Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. பாவனைப் போரும் செயற்பாட்டு அரசியலும் March 18, 2023 — கருணாகரன் — பலரும் கருதியதைப் போலவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைந்து விட்டது. இந்த உடைவினால் தனித்து விடப்பட்டிருப்பது தமிழரசுக் கட்சியே. ஆனாலும் அது தன்னைப் பலமானதாகக் கருதிக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம், அதனுடைய வீட்டுச் சின்னமாகும். எத்தகைய நிலையிலும் மக்கள் வீட்டுச் சின்னத்துக்கே வாக்களிப்பார்கள் என்ற பலமான எண்ணம் தமிழரசுக் கட்சியினருக்குண்டு. இதுவே அவர்களுடைய தைரியமாகும். இதற்குக் காரணம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை வீட்டுச் சின்னமாகவே மக்களிற் பலரும் அறிந்துள்ளனர். தமிழரசுக்கட்சிக்கு விடுதலைப் புலிகள் உருவாக்கிக் கொடுத்த அருமையான வாய்ப்பிது. இதனால் இளையதலைமுறையினரின் மனதில் கூட்டமைப்ப…

  2. முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்குப் பின்னர் இருந்த நிலையை விட நெருக்கடியான காலகட்டத்தை தமிழரின் உரிமைப் போராட்டம் எதிர்கொள்ளப் போகிறது. ஏனெனில், முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான நிலையென்பது தமிழர் தாயகம் தொடக்கம் உலகெங்கும் பரந்து வாழும் பெரும்பான்மையான தமிழர்களிடம் பாதிக்கப்பட்டோர் என்ற கூட்டு உளவியலை (Psychology of collective victimization) உருவாக்கியிருந்தது. அந்த உளவியல், அதிர்ச்சிக்குள்ளும் தமது பொது எதிராளி யார் என்ற விழிப்பு நிலையுடன், எமது அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வி அல்லது ஏக்கம் பல்வேறு தரப்பிடமும் ஆழப் பதிய காரணமாகியது. அந்த நிலை படிப்படியாக போராடும் மனப்பாங்கை உண்டுபண்ணியது. தமிழர் தாயகத்தில் தொடர்ந்த திறந்தவெளிச் சிறைச்சாலை நிலைமை அங்கு வாழ்ந்த மக்களின் புறச்செ…

  3. முதல்வர் விக்னேஸ்வரனை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த முனையும் அரசியல் என்ன? கலாநிதி சர்வேந்திரா புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், குறிப்பாகத் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள், அதிலும் குறிப்பாக சுமந்திரனின் விசுவாசிகள் அண்மைக் காலமாக வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் புலம்பெயர் நாடுகளில் சுமந்திரன் நடாத்திய கூட்டங்களிலும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இக் கருத்துக்கள் இரண்டு விடயங்களில் மையங் கொண்டிருந்தன. முதலாவது விடயம் வடக்கு மாகாணசபை நிறைவேற்றியிருந்த இனவழிப்பத் தீர்மானம் தொடர்பானது. இரண்டாவது விடயம் முதலமைச்சர் கடந்த ஓகஸ்ட் மாதம்…

  4. மக்கள்பேரவை மாற்றம் தருமா? விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் தமிழ்மக்களின் அடிப்படை அரசியல் உரிமைக்கான போராட்டத்தை முன்னகர்த்த வேண்டிய கூட்டமைப்பானது தனது தேசியப்பணியை கைவிட்டு நீண்டதூரம் சென்றுவிட்டது. தமிழ்மக்களின் ஆதரவுபெற்ற அமைப்பு என்ற பலத்தை பயன்படுத்தி தமிழ்மக்களின் உரிமைக்கான கோரிக்கைகளை முன்வைக்காமல் வெளிநாட்டு அரசுகள் என்ன சொல்லுகின்றதோ அதற்கு ஆமாம் போடும் சாமியாக வந்து அதிக நாட்கள் கடந்துவிட்டன. இப்போது கூட்டமைப்பானது இன்னும் கீழிறங்கி தற்போதைய மைத்திரி அரசு என்ன சாக்குப்போக்குகளை சொல்லுகின்றதோ அதனையே தானும் ஒப்புவிக்க தயாராகிவிட்டது. போர்க்குற்றங்கள் பற்றிய விடயத்திலும் சரி சர்வதேச விசாரணை என்ற விடயத்திலும் சரி க…

