views
-
-
இடைக்கால அறிக்கை வளருமா? தேயுமா? – நிலாந்தன் இடைக்கால அறிக்கை வளருமா? தேயுமா? ‘நாட்டின் இரண்டு பெரிய கட்சிகள் இணைந்துருவாக்கிய ஒரு கூட்டரசாங்கம். அதற்குப் பியோன் வேலை செய்ய ஒரு தமிழ் எதிர்க்கட்சி. இவ்வளவு பலமும் இருக்கத்தக்கதாக ஒரு தனிஆள் மகிந்தவிற்கு இந்த அரசாங்கம் பயப்படுகிறது. அவரோடு பலப்பரீட்சையில் ஈடுபடப் பயந்து தேர்தல்களை ஒத்தி வைக்கிறது’ என்று மன்னார் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் சிவகரன் அண்மையில் தனிப்பட்ட உரையாடல் ஒன்றின்போது தெரிவித்தார். இருபதாவது திருத்தச்சட்டத்தை கொண்டு வந்ததற்கு பல நியாயங்கள் கூறப்படலாம். ஆனால் பிரயோக நிலையில் இப்போதைக்கு தேர்தல்களை ஒத்தி வைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. …
-
- 0 replies
- 438 views
-
-
ஐ.நா தீர்மானங்கள் ஏன் இலங்கை அரசைத் தண்டிக்கவில்லை?:சபா நாவலன் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து ஐந்து ஆண்டுகள் கடந்து போய்விட்டன. மனிதப் படுகொலைகளைத் திட்டமிட்டவர்களும், நடத்தி முடித்தவர்களும் இன்னும் இந்த உலகின் மதிப்பிற்குரிய மனிதர்களாக எந்த அச்சமுமின்றி உலாவருகின்றனர். இந்த நிலையில் ஜெனீவா மனித உரிமைத் திருவிழா நிறைவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அங்கு தான் ராஜபக்சவைத் தண்டிக்கப் போகிறார்கள் என்றும் அதனை நிறைவேற்றுவதற்காகவே தாம் இதுவரை போராடி வருவதாக புலம் பெயர் தமிழ்த் தலைமைகளும் இலங்கையில் தமிழ்த் தேசியத்தின் பெயரால் வாக்குக் கேட்கும் கட்சிகளும் கூறிவந்தன. ஐக்கிய நாடுகள் நிறுவனம், அமெரிக்க அரச தலைமையிலான உலகம் போன்றவற்றின் குறைந்தபட்சப் புரிதல்களுமின்றி ஐந்…
-
- 0 replies
- 791 views
-
-
மோட்சத்துக்கு வழிகாட்ட வேண்டியவர்கள் அரசியலில் ஈடுபடலாமா? அரசியல் என்பது வேறு, மதம் என்பது வேறு இந்நிலையில் அரசியலில் மதம் ஊடுருவுமானால் அது பல்வேறு சிக்கல்களையும் தோற்றுவிப்பதாகவே அமையும். எனவேதான் உலக நாடுகள் மதச்சார்பற்ற அரசியல் தொடர்பில் அழுத்தம் கொடுத்தும் கவனம் செலுத்தியும் வருகின்றன. அந்தவகையில் இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில் மதத்துக்கும் அரசியலுக்கும் இடையிலான தொடர்பு நிலை காணப்படுகின்றது. மதகுருமார் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பல்வேறு விமர்சனங்களும் இருந்து வருகின்றன. மதகுருமார் அரசியலில் ஈடுபடுவது சரியானதா? தவறானதா என்று கேள்விக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
தீவிரமடையும் நெருக்கடி? – நிலாந்தன். ஜூலை மாதத்தின் பின் நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்று ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட சில நாட்களில் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.அவர் கூறியது இப்பொழுது நடக்கின்றது. இதன் பொருள் அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதல்ல. அல்லது ஐலண்ட் பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் எழுதியது போல மெய்யாகவே அவர் ஞானக்காவின் மச்சான் என்பதுமல்ல.மாறாக அரசியல் பொருளாதாரத்தை ஓர் அறிவியல் ஒழுக்கமாக அணுகும் எவருக்கும் அது மிகத் தெளிவாகவே தெரியும்.எப்பொழுது நெருக்கடி வரும்? எப்படிப்பட்ட நெருக்கடி வரும்? என்பது.அதைத்தான் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படையாக தெரிவித்தார். ஆனால் அவ்வாறு சாத்திரம் கூறுவது மட்டும் அவருடைய வேலை அல்ல. அதற்கும் அப்பால் மக்…
