Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. [size=2][/size] ராஜபட்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ஆட்டோ ஓட்டும் விஜயராஜ் தீக்குளித்து இறந்ததாக செய்திகள் வருகின்றன... தோழர் லெனின் சொல்லுவார்: "உழைக்கும் மக்களில் பத்தில் ஒன்பது பேர் அறிவுதான் அவர்களுடைய விடுதலைப் போராட்டத்தின் ஆயுதம். அதிலிருந்து கற்றுக் கொள்ளப்படும் தோல்விகள், தவறுகளில் இருந்து நமது அனுபவம்தான் படிப்பினை பெற்று போராட்ட களத்தின் யுக்திகளை திருத்தி மாற்றி அமைக்கிறது . எனவே உரிமை போராட்டங்களில் புரட்சி சிந்தனையை உருவாக்க மக்களிடம் புத்திசாலித்தனமான, விவேகமான, வெற்றிகரமான சிந்தனை ஓட்டத்தை ஏற்படுத்த வேண்டுமானால் அரசியல் கற்பது அவசியம். போராட்ட யுக்திகளை அறிந்து கொள்வது அவசியம். எனவே கற்போம் அதை மக்களிடம் கற்ப…

  2. போராட்டங்களால் பறிபோகும் உரிமைகள் தொழிற்சங்கப் போராட்டங்கள் எதிர் பொதுமக்களின் உரிமைகள்: இம்மாதம் 11ஆம் திகதி மாலை, ரயில் சாரதிகள் திடீரென வேலைநிறுத்தம் செய்தனர். ரயில் நிலையங்களில் ஒரே குழப்பமாக இருந்தது. பல்லாயிரக்கணக்கான ரயில் பிரயாணிகள், செய்வதறியாது திகைத்து நின்றனர். இந்த நிலையில், பிரயாணிகளுக்கும் ரயில் சாரதிகளுக்கும் இடையில், கைகலப்பு ஏற்படும் நிலை ஏற்படவே, கொழும்பு ரயில் நிலையத்துக்கு, பொலிஸார் அழைக்கப்பட்டனர். இந்த நிலையில், ஒரு சாரதியை, வெறிகொண்ட பிரயாணிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக, பொலிஸ் அதிகாரி ஒருவர், தமது பாதுகாப்பைப் பற்றியும் சிந்திக்காது செயற்படும் புகைப்படமொன்று, பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. பஸ்…

  3. போராட்டங்களின் சாதிப்பு லக்ஸ்மன் உரிமைகளை அடைந்து கொள்வதற்கு போராட்டங்களை நடத்துவது நமது நாட்டில் மாத்திரமல்ல வளர்ச்சியடைந்த நாடுகளிலும் சாதாரணமாகனதாகவே இருக்கிறது. அது தொழிலாளர்களின் தொழில் உரிமைக்கானது. அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயல்வது. சமூகங்கள் தங்களது உரிமைக்காக நடத்துவது. தனிப்பட்டவர்கள், நிறுவனம் சார்ந்தவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலவகையான போராட்டங்கள் நடந்துவருகின்றன. போராட்டம் என்பது சமூக, அரசியல், இனம், பொருளாதாரம் போன்ற உரிமை மறுப்புகள், வன்முறை, அதிகார கட்டுப்படுத்தல்கள், சுரண்டல்கள் போன்ற அநீதிகளைகளுக்கு எதிராக தனியாகவும் கூட்டாகவும் நடத்தப்படுவது வழமையாகும். தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக போராட்டங்க…

  4. போராட்டங்களுக்கும் தமிழ் மக்களுக்குமான இடைவெளி? புருஜோத்தமன் தங்கமயில் / 2019 செப்டெம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 07:03 மூன்றாவது எழுக தமிழ்ப் போராட்டத்தில், மக்களைப் பங்கெடுக்கக் கோரும் பத்திரிகை விளம்பரங்கள், கடந்த வாரம் வெளியாகியிருந்தன. எதிர்வரும் 16ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம் முற்றவெளியை நோக்கி தமிழ் மக்கள் திரள வேண்டும் என்று, அந்த விளம்பரங்கள் கோருகின்றன. அந்த விளம்பரங்களை முன்வைத்து, பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அரசியல் நையாண்டிப் பதிவுகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, மக்கள் எழுச்சிப் போராட்டமொன்றுக்குப் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து, கூட்டம் சேர்க்க வேண்டிய நிலைக்கு, தமிழ் மக்கள் பேரவையும் அதன் இணைச் சக்திகளும் வந…

