Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஸ்பெயினின் கற்றலோனியா - இலங்கையில் ஈழம்: ஒற்றுமையும், வேற்றுமையும் [ திங்கட்கிழமை, 10 டிசெம்பர் 2012, 09:04 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவில் தொடர்ந்தும் அதிகாரத்துவம் அதிகரித்துச் செல்லுமாயின் இங்கு வாழும் சிறுபான்மை இனங்கள் மத்தியில் குறிப்பாக தமிழ் சமூகத்தினர் மத்தியில் பிரிவினைவாதமும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இது விரைவில் இந்தியாவிலும் குழப்ப நிலையை உண்டாக்கும். இவ்வாறு பேராசிரியர் குமார்டேவிட் Colombo Telegraph [December 1, 2012] ஊடகத்தில் எழுதிய ஆய்வுக்கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. ஸ்பெயினின் கற்றலோனியாவில் [Catalonia] நவம்பர் 25 அன்று மாகாணங்களுக்…

  2. Started by akootha,

    மஹிந்தவின் நல்லாட்சியில் மக்கள், நீதி, நிர்வாகம் என்பவற்றுக்கான வரைவிலக்கணங்கள் மாற்றி எழுதப்பட வேண்டும். இது உலகப் பொதுக் கொள்கைகளுக்கு முரணானதாகவே அமைக்கப்பட வேண்டும். இதன் மூலமே அவரின் கருத்தை மெய்ப்பிக்க முடியும். நாட்டில் நல்லபடி ஆட்சி நடக்கிறது. இதனை விரும்பாத சிலர் அரசுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர். நீதித்துறையும், நிர்வாகத்துறையும் சீராக இயங்குவதால் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு அவை இடைஞ்சலாக உள்ளன. இதன்காரணமாகவே பொய்ப் பிரசாரங்கள், சதிமுயற்சிகள் அரசின்மீது கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதனைக் கண்டு அஞ்சவேண்டிய தேவை எமக்கில்லை". அண்மையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்து இது. நீதி நி…

    • 0 replies
    • 676 views
  3. "தமிழீழ முழக்கத்துடன் மீண்டும் சிலிர்த்து எழும் தமிழ் இளையோர்" உலகில் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவதற்கான அக, புற நிலைகளை இலங்கைத் தீவில் உருவாக்கிய பெருமை சிங்கள வன்கொடுமையாளர்களையே சாரும். அது மட்டுமல்லாமல், இலங்கைத் தீவில் தமது வர்நிலையை மேம்படுத்துவதற்கான தேவைகளைக் குறிவைத்து அமைதி வாழ்வு வாழ்ந்த ஈழத் தமிழர்களைப் புலியாகப் பாயவைத்த பெருமையும் சிங்கள இனவாதிகளுக்கே சேரும். சிங்கள இனவாத, வன்கொடுமைகளுக்கு ஈழத் தமிழர்கள் அனைத்தையும் இழந்து நின்ற முள்ளிவாய்க்காலின் பின்னரான காலங்களிலும் சிங்கள இனவாதம் தன்னை மறு ஆய்விற்கு உள்ளாக்கவில்லை. மாறாக, பெரும் இன அழிப்புப் போர் ஒன்றினால் பெற்ற வெற்றியின் போதையில், அதை இன்னொரு மகாவம்ச வெற்றியாகக் கணித்துக்கொண்ட சிங்…

