அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
2015இலங்கை ஜனாதிபதி தேர்தல் குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் தொடரும் இந்த வேளையில் இலங்கையில் இருந்து யாதவன் நந்தகுமாரன் இந்தப் பதிவை அனுப்பி வைத்துள்ளார்.... நீங்களும் இந்த விவாதத்தை முன்கொண்டு செல்ல முடியும்... ஆரோக்கியமான முன்னர் வெளியாகாத புதிய பதிவுகளை அனுப்பிவைத்தால் பிரசுரிக்கப்படும்... ஆ.ர் அன்புடையீர் குளோபல் தமிழுக்காக எழுதப்பட்டது பிரசுரித்து உதவுக நன்றி. யாதவன் நந்தகுமாரன். இலங்கையில் சனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ் அரசியற் பரப்பிலும் ஊடகப் பரப்பிலும் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ் அரசியற் பிரமுகர்கள் முதல் சிவில் சமூகத்தவர்கள் வரை இரு வேட்பாளர்களையும் ஒரே தராசினில் வைத்து இனவாத சிந்தனையில் தமிழர்களுக்கு எந்…
-
- 1 reply
- 678 views
-
-
மைத்திரிக்கு வாக்களிக்குமாறு எவ்வாறு கோரமுடியும்? by Maatram தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இதுவரை வாய்திறக்காத, பொதுவேட்பாளராகியும் இன்னும் திறவாத, தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட தமிழர் தொடர்பாக எதுவும் குறிப்பிடாத, தமிழர்களை வேண்டப்படாதவர்களாக – விரோதிகளாக எண்ணும் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என எவ்வாறு கோர முடியும் என கேள்வி எழுப்புகிறார் சட்டத்தரணி வி. புவிதரன். இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்குவதை விடுத்து தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளையாவது தன்னால் வழங்க முடியும் என மைத்திரியால் உறுதியளிக்க முடியுமா என மேலும் அவர் கேள்வி எழுப்புகிறார். ‘மாற்றம்’ தளத்துக்கு வழங்கிய நேர்க்காணலின் போதே மேற்கண்டவாறு கூறினார். அ…
-
- 1 reply
- 726 views
-
-
ஈழத் தமிழர் மனசாட்சியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்ச, மூன்றாவது முறையாக இலங்கையின் ஜனாதிபதியாகத் துடிக்கிறார். அதற்காக சட்டத்தையே வளைத்துவிட்டார். 'செருப்பு ஆண்ட நாடு இது, எவன் ஆண்டால் என்ன?’ என தந்தை பெரியார் ஒருமுறை கேட்டார். மக்களும் மக்களாட்சித் தத்துவமும் மரணக் குழிக்குள் தள்ளப்பட்டுவிட்ட இலங்கையில், ஜனவரி 8-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருப்பதை நினைக்கும் போது இதுதான் நினைவுக்கு வருகிறது. ஈழத் தமிழர் மனசாட்சியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்ச, மூன்றாவது முறையாக இலங்கையின் ஜனாதிபதியாகத் துடிக்கிறார். அதற்காக சட்டத்தையே வளைத்துவிட்டார். இலங்கையின் அரசியல் அமைப்புச…
-
- 0 replies
- 589 views
-
-
