Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தேசியத்தை பலப்படுத்த தவறிய தேசியப் பட்டியல் விவகாரம் August 14, 2020 தயாளன் தேசியப் பட்டியல் உறுப்பினர் என்ற விடயம் குறிப்பிட்ட இனங்களின், தேசியத்தின் நலன் என்பதை விட சொந்தக் கட்சிகளின் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் மருந்தாகவே உள்ளது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலும் சரி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாக இருந்தாலும் சரி. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை தலைமைக்குக் குழி பறிக்கும் வாய்ப்பாகக் கருதுகின்றனர் சுமந்திரனும் சீறிதரனும். சுமந்திரன் கட்சியின் தலைமை மிகமோசமாகத் தோற்றுவிட்டது அதனை அகற்றியே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தலைகீழாக உள்ளார். சிறீதரன் கட்சிக்குப் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளதே எனக் கண்ணீர் வடிக்க…

  2. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தங்களுடைய ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் அரசியல் வாய்ப்புக்களில் எஞ்சியிருக்கக்கூடிய சொற்பமானவற்றையும் கூட பாழாக்கிக் கொண்டிருப்பது பெரும் கவலை தருகிறது. 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றியை இயலுமானதாக்கிய வாக்காளர்களுக்கு கொஞ்சமேனும் விசுவாசமில்லாத முறையில் ஜனாதிபதி சிறிசேன செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்கு படாதபாடுபட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மீதான தலைமைத்துவத்தை நிலைநிறுத்த முடியுமென்ற நினைப்பில் அவர் கானல்நீரின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார். தனிப்பட்ட அகங்காரம், நிர்வாகத் திறமையின்மை, ஆட்சி முறையின் முக்கியமான பிரச்சினைகளை அற்பமாகக் கருதுகின்ற சிறுபிள…

  3. புளொட் இயக்கத்தால் தற்போது உமா மகேஸ்வரன் நினைவாக வீரமக்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டுவருகிறது.உண்மையில் புளொட் அதற்கு தகுதியுடையதா?தாம் கொலைசெய்து தொலைத்த உமா மகேஸ்வரனுக்கு நினைவுதினம் இன்னமும் தேவைதான?உமா கொலையின் கதை இது, 1989 ஜூலை15 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரையில் அநாதரவான நிலையில் சூட்டுக்காயங்களுடன் உமா மகேஸ்வரன் என்று அழைக்கப்பட்டட கதிர்காமர் நல்லைநாதனின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு கொழும்பு பெரியாஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டது.பின்னர் அவர் மனைவி அகிலேஸ்வரி அடையாளம் காட்டினார்.புளொட் இயக்கத்தின் தலைவரான உமா மகேஸ்வரன் உடல் எப்படி கடற்கரைக்கு வந்தது? புளொட் உறுப்பினர்கள் ஏன் தங்கள் தலைவரைத்தேடவில்லை? உமாவின் மெய்க்காப்பாளர்கள் எங்கே போனார…

    • 0 replies
    • 2.9k views
  4. பயங்கரவாதம்: முகம் மூடும் முகமூடி பொருட்கள் உலகளாவிய காலமொன்றிருந்தது. பின்னர் சேவைகள் உலகளாவத் தொடங்கின. பின்னர் அரசியலும் பொருளாதாரமும் உலகளாவின. நடை, உடை, பாவனைகள் அவற்றைத் தொடர்ந்தன. உலகமயமாக்கல் இதைச் சாத்தியமாக்கியது என்று சிலாகிக்கப்பட்டது. இன்று பயங்கரவாதம் உலகளாவியுள்ளது. உலகமயமாக்கல் அதற்கான வழிவகைகளைச் செய்து கொடுத்துள்ளது. எதற்காக உலகமயமாக்கல் போற்றப்பட்டதோ, இன்று அதற்காகவே தூற்றப்படுகிறது. எவ்வாறு உலகமயமாக்கல் ஏற்படுத்திய சீர்கேடுகளை இலகுவில் சீர்படுத்தவியலாதோ, அதேபோலவே இன்று உலகமயமாகியுள்ள பயங்கரவாதமும் எல்லைகளின்றித் தொடர்கிறது. இரண்டுக்குமான ஒற்றுமை, இரண்டுமே திட்டமிட்டு சில நலன்கள…

