அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
சம்பந்தனின் ராஜதந்திரம் !? யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலர் வியஜ் கோகலே இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்தார். இதன் போது வழமைபோல் கூட்டமைப்பையும் சந்தித்து பேசியிருந்தார். பொதுவாக இந்தியாவின் ராஜதந்திரிகள் இலங்கைக்கு விஜயம் செய்கின்ற போது, கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திப்பது வழக்கம். எனவே இதற்கு அதிக அரசியல் முக்கியத்துவம் இருப்பதாக கூற முடியாது. ஆனால் தமிழர் தரப்பின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இவ்வாறான சந்திப்புக்களை கூட்டமைப்பினர் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் பொதுவாக இந்திய தரப்பினரிடம் ஒரு அபிப்பிராயம் உண்டு என்று அறிந்திருக்கிற…
-
- 0 replies
- 425 views
-
-
ஹெல்சிங்கியில் ட்ரம்ப் புட்டின் உச்சி மாநாடு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பூகோளத்தில் முதன்மையான தலைவர் மட்டுமல்ல அண்மைக் காலங்களில் உலகின் கவனத்தை பல வழிகளிலும் ஈர்த்த தலைவர் என்று துணிந்து கூறலாம். கொரிய தீபகற்பத்தில் யுத்தம் ஒன்று வருகுது பார் என்ற நிலையிலிருந்து வடகொரிய அதிபருடன் சிங்கப்பூரில் உச்சிமாநாடு நடத்தி, கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை நீக்கி, பேச்சுவார்த்தை நகர்வுகள் மூலம் கொரிய பிணக்குக்கும் வடகொரியாவின் அணுஆயுத அபிலாஷைகளுக்கும் முடிவுகட்டும் இராஜதந்திரத்தை சாமர்த்தியமாக கையாள்கின்றார்.வடகொரிய தலைவருடன் உச்சிமாநாடு நடத்திய சூடு தணிய முன்னர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் உ…
-
- 0 replies
- 390 views
-
-
மூடி மறைக்க முயலும் செயற்பாடு தமிழ் மக்களையும் உலகத்தையும் ஏமாற்றும் நோக்கில் இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை எதிர்த்தும் அமர்வைப் புறக்கணித்தும் கடந்த 14 ஆம் திகதி சனிக்கிழமை யாழில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பலர் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அரசாங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் மாவட்டம் தோறும் காணாமல் போனோரின் உறவுகளை சந்தித்து உரையாடிவரும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு ஏற்ப யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலை உறவினர்கள் முற்றாக புறக்கணித்தது மாத்திரமன்றி எதிர்ப…
-
- 0 replies
- 515 views
-
-
அபாய அறிவிப்பு! பி.மாணிக்கவாசகம் பிராந்திய சுயாட்சியின் கீழ் சமஷ்டி முறையில் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்பதே, ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் தமிழர் தரப்பு அரசியலின் அடிப்படை நோக்கமாகும். அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அல்லது அந்த இலக்கை அடைவதற்கு அவசியமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டனவா என்பது கேள்விக்கு உரியதாகியிருக்கின்றது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 1987 ஆம் ஆண்டு, இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்காகச் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் மாகாணசபை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்…