எதிரணியுடன் எந்தவித ஒப்பந்தத்தையும் செய்து கொள்ளவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சம்பந்தன் பதிலளித்தார். சம்பந்தன் எம்.பியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவரது பதில்களும் வருமாறு:- கேள்வி: இரு தரப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தையும் நீங்கள் தீவரமாக ஆய்ந்ததாக கூறினீர்கள். மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 13 பற்றி குறிப்பிடப்படவில்லை. இது குறித்து உங்களது கருத்து என்ன? பதில்: அதன் உள்ளடக்கம் குறித்து நாம் பார்த்தோம். தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது விடயத்தை எதிர்பார்ப்பது சாத்தியமில்லை. கடந்த 10 வருடமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ந…
-
- 0 replies
- 544 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் 2015 இல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயமாக ‘பொதுவேட்பாளர்’ என்ற விடயம் இருந்தது. எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே, அல்லது எதிர்பார்த்ததற்கும் மேலாக பிரமாண்டமான ஒரு பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேனா களமிறக்கப்பட்டார். ஆளும் கட்சியிலிருந்தான அவரின் எதிரணித் தாவலுடன் ‘கட்சித்தாவல்’ என்ற ஒரு விடயம் இம்முறை தேர்தலில் முக்கியம் வாய்ந்ததாக மாறியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பான உத்தியோகபூர்வ பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 20.11.2014 அன்று கைச்சாத்திட்டார். அன்றைய தினமே வசந்த சேனநாயக்க எம்.பி. கட்சி தாவினார். கடந்த 22ஆம் திகதி அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கட்சி தாவல் வரை அது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. ஆளும், எதிர்த்தரப்புகளில…
-
- 0 replies
- 607 views
-
-
இந்திய அமைதிப்படையை நியாயப்படுத்தும் ஜெயமோகனிற்கு இலக்கிய தேட்ட விருது!!! ஒரு படைப்பு என்பது எப்பொழுதும் மக்களிற்கானது. மக்கள் பக்கம் இருந்து எழுதும் படைப்பாளியின் எழுத்துகள் மக்கள் விரோத கருத்துக்களை அம்பலப்படுத்தும். பொய்களை தோலுரிக்கும். நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், கத்தோலிக்க திருச்சபை என்பவற்றை எதிர்த்துப் போரிட்டன மாக்சிம் கோர்க்கியின் எழுத்துக்கள். அதனால் தான் அவரின் "தாய்" இன்றைக்கும் இலட்சக்கணக்கானவர்களால் வாசிக்கப்படுகிறது. "தாயை" படிப்பவர்களின் மனதில் புரட்சித்தீயை அவரின் கருத்துகள் ஏற்றி விடுகின்றன. "வால்காவில் இருந்து கங்கை வரை" என்று இராகுல சங்கிருத்தியன் எழுதியவைகள் புராணப்பொய்களை சின்னாபின்னமாக உடைத்து மக்கள் வரலாற்றை உண்மையின் வெளிச்…
-
- 0 replies
- 939 views
-
-
I இரு பெரும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அப்பால் ஈழப்பிரச்சினை குறித்து நிறைய எழுதி வந்திருக்கிற, மாவோகால சீனசார்பு கொண்ட மார்க்சியரான எஸ்.வி.ராஜதுரை தொடர்ந்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடையதும் ஈழம் தொடர்பான பாரா முகங்களைக் கடுமையாக விமர்சித்து வந்தவர். ஈழம் தொடர்பாக அவர் எழுதி வந்த எழுத்துக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்துக் கடுமையான விமர்சனங்களையே கொண்டிருந்தன. தனித் தமிழீழத்தை அவர்கள் அங்கீகரிக்காதது குறித்து தனது கடுமையான விமர்சனங்களை ராஜதுரை தொடர்ந்து முன்வைத்து வந்திருக்கிறார். திருநாவுக்கரசு மற்றும் சேரன் போன்றோர் எழுதிய ஈழப் போராட்டம் குறித்த அரசியல் மற்றும் கவிதை நூல்களைத் தமிழகத்ததில் எஸ்.வி.ராஜதுரைதான் பதிப்பித்தார். மனித உரிமைப் பிரச்சினையினாலும் இன்னபி…
