அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
ஆபிரிக்காவில் பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் அடைந்த முதலாவது நாடு தென் ஆபிரிக்கா: அங்கு வாழ்ந்த வெள்ளையர்களிடம் கொடுத்ததால், 'போராட்டம் இன்றி' கொடுக்கப் பட்டது. கடைசியாக 'போராடி' பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் அடைந்தவர்கள், ரொடிசியா என அழைக்கப் பட்ட சிம்பாவே. இரு நாடுகளிலும் பெரும்பான்மையினர் கருப்பர்கள். வெள்ளை சிறுபான்மையினர் ஆட்சி பொறுப்பில் இருந்தார்கள். தாம் சிறுபான்மையினர் என்ற எண்ணம் இல்லாது, மேற்குலகம் ஆதரவு தரும் என இறுமாந்து எந்த வித சமரசமும் இன்றி, பெரும்பான்மை இனத்தவருடன் மோதி, தோற்று, பின்னர், பலவீனமான நிலையில் பேச்சு வார்த்தைக்குப் போய், வெள்ளையர் நலன்களை உறுதிப் படுத்தி பின்னர் சுதந்திரம் வழங்கி, இன்று பிரித்தானியா என்றாலே பாம்பாகச் சீ…
-
- 8 replies
- 817 views
-
-
சுயநல அரசியலால் சீரழியும் முஸ்லிம்கள் முஸ்லிம் சமூகத்தில் பல அரசியல் கட்சிகள் உள்ளன. எந்தவொரு முஸ்லிம் கட்சியும் சமூகத்தின் விடிவுக்காய் சிந்திப்பதில்லை. முஸ்லிம் சமூகத்தின் சீரழிவிலும் ஆதாயம் தேடிக் கொள்ள விளைகின்றவர்களாகவே முஸ்லிம் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இன்றைய அரசாங்கத்திலும் மஹிந்தராஜபக் ஷவின் அரசாங்கத்திலும் முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கின்றனர், இருந்தனர் ஆனாலும் போதிலும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கவில்லை. அரசாங்கத்தில் பங்காளிகளாக இணைந்து கொண்டவர்கள் அமைச்சர் பத…
-
- 0 replies
- 464 views
-
-
அமெரிக்கா காங்கிரஸ் பிரதிநிதியின் பிரேரணையும் தவறான பிரச்சாரங்களும் - யதீந்திரா கடந்த மே மேதம் 18ம் மிகதி அமெரிக்க காங்கிரஸில், இலங்கை தொடர்பில் ஒரு பிரேரணை முன்வைக்கப்பட்டது. அமெரிக்க சமஸ்டி அரசுகளில் ஒன்றான வடக்கு கரலைனாவை (U.S. Representative for North Carolina’s 2nd congressional district) பிரதிநிதித்துவம் செய்யும் காங்கிரஸ் பிரதிநிதி ஒருவரால் இந்த பிரேரணை அறிமுகம் செய்யப்பட்டது. இவரது பெயர் (Deborah K. Ross) டெவோறா ரோஸ். ஐக்கிய அமெரிக்கா, ஐம்பது சமஸ்டி அரசுகளை உள்ளடக்கிய ஒரு தேசம். அதில் ஒன்றுதான் வடக்கு கரலைனா குறித்த பிரேரணைக்கு, மேலும் நான்கு காங்கிரஸ் பிரதிநிதிகள் இணையனுசரனை வழங்கியிருக்கின்றனர். அமெரிக்க காங்கிரஸில்…
-
- 0 replies
- 452 views
-
-
கிழக்கு: மேய்ச்சல் தரை அத்துமீறல் -இல. அதிரன் அரசியல் என்பது, நடுநிலைமையும் பொதுப்படையும் கொண்டதாக அமையப்பெற்றிருக்க வேண்டும். அது ஒருதலைப்பட்சமாக, பக்கச்சார்பாக முடிவுகள் எடுக்கப்படுகின்றபோது, திட்டங்கள் கொண்டு வரப்படும் பொழுது, முரண்பாடுகள் தோற்றம் பெறுகின்றன. இதற்கு நல்லதோர் உதாரணமே கிழக்கின் மேய்ச்சல்தரை அத்துமீறல்கள். மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியான மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் தொடரும் பண்ணையாளர்களுக்கெதிரான செயற்பாடுகளைத் தடுப்புக்குரிய முயற்சிகளும், கவனயீர்ப்பு போராட்டங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் நடைபெற்றுக் கொண்டே இருக்க அத்துமீறல்களும் தொடர்…