  5. போராட்டங்கள் ஊடாக பிரசைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல் Prof. Jayadeva Uyangoda on May 24, 2022 May 23, 2022 Photo, Selvaraja Rajasegar காலி முகத்திடல் போராட்டம் தற்போது நிலவும் சூழமைவின் முக்கியத்துவம் என்னவென்றால் ‘முறைமை மாற்றம்’ என தாம் கருதுவது என்ன என்பதனை போராட்டக்காரர்கள் அரசியல் உயர் வகுப்பினர் ஊடாகச் செல்லாது அல்லது அவர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட அரசியல் கட்சிகளின் ஊடாகச் செல்லாது அது பற்றி தாமே மிகத் தெளிவாகப் பேச ஆரம்பித்துள்ளமையாகும். இலங்கையின் இன்றைய பிரச்சினைக்கு மூல காரணமே இந்த இரண்டு சகோதரர்களும்தான். இவர்களே இப்பிரச்சினைக்கான பொறுப…

  6. போராட்டங்கள் மீதான நம்பிக்கையீனங்கள் ஏன்? “...தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை மிக முக்கியமானது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டங்களை நாம் கவனத்தில் எடுக்கின்றோம். ஆனால், அந்தப் போராட்டங்கள் தொடர்பில் எமக்குச் சில ஐயப்பாடுகள் உண்டு. அப்பாவித் தாய்மார்களின் கண்ணீரை, சில தரப்புகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன. இதனால், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில், நாங்கள் சமூக ஊடகங்கள், பிரதான ஊடகங்களில் கருத்து வெளியிடுவதைத் தவிர்த்து வருகிறோம்....” மேற்கண்டவாறு ஐரோப்பிய நாடொன்றின் இலங்கைக்கான தூதுவர், அண்மையில் இடம்பெற்ற தனிப்பட்ட உரையாடலொன்…

  7. போராட்டத்தின் அவசியம் அர­சியல் உரிமை சார்ந்த பிரச்­சி­னைகள் கார­ண­மா­கவே, இந்த நாட்டில் தமிழ் மக்கள் போரா­டு­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டார்கள். போராட்டம் என்­பது அவர்கள் விரும்பி ஏற்­றுக்­கொண்ட ஒரு விட­ய­மல்ல. நாட்டில் உள்ள சக இனத்­த­வர்­க­ளுடன் சம­நி­லை­யி­லான உரி­மை­க­ளோடு, ஐக்­கி­ய­மா­கவும், நல்­லி­ணக்­கத்­து­டனும் வாழ வேண்டும் என்­பதே அவர்­க­ளு­டைய ஆழ் மன விருப்­ப­மாகும். அர­சியல் உரிமை சார்ந்த பிரச்­சி­னை­க­ளா­யி­னும்­சரி, அத­னை­யொட்டி கிளை பரப்­பி­யுள்ள அடிப்­படை உரி­மைகள், அர­சியல் பிரச்­சி­னைகள், அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளா­யி­னும்­சரி, தமிழ் மக்கள் முகம் கொடுத்­துள்ள பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­ப­ட­வில்லை என்­பதே இந்த நாட்ட…

  8. போராட்டத்தின் தாற்பரியத்தை புரிந்துகொள்ளுங்கள் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் கேப்­பாப்­பு­லவு மக்கள் அப­க­ரிக்கப்­பட்ட தமது காணி­களை மீளப் பெற்­றுக்­கொ­டுக்­கு­மாறு வலி­யுறுத்தி போராட்­டங்­களை நடத்திவரு­கின்­ற­ போ­திலும் அர­சாங்கம் அது தொடர்பில் அக்­கறை கொள்­வ­தாக தெரி­ய­வில்லை. குறிப்­பாக இந்த மக்கள் தமது நிலங்­களை மீட்­டுத்­த­ரு­மாறு வலி­யு­றுத்தி தொடர் போராட்­டங்­களை நடத்­தி­வ­ரு­கின்­ற ­போதும் அது தொடர்பில் அரசாங்கம் பாரிய கவ­னத்தை செலுத்­து­வதைக் காண­மு­டி­ய­வில்லை. மக்கள் தொடர்ச்­சி­யாக இரவு – பகல் பாராது வெயி­லிலும் பனி­யிலும் தவித்­துக்­கொண்டு போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ள­போ­திலும் பிரச்­சி­னையைத் தீர்க்­க­வேண்­டிய அர­சாங்கம் அதனைக் கவ­ன…

