Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. பிரித்தானியாவில் கொரோனா போரில் தமிழ் மருத்துவத் துறையினரின் பங்கு Bharati May 7, 2020 பிரித்தானியாவில் கொரோனா போரில் தமிழ் மருத்துவத் துறையினரின் பங்கு2020-05-07T20:33:48+00:00Breaking news, அரசியல் களம் லதன் சுந்திரலிங்கம் நேர்காணல் கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் வேகமாகப் பரவி மக்களை அதிகளவுக்குப் பலியெடுத்துவரும் நாடுகளில் பிரித்தானியா முக்கியமானது. பிரித்தானியாவில் தற்போதைய நிலையில் கொரோனா மரணம் 30 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. 20 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். தொற்றினால் பாதிக்கப்படுவர்களின் தொகை தினசரி அதிகரித்துச் செல்லும் நிலையில், மருத்துவத் துறையினர் நோயாளிகளைப் பராமரித்துக் – குணமாக்குவதில் இரவு பகலா…

  2. பிரித்தானியாவும் பிரெக்சிட்டும் Britain and brexit பா.உதயன் பிரித்தானியாவில் இன்று அனைவராலும் பேசப்படும் ஒரு மிக முக்கியமான செய்தியாக இன்று பிரெக்ஸிட் (brexit) இருப்பதை காண முடிகின்றது .சுமார் மூன்று வருடத்திற்கு முன்பு பிரித்தானிய ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து தனித்து இருக்கவேண்டுமா அல்லது சேர்ந்து இருக்க வேண்டுமா என்ற பொது வாக்கு எடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து இருக்க வேண்டும் என்று பெரும் பான்மை மக்களால் தீர்ப்பு வழங்கபட்டது . இதை தொடர்ந்து எந்த வித பொருளாதார ஒப்பந்தமும் செய்யப்படாமல் ஒரு இழுபறி நிலைமையே காணப்படுகின்றது .இந்த நிலையில் பிரித்தானிய பிரதமர் பழமைவாத தேசிய நரிகளோடு நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறார் . இதை தொடர்ந்து எ…

  3. பிரிந்து செல்லும் உரிமை – இலங்கை மக்களின் விடுதலைக்கு முன்நிபந்தனை : சபா நாவலன் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தமது சுய நிர்ணையக் கோரிக்கையை முன்வைத்துப் போராடுதல் என்பது இனவாதம் என்றும் பாசிசத்தை நோக்கி வளர்ச்சியடையும் முழக்கம் என்றும் திட்டமிட்ட பிரச்சாரம் இலங்கையில் மேற்கொள்ளப்படுகிறது. இலங்கையில் புதிதாக முளைத்திருக்கும் இந்த கருத்தியல் உலகிற்குப் புதிய ஒன்றல்ல. திரிபு வாதிகளும், ஒடுக்குமுறையாளர்களும், ஏகாதிபத்தியத்தின் அடியாட்களும் உலகம் முழுவதும் சுயநிர்ணய உரிமைக்கு எதிரான எதிர்ப்பை மீண்டும் நிறுவனமயப்படுத்தி வருகின்றனர். இலங்கை சார்ந்த சூழலில் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையும் தேசிய விடுதலையும் குறித்த கருத்துக்களை முன்வைப்பவர்களை அவர்களின் பலம் பல…

  4. இலங்கையில் தேசியகீதமானது தமிழிலில் பாடக்கூடாது என்று பொதுபலசேனா தெரிவித்திருக்கும் கருத்தானது தமிழ்மக்கள் மத்தியில் அதிகம் கவனத்தை ஈர்த்திருக்கவில்லையாயினும் பொதுபலசேனாவின் இக்கருத்தானது அரசியல் மட்டத்தில் பல்வேறு கருத்துக்களாக நோக்கவேண்டியுள்ளது. தமிழ்மொழி பேசுகின்றவர்களும் இலங்கை தேசத்தின் தேசிய கீதத்தினைப் பாடவேண்டும் என்கின்ற நோக்கத்திலேயே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இலங்கைதேசம் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் பிடியில் இருந்த இறுதிக்காலத்தில் பாரததேசத்தில் பல்வேறு அரசியல் போராட்டங்களும், விடுதலை எழுச்சிகளும் ஏற்பட்டன. மக்களை விடுதலையின்பால் திசை திருப்புவதற்கு விடுதலைப்பாடல்கள் அவசியம் தேவைப்பட்டன. இலங்கை பூகோள ரீதியில் இந்திய தேசத்திற்கு அருகில் அமைந்திருப்பதனால் அங்கு…

