அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
‘இந்திராவின் முழக்கம்’ தேர்தல் களத்தைத் திசை திருப்புமா? எம். காசிநாதன் / 2019 ஏப்ரல் 01 திங்கட்கிழமை, பி.ப. 12:14 Comments - 0 ‘வறுமை ஒழிப்பு’ இந்தியாவில் தேர்தல் பிரசாரமாகி இருக்கிறது. மாநிலக் கட்சிகளில் இருந்து, தேசியக் கட்சியான காங்கிரஸ் வரை, தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய அங்கமாக, ‘வறுமை ஒழிப்பு’ இருக்கின்றது. 1971இல் ‘வறுமை ஒழிப்பு’ முழக்கத்தை கையிலெடுத்து, அமோக வெற்றியைப் பெற்றார் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராகக் களத்தில் நின்ற இந்திரா காந்தி. பிறகு ‘இந்தியாதான் இந்திரா; இந்திராதான் இந்தியா’ என்ற முழக்கங்கள் நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் கேட்கத் தொடங்கியது. பாரதிய ஜனதாக் கட்சி போன்ற வலுவான தேசியக் கட்சி ஒன்று, அப்போது க…
-
- 0 replies
- 529 views
-
-
ஞானசார தேரரின் விடுதலை இன நல்லுறவுக்கு எதிரான முடிவா? பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சர்ச்சைக்குரிய ஒரு பிரமுகர். சிறைத் தண்டனை அனுபவித்து வந்த அவருடைய விடுதலையும் சர்ச்சைக்குரியதாகி இருக்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்துள்ளார். நீதிமன்றத் தீர்ப்பிற்கு அமைய தண்டனையை அனுபவித்து வந்த ஒரு சிறைக் கைதியை அரச தலைவராகிய ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் தண்டனை விலக்களித்து விடுதலை செய்யலாம். அதற்கு அவருடைய நிறைவேற்று அதிகாரம் என்ற அரசியல் அந்தஸ்துடனான அதிகார பலம், உரிமை அவருக்கு இருக்கின்றது. அதனை கேள்விக்கு உட்படுத்த முடியாது. …
-
- 0 replies
- 425 views
-
-
Published By: RAJEEBAN 12 AUG, 2024 | 03:39 PM https://www.scmp.com/ Dimuthu Attanayake தமிழில் ரஜீபன் இலங்கை 2022ம் ஆண்டின் மிகமோசமான நாட்டை முடக்கிய பொருளாதார நெருக்கடியின் பின்னர் முதலாவது தேர்தலை எதிர்கொள்ள தயாராகும்வேளையில் ராஜபக்ச குடும்பம் அதன் அரசியல் வாரிசினை அறிவித்துள்ளது. பல அரசியல் ஆய்வாளர்கள் இதனை அந்த குடும்பத்தின் அரசியல் மறுபிரவேச முயற்சியாக கருதுகின்றனர். இந்த வாரம் ராஜபக்சாக்கள் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன யுத்தகால தலைவர் மகிந்த ராஜபக்சவின் 38 வயது மகன் நாமல் ராஜபக்சவை செப்டம்பர் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தலிற்கான வேட்பாளராக அறிவித்தது. 2022 போராட்டக்காரர்கள்…
-
- 0 replies
- 427 views
- 1 follower
-
-
அனுர செய்யக்கூடிய மாற்றம்? - நிலாந்தன் இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு நசுக்கப்பட்ட ஒரமைப்பு, இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட ஓரமைப்பு, அதன் தலைவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இன்றி என்கவுண்டரில் கொல்லப்பட்டவர். அப்படிப்பட்ட ஓரமைப்பின் தலைவர் இப்பொழுது நாட்டின் அரசுத் தலைவராக வந்திருக்கிறார். ஆயுதப் போராட்டத்தில் தொடங்கி