Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தப்பாகிப் போகின்ற – ரணிலின் ராஜதந்திரம்!! நான் நேற்­றும் இன்­றும் யாழ்ப்­பா­ணத்­திலே இருந்­தேன். நான் 2010ஆம் ஆண்­டி­லும் யாழ்ப்­பா­ணத்­துக்­குச் சென்­றி­ருந்­தேன். 2015ஆம் ஆண்­டில் இன்­றைய அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்­றும் முன்­னாள் அர­ச­த­லை­வர் சந்­தி­ரிகா குமா­ர­ண­துங்க ஆகி­யோ­ரு­ட­னும் யாழ்ப்­பா­ணத்­துக்­குச் சென்­றி­ருந்­துள்­ளேன். அன்­றைய நில­மை­யில் எம்­மீது யாழ்ப்­பாண மக்­கள் மத்­தி­யில் சந்­தேக உணர்வு இருந்­ததை நான் உணர்ந்­தி­ருந்­தேன். ஆனால் இன்று அவற்­றுக்­கெல்­லாம் மாறா­ன­தொரு அர­சி­யல் பார்வை யாழ்ப்­பாண மக்­கள் மத்­தி­யில் நில­வு­கி­றது’’…

  2. றோ, சிறிசேன, சம்பந்தன் யதீந்திரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளுக்கான அமைப்பு (Research and Analysis Wing – RAW) கொலை செய்வதற்கு சதிசெய்வதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இந்தத் தகவல் இலங்கையின் அரசியலில் மட்டுமல்ல இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உலகின் முக்கிய ஊடகங்கள் அனைத்தும் இந்த செய்தியை முக்கித்துவப்படுத்தி பிரசுரித்திருக்கின்றன. கடந்த செய்வாக்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் உரையாற்றும் போதே மைத்திரிபால சிறிசேன இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். இந்தத் தகவலை முதல் முதலாக கொழும்பிலிருந்து வெளிவரும் எக்கநொமிநெக்ஸ்ட் (economynext.com) இணையத்தளமே வெளிப்படுத்தியிருந…

  3. புதன்கிழமை, 06 யூலை 2011, 11:05.14 AM GMT உலக மயமாதலில், யாவும் வணிகமயமாகி மானுட உயர் மதிப்பீடுகள் உடைந்து கொண்டிருக்கும் நிலையில், மனித நேயம் குறித்து உரத்துச் சொல்வது கேலிப் பொருளாகி விட்டது.இந்திய இராணுவத்தை விமர்சித்தார் என்ற காரணத்திற்காக ஒருநாள் சிறைவாசம் அனுபவித்த அருந்ததிராய், ""இந்தியாவில், வெளியில் வாழ்வதை விட, சிறை வாழ்க்கையே மேல்'' என்று கூறியது நினைவிற்கு வருகிறது. அறிவுத் துறையின் காற்றுத்தழுவாத அதிகார வர்க்கத்திடமிருந்து எதனை எதிர்பார்க்க முடியும். இன்று தமிழினம் சிக்கியுள்ள முரண்பாடுகள் பற்றியதான விழிப்புணர்வு, அடிபணிவு அரசியல்வாதிகளாலும், தோல்விகளைத் தமது சுய இருப்பிற்காகப் பயன்படுத்திக் கொள்பவர்களாலும் சிதைக்கப்பட்டுள்ளன. கொடுமையா…

  4. குருந்தூர் மலை பொங்கல் விழாவை இனவாதப்படுத்தும் சக்திகள் புருஜோத்தமன் தங்கமயில் வடக்குக் கிழக்கைச் சேர்ந்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கொழும்பிலுள்ள வீடுகளை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்துவதற்கான அழைப்பை, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில விடுத்திருக்கின்றார். முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் அமைந்துள்ள ஆதி சிவன் ஐயனார் கோவிலில், கடந்த வாரம், நீதிமன்ற அனுமதியோடு பொங்கல் விழா நடைபெற்றது. அந்தப் பொங்கல் விழாவை தடுத்து நிறுத்துவதற்கு, பொலிஸாரும் தொல்லியல் திணைக்களமும் பௌத்த சிங்கள அடிப்படைவாத அமைப்புகளும் பல வழிகளிலும் முயன்றன. இறுதியாக, நீதிமன்றம் சென்று பொங்கல் விழாவை தடுத்து நிறுத்துவதற்கு முயன்றன. எனினும், முல்லைத்தீவு நீதவா…