  9. [size=4]இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் தொடர்பாக மனித உரிமைகளை காக்க ஐ.நா. தவறிவிட்டதாக பி.பி.சி. செய்த[/size][size=2][size=4]ி வெளியிட்டுள்ளது. இலங்கையில் 2009 ல் நடந்த இறுதி யுத்தத்தின் போது, நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. அறிக்கை வெளியிட தவறிவிட்டது. என ஐ.நா. வெளியிட்ட ரகசிய அறிக்கையை மேற்கோள் காட்டி பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.[/size][/size] [size=2][size=4][size=5]சிந்திக்கவும்:[/size] ஐ.நா. என்று ஒரு அமைப்பு தேவையா? இதனால் யாருக்கு லாபம். சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, இவைகள் உலகில் வீட்டோ என்கிற சர்வாதிகார அதிகாரம் பெற்ற நாடுகள். இவர்கள் இந்த அதிகாரத்தை தங்களது வல்லாதிக்கத்தை பரவலாக்க பயன்படுத்துகிறார்களே தவிர மற்றபடி இந்…

  10. போராட்டத்தின் மூலம் தீர்வை பெற காத்திருக்கும் மக்கள் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பி­லான தக­வல்­களை வெளி­யிட வேண் டும். அவர்கள் காணாமல் ஆக்­கப்­பட்­ட­மைக்கு பொறுப்பு கூற வேண்டும். தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்ய வேண்டும். பொது ­மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களில் இருந்து படை­யினர் வெளி­யேறி இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள்­கு­டி­யேற வழி செய்ய வேண்டும் என்ற கோரிக்­கை­களை முன்­வைத்து விடுக்­கப்­பட்­டி­ருந்த கடை­ய­டைப்பு அழைப்­புக்குப் பலரும் தமது ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தனர். இத­னை­ய­டுத்து வடக்­கிலும் கிழக்­கிலும் பொது மக்­களின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்தக் கடை­ய­டைப்பு கார­ண­மாக சிவில் வாழ்க்­கையு…

  11. போராளிகளை காட்டி தப்பிக்க முயலும் அரசு “இறுதி மோதல்களின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, போர்க்குற்ற விசாரணைகளை நடத்த வேண்டிய தேவையில்லை. போர்க்குற்ற விசாரணைகளை நடத்த வேண்டியிருந்தால், முன்னாள் போராளிகளையும் விசாரிக்க வேண்டி வரும்” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கான விஜயமொன்றை நேற்று முன்தினம் திங்கட்கிழமை (ஏப்ரல் 03, 2017) மேற்கொண்டிருந்த அவர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு கூறியிருந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் ராஜித சேனாரத்னவுக்கு பக்கத்தில் விடுதலைப் ப…

  12. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து வரவு –- செலவுத்திட்டத்தின் கரிசனை என்ன? போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு சலுகை அளிக்­கப்­ப­ட­வில்லை. போரினால் நிர்க்­க­தி­யான மக்கள் தேசிய ரீதியில் மேற்­கொள்­ளப்­படும் திட்­டங்­க­ளுக்கு உள்­ளேயே உள்­வாங்­கப்­ப­டு­கின்­றனர். இதனை நல்­லாட்சி அர­சாங்­கத்தின் இரண்­டா­வது வரவு–செல­வுத்­திட்­டமும் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. காரணம், போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­களை விசே­ட­மாகப் போசிப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களை வெளிப்­ப­டை­யாக வரவு–செல­வுத்­திட்­டத்தில் சுட்­டிக்­காட்ட முடி­ய­வில்லை. போர் முடி­வ­டைந்து தற்­போது ஏழு ஆண்­டுகள் கடந்­து­விட்ட நிலை­யிலும் வடக்குக் கிழக்கில் யுத்­தத்தின் அவ­லங்கள் நிறை­வ­டைந்தே…