    • 2 replies
    • 719 views
  4. சம்பவம் 1 பேராசிரியர் மோகனதாஸ் துணைவேந்தராக இருந்தகாலப்பதியில் பல்கலைக்கழக மாணவர்கள் போர்நிறுத்தக் கண்காணிப்பு அலுவலகம் நோக்கி நடாத்திய அமைதிப் பேரணி இராணுவத்தினரால் தடுக்கப்பட்டு மிகமோசமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டு மாணவர்கள் மட்டுமன்றி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் எனப் பலரும் துப்பாக்கிப் பிடிகளாலும் பொல்லுகளாலும் தாக்கப்பட்டனர். இத் தாக்குதலின் போது தன்னை துணைவேந்தர் என சிங்களத்தில் அறிமுகம் செய்த போதும் பேராசிரியர் மோகனதாசும் அவரோடு சேர்த்து அப்போதைய கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவச்சந்திரனும் மோசமாக தாக்கப்பட்டனர். படையினரின் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் மருத்துவபீட மாணவர் ஒன்றியத் தலைவர் காண்டிபன் தலையில் படுகாயம் அடைந்து நினைவிழந்த நிலையில் பேர…

    • 2 replies
    • 999 views
  5. பெளத்த பேரினவாதம்: சிறிலங்காவை ஒத்த பண்புகளுடன் மியன்மார் [ வெள்ளிக்கிழமை, 07 டிசெம்பர் 2012, 09:49 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவில் ஆட்சியிலுள்ள மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தால் தீனி போடப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட தீவிர தேசியவாத அரசியல் கலாசாரத்திற்கும், மியான்மாரிலுள்ள முஸ்லீம்களை எதிர்க்கும் புத்த பிக்குகளுக்கும் இடையில் சில ஒத்தபண்புகள் காணப்படுகின்றன. இவ்வாறு The Myanmar Times என்னும் ஊடகத்தில் Alex Bookbinder* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. மியான்மாரின் Sagaing என்கின்ற இடத்தைச் சேர்ந்த 29 வயதான அஷின் மெற்றாக்காரா என்கின்ற மதகுரு அவரது நாட…

  6. சிங்கள மக்கள் புரிந்து கொண்டார்கள்; ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவில்லையே... ஏன்? "இப்ப தம்பி, ஆ... ஊ ... எண்டால் எல்லாரும் கொடியைப் பிடிச்சுக்கொண்டு கிளம்பி விடுறாங்கள்’' இப்படி ஒரு வசனம் சினிமாப் படத்தில் வடிவேல் காமெடியில் வருகுது பாருங்கோ... வரும் ஆனா... வராது... என்ற அந்த காமெடியில் வரும் இந்தக் காட்சியும் எல்லாரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்ததோடு ஒரு நாட்டின் அரச நிர்வாக ஆட்சி எப்படி உள்ளது என்பதை எடுத்துக் காட்டி சிந்திக்கவும் வைத்தது பாருங்கோ ... இப்படியானதொரு நிலைவரம்தான் இப்ப இலங்கையிலும் நடந்து கொண்டிருக்குப் பாருங்கோ... அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல எப்பவுமே தமிழ் மக்களை சந்தேகத்துடனேயே பார்த்துவரும் படையினரும் பொலிஸாரும் யா…

  7. பூகோள ரீதியான சட்ட அதிகாரத்தை ஐ.நா தனது கைகளில் எடுக்காவிட்டால் போர்க்குற்றவாளிகளின் பெருங் கூட்டத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று eruditiononline.co.uk இணையத்தில் Alex Longley எழுதியுள்ள Can the UN Learn From Its Own Grave Failures? கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். Can the UN Learn From Its Own Grave Failures? http://eruditiononline.co.uk/article.php?id=1482 சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டம் தொடர்பான ஐ.நாவின் நடவடிக்கைகளை உள்ளடக்கிய உள்ளக அறிக்கை கடந்த நவம்பர் மாத ஆரம்பத்தில்,வெளியிடப்பட்டது. போரில் அகப்பட்டுத் தவித்த பொதுமக்களை ஐ.நா காப்பாற்றத் தவறியுள்ளதாகவும் இந்த அறிக்கையில் குற்றம்சுமத்தப்பட்டிருந்தது. வடக்கு …

