Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. முழு அடைப்புப் போராட்டம் : உணர்வுகளின் பிரதிபலிப்பு காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­ வுகள் விடுத்த அழைப்பின் பேரில்- தமிழ், முஸ்லிம் அர­சியல் கட்­சிகள், பொது அமைப்­பு­களால் ஆத­ரிக்­கப்­பட்ட முழு அடைப்புப் போராட்டம் கடந்த வாரம் வடக்கு, கிழக்கின் பெரும்­பா­லான பகு­தி­களை முற்­றா­கவே செய­லி­ழக்கச் செய்­தி­ருக்­கி­றது. போர் முடி­வுக்கு வந்த பின்னர், வடக்கு, கிழக்கில் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்ற மிகப்­பெ­ரிய ஓர் அரச எதிர்ப்பு செயற்­பா­டாக இந்த முழு அடைப்பு போராட்டம் இடம்­பெற்­றி­ருக்­கி­றது. மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர், இது­போன்ற ஓரி­ரண்டு போராட்­டங்கள் தமிழ்ப் பகு­தி­களில் இடம்­பெற்­றி­ருக்­கின்ற போதிலு…

  2. போரில் வாழ்வை தொலைத்தவர்களும் தொலையாத போர் வடுக்களும் - காரை துர்க்கா இலங்கையில் நடைபெற்ற மூன்று தசாப்த காலத்துக்கு மேற்பட்ட, தமிழ் மக்களது விடுதலைக்கான ஆயுதப் போராட்டம், 2009 மே மாதத்துடன் முள்ளிவாய்க்காலில் மௌனம் கண்டது. போரில் தமிழ் மக்கள் சந்தித்த, மேலும் அதன் தொடர்ச்சியாக தற்போதும் அனுபவிக்கின்ற வேதனைகள், வார்த்தைகளில் வடிக்க முடியாதவை; பெரும் கறைகள் படிந்தவை. கொடிய யுத்தத்தில் தம் வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் வாழ்வை இழந்தவர்களாகவே, நடைப்பிணங்களாக நம் தேசத்தில் ஊசலாடுகின்றனர்; உலாவருகின்றார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆயுத மோதலால் தமது கணவனைப் பறிகொடுத்த, ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ்ப் பெண்கள் அன்றாட வாழ்வாத…

  3. சர்வ கட்சி மாநாடு ஒரு நாடகமா? நிலாந்தன். March 27, 2022 சர்வகட்சி மாநாடு எனப்படுவது வளர்ச்சியடைந்த ஜனநாயகங்களில் ஒரு உன்னதமான பயில்வு. முழு நாடும் கட்சி பேதங்களைக் கடந்து தேசியப் பிரக்ஞையோடு ஒன்றிணைந்து முடிவை எடுக்கும் நோக்கத்தோடு சர்வகட்சி மாநாடு கூட்டப்படுவதுண்டு. ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி சிறிய கட்சி ,பெரிய கட்சி என்ற பேதமின்றி நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து ஒரு பொது முடிவை எட்டுவதற்கான ஒரு மகத்தான ஜனநாயக நடைமுறைதான் சர்வகட்சி மாநாடு ஆகும். ஆனால் இலங்கைத் தீவில் சர்வகட்சி மாநாடு எனப்படுவது அவ்வாறான உன்னதமான ஒரு பயிலுகை அல்ல. இலங்கைத்தீவின் மோசமான அரசியல் கலாச்சாரத்தை பொறுத்தவரை, சர்வகட்சி மாநாடு எனப்படுவது ஒரு தப்பி…