    • 0 replies
    • 710 views
  5. [size=4]வீர புருஷர்கள் இரு ஓரங்களும் கூரான வாளொன்றை ஒத்தவர்கள், புத்திசாலித்தனம் வாய்த்த இனத்தவர்கள். இத்தகைய வீரபுருஷர்கள் விடயத்தில் அவதானத்துடனேயே செயற்படுவர்.[/size] [size=4]தமிழில் : வியெஸ்ரி[/size] [size=4]மூலம்: ராவய[/size] [size=4] இத்தகைய வீர புருஷர்களூடாகத் தமது தேவையை நிறைவு செய்து கொண்ட பின்னர் அவர்களுக்கு கௌரவமாக ஓய்வு வழங்கிவிடுவர். வீர புருஷரொருவருக்கு காலக்கட்டுப்பாடின்றித் தொடர்ந்து செயற்பட இடமளிக்கும் இனங்கள் தமது நிகழ் காலத்தைப் போன்றே, எதிர்காலத்தையும் ஆபத்துக்கு உள்ளாக்கிக் கொள்கின்றன. [/size] [size=4]கறுப்பு ஜூலை கலவரத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளான இந்த நாட்டின் தமிழ் மக்கள், தலை நிமிர்ந்து மீண்டும் தமது வாழ்க்கையைத் தொடர வாய்ப்பு …

    • 0 replies
    • 758 views
  6. ‘மிஸ்டர் கிளீன்’ இமேஜை சிதைக்கும் சதி முருகானந்தன் தவம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது இலங்கை அரசியலில் கொதி நிலையை உருவாக்கியுள்ளதுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-என்.பி.பி. அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் ஏற்படுத்தி விட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஜே .வி.பி.-என்.பி.பி. அரசாங்கத்தின் ஆளுமைத்திறனையும் அரசியல் அனுபவத்தையும் மக்கள் நம்பிக்கையையும் கேள்விக்குட்படுத்தி அரசியல் பழிவாங்கலில் ஈடுபடும் ஒரு சாதாரண அரசாங்கமாகவே அருவருப்புடன் பார்க்க வைத்துள்ளது. “சட்டம் அனைவருக்கும் சமம்.முன்னாள் ஜனாதிபதியாகவிருந்தாலும் தவறு செய்திருந்தால் சட்டம் பாயும்’’என ஜே .வி.பி.-என்.பி.பி.அரசாங்கம் பீற்றிக்கொண்டாலும் அவ்வாறு பீற…

  7. புத்தாண்டுத் தீர்மானம் - நிலாந்தன் ஒரு புதிய ஆண்டு எப்படி அமையக்கூடும் என்பது கடந்த ஆண்டில் கிடைத்தவை, கிடைக்காதவை என்பவற்றின் விளைவுதான். இருப்பவற்றில் இருந்துதான் அரசியல் செய்யலாம். அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை. சாத்தியக்கூறுகள் என்றால் இருப்பவைதான். இல்லாதவை அல்ல. எனவே கடந்த ஆண்டில் என்னென்ன இருந்தனவோ அவற்றின் விளைவுதான் புதிய ஆண்டு. இந்த இயற்கையை மீறி ஏதாவது நடப்பதாக இருந்தால் அதனை அதிசயம் அல்லது அற்புதம் என்று அழைக்கவேண்டும். யூதர்களின் புலப்பெயர்ச்சி வரலாற்றைக் கூறும் “தாயகம் நோக்கிய பயணம்” என்ற நூலில் ஓரிடத்தில் கூறப்படுவதுபோல “அதிசயங்கள் அற்புதங்களின் காலம் எப்பொழுதோ முடிந்துவிட்டது”. இது ஈழத் தமிழர்களுக்கும் பொருந்துமா? அப்படி அதிசயங்கள் அற்புதங்கள் ந…

  8. இலங்கை உள்நாட்டுப் போரின் 11ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு ரஞ்சன் அருண் பிரசாத் இலங்கையிலிருந்து பிபிசி தமிழுக்காக Getty Images இலங்கையில் மூன்று தசாப்தங்கள் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 11 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி, இன்று போன்றதொரு நாளிலேயே இலங்கையின் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்தது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சுதந்திரத்தின் பின்னர் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களே உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாக காரணமாக அமைந்திருந்தது. இலங்கையில் சுமார் 1970ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே யுத்தம் ஆரம்பமாவதற்கான அடித்தளமாக அமைந்திருந்தது. யாழ்ப்பாணம் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா 1975ஆம் ஆண்டு…

