அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
ஏன் இந்தியா? யதீந்திரா தமிழ் கட்சிகள் ஏட்டிக்கு போட்டியாக இந்திய பிரதமருக்கு கடிதங்களை அனுப்பியிருக்கின்றன. இந்த அணுகுமுறையில் நிதானமான போக்கும் காணப்படுகின்றது. அதே போன்று, தெளிவற்ற அணுகுமுறையும் காணப்படுகின்றது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தெளிவான பார்வை காணப்படுகின்றது. இந்தக் கூட்டில் இருப்பர்கள் அனைவருமே முன்னாள் ஆயுத இயக்கப் பின்புலம் கொண்டவர்கள். ஒப்பீட்டடிப்படையில் மேற்குலகுடன் தொடர்பற்றவர்கள். அவர்கள் இந்தியாவிடம் எதைக் கேட்க வேண்டுமோ அதைக் கோரியிருக்கின்றனர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான, 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான இந்திய தல…
-
- 0 replies
- 474 views
-
-
வடக்கில் மூடப்படும் பள்ளிக்கூடங்கள் பின்னணி என்ன? July 9, 2023 — கருணாகரன் — வடமாகாணத்தில் மாணவர் வரவின்மையினால் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன என்று கடந்த வாரம் (24.06.2023) தெரிவித்திருக்கிறார் வடமாகாண ஆளுநர் பீ.எஸ். எம். சார்ள்ஸ். இதைப் போல கிழக்கு மாகாணத்திலும் பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இதற்குக் காரணம், பிறப்பு வீதம் குறைவாக இருப்பது ஒன்று. இன்னொரு காரணம், கிராமங்களை விட்டு மக்கள் நகரங்களை நோக்கிச் செல்வதாகும். இப்படி ஆட்கள் குறைந்த பிரதேசங்களாக யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதி, வடமராட்சி கிழக்கு முதல், கிளிநொச்சியில் பூநகரி, அக்கராயன், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் இருக்கும் தொலைதூரக் கிராமப்புறங்களைக் குறிப்பிடலாம்.…
-
- 32 replies
- 2.7k views
- 1 follower
-
-
லண்டனில் அண்ணாமலை – நிலாந்தன் பிரித்தானியத் தமிழர் பேரவை, பாரதிய ஜனதாவின் தமிழக அமைப்பாளர் அண்ணாமலையை பிரித்தானியாவுக்கு அழைத்திருக்கிறது “உறவுப் பாலம்” என்று அழைக்கப்படும் அந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியாவுக்குச் சென்ற அண்ணாமலை அங்கு முக்கிய சந்திப்புகளில் கலந்து கொண்டார். ஈழத் தமிழர்களை குறிப்பாக புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களை கவரும் விதத்தில் உரை நிகழ்த்தியுமிருக்கிறார். ஆனால் ஈழத் தமிழர்களுக்கு அவர் தரக்கூடிய தீர்வு 13ஆவது திருத்தத்தைக் கடக்கவில்லை. அண்ணாமலையை பிரித்தானியாவுக்கு அழைத்தமையை ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு காரணங்களை அவர்கள் முன்வைக்கின்றார்கள். ஒன்று, பாரதிய ஜனதாவின் இந்துத்துவ…
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை! Posted on July 11, 2023 by தென்னவள் 13 0 இன்று ஒன்பதாம் திகதி. கடந்த ஆண்டு இதே நாளில் கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து துரத்துவதற்காக தன்னெழுச்சி போராட்டக்காரர்கள் அவருடைய மாளிகையை சுற்றி வளைத்தார்கள்.முடிவில் அவர் 13 ஆம் தேதி பதவியைத் துறந்தார்.கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரையிலும் இதுபோன்ற ஒவ்வொரு ஒன்பதாம் திகதியும் ராஜபக்ச குடும்பத்துக்கு கெட்ட நாட்களாக,ஆபத்தான நாட்களாகக் காணப்பட்டன. எந்தக் குடும்பத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை சிங்கள மக்கள் வழங்கினார்களோ, அதே குடும்பத்தை அதே சிங்கள மக்கள் அவர்களுடைய சொந்த ஊர்களில் இருந்து துரத்தியடித்தார்கள். இலங்கைத்தீவின் நவீன வரலாற்ற…
-
- 1 reply
- 565 views
-
-
கோட்டாபய பதவி விலகி ஒரு வருடம் கடந்த நிலையில்……! Veeragathy Thanabalasingham on July 10, 2023 Photo, SELVARAJA RAJASEGAR ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி குறித்து ஒரு மீள்பார்வை இலங்கை வரலாறு முன்னென்றும் கண்டிராத மக்கள் கிளர்ச்சி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை அதிகாரத்தில் இருந்து விரட்டி நாட்டை விட்டு வெளியேற வைத்து சரியாக ஒரு வருடம் கடந்தோடிவிட்டது. ஜூலை 9 இலங்கை அரசியலில் மாத்திரமல்ல, தெற்காசிய பிராந்திய அரசியலிலும் கூட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமாக பதிவாகிவிட்டது எனலாம். எமது பிராந்தியத்தின் வேறு எந்தவொரு நாட்டிலும் ஜனநாயகத் தேர்தல் ஒன்றில் மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட…