  4. ஆர்ஜென்டீனா: அம்மம்மாக்களின் உறுதி மரணம் என்பது கொடுமையானது. காணாமல் போவதென்பது மிகவும் கொடுமையானது. அது நிச்சயமின்மைகளையும் எதிர்பார்ப்பையும் ஒருங்கே கிளறிவிடும் அபத்தத்தை எளிமையாகச் செய்துவிடும். காணாமல் போதல்கள் உலகெங்கும் தொடர்ந்து நடக்கின்றன. அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் எதிர்நோக்கும் துயரமும் அவலமும் சொல்லி மாளாது. அண்மையில் ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்ற இரண்டு நிகழ்வுகள், இக்கட்டுரையை எழுதத் தூண்டின. முதலாவது, ஆர்ஜென்டீனாவில் பதவிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம், குற்றவாளிகளுக்கு விடுப்பு அளித்தமைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, இளவயது மற்றும் வயதுமுதிர்ந்த பெண்கள் வீதிகளில…

  5. Published By: VISHNU 04 SEP, 2023 | 08:41 PM ஹரிகரன் அமெ­ரிக்கத் தூதுவர் ஜூலி சங் கொழும்பில் கட­மை­களைப் பொறுப்­பேற்று சுமார் ஒன்­றரை வரு­டங்­க­ளுக்குப் பின்னர், வடக்கில் விரி­வான பயணம் ஒன்றை மேற்­கொண்­டி­ருக்­கிறார். இந்தப் பய­ணத்தின் போது அவர் அர­சியல், பொரு­ளா­தார, சமூக, மத விவ­கா­ரங்­களில் மாத்­தி­ர­மன்றி, பாது­காப்பு விவ­கா­ரங்­க­ளிலும் அதிக அக்­கறை செலுத்­தி­யி­ருக்­கிறார். யாழ்ப்­பாணப் பய­ணத்தை முடித்துக் கொண்டு கடந்த மாதம் 24ஆம் திகதி கிளி­நொச்­சிக்குச் சென்ற அவர், அங்கு இலங்கை இரா­ணு­வத்தின் முத­லா­வது கோர்ப்ஸ் படை­ய­ணியின் தள­ப­தி­யான மேஜர் ஜெனரல் எஸ்.பி.அமு­னு­க­மவைத் சந்­தித்­தி­ருந்தார்.…

  6. கூட்டுப் பொறுப்பும் முன்கூட்டிய தயாரிப்புமற்ற புதுடில்லிச் சந்திப்பு — சிறிதரன், விக்னேஸ்வரன் குழுவினர் கடந்த வாரம் டில்லிக்குச் சென்றிருந்தமை எந்த நிகழ்ச்சி நிரல்? அதாவது ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும் சில புலம்பெயர் அமைப்புகளை அழைத்து கடந்த ஜனவரி மாதம் டில்லியில் மாநாடு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு யூன் மாதம் ஆறு தமிழ்த்தேசியக் கட்சிகள் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தன. 2021 இல் பழநெடுமாறன் “வட்டுக்கோட்டைத் தீர்மானம் 2” என்ற மாநாட்டை நடத்தி மோடிக் கடிதம் அனுப்பினார். ஆகவே இச் சந்திப்புகள், மாநாடுகளின் தொடர்ச்சியாகவா அல்லது பிரித்தாளும் உத்தியா? அ.நிக்ஸன்- ஜே.வி.பியின் அரசியல் கொள்கைகள் ஈழத்தமிழர்களின் அ…

  7. 'பாலை' மறவராவோம் தமிழீழம் பெறுவோம் [ கீற்று ] - [ Jan 06, 2012 15:10:05 GMT ] தமிழ் சினிமாவின் ஆராம்ப காலங்களில் புராணக் கதைகளும், தேசபக்தி இந்திய சுதந்திர போராட்ட கதைகளும் அதிக அளவில் ஆக்கிரமித்திருந்தன. அதன் பிறகு, திராவிட இயக்க உணர்வு பெற்றவர்கள் திரை உலகை ஆக்கிரமித்து, பிறகு பழைய மரபை உடைத்தனர். (பராசக்தி, நாடோடி மன்னன், வேலைக்காரி). நடுத்தர மற்றும் மேட்டுக்குடி வர்க்க நலன்களை மையப்படுத்தியும், குடும்ப உறவுகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் திரைப்படங்களை வடிவமைத்தவர் கே.பாலசந்தர். இட ஒதுக்கீட்டை விமர்சிக்கும் அரசியலை திரையில் புகுத்தியதில் முன்னோடி இவரே. தமிழ்த்திரையை கிராமத்து மனிதர்களின் களமாகவும், கிராமங்களை தமிழ்த்திரையின் தவிர்க்கமுடியாத அங்க…

