அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
மாவீரர் தினத்தை முன்னிறுத்திய தரப்படுத்தலும் கருத்தியலும் மேடைப் பேச்சுகளும் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இம்முறை மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கிப் பெருவாரியாக மக்கள் திரண்டார்கள். வடக்கு - கிழக்கிலுள்ள 30க்கும் அதிகமான மாவீரர் துயிலும் இல்லங்களில், அஞ்சலிச் சுடர் ஏற்றப்பட்டது. கடந்த காலத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை இராணுவம் உருத்தெரியாமல் இடித்து, அழித்த போதும், அந்தச் சிதைவுகளை ஒன்றாக்கி, மாவீரர்களின் அர்ப்பணிப்பை, ஆகுதியின் பெரும் வடிவமாக மக்கள் மாற்றிக் காட்டினார்கள். அலுவலகங்களுக்குள் மட்டும், மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்திய, அரசியல் கட்சியினரும் அமைப்புகளும் கூட, மக்களோடு மக்கள…
-
- 0 replies
- 315 views
-
-
நரேந்திர மோடி: ஒரு குறுக்கு வெட்டுமுகத் தோற்றம் - நிலாந்தன்:- 25 மே 2014 சீன அரசாங்கத்தின் சிந்தனைக் குழாத்தைச் சேர்ந்த ஒருவர் நரேந்திர மோடியை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ''நிக்ஷனைப் போன்றவர்' என்று வர்ணித்துள்ளார்.குஜராத்தில் ஒரு முதலமைச்சராக அவர் எப்படிச் செயற்பட்;டார் என்பதன் அடிப்படையில் சில விமர்சகர்கள் அவரை சிங்கப்பூரின் லீகுவான் யூ வைப் போன்றவர் என்று வர்ணித்துள்ளார்கள். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவரை தென் ஆசியாவின் மகிந்த என்று வர்ணித்துள்ளார். ஏறக்குறைய இதே தொனிப்படவே அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் கருத்துக் கூறியுள்ளார். தயான் ஜெயதிலக மகிந்தவும் மோடியும் ஒரே தறியில் நெய்யப்பட்ட துணிகள் என்று கூறியுள்ளார். பி.பி.சிக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு …
-
- 1 reply
- 847 views
-
-
போட்டி களமாக மாறும் இலங்கை!! தமிழ் தரப்புகளின் நிலை என்னவாகும்??
-
- 0 replies
- 335 views
-
-
ஊடகவியலாளர் நடேசனை கொலை செய்தவர்கள் யார்? (நிலா)விடுதலைப் புலிகளின் பிளவு மட்டக்களப்பில் வசித்த இரண்டு ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட காரணமாக அமைந்திருந்தது. அதில் ஒருவர் கொழும்பில் இருந்து செயற்பட்ட ஊடகவியலாளர் சிவராம் அவர்கள் அடுத்தது மட்டக்களப்பில் இருந்து பணியாற்றிய ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன். இருவரும் எந்த மக்களின் விடுதலைக்காக தங்களது ஊடகப் பணியை அர்ப்பணித்தார்களோ தமிழ் மக்களின் விடுதலைக்காக யாருடன் கூடுதலான உறவு வைத்திருந்தார்களோ அவர்களாளேயே இவர் கொல்லப்பட்டார்கள் என்பதே கசப்பான உண்மைகள். விடுதலைக்கான பயணத்தில் இருந்து விலகியவர்கள் முதலில் பயந்தது துப்பாக்கிகளுக்கு அல்ல தங்களுடன் கூடவே இருந்த பேனாக்களுக்கே . என்னதான் தங்களத…
-
- 3 replies
- 897 views
- 1 follower
-
-
கிழக்கு: அரசியலை தூக்கி எறிந்துவிட்டு... சீனாவால் அமைக்கப்பட்டுவரும் கொழும்புத் துறைமுக நகரத்தையும் சேர்த்த கொழும்பின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டிருக்கிறது. நில அளவையாளர் நாயகம் பி.எம்.பி. உதயகாந்த இதை வெளியிட்டு வைத்ததுடன், இலங்கையின் புதிய வரைபடத்திலும் பல மாற்றங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், கிழக்கின் அரசியல் வரைபடத்தில் மாற்றங்களை யார் கொண்டு வருவது என்பதுதான் இப்போதுள்ள கேள்வியாகும். அரசியலை வெறுக்காதவர்கள், அடி மட்டம் முதல் உயர்நிலை வரையில் இருக்கத்தான் செய்கிறார்கள். இருந்தாலும் அரசியலைத் தூக்கி எறிந்து விட்டு, எதைத்தான் செய்துவிட முடியும். ‘அரசியலும் மண்ணாங்கட்டியும்’ என்று இப்போது இருந்…
