அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
பொருளாதார மீட்சிக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வின் முக்கியத்துவம் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan சுதந்திர இலங்கை என்பது, இனமுர ண்பாட்டோடுதான் பிறந்தது என்றால் அது பிழையல்ல; சர்வசன வாக்குரிமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, வாக்காளரில் பெரும்பான்மையைக் கவர, இனரீதியான அரசியல் வசதியானது என்று கருதிய அரசியல்வாதிகளின் எண்ணத்திலிருந்து, இன மத தேசியவாதம், அரசியல் மையநீரோட்டத்தில் மெல்ல மெல்ல கலக்கத் தொடங்கியது. அதுவரை அரசியல் பரப்பின் எல்லைகளில் நின்ற இனமத தேசியவாதம், அரசியல் மைய நீரோட்டத்தை நோக்கிக் கொண்டு வரும் கைங்கரியத்தை தேர்தல் அரசியலுக்காக, இந்நாட்டின் தலைவர்கள் எனப்படுவோர் செய்யத்துணிந்தனர். இலங்கையின் இனமுரண்பாடானது வரலாறு,…
-
- 0 replies
- 484 views
-
-
பொருளாதாரச் சுமையால் உருவாகும் அரசு மீதான வெறுப்பு -இலட்சுமணன் இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலைமையின் இழுபறி நிலையும் சட்டரீதியான ஆக்கபூர்வமான தீர்வுகாணாச் சட்டச் சிக்கல்களும் இலங்கைத் தேர்தல் நிலைவரத்தைத் தீர்மானிக்க முடியாத சூழ்நிலைக்கு அரசையும் தேர்தல் ஆணைக்குழுவையும் இட்டுச் சென்றுள்ளது. இந்நிலைக்கு, அடிப்படைக் காரணமாக அமைந்த, கொரோனா வைரஸின் உலகளாவிய தொற்று, கடந்த 67 நாள்களாக இலங்கைத் தீவையும் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும், இலங்கைத் தீவு இச்சூழ்நிலைச் சவாலை வெற்றிகரமாகச் சமாளித்துள்ளது. சர்வதேச ரீதியில், இத்தொற்றுக் காரணமாகக் கணக்கிடப்பட்ட உயிர் இழப்புகளை, இலங்கையில் ஏற்பட்ட இழப்புக்களின் அளவோடு ஒப்பிடும்போது, இச்சவாலை முன்னேற்றகர…
-
- 0 replies
- 436 views
-
-
இலங்கையில் 2009இல் தமிழீழ விடுதலைப்புலிகளின் படைக்கலன்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் ராஜபக்சேக்களின் அரசியல் செல்வாக்கு அசைக்க முடியாதவாறு உறுதியாக்கப்பட்டுவிட்டது. அது மட்டுமல்ல இலங்கையில் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பன்னாட்டு மட்டத்தில் ராஜபக்சேக்களுக்குக் கொடுக்கப்படும் அழுத்தமும் அதை அவர்கள் உறுதியுடன் எதிர்த்து நிற்பதும் சிங்களவர்கள் மத்தியில் அவர்களின் செல்வாக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இலங்கையின் விலைவாசி அதிகரிப்பு, வேலையில்லாப் பிரச்சனை போன்றவற்றை வைத்து அரசுக்கு எதிரான ஒரு பெரும் கிளர்ச்சிக்கு யாரும் தூபமிட முடியாத நிலை இலங்கையில் இருக்கிறது. ஆனால் Standard & Poor எனப்படும் நாடுகளின் கடன்படுதிறனை ஆய்வு செய்து நிரைப்படுத்தும் நிறுவனம்…
-
- 0 replies
- 520 views
-
-
பொறாமை எனும் விஷம் கொட்ஸ் ஆலி - தமிழில்: ரஞ்சன் குறிப்பு : வரலாற்றாய்வாளர் கெட்ஸ் ஆலி-யின் “Why the Germans? Why the Jews? Equality, Envy and Racial Hatred 1800-1933″ என்ற புத்தகத்திலிருந்து ஒரு பகுதி கீழே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1808 முதல் 1812ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட ப்ரஷய (ஜெர்மனியின் முன்னாள் பெயர்) சீர்திருத்தங்கள் அனைத்து குடிமக்களுக்கும் வர்த்தகம் செய்யும் சுதந்திரத்தை வழங்கின. மேலும், நிலவுடைமை சார்ந்த அடிமை முறையை முடிவிற்கு கொண்டு வந்ததோடல்லாமல், எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், யூதர்கள் காரணங்களின்றியும் தண்டிக்கப்படக்கூடும் என்று அதுவரை இருந்த நிலைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. . இருந்தும், யூதர்கள் சில அசாதாரண சந்தர்ப்பங்களில் மட…