-
- 0 replies
- 331 views
-
-
மே 2009 , இனப்படுகொலை முடிந்த கையோடு, இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. பொதுச் செயலாளர் பாண் கி மூன் அவர்கள் என்ன சொன்னார்?. சர்வதேச சுயாதீன போர்க்குற்ற விசாரணை ஒன்று தேவை என்றரா? இல்லவேயில்லை. நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்குங்கள் என்று கூறினார். நடந்தது நல்லபடியாக நடந்தது என்பதுபோல்தான் அவரின் ஊடக நேர்காணல்கள் அமைந்திருந்தன. வவுனியா வதை முகாம்களுக்கும் சென்று பார்வையிட்ட மூன், அரசை பாராட்டிவிட்டே சென்றார். சர்வதேச மனித உரிமைச் சங்கங்களின் தொல்லைதாங்க முடியாமல், மூவரடங்கிய நிபுணர் குழுவொன்றை வழமைபோல் அமைத்து நீண்ட அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டார். அதனை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்காமல் நீண்டகாலமாக இழுத்தடிப்புச் செய்தார் பொதுச் செயலாளர் பாண் கி மூன். அறி…
-
- 0 replies
- 749 views
-
-
பிரெக்ஸிட் ஓராண்டின் பின்னே: இருளின் ஒளியில் வழிதேடல் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டாலும் பூவுலகில் தான் வாழப்படுகிறது. சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்பதால் அது இறுதிவரை நிலைக்கும் என்பதற்கான எந்தவொரு உத்தரவாதமும் இல்லை. அரசியலில் ஏற்படுத்தப்படும் கூட்டிணைவுகளும் அவ்வாறுதான். மிகவும் வலுவான அடித்தளத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும் கூட, அக்கூட்டிணைவு நிலைப்பதற்கான உத்தரவாதத்தை யாரும் வழங்க முடியாது. திருமணங்களை விட விவாகரத்துகள் விவகாரமானவை. திருமணத்துக்குக் குறைந்த காலத்தில் உடன்படிக்கைகள் எட்டப்படக்கூடியதாக இருக்கின்றன. ஆனால், விவாகரத்துகளின்போது, உடன்படிக்கைகளை எட்டுவது…
-
- 0 replies
- 335 views
-
-
எல்லை தாண்டலுக்கு முற்றுப்புள்ளி லக்ஸ்மன் இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினையின் பிரதிபலன் மிக மோசமான நிலையை எட்டியிருக்கிறது. எல்லை தாண்டுவதும் அதற்காக கைது செய்வதும், பறிமுதல் செய்வதும் தண்டனை வழங்குவதும், படகுகளை அரசுடமையாக்குவதும், கைதாகும் மீனவர்களைப் பரிமாறிக்கொள்வதும் என்று தொடர்ந்து கொண்டிருக்கும் இரு நாடுகளின் கடல் எல்லைப் பிரச்சினையால் யாருக்கு இலாபம் அதிகம் என்று சிந்திப்பதனைவிடவும் இதிலுள்ள அரசியலை ஆழ்ந்து ஆராயவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. மோதலால் உருவாகும் முறுகல் தீர்வைத் தேடுவதாகவே இருந்தாலும் திரௌபதியுடைய சேலையாகவே தொடர்கிறது. கடந்த வாரம் முழுவதும் தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் வடக்கில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட…
-
- 0 replies
- 381 views
-
-