-
- 0 replies
- 719 views
-
-
அரச தலைவர் தேர்தலும் -சிறுபான்மையின மக்களும்!! எதிர்வரவுள்ள அரச தலைவர் தேர்தலில் இம்முறை சிறு பான்மையின மக்கள் அக்கறை காட்டுவார்களென எதிர்பார்க்கமுடியாது. கடந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வுககு ஆதரவாக வாக்களித்து அவரை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றவர்கள் சிறுபான்மையின மக்களே என்பதை எவருமே மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் இம்முறை அவ்வாறானதொரு நிலை காணப்படவில்லை. அடுத்த அரச தலைவர் தேர்தல் வேட்பாளர்கள் குறித்து இதுவரை முடிவு இல்லை மகிந்த அணியைப் பொறுத்…
-
- 0 replies
- 401 views
-
-
குள்ள மனிதன் கிறீஸ் மனிதனின் தம்பியா? - நிலாந்தன் 05/08/2018 வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி, வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் அண்மை நாட்களாகப் பதட்டம் நிலவுகிறது. இது தொடர்பில் நேற்று அராலியில் காலையும் பின்னேரமும் இரு சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நாளை அப்பகுதி பிரதேச சபையினர் யாழ் அரச உயரதிகாரிகளை சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. நேற்றுக் காலை அராலி அம்மன் கோவிலடியில் நடந்த சந்திப்பில் பெருந்தொகையான குடும்பத்தலைவிகள் கூடியிருக்கிறார்கள். இன்று நடக்கவிருக்கும் புலமைப் பரிசில் பரீட்ற்சைக்குத் தோற்றும் மாணவர்களால் நிம்மதியாகப் படிக்க முடியவில்லை என்று அவர்கள் முறைப்பாடு செய்திருக்கிறார்கள்.அப்பகுதி பிதேச சபை தவிசாளர் தரும் தகவலின் ப…
-
- 0 replies
- 407 views
-
-
“நகுலன் கொளுத்திய வெடி நம் தலைக்கு நாமே வைத்த வெடியே தவிர வேறொன்றில்லை” 07.08.2018 மாலை 6.40 அளவில் கிளிநொச்சி நகரத்தில் பட்டாசுகள் வெடித்தன. அந்த நேரம் எதற்காக இப்படித் திடீரென வெடி கொழுத்தப்படுகிறது என்று பக்கத்தில் நின்ற கடைக்காரரைக் கேட்டேன். அவருக்கும் விவரம் தெரியவில்லை. சற்று நேரத்தில் வெடிச்சத்தம் கேட்ட திசையிலிருந்து வந்தவர்களிடம் விசாரித்தோம். அது கருணாநிதி இறந்த சேதி அறிந்து வெடி கொழுத்துகிறார்கள் என்று சொல்லிக்கொண்டு போனார்கள். மனதில் கவலை ஏறியது. சைக்கிளை எடுத்துக் கொண்டு வெடிச்சத்தம் வந்த திசையை நோக்கிப் போனேன். அங்கே ஒரு கூட்டம் அமர்க்களமாக நின்றது. இரண்டாவது தடவையும் வெடியைக் கொழுத்தினார…
-
- 2 replies
- 1.1k views
-
-
சீன கடன்பொறியும், நவ காலனித்துவமும் ஒரு ஊர். அதிலொரு செல்வந்தர். தமது சுய முயற்சியில் சமீபத்தில் பணக்காரரான செல்வந்தர். இந்த செல்வந்தர் ஊரின் ஒரு கோடியில் வசிக்கிறார். ஆற்றைத் தாண்டி மறுகோடியில் சில வறிய குடும்பங்கள். வறிய குடும்பங்களுக்கு செல்வந்தர் வாரி வழங்குகிறார். அந்தக் குடும்பங்களின் தேவைகளை நிறைவேற்றுகிறார்.நான் வளர்ந்து விட்டேன். உங்களிடம் குறைகள் இருக்கின்றன. நான் உதவி செய்து உங்கள் குறைகள் தீர்ந்தால், நாம் வளரலாம். ஊரும் பயன் பெறலாம் என்கிறார், செல்வந்தர். செல்வந்தரின் வார்த்தைகளை வறிய குடும்பங்கள் நம்புகின்றன. அவரிடம் இருந்து வாங்குகின்றன. தமக்குத் தரப்படுவதை த…
-
- 0 replies
- 1k views
-
-