    • 0 replies
    • 719 views
  8. ‘எழுக தமிழ்’ நிகழ்வின் தோல்விக்குப் பேரவையே பொறுப்பு புருஜோத்தமன் தங்கமயில் / 2019 செப்டெம்பர் 18 புதன்கிழமை, மு.ப. 11:40 மூன்றாவது ‘எழுக தமிழ்’ப் பேரணி, திங்கட்கிழமை (16) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. முதல் இரண்டு ‘எழுக தமிழ்’ப் பேரணிகளோடு ஒப்பிடுகையில், இம்முறை மக்களின் பங்கேற்பு என்பது, கணிசமாகக் குறைந்திருக்கின்றது. ஓர் அரசியல் கட்சி, தன்னுடைய கூட்டங்களுக்குத் தொண்டர்களைத் திரட்டுவதற்கும், எழுச்சிப் போராட்டங்களில் மக்களைப் பங்கேற்க வைப்பதற்கும் இடையில், நிறைய வித்தியாசங்கள் உண்டு. அரசியல் கட்சியின் தொண்டர்களுக்கு, கட்சி நலன் மாத்திரமல்ல, தங்களின் தனிப்பட்ட வளர்ச்சி சார்ந்த சுயநல விடயங்களும் முக்கியம் பெறும். அதன்சார்பில், கட்சிக் கூட்ட…

  9. இலங்கை அரசியலும் ஆட்சிமுறையும் புதுவருடத்தில் எவ்வாறு இருக்கும்? January 5, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — 2024 ஆண்டுக்கு நாம் பிரியாவிடை கொடுத்தபோது ஜனாதிபதி பதவியில் அநுரா குமார திசாநாயக்க நூறு நாட்களை நிறைவு செய்தார். புதிய பாராளுமன்றம் கூடிய பிறகு நாற்பது நாட்கள் கடந்திருந்தன. கடந்த வருடத்தில் இலங்கை அதன் அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்பு முனைகளைக் கண்டது. தெற்காசியாவில் நேபாளத்துக்கு அடுத்ததாக ஆயுதக் கிளர்ச்சியை நடத்திய அரசியல் இயக்கம் ஒன்று ஜனநாயக தேர்தல்கள் மூலமாக ஆட்சியதிகாரத்துக்கு வந்த இரண்டாவது நாடாக இலங்கை விளங்குகிறது. இதுகாலவரை இலங்கையை ஆட்சி செய்த பாரம்பரியமான அதிகார வர்க்கத்துக்கு வெளியில் உள்ள மிகவும் எளிமையான குடும்பப…

  10. மகிந்த அண்ட் கோ பாகம் இரண்டும் தமிழீழ மக்களின் எழுச்சியும் எந்த ஒரு நாட்டிலும் மக்கள் விழிப்பாக இருந்தால் மட்டுமே அவர்களால் தங்களை பாதுகாக்க முடியும். கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்த புதிய சனாதிபதி ஆட்யில் சில எதிர்பார்த்த நிகழ்வுகளும் எதிர்பாராத மாற்றங்களும் நடக்கின்றன. மணல் தோண்டி தாய்நிலத்தை புதைப்பவர்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் மண்ணில் உள்ள மக்களின் பாசத்தை மீண்டும் நிலைநாட்டி காட்டுகின்றது. இங்கே இதில் பெரியளவில் அரசியல் வாதிகள் இல்லாமை சிறப்பாக தெரிகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோத்தாவின் கருத்திற்கு மறுப்பு தெரிவித்து அடுத்த நாளே செய்யும் போராட்டம் மக்கள் ஒரு போர்க்குற்றவாளிக்கும் அவர்தம் ஒடுக்குமுறைகளுக்கும் பயந்தவர்கள் இல்லை என சிங…