  5. நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் என்.கே. அஷோக்பரன் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா திடீரென்று தனது பதவியை இராஜினாமச் செய்தது இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பான கேள்விகள் மீண்டும் எழுப்பப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. 23.09.2023 திகதியிடப்பட்ட, நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு முகவரியிடப்பட்ட தனது பதவிவிலகல் கடிதத்தில், நீதிபதி சரவணராஜா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாலும், அதிக அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாலும் தனது பதவியை இராஜினாமாச் செய்வதாகவும், குறிப்பிட்டிருக்கிறார்.நீதிபதி சரவணராஜாவின் திடீர் பதவிவிலகலின் முன்னர், அவர் குருந்தூர்மலை வழக்கை விசாரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கானது தேசியளவில் பேசப்பட்ட வழக்காக …

  6. தேசிய பாதுகாப்பும் 19ஆவது திருத்தச்சட்டமும் by A.Nixon புதிய அரசின் நூறுநாள் வேலைத் திட்டத்தில் 19ஆவது திருத்தச்சட்டம் முக்கியமானது. குறிப்பாக நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்திற்கும் பிரதமருக்கும் அதிகாரங்கள் பகிரப்படும் என்பது குறித்து மக்களுக்கும் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், வர்த்தமானி அறிவித்தலின் மூலப் பிரதியில் கூறப்பட்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது குறித்த விடயங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகளும் தொழிற்சங்க அமைப்புகளும் குற்றம் சுமத்தியிருந்தன. ஆதரிக்கவேண்டிய தேவை வர்த்தமானி அறிவித்தலின் மூலப்பிரதியில் கூறப்பட்டிருந்த நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றுதல் என்பதும், ஜன…

  7. அமெரிக்காவின் கைமீறிப்போன போர் அரசியல் ஆய்வாளர் அரூஸ்

  8. தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்குத் தமிழ்த் தலைமைகளின் பதில் என்ன? Editorial / 2019 ஜனவரி 31 வியாழக்கிழமை, மு.ப. 01:49 Comments - 0 தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் போராட்டம், புதிய கட்டத்தை அடைந்த போதும், சமரச அரசியல் அவர்களை இன்னொரு முறை ஏய்த்திருக்கிறது. அவர்களின் நியாயமான கோரிக்கைகள், ஆண்டாண்டுகளாக மறுக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் மிக நீண்டகாலமாக ஒடுக்கப்படும் சமூகங்களில், மலையகத் தமிழர்கள் முதன்மையானவர்கள். வடக்கு-கிழக்கை மய்யமாகக் கொண்டியங்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், தொடர்ந்து நடைபெறும் சம்பள உயர்வுப் போராட்டம் தொடர்பில், என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்கள், அவர்கள், யாருடைய பக்கம் நிற்கிறார்கள்? இவை கேட்க வேண்டிய வினா…

  9. ஈஸ்டர் குண்டுவெடிப்புகளில் அதிக அரசியல் லாபமீட்டக்கூடியவர்கள் மகிந்தவாதிகள் தான். எந்த ஒரு நிலைமையையும் தமக்கு சாதகமாக திசைதிருப்பிக்கொள்ளும் அரசியல் வியூகத்தை வடிவமைப்பதில் இலங்கையில் வல்லவர்களாக இருப்பவர்கள் மகிந்தவாதிகள் தான். ஈஸ்டர் படுகொலையில் அதிக அரசியல் லாபம் ஈட்ட முயற்சித்துக்கொண்டிருப்பவர் கோத்தபாய. அதிக அரசியல் லாபம் அடையக் கூடியவரும் அவர் தான். பிரதான கட்சிகள் இன்னமும் ஜனாதிபதித் தேர்தலில் தமது வேட்பாளர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதிலும், வெளிப்படையாக பகிரங்கப்படுத்துவதிலும் ராஜதந்திரத்துடன் அணுகுவதாக அக்கட்சிகள் நம்பிக்கொண்டிருக்கின்றன…

  10. அனுரா ஜனாதிபதியாவார். ரணில் மூன்றாமிடம். அடுத்த பாராளுமன்றை சயித் கைப்பற்றுவார். அனுராவின் ஆட்சி ஒரு வருடத்தில் கலைக்கப்படும். இதை நான் சொல்லவில்லை மேலே உள்ள காணொளியில் சொல்லிக் கொள்கிறார்கள்.

