அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
தமிழ்க் கட்சிகளின் பிளவுகள் தேசியக் கட்சிகளின் நிலைபேற்றுக்கு வழிசமைக்கும் - க. அகரன் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைப்பாட்டில் இன்றைய தமிழ் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசார வியூகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒற்றுமை என்ற நிலைப்பாட்டில் இருந்து தமிழர் அரசியல் பலம் சிதைந்து, பல கூறுகளாகியுள்ள நிலையில், உள்ளூராட்சி தேர்தல் மக்கள் மத்தியில் வந்திருக்கின்றது. அரசியல் தீர்வை நோக்கி நகரவேண்டிய கட்டாயம் தமிழர் மத்தியில் ஏற்பட்டிருந்தபோது, இதற்கான நம்பிக்கை கொண்ட தரப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் ஏக கட்சியாக கொள்ளப்பட்டிருந்தது. எனினும், கால ஓட்டங்களில் ஏற்…
-
- 0 replies
- 252 views
-
-
இதற்கு மேலுமா நம்புவது ? By DIGITAL DESK 5 24 OCT, 2022 | 12:20 PM சத்ரியன் அரசதரப்பு சட்டத்தரணியாகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், எம்.எம்.சுஹைர் அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் எழுதியிருந்த விருந்தினர் பத்தி ஒன்றில் குறிப்பிட்டிருந்த விடயங்கள், ஆங்கில ஊடகங்களில் அதிகம் கவனத்தைப் பெற்றிருந்தது. அவரது அந்த பத்தியில், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக, புதிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதற்கு வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனங்களின் உதவிகள் பெறப்படவுள்ளதாகவும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன், பாராளுமன்றத்தில் அறிவித்திருப்பதை மையப்படுத்தி, பல கேள்விகளை எழுப்பிய…
-
- 0 replies
- 514 views
- 1 follower
-
-
நிர்க்கதியான அரசியற்கைதிகளும் தமிழரின் போராட்டத்தின் போக்கும் – பாகம் 1 - 23 ஆகஸ்ட் 2014 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக இனியவன்:- இன்று அரசியற்கைதிகள் என்றால் யார் என்று கேட்குமளவிற்கு போரின் பிந்திய தமிழரின் அரசியற்போக்கு இருக்கும் இந்தக் கேவலமான சூழ்நிலையில் அரசியற்கைதிகள் என்றால் யார் என்ற கேள்வியிலிருந்தே இப்பத்தியினை எழுத வேண்டும். சுருங்கக்கூறின் சிங்களப் பேரினவாத அரசு யாரையெல்லாம் பயங்கரவாதச் சந்தேக நபர்கள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் பட்டியற்படுத்தி சிறைகளிலும் தடுப்பு நிலையங்களிலும் அடைத்து வைத்திருக்கின்றதோ அவர்கள் எல்லோரும் அரசியற்கைதிகளாவார்கள். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் ஆயிரக்கணக்கான அரசியற் கைதிகள் மகசீன…
-
- 0 replies
- 411 views
-
-
என்ன செய்யப் போகின்றார்கள்? பி.மாணிக்கவாசகம்… ஐநா மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது அமர்வு இலங்கையைப் பொறுத்தமட்டில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை, சம்பந்தப்பட்ட பல தரப்பினரும் தீர்மானிக்க வேண்டிய கட்டாய நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கையின் மனித உரிமை நிலைமைகள், போர்க்காலச் செயற்பாடுகள் – போர்க்குற்றம் சார்ந்த சம்பவங்கள் பற்றிய பொறுப்பு கூறும் கடப்பாட்டில் இலங்கை அரசாங்கம் காட்டியுள்ள முன்னேற்றம் என்பவற்றை மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த அமர்வில் இலங்கை விவகாரம் உள்ளடக்கப்பட்டிருந்ததன் நோக்கமும் அதுவே. பொறுப்பு கூறுவதில் இலங்கையின் நிலைமைகள் குறித்து தீர்மானம் எடுப்பதல்ல. இந்த நிலையில் நட…
-
- 0 replies
- 467 views
-
-