மதசார்பற்ற நாடு அவசியமா? இலங்கையின் அரசமைப்பு உருவாக்கத்துக்காகச் செயற்படும் அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவின் இடைக்கால வரைவு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை வெளியிடப்பட்டு, சில வாரங்கள் கடந்துவிட்டாலும், அது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான கலந்துரையாடல்களில், முக்கியமான இரண்டு விடயங்கள் காணப்படுகின்றன. முதலாவது: இலங்கை அரசின் தன்மை குறித்தது. இரண்டாவது: இலங்கையில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட வேண்டிய அல்லது வழங்கப்படக் கூடாத முதலிடம் அல்லது முன்னுரிமை தொடர்பானது. இதில் முதலாவது விடயம், அதிகமான அரசியல் பின்னணிகளைக் கொண்டது. அதிகமான க…
-
- 2 replies
- 743 views
-
-
ஜனாதிபதி தெரிவும் தமிழ்க் கட்சிகளும் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan இலங்கையினுடைய எட்டாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக, அரசியலமைப்பின் 40ஆவது சரத்தின்படி, பாராளுமன்ற உறுப்பினர்களிடையேயான இரகசிய வாக்கெடுப்பின் மூலம், ரணில் விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டு, பதவியேற்றிருக்கிறார். பல திருப்புமுனைகளோடு, மிக விறுவிறுப்பாக இந்த ஜனாதிபதி தெரிவு அரங்கேறியிருக்கிறது. இந்த ஜனாதிபதி தெரிவின் போதான தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடுகள், நடவடிக்கைகள் என்பவற்றை, மீள்பார்வை செய்வதே இந்தப் பத்தியின் நோக்கமாகும். இன்றுள்ள பாராளுமன்றத்தைப் பொறுத்தவரையில், கூட்டணிக் கட்சிகள் உள்ளடங்கலாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு, பாராளுமன்றம் …
-
- 0 replies
- 484 views
-
-
கூட்டு ஆட்சித் தலைவர்களது வாக்குறுதிகளின் கதி என்னாச்சு? கூட்டு ஆட்சித் தலைவர்களது வாக்குறுதிகளின் கதி என்னாச்சு? கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி நாட்டில் நடைபெற்ற அரச தலைவர் தேர்தலில் முன்னாள் அரசதலைவர் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்து பொது எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தமிழ்மற்றும் முஸ்லிம் மக்களின் அதிகப்படியான ஆதரவு வாக்குகளால் பெரு வெற்றியீட்டி அரசதலைவராகப் பதவியேற்று மூன்று ஆண்டுகள் கழிந்து விட்டன. …
-
- 0 replies
- 267 views
-
-
உள்ளூராட்சித் தேர்தலும் தமிழ் மக்களின் நிலையும் ருத்திரன்- தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளினால் ஜனநாயக அரசியலை கொண்டு நகர்த்துவதற்கான மக்கள் பிரதிநிதிகளை பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு ஆகும். இந்தக் கூட்டமைப்பில் மிதவாத கட்சியும், ஆயுதப்போராட்டத்தில் இருந்து ஜனநாயகத்திற்கு திரும்பிய அமைப்புக்களும் அங்கத்துவம் வகிக்கின்றன. இவர்கள் அனைவருமே விடுதலைப் புலிகள் போன்று தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து போராடியவர்கள். 2009 ஆம் ஆண்டு முள்ளியவாய்கால் பேரழிவுடன் விடுதலைப் புலிகளின் ஆயுத ரீதியான போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் தேசிய அரசியலை முன்னகர்த்த வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோள்களில் தான…