  9. தேர்தலுக்கு பின்னர் தமிழரசு கட்சியின் தலைமை மாற்றமடையுமா? - யதீந்திரா வடக்கில் ஆகக் கூடிய ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் – என்று கூட்டமைப்பின் பேச்சாரும், அதன் நிழல் தலைவருமான மதியாபரனம் ஆபிரகாம் சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். அதே வேளை பிறிதொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரனை துரத்த வேண்டுமென்றும் சுமந்திரன் குறிப்பிட்டிருக்கின்றார். விக்னேஸ்வரனை அரசியலிலிருந்து துரத்த வேண்டுமென்று முன்னரும் ஒருமுறை சுமந்திரன் கூறியிருந்தார். கூட்டமைப்பு வடக்கில், இம்முறையும் அதிக ஆசனங்களை வெற்றிகொள்ளுமென்று சுமந்திரன் உண்மையிலேயே நம்பினால், பிறகெதற்காக விக்னேஸ…

  10. சிங்கள மகா சபையின் தோற்றமும் மத-மொழித்-தேசியவாதத்தின் எழுச்சியும் (1956: 😎 என்.சரவணன் July 25, 2020 சிங்கள மகாசபை 19.05.1934 ஆம் ஆண்டு கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள ‘பௌத்த மந்திரய’வில் வைத்து அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. மகா கவி ஆனந்த ராஜகருணா, குமாரதுங்க முனிதாச, டீ.எம்.ராஜபக்ச (மகிந்த ராஜபக்சவின் தகப்பனார்) பியதாச சிறிசேன போன்றோர் சிங்கள மகா சபையின் ஸ்தாபகர்களாக காணப்பட்டனர். ஆரம்பத்தில் சிங்கள மகா சபை என்கிற பெயர் பண்டாரநாயக்கவால் வைக்கப்பட்டதல்ல. வேறு இனத்தவர்களையும் இத்துடன் இணைத்துக்கொள்ளும் நோக்குடன் அவர் “சுவதேஷிய மகா சபா” (Swadesiya Maha Sabha – சுதேசிய மகா சபை) என்கிற பெயரையே வைக்க விரும்பினார். ஆனால் பிரபல சிங்கள இலக்கியப் பிரம…

  11. ஆசியா பிராந்திய பூகோள அரசியலில் சிறீலங்காவின் நடுநிலைத்தன்மை நிலைக்குமா? – வேல்ஸ்சில் இருந்து அருஸ் தமது அதிகாரங்களை மையமாகக்கொண்டும், சிங்கள மக்களின் நலன்களை முன்நிறுத்தியும் காலம் காலமாக கொண்டுவரப்படும் அரசியல் திருத்தங்களின் பட்டியலில் 20 ஆவது திருத்தச்சட்டமும் இணைந்துள்ளது. 1978 களில் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவினால் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் பதவிக்கான அத்தனை சலுகைகளையும் தற்போதைய புதிய சட்டம் மீண்டும் வழங்கியுள்ளது. ஜே.வி.பியின் அழுத்தம் காரணமாக கொண்டுவரப்பட்ட 17 ஆவது திருத்தச்சட்டத்தின் சரத்துக்களையும், ரணிலின் பதவிக்கான அதிகாரத்தை குவிப்பதற்கு அனுசரணை வழங்கிய 19 ஆவது திருத்தச்சட்டத்தையும் தற்போதைய புதிய சட்டம் இல்லாத…

  12. 'செயற்பாட்டு மூலோபாயம்' என்கிற சொல்லாடல் , மேற்குலக புவிசார் அரசியல் நோக்கர்களால் தற்போது பரவலாகப் பயன்படுத்தப் படுவதனை அவதானிக்கலாம். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா , ஆசிய-பசிபிக் பிராந்தியம் தொடர்பாக முன்வைத்த நீண்ட கால மூலோபாயத்திட்டம் குறித்து, தமது விமர்சனங்களையும் ,ஆலோசனைகளையும் தெரிவிக்கும் பல அரசறிவியலாளர்கள் , இந்த மூலோபாய திட்டத்திற்கான செயல்வடிவங்கள் எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டுமென்பதில் முரண்பட்டுக் கொள்வதைக் காணலாம். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் இருந்து விலகி, ஆசிய-பசிபிக் பிராந்தியம் நோக்கி நகரும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமது படைவலுவினை அதிகரிக்கும் அதேவேளை, ஏனைய தென்னாசிய மற்றும் கிழக்கு ஆசிய வளர்முக நாடுகளுடன் …