  11. அநுரகுமார திசாநாயக்கவை (Anura Kumara Dissanayake) தோற்கடிக்க வேண்டுமென்று ஆசைப்பட்ட ஒரு நாடு ( இந்தியா) எப்படி அவருடன் ஒரு சுமூகமான ஒரு உறவை பேண முடியும் என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா கேள்வியெழுப்பியுள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அநுரகுமார திசாநாயக்கவும் இந்தியாவும் ஒருவரையொருவர் கைவிட முடியாத நிலையிலே உள்ளனர். இந்திய வெளிவிவகாரதுறை அமைச்சரின் இலங்கைகைக்கான பயணம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கையில் ஏனைய நாடுகள் தலையீடுவதை விரும்பவில்லை. இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது ஜனா…

  12. சீனா 70: வரலாறும் வழித்தடமும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ உண்மைகள் கறுப்பு, வெள்ளையாக என்றும் இருந்ததில்லை. எமக்குச் சொல்லப்படுவதன் அடிப்படையிலேயே, நாம் முடிவுகளை வந்தடைகிறோம்; அதில் தவறில்லை. ஆனால், நமக்கு சொல்லப்படுபவை பற்றியும் அதன் உண்மைத் தன்மை பற்றியும் ஆராய்வது முக்கியமானது. அதனடிப்படையில், நாம் புதிய தகவல்களைப் பெறும்போது, எம்மைத் நாம் திருத்திக் கொள்வதற்காகத் திறந்த மனத்துடன் இருக்க வேண்டும். சீனா பற்றி, தமிழ் மக்கள் மத்தியில் தவறான பிம்பம் கட்டப்பட்டுள்ளது. சீனா, தமிழ் மக்களின் எதிரி என்றும் இலங்கை அரசாங்கத்தின் நண்பன் என்றும் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்துள்ளது. இந்தியா பற்றியும் மேற்குலகு பற்றியும் நாம் அனுபவரீதியாக உணர்ந்த பின்னரும்,…

  13. இணக்கப்பாட்டின் அவசியம் Published on 2019-11-24 15:36:50 இலங்கை இன ரீதி­யாக இரு முனை­களில் கூர்மையடைந்­தி­ருக்­கின்­றது. இந்தக் கூர்­மையின் வெளிப்­பா­டா­கவே நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்தல் அமைந்­துள்­ளது. அதில் வெற்றி பெற்­றுள்ள ஜனா­தி­பதி கோத்தபாய ராஜபக் ஷ சிங்­கள மக்­களின் ஏக­போக தலை­வ­ராகத் தலை­நி­மிர்த்­தி­யுள்ளார். மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கு அடுத்­த­தாக ராஜபக் ஷ குடும்பம் இந்தத் தேர்­தலில் மீண்டும் ஜனா­தி­பதி பத­வியைத் தன்­னு­டை­மை­யாக்கிக் கொண்­டி­ருக்­கின்­றது. தேசிய அளவில் தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­ப­தி­யாக அல்­லாமல் மிக மிகப் பெரு­ம­ளவில் சிங்­கள பௌத்த மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட அரச தலை­வ­ராக, தேசிய மட்­டத்­தி­ல…