  13. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி என்ற பெயரில் இடம்பெறும் உள்வீட்டு அதிகாரச் சண்டை படம் | Eranga Jayawardena/Associated Press, DHAKA TRIBUNE 2009ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் பாரிய உயிர் அழிவுகள் ஏற்பட்டமைக்குக் காரணமாக அமைந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமை ஆணைக்குழு விசாரிப்பது எனத் தீர்மானித்திருந்தது போரினாலே பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைத்திருக்கக் கூடிய முக்கியமான வெற்றி ஆகும். பாதிக்கப்பட்டவர்களுடைய கௌரவத்தினை உறுதிப்படுத்துவதற்கு உண்மைகள் பயமற்ற முறையிலும், பக்கச்சார்பற்ற வகையிலும் வெளிக்கொண்டுவரப்படல் வேண்டும். அத்துடன், நீதியும், பரிகாரங்களும், மீட்சியும் அவர்களுக்குக் கிடைப்பதற்கு…

  14. போரினை நினைவுகூருதலும் அதன் அரசியல்களும் மகேந்திரன் திருவரங்கன் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில், இலங்கையின் முப்பதாண்டு கால சிவில் யுத்தம் பொது மக்கள், விடுதலைப் போராளிகள், இராணுவத்தினர், அரசியற் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பல தரப்பட்ட, ஆயிரக்கணக்கானோரினைப் பலியெடுத்ததன் பின்னர் ஓய்ந்தது. போரின்போது கொல்லப்பட்ட அனைத்து உயிர்களும் அவர்கள் சார்ந்த குடும்பங்களுக்கும், அரசியல் ரீதியிலான சமூகங்களுக்கும் மிகவும் முக்கியமானவர்கள். மனித உயிர்கள் யாவும் பெறுமதி மிக்கவை. எனவே போர் எமது சமூகங்களிலே விட்டுச் சென்றுள்ள இழப்புக்களை நாம் உணர்வுபூர்வமாக நினைவு கூருகின்ற அதேவேளை, எமது நினைவுகூரற் செயன்முறைகள் மீளவும் ஒரு முறை இவ்வாறான இழப்புக்கள் நேராதபடி எமது சமூகங்களி…

  15. மனித உரிமைகள் கூட்டத் தொடர் தொடங்கவிருக்கும் ஒரு பின்னணியில் யாழ்ப்பாணத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் சில கடந்த வாரம் வரை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. நல்லிணக்கம், நிலைமாறுகாலகட்ட நீதி போன்ற தலைப்புக்களின் கீழ் அவசர அவசரமாக கருத்தரங்குகளும் வகுப்புக்களும் நடாத்தப்பட்டன. இக்கருத்தரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டு வந்த விதம் வேகம் அவற்றின் செறிவு என்பனவற்றைத் தொகுத்துப் பார்த்தால் ஏதோ ஒரு கால எல்லை குறிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட நிதியை எப்படி விரைவாகச் செலவழிக்கலாம். அதற்கு எப்படிக் கணக்குக் காட்டலாம் என்ற அவசரமே தெரிந்தது. அது தான் உண்மை என்று ஐ.என்.ஜி.ஓ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிலைமாறு கால கட்ட நீதி குறித்து சாதாரண சனங்களுக்கு விழிப்பூட்டுமாறு ஐ.நா. ஒரு தொ…

    • 0 replies
    • 488 views
  16. போரின் பின்னரான அறம்: பறைதலும் பாடுதலும் மீநிலங்கோ தெய்வேந்திரன் May 23, 2025 | Ezhuna இலங்கையின் சமகாலச் சூழலில் மூன்று விடயங்கள் தவிர்க்கவியலாமல் செல்வாக்குச் செலுத்துகின்றன. முதலாவது மூன்று தசாப்தகால யுத்தம்; இரண்டாவது போரின் முடிவின் பின்னரான இயங்கியல்; மூன்றாவது பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவுகளும். இவை மூன்றும் தன்னளவிலும், இலங்கைச் சமூகத்திலும் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள் அனைத்தும் கவனிக்கப்படவுமில்லை, கருத்தில் கொள்ளப்படவுமில்லை. சமகாலத்தைப் பொருள்கொள்ளல் என்பது வெறுமனே அன்றாடக் கதையாடல்களுக்குரியவற்றுடனோ அல்லது பொதுப்புத்தியில் எப்போதும் நிலைத்திருக்கும் விடயப்பரப்புகளுடனோ மட்டும் நின்றுவிடுவதல்ல. இலங்கைச் சமூகப் படிநிலையில் நலிந்தோரின் கதைகள் சொல்லப்பட வேண்…