  8. ஈழத்தமிழர்களை கைவிட்டது ஐ.நா. ஈழத்தில் மூன்று தசாப்த காலம் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்தது. ஆனால் போரினால் இறந்தவர்கள், காணாமல் போனவர்கள், இழந்தவைகள் எத்தனை என்ற முழுமையான விவரம் இன்னமும் சர்வதேசத்திடம் கிடைக்கவில்லை. இறுதிப் போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் சர்வதேசப் போர் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் இலங்கை அரசு மீது போர்க் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. இன்று நிலைமை மாறி இலங்கை அரச படைகளின் கால்பட்டு சிதைந்து கொண்டிருக்கிறது. இந்தநிலைமை மாற வேண்டும். தமிழர்களுக்கு ஒரு விடிவு கிடைக்க வேண்டும். மீண்டும் தமிழர்களுடைய பிரதேசம் கட்டி எழுப்பப்பட வேண்டும். தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும். இந்த மாவீரர் நாளில் உறுதி கொள்வோம். ஈழத்தில் மூன…

    • 1 reply
    • 1.3k views
  9. அன்பு உறவுகளே பல தடைகள்,எதிர்ப்புக்கள்,துரோகங்கள்,பின்னடைவுகள்,அழிவுகளைத்தாண்டி எமக்கான ஒரு நாட்டை,சுபீட்சமான வாழ்வைக்கட்டியமைக்க வேண்டிய தேவை எம் ஒருவருக்கும் கடமைகளாக உள்ளன. சாதி,மத,கட்சிபேதங்களை மறந்து நாம் பயணிக்க வேண்டிய தேவைகள் உள்ளன. வெறும் தூற்றுதல்களும்,துதிபாடுதலும்,சேறடிப்புகளும் எம்மில் ஏதும் பயனுள்ள மாற்றங்களைச் செய்யப்போவதில்லை, சமூகம் குறித்த சிந்தனைகளே அவற்றை முன்னோக்கி வழி நடத்தும், அந்த வகையில் உறவுகளே உங்கள் சமூகம் குறித்த பார்வை என்ன? நல்லவை,தீயவை எல்லாவற்றையும் எழுதுங்கள். முரண்படும் இடங்கள்,ஒன்றுபடும் வழிகள்,மக்களை இணைக்கும் செயற்பாடுகளைத்தெரிவியுங்கள் உறவுகளே நாம் எங்கு நிற்கிறோம் என்பதை உணரமுடியும் அந்த வகையில் எதிர்காலத்திலேனும் ஒற்றுமையுடன் பயணிக…

  10. -கே.சஞ்சயன் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சிமாநாடு அடுத்த ஆண்டு ஹம்பாந்தோட்டையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த மாநாடு எந்தளவுக்கு வெற்றிகரமானதாக அமையும் என்ற கேள்விக்கு இப்போதே விடை கூறமுடியாத நிலை ஒன்று உருவாகி வருகிறது. இதற்குக் காரணம், இலங்கையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து பல்வேறு நாடுகளில் வலியுறுத்தப்பட்டு வருவதேயாகும். 2009ஆம் ஆண்டு இலங்கையில் போர் முடிவுக்கு வந்த சில மாதங்களின் பின்னர், ட்ரினிடாட் இன் டுபாகோ நாட்டின் தலைநகர் போட் ஒவ் ஸ்பெய்னில் நடந்த கொமன்வெல்த் உச்சி மாநாட்டில், 2013இல் ஹம்பாந்தோட்டையில் 23ஆவது உச்சி மாநாட்டை நடத்தும் முடிவு எடுக்கப்பட்டது. அப்போது அந்த முடிவுக்கு இலங்கை எதிர்ப்புகள…