-
- 0 replies
- 792 views
-
-
கொந்தளிக்கும் சமுத்திரம். ஒரு படகு. படகிலே ஒரு தாயும் மகனும் தனியே. நீண்டநாட்களாக தட்டித்தடுமாறி அந்தப்படகிலே பயணிக்கிறார்கள். இன்னமும் எவ்வளவுதூரம் ஓடவேண்டுமோ தெரியாது. தாயும் களைத்துவிட்டாள். மகனுக்கும் ஓடி ஓடிக் களைத்துப்போய்விட்டது. வந்த வழியும் தெரியவில்லை. இன்னமும் எவ்வளவுதூரம், எங்கே போகப்போகிறோம் என்கின்ற எந்த இழவும் அந்தச்சிறுவனுக்கு புரியவில்லை. நாட்கணக்குகளாகவிருந்த காத்திருப்பு, மாதங்களாகி வருடங்களாகிவிட்டன. பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் காலையில் படகிலே தூக்கம் கலைந்து எழுந்தபோது, தூரத்தே இரண்டு பெரும் மலைப்பாறைகளை சிறுவன் காண்கிறான். தாய் ஏற்கனவே அந்த இரண்டு பாறைகளையும் வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்கிறாள். “அப்பாடி .. ஒருமாதிரி தரையைக் கண்ட…
-
- 0 replies
- 982 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் தற்போதைய சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க, கடந்த 23ஆம் திகதி விசித்திரமானதோர் கண்டுபிடிப்பை வெளியிட்டார். ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் இரகசிய ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதே அந்த கண்டுபிடிப்பாகும். அன்றே, அத்தநாயக்கவின் கண்டுபிடிப்பைப் பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தேர்தல் பிரசார கூட்டமொன்றின் போது தெரிவித்தார். அவர்கள் கூறும் அந்த ஒப்பந்தத்தின் படி, வடக்கில் நிறுத்தப்பட்டுள்ள படை வீரர்களின் தொகை அரைவாசியால் குறைக்கப்படும். வடக்கில் உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படும். போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். அரச…
-
- 0 replies
- 449 views
-
-
“பிள்ளையான் என்னை கொல்ல விரட்டிக்கொண்டு வந்தார்.... தமிழ் தேசிய முன்னணி மூலம் எனக்கு கொலை அச்சுறுத்தல் இருக்கிறது” இப்படி கூறியிருப்பவர் அம்பிடியே சுமனரதன தேரோ என்கிற பௌத்த பிக்கு. இவர் சமீப காலமாக சிங்கள ஊடகங்களில் ஒரு சிங்கள ஹீரோவாக ஆக்கப்பட்டுள்ளார். கடந்த 19 அன்று மட்டகளப்பில் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்காக ஜனாதிபதி மகிந்த சென்றிருந்தபோது சுமனரதன தேரோ சிங்களவர்களை அழைத்துக் கொண்டு சென்று கூட்டம் நடந்த இடத்துக்கு வெளியில் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க போலீசார் எடுத்த முயற்சி இறுதியில் கைகலப்பில் முடிந்தது. ஆர்ப்பாட்டாத்தில் ஈடுபட்ட ஒருவரை கட்டுபடுத்த எடுத்த முயற்சியில் அவரது உள்ளாடைகள் களைந்தது. இவை அனைத்தையும் வீடியோ எடுக்கும்படி …
-
- 0 replies
- 670 views
-
-