-
- 0 replies
- 387 views
-
-
நினைத்ததும் நடந்ததும் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள், மாற்றுத்தலைமை மீதான மக்களுடைய ஆர்வத்தையும் அக்கறையையும் தெளிவாக உணர்த்தியிருக்கின்றன. வேறு வேறு அரசியல் தளத்தைக் கொண்டிருக்கின்ற போதிலும், சிங்கள மக்களும், தமிழ் பேசும் மக்களும் மாற்றுத் தலைமைக்கே இந்தத் தேர்தலில் ஆணை வழங்கியிருக்கின்றார்கள். இருப்பினும் வடக்கு–கிழக்குப் பிரதேசங்களைப் பொறுத்தமட்டில் தமிழ் அரசியலின் செல்நெறியில் எழுந்துள்ள பாதகமான ஒரு நிலைமை குறித்து இந்தத் தேர்தல் அபாய அறிவிப்பை அமைதியாகச் செய்திருக்கின்றது. இந்த அறிவித்தல் குறித்து தமிழ் அரசியல் தளத்தில் பொறுப்புள்ளவர்கள் உரிய முறையில் கவனம் செலுத்தத் தவறியுள்ள நிலைமையையே காண முடிகின்றது. தென்பகுதிகளில் உள்ள மக்கள…
-
- 0 replies
- 396 views
-
-
ரஷ்யா - யுக்ரேன் போர்: விளாடிமிர் புதினின் சிந்தனையும் திட்டமும் என்ன? ஸ்டீவ் ரோசன்பெர்க் ரஷ்ய ஆசிரியர், மாஸ்கோ 34 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இந்த போரை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுப்பதற்கு முன்பே பல மாதங்களாக நாம் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி இது. விளாடிமிர் புதின் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்? என்ன திட்டம் வைத்திருக்கிறார்? எனக்கு ரஷ்யாவின் எதிர்காலம் பற்றியோ, அல்லது எனக்கு புதினுடன் நேரடி தொடர்போ இல்லை என்பதை முன்க…
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
சீனா - இந்தியாவைக் கையாள 8 பேர் : வெளிநாடு செல்லும் முன் ரணில் வியூகம் By NANTHINI 05 NOV, 2022 | 07:53 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இந்தியாவையும் சீனாவையும் கையாள்வதற்கு 8 பேர் கொண்ட குழுவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார். அத்துடன் எகிப்தில் இடம்பெறவுள்ள உலக காலநிலை தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை (நவ 6) அதிகாலை எகிப்திற்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எகிப்தில் இவ்வாரம் இடம்பெறவுள்ள உலக காலநிலை தொடர்பான 'கோப் 27' மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி புறப்படுவதற்கு முன்னர் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவ…
-
- 0 replies
- 189 views
- 1 follower
-
-
ஒவ்வொரு தடவையும் இலங்கையின் ஜனாதிபதியாக விளங்கிய மஹிந்த ராஜபக்ஷ அவரின் சீன நேச அணியினரிடம் கடனை கோரும் போதும் துறைமுக நகரத் திட்டத்திற்கான உதவி நாடப்பட்ட போதும், பதில் ‘ஆம்’ என கூறப்பட்டது. ஆம், ஆய்வு அறிக்கைகள், துறைமுகம் செயற்பட மாட்டாது என கூறியுள்ளது. ஆம், இந்தியா போன்று அடிக்கடி கடன் வழங்குவோர் மறுத்திருந்தனர். ராஜபக்ஷவின் கீழ் இலங்கையின் கடன் துரிதமாக ஊதிப் பெருத்தது. சைனா ஹாபர் எஞ்சினியரிங் கம்பனியுடன் நிர்மாணம் மற்றும் மீள் பேச்சுவார்த்தை வருடக்கணக்காக மேற்கொண்டதைத் தொடர்ந்து பெய்ஜிங்கில் சீன அரசுக்குச் சொந்தமான பாரிய நிறுவனங்களில் ஒன்றான இந்தக் கம்பனி அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை மேற்கொண்டிருந்தது. ஆயினும், எதிர்வு கூறப்பட்டதன் பிரகாரம் அத…