-
- 0 replies
- 504 views
-
-
அரச தலைவர் தேர்தலும் -சிறுபான்மையின மக்களும்!! எதிர்வரவுள்ள அரச தலைவர் தேர்தலில் இம்முறை சிறு பான்மையின மக்கள் அக்கறை காட்டுவார்களென எதிர்பார்க்கமுடியாது. கடந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வுககு ஆதரவாக வாக்களித்து அவரை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றவர்கள் சிறுபான்மையின மக்களே என்பதை எவருமே மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் இம்முறை அவ்வாறானதொரு நிலை காணப்படவில்லை. அடுத்த அரச தலைவர் தேர்தல் வேட்பாளர்கள் குறித்து இதுவரை முடிவு இல்லை மகிந்த அணியைப் பொறுத்…
-
- 0 replies
- 401 views
-
-
விக்கியின் உண்மையான முகத்தை சம்பந்தன் வௌிப்படுத்துவாரா? விரைவில் மாகாணசபைத் தேர்தல் இடம்பெறவுள்ளதால் சம்பந்தனும், விக்னேஸ்வர னும் சந்தித்துப்பேசி தமிழ் மக்களுக்கு நன்மை யளிக்கத் தக்க நல்லதொரு முடிவைக்காண வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளையினர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதாகத் தெரியவருகின்றது. முதலமைச்சர் பதவிக்கு வந்ததில் இருந்து விக்னேஸ்வரன் கூட்டமைப்புக்கு எதிரான கொள்கைகளையே கடைப்பிடித்து வருகின்றார். அவர் பதவிக்கு வந்ததன் பின்னர் இடம்பெற்ற தேர்தல்கள்…
-
- 1 reply
- 427 views
-
-
மரண தண்டனை விடயத்தில் நேர்மையான ஒருவரைத் தேடித் தாருங்கள் அடிக்கடி சர்ச்சைகளைக் கிளப்பி வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இம்முறை மரண தண்டணை விடயத்தில் சர்ச்சையொன்றைக் கிழப்பிவிட்டுள்ளார். போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, மரண தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகக் கூறியே, அவர் இந்தச் சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளார். போதைப் பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டு, சிறைத் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் சிறையிலிருந்தும், அத்தொழிலில் ஈடுபடுவதாக இருந்தால், அவர்கள் விடயத்தில் மட்டும், மரண தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஆனால்…
-
- 3 replies
- 957 views
-
-
மத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா? “இந்திய நிறுவனத்துடன் இணைந்து, மத்தல விமான நிலையத்தை இயக்க முடியும் என்று நம்புகிறோம்; எனவே. எல்லாவற்றையும் சீனா தான் மேற்கொள்ளுகிறது என்று யாரும் இனிமேல் குற்றம்சாட்ட முடியாது” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்து, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளைச் சமநிலையில் வைத்திருப்பதற்காக, இலங்கை அரசாங்கம் நடத்தி வருகின்ற போராட்டத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. ஹம்பாந்தோட்டை துறைமுகம், சீனாவின் கைகளுக்குச் சென்றதை இந்தியா விரும்பவில்லை. அது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று இந்தியா கருதுகிறது. இத்தகைய …
-
- 1 reply
- 599 views
-
-