  11. ஆனால் போரின் போது ஒருவன் இறந்து விட்டால் அவன் எதிரிப் படையைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனின் சடலத்துக்கு உரிய மரியாதை வழங்கப்படுவது காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் ஓர் இராணுவ மரபு. 1996 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் சூரியக்கதிர் நடவடிக்கை மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டை ஏற்கனவே கைப்பற்றிய அரச படையினர் சத்ஜெய நடவடிக்கை மூலம் ஆனையிறவிலிருந்து கிளிநொச்சியை நோக்கி முன்னேற முயன்ற நாள்கள் அவை. அப்போதுதான் வட இலங்கையின் கிழக்கு முனையில் ஒரு பூகம்பம் வெடிக்கிறது. விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் ஒன்று பொங்கியெழுந்து முல்லைத்தீவு இராணுவத்தளம் மீது பாய்கிறது. யாழ்.குடாநாட்டைக் கைபற்றிய வெற்றியின் மமதை சிதறடிக்கப்பட்டு முல்லைத்தளம் முற்றாகவே நிர்மூலம் செய்யப்படுகிறது. …

  12. கனடாவுக்குள் ஏதிலியெனப் புகலிடம் தேடிய ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ்க்கு சமீபத்தில் ஒரு பேட்டியை விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேசத் தொடர்பாளராக இருந்த கே.பியென்கிற குமரன் பத்மநாதன் வழங்கியிருந்தார். இப் பேட்டியில் தான் தோன்றித்தனமாக தமிழீழ விடுதலை குறித்தும் அதற்காகப் போராடிய போராளிகள் குறித்தும் கே.பி. உளறி இருக்கிறார். பத்திரிகையாளர் ஜெயராஜ் சில தசாப்தங்களாகவே தமிழீழ விடுதலைக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டு வருவதுடன், சிறிலங்காவின் மறைமுக தூதுவராகவே கனடாவில் இயங்கி வருகிறார். கே.பி. கைது செய்யப்படுவதற்கு முன்னரே நல்லதொரு உறவை ஜெயராஜ் கே.பியுடன் பேணி வருகிறார். தாய்லாந்தில் வசித்து வந்த கே.ரி.ராஜசிங்கம் போன்ற தமிழர்களைப் போன்…

    • 3 replies
    • 1.4k views
  13. போரில் உயிரிழந்த சிங்களப் படைகளுக்கு அஞ்சலி செலுத்த தமிழ் மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச்சென்று நிகழ்வை நடத்தமுடியும் என்றால், தமிழ் மக்களுக்காகவே தமது உயிர்களை தியாகம் செய்த உறவுகளுக்கு தமிழ் மாணவர்கள் ஏன் அஞ்சலிசெலுத்தக் கூடாது? ஐயோ அம்மா ! அடிக்காதேங்கோ சேர் ! இந்தக் காட்டுக் கத்தல்களை காதில் வாங்காத படைச்சிப்பாய்கள் தாக்குவதற்காகவே களமிறக்கப்பட்டது போல தொடர்ந்து தாக்கிக் கொண்டேயிருந்தார்கள். செத்த பாம்பை அடிப்பது போல் தனித்து மாட்டுப்பட்ட ஒருவன் மீது கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு தமது வீரத்தைக் காட்டினார்கள். தமிழர்களது உணர்வுகளைச் சீண்டிப் பார்த்து அதனால் வந்த விளைவுகளை தென்னிலங்கை மறந்து விட்டது. அதனால் மீண்டும் தமிழர்களது தமிழ் மாணவர்களது உணர்…

    • 2 replies
    • 798 views
  14. கட்டாக்காலி நாய்பிடிகாரர் போல பல்கலை மாணவர்களை நடுறோட்டில் வைத்து அடித்து, விரட்டிய பின்னரும் கூட ஆட்சியாளர்களின் வெறி அடங்கிய பாடாகத் தெரியவில்லை. பிரச்சினைக்கான வேர்களைப் பிடுங்குவதன் மூலம் பல்கலை மாணவருக்கு பயம் காட்டும் பாணியில் அதிகார ஏவலாளிகள் இறங்கிவிட்டார்கள். போர் முடிவுக்கு வந்து புலிகளைஒழித்து விட்டதாக அரசு அறிவித்த பின்னரும் அதற்கான தலையிடிகள் வெவ்வேறு ரூபங்களில் தொடரவே செய்தன. சனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொலிகள், புலம்பெயர் தமிழர் ஆர்ப்பாட்டங்கள், ஐ.நாஅறிக்கைகள், ஜெனிவாத்தீர்மானம் என்று ஓயாது அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்த பேரினவாதிகளுக்கு யாழ்.பல்கலை மாணவர்களும் தீராத் தலைவலியாக மாறியிருந்தார்கள். குறிப்பாக கார்த்திகை27 இல் எப்படியேனும் பல்கலை…