-
- 0 replies
- 341 views
-
-
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்..! – கம்பவாரிதி இ. ஜெயராஜ் உள்ளம் கொதிக்க இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். சென்ற வாரம்தான் நம் தலைவர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி எழுதியிருந்தேன். என்ன எதிர் முகூர்தத்தில் எழுதினேனோ? தெரியவில்லை. நாளுக்கு நாள் தமிழ்த்தலைமைகளின் ஒற்றுமை சிதைந்து கொண்டேயிருக்கிறது. இயக்கமே இல்லாமல் சோர்ந்து கிடந்த நம் தலைவர்களிடம், உள்ளுராட்சித் தேர்தலின் வருகை புத்துயிர்ப்பை ஊட்டியிருக்கிறது. அப்புத்துயிர்ப்பு, இனத்தின் நன்மை நோக்கியதாய்த் தெரியவில்லை. தலைவர்களின் நன்மை நோக்கியதாகவே தெரிகிறது. உள்ளுராட்சித் தேர்தல் வேட்புமனுத்தாக்கலில், நம் கூட்டமைப்புத் தலைவர்களின் ஒற்றுமை (?), மீண்டும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அவ் ஒற…
-
- 0 replies
- 726 views
-
-
நிலைக்குமா சங்கரி - சுரேஷ் கூட்டணி எழுபது வயதைக் கடந்த வயோதிபர்களுக்கு, நகரசபைத் தலைவர் பதவியை வழங்க நாம் தயார் இல்லை”- இது வவுனியா நகரசபைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து, ஈ.பி.ஆர்.எல்.எப் பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தன் நிகழ்த்திய உரையின் போது கூறிய முக்கியமான ஒரு விடயம். வயோதிபர்களுக்குத் தலைவர் பதவியை வழங்க முடியாது என்ற சிவசக்தி ஆனந்தனின் இந்த நிலைப்பாடு, அவர் சார்ந்த கட்சியின் நிலைப்பாடாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், இது தனியே வவுனியா நகரசபைக்கு மாத்திரம் பொருத்தமான கருத்தா அல்லது, ஒட்டுமொத்த அரசியலிலும் இந்தக் கொள்கையை…
-
- 0 replies
- 392 views
-
-
மீண்டும் மறக்கப்படுகின்றதா? அரசியல் தீர்வு? நல்லாட்சி தேசிய அரசாங்கம் அரசியலில் கடும் நெருக்கடிகளை சந்தித்து கொண்டிருக்கின்ற நிலையில் அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் மேலோங்கியிருக்கிறது. குறிப்பாக ஐக்கிய தேசியக்கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குமிடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் முறுகல் நிலையானது தொடர்ந்து வலுவடைந்து வருகின்ற நிலையில் தேசிய அரசாங்கத்தின் இருப்பானது சந்தேகத்துக்கிடமாகவே நீடித்து வருகின்றது. தற்போதைய நிலைமையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள சூழலில் இரண்டு கட்சிகளுக்குமிடையிலான போட்டி கடுமையாக…
-
- 0 replies
- 346 views
-
-
அடாவடியினதும் அராஜகத்தினதும் கதை: இஸ்ரேல்@70 சில தேசங்களின் இருப்பு என்றென்றைக்குமானது அல்ல; அநீதியின் பெயரால் நிறுவப்பட்ட அரசுகள் அச்சத்துடனேயே வாழச் சபிக்கப்பட்டன. எவ்வளவு இராணுவ பலம் இருந்தாலும், உலகின் வலிய நாடுகளின் ஆதரவு இருந்தாலும் அநீதியின் வழியில் பயணப்படும் நாடுகளுக்கு, அமைதியான வாழ்வு என்றைக்கும் சாத்தியமல்ல. இன்று இஸ்ரேல், தனது உருவாக்கத்தின் 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இஸ்ரேலின் கதையை இங்கு சொல்வதற்கு முக்கிய காரணமொன்றுண்டு. இஸ்ரேலிய விடுதலையைப் போலவே, தமிழர்களும் தமிழீழத்தை வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கை காலங்காலமாக தமிழ்ச் சமூகத்தில் வளர்க்கப்பட்டு…
-
- 0 replies
- 781 views
-
-