சீனா எப்போதும் இந்து சமுத்திரத்தில் அமரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சந்தை ஆடுகளமாக்கி தனது தென்னாசிய நண்பர்களை கழம் இறக்குகிறது. இந்த பழைய ஆட்டம் இப்ப இலங்கை என்கிற புதிய ஆடுகழத்தில் சூடு பிடித்துள்ளது. இது பெரும்பகுதித் தமிழர்களை மேற்க்கு பக்கமாகவும் சிறு பகுதியினரை சீனாவின் பக்கமும் தள்ளலாம். இது மிகப் பழைய அரசியல் விழையாட்டாகும். சீனாவின் ஆட்ட திட்டம் 1.இந்தியாவை அமரிக்கா மற்றும் மேற்க்கு நாடுகளில் இருந்து தனிமைப் படுத்துதல். 2. இந்தியாவுக்கும் அவர்களது அரசு மற்றும் அரசற்ற இயற்கை உறவுகளிடமிருந்து தனிமைப் படுத்துவது. இது எதிர்காலத்தில் பிராந்தியம் மற்றும் உலகளாவிய மட்டங்களில் இந்தியாவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்து சமுத்திர நாட்டினங்களை இந்தியாவின் உறவுக…
-
- 3 replies
- 932 views
-
-
அலசல்: இலங்கையில் என்ன நடக்கிறது? - தமிழ் மிரரின் விவரணப் பிரிவு Editorial / 2018 நவம்பர் 01 வியாழக்கிழமை, மு.ப. 09:03 Comments - 0 இலங்கையில், கடந்த வெள்ளிக்கிழமை (26) மாலை ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றம், பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையில் அரசியல் குழப்ப நிலை அல்லது அரசியல் நெருக்கடி இருப்பதை அநேகர் உணர்ந்தாலும் ஏற்றுக் கொண்டாலும், அதைத் தாண்டிய பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும், பலரிடத்தில் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. எனவே, இலங்கையின் அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பாக, கடந்த சில நாள்களில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாக, இப்பகுதி ஆராய்கிறது. என்ன நடந்தது? இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை,…
-
- 0 replies
- 516 views
-
-
அமெரிக்க அரசியல் கட்சிகளின், சின்னமாக... யானை, கழுதை வந்தது எப்படி? அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்பின் ஆட்சிக் காலத்தின் மீதான வாக்கெடுப்பாக கருதப்படும் இடைத்தேர்தல் அந்நாட்டில் நடைபெற்றுள்ளது. 435 மொத்த உறுப்பினர்களைக்கொண்ட செனட்டில் காலியாக இருந்த 35 இடங்களுக்கு இடைத்தேர்தல் 6 ஆம் தேதி நடந்துள்ளது. இரு சபையிலும் மைனாரிட்டியாக இருக்கும் ஜனநாயகக் கட்சி இந்த தேர்தலில் சில இடங்களை ஜெயிக்கும் என கருதுகிறது. குடியரசுக்கட்சி ஏன் யானை சின்னத்திலும், ஜனநாயக்கட்சி ஏன் கழுதை சின்னத்திலும் போட்டியிட்டுவருகின்றனர் எனத் தெரியுமா? இதில் ஒரு சுவாரஸ்யம் உள்ளது.1874 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கார்ட்டூன்களின் தந்தை என வர்ணிக்கப்படும் தாமஸ் நஸ்ட் குடியரசு கட்சியின் 3வது முறை வெற்றி…
-
- 0 replies
- 593 views
-
-
இன உருவாக்கமும் தமிழர் சின்னமும் Editorial / 2018 டிசெம்பர் 25 செவ்வாய்க்கிழமை, மு.ப. 04:11 - ஜெரா உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனித இனமும், தன்னை அடையாளப்படுத்துகின்ற சின்னங்களையும் குறியீடுகளையும் வைத்திருக்கிறது. அவ்வாறானதொரு சின்னம் அல்லது குறியீடு தெரிவுசெய்யப்படும்போது, அந்த இனத்தவரின் கூட்டு ஆன்மாவும் உளமும் அதில் தாக்கம் செலுத்தக்கூடியவகையில் பார்த்துக்கொள்ளப்படுகின்றது. அதற்குள், குறித்த இனத்தின் வரலாற்று, பண்பாட்டு, ஐதீக நடைமுறைகள் இரண்டறக் கலந்தனவாக இருக்கின்றன. இந்தியர்களுக்கு அசோகச் சக்கரமொன்றும், அமெரிக்கர்களுக்கு ஒரு கழுகும், சீனர்களுக்கு அனல்கக்கும் பறவையும், சிங்களவர்களுக்குச் சிங்கமும், இந்தப் பின்னணியிலேயே நிலைபெற்றுவிட்டன. இந்த…
-
- 0 replies
- 818 views
-
-
புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்த் தேசிய நலன் சார்ந்து இயங்கும் தமிழ் அமைப்புகளிற்கு பல்வேறு பட்ட கடமைகள் உண்டு. இற்றைவரை இந்த தமிழர் அமைப்புகள் நம்மவர்கள் நோக்கிய கலை கலாச்சார நிகழ்வுகள், பிரச்சார கூட்டங்கள் கண்டன கூட்டங்கள், நிதிதிரட்டல், கவனயீர்ப்பு நினைவு கூரல் நிகழ்வுகள் மற்றும் ஊர்வலங்களோடு மாத்திரம் நின்றுவிடுகின்றன. தாயகத்தின் அவல நிலையையும், எந்தவித வெளி உதவிகள் இன்றி விடுதலை வேண்டி 30 ஆண்டுகளிற்கு மேலாக பலத்த இழப்புக்களோடு போராடும் இனமாக மட்டுப்படுத்தப்பட்ட நேர மற்றும் மனித வளரீதியில் இவைதான் முக்கியத்துவம் பெறுபவைகளாக இருக்கின்றன. இருந்த போதும் புலம் பெயர்ந்த நாம் ஒவ்வொருவரும் தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதிகளாக நல்லெண்ண தூதுவர்களாக நடந்து கொள்ள வேண்டிய அத்தியாவசிய …
-
- 16 replies
- 4.3k views
-
-
கதவுகளை திறக்கும் அமெரிக்கா! [ ஞாயிற்றுக்கிழமை, 03 மே 2015, 08:59.20 PM GMT ] பயணிகள் விமானங்களின் வருகை, புறப்படுகையால் எப்போதும் பரபரப்பாக இருக்கும், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கடந்த மாதம் 19 ஆம் திகதி, இராணுவ விமானம் ஒன்று வந்திறங்கியது. அது 26 பேர் பயணம் செய்யக் கூடிய அமெரிக்க கடற்படையின் சி-2 ரக போக்குவரத்து விமானம். அமெரிக்க கடற்படையினரின் பயன்பாட்டுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்ட அந்த விமானத்தில், இரண்டு விமானிகள், இரண்டு விமானப் பணியாளர்கள், மற்றும் சில அமெரிக்க கடற்படை அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கினர். ஆனால் அவர்கள், அதிலிருந்து இறங்கி விமான நிலையத்துக்குள் நுழையவில்லை. கட்டுநாயக்க விமான நிலையத்துடன் இணைந்ததாக உள்ள, விமானப்படைத்…
-
- 2 replies
- 533 views
-
-
சம்பந்தனுக்குப் பின்னரான தலைமைத்துவ வெற்றிடம் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 பெப்ரவரி 06 புதன்கிழமை, மு.ப. 02:12 Comments - 0 இரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக, அரசியல்வாதியாக இருக்கும் அவர், விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளை, தமிழ்த் தேசிய அரசியலில் முடிவுகளை எடுக்கும் தலைவராகக் கடந்திருக்கின்றார். அவர் தலைமையில் எடுக்கப்பட்ட முடிவுகளில், நல்லது, கெட்டது சார்ந்து, பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடோடும் இருக்கின்றார். இன்னொரு பக்கத்தில், சம்பந்தனால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்ட சி.வி. விக்னேஸ்வரன், கடந்த வருடம் தன்னுடைய 79ஆவது பிறந்த தினத்தில், புதிய கட…
-
- 0 replies
- 598 views
-
-
இலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சி வீக்கெண்ட் லீடர் பத்திரிக்கை Vol 2 Issue 31 வடக்கு இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் பயணம் செய்யும்போது, எவ்வாறு அந்த நிலத்தின் மக்கள்தொகை மாற்றம் நடந்திருக்கிறது என்பதை பார்க்கும்போது அதிர்ச்சியே மிஞ்சும். முழுக்க முழுக்க தமிழர்கள் வாழ்ந்த பிரதேசமாக இருந்து, தமிழ் கலாச்சாரம் பாரம்பரியத்தை சொல்லி வந்த நிலம் இன்று சிங்கள ஆக்கிரமிப்பில் புத்த சிலைகள் எங்கும் தென்படும் நிலமாக மாறிவருகின்றன. இங்கு புத்தசிலைகள், விகாரங்கள், ஸ்தூபங்களும் காணப்படும் அதே வேளையில் ஆங்காங்கே உடைந்த தமிழ் வீடுகளும், தமிழ் அகதிகள் தங்கும் புதியதாக கட்டப்பட்ட சேரிகளும் காணப்படுகின்றன. சிங்களமும், ச…
-
- 0 replies
- 317 views
-
-