    • 0 replies
    • 657 views
  13. தாய்லாந்து: முடியாட்சிகளின் எதிர்காலம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ முடியாட்சிகள் என்றென்றைக்கும் உரியனவல்ல; அவை காலம்கடந்து நிலைப்பதில்லை. அவற்றின் பெறுமதி அப்பதவிகளின் அலங்கார நோக்கத்துக்காகவன்றி அதிகாரத்தின் பாற்பட்டதன்று. காலம் அதன் போக்கில் எழுதிச் செல்லும் கதையில் இறந்த காலத்துக்குரியதாய் முடியாட்சிகளை மெதுமெதுவாய் நகர்த்திக் கொண்டிருக்கிறது. உலகின் மிக நீண்டகாலம் ஆட்சி செய்த அரசர் என்ற பெருமையைத் தன்வசம் வைத்திருந்த தாய்லாந்து நாட்டின் மன்னர் பூமிபோல் அடுல்யடேஜ் கடந்தவாரம் மரணமடைந்தார். 70 ஆண்டுகளாகத் தாய்லாந்தின் மன்னராக இருந்த இவரின் ஆட்சிக்காலத்தில் அந்நாடு பாரிய மாற்றங்களைக் கண்டது. அம்மாற்றங்களின் விளைவால் தாய்லாந்து மக்களின் …

  14. Started by nunavilan,

    அரசியல் தகனம் -எம்.எஸ்.எம். ஐயூப் கொவிட்-19 நோயால் மரணிக்கும், முஸ்லிம்களின் உடல்களைத் தகனம் செய்வது தொடர்பான விவாதம், மீண்டும் சூடு பிடித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், முதன் முறையாக இந்த விவாதம் ஆரம்பித்தது. அதன் பின்னர், கொரோனா வைரஸின் தொற்று, படிப்படியாகக் குறைந்து வந்ததை அடுத்து, மரணங்களும் குறைந்தன. இதனால், தகனம் தொடர்பான விவாதமும் தணிந்துவிட்டது. கொரோனா வைரஸின் தொற்றுப் பரவல், மீண்டும் கடந்த ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகும் போது, பொது மக்களைப் போலவே அரசாங்கமும் அதிகாரிகளும் கொவிட்-19 நோய், இனி நாட்டைத் தாக்காது என்பதைப் போன்றதோர் அலட்சியப் போக்கில் தான், செயற்பட்டு வந்தனர். ஆளும் கட்சி அரசியல்வாதிகள், கொவிட்-19 நோயைக் கட்டுப்பட…

  15. நல்லிணக்கம் கதைக்கும் நாக்குகள் - காரை துர்க்கா “நல்லிணக்கம் தெற்கில் இருந்து மாத்திரம் ஏற்படாது, வடக்கில் இருந்தும் நல்லிணக்கத்துக்கான பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதனைத் தடுக்கும் வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் கருத்து வெளியிட்டு வருகின்றார். மேலும், தான் முன்வைக்கும் கருத்துக்கள் தொடர்பில் முதலமைச்சர் கூடிய கவனம் எடுக்க வேண்டும், கருத்தின் தாக்கம் பற்றி அறிந்து தெரிவிக்க வேண்டும்” எனவும் அண்மையில் கொழும்பு, ராஐகிரியவில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் மத்தியில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்திருந்தார். நல்லிணக்கம் என்ற சொல், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், அ…

  16. இலங்கை முன்னிருக்கும் வரலாற்று வாய்ப்பு! ஆட்சி மாற்றம் வேண்டி வாக்களித்து, இலங்கையின் அதிபராக மைத்ரிபால சிறிசேனாவையும், பிரதமராக ரணில் விக்ரமசிங்கேயும் இலங்கை மக்கள் தேர்ந்தெடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரசியல் நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கிறது தேசியக் கூட்டணி அரசு. பத்தாண்டு காலமாக, கடும் கண்காணிப்பு, அச்சுறுத்தல்கள், ஊடகத்தின் மீதான அடக்குமுறை, ஜனநாயக அமைப்புகளைப் பலவீனப்படுத்துதல் என்று மகிந்த ராஜபக்ச நடத்திய சர்வாதிகார ஆட்சி, 2015 ஜனவரி 9-ல் முடிவுக்கு வந்தது. அவரது ஆட்சியில், வளர்ச்சித் திட்டங்களை விடவும் ஊழல்கள், ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் போன்றவைதான் பிரதானமாக இருந்தன. போர் வெற்றி மூலம், இலங்கையின் பெரு…

