அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
மனித உரிமைகள் பேரவை தொடர் கதையா? எம். எஸ். எம் ஐயூப் நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளான ‘ஹியூமன் ரைட்ஸ் வொச்’, ‘சர்வதேச மன்னிப்புச் சபை’, ‘மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசிய அமைப்பு’, ‘சர்வதேச சட்ட வல்லுனர்களின் ஆணைக்குழு’ ஆகியன கூட்டாக, ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு, இலங்கை விடயத்தில் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளன. தற்போது சுவிட்சர்லாந்து, ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரின் போது, இலங்கை தொடர்பாக கடுமையான பிரேரனையை நிறைவேற்ற வேண்டும் என்று கோரியே, அவ்வமைப்புகள் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளன. மனித உரிமைகள் விடயத்தில், இலங்கை அரசாங்கம் நம்பகமான முறையில் நடந்து கொள்வதில்லை என்ற அடிப்படையிலேயே, …
-
- 0 replies
- 501 views
-
-
ரணிலிடம் சிக்கி சின்னாபின்னமாகப் போகும் தமிழர் அரசியல்...! இலங்கைத் தமிழனினம் இன்று அரசியல் அநாதையாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பது வரலாற்றில் பதியப்படுவது ஒன்றும் புதிதானதன்று. வரலாற்றுக் காலம் தொட்டே இந்த நிலமை ஏற்பட்டுள்ளமையை நினைவுபடுத்திக் கொள்ளலாம். இலங்கையின் பகுதி முழுவதையும் தமது கட்டுபாட்டில் வைத்திருந்தனர் இயக்கர் நாகர்கள். இவர்கள் ஈழ தேசத்தின் சொந்தக்காரர்களாக, பூர்வீக குடிகளாக நாடு முழுவதிலும் பரந்து வாழ்ந்து வந்தனர். குவேனியை ஆரிய இளவரசன் மணந்து கொண்டு இலங்கை ஆட்சி உரிமையை பெற்றுக்கொண்டதில் இருந்து தொடங்கிற்று தமிழர்களின் அழிவு அரசியல். இந்தியாவில் இருந்து விரட்டப்பட்ட இளவரசன் விஐயன் எவ்வாறு தந்திரமாக இலங்கை அரசு உரிமையைப் குவேனியிடமிரு…
-
- 1 reply
- 501 views
-
-
வடக்கின் முதலமைச்சர்; முடிவில்லாப் பிரச்சினை வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் தான் இருக்கின்ற நிலையில், வடக்கின் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. முதலாவது வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையிலும் கூட, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 6 மாகாண சபைகளுக்கும், எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது நிச்சயமற்ற நிலையிலேயே இருக்கிறது. தேர்தல் முறை தொடர்பாக கட்சிகளுக்கிடையில் இன்னமும் கருத்தொற்றுமை ஏற்படாத நிலையில், தேர்தலை எப்படி – எப்போது நடத்துவது என்று இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை. இதனால் இழுபறி நிலை நீடிக்கும் சூ…
-
- 0 replies
- 501 views
-
-
அரசியல் போர்க்களம் – பி.மாணிக்கவாசகம்… November 9, 2018 நாட்டில் அரசியல் குழப்ப நிலைமை ஏற்பட்டு இரண்டு வாரங்களாகப் போகின்றன. ஆயினும் நெருக்கடிகள் நாளுக்கு நாள் கூடுகின்றனவே தவிர குறைவதற்கான அறிகுறிகளைக் காண முடியவில்லை. நவம்பர் 16 ஆம் திதகி வரை ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்றம் இரண்டு தினங்கள் முன்னதாக 14 ஆம் திகதி கூட்டப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரச வர்த்தமானியின் மூலம் அறிவித்துள்ளார். ஆயினும் தொடர்ந்து செல்கின்ற உறுதியற்ற அரசியல் செயற்பாடுகள் அடுத்தடுத்த கட்டங்களில் எத்தகைய நிலைமைகளைத் தோற்றுவிக்கும் என்பது குறித்து பலரும் கவலை கொள்ளத் தொடங்கியிருக்கின்றார்கள். உள்நாட்டில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் இந்த கவலை சார்ந்த அக்…
-
- 0 replies
- 501 views
-
-