அது இப்பொழுதுதான் நடந்தது போல இருக்கின்றது. 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் திகதி அதிகாலை 1.20 மணியளவில் கிறிஸ்மஸ் ஆராதனையின் பொழுது திரு.பரராஜசிங்கம் அவர்கள் படுகொலைசெய்யப்பட்டபொழுது மட்டக்களப்பு மரியாள் இணைப் பேராலயத்தில் நானும் இருந்தேன். திருமலை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களிடம் பலிப்பீடத்தில் தேவநற்கருனையைப் பெற்றுக்கொண்டு திரும்பிய பொழுதுதான் அவர் மீதான துப்பாக்கி வேட்டுக்கள் சரமாரியாகத் தீர்க்கப்பட்டன. அந்த இடத்திலேயே அவர் சுருண்டு வீழ்ந்தார். ஒன்பது துப்பாக்கி வேட்டுக்கள் அவர் மீது பாய்ந்திருந்தன. அவரது துணைவியாரான திருமதி சுகுணம் ஜோசப் அவர்கள் மீது நான்கு துப்பாக்கி வேட்டுக்கள் பாய்ந்திருந்தன. இரத்த வெள்ளத்தில் க…
-
- 0 replies
- 833 views
-
-
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது யார்? : சபா நாவலன் உலகில் எங்கெல்லாம் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கான தேர்தல் நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் புதிய உற்சாகம் ஆரம்பித்துவிடும். மாற்றத்திற்கான கனவுகளுடன் சாரிசாரியாகத் தேர்தல் கூட்டங்களுக்குச் செல்லும் மக்கள் எதிர்ப்படும் ஐந்து வருடங்களுக்கு மீண்டும் ஏமாற்றப்படுவர்கள். இத் தேர்தல் ஜனநாயகத்திற்குள் தங்களை நுளைத்துக்கொள்ள விரும்புகின்ற ஒவ்வொருவரின் பின்னாலும் பிழைப்புவாத நோக்கங்களைத் தவிர வேறு எதுவும் காணப்பட்டதில்லை. இலங்கையைப் பொறுத்தவரை மக்களின் எதிர்பார்ப்புக்கள் இன்னும் ஆழமானவை. 2005 ஆம் ஆண்டு மிகச் சிறிய தொகையான வாக்குப் வித்தியாசத்தில் மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்ற போது இலங்கையின் ‘மன்னனாக’ மகிந்த உருவெடுப்பார் என …
-
- 0 replies
- 2.6k views
-
-
ஆட்சி அதிகாரத்தில் தக்க வைக்கும் போராட்டத்தில் அழியும் மக்கள் by Dr. S. Jamunanantha படம் | TAMILGUARDIAN இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தல் நிலைமை நிறைவேற்று அதிகாரத்தினை மூன்றாவது தடவைக்கு எடுத்து சர்வாதிகார ஆட்சியினை ஏற்படுத்துவது ஆகும் அல்லது நிறைவேற்று சர்வாதிகாரியினை இல்லாது செய்யும் மாற்றம் ஆகும். இதற்கு உலக நாடுகளில் நிகழ்ந்த உதாரணங்களை மேற்கோள் காட்டுதல் மிகவும் சுலபமாக விளங்கக்கூடியதாக அமையும். நிறைவேற்று சர்வாதிகாரியாக மூன்று தடவையும் தொடர்ந்தவரான பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினன்ட் மார்க்பேகான், 1965 பதவிக்கு வந்து, 1969இல் இரண்டாவது தடவை போட்டியிட்டு வென்று, 1972 மூன்றாவது தடவை இராணுவ ஆட்சியை பிரகடனம் செய்து 1986 வரை ஆண்டு வந்தார். இவரி…
-
- 0 replies
- 418 views
-
-
நோர்வையைஅனுசரணைமுயற்சிக்குஅழைத்ததலைவர்கள் அதனை விமர்சித்து எதிர்ப்பு வெளியிட்டமையும் இன்றையஅரசியல் அவலநிலைமைக்கு பிரதானகாணங்கள். 1958ஆம் ஆண்டுஇனக்கலவரம் முதல் 2009ஆம் ஆண்டுமுள்ளிவாய்கால் வரையான அழிவுகளுக்கும் இனரீதியான வேறுபாடுகளுக்கும் இன்றுவரை தீர்வுகாண தென்பகுதியைi மயமாகக் கொண்ட சிங்கள அரசியல் கட்சிகள் விரும்பவில்லை என்பதைத்தான் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. -அ.நிக்ஸன்- ஏதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பொது எதிரணியின் வேட்பாளராக அல்லது ஐக்கிய தேசியகட்சியின் ஜனாதிபதிவேட்பாளராகநிறுத்தமுடியாமல் போனது ஏன் என்றகேள்வியை அரசியல் விஞ்ஞானமாணவன் ஒருவன் கேட்டான். அதற்குபதிலளித்த விரிவுரையாளர் ரணில் விக்கிரமசிங்க சிங்கள இனவாதி அல்லஎ…