அரசுத் தலைவர் பதவி வரையிலுமான இந்த வளர்ச்சியை ஏற்கனவே ஓர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களாகிய தமிழ் மக்கள் ஆர்வத்தோடு பார்க்க வேண்டும். அதன் பொருள் அனுரவின் மாற்றம் என்ற கோஷத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதோ, அல்லது இனப்பிரச்சினைக்கான அவருடைய தீர்வை நம்ப வேண்டும் என்பதோ அல்ல. ஆயுதப் போராட்டத்தில் தொடங்கி அரசுத் தலைவர் வரையிலு…
-
- 1 reply
- 521 views
- 1 follower
-
-
ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிரேமதாசாக்களின் போராட்டங்கள் வீ.தனபாலசிங்கம் கடுமையான சவால்களுக்கு முகங்கொடுத்து தந்தையார் ரணசிங்க பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தைப் பெற்றதைப் போன்று மூன்று தசாப்தங்களுக்கு பிறகு மகன் சஜித் பிரேமதாசவும் எதிர்ப்புக்களை முறியடித்து அதே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். கட்சி நியமனத்தை வழங்குகிறதோ இல்லையோ 1988 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டே தீருவதென்று முடிவெடுத்த தந்தையார் தனது நீண்டகால அரசியல் விசுவாசியான சிறிசேன குரேயிடம் தேர்தலைச் சந்திக்கத் தயாராகுமாறு கூறியது பழைய அரசியல் அவதானிகளுக்கு நன்கு நினைவிருக்கும். அதே போன்றே மகனும் தன்னை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான பிரதமர் …
-
- 0 replies
- 638 views
-
-
ஜனாதிபதித் தேர்தலின் முடிவு, இலங்கையின் அரசியல் நடைமுறைகளில் பெரியளவிலான மாற்றங்களுக்கு வித்திடும் சூழல் ஒன்றை உருவாக்கியுள்ளதாக தெரிகிறது. இந்த தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ பெற்றிருக்கின்ற வெற்றியானது, சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்குப் பெருந்தீனியாக அமைந்திருக்கிறது இது முதல் விடயம். இந்த வெற்றியைக் கொண்டு, ராஜபக் ஷவினர் நிரந்தரமான அரசியல் இருப்புக்கு வழிதேடத் தொடங்கியிருக்கின்றனர் என்பது இரண்டாவது விடயம். இந்த இரண்டும் வெவ்வேறான விடயங்களாக இருந்தாலும், தனித்தனியாக இந்தப் பத்தியில் ஆராய்வது பொருத்தம். கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதும், பொது பலசேனா அமைப்ப…
-
- 5 replies
- 1.5k views
-
-
அனுர போட்ட முடிச்சு லக்ஸ்மன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கும், நாட்டின் பொருளாதார ஸ்திரத் தன்மைக்கும் ஒரு முடிச்சைப் போட்டு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இவ்வாருடத்துக்கான வரவு-செலவுத் திட்ட விவாதத்தை முடித்து வைத்தார். மிகவும் லாவகமான பேச்சுக்கள் மூலம் மக்களை தம்வசம் இழுத்து வைத்துக் கொள்வதில் அனுரவுக்கு நல்ல இயலுமை இருக்கிறது. அவருடைய ஒவ்வொரு பேச்சும் இலங்கை மக்களின் உள்ளிருக்கும் பல விடயங்களை வெளியே எடுத்து விடுவதைச் செய்து விடுகின்றன. பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு-செலவுத் திட்டத்தின் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான ஒதுக்கீடு மீதான இரண்டாம் நாள் குழுநிலை விவாதத்தின் இறுதியில் பதிலளித்து உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்…