பேச்சுவார்த்தைக்கான நிபுணத்துவ அறிவு கட்சிகளுக்குத் தேவையா ? நிலாந்தன். கடந்த 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் பதினோராம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று யாழ்ப்பாணம் ராஜா க்ரீம் ஹவுஸ் மண்டபத்தில் ஒரு சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது. மன்னாரைச் சேர்ந்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கமானது மேற்படி சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தது. தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் தமிழ்த்தேசிய மக்கள்முன்னணி அழைக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்திற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான உறவு சுமூகமானது அல்ல. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை இது போன்ற ஒருங்கிணைப்ப…
-
- 0 replies
- 747 views
-
-
சம்பந்தன் – மகிந்த சந்திப்பிற்கு பின்னால் சீனாவின் திரைமறைவு கரம் இருந்ததா? யதீந்திரா கடந்த 23ம் திகதி சீன இராணுவத்தின் 91வது ஆண்டு சம்மேளனம் கொழும்பில் இடம்பெற்றிருந்தது. இதன் போது மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரும் அதிதிகளாக பங்குகொண்டிருந்தனர். இந்த நிகழ்வில் இரா.சம்பந்தனும் பங்கு கொண்டிருந்தார். அதே போன்று டக்ளஸ் தேவானந்தா உட்பட ஏனைய சில அரசியல் தலைவர்களும் பங்குகொண்டிருந்தனர். அடிப்படையில் இது பாதுகாப்பு தரப்பினரை முதன்மைப்படுத்த வேண்டிய ஒரு நிகழ்வு எனினும் மகிந்த ராஜபக்சவை முதன்மைப்படுத்தி அழைத்திருப்பதானது அரசியல் ரீதியில் முக்கியமான ஒன்று. இந்த நிகழ்வில் சம்பந்தனும் பங்கு கொண்டிருப்பதை வழமையான …
-
- 0 replies
- 750 views
-
-
ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் கடந்த நாட்களில் பரவலாக முன்வைக்கப்பட்டன. இன்னமும் அந்தக் கோரிக்கைக் கோசங்கள் தொடர்கின்றன. குறிப்பாக, தமிழ் சமூக- இணைய ஊடகப் பரப்பில், ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிப்பதன் அவசியம் பற்றிய கருத்தாடல்கள் குறிப்பிட்டளவில் இடம்பெற்றுவருகின்றன. ஜனாதிபதித் தேர்தல் புறக்கணிப்புக் கோசம் தமிழ் மக்களிடம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வந்த நிலையில், அதை இன்னும் அதிகப்படுத்தி வைத்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அறிவிப்பு. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அந்தக் கட்சி கடந்த வாரம் வெளிப்படையாகவே ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கையை தமிழ் மக்கள…
-
- 0 replies
- 386 views
-
-
கேட்டிலும் துணிந்து நில் காரை துர்க்கா / மனிதன் ஒரு சமூக விலங்கு. ஆனால், சிந்திக்கத் தெரிந்த, நெஞ்சத்தில் நெகிழ்ச்சித் தன்மை கொண்ட விலங்கும் மனித இனமே ஆகும். ஆனாலும் மனிதஇனம், மனிதன் உட்பட ஏனைய அனைத்து உயிருள்ளவைகள், சடப்பொருள்கள் என அனைத்தையும் வெற்றி கொள்வதில் ஆனந்தம் கொள்கின்றான்; மகிழ்ச்சி அடைகின்றான். மனங்களைக் கடந்து வெற்றி கொள்வதிலும் பார்க்க, பிணங்களைக் கடந்து வெற்றி கொள்வதில் பூரிப்பு அடைகின்றான். மனிதத்தை விதைப்பதற்குப் பதிலாக, மனிதத்தைப் புதைக்கின்றான். இவ்வாறான ஒரு நெருக்கடிக்குள், இலங்கைத்தமிழ் இனம் நீண்ட காலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது. விடுதலையற்ற, வேண்டாத …
-
- 0 replies
- 3.5k views
-
-