  5. வடக்கு வாழ்கின்றது. தெற்கு தேய்கின்றது என்று தமிழகத்தில் ஒரு காலத்தில் தேர்தல் கோஷம் எழுப்பப்பட்டிருந்தது. தென் மாநிலமாகிய தமிழ் நாட்டிற்கு வடக்கில் உள்ள டெல்லி அரசு உரிய உரிமைகளைக் கொடுக்கவில்லை. ஹிந்தியைத் திணிக்க முயல்கின்றது என்ற காரணங்களை வைத்து தமிழ் நாட்டில் தனிநாட்டுக்கான கோரிக்கை எழுந்திருந்த சந்தர்ப்பம் அது. திராவிட கழகமும், திராவிட முன்னேற்ற கழகமும் தமிழக மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு பெற்றிருந்த போது இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு, அதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. திமுக தலைவர் அண்ணாத்துரையின் தலைமையிலான தமிழகத் தலைவர்கள் திடீரென தமது தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு, இந்தியா என்ற தேசிய கொள்கையைக் கையில் எடுத்திருந்தனர். சீனாவிடம் இருந்து…

  6. பிரெக்ஸிட் ஓராண்டின் பின்னே: இருளின் ஒளியில் வழிதேடல் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டாலும் பூவுலகில் தான் வாழப்படுகிறது. சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்பதால் அது இறுதிவரை நிலைக்கும் என்பதற்கான எந்தவொரு உத்தரவாதமும் இல்லை. அரசியலில் ஏற்படுத்தப்படும் கூட்டிணைவுகளும் அவ்வாறுதான். மிகவும் வலுவான அடித்தளத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும் கூட, அக்கூட்டிணைவு நிலைப்பதற்கான உத்தரவாதத்தை யாரும் வழங்க முடியாது. திருமணங்களை விட விவாகரத்துகள் விவகாரமானவை. திருமணத்துக்குக் குறைந்த காலத்தில் உடன்படிக்கைகள் எட்டப்படக்கூடியதாக இருக்கின்றன. ஆனால், விவாகரத்துகளின்போது, உடன்படிக்கைகளை எட்டுவது…

  7.  பிரெக்ஸிட் வாக்கெடுப்பு: பிரித்தானியா வெளியேறுமா? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ தீர்மானிக்கும் சக்தியாக, மக்கள் எப்போதும் இருப்பதில்லை. ஆனால், அவர்கள் தீர்மானமான சக்தியாகும்போது, பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் மாயத்தை நிகழ்த்துவார்கள். ஐனநாயகம் என்ற அழகிய முகமூடி, தேர்தல் என்ற கவசத்தினூடு முழுமையாக மறைத்திருக்கின்றபோதும், அக்கவசத்தையை ஆயுதமாக்கி மக்கள் நிகழ்த்தும் மாயம், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை அல்ல, மக்கள் மீதான நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாயுள்ளது. நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்துவிடும் என்ற பாடல் வரிகள், அண்மைய பிரித்தானிய நிலைவரங்களை விளக்கப் பொருத்தமானவை. பிர…

  8. பிரெக்ஸிட்; மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 செப்டெம்பர் 05 வியாழக்கிழமை, மு.ப. 08:53Comments - 0 வரலாற்றில், தனி மனிதர்களின் பாத்திரம் முக்கியமானது. பல வரலாற்று நிகழ்வுகளைத் தனி மனிதர்களின் செயல்களே தீர்மானித்து இருக்கின்றன. இது, பண்டைய காலம் முதல் தற்காலம் வரை அனைத்துக்கும் பொதுவானது. வரலாறெங்கும் தனிமனிதர்கள், தேசங்களின் தலைவிதியைத் தீர்மானித்து இருக்கிறார்கள். அவ்வாறு, ஒரு தேசத்தின் தலைவிதியை, ஒருசிலர் தீர்மானிக்கின்ற நிகழ்வு, இப்போது நடந்தேறுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளிவருவதைக் குறிக்கும் ‘பிரெக்ஸிட்’, இப்போது பேசுபொருளாகி உள்ளது. இது, பிரித்தானிய நாடாளுமன்ற ஜனநாயகத்தையே ஆட…