    • 0 replies
    • 618 views
  14. தமிழ் மக்களின் விடுதலையும் ஏமாற்று தலைமைகளும் ஒருவாறு ஜனாதிபதித் தேர்தல் முடிந்துவிட்டது. அதன் சலசலப்பு அடங்கும் முன், அடுத்த தேர்தல் எம்முன் வந்து நிற்கிறது. வழமைபோல, இம்முறையும் தமிழர் உரிமை, தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணயம் என்று ‘பட்டங்கட்டி’ ஆட, வழமைபோலவே எமது அரசியல் தலைமைகள் தயாராகின்றன. சொன்ன பொய்க் கதைகளைத் திருப்பிச் சொல்ல இயலாது. எனவே, புதிய பொய்களைச் சொல்ல வேண்டும்; அல்லது, பழைய பொய்களுக்குத் தூசி தட்டி, வண்ணம் பூசி, புதுவடிவில் கொடுக்க வேண்டும். நம்முன் உள்ள கேள்வி யாதெனில், இன்னும் ஒரு முறை ஏமாறுவதற்கு, நாங்கள் தயாரா என்பதுதான். இன்னுமொருமுறை மட்டுமன்றி, என்றென்றைக்கும் ஏமாற்றுவதற்கு ‘அவர்கள்’ தயாராகவே இருக்…

  15. சி.ஐ.ஏயின்(C.I.A) ரகசியங்கள் http://youtu.be/4RXPJmqkxmI

    • 0 replies
    • 1.4k views
  16. என்ன செய்யப் போகிறார்கள் தமிழ் தலைமைகள்? என்.கே. அஷோக்பரன் / 2020 ஜனவரி 27 , மு.ப. 01:28 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரான பத்திகளில், 2015 தோல்விக்குப் பின்னரான, மீண்டெழும் படலத்தின் அரசியல் நிலைப்பாடு பற்றி குறிப்பிடும் போது, இந்தத் தேர்தலில், ‘ராஜபக்‌ஷ என்ற ஆளுமையும் ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத வாக்குவங்கியும் தான் அவர்களது அரசியல் மூலதனம்’ என்று குறிப்பிட்டிருந்தேன். அதன்படியே ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத நிகழ்ச்சி நிரலை முன்வைத்து, கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் இலகுவான வெற்றியை ஈட்டியிருந்தார். தேர்தல் வெற்றிக்குப் பின்னர், தனது அரசியல் நிலைப்பாட்டை மிகத் தௌிவாக, ‘இந்த தேர்தலின் பிரதான செய்தியானது, பெரும்பான்மை சிங்கள வாக்குகளே, நான் ஜ…

  17. தமிழ் மக்கள் ஐநாவில் நம்பிக்கையிழக்கிறார்களா? நிலாந்தன். எர்னெஸ்ற் ஹேமிங்வே ஓர் அமெரிக்க எழுத்தாளர்.அவர் எழுதிய A Farewell to Arms- “போரே நீ போ” என்ற நாவல் உலகப் புகழ்பெற்றது. கதையின் களம் இரண்டாம் உலக மகாயுத்தத் சூழலுக்குரியது. நாவலின் மையப் பாத்திரம் போரினால் சப்பித் துப்பட்ட ஒரு கட்டத்தில் பின்வரும் பொருள்படக் கூறும் “இப்பொழுது சமாதானம்,அமைதி,போர் நிறுத்தம் போன்ற வார்த்தைகள் அவற்றின் புனிதத்தை இழந்து விட்டன.வீதிகளின் பெயர்கள்,ரெஜிமென்ற்களின் பெயர்கள்,படைப்பிரிவின் பெயர்கள்தான் அவற்றுக்குரிய அர்த்தத்தோடு காணப்படுகின்றன.” என்று. இது கடந்த 16ஆண்டுகளாகத் தமிழ் அரசியலில் கூறப்பட்டு வருகின்ற “நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல்,நிலைமாறுகால நீதி”போன்ற வார்த்தைகளுக்கும் பொருந்துமா? …

  18. காணாமல் போனோர் விடயத்தில் ஐ. நா. கூறுவது என்ன? இலங்­கைத்­தீவில் அர­சியல் கார­ணங்­களின் அடிப்­ப­டையில் காணாமல் போவோர் என்­பது இன்று நேற்று அல்ல குறைந்­தது, கடந்த 45 வரு­டங்­க­ளாக, அதா­வது தெற்கில் சேகு­வ­ரா க்கள் என அன்று கூறப்­பட்ட ஜே.வி.பி.யினரின் 1971 ஆவது கிளர்ச்சியில் இருந்து தொடர்ந்து நடை­பெற்று வரு­கி­றது. அன்று தெற்கின் சிங்­கள இளைஞர், யுவ­தி­க­ளுடன் ஆரம்­ப­மா­கிய காணாமல் போகும் விடயம், 1972 ஆம் ஆண்டின் பிற்­ப­கு­தியில் வடக்கு, கிழக்கில் தமிழ் இளை­ஞர்கள் காணாமல் போவது ஆரம்­ப­மா­கி­யது. அன்று வடக்கு– கிழக்கில் காணாமல் போனோ­ர் அர­ச­ப­டை­க­ளினால் படு­கொலை செய்­யப்­பட்டு, அவர்களது உடல்கள் தமி­ழர்­க­ளது தாயக பூமியின் நாலா­பக்­கமும் …