  5. பாகிஸ்தானின் அண்மைய நிகழ்வுகள் இந்திய – பாகிஸ்தான் உறவை சகஜ நிலைக்குக் கொண்டுவர வழிவகுக்குமா? இரா­ணுவ சதி­க­ளுக்கும், இரா­ணுவ ஆட்­சிக்கும் நீண்­ட­காலம் உட்­பட்ட பாகிஸ்தான் மீண்டும் உலக மக்­களின் கவ­னத்தை ஈர்த்­ துள்­ளது. பாகிஸ்தான் சட்ட அமைச்சர் சாஹிட் ஹமீட் இஸ்­லா­மிய தீவி­ர­வா­த கட்சி­களின் தொடர்ச்­சி­யான வழி­ம­றிப்பு போராட்­டத்தின் மூலம் பத­வி­யி­லி­ருந்து இறங்­கி­யுள்ளார். அர­சாங்­கமும் அவர்­களின் தொடர்ச்­சி­யான போராட்­டத்­திற்கு அடி­ப­ணிந்­துள்­ளது. அண்­மையில் பாகிஸ்தான் அர­சாங்கம் தேர்தல் சட்­டத்தில் திருத்­த­மொன்றை மேற்­கொண்­டது. அத்­தி­ருத்த சட்­டத்தில் அல்­லா­ஹ்வுக்கு மரி­யாதை செலுத்தும் வாசகம் இடம்­பெ­ற­வில்லை என ஆட்­சே­பித்து இஸ்­லா­மிய தீவி­…

  6. நெருக்கடியின் சுமையைத் தணித்தல் விக்டர் ஐவன் *********** புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புடைய பல அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பிரதேசங்களை அவர்களின் ஆதரவுடன் அபிவிருத்தி செய்ய அனுமதிக்க வேண்டும். இது நாட்டிற்கு அந்நிய செலாவணியின் முக்கிய ஆதாரமாக மாறும். அதேவேளை, வடக்கு, கிழக்கு மக்களிடம் இருந்து பாதுகாப்புப் படையினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகள் அனைத்தும் அவற்றின் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும். எனவே, அந்தப் பிரதேசங்களில் சிறப்பான அபிவிருத்தி ஏற்படுமாயின் அது வடக்கு, கிழக்கில் வாழும் மக்க…

    • 0 replies
    • 226 views
  7. ''ஆயிரம் சமர்களின் ஜெயிப்பதை விடவும் உன்னை நீயே ஜெயிப்பது சிறந்தது. அந்த வெற்றி உனக்கே உரியது. அதை உன்னிடமிருந்து யாரும் எடுக்க முடியாது. தேவதைகளாலோ அல்லது அசுரர்களாலோ அல்லது சொர்க்கத்தாலோ அல்லது நரகத்தாலோ அதை உன்னிடமிருந்து எடுக்க முடியாது' -புத்தர் - மூன்றாவது ஜெனிவாத் தீர்மானத்தில் தமிழர்கள் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டிருந்தது. ஆனால், சிறுபான்மை மதங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து அதில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. அத்தீர்மானத்துக்கமைய மனித உரிமைகள் ஆணையாளரது விசாரணைப் பொறிமுறை ஒன்றிற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன. ஓர் அனைத்துலகத் தீர்மானத்தில் அப்படி சிறுபான்மை மதங்கள் மீதான தாக்குதல்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில்…

    • 0 replies
    • 704 views
  8. தமிழ்த் தேசிய அரசியல் எதை நோக்கிப் பயணிக்க வேண்டும்? புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய அரசியல், சம்பவங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் பிரதிபலிக்கும் கட்டத்துக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றது. அரசியல் உரிமையையும் விடுதலையையும் முன்னிறுத்தி செயற்பட வேண்டிய தரப்பாக, தமிழ்த் தேசிய கட்சிகளும் அமைப்புகளும் அதுசார் ஓர்மத்தோடும் இராஜதந்திர அணுகுமுறையோடும் நகர வேண்டும். ஆனால், அவ்வாறான கட்டத்தை எந்தவொரு தமிழ்த் தரப்பும் கடந்த சில ஆண்டுகளாகப் பதிவு செய்யவில்லை. இலங்கை, அதன் அமைவிடம் சார்ந்து, எப்போதுமே சர்வதேச ரீதியில் கவனம் பெறும் நாடாக இருந்து வந்திருக்கின்றது. சீனா, தன்னுடைய தொழில், இராணுவ கட்டமைப்பு ரீதியான முன்னேற்றத்தை அடைந்த போது, சர்வதேச ரீதியில் தன்னுடை…