  9. பிரெக்ஸிட்: அடுத்தது என்ன? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜனவரி 17 வியாழக்கிழமை, மு.ப. 12:54 உறவுகள் எப்போதுமே தனிச்சிறப்பு வாய்ந்தவை. அவை உருவாகும் போது ஏற்படும் மகிழ்ச்சியை விட, அவை பிரியும் போது ஏற்படும் வலியும் அந்தரமும் நிச்சயமின்மையும் அச்சமூட்டுவன. இந்த அச்சமே, பல உறவுகள் பிரியாமல் இருப்பதற்குக் காரணமாகின்றன என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள்; சேர்வதும் பிரிவதும் இயற்கை என்று கருதுபவர்களும் இருக்கிறார்கள். ஆனாலும், பிரிவென்பது கடினமானது. இந்த ஆண்டின் முதலாவது நெருக்கடி, நேற்று முன்தினம் அரங்கேறி இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான திட்டத்தை, பிரித்தானிய நாடாளுமன்றம் நிராகரித்து இருக்கின்றது. …

  10. பிரெக்ஸிட்: பின்னணியும் தீர்வுகளும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது இரு தரப்புக்கும் தோல்விதான் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்று - குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் - பிரிட்டன் மக்கள் எடுத்திருக்கும் இந்த முடிவால் உலகம் முடிவுக்கு வந்துவிடப்போவதில்லை. ஆனால், நாம் என்ன செய்ய வேண்டியிருக்கிறது என்பதை இது காட்டுகிறது. ஐரோப்பாவின் முக்கிய சக்தியாகவும், தாராளவாத ஜனநாயகம், பன்மைத்துவம், சுதந்திரச் சந்தை ஆகியவற்றின் நீண்டகால ஆதரவு சக்தியாகவும் இருக்கும் பிரிட்டன், குடியேற்றம் தொடர்பாக மக்களிடம் ஏற்பட்டிருக்கும் அச்சத்தைத் தங்கள் சுய முன்னேற்றத்துக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட இழிவான …

  11. சீனனுக்கு நிலத்தை எழுதி கொடுத்து பிச்சை எடுக்கும் நீ உன் நாட்டு ஈழத்தமிழனுக்கு என்ன செய்தாய்,...?

  12. 2009 இற்குப் பின்னரான புவிசார் - அரசியல் - பொருளாதாரம் பிறிக்ஸ் மாநாட்டு முடிவுகளும் இலங்கையின் எதிர்பார்ப்பும் பிறிக்ஸில் இலங்கை இணைய வேண்டுமென்ற உதயகம்பன்பிலவின் கோரிக்கையின் பின்னணி? புதுப்பிப்பு: செப். 01 11:56 உலகின் ஒன்பது பெரிய எண்ணெய் உற்பத்தி நாடுகளில், ஆறு நாடுகள் பிறிக்ஸ் கூட்டமைப்பில் இணைந்துள்ளன. இதன் மூலம் உலகின் எண்ணெய் வளத்தை பிறிக்ஸ் நாடுகள் கட்டுப்படுத்த முடியும். இதனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதை எவரும் மறுப்பதற்கில்லை. பிரேசில், ரசியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை கொண்ட வலுவான கூட்ட…

  13.  பிலவுக்குடியிருப்பில் என்ன நடக்கும்? - கருணாகரன் “கேப்பாப்புலவு - பிலவுக்குடியிருப்பில் என்ன நடக்கப்போகிறது?”. இதுவே இன்றைய மிகப்பெரிய கேள்வி. ஏனென்றால், தங்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை என்றால், அடுத்ததாக படைமுகாம்களாக இருக்கும் காணிகளுக்குள் நுழையப்போவதாக, அங்கே போராடிக் கொண்டிருக்கின்ற மக்கள் சொல்லியிருக்கிறார்கள். இதை அவர்கள் செய்யும் நிலையே இன்றுள்ளது. எத்தனை நாட்களுக்குத்தான் அவர்கள், இப்படி வீதியில் இரவும் பகலும் காத்திருக்க முடியும்? ஆனால், அப்படி யாராவது காணிகளுக்குள் நுழைந்தால், அது பெரிய விபரீதமான விளைவுகளை உண்டாக்கும் என்று எச்சரித்திருக்கிறது படைத்தரப்பு. …