    • 0 replies
    • 928 views
  11. இலங்கை அரசின் புதிய கைதுகளின் பின்புலம் – ஒரு பார்வை நகுலன் , ராம் வட மாகாணத்தில் பல்வேறு கைதுகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நடைபெறுகின்றறன. இக்கைதுகளின் பின்புலம் குறித்த வாதப் பிரதிவாதங்கள் பல்வேறு தளங்களில் நடைபெற்றாலும் அக் கைதுகளின் உள் நோக்கம் வெவ்வேறானதாக அமைந்திருக்கலாம். வன்னிப் படுகொலைகளின் பின்னர் சில போராளிகள் இலங்கை அரசுடன் இணைந்து செயற்படும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்களின் பெரும்பாலானவர்கள் தொடர்பான விமர்சனத்தை முன்வைப்பதற்கான போதிய தகவல்கள் இன்று கிடைக்கப்பெறவில்லை. புலம்பெயர் நாடுகளில் அரசியல் வியாபாரம் நடத்தும் குழுக்களும் தனி நபர்களும் முன்வைக்கும் துரோகி முத்திரைக்கு பலியான போராளிகள் இன்று மீண்டும் கைதாகியுள்ளனர். குறிப்பாக நக…

  12. கொவிட்-19க்குப் பின்னரான உலகம்: மீண்டும் தொடங்கும் மிடுக்கு -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ நம்பிக்கையீனத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையிலான ஊசலாடத்தில், காலங்கள் நகர்கின்றன. நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்துக்கு நகர்வது குறித்த ஓர் உரையாடலைக் கடந்த காலத்தின் மீதான குறுக்குவெட்டுப் பார்வையைத் தவிர்த்து நிகழ்த்திட இயலாது. எதிர்காலம் குறித்த அச்சங்களும் நிச்சயமின்மைகளும் நிச்சயமாகிப் போன பொழுதொன்றில், நம்பிக்கை வைப்பதைத் தவிர வழி வேறில்லை. ஏன் இவ்வாறு சொல்கிறேன், இதற்கான காரணங்கள் என்ன என்று, நீங்கள் கேட்பது புரிகிறது. வாருங்கள், நிகழ்காலத்திலிருந்து எதிர்காலம் நோக்கிப் பயணிப்போம்; நம்பிக்கையோடு! கொரோனா வைரஸ் என்று அறியப்பட்ட கொவிட்-19 நோய்த்த…

  13. அடுப்படியில் தேடப்படும் ’யானை’ முகம்மது தம்பி மரைக்கார் 'யானை காணாமல் போனால், அடுப்படியில் தேடக் கூடாது' என்கிற பழமொழியொன்றுஉள்ளது. ஆனால், முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக்கையாள்வதில், முஸ்லிம் அரசியல் தலைவர்களில் அதிகமானோரின் செயற்பாடுகளைக்காணும்போது, அவர்கள், 'அடுப்படியில்தான் யானையைத் தேடுகிறார்களோ'என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ஆண்டாண்டு காலமாக, ஆட்சியாளர்களுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளைமுன்னெடுத்து வந்த, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கூட, கோட்டாப…