  9. இந்திய உயர்ஸ்தானிகரின் வட, கிழக்கு விஜயம் சொல்லும் தெளிவான செய்தி! இந்தியா ஓர் இரட்டை சகோதரராக, குறிப்பாக தேவைப்படும் சகல சந்தர்ப்பங்கள் உட்பட எப்பொழுதும், இலங்கைக்கு துணை நிற்குமென்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இம்மாதத்தின் முதல் வாரத்தில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த அவர், திருகோணமலையில் வைத்து இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தி நம்பிக்கையை மீண்டும் அளித்ததோடு, தெளிவான செய்தியையும் வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய சந்திப்புக்களும், கரிசைனகளும் இந்தியா, தமிழ் பேசும் சமூகங்கள் உட்பட ஒட்டுமொத்த இலங்கையின் மீதும் எவ்வளவு தூரம் ஆழமான கரிசைனையைக் கொண்டிருக்கின்றது என்பதை அப்பட்மாக வெளிப்படுத…

  10. புவிசார் - அரசியல், புவிசார் - பொருளாதாரம் அமெரிக்க வியூகம்- ரசிய இந்திய உறவில் தாக்கம் செலுத்துமா? ஈழத்தமிழர்களும் தமிழ்நாடும் செய்ய வேண்டியதென்ன? சீனாவுக்கு சார்பான பிறிக்ஸ் மற்றும் சங்காய் ஒத்துழைப்பு மையம் ஆகியவற்றில் அங்கம் வகிக்கும் இந்தியா, தற்போது அமெரிக்காவின் கடும் அழுத்தத்திற்கு முகம் கொடுத்துள்ளது. ரசிய � உக்ரெயன் போர்ச் சூழலில், ரசியாவுக்கு ஆதரவாக இந்தியா செயற்பட்டு வருகின்றது. அதேநேரம் அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டுடனும் இந்தியா இயங்குகின்றது. குறிப்பாக இந்தோ - பசுபிக் பிராந்திய விவகாரத்தில் அமெரிக்காவுடன் இந்தியா ஒத்துழைக…

  11. கரும்புள்ளித் தடம் – பி.மாணிக்கவாசகம்… முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒரு விவகாரமாகவே மாறியிருப்பது வருந்தத் தக்கது. தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்ட வரலாற்றில் முள்ளிவாய்க்கால் அவலம் என்பது, மிகமோசமான துன்பியல் சம்பவமாகப் பதிவாகியிருக்கின்றது. பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட அந்தத் துன்பியல் நிகழ்வை நினைவுகூர்வதில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளும் ஏட்டிக்குப் போட்டியான நிலைப்பாடுகளும்கூட முள்ளிவாய்க்கால் சோக நிகழ்வின் நினைவுகூரல் வரலாற்றில் ஒரு கரும் புள்ளியாக இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தின் குறுகியதொரு நிலப்பரப்பில் பொதுமக்களையும் விடுதலைப்புலிகள…

  12. வாள்வெட்டு வீரரும் வாய்ச்சொல் வீரரும் வடக்கில் வாள்வெட்டுகள், வன்முறைகள், குற்றச் செயல்கள் அதிகரிக்கும் போதெல்லாம், மாகாணசபைக்குப் பொலிஸ் அதிகாரம் பற்றியும் விழிப்புக் குழுக்கள் பற்றியும் பேசப்படுவது வழக்கம். பொலிஸ் தரப்பு, சட்டத்தைச் சரியாக நடைமுறைப்படுத்துவதில்லை; அரசாங்கம், சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதில்லை என்றெல்லாம், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், வன்முறைகளும், குற்றங்களும் ஒரு சுழற்சியான விடயங்களாக, நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வாள்வெட்டுகள் போன்ற வன்முறைகள், திடீரென மெலெழும்பும் போது, மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்படுவதும், அது எதிர்ப்புணர்வை ஏற்படுத்தும் போது, அரசாங்கம் அதை அடக்க பொலிஸார…