-
- 0 replies
- 253 views
-
-
இலங்கையைப் பொறுத்த வரையில் தேசிய ரீதியிலான எந்தவொரு தேர்தலிலும் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் எப்போதும் ஆட்சியை தீர்மானிப்பதாகவே இருந்திருக்கிறது. அதை உணர்ந்த பிரதான அரசியல் கட்சிகளும் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவைக் கவர்வதில் அதாவது சிறுபான்மை மக்களின் வாக்குகளை கவர்வதற்காக தன்னால் முடிந்த சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது இதுவரையான தேர்தல்களில் வழமையாகவே இருந்திருக்கின்றன. அதற்கு பல்வேறு தேர்தல் உறுதிமொழிகள் கருவிகளாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறுவதற்கு சிறுபான்மை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை திருப்திப்படுத்தினால் போதுமானது என்பதே இலங்கையில் இதுவரை இருந்துவந்த அரசியல் சமன்பாடாகவும் இருந்து வந்திருக்கிறது. ஆனால்…
-
- 0 replies
- 529 views
-
-
ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் கடந்த நாட்களில் பரவலாக முன்வைக்கப்பட்டன. இன்னமும் அந்தக் கோரிக்கைக் கோசங்கள் தொடர்கின்றன. குறிப்பாக, தமிழ் சமூக- இணைய ஊடகப் பரப்பில், ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிப்பதன் அவசியம் பற்றிய கருத்தாடல்கள் குறிப்பிட்டளவில் இடம்பெற்றுவருகின்றன. ஜனாதிபதித் தேர்தல் புறக்கணிப்புக் கோசம் தமிழ் மக்களிடம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வந்த நிலையில், அதை இன்னும் அதிகப்படுத்தி வைத்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அறிவிப்பு. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அந்தக் கட்சி கடந்த வாரம் வெளிப்படையாகவே ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கையை தமிழ் மக்கள…
-
- 0 replies
- 386 views
-
-
-
ஜனாதிபதித் தேர்தல் குறித்து முஸ்லிம் கொங்கிரஸ் இது வரையிலும் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கவில்லை. கூட்டமைப்பும் அப்படித்தான். முதலில் தேர்தல் திகதி அறிவிக்கப்படட்டும் என்று சொன்னார்கள். அதன் பின்னர் இரு தரப்பினரதும் தேர்தல் விஞ்ஞானங்கள் வரட்டும் என்றார்கள். இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் அதாவது, தேர்தலுக்கு ஏறக்குறைய மூன்று கிழமைகளே இருக்கும் ஒரு பின்னணியில் இரண்டு பெரிய சிறுபான்மைக் கட்சிகளினுடைய உத்தியோகபூர்வ நிலைப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. முஸ்லிம் கொங்கிரஸ் அரசாங்கத்தோடு இணக்க அரசியல் செய்கிறது. அவர்கள் புதிதாக ஒரு நிலைப்பாட்டை எடுப்பதாக இருந்தால் அது நிபந்தனையுடனான இணக்க அரசியல் அல்லது பொது எதிரணியுடனான கூட்டு என்பதாகவே இருக்க ம…
-
- 2 replies
- 1.4k views
-
-