-
- 1 reply
- 899 views
-
-
எண்பதுகளில் சண்டை காரை துர்க்கா / “அடம்பன் கொடியும் கொடியும் திரண்டால் மிடுக்கு”, “வேற்றுமையிலும் ஒற்றுமை காண்போம்”, “ஒற்றுமை இன்றேல் உயர்வு இல்லை” எனப் பல பொன்மொழிகள் தமிழில் வழக்கில் இருக்கின்றன. ஆனால் இவை, தமிழ் மக்கள் (நல்)வாழ்வில் புழக்கத்தில் இல்லை. நல்வாழ்வுடன் உள்ள ஒருவர், சிறந்த மனவெழுச்சி சமூக நல்வாழ்வைக் கொண்டிருப்பதுடன், வாழ்வில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல்களையும் கொண்டிருப்பார். ஆனால், இவ்வாறான சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியாமலும் முறியடிக்க முடியாமலும், தமிழ்ச் சமூகம் திணறுகின்றது. இதற்குக் காரணமாக, தமிழ் மக்கள், அரசியல் அனாதைகளாக்கி உள்ளமையைக் குறிப்பிடல…
-
- 0 replies
- 764 views
-
-
நினைவு கூர்தலுக்கான ஒரு பொது உடன்படிக்கை – நிலாந்தன்… திலீபனின் நினைவிடத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் அதன்பின் யாழ்.மாநகரசபை வெளியிட்ட அறிக்கையும் இக்கட்டுரையை எழுதத்தூண்டின. நினைவிடம் அமைந்திருப்பது மாநகர சபை எல்லை என்பதால் அந்த இடத்திற்கும் நிகழ்வுக்கும் மாநகரசபை உரிமைகோருகிறது. முள்ளிவாய்க்கால் நினைவு கூர்தலின் போது மாகாணசபையும் அப்படி உரிமைகோரியது. முள்ளிவாய்க்கால் நிலத்துண்டு பிரதேசசபை எல்லைக்குள் அமைந்திருப்பதால் பிரதேசசபை அதை அனுஷ்டிக்கும் என்றும்பிரதேச சபை நிர்வாகம் மாகாணசபையின் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் வருவதால் நினைவு கூர்தலை மாகாணசபை நடத்தும் என்று ஒருவிளக்கம் தரப்பட்டது. அதுபோலவே கிளிநொச்சியில் மாவீரர் துயிலுமில்லத்தை கரைச்சி பிரதேசசபை பொற…
-
- 0 replies
- 1.2k views
-
-
நோகாமல் போராடும் கட்சிகளின் கடையடைப்பு? - நிலாந்தன் "நோகாமல் தின்னும் நுங்கு" காந்தி சொல்வார்…. அகிம்சை என்பது சாகத் துணிந்தவரின் ஆயுதம், அது சாகப் பயந்தவரின் ஆயுதம் அல்லவென்று. அகிம்சையில் மட்டுமல்ல வன்முறை போராட்டத்திலும் அதுதான் அடிப்படை விதி. அர்ப்பணிப்புக்குத் தயாராக இருப்பவர்கள்தான் தலைமை தாங்கலாம். தியாகத்துக்கு தயாராக இருக்கும் தலைமையின் கீழ் மக்கள் துணிந்து அணி திரள்வார்கள். முன்னுதாரணம் மிக்க தலைவர்களின் பின்தான் மக்கள் அணி திரண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழரசியல் அரங்கில் முல்லைத்தீவு நீதிபதிக்கு ஆதரவாக நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களைத் தொகுத்துப் பார்த்தால், ரிஸ்க் எடுப்பதற்கு தயாரில்லாத தலைவர்கள் பொதுமக்களை ரிஸ்க் எடுக்குமாறு தூ…
-
- 0 replies
- 303 views
-
-