  15. யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்ச்சியாக ,திட்டமிடப்பட்ட வகையில் பல்கலைகழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதலானது , தொடரும் இனவழிப்பு அவலங்களின் மற்றுமோர் வடிவம், கட ந்த வருடம் அக்டோபர் மாதம் யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் பத்திற்கும் மேற்பட்டோரால் தலையில் தாக்கப்பட்டு யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இம்முறையும் இரு வேறு பீடங்களை சேர்ந்த மாணவர் ஒன்றியத் தலைவர்கள் இருவர், ஏனைய ஜந்து மாணவர்களும் கைது செய்யப்பட்டுளார்கள் .இவர்கள் அனைவரும் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகளில் முன் நின்று செயற்பட்டிருக்கிறார்கள்.இவர்களின் பெயர் விபரங்கள் பல்கலைக்கழகத்தினுள் மாணவர்களோடு இருப்பவர்களாலேயே காவ…

  16. தென்னாபிரிக்க மத்தியஸ்தம்: பிரச்சினையை தீர்க்கவா? கால அவகாசத்தைக் கொடுக்கவா? முத்துக்குமார் இந்தியாவும், நோர்வேயும் ஏறிய குதிரையில் தென்னாபிரிக்காவும் ஏறத்தொடங்கியுள்ளது. அரசின் பிரதிநிதிகள் தென்னாபிரிக்கா சென்று வந்த பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தற்போது தென்னாபிரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. கூட்டமைப்பினர் ஜனவரி மாதமளவில் தென்னாபிரிக்கா செல்லவுள்ளனர். தென்னாபிரிக்காவை களத்தில் இறக்கிவிட்டமை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தின் இரண்டாவது முயற்சி. முதலில் நோர்வேயைக் களத்தில் இறக்கிவிட்டு தோல்வியடைந்தனர். தற்போது தென்னாபிரிக்காவை களத்தில் இறக்கி சில முயற்சிகளை செய்கின்றனர். இதிலும் வெற்றி கிடைக்கும் என்பதற்கான சமிஞ்ஞைகள் தெரியவில்லை. மேற்குலகத்திற்கும்…

  17. கனடாவுக்குள் ஏதிலியெனப் புகலிடம் தேடிய ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ்க்கு சமீபத்தில் ஒரு பேட்டியை விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேசத் தொடர்பாளராக இருந்த கே.பியென்கிற குமரன் பத்மநாதன் வழங்கியிருந்தார். இப் பேட்டியில் தான் தோன்றித்தனமாக தமிழீழ விடுதலை குறித்தும் அதற்காகப் போராடிய போராளிகள் குறித்தும் கே.பி. உளறி இருக்கிறார். [size=4]பத்திரிகையாளர் ஜெயராஜ் சில தசாப்தங்களாகவே தமிழீழ விடுதலைக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டு வருவதுடன், சிறிலங்காவின் மறைமுக தூதுவராகவே கனடாவில் இயங்கி வருகிறார். கே.பி. கைது செய்யப்படுவதற்கு முன்னரே நல்லதொரு உறவை ஜெயராஜ் கே.பியுடன் பேணி வருகிறார்.[/size] [size=4]தாய்லாந்தில் வசித்து வந்த கே.ரி.ராஜசிங்கம் …