  13. தெஹ்ரான் உடன்படிக்கை - ஜனகன் முத்துக்குமார் துருக்கி, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகள், முத்தரப்பு உச்சிமாநாடொன்றை, இம்மாதம் 7ஆம் திகதியன்று, தெஹ்ரானில் நடத்தினர். பல பார்வையாளர்களின் கருத்துப்படி, உச்சிமாநாட்டின் முடிவுகள், சிரியாவின் வடமேற்கில் உள்ள இட்லிப் நகரின் விதியை, குறிப்பாக போராளிக் குழுக்களைத் தகர்த்தல் தொடர்பாகத் தீர்மானிக்க ஏதுவாய் இருந்தது எனக் கருதப்படுகின்றது. இது டமாஸ்கஸ் தொடர்பில் இந்நாடுகள் மேற்கொண்ட கலந்துரையாடல்கள், அதனைத் தொடர்ந்து டமாஸ்கஸிலிருந்து ஆயுததாரிகள் வெளியேற்றப்பட்டமையைத் தொடர்ந்தே, இட்லிப் நகர் தொடர்பான மாநாடு நடைபெற்றுள்ளது. 2017இல் இருந்து, ரஷ்யாவுக்கும் ஈர…

  14. விக்னேஸ்வரன் இன்னொரு கஜேந்திரகுமாரா? October 4, 2018 பரசுராம் இது அறிக்கைப் போர் காலம். தேர்தல் இன்னும் நெருக்கவில்லையென்பதால், மேடையில் ஏறி பேசாமல், அலுவலகங்களில் இருந்து அறிக்கைகளை தட்டிவிட்டு, பரபரப்பை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள் அரசியல் கட்சியினர். தமிழ் தேசிய கூட்டமைப்பு, முதலமைச்சர் தரப்பு, ஈ.பி.டி.பி, வடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஆகிய தரப்பினர் இந்த அறிக்கைப் போரில் முன்வரிசையில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாகவே பேஸ்புக், அறிக்கை விவகாரங்களில் பிய்த்து உதறும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரர்கள், இந்த விடயத்தில் திடீரென இவர்களின் விஸ்பரூபத்தை பார்த்து மிரண்டு விட்டார்கள் போல தெரிகிறது. ஆயினும், முதலமைச்சர்தான் இதில் ஒரு அடி முன்னால்…

  15. தமிழர்களை ஜக்கியப்படுத்திய வன்னி வெள்ளம்- நிலாந்தன் December 30, 2018 வன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில கிழமைகளுக்கு முன் காஜாப் புயல் வடக்கையும் தாக்கியது. ஆனால் பெரியளவு சேதம் ஏற்படவில்லை. புயல் வரப்போவதையிட்டு துறைசார் அரச திணைக்களங்கள் முன் கூட்டியே எச்சரித்திருந்தன. முகநூலில் யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு புவியியல் விரிவுரையாளர் தொடர்ச்சியாகத் தகவல்களை வழங்கிக்கொண்டிருந்தார். இது தவிர தன்னார்வ அமைப்புக்களும் தனிநபர்களுமாக பெரும்பாலான முகநூல் உலாவிகள் புயலையிட்டு எச்சரித்துக் கொண்டிருந்தார்கள்;. அவ் எச்சரிக்கைகள் அளவுக்கு மிஞ்சிப் போய்விட்டன என்றும் ஒரு விமர்சனம் எழுந்தது. அனாவசியமாகச் சனங்களைப் பீதிக்குள்ளாக…

  16. தேசிய அரசாங்கம் தேவையா? முகம்மது தம்பி மரைக்கார் / 2019 பெப்ரவரி 05 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:32Comments - 0 Views - 0 தேசிய அரசாங்கமொன்று நாட்டில் இருந்தது. அதற்கு ‘நல்லாட்சி அரசாங்கம்’ என்று பெயர் வைத்திருந்தார்கள். ஆனால், கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதியுடன், தேசிய அரசாங்கம் இல்லாமல் போய்விட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் உருவான மோதல், தேசிய அரசாங்கத்தை இல்லாமலாக்கியது. இப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. தனிக் கட்சி அல்லது அணியொன்று அமைக்கும் ஆட்சியில், ஜனாதிபதி உள்ளடங்கலாக அமைச்சர்களின் எண்ணிக்கை 30ஐத் தாண்ட…