-
- 1 reply
- 972 views
-
-
பொறி விலகுமா? முன்னாள் போராளிகள் என்பதற்காக தொடர்ந்து விளக்கமறியலில் வைத்திருக்க முடியாது என கூறிய யாழ்.மேல் நீதிமன்றம் ஐந்து சந்தேக நபர்களுக்கு நிபந்தனைகளுடன் பிணை வழங்கியிருக்கின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்த ஐந்து பேரையும் கிளிநொச்சி நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தது. ஒன்பது மாதங்களாக விளக்கமறியலில் இருந்து வரும் இவர்களைப் பிணையில் விட வேண்டும் எனக்கோரி யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவைப் பரிசீலனை செய்து, இரு தரப்பு வாதங்க…
-
- 0 replies
- 639 views
-
-
எங்கு பார்த்தாலும் வரிசை, எப்பொருளை எடுத்தாலும் விலையேற்றம், எதற்கெடுத்தாலும் தட்டுப்பாடு என இலங்கை அதளபாதாளத்தில் விழுந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைக் கட்டுக்குள்கொண்டுவருவதற்குப் புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் தேவை என்பதைத் தெற்கின் அரசியல்வாதிகள் பலரும் கூறிவருகின்றனர். இந்தக் கோரிக்கைகளுக்குப் புலம்பெயர் தமிழர்கள் சாதகமாக சிந்திக்க முடியுமா? நாட்டின் அவசரநிலை கருதி ஏதாவதொருவகையில் புலம்பெயர் தமிழர்கள் உதவலாமா என்பது குறித்த உரையாடல்கள் ஆங்காங்கே இடம்பெற்றும்வருகின்றன. இந்தப் பத்தியும் அதற்கான பதிலைத் தேட விளைகின்றது. புலம்பெயர்க்கும் பொறி இலங்கை 1948ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்த பின்னர் தமிழர்கள் இந்நாட்டை விட்டு வ…
-
- 1 reply
- 448 views
-
-
பொறிக்குள் சிக்கியுள்ள கோத்தபாய!! பதிவேற்றிய காலம்: Apr 20, 2019 போரை வழி நடத்தியவர் என்ற வகையில் போர்க் குற்றங்களுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலரான கோத்தபாயவே பொறுப்புக் கூற வேண்டுமெனப் பன்னாட்டு சட்ட நிபுணரான ஸ்கொட் கில்மோர் தெரிவித்துள்ளமை பன்னாட்டு அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. இறுதிப்போரின் போதும் அதன் பின்னரும் இலங்கையில் போர்க் குற்றங்களே இடம்பெறவில்லையெனக் கூறப்பட்டு வரும் நிலையில் போர்க் குற்றம் தொடர்பான இந்தக் கருத்து வௌியாகியுள்ளது. பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு இறுதிப் போரின் போதும் அதன் பின்னரும் படையினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் பாதிக்கப்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
பொறியாக மாறிய ஜெனீவா -எம்.எஸ்.எம். ஐயூப் ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக, இம்மாதம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் பிரேரணையை, எதிர்கொள்ளும் வகையில், சில நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகின்றது. அதில் ஓர் அம்சமாகவே, மனித உரிமை விடயங்களில் கடந்த காலங்களில் இயங்கி வந்த ஆணைக்குழுக்கள், ஏனைய குழுக்களின் பரிந்துரைகளைப் பரிசீலித்து, நடவடிக்கை எடுப்பதற்காக, ஜனவரி மாதம் 22 ஆம் திகதி மற்றோர் ஆணைக்குழுவை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்தார். http://static2.tamilmirror.lk/assets/uploads/image_0f34a25312.jpgஇது, மனித உரிமைகள் பேரவையின் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாயினு…