-
- 0 replies
- 402 views
-
-
‘குப்பை அரசியல்’ காலம் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜனவரி 29 கடந்த வாரத்தில் மூன்று நாள்கள், யாழ்ப்பாணம் நகர எல்லைக்குள், குப்பைகள் அகற்றப்படவில்லை. வர்த்தக நிலையங்கள் அதிகமுள்ள வீதிகளின் மத்தியில், குப்பைகள் பெருமளவில் கொட்டப்பட்டிருந்தன. அதுபோல, வவுனியா நகரப் பகுதியிலும், ஒரு வாரமளவில் குப்பை அகற்றப்படாத நிலையொன்று அண்மையில் காணப்பட்டது. இலங்கையில் குப்பை அகற்றுதல், மீள்சுழற்சி செய்வது தொடர்பிலான முறையான செயற்றிட்டங்கள், பெரியளவில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. பெரும்பாலும் நகர எல்லைப் பகுதிகளில் இருந்து அகற்றப்படும் குப்பைகளை, நகரத்துக்கு அப்பாலுள்ள பகுதியொன்றில் கொட்டுவதையே, குப்பை அகற்றுதலாகக் கருதுகிறார்கள். அவ்வாறு சேரும்…
-
- 0 replies
- 786 views
-
-
எது சரியான மாற்று அணி? ? நிலாந்தன்… February 23, 2020 விக்னேஸ்வரன் கட்சி தொடங்கிய போதே அவர் இரு முனை எதிர்ப்புக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரு முனை கூட்டமைப்பு. மறுமுனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி.அவர் அண்மையில் தனது தலைமையில் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கியதை தொடர்ந்து அந்த எதிர்ப்பு மேலும் தீவிரமாகியுள்ளது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பை விடவும் மக்கள் முன்னணியின் எதிர்ப்பே விக்னேஸ்வரனைக் கூடுதலாக நிதானமிழக்க செய்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது. மக்கள் முன்னணி அவர் மீதான எதிர்ப்பை இரண்டு தளங்களில் நிகழ்த்துகிறது. ஒரு தளத்தில் அவர்கள் விக்னேஸ்வரனின் கோட்பாட்டுத் தெளிவைக் கேள்விக்குள்ளாக்குக்கிறார்கள். இன்னொரு…
-
- 2 replies
- 785 views
-
-
NPP + தமிழ் பேசும் கட்சிகள்-பொறுப்பும் கூட்டுப் பொறுப்பும் August 20, 2025 — கருணாகரன் — ‘வரலாற்றில் ஒரு மாற்றுத் தரப்பு‘என்ற அறிவிப்போடும் அடையாளத்தோடும் அதிகாரத்தில் – ஆட்சியில் இருக்கிறது NPP. அது மாற்றுத் தரப்பா, இல்லையா? அது பிரகடனப்படுத்தியதைப் போலமுறைமை மாற்றத்தை (System change) மெய்யாகவே நடைமுறைப்படுத்துகிறதா? தன்னுடைய ஆட்சிக்காலத்தில் மாற்றங்களை நிச்சயமாகச் செய்யுமா? செய்யாதா? NPP சுயாதீனமாக இயங்கக்கூடியதாக இருக்கிறதா? அல்லது அதை JVP கட்டுப்படுத்தித் தன்னுடையபிடியில் வைத்திருக்கிறதா? அல்லது NPP யும் ஏனைய ஆட்சியாளர்களைப்போலத்தான்இயங்குகின்றதா; சிந்திக்கின்றதா? அதை மீறிச்செயற்படுமா? என்ற சந்தேகங்கள், விமர்சனங்கள், விவாதங்கள் எல்லாம் எல்லோருக்கும் உண்டு. ஆனால…
-
- 0 replies
- 111 views
-
-