ரிஷாட்டும் அரசாங்கமும் -எம்.எஸ்.எம். ஐயூப் முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஸ் பதியுதீன், கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர்களுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டார். அது, தென்னிலங்கை அரசியலில், பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதமே, ரியாஸ் பதியுதீன் கைது செய்யப்பட்டார். “குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களுடன், அவர் நடத்திய தொலைபேசி உரையாடல்களைப் பற்றிய உறுதி செய்யப்பட்ட தகவல்கள் பொலிஸாரிடம் இருக்கின்றன” என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர…
-
- 1 reply
- 501 views
-
-
ஜனநாயக பண்புகளுக்கு அமைய நாடு ஆளப்பட வேண்டும் 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா. சம்பந்தன் ஆற்றிய உரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பிரதம மந்திரியும் கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க தலைமைதாங்கும் ஐக்கியதேசிய கட்சி ஆகிய இந்த நாட்டின் இரு பிரதான அரசியல் கட்சிகள் இணைந்து நடத்தும் தற்போதைய…
-
- 1 reply
- 501 views
-
-
தமிழ் மக்களும் ஜே.வி.பி.யும் வீ.தனபாலசிங்கம் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரான ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி. ) வின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க கடந்தவாரம் ' கேசரி ' க்கு வழங்கிய நேர்காணலில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய தெரிவு குறித்து தெரிவித்திருக்கும் கருத்து விரிவான விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஏனைய தேர்தல்களில் தமிழ் அரசியல் கட்சிகளை ஆதரிக்கலாம்.ஆனால், ஜனாதிபதி தேர்தல் என்று வரும்போது தமிழ் மக்கள் தென்னிலங்கை கட்சியொன்றை ஆதரிப்பதென்றால், தென்னிலங்கை கட்சியொன்றை அவர்கள் நம்புவதென்றால் ஜே.வி.பி.யே ஒரே தெரிவாக இருக்கமுடியும் என்று கூற…
-
- 0 replies
- 501 views
-
-
பலவீனங்களுக்குப் பரிகாரம் தராத பலவீனங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பலவீனம் அடைந்துள்ளது” என அண்மையில் தெரிவித்திருந்தார். கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் இதையே சுட்டி நிற்கின்றன. கடந்த ஒன்பது வருடங்களில், தமிழ் மக்களது தேசிய விடுதலைப் போராட்டம், ஒருவித தேக்க நிலையை அடைந்துள்ளது. உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தமிழ் மக்களது அரசியல் சார்ந்த செல்நெறியில், செயற்றிறனுடைய செயற்றிட்டங்கள் தீட்டப்பட்டதாகத் தெரியவில்லை. …
-
- 0 replies
- 501 views
-
-
உள்ளுராட்சி தேர்தல் நடத்தப்படுமா? ஜனநாயக வழிப்பாதையில் செல்வதாக தம்பட்டமடிக்கும் எந்தவொரு நாடும் உரிய காலத்தில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டியது ஜனநாயக கடமையாகும். 2015 ஆம் ஆண்டுடன் காலாவதியாகிப் போன உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை இன்னும் நடத்தாமல், பல்வேறு காரணங்களைக் காட்டி அரசாங்கம் இழுத்தடிப்பு செய்துவருகின்றது என எதிர்த்தரப்பினர் கூறும் குற்றச்சாட்டுக்களில் உண்மையிருக்கத்தான் செய்கிறது. உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்தும்படி அரசாங்கத்தை வலியுறுத்தி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இம்மாதம் 31 ஆம் திகதி முதல் நாடுதழுவிய போராட்டத்தில் ஈடுபடப்போவதா…
-
- 0 replies
- 501 views
-
-
கன்னியா - திருக்கேதீஸ்வரம்: சிந்திக்க வேண்டிய முரண்நகை காரை துர்க்கா / 2019 ஜூலை 30 செவ்வாய்க்கிழமை, பி.ப. 01:20 Comments - 0 கடந்த வாரமளவில் வவுனியா சென்று, மீண்டும் வீடு திரும்பும் பொருட்டு, வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் காத்திருந்தோம். இரண்டு பெரியவர்கள் உரையாடிக் கொண்டு இருந்தார்கள். “சண்டை நடந்த காலத்தில, அவங்கள் சைவம், வேதம் எண்டு பார்த்து விட்டே, குண்டு போட்டவங்கள்; பிடிச்சுக் கொண்டு போனவங்கள். தமிழன் எண்டு மட்டும் தானே பார்த்தவங்கள். அப்ப நாங்கள் ஏன் சைவம், வேதம் எண்டு வேற்றுமை காட்ட வேண்டும்....” அவர்களின் உரையாடல், எங்களின் கவனத்தை, வெகுவாக ஈர்ந்தது. பொருள் பொதிந்ததாகவும் எளிமையாக விளங்கக் கூடியதாகவும் இருந்தது. மேலும் உண்மையானதாகவு…