ஊருக்குள் வந்த சிறுத்தையும் செல்ஃபி யுகத்துத் தமிழர்களும். Nillanthan24/06/2018 ஊருக்குள் வந்த சிறுத்தை தன்னை தற்காத்துக் கொள்வதற்காக மனிதர்களைத் தாக்கியது. மனிதர்கள் தம்மைத் தற்காத்துக் கொள்வதற்காக சிறுத்தையைத் தாக்கினார்கள். தன்னைக் கொல்ல வரும் பசுவைக் கொல்லலாம் என்று ஒரு கிராமியச் சொற்தொடர் உண்டு. எனவே ஊருக்குள் நுழைந்து மனிதர்களைத் தாக்கிய சிறுத்தையை மனிதர்கள் தாக்கியத்தில் ஒரு தர்க்கம் உண்டு. வீட்டுக்குள் வரும் விசப்பாம்பை அப்படித்தான் எதிர்கொள்வதுண்டு. அதுபோலவே ஊருக்குள் திரியும் கட்டாக்காலி நாய்க்கு விசர் பிடித்தாலும் அப்படித்தான் எதிர்கொள்வதுண்டு. ஆனால் அம்பாள் குளத்தில் சிறுத்தையைக் கொன்ற விதமும், கொன்ற பின் கொண்டாடிய விதமும் தான் மிருகவதைக் குற…
-
- 0 replies
- 616 views
-
-
சம்பந்தரை எரிச்சலூட்டிய ரணில் புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,“...எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், தொடர்ந்தும் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்தப் பயனும் இல்லை..” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்திருக்கின்றார். ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை கடந்த வாரம் இடம்பெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் டெலோ, புளொட் அமைப்புகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே கலந்து கொண்டிருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தையில், ஜனாதிபதியின் கருத்துகளுக்கு பதிலளித்து பே…
-
- 0 replies
- 383 views
-
-
தமிழ்க்கட்சிகள் எழுதும் கடிதங்கள்? நிலாந்தன். July 16, 2023 அண்மையில் தனது 90 ஆவது வயதை நிறைவு செய்த ஆனந்தசங்கரி, அரசியலில் அதிகம் கடிதம் எழுதிய ஒரு தமிழ் அரசியல்வாதி ஆவார். கடவுளைத்தவிர அவர் ஏனைய எல்லாருக்குமே கடிதம் எழுதியிருக்கிறார். அவருடைய கடிதங்களுக்கு பதில் கிடைத்ததோ இல்லையோ, அக்கடிதங்கள் அக்காலகட்ட அரசியலில் ஏதும் விளைவுகளை ஏற்படுத்தினவோ இல்லையோ, அவர் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்தார். அவை சிலசமயங்களில் துணிச்சலான, பல சமயங்களில் சுவாரசியமான அல்லது பம்பலான அரசியல் ஆவணங்களாகப் பார்க்கப்பட்டன. இப்பொழுது ஆனந்தசங்கரியிடம் இருந்து ஏனைய தமிழ் அரசியல்வாதிகளும் அதைக் கற்றுக்கொண்டு விட்டார்கள் போலத்தெரிகிறது. அண்மை நாட்களாக தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண…
-
- 0 replies
- 342 views
-
-
ஒரு முடிவில் பிறிதோர் ஆரம்பம் காரை துர்க்கா / 2018 ஒக்டோபர் 23 செவ்வாய்க்கிழமை, மு.ப. 02:15 Comments - 0 வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளது. கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் ஏற்கெனவே முடிவுக்கு வந்து, கொழும்பு, மத்திய அரசாங்கத்தின் நேரடிப் பிரதிநிதியான ஆளுநரின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. நாளை தொடக்கம், வடக்கு மாகாணத்திலும் இதே நிலைமை ஆரம்பிக்க உள்ளது. ஆக, அடுத்த வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடைபெறும் வரை, இரண்டு மாகாணங்களும் அந்தந்த மாகாணங்களின் ஆளுநர்களின் ஆளுகைக்குள் அடங்கப் போகின்றன. தமிழர்களது பார்வையில், மாகாண சபை ஆட்சி முறையிலான நடைமுறை பல குறைபாடுகளைத் தன்னகத்தில் கொண்டுள்ளது. இந்த ஆட்சி முறைமை …
-
- 0 replies
- 521 views
-
-