திசை திருப்பும் முயற்சி – பி.மாணிக்கவாசகம் நீறுபூத்த நெருப்பாக உள்ள அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் ஒரு முறை கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றது. அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல தடவைகள் போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. சிறைச்சாலைகளுக்குள்ளேயும், அவர்களுக்கு ஆதரவாக வெளியிலும் இந்த போராட்டங்கள் வலுவாக நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் அரசாங்கம் அக்கறையற்ற விதத்திலேயே நடந்து கொண்டிருக்கின்றது. மேலோட்டமான பார்வையில் இதனை ஒரு சுரணையற்ற போக்கு என்றுகூட …
-
- 0 replies
- 485 views
-
-
தேசத்தைக் கட்டியெழுப்புதலும், அதிகாரப் பகிர்வும் 13ஆவது திருத்தமும் தெற்கில் இடம்பெற்ற இரண்டு எழுச்சிகளும், வடக்கில் மூன்று தசாப்த கால ஆயுத மோதல்களும், மக்கள் எந்தவொரு அரசியல் அதிகாரத்தையும் பகிர்ந்து கொள்வதில் இருந்து ஒதுக்கப்பட்டால், அவை தற்போதுள்ள முறைமையின் நியாயத்தன்மைக்கு சவால் விடும் வாய்ப்புகள் அதிகம் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும். சமஷ்டி அல்லது அதிகாரப்பகிர்வு என்பது பல்வேறு அரசியல் நிறுவனங்களிடையே அவர்களின் இன அல்லது பிராந்திய உறவுகளைப் பொருட்படுத்தாமல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு வழிமுறையாகும். வெற்றிகளையும் சுமைகளையும் நியாயமாகவும் சமமாகவும் பகிர்ந்து கொண்டால் ஜனநாயகம் சிறப்பாக வாழும். …
-
- 0 replies
- 327 views
-
-
(எம்.பஹ்த் ஜுனைட்) 1990 ஒக்டோபர் 29 இல் புலிகளால் வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு மேற்கொண்டு 33 வருட நினைவு தின நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (29) காத்தான்குடி அல் மனார் அறிவியல் கல்லூரி , அப்துல் ஜவாத் மண்டபத்தில் நடைபெற்றது . எக்ஸத் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஜெ.எல்.எம்.ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் பிரதம அதிதியாகவும் வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் அமைப்பின் செயலாளர் சட்டமானி பி.எம்.முஜீபுர்ரஹ்மான் முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் ஆகியோர் கெளரவ அதிதிகளாக கலந்துகொண்டு வட மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்ல…
-
- 0 replies
- 631 views
-
-
இந்தியாவை நாங்கள் அளவுக்கு மீறி நம்பவும் கூடாது. இந்தியாவின் நிலைப்பாடு முழுமையாக எங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று நாங்கள் கொள்ளக்கூடாது என சமூக செயற்பாட்டாளர் செல்வின் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஆனால் எங்களுக்கு எதிராக இருக்கக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். இலங்கை தீவைப் பொறுத்தவரை இந்த உலக நாடுகள் எல்லாம் பார்க்கின்ற விடயம் என்னவென்று சொன்னால் இலங்கைத் தீவின் அரசியல் அதிகாரம் யாரால் நிர்ணயிக்கப்படுகின்றதோ அவர்களுடைய மனம் கோணாமல் தாங்கள் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றார்கள். இலங்கையில் 72 வீதமான மக்கள் சிங்கள பெரும்பா…
-
- 0 replies
- 497 views
- 1 follower
-
-
அமெரிக்கா பறந்தது எதற்காக? மேற்குலகின் புதிய நகா்வுகள் | தாயகக்களம் | கஜேந்திரகுமாா் பொன்னம்பலம்
-
- 0 replies
- 542 views
-
-
-
பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, இந்திய விஜயம் முடிவுற்று ஒரு மாத காலத்தில், இரண்டாவதாக சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிகாரபூர்வ விஜயமாக இன்று சீனா சென்றுள்ளார். வரும்17-ஆம் தேதி வரை அவர் அங்கு தங்கியிருப்பார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமைந்திருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் கூறுகிறது. 'பொங்கல் வைக்க கூட அரிசி இல்லை' - இலங்கையில் அரிச…