புங்குடுதீவுச் சம்பவம் தொடர்பில் கடந்த வாரத்திற்கு முதல் வாரம் நான் எழுதிய கட்டுரை குறித்து ஒரு செயற்பாட்டாளர் உரையாடினார். 'வடமாகாணசபையின் முதலமைச்சர் இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் படைமயப்பட்ட ஒரு சமூகச் சூழலே என்று கூறுகிறார். போதையூட்டும் பொருட்கள் இளைய தலைமுறையினர் மத்தியில் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகவும் இது குற்றச் செயல்களை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அவர் கூறுவதன் அடிப்படையில் யோசித்தால் தமிழ் பகுதிகளில் படைமய நீக்கம் செய்வதே இப் பிரச்சினைகளுக்கெல்லாம் இறுதித்தீர்வாக அமைய முடியும் என்று தெரிகின்றது. அதே சமயம் நீங்கள் உங்களுடைய கட்டுரையில் தமிழ் மக்கள் தங்கள் மத்தியில் கீழிருந்து மேல் நோக்கிக் கட்டி எழுப்பப்படும் உள்ளூர் தலைமைத்துவங்களைப் ப…
-
- 0 replies
- 206 views
-
-
ஜெனீவா 2019 – நிலாந்தன்… March 31, 2019 ‘மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்து வதற்கான எந்த அதிகாரமும் அந்தச் சபைக்கு இல்லை. இஸ்ரேலுக்கும் எதிராக 70 வரையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் ஒன்றுகூட நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு அந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சி எடுக்கும் ஒரேயொரு நாடு இலங்கையாகும்.’ இவ்வாறு கூறியிருப்பவர் கலாநிதி பாலித்த கோகன்ன. வியத்மக அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கடந்த சனிக்கு முதற்சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. அதில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். கலாநிதி பாலித்த கோகன்ன ஒரு புத்திஜீவி. முன்னாள் ராஜதந்த…
-
- 0 replies
- 641 views
-
-
வெசாக் தினத்தில் வௌிப்பட்ட நல்லிணக்கம் சி.சி.என் இம்முறை வெசாக் தினம் மிகவும் அமைதியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது. பெரும்பான்மையினர் செறிந்து வாழ்ந்து வரும் பிரதேசங்களில் வெசாக் தோரணங்கள்,வர்ண அலங்காரங்கள் , மின்குமிழ் வேலைப்பாடுகளுக்கு குறைவிருக்கவில்லை. எனினும் முதன் முறையாக தொரண என்ற அலங்கார அமைப்பு இல்லாத ஒரு வெசாக் தினமாகவும் பெரியளவான உணவு தன்சல் இல்லாததாகவும் இது அனுஷ்டிக்கப்பட்டமை ஒரு குறையாகவே தெரிந்தது. இந்த குறையை இல்லாதாக்குவது போன்று இம்முறை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த சம்பவம் பல முஸ்லிம்கள் தமது மார்க்க கட்டுப்பாடுகளையும் தளர்த்தி வெசாக் பந்தல் அமைத்தல், தன்சல் செயற்பாடுகளில் ஈடுபடல் ஏன் விகாரைகளுக்கு செல்லல் போன்ற விடயங்களில் ஈடுபட…
-
- 0 replies
- 985 views
-
-
பட மூலாதாரம்,SRI LANKA NAVY படக்குறிப்பு, ஐஎன்எஸ் மும்பை கப்பல் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 31 ஆகஸ்ட் 2024, 13:00 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் சீன போர் கப்பல்களும், இந்திய போர் கப்பலொன்றும் ஒரே நேரத்தில் இலங்கைக்கு வருகை தந்து, மீண்டும் தத்தமது நாடுகளை நோக்கி பயணித்துள்ளன. இந்த இரண்டு நாட்டு கப்பல்களும் கடந்த 26ஆம் தேதி இலங்கை சென்றன. கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) இலங்கையை விட்டு புறப்பட்டுச் சென்றன. இலங்கையில் இந்திய, சீன போர்க் கப்பல்கள் என்ன செய்தன? சீன போர்க் கப்பல்கள் இலங்கை வருகை சீனாவிற்கு சொந்…
-
- 0 replies
- 225 views
- 1 follower
-
-