  17. Published By: DIGITAL DESK 3 27 FEB, 2024 | 04:00 PM நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வாழைச்சேனை என்றதும் அங்கு அமைந்துள்ள கடதாசி தொழிற்சாலை தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். என்றாலும் 1990 களில் இத்தொழிற்சாலை மூடப்பட்டதோடு அந்நினைவு பெரும்பாலானவர்களின் மனங்களில் இருந்து நீங்கிவிட்டது. 1947 இல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சராக ஜோர்ஜ் ஈ.டி.சில்வா பதவி வகித்தார். அப்பதவி 1948 இல் ஜி.ஜி பொன்னம்பலத்திற்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1951 இல் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலைக்கு பொன்னம்பலம் அடிக்கல் நாட்டினார். ஜேர்மன் நாட்டின் உதவித் திட்டத்தின் கீழ் இத்தொழிற்சாலை அமைக்கப்பட்டது. என்றாலும் 1952 இல் நடைபெற்ற…

  18. இலங்கையின் அரசியல் அரங்கு களை கட்டிவிட்டது. அரங்காடிகள் எந்த அரங்கில் இணைந்து ஆடி, நடித்து மக்களைக் கவருவதென்பது இம்மாத மத்தியில் தெரிந்துவிடும். ஜனநாயகம் என்ற பெயரில் நடைபெறும் அரசியல் இன்று வியாபாரமாக மட்டுமல்ல விபசாரமாகவும் காணப்படுவதாக உய்த்துணர்ந்தோர் கூறுகின்றனர். அந்த அளவு அரசியலரங்கு அசிங்கப்பட்டுள்ளது. நேற்றுவரை நீ யாரோ, நான் யாரோ என்றிருந்தவர்கள் பதவிகளைப் பெற ஒட்டியுறவாடவும் இணைந்து அரங்காடவும் கட்டியணைக்கவும் தயங்காத நிலையைக் காணலாம் . பொதுமக்களை, வாக்காளர்களை எப்படியாவது ஏமாற்றி தமக்குச் சார்பாக புள்ளடியைப் பெற்று அதன் மூலம் பதவிகளைப் பெற்று வளம் பெற்று வாழ எத்தனிப்போரை அரசியல்வாதிகள் என்கின்றோம். இவர்கள் இணைந்த கூட்டை அரசியல் கட்சிகளென்கின்றோம். கடந்தகால அ…

    • 0 replies
    • 175 views
  19. இஸ்லாமியப் பயங்கரவாதமும் - பகுத்தறிவற்ற இஸ்லாமிய சிந்தனைமுறையும் 290 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று, இலங்கையில் இஸ்லாமிய மதவெறியாட்டத்தை நடத்தியிருக்கின்றது இப் பயங்கரவாதம். இது தனிப்பட்ட மனிதனின் மதச் சுதந்திரத்திற்கு அப்பாற்பட்ட, மனித வெறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு, ஒருங்கிணைக்கப்பட்ட மதப் பயங்கரவாதமாகும். பெரும்பான்மை இஸ்லாம் மக்களின் மதவழிபாட்டுக்கு முரணானதும் கூட. இருந்த போதும் பயங்கரவாத வழிமுறை, இஸ்லாம் மார்க்கம் என்று கூறிக்கொள்ளும் ஒரு பிரச்சாரத்தின் பின்னணியில் வைத்து அணுகவேண்டியது அவசியமாக இருக்கின்றது. இந்த தற்கொலை தாக்குதலானது இஸ்லாமிய பயங்கரவாதத்தின் பின்னணியில், இலங்கை மற்றும் அன்னிய நாட்டைச் சேர்ந்த மதவெறிக் கும்பலொன்றினால் திட்டமிட்டு நடத…

    • 0 replies
    • 1.4k views
  20. தமிழ் மக்கள்பொதுச்சபை - நிலாந்தன் “கொள்கை அடித்தளம் இல்லாமல் கட்சிகளை ஒருங்கிணைப்பது தற்காலிகமானது செயற்கையானது என்று சுயாதீனக் குழு நம்புகிறது. தலைவர்களையும் வாக்காளர்களையும் நீண்டகால நோக்கில் பண்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அவசியத்தையும் சமூகப் பொறுப்பையும் சுயாதீனக் குழு ஏற்றுக்கொள்கிறது. தமிழ் அரசியலில் சிவில் சமூகங்கள் தலையிடுவது என்பது தமிழ் ஜனநாயகத்தை மேலும் செழிப்பாக்கும். இனிவரும் காலங்களில் தமிழ் அரசியலின் மீதும் கட்சிகளின் மீதும் அதிகரித்த தார்மீகத் தலையீட்டைச் செய்வதற்கு தேவையான வளர்ச்சியைத் தமிழ் சிவில் சமூகங்கள் பெற்றுக் கொள்ளவேண்டும்”. …