  17. காலம் கடத்தும் செயற்பாடு -செல்வரட்னம் சிறிதரன் இனியும் காலம் கடத்த முடியாது. இது நடவடிக்கைகளுக்கான காலம். எனவே, வார்த்தைகள் போதும். செயற்பட வேண்டும். நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை நோக்கி சர்வதேச மன்னிப்புச் சபை இடித்துரைத்திருக்கின்றது. வடபகுதிக்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த சர்வதேச மன்னிப்புச்சபையின் பொதுச் செயலாளர் சாளில் ஷெட்டியின் தலைமையிலான குழுவினர், பாதிக்கப்பட்ட மக்களை, அவர்கள் போராட்டம் நடத்தும் இடங்களில் நேரடியாகச் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தனர். மன்னார் முள்ளிக்குளம், மறிச்சுக்கட்டி, மன்னார் நகரம், கிளிநொச்…

  18. உள்ளுராட்சி தேர்தல் நடத்தப்படுமா? ஜன­நா­யக வழிப்­பா­தையில் செல்­வ­தாக தம்­பட்­ட­ம­டிக்கும் எந்­த­வொரு நாடும் உரிய காலத்தில் தேர்­தலை நடத்தி முடிக்க வேண்­டி­யது ஜன­நா­யக கட­மை­யாகும். 2015 ஆம் ஆண்­டுடன் காலா­வ­தி­யாகிப் போன உள்­ளூ­ராட்சி மன்றங்களுக்கான தேர்­தலை இன்னும் நடத்­தாமல், பல்­வேறு கார­ணங்­களைக் காட்டி அர­சாங்கம் இழுத்­த­டிப்பு செய்­து­வ­ரு­கின்­றது என எதிர்த்­த­ரப்­பினர் கூறும் குற்­றச்­சாட்­டுக்­களில் உண்­மை­யி­ருக்­கத்தான் செய்­கி­றது. உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல்­களை நடத்­தும்­படி அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தி ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினர் இம்­மாதம் 31 ஆம் திகதி முதல் நாடு­த­ழு­விய போராட்­டத்தில் ஈடு­ப­டப்­போ­வ­தா…

  19. பொங்கல் பொதியோடு வந்தீரோ தம்பி ? நிலாந்தன்! January 16, 2022 கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாச ஒரு சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தார். ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு ஆதரவான தொழில்சார் வல்லுநர்களுக்கான தேசிய அமைப்பும் புத்திஜீவிகள் மன்றமும் மேற்படி சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தன. யாழ்ப்பாணத்தில் உள்ள டில்கோ உல்லாச விடுதியில் இரவு உணவுடன் நடந்த அச்சந்திப்பில் புத்திஜீவிகள் மன்றத்தைச் சேர்ந்த பேராதனை பல்கலைக் கழகத்துப் புலமையாளர்கள் பங்குபற்றினார்கள். அவர்களுடைய நண்பர்களான யாழ் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையைச் சேர்ந்த புலமையாளர்களும் அதில் பங்குபற்றினார்கள் சஜித் பிரேமதாச தற்போதுள்ள பொருளாதா…

  20. சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் - செல்வரட்னம் சிறிதரன்:- 25 ஜனவரி 2014 சர்வதேச மற்றும் உள்ளுர் அரசியல் நெருக்கடிகளையும் பயன்படுத்தி அரசாங்கம் தனது ஆட்சியதிகாரத்தை நிரந்தரமாக்குகின்ற துணிச்சலான அரசியல் தந்திரத்தைப் பரிசோதிக்க முனைந்திருக்கின்றது. உள்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் மற்றும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநாவின் மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்பட்வுள்ள அரசுக்கு எதிரான பிரேரணை என்பவற்றுக்கிடையில் இந்தப் பரிசோதனை முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளதைக் காண முடிகின்றது. முப்பது வருடங்களாகத் தொடர்ந்த மோசமான யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஐந்து வருடங்களாகப் போகின்றன. யுத்தம் காரணமாக அழிவுக்கு உள்ளாகிய நாட்டின் வடக்கு கிழக்கு உட்பட முழு நாட்டையும் முன்ன…