48 ஆண்டுகளின் பின்னரும் நீக்கப்படாத பயங்கரவாதத் தடைச்சட்டம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் இலங்கையில் இன்னமும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஈழத் தமிழர்கள் கீழ்த்தரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தமிழ் சிறுபான்மை மக்களையே பயங்கரவாதத் தடைச்சட்டம் பாதிப்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் ஆராய்ந்த ஐ.நாவின் விசேட நிபுணர் பென் எமர்சன் கூறியுள்ளார். இன்றுடன் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு 48 ஆண்டுகள் ஆகின…
-
- 0 replies
- 1.7k views
-
-
நிலைமாறுகால நீதி கிடைக்குமா? பி.மாணிக்கவாசகம்… நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளில் ஒன்றாகிய காணாமல் போனோர் அலுவலகத்தைச் செயற்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. அந்த அலுவலகத்தின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்து, சர்வதேச விசாரணையே தேவை என கோரி, அதற்கு எதிராக, காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றார்கள். இந்த மாவட்டங்களில் காணாமல் போனோருடைய உறவினர்களுடன் நடத்திய அமர்வின்போதே, காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்திருக்கின்றது. . யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திலும், கிளிநொச்சி பல…
-
- 0 replies
- 599 views
-
-
குரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம் கலர்கலராய் காகிதங்கள் கப்பலாகி, கடல் நடுவே காத்துக்கிடப்பது போல, உண்மைகள் மறைக்கப்பட்டு, ஊடக ஒளியில் புதிய சித்திரம் எமக்காய் தீட்டப்படுகிறது. உணர்வுப் பிழம்புகளாய் அதை ஏற்றுக்கொண்டாடி, நாம் மகிழ்ந்திருக்கிறோம்; திருவிழா முடிந்தது. ஈழத்தமிழரும் குரோஷியர்களிடம் கற்க, நிறைய உண்டென,வெற்றியில் மகிழ்ந்திருப்போம். உண்மைகளைக் கொஞ்சமும் தேடி அறிய,ஆவலாய் இல்லாத சமூகம், தனக்கான புதைகுழியைத் தானே தோண்டுகிறது. கால்பந்தாட்ட உலகக்கிண்ணம் முடிந்துவிட்டது. பேச்செல்லாம் குரோஷிய அணி பற்றியும் அனைவரையும் கட்டியணைத்த குரோஷிய ஜனாதிபதி பற்றியுமாய் இருக்கிறது. …
-
- 0 replies
- 654 views
-
-
சவால்களை எதிர்நோக்கும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கையில் தமிழரின் மரபுரிமை உட்பட்ட சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிய இயக்கங்களில் தனித்துவமானதொரு பேரியக்கமாகும். புலிகள் இயக்கம் ஆரம்பித்த காலம் தொடக்கம், இன்றுவரை இலங்கைத் தமிழர்கள் உரிமை, அரசியல், சகவாழ்வு, சமூகம் என்ற சகல சந்தர்ப்பங்களிலும் அவர்களது பெயர், பேச்சுக்குப் பேச்சும், வரிக்கு வரியும் உச்சரிக்கப்படாமல் இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், வேண்டப்பட்ட விடுதலைக்காக…
-
- 0 replies
- 575 views
-
-
அருமைத்தம்பிமாரும் “My Boys” களும் செலுத்திய நன்றிக்கடன்!? தமிழர்களின் எதிரிகள் யார்….? உறைபொருளும் மறைபொருளும்! யேசுநாதர் ஒரு வெள்ளிக்கிழமையன்று 12 பேருடன் (அவருடன் சேர்த்து மொத்தம் 13 பேர்) விருந்துக்குச்சென்றபோதுதான் யூதாஸ் என்பவனால் காட்டிக்கொடுக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டதனால் கிறீஸ்தவர்களில் பலர் 13 ஆம் திகதி வரும் வெள்ளிக்கிழமை தினத்தை கவலையோடுதான் எதிர்நோக்குவார்கள். ஐரோப்பிய நாடுகளில் 13 ஆம் திகதி வெள்ளியன்று வந்தால் வேலைக்குச்செல்வதற்கும் சற்று தயங்குவார்களாம்! அவ்வாறு ஒரு 13 ஆம் திகதியன்று இலங்கையில் அவலச்சம்பவம் ஒன்று நடந்தது. ஆனால், அது ஒரு வியாழக்கிழமை வந்தது. ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் வரும்போது, எனக்கு மனதில் இனம்புரியாத கலக்கம் வரும். …