பொதுமக்களின் நேர்மையே கொரோனாவுக்கான மருந்து எம்.எஸ்.எம். ஐயூப் கொரோனா வைரஸ் என பொதுவாக அனைவராலும் அழைக்கப்படும் ‘கொவிட்-19’ என்ற புதிய நோய், இனம், மதம், சாதி, அரசியல் கட்சி வேறுபாடுகளைப் பாராமல், நாடுகளில் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், முழு உலகையும் பற்றிப் படர்ந்து, உலகையே உலுக்கிக் கொண்டுள்ளது. ஆனால், அதையும் தமது இனவாத நோக்கங்களை நிறைவு செய்து கொள்வதற்காகச் சில ஊடகங்கள் முயல்கின்றன. கடந்த 11 ஆம் திகதி,…
-
- 0 replies
- 455 views
-
-
ராஜபக்ஷக்களின் 20ஆவது திருத்தத்தினூடான செய்தி புருஜோத்தமன் தங்கமயில் / 2020 செப்டெம்பர் 10 , பி.ப. 12:24 இலங்கை அரசமைப்பில் 18ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு இன்றோடு சரியாக 10 ஆண்டுகளும் இரண்டு நாள்களும் ஆகின்றன. 2005 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷக்கள் தங்களது அதிகார எல்லையை விஸ்தரிக்க ஆரம்பித்து அதன் அதியுச்ச எல்லையை செப்டெம்பர் 08, 2010இல் 18ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் காலாகாலத்துக்குமாக இறுதி செய்ய நினைத்தார்கள். நாடாளுமன்றம் என்ற ஒன்றோ அதற்குள் எதி…
-
- 0 replies
- 320 views
-
-
தமிழ்த் தேசிய அரசியலில் அடுத்தது என்ன? -என்.கே. அஷோக்பரன் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை இலங்கையை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. சமூகப் பரவல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாவிட்டாலும், தினந்தோறும் நாடெங்கிலும் ஆங்காங்கே, புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட வண்ணமே இருக்கின்றார்கள். கொரோனா வைரஸ், முழு உலகத்துக்குமே சவாலாக மாறியிருக்கிறது. கொரோனா வைரஸின் சுகாதாரத் தாக்கம் ஒரு புறமென்றால், அதன் பொருளாதாரத் தாக்கம் அதைவிடப் பயங்கரமானதாக இருக்கிறது. தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர, நீண்ட கால முடக்கல் நிலை அமல்படுத்தப்பட்டால், தொற்றுப் பரவல் குறையும். ஆனால், அதனால் விழும் பொருளாதார அடி, நீண்ட காலத்துக்கு மீண்டெழ முடியாத பாதாளத்தில் நாட்டைத் தள்ளிவிடும். ஆகவே, நோய…
-
- 14 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 720 views
-
-
இன உறவைப் பலப்படுத்த நல்ல தருணம் -மொஹமட் பாதுஷா ‘தனியாக மேய்கின்ற ஆடுகளை, ஓநாய்கள் வேட்டையாடி விடுகின்றன’ என்று சொல்வார்கள். ஒற்றுமையின் பலத்தைச் சொல்வதற்கு இதுபோல, வேறுபல பழமொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. உண்மைதான், ஒரு சமூகம் தனக்குள் உள்ளகமாக ஒன்றுபடுவது மட்டுமன்றி, பிற சமூகங்களுடனும் இணக்கப்பாட்டோடு பயணிப்பது கூட, தமது அபிலாஷைகளை வென்றெடுப்பதற்குப் பெரும் பக்கத் துணையாக அமையும். இலங்கைச் சூழலில், சிறுபான்மைச் சமூகங்களான முஸ்லிம்களும் தமிழர்களும் பொதுவான விடயங்களில், புரிந்துணர்வுடனும் பரஸ்பர ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டிய அவசியம் உள்ளது. அதேபோன்று, பெரும்பான்மை மக்களில் கணிசமானோர், இனவாதத்தின் பின்னால் போகின்றவர்கள் அ…
-
- 0 replies
- 623 views
-
-
ஜெனிவாவை கையாள்வது எப்படி? குழப்பமும் விளக்கமும்.