கிழக்கிலங்கை சமுதாய முரண்பாடுகளும் மூலகாரணங்களும் - சுல்பிகா இஸ்மாயில் கிழக்கிலங்கை சமுதாய முரண்பாட்டுப்பின்னணி இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகள், முரண்பாடுகள், மோதல்கள் போன்றன வௌ;வேறு சமூகக் குழுவினரால் வேறுபட்ட வகையில் அடையாளப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, முரண்படுகின்ற சமுதாயப் பல்வகைமைகள், பெரும்பான்மை சமூகத்தின் மேலாதிக்கமும் அடக்குமுறையும், வரலாற்றுரீதியான இனவெறுப்பும் ஓரங்கட்டலும், பயங்கரவாதமும் அதன்பாற்பட்ட வன்முறைகளும், இனத்துவக் குரோதங்களும் இனஅழிப்பும், உயர்வர்க்க அதிகார துஷ்பிரயோகங்களும் முரண்பாடுகளும், அரசியல் முகாமைத்துவப் பிழைகள் எனப் பலவாறான அடையாளப்படுத்துதல்கள் உண்டு. இவை, ஒவ்வொரு சமூகக்குழுவினரதும் அனுபவத்திலிருந்து வரும் துயரப்பார்வைகள், நம்…
-
- 0 replies
- 1k views
-
-
சுதந்திர வேட்கை என்பதை அடிப்படையாக் கொண்டு ஒவ்வவொரு தேர்தல்களிலும் கூட்டமைப்புக்கு வாக்களிக்கும் மக்கள் கொள்கை அரசியலை தொடர்ச்சியாக நம்பிச் செயற்படக் கூடிய சந்தர்ப்பங்கள் கைநழுவிச் செல்கின்றன. -அ.நிக்ஸன்- தமிழ் மக்கள் கட்சிமாறிச் சென்றவர்களுக்கு ஒருபோதும் வாக்களித்தது கிடையாது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி அரசாங்கத்தக்கு ஆதரவு வழங்கிய உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றம் மற்றும் மாகாண சபை, உள்;ராட்சி சபைத் தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளனர். ஆகவே வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பொறுத்தவரை சுதந்திரத்திற்கான போராட்டம் என்ற மன வேட்கையுடன் வாழ்கின்றனர் என்ற முடிவுக்கு வரலாம். கூட்டமைப்பின் பொறுப்பு ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் அந்த மாறாத ம…
-
- 0 replies
- 478 views
-
-
உலகமயமாக்கலின் சுயரூபம். கொக்கோ கோலா நிறுவனம், கேரளா, பிளாச்சி மாடாவில் நிலத்தடி நீரை மாசு படுத்தியது. தற்போது, யாழ்ப்பாணத்தில் இன்னொரு "பிளாச்சி மாடா" உருவாகின்றது. இதுவும் ஒரு பன்னாட்டு நிறுவனம் தான். யாழ்ப்பாணத்தில் மின்சார விநியோகம் செய்யும், நொதேர்ன் பவர்ஸ் எனும் பன்னாட்டு நிறுவனம், நிலத்தடி நீரை மாசு படுத்தி வருகின்றது. அந்த நிறுவனத்திற்கு எதிராக தமிழ்ப் பொது மக்கள் வழக்குத் தொடுத்துள்ளனர். நொதேர்ன் பவர்ஸ் அவர்களை "பயங்கரவாதிகள்" என்று குற்றஞ்சாட்டியுள்ளது. ஐந்தாம் கட்ட ஈழப் போர் ஒன்று நடந்தால், அது நிச்சயமாக முதலாளித்துவ உலகமயமாக்கலுக்கு எதிரானதாக இருக்கும். யாழ் குடாநாட்டில் ஒரு பகுதிக்கு மின்சார விநியோகம் செய்து வரும் சுன்னாகம் மின்சார நிலையத்தை வாங்கியுள்ள …
-
- 1 reply
- 1.9k views
-
-
தமிழ்மக்களின் முப்பது வருட போராட்டத்தில் நாம் விட்ட தவறுகள் எண்ணிலடங்காதவை. இயக்கங்களுக்குள் நடந்த படுகொலைகள், புலிகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட சக இயக்கப் போராளிகள் மீதான படுகொலைகள், சாதியத்திற்கு எதிராக, பெண் அடக்கு முறைக்கு எதிராக, பிரதேசவாத்த்திற்கு எதிராக போராடுவதற்கான எந்த அடிப்படையையும் கொண்டிருக்காமை, முஸலிம் மக்கள் மீது நடாத்திய பாசிச தாக்குதல்கள், அப்பாவிச் சிங்கள மக்கள் மீது நடாத்திய தாக்குதல்கள், மாற்றுக் கருத்தாளரகள் மீதான வன்முறை, தனி மனித துதி பாடல், வேளாள ஆதிக்கம், மலையக மக்களை கருவேப்பிலை போன்று பாவித்து வீசி எறிந்தமை, முற்போக்கு அரசியலைப் புறந்தள்ளியமை என்று எமது தவறுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். புலிகளின் தோல்வியோ அன்றி போராட்ட அமைப்புக்களின் மேற்சொன்ன த…