    • 0 replies
    • 787 views
  14. தர்மமதை சூது கௌவும் இறுதியில் தர்மமே வெல்லும் சிங்களப் பெருந்தேசிய வாத சிந்தனையின் வடிவமாக உருவெடுத்த ராஜபக்‌ஷவின் பொதுஜன பெரமுன கட்சியானது, அறுதிப் பெரும்பான்மையுடன் எதிர்வரும் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் பல்வேறு உபாயங்களைக் கையாண்டு வருகின்றது. அது தனது தேர்தல் பிரசார வேலைகளை முடுக்கி விட்டுள்ள இவ்வேளையில், கருணா விவகாரம் பெரும் தலையிடியாக ராஜபக்‌ஷக்களுக்கு மாறியுள்ளது. ஏற்கெனவே பொருளாதார வீழ்ச்சி, பொருள்களின் விலை அதிகரிப்பு, அமெரிக்க தூதரக அலுவலரின் கொரோன வைரஸ் விவகாரம், அமெரிக்க வியாபார ஒப்பந்தம், தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை, இனப்பிரச்சினைக்கான தீர்வு, முஸ்லிம்கள் விவகாரம், இராணுவ மயமாக்கல், இந்திய-சீன உறவு, முஸ்லிம் நா…

  15. அனு­ப­வத்தின் அடிப்­ப­டையில் பார்க்­கின்ற போதும் தனது பத­வியின் அந்­தி­ம­கா­லத்தில் இருக்­கின்ற செய­லாளர் நாயகம் இலங்­கை­அ­ர­சுக்கு ஒரு நல்ல நண்­ப­னா­கவும் பாதிக்­கப்­பட்ட வட­கி­ழக்கு மக்­களுக்கு கருணை காட்டும் பிதா­வா­கவும் இருக்க விரும்­பு­கி­றாரே தவிர தனது அதி­கா­ரத்­துக்குட்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் ஆளு­மைத்­தன்­மையை தனது இலங்கை விஜ­யத்­தின்­போது நிரூ­பிக்க தவ­றி­விட்டார் என்­பதே தமிழ் மக்­களின் விமர்­ச­னங்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றன. இதே விட­யத்தில் இலங்கை அர­சாங்கம் மதி­யூ­கி­யாக செயற்­பட்டு வெற்றி கண்­டுள்­ளது என்­பதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்­தாகும். இரண்டாம் உல­க ­மகா…

  16. ஆட்டம் ஆரம்பம் – தாயகன் August 15, 2020 ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச -பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசில் தமிழ்,முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அச்சமும் கடந்த புதன்கிழமை கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகுல்மடுவ மண்டபத்தில் நடந்தேறிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழுக்களின் தலைவர்கள் நியமனம் மற்றும் அதன் பின்னரான அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனத்தின் மூலம் நிதர்சனமாகியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசின் 25 பேரைக் கொண்ட அமைச்சரவையில் ஒரு தமிழருக்கும் ஒரு முஸ்லிமுக்கும் 39 பேரைக்கொண்ட இராஜாங்க அமைச்சர்களில் இரு தமிழர்களுக்கும் நியமனங்களை வழங்கியும…

  17. விக்கினேஸ்வரன் வழங்க வேண்டிய தலைமைத்துவம்? - யதீந்திரா தமிழ் அரசியல் சூழலைப் பொறுத்தவரையில் இப்போது அதிகம் பேசப்படும் ஒரு அரசியல் தலைவராக விக்கினேஸ்வரன் தெரிகின்றார். வழமையாக ஊடகங்கள் மத்தியில் அடிக்கடி பேசப்பட்ட சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் சற்று பின்னுக்கு சென்றுவிட்டனர். நாடாளுமன்றத் தேர்தலின் போது ஏற்பட்ட சர்ச்சைகளை தொடர்ந்து சுமந்திரன் அதிகமாகப் பேசுவதை நிறுத்திக் கொண்டார். ஒரு வேளை தான் அதிகம் பேசியதால்தான் தேவையில்லாத சர்ச்சைகளுக்குள் அகப்படவேண்டியேற்பட்டது என்பதை அவர் உணர்ந்திருக்கலாம் – அல்லது, இப்போது பேசுவதற்கு எதுமில்லையென்றும் சுமந்திரன் கருதியிருக்கலாம். ஏனெனில் சுமந்திரனின் அரசியல் அணுகுமுறைகள் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. சுமந்திரனின் தோல்வியெ…