-
- 0 replies
- 510 views
-
-
ஒரே குரலில் பேச முடியாத ‘தேசிய அரசாங்கம்’ தற்போதைய அரசாங்கம், தேசிய அரசாங்கம் என்பதாகவே கூறப்படுகிறது. நீதிமன்றத் தீர்ப்பொன்றும் அதனை உறுதி செய்துள்ளது. ஆனால், தேசிய அரசாங்கம் ஒன்றில் இருக்க வேண்டிய ஐக்கியம் அரசாங்கத்துக்குள் இல்லை. அது மக்களைப் பாதிக்கும் அளவுக்கு இப்போது மோசமான நிலையை எட்டியுள்ளது. அரசாங்கத்துக்குள் இருக்கும் இந்த முரண்பாடுகள், தற்போது பல உயிர்களையும் காவு கொண்டுள்ளது. மீதொட்டமுல்ல குப்பை மேடு சம்பந்தமாக அரசாங்கத்துக்குள் நிலவும் முரண்பாட்டையே நாம் இங்கு குறிப்பிடுகிறோம். ஸ்ரீ ல.சு.கவின் மைத்திரி குழுவின் உறுப்பினரான மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, மீதொட்டமுல்ல குப்பை மேட்டிலுள்ள குப்பைகளை மீள்சுழற்சி செய்…
-
- 0 replies
- 452 views
-
-
தலைமைகளும் தாழ்வுச்சிக்கலும் என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan உத்தியோகபூர்வமான நிலைமையைப் பொறுத்தவரையில் நாடானது முழு முடக்கத்தில் இருக்கிறது. இதற்கு அத்தியாவசிய சேவைகள் மட்டும் விதிவிலக்கு. ஆனால் வீதிகளில் வாகனங்கள் அதிகமாக பயணித்துக்கொண்டிருக்கின்றன. சில முக்கிய வீதிச் சந்திகளில் வாகன நெரிசலையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இவையெல்லாம் அத்தியாவசிய சேவைக்கானவையா என்ற கேள்வி வீட்டுக்குள் ஒரு மாதகாலத்தைக் கடந்தும் முடங்கியிருக்கும் சாதாரண இலங்கைக் குடிமகனுக்கு எழும் கேள்விகள். மறுபுறத்தில், இராஜங்க அமைச்சரான லொஹான் ரத்வத்தே, சிறைக்கு சென்று கைதிகளை மிரட்டியதாக செய்திகள் தெரிவித்தன, அதன்பின்னர் அவர் பதவியும் விலகினார். இன்னொரு புறத்தில் அ…
-
- 0 replies
- 438 views
-
-
13 பற்றி சிங்களக் கட்சிகளின் மனட்சாட்சி பேசுமா? –இந்திய- இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக அப்போது கொழும்பில் இருந்த முன்னாள் இந்தியத் தூதுவர் ஜே.என். டிக்சிற் 1998 ஆம் ஆண்டு எழுதிய அசெய்மன்ற் கொழும்பு (Assignment Colombo) என்ற நூலில், சிங்கள மக்களைக் கோவப்படுத்தக்கூடாது என்பதற்காகவே வடக்குக் கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் எனக் கூறப்படவில்லை என்கிறார்– -அ.நிக்ஸன்- இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் வடக்குக் கிழக்கு தமிழ்பேசும் மக்களின் மரபுவழித் தாயகம் (Traditional homeland) என்று கூறப்படவில்லை. மாறாக வரலாற்று வாழ்விடங்கள் (Historical habitations) என்றே கூறப்பட்டிருக்கிறது. இந்திய இலங்கை ஒப்ப…
-
- 0 replies
- 410 views
-
-
இந்தியாவால் இலங்கையில் சீனாவிற்கு ராஜிய ரீதியில் பின்னடைவா? ரங்க சிறிலால் பிபிசி சிங்கள மொழி செய்தியாளர், கொழும்பிலிருந்து 14 டிசம்பர் 2021, 03:03 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய பிரதமர் நரேந்திர மோதி - சீன அதிபர் ஷி ஜின்பிங்: கோப்புப்படம் இலங்கையின் வடக்குப் பகுதியில் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தயார் நிலை காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வடக்கிலு…
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
புதிய அரசியல் அமைப்பும் மக்கள் ஆணையும் நிறைவேற்று அதிகாரம் என்ற கருத்து எழ ஆரம்பித்த காலத்தில் இருந்தே முரண்பாடுகளும் எழ ஆரம்பித்தன. இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பிலிருந்து கிடைத்த மிக முக்கியமான ஒரு படிப்பினை என்னவெனில் நாட்டின் மக்களினால் தெரிவு செய்யப்படும் ஒரு நபர் தனது சொந்த முக்கியத்துவம், சட்டபூர்வத் தன்மை மற்றும் அதிகாரம் என்பன தொடர்பான மிகை அளவிலான ஓர் எண்ணத்தை கொண்டிருக்க முடியும் என்பதாகும். 1970களின் தொடக்கத்தின் போதே ஜனாதிபதி ஆட்சி முறை குறித்து கலந்துரையாடப்பட்டது. அதேபோல் நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமை தொடர்பிலும் ஆரம்பம் முதற்கொண்டு குழப்பகரமான நிலைமை நிலவி வருகின்…