-
- 23 replies
- 2.4k views
-
-
மஹிந்தவும் மைத்திரிபாலவும் ஒன்றுதானா? திருச்சிற்றம்பலம் பரந்தாமன் படம் | ALJAZEERA மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்குமாறு கேட்டால், அனேக தமிழர்கள் புண்படக்கூடும். அவ்வாறு கேட்கின்றவர் மீது ஐயமுறக்கூடும். அதே நேரத்தில் – அதே அனேக தமிழர்களிடம் எழுந்திருக்கின்ற கேள்வி – மைத்திரிபாலவுக்கு வாக்களிப்பதால் ஆகப்போகின்ற பயன்தான் என்ன…? மைத்திரிபாலவின் வரவோடு – ரணில், சந்திரிகா, பொன்சேகாவுக்கு வரக்கூடிய தனிப்பட்ட நலன்களுக்கு அப்பால் – ஒட்டுமொத்தமான இலங்கையில் குடும்ப ஆட்சி ஒன்றின் வீழ்ச்சியும், ஜனநாயகத்தின் எழுச்சியும், நீதித்துறையின் உயர்ச்சியும் எதிர்பார்க்கப்பட்டாலும், குறிப்பாகத் தழிழர்களுக்கு என்று கிடைக்கப்போகின்ற அரசியற் செழிப்பு என்ன…? போர் நிகழ்ந்த காலத்தின…
-
- 1 reply
- 717 views
-
-
மைத்திரிபாலவை கூட்டமைப்பு பகிரங்கமாக ஆதரிப்பதால் ஏற்படப்போகும் விளைவுகள்? யதீந்திரா இந்தக் கட்டுரை எழுதப்படும்வரையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவெதுவும் வெளியாகியிருக்கவில்லை. ஆனால் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் ஆங்காங்கே தெரிவித்திருக்கும் சில அபிப்பிராயங்களின் அடிப்படையில் சில ஊகங்கள் உலவுகின்றன. ஓர் ஊகம் கூட்டமைப்பு இறுதிநேரத்தில் எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிற்கு பகிரங்கமாக ஆதரவளிக்கக்கூடும் என்றவாறான கருத்து சிலர் மத்தியில் காணப்படுகிறது. இவ்வாறு கூறுவோர், கூட்டமைப்பில் சம்பந்தனுக்கு நெருக்கமான தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் ஆங்காங்கே தெரிவித்திருக்கும் கருத்துக்கள…
-
- 0 replies
- 829 views
-
-
ஜனாதிபதித் தேர்தல்; தமிழ் மக்கள் செய்ய வேண்டியது என்ன? by Jothilingam Sivasubramaniam - on December 16, 2014 படம் | Dinuka Liyanawatte/REUTERS, SRILANKABRIEF ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் என்ன நிலைப்பாட்டினை எடுக்கலாம் என்பது தொடர்பாக இன்று பல தளங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களுக்குத் தொடர்பில்லாத தேர்தல் பற்றி பெரிய அக்கறையினைக் காட்டத்தேவையில்லை என தமிழ் சிவில் சமூக அமையம் கருத்துத் தெரிவித்துள்ளது. தமிழ் டயஸ் போறாவின் ஒரு பகுதியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் கருத்துக்கணிப்பினை வெளிப்படுத்தும் வகையில் வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் எனக் கேட்டிருந்தது. ஆனாலும், சம்பந்தன் அதனை நிராகரித்து இருந்தார். ஆரம்பத்தில் …
-
- 0 replies
- 547 views
-