-
- 0 replies
- 575 views
-
-
அஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கி குற்றச்சாட்டும் வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், தன்னுடைய பாதுகாப்புக்காக, பாதுகாப்பு அமைச்சிடம் கைத்துப்பாக்கி ஒன்றைப் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்திருக்கின்றார். வடக்கு மாகாண சபையின் அமைச்சரவைக் குழப்பங்கள் குறித்து, ஆராய்வதற்காக நேற்று முன்தினம் திங்கட்கிழமை விசேட சபை அமர்வொன்று நடாத்தப்பட்டது. அங்கு பேசும் போதே, அஸ்மின் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார். கூட்டமைப்புக்குள் இருக்கும், முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிரான அணியில் அங்கம் வகிப்பவர்களில் அஸ்மினும் ஒருவர். அ…
-
- 0 replies
- 311 views
-
-
அவுஸ்திரேலியாவுக்கு நன்றி, கனடாவை பின்பற்றி அவுஸ்திரேலியாவும் புலம் பெயர்ந்த தமிழர்களை அங்கீகரித்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இவற்றின் மகுடமாக அவுஸ்திரேலியா தமிழை தேசிய மொழியாக அங்கீகரித்தமையை கொண்டாடலாம். வாழும் நாடுகளில் உடலும் வடகிழக்கு இலங்கையில் மனசுமாக எழுச்சி பெறும் புலம் பெர்ந்த இளம் தமிழர் சக்தியை அரசியல் தீர்வுமூலம் இலங்கை அரசு அரவணைத்துக் கொள்ள வேண்டுமென்பது என்னுடைய கோரிக்கையாக உள்ளது. வடகிழக்கு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக புலம்பெயர்ந்த தமிழர்கள் பலப்பட்டு வருகிறார்கள். இந்திய தமிழர்களதும் இந்தியாவினதும் கரிசனை ஈழத் தமிழர்களை மட்டுமன்றி மலையக தமிழர்களை உள்ளடக்கியதாகும். . …
-
- 2 replies
- 639 views
-
-
பா.ஜ.கவின் பதற்றம் மிகுந்த பயணம் பீஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரை, பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் அமித்ஷா, பாட்னாவுக்குச் சென்று சந்தித்துப் பேசியுள்ளார். இந்திய அரசியல் வானில் உதிக்கப் போகும் புதிய கூட்டணிகள் எது என்பது, இன்னும் தெளிவாகாத நிலையில், இருக்கின்ற கூட்டணிக் கட்சிகளை இழந்து விடக்கூடாது என்ற, தாமதமான முயற்சியின் ஒரு பகுதியாக, இப்போது அமித்ஷா- நிதிஷ் குமார் சந்திப்பு நடைபெற்றுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை, நாட்டில் உள்ள பல கட்சிகள் எதிர்த்த போது ஆதரித்தவர் பீஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார். அதுவே பிறகு பா.ஜ.கவின் நட்புக்கு ஆதாரமாக அமைந்தது. …
-
- 0 replies
- 367 views
-
-
http://www.kaakam.com/?p=1234 புலம்பெயர்ந்தோரின் செயற்பாடுகளும் தமிழீழ மீட்புக்கான அரசியலும் இடைவெட்டுவதன் நிகழ்தகவு சுழியமா?-மான்விழி காலனியக் கல்வி பெற்று தமது காலனிய எசமானர்களின் நல்ல பணியாளர்களாகி எசமானர்களின் நாடு வரை சென்று பணியாற்றிப் பொருளீட்டல் என்பது கல்வித்துறையில் பெற்ற உச்ச அடைவெனச் சிந்திக்கும் காலனியடிமை மனநிலையின் தொடர்ச்சியாக புலம்பெயர்ந்தோர், உடலுழைப்பை ஊரிற் செலுத்துவது மான இழுக்கென்று சிந்திக்கும் சிந்தையில் பார்ப்பனியத்தன்மை கொண்டவர்கள் சொந்த மண்ணில் உடலுழைப்பைச் செலுத்தாது வெளிநாடு சென்று பொருளீட்டலாம் என முடிவெடுத்துப் புலம்பெயர்ந்தோர், இனக் கலவரங்களின் தொடர்ச்சியால் தமது உயர் நடுத்தரக் குடும்ப வாழ்க்கை இலங்கைத்தீவில் பாதுகாப்பற்றதெனவுணர்ந…