-
- 0 replies
- 387 views
-
-
கிழக்கு மாகாணத்தை மையாகக் கொண்டுதான் பிரச்சினை ஆரம்பித்தது. காணி அபகரிப்பு சிங்கள குடியேற்றங்கள் கிழக்கில் ஆரம்பிக்கப்பட்ட போதுதான் தமிழத்தேசிய கோட்பாடு, தமிழர் தாயம் பற்றிய சிந்தனைகள் எழுந்தன. இறுதிக் கட்ட போர் தொடர்பாகவும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாகவும் பேசப்படுகின்றது. ஆனால் கிழக்கு மாகாணம் என்பதும் வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி என்ற பேச்சும் நலிவடைந்துள்ளன. தற்போது இனப்பிரச்சினை என்ற பேச்சு வடமாகாண பிரச்சினையாக மட்டும் மாறிவிட்டது. தமிழத்தேசிய கூட்டமைப்பு தமிழத்தேசிய மக்கள் முன்னணி மற்றும் சில தமிழ் அமைப்புகளும் இனப்பிரச்சினை வடபகுதி பிரச்சினையாக மாறிவிட்டதை நினைத்து கவலைப்படுவதாகவும் இல்லை. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் வடபகுதியில் தினமும் நடக்கின்றன. ஆனால…
-
- 4 replies
- 945 views
-
-
ஜனநாயகத்திற்கு வலுச்சேர்க்கும் உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளூராட்சி மன்றங்கள் குறித்து இப்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை காலம் தாழ்த்தாது வெகுவிரைவில் நடத்த வேண்டுமென அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. உள்ளூராட்சி தேர்தல்களை பிற்போடுவதென்பது ஜனநாயகத்திற்கு முரணான செயலாகுமென்றும் கட்சிகளும், அமைப்புகளும் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களை அதிகரிக்க தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து கோரிக்கைகளுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக கூட்டணி மார்தட்டி கொள்கின்றது. இது மகிழ்ச்சியான செய்திய…
-
- 0 replies
- 841 views
-
-
‘கேரள டயரீஸூம்’ தொடரும் சர்ச்சைகளும் ம. அருளினியன் எழுதிய, ‘கேரள டயரீஸ்’ என்கிற நூல், கடந்த ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாணத்திலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் வெளியிடப்பட்டது. கடந்த சனிக்கிழமை காலை வரையில், குறித்த நூலின் வெளியீட்டு விழா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு, அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், குறித்த நூல் வெளியீட்டுக்காக, கல்லூரி மண்டபத்தை வழங்க முடியாது என்று, நிகழ்வுக்கு முதல் நாள், அக- புற அழுத்தங்களினால், பாடசாலை நிர்வாகம் அவசர அவசரமாக அறிவித்தது. இதனால், பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்ட நூல் வெளியீட்டு விழா, கிட்டத்தட்ட மூடிய அறைக்குள் நடத்தப்ப…
-
- 2 replies
- 839 views
-
-
அமெரிக்காவின் கடல்சார் மூலோபாயம் கடல் ஆதிக்கத்தைக் கொண்டுள்ள நாடு என்ற வகையில் அமெரிக்கா பல்வேறு கடல் சார் நெருக்கடிகளுக்குப் பதிலளித்து வருவதுடன், எமது பாதுகாப்பு அல்லது எமது கூட்டாளி நாடுகளின் நாடுகளின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளிலிருந்து எம்மைப் பாதுகாப்பதுடன் எமது எல்லைகளை நெருங்கக்கூடிய பல்வேறு தொலைதூர புவிசார் அச்சுறுத்தல்களிலிருந்தும் எம்மைப் பாதுகாக்கின்றது. கடல்சார் பாதுகாப்பானது கடல்சார் மூலோபாயம் தேவை என்பதை வலியுறுத்துகிறது. தேசிய வளங்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதால், பாதுகாப்புச் செயற்பாடுகளை நிதி மற்றும் கப்பல் கட்டுமானங்கள் போன்றவற்றுடன் தொடர்புபடுத்துவதற்கான சிறந்த தெரிவுகளை மேற்கொள்வதற்கான மூலோபாயம் ஒன்றை உருவாக்க வேண்…
-
- 0 replies
- 486 views
-