-
- 0 replies
- 431 views
- 1 follower
-
-
தமிழ் மக்கள் (ஆண்கள்) பேரவை நளினி ரட்ணறாஜா December 28, 2015 படம் | Conciliation Resources நாட்டின் மொத்த சனத்தொகையில் 52% பெண்களையும் மொத்த வாக்காளார்களில் 58% பெண் வாக்காளர்களையும் கொண்டுள்ள இலங்கையில், அரசியலில் பெண்கள் வகிக்க வேண்டிய பங்கின் முக்கியத்துவத்தை இன்னும்கூட ஆண் அரசியல்வாதிகளும், ஆண் அரசியல் தலைமைகளும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. புரியாமல் இருக்கிறார்களா அல்லது புரியாத மாதிரி நடிக்கிறார்களா என்பது எனக்கு இன்னும் புதிராகவே இருக்கிறது. தொடர்ந்து ஆறு தசாப்தங்களாக பெண்கள் வகிக்க வேண்டிய அரசியல் பாத்திரம் ஆண்களால் மறுக்கப்பட்டேதான் வந்திருக்கிறது. அத்துடன், சிறுபான்மை மக்களுக்கு சிறு நன்மையேனும் ஆண் அரசியல் தலைமையால் கிடைக…
-
- 0 replies
- 1.2k views
-
-
வாழ்வோரும் இறந்தோரின் எலும்புகளும் நீதியையே, மாற்றத்தையே விரும்புகின்றன August 3, 2025 — கருணாகரன் — யாழ்ப்பாணம் – செம்மணிப்பகுதியில் அகழப்படும் மனிதப்புதைகுழிகளிலிருந்து இதுவரை(30.07.2025) 115 க்கு மேற்பட்டமனித எலும்புக்கூடுகள்(எச்சங்கள்) மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் பெண்கள், குழந்தைகள் அல்லது சிறார்களின் எலும்புத் தொகுதிகளும் இனங்காணப்பட்டுள்ளன. இதயத்தை உலுக்கும் விதமாக இருப்பது, இந்த எலும்புக்கூடுகளோடு குழந்தைகளின் பாற்புட்டிகளும் விளையாட்டுப்பொருட்களும் சேர்ந்து கிடப்பது. அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன. இன்னும் இன்னும் என்னென்னவெல்லாம் மீட்கப்படுமோ? என்று தெரியவில்லை. ஆனால், ஒன்றுமட்டும் உண்மை. இந்த மீட்பில் ஒரு கூட்டுக் கொலை நடந்திருக்கிறது என்பது நிரூபணமாகியுள்ளது. இ…
-
- 0 replies
- 139 views
-
-
தமிழீழ விடுதலைப் போரில் அடுத்து என்ன? அயர்லாந்து தீப்பாயத்தின் பின்னணி அதன் தாக்கம் . விடுதலை இராசேந்திரன்..பொதுச்செயலாளர் பெரியார் திராவிடர் கழகம்.
-
- 0 replies
- 871 views
-
-
விசுவலிங்கம் மணிவண்ணன் அவர்களின் செவ்வி
-
- 0 replies
- 398 views
-
-
வீணடிக்கப்பட்ட 20 நாட்கள் ”தமிழ் கட்சிகள், பிரதிநிதிகள் தமது மக்கள் தொடர்பில் பேசினால் அவர்கள், புலிப் பயங்கரவாதிகள், பிரபாகரன்கள். முஸ்லிம் கட்சிகள், பிரதிநிதிகள் தமது மக்கள் தொடர்பில், மதம் தொடர்பில் பேசினால் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாதிகள், சஹ்ரான்கள்” தாயகன் கொரோனா வைரஸின் ஆக்கிரமிப்புக்கு மத்தியிலும் பொதுஜன பெரமுன தலைமையிலான ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த வியாழக்கிழமை மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 151 வாக்களும் எதிராக 54 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையிலேயே இவ்வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 420 views
-
-
ஒரே கூட்டமைப்பு... இருவேறு ஓட்டங்கள்? நிலாந்தன். சுமந்திரன் உள்ளிட்ட சட்டவாளர் குழு ஒன்று அமெரிக்காவுக்கு செல்கிறது. நிச்சயமாக அது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தூதுக்குழு அல்ல. ஏனென்றால் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எல்லாத் தரப்பு மக்கள் பிரதிநிதிகளும் அதில் உள்ளடக்கப்படவில்லை. நிச்சயமாக அது கூட்டமைப்பின் குழுவும் அல்ல. ஏனென்றால் அதில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படவில்லை. நிச்சயமாக அது தமிழரசுக்கட்சியின் குழுவும் அல்ல. ஏனெனில் இது தொடர்பாக தமிழரசுக் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களோடு உரையாடப்படவில்லை என்று தெரிகிறது. அப்படி என்றால் இந்தக் குழு யார் சார்பாக அமெரிக்காவுக்கு செல்கிறது? முதலில் இக்குழு அமெரிக்காவ…