-
- 0 replies
- 343 views
-
-
புள்ளிகள் இல்லாத புள்ளிகள் கடந்த வாரம் முல்லைத்தீவில் நடைபெற்ற மரணக்கிரியையில் பங்குபற்றுவதற்காகச் செல்ல வேண்டியிருந்தது. அங்கு, அவலக் குரல் அழுகைக் குரல் கேட்டு வானமே ஒரு கணம் அழுதது. ஆனால், ஐம்பது வயதை அண்மித்த அம்மா ஒருவர், இம்மியளவும் அசராமல் இருந்தார். மெல்ல அவரை அணுகி, காரணத்தை வினாவியபோது, பதில் தூக்கிவாரிப் போட்டது. “2009ஆம் ஆண்டு மேமாதம் தொடக்கம், அழுதழுது எனது கண்ணீரீன் இருப்புத் தீர்ந்து விட்டது” என்றார். அன்றைய தினம், பொதுச்சந்தை செல்வதற்கான தேவை ஏற்பட்டது. நேரம் காலை பத்து மணி; சந்தை களை கட்டியிருந்தது. “ஒரு பக்கத்தால அடி விழுந்தா தாங்கலாம்; ஆனா எல்லாப் பக்கங்களாலும் அடி வி…
-
- 0 replies
- 616 views
-
-
விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கம் தருணத்துக்கேற்ற அரசியல் பூச்சாண்டியே வடபகுதி தமிழ் மக்கள் மத்தியில் நிலவும் விடுதலைப் புலிகளின் ஆதரவு மனநிலை குறித்து ஆய்ந்தறிந்து அதற்கான நடவடிக்கை தொடர்பாக தீர்மானிப்பதற்காக சட்டம் ஒழுங்கு அமைச்சர் பிரதி அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் அண்மையில் வடபகுதிக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர். நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் மட்டுமல்லாமல் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்கள் மத்…
-
- 0 replies
- 288 views
-
-
கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் ? யதீந்திரா வடக்கு மாகாண சபை கலைக்கப்படுவதற்கு முன்பதாகவே அடுத்த முதலமைச்சர் யார் என்னும் கேள்வி எழுந்துவிட்டது. கேள்வி எழுந்தது மட்டுமல்ல, அது வடக்கில் தேனீர் கடையிலிருந்து வெற்றிலைக் கடைவரையில் பேசு பொருளாகவும் இருக்கிறது. தமிழரசு கட்சியின் தலைவராக கருதப்படும் மாவை சேனாதிராஜா தொடக்கம் பாதர் இம்மானுவல்வரையில், பலரது பெயர்கள் அடிபடுகின்றன. ஆனால் கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் யார் – அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் அல்லது எந்தவொரு கட்சிiயும் சாராதவரா? தமிழ் அரசியல் அரங்கில் மன்னிக்க வேண்டும் தற்போதுள்ள தமிழ் தேசிய அரசியல் அரங்கில் இவ்வாறான கேள்விகளையோ அல்லது அதனை அடியொற்றிய உரையாட…
-
- 0 replies
- 508 views
-
-
பதவி நீடிப்பும் பின்னணியும் -சுபத்ரா இறுதிப் போரில் முக்கிய பங்காற்றிய இராணுவ அதிகாரிகளை ஒருவாறு ஒதுக்கித் தள்ளி வந்துள்ள அரசாங்கம், அதனை மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத் தான், மீண்டும், லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு சேவை நீடிப்பை வழங்கியுள்ளது. நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு எதிராகப் பேசுவோர், செயற்படுவோரை இராணுவ முகாம்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற கடுமையானதொரு உத்தரவை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க அனைத்து பற்றாலியன் கட்டளை அதிகாரிகளுக்கும் பிறப்பித்து, ஒரு வார காலத்துக்குள் அவருக்கு சேவை நீடிப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் யாழ்ப்பா…