-
- 0 replies
- 667 views
-
-
பொறுக்கிகளுக்கு போராளிகளின் சாயம் பூசப்படுகிறது: வாள்வெட்டு குண்டர் குழுக்களும் கதாநாயக பிம்பமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த குண்டர் குழுவொன்று, இரு பொலிஸாரை வாள்களினால் வெட்டியிருக்கின்றது. தாக்குதலுக்குள்ளான பொலிஸாரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமானது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, தாக்குதல்தாரிகளைக் கைது செய்வதற்காக, இராணுவம் உள்ளிட்ட முப்படையின் ஒத்துழைப்போடு, தேடுதல் வேட்டை நடத்தப்படும் என்று அறிவித்திருக்கின்றார். கடந்த சில வ…
-
- 3 replies
- 577 views
-
-
பொறுப்புக்கூறல் முன்னுள்ள சவால் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் கடந்தவாரம் ஒரு வழக்கு நடந்தது. யாழ். நகரில் பொது இடத்தில், மதுபோதையில் குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் மூன்று பேரை கைது செய்து நீதிவான் முன்பாக நிறுத்தியிருந்தனர் பொலிஸ் அதிகாரிகள். மன்றில் நிறுத்தப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரம் வாசித்துக் காட்டப்பட்ட போது, அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள். நீதிவானும் உடனடியாக, ஆளுக்கு தலா 5 ரூபா தண்டப்பணம் செலுத்தி விட்டுச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டார். இதனை விட ஒரு வலுவான தண்டனையை பெற்றுக் கொடுக்கும் வாய்ப்பை, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளான பொலிஸார் தவற வ…
-
- 0 replies
- 522 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-01#page-17
-
- 0 replies
- 524 views
-
-
பொறுப்பு கூறலின் அவசியம் பொறுப்பு கூறலின் அவசியம் -பி.மாணிக்கவாசகம் பொறுப்பு கூறலின் அவசியம் -பி.மாணிக்கவாசகம் மனித உரிமை மீறல்களுக்கு, பொறுப்பு கூறலுக்கான செயற்பாடுகளில் போதிய முன்னேற்றம் காணப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ள ஐநா மன்றத்தின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிவ் அதனால் ஏற்படக் கூடிய ஆபத்தான நிலைமைகள் குறித்து இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது இலங்கையின் எதிர்காலம் பற்றிய பாரதூரமான விடயமாக நோக்கப்படுகின்றது. பொறுப்புக்கூறலின் முக்கிய அம்சமாக நிலைமாறுகால நீதிக்கான செயற்பாடுகள் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மோசமான நீண்…
-
- 0 replies
- 682 views
-
-
பொறுப்பு கூறலில் பொறுப்பு உள்ளவர்களின் பொறுப்பில்லாத போக்கு - காரை துர்க்கா பயங்கரவாதிகளின் கோரப் பிடியில் சிக்கி தவிக்கும் அப்பாவித் தமிழ் மக்களை மீட்டெடுக்கும் ஒரு புனித யுத்தமே நடைபெறுவதாக வன்னி, முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்துக்கு முகவுரை கொடுத்தனர் கடந்த ஆட்சியாளர்கள். பல வழிகளிலும் ஒன்று திரட்டப்பட்ட அசுர பலம் கொண்டும் பல நாடுகளது நேரடியானதும் மறைமுகமானதுமான ஒத்தழைப்புடனும் தமிழ் மக்களது இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்துக்கு 18.05.2009 இல் முடிவுரையும் எழுதினர் கடந்த ஆட்சியாளர்கள். ஆனால், அவ்வாறு நடைபெற்ற இறுதிப் போரில் மனித குலத்துக்கு தீங்கு இழைக்கக் கூடிய பல போர்க் குற்றங்கள் இடம் பெற்றுள்ளன என்ற குற்றச்சாட்…
-
- 0 replies
- 331 views
-
-