  14. பிலவுக்குடியிருப்பு:கொதிக்கும் நிலம் - கருணாகரன் சொந்த வீட்டுக்குத் திரும்பும் வரைட, வீதியில்தான் எங்கள் வாழ்க்கை” என்று பத்து நாட்களாக வீதியிலேயே படுத்து எழும்பிப்போராடிக் கொண்டிருக்கிறார்கள், முல்லைத்தீவு - கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள். “வீடு திரும்பும் வரையில் வீதியை விட்டுச் செல்ல மாட்டோம்” என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். குழந்தைகள், சிறுவர்கள், முதியோர்கள், பெண்கள் என கிராமத்திலுள்ள அனைவரும் வீதிக்கு வந்து விட்டனர். போராட்டக்களமாகியிருக்கிறது, வீதி. “மைத்திரி - ரணில் நல்லாட்சியில், இப்படி ஒரு வார்த்தையா? இப்படியொரு போராட்டமா?” என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், கண் முன்னால் மெய்யாகவே இப்படித்தான் அந்த மக்…

  15. பிலிப்பைன்ஸ் - சீன பொருளாதார உறவு - ஜனகன் முத்துக்குமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிலிப்பைன்ஸ், பிராந்திய வல்லரசான சீனாவின் தென் சீனக் கடல் எல்லை தொடர்பான ஆக்கிரமிப்புக்கு எதிராக, டேவிட் எதிர் கோலியாத் பாணியிலான வழக்கைதத் தொடுத்திருந்த போதிலும், பிலிப்பைன்ஸ் - சீன உறவானது அண்மைக்காலத்தில் சுமூகமான நிலையை அடைந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. அவ்வாறாக பிலிப்பைன்ஸ் தனது எதிர்ப்புக் கொள்கைகளைத் தளர்த்துவதற்கும் சீனாவுடன் இணைந்து போதலுக்கும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதில் சீனாவுடனான பொருளாதாரத் தொடர்புகளின் வகிபாகம் முக்கியமென பிலிப்பைன்ஸ் உணர்ந்தமையே காரணமாகும் என, அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பி…

  16. பிள்ளையான் கைது ஏனைய தமிழ்க்கட்சிகளுக்கான எச்சரிக்கையா? April 22, 2025 — கருணாகரன் — “புலியைப் பிடிப்பதற்குப் பதிலாக எலியையா பிடித்து வீரம் பேசுகிறது NPP?” என்று கேட்கிறார்கள் பலரும். அவர்களுடைய கேள்வி நியாயமானதே! ஏனென்றால், தங்களிடம் “400 கோவைகள் உண்டு. நாட்டுக்குத் துரோகமிழைத்தவர்களும் ஊழல்வாதிகளும் குற்றவாளிகளும் தப்பவே முடியாது. அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் தவறுகளுக்கும் ஆதாரம் உண்டு. நிச்சயமாக தவறிழைத்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்தனைபேரும் தண்டிக்கப்படுவார்கள்..” என்று முழங்கியவர்கள் NPP யினர். அப்படி முழக்கமிட்டுத்தான் (நம்பிக்கையூட்டித்தான்) ஆட்சியைக் கைப்பற்றியது NPP. ஆனால், அதற்குப் பிறகு அவர்கள் சொன்னமாதிரி எதுவுமே நடக்கவில்லை. அத்தனை பெருச்சாள…

    • 1 reply
    • 473 views
  17. Published By: VISHNU 17 APR, 2025 | 04:01 AM டி.பி.எஸ்.ஜெயராஜ் உள்ளூராட்சி தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதை அடுத்து கிழக்கு மாகாணத்தில் புதியதொரு தேர்தல் கூட்டணி தோன்றியது. பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியும் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான தமிழர் முற்போக்கு கழகமும் சேர்ந்து கிழக்கு தமிழர் கட்டமைப்பை அமைத்தன. ஒரு சில வாரங்களுக்குள் கேணல் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி இணைந்து கொண்டதை அடுத்து புதிய கூட்டணி பலமடைந்தது. கிழக்கு தமிழர் கூட்டமைப்பு அதன் உள்ளூராட்சி தேர்தல் பிரசாரங்களை உற்சாகத்துடன் கிழக்கில் தொடங்கியது. யாழ்ப்பாண தலைமைத்துவத்துடனான தமிழ்க்கட்சிகளின் போதாமை மற…