-
- 1 reply
- 501 views
-
-
பாரபட்சம் இந்த நாட்டை முப்பது வருடங்களாக ஆட்டிப்படைத்த பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் காட்டப்படுகின்ற தாமதமும், இழுத்தடிப்பும் ஆட்சியாளர்களின் அரசியல் நேர்மை, அரசியல் நிர்வாக நேர்மை குறித்து பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. அரசியல் கைதிகளின் விவகாரம் மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகள் அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதே இதற்குக…
-
- 0 replies
- 501 views
-
-
மாகாண சபைகளுக்கான தேர்தலும் ”கொரோனா இராஜதந்திரமும்” – தாயகன் புதிய அரசியலமைப்பில் மாகாண சபைகள் உருவாக்கத்தின் மூலாதாரமான 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்பட வேண்டும், மாகாணசபைகள் ஒழிக்கப்பட வேண்டும்,மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படக்கூடாது என அரசின் பங்காளிகளும் முக்கிய அமைச்சர்களும் போர்க் கொடிதூக்கியுள்ள நிலையில் அதற்கான நகர்வுகளையே மேற்கொண்டு வந்த கோத்தபாய ராஜபக்ச அரசு ,திடீரென 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்த முயற்சிப்பதன் பின்னணி என்ன? 0 தாயகன் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கட…
-
- 0 replies
- 501 views
-
-
இந்தியா பதின்மூன்றாவது திருத்தத்தைப் பாதுகாக்குமா? - நிலாந்தன் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அடுத்த நாள் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்திருக்கும் கப்பிட்டல் டிவியில் நானும் யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி கணேசலிங்கமும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அதன்போது பதின்மூன்றாவது திருத்தத்தை அரசாங்கம் நீக்கினால் அதை இந்தியா தடுக்குமா என்று உரையாடப்பட்டது. அதற்கு கணேசலிங்கம் ஏற்கனவே இந்தியா வடக்கு கிழக்கு இணைப்பு பிரிக்கப்பட்ட பொழுது அதை எதிர்க்கவில்லை எனவே இனிமேலும் 13ஆவது திருத்தத்தில் கைவைத்தால் இந்தியா எதிர்க்கும் என்று எப்படி எடுத்துக் கொள்வது ?என்று கேட்டார். அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தை அகற்றக் கூடும் என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது. ராஜபக்சக்கள் இந்…
-
- 1 reply
- 501 views
-
-
இறுகும் இராணுவப் பிடி..! -சுபத்ரா வடக்கை மீண்டும் இராணுவப் பிடிக்குள் கொண்டு வரும் அடுத்த கட்டத்துக்குள் அரசாங்கம் நகர்ந்திருக்கிறது. 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், வடக்கு, கிழக்கில் ஓரளவுக்கு திறக்கப்பட்ட ஜனநாயக வெளியை மீண்டும் அடைப்பதற்கான நகர்வாகவே இது அமைந்துள்ளது. தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு வடக்கு, கிழக்கில் உள்ள நீதிமன்றங்களின் மூலம் பொலிசார் தடை உத்தரவுகளைப் பெற்று, நிகழ்வுகளை முழுமையாகத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்துக்கு இதுபோன்ற இறுக்கமான கெடுபிடிகளைக் கையாளுவது ஒன்றும் புதிய விடயமில்லை. 2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னங…
-
- 0 replies
- 501 views
-
-
இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் மட்டும்தான் சாதியடக்குமுறை உண்டு என்றும், சிங்கள மக்களிடம் சாதிப் பாகுபாடு இல்லை என்றும், அனேகர் கருதுவது மிகத் தவறானது என கட்டுரையாளர் திபாகரன் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தனது கட்டுரையில், இருபகுதியினரிடமும் சாதிப் பாகுபாடு வலுவாக உண்டு எனினும் தமிழ் மக்களிடம் சாதிப்பாகுபாட்டில் தீண்டாமை என்கிற அம்சம் உண்டு. ஆனால் சிங்களவர்களிடம் தீண்டாமை என்பது கிடையாது. ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் சாதி பேதமானது தமிழ் மக்களிடம் இருக்கின்ற சாதி பேதத்தை விடவும் அரசியல் மத ரீதியில் மிக ஆழமானதும் கடுமையானதும் ஆகும். இது பற்றி தெரிந்து கொள்ளாமல் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதும் மிகப்பெரும் அரசியல் ரீதியான சமூக ர…
-
- 0 replies
- 501 views
-
-
சம்மந்தனின் மறைவும் தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலமும் July 9, 2024 – கருணாகரன் — “சம்மந்தனின் மறைவுக்குப் பிறகு, தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம் எப்படி இருக்கும்?” – இந்தக் கேள்வி, சம்மந்தனின் மறைவுக்கு முன்னரே எழுப்பப்பட்டிருந்த ஒன்றுதான். ஆனாலும் அவர் மறைந்திருக்கும் இந்தச் சூழலிலும் இதற்குத் தெளிவான பதில் இல்லை என்பதே தமிழ்த்தேசியவாத அரசியலின் பரிதாபகரமான நிலையாகும். என்பதால் சம்மந்தன் இருந்தபோது ஏற்பட்டிருந்த குழப்பங்கள், இழுபறிகளையும் விட இனி வரும் நாட்களில் தமிழ்த்தேசிய அரசியற் பரப்பில் மேலும் பல குழப்பங்களும் பலத்த இழுபறிகளும் நிகழவுள்ளன. பல்வேறு குறைபாடுகள், கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ்த்தேச…
-
- 0 replies
- 501 views
-
-
வாக்குறுதியைக் காப்பாற்றுவாரா சம்பந்தன்? 'கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, 2016 ஆம் ஆண்டு முடிவுக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வழங்கியிருந்தார். இரா.சம்பந்தன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு முடிவதற்கு இன்னமும் இரண்டு மாதங்கள்தான் இருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தல்க் காலத்தில் கொடுத்த வாக்குறுதியை இரா.சம்பந்தன், பின்னரும் அவ்வப்போது நினைவுபடுத்தியிருந்தார். அந்த வாக்குறுதியை அவரால் நிறைவேற்ற முடியாது என்பது முன்னரே ஊகிக்கக்கூடிய விடயம்தான். ஏனென்றால், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடிக்கும் ஒரு பிரச்சி…
-
- 0 replies
- 501 views
-
-
அரசியல்களம்... திரு வரதராஜபெருமாள் அவர்களுடனான செவ்வி
-
- 0 replies
- 501 views
-
-
கோட்டா பேணும் இராணுவ ஒழுங்கு புருஜோத்தமன் தங்கமயில் / 2020 செப்டெம்பர் 03 ஒன்பதாவது நாடாளுமன்றத்தைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய அக்கிராசன உரை, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட பல தரப்பினருக்கும் தெளிவான அறிவுறுத்தல்கள் சிலவற்றை வழங்கியிருக்கின்றது. அதில், முதலாவது, இந்த ஆட்சியில் எந்த ராஜபக்ஷ தீர்மானங்களின் நாயகனாக இருப்பார் என்பது; இரண்டாவது, எதிர்க்கட்சிகளோ, சிறுபான்மைத் தரப்புகளோ எந்தவொரு தருணத்திலும், அரசாங்கத்தினதும் நிர்வாகத்தினதும் தீர்மானங்களில், ‘சிறிய ஆலோசனை’ என்கிற அடிப்படையில் கூட, உள்வாங்கப்பட மாட்டார்கள் என்பது; மூன்றாவது, சிவில் நிர்வாகக் கட்டமைப்பைத் தாண்டி, இராணுவ நிர்வாக…
-
- 0 replies
- 500 views
-
-
உலக அரசாங்கங்கள் ஒரு பொதுவுடமையின் கீழ்த்தான் இயங்குகின்றன. இங்கே பொதுவுடமையின் கீழ் இயங்குதல் என்பதன் பொருள், அரசாங்கம் ஒன்று இன்னொரு அரசாங்கத்திற்கு ஒத்துழைத்தல், உதவுதல் என்று பொருள்கொள்ளப்படும். உலக நாடுகள் அத்தனையும் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் என்று இன்னபிற செயற்பாடுகளில் ஒத்துழைப்புக்களோடு செயற்பட்டாலும், இன்னொரு முக்கியமான விடையங்களில் அரசாங்கங்கள் ஒத்துழைப்போடு தான் இயங்குகின்றன. அது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்னும் மையப்பொருளோடு ஒன்றிக்கிறது. பொதுவாக, உலகில் தோன்றிய அத்தனை போராட்ட இயக்கங்களின் வளர்ச்சியின் பின்னணியில் அரசாங்கங்களின் பங்களிப்பு அளப்பரியது. அது உலகத்தை ஆட்டிப்படைத்த ஒசாமா பின்லேடனாக இர…