-
- 0 replies
- 547 views
-
-
விக்னேஸ்வரன் தாண்ட வேண்டிய கண்டங்கள்! முதலை நீருக்குள் அமிழ்ந்திருக்கும் போது யானைப் பலத்துடனிருக்கும். அதைத் தரையில் எடுத்துப் போட்டால் அதன் வாலைப் பிடித்து இழுத்துக் கொண்டு செல்லலாம் என்று கூறப்படுவதுண்டு. அப்படித்தான் பாம்பும். பாம்புக்குத் தரையில் வயிறு படும் வரைதான் பலமெல்லாம். அதைத் தரையிலிருந்து தூக்கி விட்டால் அது பலமிழந்து விடும். கழுகு பாம்புடன் மோதும் போது அதைத்தான் செய்வதுண்டு. பாம்பின் வாலைப்பிடித்து வானில் தூக்கி விட்டால் பாம்பு அதன் இயங்குதளத்தை இழந்து விடும். பலத்தையும் இழந்து விடும். அரசியலிலும் அப்படித்தான். தனது பலம் எது – பலவீனம் எது – தனக்கு பலமான களம் எது – பலவீனமான களம் எது என்பதைக் குறித்து சரியாக முடிவை எடுப்பவரே சிறந்த தலை…
-
- 0 replies
- 560 views
-
-
விஜயகலாவின் கூற்றுக்கான -காரணத்தை அரசு -இனியாவது கண்டறியுமா? கடந்த காலங்களிலும் விடுதலைப் புலிகளை மீண்டும் கொண்டு வருவதற்குப் பல அரசியல்வாதிகள் முயற்சித்தனர். அவர்கள் அனைவரும் தற்போது ஆறுஅடி நிலத்திற்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இதுவே விஜகலாவுக்கும் நடக்குமென முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போது அமைச்சர் பொறுப்பில் உள்ளவருமான சரத் பொன்சேகா கூறியுள்ளதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இறுதிப்போர் இடம்பெற்றபோது இராணுவத் தளபதியாக இருந்தவர் சரத்பொன்சேகா. அ…
-
- 0 replies
- 358 views
-
-
தமிழர்களை மேலும் வதைப்பது நியாயமா? இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்காது இழுத்தடிப்பதன் மூலமாக நாட்டில் இன்னுமொரு ஆயுத மோதலுக்குத் தூபம் இடப்படுகின்றதாவென்ற சந்தேகம் எழும்பியுள்ளது. நீண்ட ஆயுத மோதல் ஒன்று இடம்பெற்று முடிந்து 10 ஆண்டுகள் பூர்த்தியாகப் போகின்றன. இந்தப் போரினால் ஏற்பட்ட அழிவுகள் கணக்கிட முடியாதவை. இந்த நாடு சகல துறைகளி லும் பின்தங்கி நிற்பதற்கு நீண்டு சென்ற ஆயுதப் போரே காரணமெனச் சொல்ல முடியும். நாட்டின் அரிய வளங்கள் யாவற்றையும் இந்தப் போர் ஈவிரக்கமின்ற…
-
- 0 replies
- 262 views
-
-
விஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல் – நிலாந்தன்… விஜயகலாவின் பேச்சால் அவர் இழந்தவை எவை? , பெற்றவை எவை? உடனடிக்கு அவர் தனது பிரதி அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார். ஆனால் நீண்ட எதிர்காலத்துக்கு தனது நாடாளுமன்ற ஆசனத்தைப் பாதுகாத்திருக்கிறார். அவர் புலிகளைப் போற்றிப் பேசியதற்காக அவர் பதவியை இழந்தமை அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் அவரைக் கதாநாயகி ஆக்கியிருக்கிறது. இது அவருடைய வாக்குத் தளத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. எனவே உடனடிக்கு நட்டம் என்றாலும் நீண்ட கால நோக்கில் அவருக்கு லாபமே கிடைக்கும். பதவியை இழந்தமை அவருக்கு ஒரு அரசியல் முதலீடாக அமையும். அதே சமயம் விஜயகலாவைப் பதவி விலகக் கேட்டதன் மூலம் ரணிலுக்கு இழப்பு எதுவும் இல்லை. அவரின் எதிரிகள…
-
- 1 reply
- 967 views
- 1 follower
-