  18. பிள்ளையான் கைது: ஒன்றும் ஒன்றும் இரண்டா….? April 12, 2025 — அழகு குணசீலன்— தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு சில நாட்களாகிறது. இந்த செய்தி அறிந்து வெடிக்கொழுத்தி சித்திரைப் புத்தாண்டை முன்கைட்டியே கொண்டாடியவர்கள் இருக்கிறார்கள். பிள்ளையானுக்காக ஒப்பாரி வைக்காவிட்டாலும் கவலைப்பட்டு நினைத்து பேச கணிசமானவர்கள் நிச்சயம் இன்னும் இருக்கிறார்கள். வழக்கம்போல் இந்தக் கைது விடயத்தில் மட்டக்களப்பு சமூகம் இரண்டாக இரு வேறுபட்ட நோக்குகளுடன் பிரிந்து கிடக்கிறது. பிள்ளையானின் கைதுக்கு பின்னணியில் அரசியல் இருக்கிறது என்பது ஒரு தரப்பினரின் பார்வை. அப்படி இல்லை இது கட்சி அரசியலுக்கு அப்பால் தேசிய மக்கள் சக்தியின் தேர்த…

  19. பிள்ளையார் கல்யாணமா? பொருளாதாரமா ? தென்னிலங்கையில் தன்னெழுச்சி போராட்டங்களின் பின்னணியிலும், அதற்குப் பின்னரான ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியிலும் ஜேவிபியின் கை மேலோங்கி வருவது பரவலாகத் தெரிகிறது.அண்மைக் காலங்களில் ஊர்வலங்கள் போராட்டங்களுக்காக அதிகளவுக்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பது ஜேவிபிதான் என்று கொழும்பில் உள்ள தனியார் பேருந்துகள் சங்கத்தின் தலைவர் கூறுகிறார்.தென்னிலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக பொதுமக்களின் உணர்வுகளை அதிகம் பிரதிபலிக்கும் ஒரு கட்சியாக ஜேவிபி தோற்றம் பெற்றுள்ளது.அதைவைத்து ஜேவிபி வருங்காலங்களில் நடக்கக்கூடிய தேர்தல்களில் ஒரு பிரதான கட்சியாக மேலெழப் போகிறது என்ற எதிர்பார்ப்பு சிங்களம் மற்றும் தமிழ் அவதானிகளில் ஒரு பகுதியினர் மத்தியில் உ…

  20. குருவை மிஞ்சிய சீடனாக ரணில் விக்ரமசிங்க இலங்கை ராஜதந்திர வட்டாரத்தில் தனது ஆடுகளத்தை தற்போது ஆரம்பித்து விட்டார். கடந்த மாதம் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்து திரும்பியதும் 13ஆம் திருத்தச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தப் போவதாகவும் அதற்கான ஏற்பாடுகளுக்கு ரணில் உத்தரவிட்டுவிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. தீர்வு திட்டத்தை வழங்க ரணில் தயார் இல்லை இந்த நிலையில் சிங்கள தரப்பிலிருந்தும், தமிழ் தரப்பில் இருந்தும் பல்வேறு தரப்பட்ட வாதப் பிரதிவாதங்கள் ஒரு பெரும் பேசுபொருளாக மாறி இருக்கிறது. உண்மையில் ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வு திட்டத்தை வழங்குவதற்கு தயார் இல்லை. ஆனால் தமிழ் …

  21. பிழையாக வழிநடத்தும் மதவாதமும் இனவாதமும் காரை துர்க்கா / 2019 மே 07 செவ்வாய்க்கிழமை, பி.ப. 07:47 Comments - 0 அழகிய இலங்கைத் தீவை, கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாதம் பந்தாடியது. நாட்டின் அனைத்து இன, மத, மொழி மக்களும், இனி என்ன நடக்கும் என நடுங்கியவாறு இருந்தார்கள்; இருக்கின்றார்கள். ஒட்டுமொத்த நாடுமே அதிர்ந்தது ஆட்டம் கண்டது. இந்நிலையில், ஏப்ரல் 23ஆம் திகதி அமைச்சர்களின் விசேட சந்திப்பு நடைபெற்றது. அதையடுத்து, தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன், ஊடகவியலாளர்களோடு உரையாடினார். அதன் போது, “இந்த நாட்டில் இன்று, இனவாதத்துக்கு அரச ஆசீர்வாதம் இல்லை என்பது, நிம்மதி தரும் உண்மை ஆகும்” என்பதாகக் கரு…