-
- 1 reply
- 500 views
-
-
-
- 1 reply
- 500 views
-
-
வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை மீட்சி இல்லை கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய கொள்கை உரையை நாம் இப்போது விவாதிக்கின்றோம். இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்திற்கு கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்தார். அதனை அதே கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஒருவர் வழிமொழிந்திருந்தார். இந்த அரசாங்கம் நாட்டை ஆளக்கூடாது என்பதுதான் அவர்களது உரைகளின் முக்கிய கருப்பொருள் என்பதை நாம் காணலாம். ஆட்சிபீடத்திற்கு மீண்டும் அவர்கள் கொண்டுவரப்பட வேண்டும் அல்லது நாட்டை அவர்கள் ஆள்வதற்கு அவர்களுக்கு வகைசெய்யப்பட வேண்டும் என்பது அதன் பொருளாகும். அவர்கள் இந்த நாட்ட…
-
- 0 replies
- 500 views
-
-
ஊசலாடும் நல்லாட்சி பின்வாங்கும் மஹிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் வெளிவந்ததிலிருந்து நாட்டில் தேசிய அரசியலில் பாரிய கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கின்றது. இலங்கை அரசியல் வரலாற்றில் உள்ளூராட்சி தேர்தல் ஒன்றின் காரணமாக தேசிய அரசியல் மட்டத்தில் இந்தளவு தூரம் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டமை மிக முக்கியமானதாகவே காணப்படுகின்றது. இந்தத் தேர்தல் மிகத்தாமதமாகவே நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு நடைபெற்றிருக்கவேண்டிய உள்ளூராட்சிமன்றத் தேர்தல் புதிய தேர்தல் முறை மாற்றம் காரணமாக பாரிய தாமதத்தின் பின்னரே நடைபெற்றது. தேர்தல் நடைபெறும் முன்னரே இந்தத் தேர்தலின் பின்னர் பாரிய அரசியல் நெருக்கடிகள் ஏற்படும் …
-
- 0 replies
- 500 views
-
-
அப்பலோவில் முதல்வர் ஜெயா ; அரச பணிகளை கவனிக்க துணை முதல்வர்? தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண சுகமடைந்து கடமைக்குத் திரும்பவேண்டுமென்பதே தமிழக மக்களின் பிரார்த்தனையாக இருக்கிறது. முதல்வரை பார்க்க வேண்டும், அவரது உண்மை நிலையை தெரிந்துகொள்ள வேண்டும் என்று மக்கள் மத்தியில் இருக்கும் அவா அதைவிட அதிகம். ஆனால், உண்மை நிலையை அறிந்து கொள்ள முடியாமல் அ.தி.மு.க. தொண்டர்கள், அமைச்சர்கள் மட்டுமன்றி முழு தமிழக மக்களுமே திகைப்பில் இருக்கின்றனர். தமது இஷ்ட தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்வதும், நேர்த்திக்கடன் வைப்பதும், மண்சோறு சாப்பிடுவதும், காணிக்கை செலுத்துவதுமாக இருக்கின்றனர். அப்…
-
- 0 replies
- 500 views
-
-
வாக்குறுதி நிறைவேறுமா? -கபில் “யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் உண்மையாகவே, உணர்வு ரீதியாக தனது தவறை உணர்ந்து கொண்டு, அடிக்கல் நாட்டினாரா அல்லது, நிலைமையின் தீவிரத்தை குறைப்பதற்காக, இந்தப் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வதற்காக பாசாங்கு செய்தாரா?” போர் முடிந்து விட்டது எல்லா மக்களும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற சூழலில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை, அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்ற கருத்து இருக்குமானால், வடக்கு, கிழக்கில் ஏன் போர் நினைவுச் சின்னங்களை அரசாங்கம் வைத்திருக்கிறது? முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்து அழித்து விட்டு, அது தூபி அல்ல, சட்டவிரோத கட்டுமானம் தான், என்று ஊடகங்களுக்கு செவ்வி கொடுத்த துணைவேந்தரைக் கொண்டே, நினைவுத் …
-
- 0 replies
- 500 views
-