    • 82 replies
    • 4.5k views
  18. வருஷா வருஷம் வரும் கார்த்திகை 27 ஆம் திகதியை இலங்கைத் தமிழ் மக்கள் ஒருபோதும் மறந்துபோக மாட்டினம் பாருங்கோ... அந்த நாள் மக்கள் உணர்வுகளோடு கலந்திட்ட ஓர் நாள். எவ்வளவுதான் அடக்குமுறை வந்தாலும் தடைகள் வந்தாலும் அந்த நாளை தமிழ் மக்கள் மனங்களிலிருந்து எடுத்துவிடமுடியாது பாருங்கோ.... அடிக்க அடிக்கத் தான் கத்தியும் கூராவது போல் அந்த நாளில் அதை இல்லாதொழிக்க அரங்கேற்றப்படும் அடாவடிகளும் சண்டித்தனங்களும் மீண்டும் மீண்டும் அதனை நினைவுபடுத்தவே செய்யும். வன்முறைகளால் தமிழனின் மன உணர்வை மாற்றிவிடலாம் எண்டு சிங்களத் தரப்பினர் இன்னுமும் தான் நம்பிக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்குப் பாருங்கோ... தந்தை செல்வா காலத்திலிருந்து ஆயுதப் போராட்டம் வெடித்துக் கிழம்பி அது தணிந்து போ…

    • 0 replies
    • 473 views
  19. [size=4]உலகத் தமிழினம் மிக வேதனையோடு குரல் எழுப்புகின்றது. பல நாடுகள் தமிழர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துகின்றன. தமிழர்களை முன்வைத்து சதுரங்கம் ஆடுகிறார்கள். அரசியலா, அங்கும் தமிழர்களை முன்னிறுத்துகிறார்கள். ஐ.நா. நிபுணர்குழு: முள்ளிவாய்காலில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையைக் குறிப்பாகச் சொல்ல முடியாது. இருப்பினும் நாற்பதாயிரமாக இருக்கலாம்.[/size] [size=4]சிறிலங்கா: (சிறிது நாள் கழித்து) சரி, உங்களுக்கும் வேண்டாம், எங்களுக்கும் வேண்டாம்… ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம்…[/size] [size=4]பி.பி.சி. தமிழர்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்க ஐ.நா. தவறிவிட்டது என ஐ.நா. ஆய்வாளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.[/size] [size=4]ஐ.நா. ஆய்வாளர்: சிறிலங்காவில் ஐ.நா.வ…

  20. [size=4]தற்போது விசேடமாக அமைக்கப்பட்ட இடத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பிரதான ஈகைச்சுடரினை ஏற்றுகின்றார். சமநேரத்தில்... காற்றலையில் மிதந்து வரும் இந்த அறிவிப்பின் கனதி வெறுமனே வார்த்தைகளால் விவரிக்கும் அளவுடையதல்லவே.[/size] [size=2] [size=4]நேற்றும் கூட ஓயாமல் நினைவுகூர்ந்த இந்த வார்த்தைகளும் அந்த நொடிப்பொழுதுகளும் கண்காணாத இடம் புரியாத இவ்வுலகின் புள்ளியொன்றுக்கு புலம் பெயர்ந்துள்ளமையைத் தவிர வேறெந்தப் புறமாற்றமும் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளும் பக்குவம், ஈழத்தமிழர் உணர்வெழுச்சி சுமக்கும் நெஞ்சங்களின் காலக்கடமைகளில் ஒன்று.[/size][/size] [size=2] [size=4]"சுலபமாக மறந்துவிடும், வேகமாக மரத்துவிடும்'' நினைவுகளல்ல நாம் சுமப்பவை என்பதை நிரூபிப்பதற்கு …