தமிழர் பகுதிகளில் புத்தர் இருந்தாரா? Editorial / 2018 டிசெம்பர் 04 செவ்வாய்க்கிழமை, மு.ப. 02:22 Comments - 0 - ஜெரா தமிழர்களின் பூர்வீக நிலப் பகுதிகளான வடக்கும் கிழக்கும், மிகவேகமாக பௌத்தமயப்பட்டு வருகின்றன. இலங்கையில் தீவிர அரசியல் கலப்புக்குள்ளாகிவிட்ட பௌத்த தத்துவமும் அதன் துறவிகளும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் தரப்பினரும், இதனை முன்னின்று செய்கின்றனர்; வழிநடத்துகின்றனர். இந்த நடவடிக்கைகள் குறித்து யார் கேள்வி எழுப்பினாலும், “இவ்விடங்களிலெல்லாம் முன்பொரு காலத்தில் பௌத்தம் இருந்தது. புத்தர் விஜயம் செய்தார்” என்கிற மாதிரியான வரலாற்றுக் “கதைகளை” அவிழ்த்துவிடுகின்றனர். இந்தக் கதையவிழ்ப்புகளின் அடிப்படையில்தான், வடக்கிலும் கிழக்கிலும், நாளாந்தம் பௌத்…
-
- 0 replies
- 1k views
-
-
தங்கத்தை புடம் போட்டாலும் தரம் குறையாது. Saturday, 30 June 2007 ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் அல்லது முடக்கும் மகிந்தராஜபக்ஷ ஆட்சியின் மற்றுமொரு விரிவாக்கம் "தமிழ்நெற்" இணையத்தளத்தை முடக்க முயலும் அதனது செயற்பாட்டிலிருந்து ஆரம்பமாகியுள்ளது. சிறிலங்காவில் இணைய இணைப்பு சேவை வழங்குணர்களூடாக இணைப்புப்பெறும் பயன்பாட்டாளர்கள் "தமிழ்நெற்" இணையத்தளத்தைப் பார்வையிட முடியாத நிலையை அது ஏற்படுத்தியுள்ளது இந்த நடவடிக்கைக்கும் தமக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என ஊடகத்துறை அமைச்சர் அனுராபிரியதர்சனயாப்பாவும், சிறிலங்கா இராணுவப்பேச்சாளர் பிரிகோடியர் பிரசாத் சமரசிங்கவும் கூறியிருக்கின்றனர். இதிலே எவ்வளவு வீதம் உண்மை இருக்கும் என்பதை அவர்கள் நாளாந்தம் வெளியிடும் அற…
-
- 0 replies
- 1.3k views
-
-
மோடிக்கு இரண்டாவது வாய்ப்புக் கிடைக்குமா? எம். காசிநாதன் / 2019 பெப்ரவரி 18 திங்கட்கிழமை, மு.ப. 12:38 Comments - 0 நாடாளுமன்றத்தின் இறுதி நாள் கூட்டத் தொடர் முடிவு பெற்று, அடுத்த கட்டத் தேர்தலுக்குத் தயாராகி விட்டது ‘இந்திய ஜனநாயகம்’. மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டில் மக்களவையில் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்துக்கு அறுதிப் பெரும்பான்மை இருந்தது. வேறு கட்சிகளின் ஆதரவு தேவையின்றி, மோடியால் மக்களவையில் தான் நினைத்ததைச் சாதிக்க முடிந்தது. பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம் விரும்பிய எந்த மசோதாவையும் முதலில் மக்களவையில் கொண்டு வந்து நிறைவேற்றும் பலம், பா.ஜ.கவுக்குத் தனிப்பட்ட முறையில் கிடைத்தமை, 16ஆவது நாடாளுமன்றத்தின் தனிச் சிறப்பாகும். ஏறக்கு…
-
- 2 replies
- 574 views
-
-
Published By: NANTHINI 19 APR, 2024 | 01:12 PM 1974 கச்சதீவு தொடர்பில் இலங்கையிலும் இந்தியாவிலும் பல்வேறு பேச்சுக்கள் இடம்பெற்றுவருகின்றன. கச்சதீவு யாருக்கு சொந்தமானது என்பது பற்றிய பல்வேறு விதமான கருத்துக்கள் இன்றைய நவீன உலகில் குறிப்பாக சமூக ஊடகங்களில் வைரலாக (trending) காணப்படுகிறது. கச்சதீவு வைரலாவதற்கு (trending) பல காரணங்கள் பலராலும் கூறப்படுகின்றன. ஆனால், வரலாற்றை மீட்டுப் பார்க்கும்போது “கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது! 45 வருடகாலத் தகராறு தீர்ந்துவிட்டது!!” என்ற தலையங்கத்துடன் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி வெளியான வீரகேசரி பத்திரிகையின் முதல் பக்கத்தில் இவ்வாறு உள்ளது. …