  19. தமிழரசை அழிக்க வெளியிலிருந்து யாரும் வரத் தேவையில்லை ! January 3, 20218:25 am “உன்னாலே நான் கெட்டேன்; என்னாலே நீ கெட் டாய் ” என்று மாறி மாறிச் சொல்லித் தோப்புக்கரணம் போடுகின்றனர் சுமந்திரனும், மாவையும். இன்று தமிழர் அரசியலில் உள்ள சம்பந்தன் ஐயாவுக்கு அடுத்ததாக ஏதோவகையில் மக்கள் பிரதிநிதியாக விளங்கியவர் என்ற வரலாறு சொலமன் சூ சிறிலுக்கு உண்டு. இராசா.விஸ்வநாதன் யாழ். மாநகரசபை முதல்வராக இருந்த காலத்தில் சபை உறுப்பினராக விளங்கியவர் ( 1970 களில் ). 2004 தேர்தலில் நமது ஈழ நாடு நாளிதழ் கட்டம் கட்டப்பட்ட செய்தியாக “மாவையும் வெற்றி பெற்றார்” என்று எதனையோ சூசகமாகச் சுட்டிக்காட்டியது. இத்தேர்தலில் சிறிலும் போட்டியிட்டார். 2009 இன் பின்னர் கட்சித் தலைமை, பேச்சா…

  20. எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்லை நிர்­ணய அறிக்கை மாகாண சபைகள் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­விடம் எல்லை நிர்­ணயக் குழுவின் தலைவர் அசோக்க பீரி­ஸினால் கடந்த 17 ஆம் திகதி கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில், உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தேர்தல் புதிய முறைப்­படி நடத்த இருப்­ப­தாக மாகாண சபைகள், உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்­தபா திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்ளார். உள்­ளூராட்சி தேர்­தலில் புதிய முறை­மையில் உள்ள குறை­பா­டுகள் மற்றும் விமர்­ச­னங்­களை கவ­னத்தில் கொள்­ளா­மலும், எல்லை நிர்­ணய குழு­வி­னரின் அறிக்­கையில் தேவை­யான சட்­டத்­தி­ருத்­தங்­களை செய்­யா­மலும் அவ­ச­ர­மாக வர்த்­த…

  21. புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை சொல்லும் புதிய செய்தி -புருஜோத்தமன் தங்கமயில் பிரித்தானியத் தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை உள்ளிட்ட ஏழு புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் 388 தனிநபர்களுக்கும் எதிரான தடையை, இலங்கை அரசாங்கம் மீண்டும் விதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பிலான 46/1 பிரேரணை நிறைவேற்றப்பட்ட சில நாள்களுக்கு உள்ளேயே, புலம்பெயர் தமிழ் அமைப்புகள், தனிநபர்களுக்கு எதிரான தடையை அரசாங்கம் விதித்துள்ளது. குறித்த அமைப்புகளுக்கும் தனி நபர்களுக்கும் எதிரான தடை, ராஜபக்‌ஷர்களின் கடந்தகால ஆட்சியின் போதும் விதிக்கப்பட்டிருந்தது. எனினும், நல்லாட்சிக் காலத்தில், குறிப்பாக 2016ஆம் ஆண்டில் சம்பந்தப்பட்ட அமைப்புகள், தனி நப…