    • 0 replies
    • 825 views
  21. [size=5]“தமிழர்களுக்கு இனி தனி ஈழம் தான் தீர்வாக இருக்கும்” என்று தீர்மானமாய் சொன்னது பிரபாகரன் அல்ல.[/size] [size=4]இதன் வித்து இலங்கை என்ற நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பே உருவானது. தமிழர்களில் முதல் தலைமுறை தலைவரான அருணாச்சலம் உருவாக்கியது ஆகும்.[/size] [size=4]அவர் தனி ஈழம் என்று தான் தொடக்கத்தில் சொன்னார். அதுவே தமிழீழம் என்று பின்னால் மாறியது.[/size] [size=4]அருணாச்சலம் படித்தவர், பண்பாளர், சட்ட மேதை ஆனால் வெகுஜன ஆதரவு பூஜ்யம். அவர் வாழ்ந்த வாழ்க்கை முழுக்க கொழும்புவிலும் மேல்தட்டு மக்களுடன் இருந்த காரணத்தால் கடைசி வரைக்கும் மக்கள் ஆதரவென்பது அவருக்கு எட்டாக்கனியாக இருந்தது. இறுதியில் அவர் கொள்கைகளும் கொலையாகி வெகுஜன ஆதரவு இல்ல…

  22. [size=5]மூன்று மாவீரர்தின அறிக்கைகள் மீதான பார்வை[/size] [size=4]வழமைபோல இம்முறையும் மாவீரர்தினத்தன்று மூன்று அறிக்கைகள் வெளியாகியுள்ளன அவையாவன : 1. தேசிய மாவீரர்நாள் அறிக்கை 2012 தமிழீழ விடுதலைப் புலிகள் 2. மாவீரர் நாள் அறிக்கை தலைமைச் செயலகம் 3. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் நாள் அறிக்கை இந்த மூன்று அறிக்கைகளையும் தயாரித்தவர்களின் எண்ண ஓட்டங்களும் ஏறத்தாழ ஒன்றாகவே இருக்கின்றன, ஆனால் கொழுக்கட்டைக்கும், மோதகத்திற்கும் உள்ள வேறுபாடுபோல உருவ வேறுபாடுகள் மட்டும் தெரிகின்றன. இந்த மூன்று அறிக்கைகளிலும் மூன்று முக்கிய பிரிவுகளாக நோக்கலாம் : 01. அறிக்கையின் முதற் பகுதி விடுதலைக்காக போராடிய மாவீரர்களின் புகழ்..[/size] [size=4]02. இரண்டா…

    • 2 replies
    • 896 views
  23. இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் சுமார் ஐந்து லட்சம் இலங்கைத் தமிழர்களை ஒருங்கிணைக்கின்ற அமைப்பாக உள்ள பிரித்தானியத் தமிழர் பேரவையின் தொடர் முயற்சியால் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 80 பேர் வரை உறுப்பினராக உள்ள தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக்குழு (All Party Parlimentary Groups for Tamils) உருவாகியுள்ளது. இந்த இரண்டு அமைப்புகளும் இணைந்து பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்திலேயே, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனப்படுகொலை குறித்து ஒரு சர்வதேச சுயாதின விசாரணை கோரி (International Independent Ivestigaion) உலகத் தமிழர் மாநாட்டை கடந்த 7,8,9-ஆம் தேதிகளில் லண்டன் மாநகரில் நடத்தினர். [size=3][size=4]இந்த மாநாட்டி…

    • 0 replies
    • 737 views
  24. [size=5]தமிழர்களின் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகரத் தயாராகிறதா?[/size] [size=4]-கே.சஞ்சயன் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண அரசாங்கம் தவறினால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அரசியல்தீர்வு ஒன்றை அடைவதற்காக தனது உயிரையும் கொடுக்கத் தயாராக உள்ளதாக அவர் கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது குறிப்பிட்டிருந்தார். இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கான முயற்சிகள் எதுவுமே இப்போது முன்னெடுக்கப்படாத சூழலில், இந்த எச்சரிக்கை முக்கியமானதொன்றாகவே கருதப்படத்தக்கது. ஏனென்றால், போர் முடிவுக்கு வந…

    • 2 replies
    • 777 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.