-
- 0 replies
- 251 views
-
-
ஒத்துழையாமையின் பிரதிபலிப்பு லக்ஸ்மன் கொவிட்-19 பெருந்தொ ற்றாகப் பரவியதற்கும், ஒவ்வொரு நாடும் இப்போதும் இன்னல்படுவதற்கும் ஒற்றுமையின்மையும் ஒத்துழையாமையுமே காரணமாகும். இதனை யாருக்கும் மறுத்துவிட முடியாது. உலகின் அனைத்து நாடுகளிலும் படித்தவர்கள் முதல், பாமரர்கள் வரை வாழ்வாதாரத்தையே முன்னுரிமைக்குரிய விடயமாகக் கொள்ள வேண்டிய கட்டாயம் இதற்கு முக்கியமானதொரு காரணமாகும். 2022ஆம் வருடத்துக்கான நாடாளுமன்றக் கூட்டத்தொடரைத் தொடங்கி வைத்து, தனது அக்கிராசன உரையை நிகழ்த்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ‘நான் கொண்டது மாத்திரமே கொள்கை; அதுவே இலக்கு; வேறு யாருக்கும் கொள்கையில்லை; நோக்கமில்லை, இலக்கில்லை’ என்ற தோரணையிலேயே உரையாற்றியிருக்கிறார். இந்த உரையானது, பொதுஜன …
-
- 0 replies
- 477 views
-
-
மேன்மேலும் வித்தியாக்கள் வேண்டாமே புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா, வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு, ட்ரயல் அட் பார் முறையில் நடத்தப்பட்டு, நேற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. குற்றவாளிகள் என நீதிமன்றம் இனம்கண்ட அனைவருக்கும், உச்சபட்ச தண்டனையை வழங்கியிருப்பதாக, மன்று குறிப்பிட்டிருக்கிறது. தீர்ப்பின் சாதக, பாதகங்களை ஆராய்வது, இந்தப் பத்தியின் நோக்கம் கிடையாது. உலகமெங்கும் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கு, ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது என்ற வகையில், ஒரு வித நிம்மதி உணர்வைத் தருவதை மறுத்துவிட முடியாது. ஆனால்,…
-
- 0 replies
- 310 views
-
-
இலங்கையின் அரசியல் விவாதங்களில் 9 தசாப்தங்களாக நீடிக்கும் சமஷ்டி சிந்தனை வீரகத்தி தனபாலசிங்கம் -எஸ்பிரெஸ் செய்திப்பத்திரிகை நிறுவனத்தின் ஆலோசக ஆசிரியர் அரசியலமைப்பு உருவாக்கச் செயன் முறைகள் தொடர்பில் மும்முரமானதும் சர்ச்சைக்குரியதுமான விவாதங்கள் அரசியல் களத்தில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற இன்றைய சூழலில் கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்றில் கடந்த வாரம் இரு சட்ட நிபுணர்களின் நேர்காணல்களை வாசிக்க நேர்ந்தது. ஒருவர் இலங்கை சட்டக் கல்லூரியின் முன்னாள் அதிபர் கலாநிதி ஜெயதிஸ்ஸ டி கொஸ்தா. மற்றவர் தற்போதைய அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகளில் முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கும் அரசியலமைப்பு சட்ட நிபுணரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜெயம்பத…
-
- 0 replies
- 507 views
-
-
ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் தேசிய இன பிரச்சினையை தீர்க்க தமிழ் தலைவர்கள் முயற்சிக்கவேண்டும்- விக்கிரமபாகு கருணாரத்ன ரொஷான் நாகலிங்கம் தேசிய இன பிரச்சினையை தீர்க்கும் எண்ணம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியப் பிரச்சினை தொடர்பான தீர்வில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும். அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற் போனவர்கள் தொடர்பான நம்பிக்கை, இராணுவ கையிருப்பில் உள்ள நிலங்களை மக்களுக்கு மீள கையளித்தல் போன்ற விடயங்களை தனது அதிகாரத்தை கொண்டு தீர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் விரோத செயற்பாடுகள் …
-
- 0 replies
- 288 views
-