  22. பீஜிங்கின் கடன் பொறிக்குள் சிக்கித் தவிக்கும் இலங்கை இலங்கையின் தற்போதைய நிலைமையை கண்டுகொண்ட நாடுகளில், பல நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கையின் மீதான கரிசனையை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இந்தியா மட்டுமன்றி, தமிழ்நாடும் தனியாக உதவிகளை வாரி வழங்கியுள்ளது. உதவிக்கரம் நீட்டுவது மட்டுமன்றி, இலங்கைக்கு இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டது ஏன்? என்பது தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். அத்துடன் எதிர்காலங்களில் தங்களுடைய நாடுகளுக்கும் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது என்பது தொடர்பில் கவனம் செலுத்தி முன்கூட்டியே தயார்படுத்தலில் ஈடுபட்டுள்ளன. அதில் பெரும்பாலானவர்களின் கருத்து பீஜிங்கின் கடன் பொறிக்குள் இலங…

  23. பீஜீங்கா- புதுடெல்லியா?: சிறிலங்காவின் தடுமாற்றம் புதினப்பணிமனைNov 01, 2018 | 1:53 by in செய்திகள் அரசியல் கொந்தளிப்பின் மத்தியில் சிறிலங்காவில் மீண்டும் மகிந்த ராஜபக்ச அதிகாரத்தை கைப்பற்றி விட்டார் என்றவுடன், முதலில் வாழ்த்து தெரிவித்த தலைவராக, சீன தலைவர் ஷி ஜின்பிங் இடம் பிடித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்காவின் பிரதமராக பதவி வகித்து வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதவிநீக்கம் செய்யப்பட்டு புதிய பிரதமராக முன்னைநாள் அதிபர், மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து சிறிலங்காவின் அரசியலில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டிருக்கிறது அரசமரம் போல் இருக்க வேண்டும் என்பதற்காக, யாப்புகளாலும் அரசியல் திருத்த சட்டங்கள் என்ற விழுதுகளாலும், …

  24. புண்ணை பொன்னாடையால் மூடிமறைக்க முற்படக்கூடாது இந்­திய பிர­தமர் நரேந்­தி­ர­மோடி அடுத்த வாரம் இலங்­கைக்கு வரு­கை­தர உள்ளார். இலங்­கைக்கு வருகை தரும் அவர் சர்­வ­தேச வெசாக் தின விழாவில் கலந்­து­கொள்ள உள்­ள­தோடு எதிர்வரும் 12 ஆம் திகதி மலை­ய­கத்­திற்கும் விஜயம் செய்ய இருக்­கின்றார். பிர­த­மரின் இலங்கை விஜயம் தொடர்பில் பல்­வேறு விமர்­ச­னங்கள் இருந்து வரு­வதும் தெரிந்த விட­ய­மாகும். இதற்­கி­டையில் மலை­ய­கத்­திற்கு விஜயம் செய்­ய­வுள்ள மோடி­ யிடம் மலை­யக மக்­களின் பிரச்­சி­னைகள் உரி­ய­வாறு முன்­வைக்­கப்­பட வேண்டும். நிலை மை­களை திரித்து கூறு­வ­தற்கு முற்­ப­டக்­கூ­டாது என்றும் கருத்­துகள் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. உலக நாடுகள் வரி­சையில் இந்­தியா …

  25. புதிதாக எதுவும் இல்லாத புதிய அரசமைப்பு புதிய அரசமைப்பொன்றைத் தயாரிப்பதற்காக நாடாளுமன்றம், அரசமைப்புச் சபையாக மாற்றப்பட்டதன் பின்னர், அதன் கீழ் நியமிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை, அக்குழுவின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த இடைக்கால அறிக்கையில், அரசாங்கத்தின் தன்மை, விவரிக்கப்பட்டுள்ள விதம், ஒரு வகையில் விசித்திரமானது. மற்றொரு வகையில், அதை ஆக்கியவர்கள் நாட்டின் சமூகங்களிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்த ‘படும் பாட்டை’ எடுத்துக் காட்டுகிறது. அரசின் தன்மை அதில் இவ்வாறுதான் விவரிக்கப்பட்டுள்ளது. ‘இலங்கையானது அரசமைப்பினால் வழங்கப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.