  17. போரின் பின்னர் தேசியம் எப்படித் தகர்க்கப்படுகிறது ? : சபா நாவலன் 02/06/2017 இனியொரு... வடக்கும் கிழக்கும் இணைந்த பூர்வீகத் தமிழர்களின் தேசிய நிலம் வடக்கு என்ற எல்லைக்குள் மட்டும் குறுக்கப்பட்டு அதற்கு விக்னேஸ்வரன் என்பவரை நிர்வாகியாக நியமித்து வருடங்கள் கடந்துவிட்டன. வடக்கிலும் கிழக்கிலும் உள்ளூர் உற்பத்திகள் அழிக்கப்பட்டு பல் தேசிய வியாபார நிறுவனங்கள் எந்தத் தடங்கலுமின்றி மக்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. பல் தேசிய நிறுவனங்களில் தங்கியிருக்கும் பல் பொருள் அங்காடிகள் ‘மூலைக் கடைகளை’ப் பிரதியீடு செய்ய ஆரம்பித்துவிட்டன. விவசாயம், மீன்பிடி, தொழிற் துறை என்ற அனைத்தும் மக்களிடமிருந்து பிடுங்கப்படுகின்றன. பெரு நிறுவனங்களுக்குச் சேவையாற்றக்கூடிய சிற…

  18. போரின்போது இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்து செயற்பட்டன! – அருந்ததி ராய் செவ்வி!! 'இலங்கைப் போருக்கு எதிராகப் பேசிய ஒரு சிலரில் நானும் ஒருத்தி. ஆனால், நான் என்ன பேசினேன், என்ன செய்தேன் என்பது அல்ல முக்கியம். நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள்? இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல்! இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து, அங்குள்ள மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசி இருக்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.' இவ்வாறு இந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான அரு…

  19. போர் என்பது முரண்களுக்கான தீர்வின் இறுதிச் செயற்பாடு. மனித சரித்திரத்தில் தீர்க்க முடியாத முரண்கள் போரினாலயே தீர்க்கப்படுள்ளன, தீர்க்கப்பட்டு வருகின்றன. மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து வளங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான போட்டி ஈற்றில் போர்களினாலையே தீர்க்கப்பட்டு வந்துள்ளது. போரை அதன் அடிப்படை மூல காரணியான முரணில் இருந்து பிரித்து , போரினால் ஏற்படும் அழிவுகளை மட்டுமே பேசும் எவரும் , போரின் மனித அவலத்தை மையமாக வைத்து தமது சொந்த அரசியல் இலக்குகளையே நகர்த்துகின்றனர். உலகில் போரின்றி தீர்க்கப்பட்ட முரண்கள் அடிப்படையில் போர் மூளக் கூடும் என்கிற அச்சத்தினாலையே தீர்க்கப்படுள்ளன. இதுவே சமாதான வழிமுறை எனப்படுகிறது. பலஸ்தீனச் சமாதானப் பேச்சுவார்த்தைகள் 'இன்ரபாடா' அல்லது மக்கள் எழுச்ச…

  20. ஒரே நாடு ஒரே தேசம் என்று சொல்லப்படுகின்ற போதிலும் இன ஐக்கியம் பற்றிப் பேசப்படுகின்றபோதிலும், சில போதுகளில் தென்னிலங்கையில் ஒரு உணர்வும் வடக்கில் வேறு விதமான உணர்வும் மேலிடக் காண்கின்றோம்.ஒரு பக்கத்தில் யுத்த வெற்றிக் கொண்டாட்டம் மறுபக்கம் நினைவேந்தலும் கண்ணீர் அஞ்சலியுமாகவே, கடந்த 11 வருடங்களாக மே 18ஆம் திகதிகளை நாம் கடந்து வந்து கொண்டிருக்கின்றோம்.இந்தத் திகதி, அரசாங்கங்களுக்கும் கணிசமான நாட்டு மக்களுக்கும் யுத்தம் என்ற பெரிய துன்பம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட மகிழ்ச்சிகரமான நாளாகவும் பொதுவாக தமிழ் மக்களுக்கு தங்களது விடுதலைப் போராட்டம் ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்ட தினமாகவும் இருக்ககின்றது எனலாம். ஆனால் இரு தரப்பிலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிச்சயமாக அது …