-
- 0 replies
- 479 views
- 1 follower
-
-
மறக்கப்பட்டுவரும் மாகாண சபைத் தேர்தல் அரசியல் நெருக்கடி உச்சமடைந்து வருகின்ற நிலையில் அரசியல் பரபரப்புகளுக்கும் நாட்டில் பஞ்சமில்லாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான முரண்பாடுகள் தொடர்ந்து வலுவடைந்துகொண்டிருக்கின்றன. நாடு அரசியல் ரீதியில் ஒரு ஸ்தம்பித நிலைமையில் இருப்பதாகவே அரசியல் ஆய்வாளர்களினால் பார்க்கப்படுகின்றது. அரசியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை எதிர்வுகூற முடியாத சூழல் தோன்றியிருக்கின்றது. இதற்கு மத்தியில் அனைத்துத் தரப்பினரும் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான தயார்படுத்தலிலும் அதற்கான நகர்வுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது ஜனாதிபதி தேர்தல் அல்லது பாராளுமன்றத் தேர்தல் ஒன்று விரைவில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு கட்சி…
-
- 0 replies
- 404 views
-
-
Published By: DIGITAL DESK 7 27 AUG, 2024 | 02:23 PM கலாநிதி ஜெகான் பெரேரா பொருளாதார நிலைவரம், பின்பற்றவேண்டிய பொருளாதார அபிவிருத்திப் பாதை மற்றும் தற்போதைய தருணத்தில் நாட்டுக்கு தலைமை தாங்கி வழிநடத்துவதற்கு பொருத்தமான தலைவர் யார் என்ற விடயங்களே இன்று பெருமளவுக்கு பேசப்படுகின்றன. ஆனால், நாடடின் பொருளாதாரப் பிரச்சினைக்கும் ஏனைய பிரச்சினைகளுக்கும் பங்களிப்புச் செய்ததும் தீர்வு காண்பதற்கு சிக்கலானதாக இருப்பதுமான இன்னொரு முக்கிய பிரச்சினை இந்த பேச்சுக்களுக்குள் விரைவில் ஊடுருவப் போகிறது. ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் முழுவீச்சில் முன்னெடுக்கப்படுகின்ற அதேநேரம் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரும் விரைவ…
-
- 0 replies
- 374 views
- 1 follower
-
-
இலங்கையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தம், நாட்டின் அனைத்து சமூகங்களையும் பாதித்தது. இந்த யுத்தத்தில் இலங்கை முஸ்லிம் சமூகம் சந்தித்த இழப்புக்களும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும் பெரும்பாலும் போதியளவு ஆவணப்படுத்தப்படவில்லை என்பது கவலை தரும் உண்மையாகும். உயிர் மற்றும் உடைமை இழப்புக்கள், பள்ளிவாசல் படுகொலைகள், வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம், குருக்கள்மடம் படுகொலை என பல சம்பவங்கள் முஸ்லிம்களின் வரலாற்றில் ஆழமான தழும்புகளை ஏற்படுத்தியுள்ளன. யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்த பின்னரும், இந்த இழப்புக்கள் பற்றிய முழுமையான பதிவுகள், ஆவணங்கள் எல்லோரும் அணுகக் கூடிய வகையில் இல்லை என…
-
- 0 replies
- 182 views
-