  21. அரசை வழிபடும் அறிவுஜீவி க. திருநாவுக்கரசு ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்னர் புதிய பொருளாதாரக் கொள்கைகள் பற்றி விவாதிப்பதற்கான கூட்டத்தைச் சென்னைப் பத்திரிகையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் தரப்பை சுப்பிரமணியன் சுவாமியும் ஆர்.எஸ்.எஸ். தரப்பை (பாஜக தரப்பை அல்ல) எஸ். குருமூர்த்தியும் பேசினர். (இடதுசாரிகளின் தரப்பைப் பேச வேண்டிய என். ராம் அவசர வேலை காரணமாக வெளியூர் சென்றுவிட்டதால் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை) விவாதத்தை நெறிப்படுத்துபவராக இருந்தவர் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசுவாமி. விவாதத்திற்குப் பின்னர் கேள்வி நேரத்தில் நடுத்தர வயதுப் பெண் ஒருவர் விவாதிக்கப்பட்ட கருத்து என்ன, தான் என்ன கேள்வி கேட்கிறோம் என்ற தெளிவு …

  22. வாக்குறுதி நிறைவேற்றப்படுமா நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீதான நெருக்­க­டிகள் பல்­வேறு வடி­வங்­களில் அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன. இந்த அழுத்­தங்­களைச் சமா­ளித்து, பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கண்டு, நாட்டு மக்­களின் நம்­பிக்­கையை இந்த அரசு வெற்­றி­கொள்ள முடி­யுமா என்­பது இப்­போது முக்­கிய கேள்­வி­யாக எழுந்­தி­ருக்­கின்­றது. அர­சியல் ரீதி­யான ஊழல்­க­ளுக்கும், மோச­டி­க­ளுக்கும் முடிவு கட்டி, ஜன­நா­ய­கத்­தையும் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்­தையும் கட்­டி­யெ­ழுப்பி, ஐக்­கி­யத்தை உரு­வாக்கி நாட்டை முன்­னேற்றிச் செல்வோம் என்­பதே நல்­லாட்சி அர­சாங்­கத்தின் 2015 ஆம் ஆண்டு தேர்தல் வாக்­கு­று­தி­யாகும். ஆயினும…

  23. முஸ்லிம் - தமிழ் உறவின் எதிர்காலம் நகமும் சதையும் போன்ற தொடர்பைக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான உறவு, இப்போது பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அபாயா விவகாரம் உள்ளடங்கலாக, இரண்டு இனங்களுடனும் தொடர்புபட்ட பல விடயங்களை, வெளிப்புறச் சக்திகள் தங்களுடைய நலனுக்காக அரசியலாக்கி, பூதாகரமாக்கி விடுகின்றமையாலும், தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளாலும் இந்த உறவில், கீறல் விழத் தொடங்கியுள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இன நல்லிணக்கம் பற்றிப் பேசிப்பேசியே உள்ளுக்குள் பகைமைத் தீயை வளர்த்துக் கொண்டிருக்கும் சமூகங்களாக, சிறுபான்மையினர் மாறி…

  24. பஞ்சாப் மாநிலமே இப்போது அதிகபட்ச கொதிநிலையில் இருக்கிறது. உறையில் இருந்து உருவப்பட்ட வாளைக் கையில் ஏந்தியபடிஇ முகத்தில் கோபம் கொப்புளிக்க தெருவில் சீக்கியர்கள் ஒருவருக்கொருவர் ஆவேசமாக மோதிக்கொண்டிருந்தால்இ ஏன் அனல் பறக்காது? எங்கு பார்த்தாலும் சாலை மறியல்இ கடை உடைப்புஇ கல்வீச்சு என்று பஞ்சாப் மாநிலமே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்கிறது. சீக்கியர்களின் புண்ணிய பூமியான பஞ்சாப்இ திடீரென கலவர பூமியாக அவதாரம் எடுத்திருப்பதற்கு என்னதான் காரணம்? குர்மித்சிங் ராம் ரஹீம் என்பவரது புகைப்படம்தான் இத்தனை காரியங்களுக்கும் பிள்ளையார்சுழி போட்டிருக்கிறது. ‘தேரா சச்சா சவுதா’ என்பது சீக்கிய மதத்தின் உட்பிரிவுகளுள் ஒன்று. இதன் தலைவராக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் ராம் ரஹீம். இ…

  25. அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய ஏழு நீதியரசா்கள் நியமிக்கப்பட்டமை எந்த அடிப்படையில்? இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பான இலங்கை வர்த்தமானி அறிவிப்புக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய இலங்கை ஒற்றையாட்சி அரசின் உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான ஏழு நீதியரசர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களை பிரதம நீதியரசர் நளின் பெரேரா வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஏனைய அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் அனைத்தும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவாகவே தாக்கல் செய்திருந்தன. ஆனால் அரசியல் நெருக்கடி விவகாரமாகக் கருதி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.