கூட்டமைப்பின் முடிவு; யாரின் தோல்வி? புருஜோத்தமன் தங்கமயில் / 2018 டிசெம்பர் 27 வியாழக்கிழமை, பி.ப. 01:24 ஒக்டோபர் 26, ஆட்சிக்கவிழ்ப்புச் சதியை உயர்நீதிமன்றம் மைத்திரியினதும், அவரது சட்ட ஆலோசகர்களினதும் முகத்தில் அறைந்து, முடிவுக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ரணில் மீண்டும் பிரதமராகி இருக்கிறார். 52 நாள்களாக நீடித்த அரசியல் குழப்பம், அரசியல்வாதிகளை மாத்திரமல்ல, ஊடகவியலாளர்களை, நோக்கர்களை, எல்லாவற்றையும் தாண்டி நாட்டு மக்களைப் பெரும் அழுத்தத்துக்குள் தள்ளியிருந்தது. அதனால், உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் ரணிலின் பதவியேற்பையும் நாடு பெருமளவுக்குக் கொண்டாடியது. இலங்கையின் ஜனநாயகமும் நீதித்துறையின் சுயாதீனமும் காப்பாற்றப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்களும்…
-
- 0 replies
- 497 views
-
-
-நஜீப் பின் கபூர்- 2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நாம் நிறைய கட்டுரைகளை எழுதி மக்களைத் தெளிவுபடுத்தி வந்திருந்தோம். நமது கருத்துகள் அப்போது பக்கச்சார்பாக இருந்தது என்று சிலருக்கு யோசிக்க இடமிருந்தது. ஆனால் நாம் யதார்த்தத்தை தான் சொல்லி வந்திருக்கின்றோம் என்பது இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகின்றோம். இன்றும் அதேபோல கள நிலைவரங்களையும் யதார்த்தங்களையும் தான் எமது வாசகர்களுக்கு சொல்லலாம் என்று எதிர்பார்க்கின்றோம். அனேகமான ஊடகங்களும் அரசியல்வாதிகளும் மக்களைக் கடந்த காலங்களில் பிழையான தகவல்களை-நம்பிக்கைகளைக் கொடுத்து ஏமாற்றி வந்திருக்கின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாம் வலியுறுத்தி சொன்ன சில தகவல்களை மீண்டும் ஒருமுறை சுருக்கமாக இங்கு …
-
- 0 replies
- 417 views
- 1 follower
-
-
கலாநிதி க.சர்வேஸ்வரன் 1.தேசிய மக்கள் சக்தியையும் (ஜே.வி.பி.)யையும் தமிழ் மக்களின் மத்தியில் தோன்றிய விடுதலை இயக்கங்களையும் ஒரே நோக்கம் கொண்டவையாக பார்க்க முடியாது. தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய விடுதலை இயக்கங்கள் யாவும் தமிழ் மக்களின் விடுதலைக்காக மட்டுமே போராடின. அது ஓரினம் சார்ந்த விடுதலைப் போராட்டம். எமது இயக்கம் ஒரு வர்க்கப் போராட்டத்தை முன்னின்று நடத்தும் செயற்பாட்டை கொண்டது. 2.”வர்க்கப் போராட்டம் என்பது இந்த நாட்டின் அல்லலுற்று- துன்பப்பட்டு அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் போராட்டமாகும். இந்த மக்கள் கூட்டத்தையே நாம் வர்க்கம் என்று குறிப்பிடுகிறோம். இந்த வர்க்கத்தில் பல இனங்கள், பல சமயங்கள், பல மொழிகள் இருக்கலாம்.” 3.” இரண்டு தரப…
-
- 0 replies
- 495 views
- 1 follower
-
-
சுதந்திரக் கட்சியை சுழியோடி காப்பவர் யார் றம்ஸி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனியாகப் போட்டியிடுமானால், அதனை வரவேற்பதாகப் பெருந்தோட்டத்துறை அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ரமேஸ் பத்திரன தெரிவித்திருப்பதானது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கருத்தாகவும் இருக்கலாமென்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்து. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தற்போது இருந்ததையும் இழந்த நாதியற்ற நிலையில் காணப்படுவதை அவதானிக்கலாம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தொடர்ந்தும் இப்பதவியில்…
-
- 0 replies
- 524 views
-