மாற்று அணி எனப்படுவது புதிதாகச் சிந்திப்பது – நிலாந்தன். July 14, 2019 புதிதாக சிந்திக்காத எந்த ஓர் ஊடகமும், தமிழ் மக்களின் அரசியல் சிந்தனையில் மாற்றங்களை ஏற்படுத்துமா? கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் புது விதி பத்திரிகை அதன் பதிப்பை நிறுத்தியது. இதற்கும் கிட்டத்தட்ட ஒரு கிழமைக்கு முன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையும் அதன் பாதிப்பை நிறுத்தியது.அதேசமயம் அது தொடர்ந்தும் ஒரு மின் இதழாக வெளிவருகிறது. அது நிறுத்தப்பட்ட அதே காலப்பகுதியில் ஒரு புதிய இணைய இதழ் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதழின் ஆசிரியர் தேவராஜா. முன்பு வீரகேசரி வார இதழின் ஆசிரியராக இருந்தவர். இப்படியாக இரண்டு பத்திர…
-
- 0 replies
- 472 views
-
-
கலாநிதி ஜெகான் பெரேரா முக்கியமான தேசியப் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் அணுகுமுறை எச்சரிக்கையுடனானதாகவும் முன்னைய அரசாங்கம் தீர்மானித்த திசையில் தொடர்வதாகவும் அமைந்திருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையையும் அதன் இறுக்கமான நிபந்தனைகளையும் பின்பற்றுவதில் இது தெளிவாகத் தெரிகிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தேசிய கடுமையாக கண்டனத்துக்குள்ளான முக்கியமான அதிகாரிகளே பொருளாதாரத்தைக் கையாளுவதற்கு பதவிகளில் தொடருவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த வாரம் ஜெனீவாவில் தீர்மானத்துக்காக முடிவெடுப்பதற்காக முன்வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்தின் வடிவில் வந்த மிகவும் உடனடியான சர்வதேச சவாலை எதிர்கொண்டதிலு…
-
- 0 replies
- 439 views
- 1 follower
-
-
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்திய – இலங்கை இடையிலான பாலம் அமைக்கும் திட்டம் – யாருக்கு இதனால் சாதகம்? December 21, 2024 12:56 pm இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலத் தொடர்பை ஏற்படுத்தும் நோக்கில் கடல் மார்கமான பாலமொன்றை அமைக்கும் திட்டம் தொடர்பில் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் பரவலாக பேசப்படுகிறது. 2015ஆம் ஆண்டுமுதல் இந்தப் பாலம் குறித்த பேச்சுகள் இருநாட்டிலும் உள்ள போதிலும் இதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வியுற்றே வருகின்றன. கடந்த ஆண்டு நடுப்பகுதியில் இந்தியாவுக்குச் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவுடன் நிலத் தொடர்பை ஏற்படுத்தும் இந்தப் பாலத்தை அமைப்பதற்கான இணக்கப்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், அதற்கு …
-
- 0 replies
- 325 views
-
-
கவனம் : பொய் வாக்குறுதிகளுடம் தகுதியற்ற வேட்பாளர்கள்! May 1, 2025 — கருணாகரன் — இது தேர்தற்காலம். உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தற் பரப்புரைகள் நாடு முழுவதிலும் நடக்கிறது. பல்வேறு கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தேர்தற் பரப்புரைகளில் முழுமூச்சாக ஈடுபடுகின்றன. ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் முதற்கொண்டு கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் என எல்லோரும் நகரங்கள், கிராமங்கள் என்ற வேறுபாடில்லாமல் எல்லா இடங்களுக்கும் சென்று நிற்கிறார்கள். தேர்தற் களப்பணியை ஆற்றுகிறார்கள். இதைப்போல இவர்களெல்லாம் தேர்தலுக்குப் பிறகும் வந்து மக்களைச் சந்திக்க வேண்டும். மக்களுக்குப் பணிகளைச் செய்ய வேண்டும் என்று மக்கள் பேசுவதைக் கேட்க முடிகிறது. மக்களுடைய நியாயமான எதிர்பார்ப்…
-
- 1 reply
- 328 views
-