    • 0 replies
    • 643 views
  21. போரில் வாழ்வை தொலைத்தவர்களும் தொலையாத போர் வடுக்களும் - காரை துர்க்கா இலங்கையில் நடைபெற்ற மூன்று தசாப்த காலத்துக்கு மேற்பட்ட, தமிழ் மக்களது விடுதலைக்கான ஆயுதப் போராட்டம், 2009 மே மாதத்துடன் முள்ளிவாய்க்காலில் மௌனம் கண்டது. போரில் தமிழ் மக்கள் சந்தித்த, மேலும் அதன் தொடர்ச்சியாக தற்போதும் அனுபவிக்கின்ற வேதனைகள், வார்த்தைகளில் வடிக்க முடியாதவை; பெரும் கறைகள் படிந்தவை. கொடிய யுத்தத்தில் தம் வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் வாழ்வை இழந்தவர்களாகவே, நடைப்பிணங்களாக நம் தேசத்தில் ஊசலாடுகின்றனர்; உலாவருகின்றார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆயுத மோதலால் தமது கணவனைப் பறிகொடுத்த, ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ்ப் பெண்கள் அன்றாட வாழ்வாத…

  22. போருக்கு பிந்திய அரசியல் என்றால் என்ன? December 6, 2022 ~ கருணாகரன் ~ “போருக்குப் பிந்திய அரசியல் என்று சொல்கிறீர்களே! அது என்ன? அதை எப்படி முன்னெடுப்பது?” என்று என்னுடைய கடந்த வாரங்களில் வெளிவந்த கட்டுரைகளைப் படித்தவர்கள் கேட்கின்றனர். இப்படிக் கேள்வி எழுந்திருப்பதே மகிழ்ச்சிக்குரியது. அதாவது சிலராவது சிந்திக்கத் தயாராக உள்ளனர் என்ற மகிழ்ச்சி. அது என்ன என்று பார்க்க முன், வரலாற்றுப் போக்கில் நிகழ்ந்த சில முன்னுதாரணங்களைப் பார்க்க வேண்டும். அரசியற் சரிகளும் தவறுகளும் வரலாற்றைத் தீர்மானிப்பதில் முக்கியமான பங்கை அளிப்பதால் அதைக்குறித்து பார்க்க வேண்டியது அவசியமாகிறது. 1970 இன் அரசியல் தவறு உண்டாக்கிய விளைவு: 1970 களில் அன்றைய தமிழரசுக்கட…

  23. போருக்குப் பின்னரான அபிவிருத்தியில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு Editorial / 2019 பெப்ரவரி 12 செவ்வாய்க்கிழமை, மு.ப. 12:48 Comments - 0 -இலட்சுமணன் புலம்பெயர் நாடுகளில் செயற்படும் அமைப்புகளில், மக்களை அரசியல் மயப்படுத்துவதற்காகவே இயங்கும் அமைப்புகளும் இருக்கின்றன; அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கென்றே இயங்கும் அமைப்புகளும் இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில், இலங்கையில் தொடர்ந்தும் பிரச்சினை இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டி, ‘திருவிளையாடல்’ பாணியில் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்களும் இருக்கத்தான் செய்கின்றன. யுத்தகாலத்தில் யுத்தத்துக்கென நிதிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருந்த புலம்பெயர் …

  24. காலம் காலமாக ஆளும் இலங்கை அரசுகளுடன் தமிழர் தரப்புக்கள் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றனர். தந்தை செல்வா முதல் சம்பந்தன் வரை தமிழர்களின் தரப்புக்களாக நின்று நடத்தி வரும் அத்தனை பேச்சுக்களிலும் இலங்கை அரசுகள் ஏமாற்று நாடகத்தை மாத்திரமே அரங்கேற்றி வருகின்றன. அவை தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன. காலம் தோறும் தமிழ்த் தரப்புக்கள் ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுரிமையை அடிப்படையாகக் கொண்டு நடத்தி வரும் பேச்சுக்களை பேரினவாத ஒடுக்குமுறை அரசியலால் அரச தரப்புக்கள் அணுகி வருகின்றன. இலங்கையை சிங்களக் கட்சிகள் ஒவ்வொன்றும் மாறி மாறி ஆண்ட பொழுதும் தமிழர் தரப்புக்களை அவை ஏமாற்றுவதில் அல்லது தோல்வியுறச் செய்வதில் ஒரே கொள்கைகையும் வெளிப்பாட்டையும் காட்டி வருகின்றன. தமிழர் தரப்புக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.