பொறுப்பு நிறைவேற்றப்படுமா? ஜனநாயகம் நிலைநிறுத்தப்படும், ஊழல் ஒழிக்கப்படும் என்பதே நல்லாட்சி அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கைகளாகும். அந்த வகையில் ஜனாதிபதி ஆட்சி முறையில் ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரங்கள் இல்லாதொழிக்கப்பட்டு, பாரா ளுமன்றம் சார்ந்து பிரதமருக்கு வழங்கப்படும். தேர்தல் முறைமை மாற்றியமைக்கப்படும். இதற்காக நாட்டில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்பது நல்லாட்சி அரசாங்கத்தினால் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியாகும். இதன் அடிப்படையிலேயே மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்து, ஆணை வழங்கினார்கள். இது பொதுவானது. போர்க்குற்றங்கள் தொடர்பான நிவா…
-
- 0 replies
- 345 views
-
-
பொறுப்புக் கூறலுக்கு நம்பகத்தன்மை வேண்டும் தற்போது ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவையில் 37ஆவது கூட்டத்தொடர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வழமையாகவே பயங்கரவாதிகளுடனான தார்மீக யுத்தம் எனக் கூறிவந்த அரசு இப்போது அவ்விதம் கூறமுடியாத நிலையில் இருக்கிறது. காரணம் அகிம்சையோடு நிராயுதபாணிகளாக அண்டி, ஒன்றாகக்கலந்து வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாகக் கணிக்கப்பட்டுத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். மகிந்தவின் ஆட்சிக்கால இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட இச்செய்கை, மைத்திரி ஆட்சிக்கு வந்தது முதல் இற்றைவரை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. எந்த பாதுகாப்பும் இல்லை. போர்க்குற்றத்தை ஏற்றுக்க…
-
- 0 replies
- 360 views
-
-
பொறுப்புக் கூறலில் தவறியுள்ள அரசாங்கம் இலங்கையின் பொறுப்புக் கூறுதல் தொடர்பாக உரிய நீதிப் பொறிமுறைக ைள உருவாக்கிச் செயற்படாவிட்டால், சர்வதேச நீதிமன்றம் ஒன்றை அமைப்பது குறித்து ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள் சிந்திக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை பிரதி ஆணையாளர் கேட் கில்மோர் அம்மையார் கோரியிருக்கின்றார். இது, அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மனித உரிமைப் பேரவையின் பிரேரணையை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அடைந்துள்ள கடும் அதிருப்தியின் வெளிப்பாடாகும். இலங்கை தொடர்பாக ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அடுத்த அறிக்கை வர…
-
- 0 replies
- 339 views
-
-
பொறுப்புக் கூறலும் அபிவிருத்தி அரசியலும் உரிமை அரசியல் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுமா அல்லது அபிவிருத்தி அரசியலின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுமா என்று இப்போது சிந்திக்க வேண்டிய தேவை எழுந்திருக்கின்றது. கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக இனப்பிரச்சினை இந்த நாட்டை உலுக்கி எடுத்து வருகின்றது. கூடவே அபிவிருத்தி தொடர்பான பிரச்சினையும் தமிழ் மக்களைப் பல்வேறு வழிகளில் வாட்டிக்கொண்டிருக்கின்றது. இனப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே அகிம்சை ரீதியிலும், ஆயுதமேந்திய வழிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன. மென்முறையிலும், வன்முறையிலும் மேற்கொள்ளப்பட்ட தமிழர் தரப்பின் வலிமையான போராட்டங்களினால், அரசுகள் பெரும் நெருக்கடிகள…
-
- 1 reply