  18. முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம்: அவசியம்தான்; ஆனால்...! பைஸ் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைக் கொண்­டு­வர அர­சாங்கம் தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக செய்­திகள் வெளி­யா­னதைத் தொடர்ந்து அது தொடர்­பான வாதப் பிர­தி­வா­தங்­களும் சந்­தே­கங்­களும் சர்ச்­சை­களும் தோற்றம் பெற்­றி­ருக்­கின்­றன. இதுவே இன்று முஸ்­லிம்கள் மத்­தியில் பிர­தான பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருப்­ப­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது. இரு வாரங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற அமைச்­ச­ரவைத் தீர்­மா­னங்­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்­டி­லேயே இச் சட்­டத்­தி­ருத்தம் தொடர்­பான தகவல் வெளி­யி­டப்­பட்­டது. ''முஸ்லிம் சட்­டத்தின் கீழ் திரு­மணம் முடிப்­ப­தற்­கான…

  19. இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு அரசியல்- இந்தியாவும் 13 ஆவது திருத்தச் சட்டமும் இலங்கை அரசுக்கு ஈழத்தமிழர்கள் தொல்லை கொடுக்கக் கூடாதென்பது இந்தியாவின் நிலைப்பாடு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு என்ற அடிப்படையில், கடல்சார் கூட்டுப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்துழைப்பு (Maritime Domain Awareness--MDA) நடவடிக்கைகளை சில நாட்களுக்குள் இலங்கை ஆரம்பிக்க வேண்டுமென்று கட்டளையிட்டிருக்கின்றார். இதனைக் கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். இனப்பிரச்சனைக்குத் தீர்வாக இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு உட்பட 1…

    • 0 replies
    • 477 views
  20. வடக்கில் தீவிரமடையும் நில அபகரிப்பு – இதயச்சந்திரன் Posted by sankathinews on May 1st, 2013 மே 2009 இற்குப் பின்னர் வட -கிழக்கிலுள்ள 7000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் படையினர் நிலை கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. ஏறத்தாள 2500 சைவக் கோவில்களும் 400 இற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களும் அழிக்கப்பட்ட அதேவேளை , அவற்றை மறுபடியும் நிர்மாணிப்பதற்கு படைத்தரப்பு அனுமதியளிக்க மறுப்பதாக மக்கள் கூறுகின்றனர். ஆனாலும் வடக்கில் வீசும் வசந்தம் ,புத்தர் சிலைகளையும், பௌத்த கோபுரங்களையும் அரசின் அனுமதியோடு அழைத்து வருகிறது. கனகராயன் குளத்தில் பௌத்த தூபிகளும், கிளிநொச்சியில் தியானத்தில் ஆழ்ந்துள்ள பிரமாண்டமான புத்தர் சிலையும், திருக்கேதீஸ்வர ஆலயத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் மகாதோட்…

  21. ஜெனீவாவும் இறைமையும் -எம்.எஸ்.எம். ஐயூப் இலங்கை தொடர்பாக, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளால் முன்வைக்கப்பட்ட பிரேரணையொன்று, நேற்று (23) ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முன்னர் அது, நேற்று முன்தினம், அதாவது திங்கட்கிழமையே வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்தது. “இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக, பேரவைக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த நாடுகளை விட, அதற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த நாடுகளே அதிகம்” எனக் கூறிக்கொண்டு இருந்த இலங்கை அரச தலைவர்களும் அதிகாரிகளும், பின்னர் நிலைமை மாறிவிட்டதை ஒப்புக் கொண்டனர். அரச தலைவர்கள், இந்த விடயத்தில் நடந்து கொண்ட முறை, விந்தையானது என்றே கூற வேண்டும். ஒருபுறம், தாம் பிரேரணையை நிராகரிப்…