  21. விதுர பிரபாத் முணசிங்க – கௌஷல்யா ஆரியரத்ன முன்னுரை நாம் இன்னும் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி இந்நாட்டில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களின் அதிர்ச்சியில் இருக்கின்றோம்.3 மனிதர்கள் என்ற வகையில் அழிவுகளின்போது உணர்ச்சிவசப்படுவது இயல்பானதொரு விடயமாக இருக்கின்றபோதிலும், அந்த உணர்வுகளின் அடிப்படையில் எடுக்கப்படுகின்ற உடனடி எதிர்ச்செயற்பாடுகள் எமக்குப் பெற்றுக்கொடுத்திருப்பது நன்மையான பெறுபேறுகள் அல்ல என்பதற்கு எமது அண்மைக்கால வரலாறு சான்று பகர்கின்றது. சிவில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னரான பத்தாண்டுகள், 1983 இல் என்ன நடந்தது என்பதை நாம் மறந்துவி…

  22. தமிழ் - முஸ்லிம் இனவுறவு: பிள்ளையை கிள்ளிவிட்டுத் தொட்டிலை ஆட்டும் அரசியல் மொஹமட் பாதுஷா / 2019 ஓகஸ்ட் 11 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 05:56 Comments - 0 இனங்களுக்கு இடையிலான உறவு பற்றி, ஒவ்வொரு பருவகாலத்திலும் பேசப்படுகின்றது. குறிப்பாக, தமிழ்பேசும் சூழலில், தமிழர் - முஸ்லிம்களுக்கு இடையிலான உறவு பற்றிய கருத்தாடல்கள், தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. உண்மையில், பெரும்பாலான சாதாரண, அடிமட்டத் தமிழ், முஸ்லிம் மக்களிடையே, சொல்லிக் கொள்ளும்படியாக எந்தவித இனமுறுகலும் குரோதமும் கிடையாது. இவ்வாறிருக்கையில், அரசியல், மார்க்கம், இயக்கம் ஆகிய பின்னணிகளைக் கொண்ட, இனக் குழுமத்தினரிடையே, மேலும் இனவுறவைப் பலப்படுத்துவதற்கா…

  23. நல்லாட்சி கட்டுகதைகள்: வடக்கு, கிழக்கிற்கு 65,000 உலோக வீடுகள் படம் | Global Education வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த நான்கு வருடங்களில் 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு பல்வேறு ஒப்பந்தக்காரர்களிடம் இருந்தும் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி பகுதியில் விலைகோரல்களை கேட்டிருந்தது. சிவில் சமூக அமைப்புகளினால் விடுக்கப்பட்ட அறிக்கையொன்று (ஆங்கிலம், சிங்களம் அல்லது தமிழில் இங்கு கிடைக்கும்) இந்தத் திட்டம் பற்றி முக்கிய கரிசனைகளை எழுப்புகின்றபோதிலும், கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில மேலதிக விடயங்களும் அங்கு உள்ளன. மாகாண அல்லது மாவட்ட அதிகாரிகளினால் அதிக அற…

  24. எதிர்க்கட்சிகளின் பலவீனமும் அரசாங்கத்தின் அணுகுமுறையும்! *தமிழ்த்தேசியக் கட்சிகளை தவிர்த்து, தமிழர் தரப்பில் வேறு பிரதிநிதிகளுடன் பேசும் திட்டம் வகுக்கப்படுகிறதா? *எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு போராட்டம் பிசுபிசுத்தால், அநுரவின் நகர்வு மேலோங்கும் *ரணில் – மகிந்த ஊழல் - மக்கள் போராட்ட முன்னணியின் கருத்து நியாயமானது... ------ ----- அநுர அரசாங்கத்துக்கு எதிராக கருத்திட்டு வரும் பிரதான எதிர்க்கட்சிகள் பலவீனம் அடைந்துள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு நுகேகொடை நகரில் நடைபெறவுள்ளது. இந்த எதிர்ப்பு போராட்டத்தில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பங்கெடுக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா அறிவித்திருந்தார். அதேபோன்று -- மக்கள் போராட்ட முன்னணியும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.