- 511 views
-
-
பொறுப்புக் கூறல் சாத்தியமா? பி.மாணிக்கவாசகம்… January 19, 2019 மனித உரிமை மீறல்களுக்கு அரசாங்கம் எவ்வாறு பொறுப்பு கூறப் போகின்றது என்பது, பிறந்துள்ள புதிய ஆண்டில் எழுந்துள்ள பல்வேறு கேள்விகளில், அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டிய அவசியத் தேவையைக் கொண்டுள்ள தமிழர் தரப்பு அரசியலிலும் கூர்மையான விடயமாகக் கருதப்படுகின்றது. மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநாவின் மனி;த உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை விவகாரம் முன்னெப்போதும் இல்லாத அளவில் சூடு பிடித்திருக்கும் என்பதே இதற்கான காரணமாகும். யுத்தம் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாகின்றது. ஆனால், யுத்தகாலத்தில்; குறிப்பாக இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இ…
-
- 0 replies
- 906 views
-
-
பொறுப்புக்கூறலில் இரட்டை வேடம் - கே.சஞ்சயன் ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் செயிட் ராட் அல் ஹுஸைன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையின் முற்கூட்டிய பிரதி, கடந்த மூன்றாம் திகதி வெளியிடப்பட்டது. இதற்குப் பின்னர் கலப்பு விசாரணைப் பொறிமுறையை நிராகரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இருவேறு கோணங்களில் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கையில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், இதற்கு ஏ…
-
- 1 reply
- 342 views
-
-
பொறுப்புக்கூறலுக்கு அப்பால்: இலங்கையில் கூடி வாழ்வதற்கான போராட்டம் - அகிலன் கதிர்காமர் மற்றும் மகேந்திரன் திருவரங்கன் இலங்கையின் உள்நாட்டுப் போர் 2009 மே மாதத்தில் முடிவடைந்தது. போரின் கடைசிக் கட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட பெருமளவிலான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதிலிருந்து அரசாங்கம் தவறியமையினை நாட்டின் மிகவும் பிரதானமான பிரச்சினையாகப் பார்க்கும் தன்மை பல ஆண்டுகளாகவே, பல செயற்பாட்டாளர்களிடமும் காணப்பட்டது. சக்திவாய்ந்த நாடுகள், சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்புக்கள், தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் பிரிவினர் ஆகியோருடன் இணைந்து சில அரசசார்பற்ற அமைப்புக்கள் (என் ஜி ஒ க்கள்) மற்றும் நாட்டில் இருக்கும் சில துணிவுமிக்க செயல்முனைவர்கள் ஆகியோர் சர்வாதிக…
-
- 0 replies
- 399 views
-
-
பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே யார் கொண்டு போவது? எப்படிக் கொண்டு போவது? நிலாந்தன். மற்றொரு ஜெனிவா கூட்டத்தொடர் கடந்து போகிறது. ஐநா மன்றம் மீண்டும் ஒரு தடவை உக்ரைனில் தனது கையாலாகாத்தனத்தை நிரூபித்துக் கொண்டிருக்கும் ஓர் உலகச் சூழலில், மற்றொரு ஜெனிவா கூட்டத்தொடர் நம்மை கடந்து போகின்றது.கடந்த மார்ச் மாத கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்படட விடயங்களில் எத்தனை கடந்த ஓராண்டுகாலப் பகுதிக்குள் நிறைவேற்றப்பட்டுள்ளன? அவ்வாறு நிறைவேற்றுவதற்கு போதுமான நிதி இந்த ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு ஒதுக்கப்படவில்லை என்ற தொனிப்பட மனித உரிமைகள் ஆணையரின் இவ்வாண்டுக்கான இலங்கை தொடர்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி மேற்படி நடவடிக்…
-
- 0 replies
- 444 views
-
-
பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதில் தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை காரணிகள் October 22, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — திருகோணமலை கடற்கரையில் 2006 ஜனவரி 2 ஆம் திகதி விசேட அதிரடிப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களில் ஒருவரான ரஜிஹரின் தந்தையார் வைத்தியக் கலாநிதி காசிப்பிள்ளை மனோகரன் செப்டெம்பர் பிற்பகுதியில் லண்டனில் காலமானார். மகனின் கொலைக்கு நீதி கோரி தனது இறுதிமூச்சு வரை போராடிய அவரையும் இதுவரையில் நீதி மறுக்கப்பட்ட சகலரையும் நினைவுகூருவதற்கு ‘மக்கள் செயல்’ என்ற அமைப்பு அக்டோபர் 6 ஆம் திகதி ‘கானல் நீதி’ என்ற தொனிப் பொருளில் யாழ்நகரில் தந்தை செல்வா கலையரங்கில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்வில் உரையா…
-
-
- 1 reply
- 199 views
-
-
பொறுப்புக்கூறாமைக்கு யார் பொறுப்பு? நிலாந்தன். 53வது ஐநா மனிதஉரிமைகள் கூட்டத்தொடர் கடந்த 19ஆம் திகதி தொடங்கியிருக்கிறது. இதில் இலங்கை தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய்மூல அறிக்கை வாசிக்கப்பட்டுள்ளது.அதில் பொறுப்புக் கூறல் தொடர்பாக அழுத்தமான கருத்துக்கள் உண்டு. பொறுப்பு கூறல் எனப்படுவது இறந்த காலத்திற்கு பொறுப்பு கூறுவது. இறந்த காலத்தில் நடந்த குற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறுவது. அக்குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும் நிவாரணத்தையும் வழங்குவது. அவ்வாறு நீதியை நிலை நாட்டுவதன்மூலம் சமாதானத்தை,நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பது. இதை ஐநாவின் வார்த்தைகளில் சொன்னால் நிலைமாறு கால நீதியை ஸ்தாபிப்பது. ஐநாவின் முப்பதின் கீழ் ஒன்று தீர்மானம் 2015 ஆம் ஆண்…
-
- 0 replies
- 333 views
-
-
பொறுப்பை உணர்வதும் முக்கியம் லக்ஸ்மன் மக்கள் கிளர்ச்சி அடிப்படைவாதத்தின் பாலான ஒன்றாக மாறிவிடும் ஆபத்து இலங்கைக்கு ஏற்பட்டிருக்கிறது. மக்களை அடிப்படைவாதம், அதன் கட்டுக்குள் வைத்திருக்கின்ற நிலையானது மிகவும் பாரதூரமான அழிவையே எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்று அனைவரும் அச்சப்பட வேண்டியதே இதற்குண்டான பிரதிபலனாக இருக்கப்போகிறது. கடந்த காலங்களின் பிழையான தீர்மானங்கள், விட்டுக் கொடுப்பின்மை, உரிமைகளை கௌரவிக்காமை, மதிப்பளிக்காமை காரணமாக, நாட்டில் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினையானது தீர்வுக்கு உட்படுத்தப்படாமலேயே காலங்கடத்துகின்ற ஒரு பாரதூரமான விடயமாக இருந்துவருகிறது. உரிமைகள் மீறப்படுவதானது, தாம் செய்த பிழைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழியா…
-
- 0 replies
- 524 views
-
-
பொறுப்பை மறந்தால் முழு நாட்டையும் வைரஸ் தாக்கும் எம்.எஸ்.எம். ஐயூப் கொவிட்-19 எனப்படும், தற்போது உலகை உலுக்கும் நோயின் மரண வீதம், ஆபிரிக்காக் கண்டத்தின் சில நாடுகளில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பரவிய, ‘எபோலா’ எனப்படும் நோயின் மரண வீதத்தைப் பார்க்கிலும், மிகவும் குறைவானதாகும். ‘எபோலா’ தொற்றியவர்களில் 50 சதவீதம் முதல் 90 சதவீதமானவர்கள் உயிரிழந்தார்கள். ஆனால், ‘கொவிட்-19’ தொற்றிவர்களில் மூன்று சதவீதமானவர்களே மரணமடைகின்றனர். ஆனால், ‘கொவிட்-19’ பரவும் வேகத்தைப் பார்க்கிலும், உலகளாவிய ரீதியில், அதைப் பற்றிய பீதி பரவும் வேகம், மிகவும் அதிக…
-
- 0 replies
- 731 views
-