  22. தமிழ், முஸ்லிம் இன அடையாள கட்சிகளின் செல்வாக்கில் வீழ்ச்சி? வடக்கு, கிழக்கின் அரசியல், ‘எதிர்நிலை’ மாற்றங்களை நோக்கிச் செல்கிறதா? இந்தப் பிராந்தியங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் முன்னரை விட, வாய்ப்பானதொரு சூழல் ஒன்று உருவாகி வருகிறதா? பிராந்தியக் கட்சிகள் அல்லது இன அடையாளக் கட்சிகள் என்பவற்றின் செல்வாக்கு வீழ்ச்சியடைகிறதா? அதாவது, தமிழ் மற்றும் முஸ்லிம் தேசியவாதக் கட்சிகளின் ஆதிக்கம் வலுவிழக்கிறதா? மக்கள் தமது தேவைகளுக்குப் பொருத்தமானது என நம்பும் புதிய வழிகளைத் தேடுகின்றனரா? அதற்கான காரணம் என்ன? பிராந்தியக் கட்சிகளை விட, தேசியக் கட்சிகள் என்று குறிப்பிடப்படும் சு.கவும் ஐ.தே.கவும் வடக்…

  23. அபிவிருத்தியின் அரசியலை புரிந்து கொள்ளல் இலங்கையில் கடந்த நான்கு தசாப்தகாலம் யுத்தமும் அதனுடன் இணைந்த விடயங்களுடனும் கடந்து போய்விட்டது. இரத்தத்துடன் ஊறியிருக்கிற சந்தேகம், வெப்புசாரம், கோபம் போன்ற பலவற்றையும் வெளியேற்றுவது என்பது சாதாரணமாக நடைபெறக்கூடிய விடயமல்ல. இந்த இடத்தில்தான், அபிவிருத்திகளின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கும் அதன் பயன்களை முழுமையாக ஏற்றுக்கொள்வதற்குமான மனோநிலை நம்மவர்கள் மத்தியில் உருவாகவில்லை. அதுவும் வடக்குக் கிழக்கில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியும் அதன் முன்னேற்றமுமே தேவை என்கிற வகையிலான வாதங்கள் முன்வைக்கப்பட்ட வண்ணமே இருக்கின்றன. அபிவிருத்தி என்றால் ஒரு நாட்ட…

  24. கேற் குரோனின் பேர் மான் செவ்வாய் அதிகாலை பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவர் நாட்டை விட்டு சென்றுவிட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் அவரின் பயணம் திட்டமிடப்பட்ட ஒன்று என்று இலங்கை அரசாங்கம் பின்னர் அறிவித்திருந்தது. தூதுவர் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் அவர் புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்தக் காலகட்டமானது ஐயுறவை தோற்றுவித்திருக்கிறது. அதற்கு முதல் நாள் தூதுவர் ஜகத் ஜயசூரிய போர்க் குற்றங்களுக்கான பொறுப்பாக இருந்தார் என்று மனித உரிமைக் குழுக்கள் குற்றம்சாட்டி அவருக்கெதிராக குற்றவியல் முறைப்பாட்டை தாக்கல் செய்திருந்தன. ஜயசூரிய வேறு ஐந்து இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் தூதுவராக விளங்குகிறார். அவர் முன்னாள் இராணுவ ஜெனரல். 200…

  25. இடைக்கால அறிக்கையும் யதார்த்த நிலைமையும் – பி.மாணிக்கவாசகம்:- பதட்டமும் பரபரப்பும் மிக்க ஒரு சூழலில் ஆரம்பித்துள்ள புதிய அரசியலமைப்புக்கான விவாதம் எந்த வகையில் சென்று முடிவடையும் என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. அரசியலமைப்பு என்பது நாட்டின் வருங்கால ஆட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் செல்நெறியின் முதுகெலும்பாகும். எனவே, மிகுந்த பொறுப்போடும், நிதானமாகவும் நேர்மையாகவும் நாட்டு மக்கள் அனைவருக்கும் விசுவாசமான முறையிலும் அது உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய பொறுப்புணர்ச்சியுடன், அனைத்துத் தரப்பினராலும் இதற்கான முயற்சி முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான விவாதம் நடத்தப்படக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.