  22. முள்ளிவாய்க்கால் யுத்தம்: கிழக்கு மாகாண மக்களின் மன உணர்வுகள் – மட்டு.நகரான் 4 Views தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது பல்வேறு இழப்புகளையும், வேதனைகளையும் கொண்ட இரத்தம் சிந்திய சதையும், இரத்தமும் கலந்ததாகவே இருந்து வந்தது. இந்தப் போராட்டத்தின் மூலம் பலர் செய்த தியாகங்களை தமிழர்கள் மனதில் கொள்ள வேண்டியது கட்டாய கடமையாகும். இன்று அபிவிருத்தி பற்றி பேசும் தமிழர்கள், இந்த இழப்புகள் எதற்காக இடம் பெற்றன என்பது பற்றி சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தமிழ் மக்கள் பல இழப்புகளை தொடர்ச்சியாக அனுபவித்தாலும், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் மிகவும் மறக்கமுடியாத அல்லது இழப்பின் உச்சமாக அமைந்தது முள்ளிவாய்க்க…

  23. மரவள்ளிக்கிழங்கைச் சாப்பிடும் ஒரு காலம் வருமா? - நிலாந்தன். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்னிலங்கை மைய ஊடகங்கள் ஒளிபரப்பிய காணொளிகளில் ஒன்றில் ஒரு பண்டிகை நாளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்காக வரிசையாக நிற்கும் மக்களை காட்டின. வேறொரு காணொளியில் மண்ணெண்ணைக்காக காத்து நிற்கும் நீண்ட வரிசை காட்டப்படுகிறது. மூன்றாவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன் கடவுச்சீட்டை பெறுவதற்காக காத்திருக்கும் நீண்ட வரிசை. இவ்வாறு வரிசையில் நிற்கும் மக்களை ஊடகங்கள் பேட்டி காண்கின்றன. அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை தொகுத்துப் பார்த்தால் சுமார் இருபது மாதங்களுக்கு முன்பு ஒரு இரும்பு மனிதன் வேண்டுமென்று கூறி அவர்கள் வழங்கிய மூன்றிலிரண்டு பெரும்பான்மை அதன் மகிமையை இழந்து விட்ட…

  24. கொண்டாடப்பட வேண்டியதா ஷரீபின் வீழ்ச்சி? சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை இரசிப்பவர்களுக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீது, அலாதியான ஒரு விருப்பம் அல்லது கவனம் காணப்படும். மிகவும் குழப்பமான அணியாகத் தென்பட்டாலும் கூட, அவ்வப்போது தனது உச்சக்கட்டப் பலத்தை வெளிப்படுத்தி, மிகப்பெரிய அணிகளைக் கூட வீழ்த்திவிடும் இயல்பு, அவ்வணிக்கு உள்ளது. அண்மையில் கூட, ‘சம்பியன்ஸ்’ கிண்ணத் தொடரை, யாரும் எதிர்பாராத வண்ணம் கைப்பற்றியிருந்தது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இந்த இயல்பு, அந்நாட்டுக் கிரிக்கெட் அணிக்கு மாத்திரம் உரித்தான இயல்பு என யாராவது எண்ணினால், அது தவறாகும். அது, பாகிஸ்தான் என்ற நாட்டுக்குச் சொந்தமான இயல்பு. …

  25. பௌத்த விகாரையும் பயங்கரவாத தடை சட்டமும் கடும்போக்­கா­ளர்­களான பொது­ப­ல­சேனா உள்­ ளிட்ட பௌத்த மத தீவி­ ர­வாத அமைப்­புக்­களைச் சேர்ந்த பிக்­கு­களும், அந்த கொள்கை சார்ந்த அர­சியல் தீவி­ர­வா­தி­களும் ஏனைய மதங்­க­ளையும் அவற்றைப் பின்­பற்­று­ப­வர்­க­ளையும் அச்­சு­றுத்தி வரு­கின்­றார்கள். சிறு­பான்மை மதங்கள் மீது குறிப்­பாக இஸ்லாம் மதத்தின் மீதும் முஸ்­ லிம்கள் மீதும் வன்­மு­றை­களில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றார்கள். அதே­வேளை, வடக்­கிலும் கிழக்­கிலும் இந்து மதத்தை அச்­சு­றுத்தி ஒடுக்­கு­வ­தற்­காக மென்­மு­றை­யி­லான ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள். மன்னார் மாவட்ட பொது அமைப்­புக்­களின் ஒன்­றியத் தலைவர் வி.எஸ்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.