-
- 0 replies
- 316 views
-
-
Published By: VISHNU 09 JUL, 2023 | 06:02 PM சுபத்ரா மாலியில் ஐ.நா அமைதிப்படையின் 10 ஆண்டுகால நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டு வரப்படவுள்ளன. கடந்த முதலாம் திகதி முன்னிரவில் மாலி நோக்கிப் புறப்படுவதற்கு 20 அதிகாரிகளும், 150 இலங்கை இராணுவத்தினரும் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் தான், நியூயோர்க்கில் இருந்து அந்த தகவல் கொழும்புக்குக் கிடைத்தது. 2023 ஜூன் 30ஆம் திகதி வரை மாலியில் ஐ.நா அமைதிப்படையை நிறுத்தி வைப்பதற்கே, 2013இல் ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஆணை பெறப்பட்டது. அந்த ஆணை முடிவுக்கு வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே, மாலியில்…
-
- 0 replies
- 321 views
- 1 follower
-
-
சிதறிப்போன ஒரு மக்கள் கூட்டம் ? – நிலாந்தன். adminJuly 9, 2023 காற்றுவழிக் கிராமங்களைப் பற்றிய எனது கடந்தவாரக் கட்டுரையானது பெருமளவுக்கு தீவக மக்களால் வரவேற்கப்பட்டிருக்கிறது. எனினும் ஒரு பகுதியினர் அதற்கு வேறுவிதமாக வியாக்கியானம் தருகிறார்கள். கோவில்களில் காசைக் கொட்டுவது என்பது ஒரு விதத்தில் ஊரில் தனது முதன்மையை நிலைநாட்டும் நோக்கத்தையும் கொண்டது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒரு காலம் நீருக்கு கஷ்டப்பட்ட கிராமத்தில் இருந்து பொருளாதார மற்றும் போர்க் காரணங்களுக்காக ஊரை விட்டுப்போன மக்கள் இப்பொழுது அதே ஊரில் கற்பனை செய்ய முடியாத ஒரு தொகையைச் செலவழித்து ஒரு கோவிலைப் புனரமைப்பது என்பது, தங்களால் முடியும் என்பதனைச் சாதித்துக்காட்டும் ஒரு நிகழ்வாக ஏன் எடுக்கக் க…
-
- 0 replies
- 560 views
-
-
ஓராண்டுக்கு முன் நடந்தவை – தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை! நிலாந்தன். இன்று ஒன்பதாம் திகதி. கடந்த ஆண்டு இதே நாளில் கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து துரத்துவதற்காக தன்னெழுச்சி போராட்டக்காரர்கள் அவருடைய மாளிகையை சுற்றி வளைத்தார்கள்.முடிவில் அவர் 13 ஆம் தேதி பதவியைத் துறந்தார்.கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரையிலும் இதுபோன்ற ஒவ்வொரு ஒன்பதாம் திகதியும் ராஜபக்ச குடும்பத்துக்கு கெட்ட நாட்களாக,ஆபத்தான நாட்களாகக் காணப்பட்டன. எந்தக் குடும்பத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை சிங்கள மக்கள் வழங்கினார்களோ, அதே குடும்பத்தை அதே சிங்கள மக்கள் அவர்களுடைய சொந்த ஊர்களில் இருந்து துரத்தியடித்தார்கள். இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் முன்னப்பொழுதும் அப்படிப்பட்ட …
-
- 0 replies
- 384 views
-
-
பட மூலாதாரம்,SLPP படக்குறிப்பு, மஹிந்த ராஜபக்ஸ கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 47 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத குடும்பமாக வரலாற்றில் இடம்பிடித்த ராஜபக்ச குடும்பத்தினர், ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஒர் ஆண்டு நிறைவுப்பெற்றுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக ஆட்சியில் அமர்ந்த கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில், நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்தது. பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பல நாட்களாக மக்கள் வரிசைகளில் காத்திருந்தனர். நாளொன்றில் சுமார் 15 மணிநேரத்திற்கு அதிக …
-
- 0 replies
- 272 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 06 JUL, 2023 | 02:53 PM ரொபட் அன்டனி கடன் பெறுவதற்காக ஊழியர் சேமலாப நிதியத்துக்கு ஏற்கனவே வழங்கிய உண்டியல்கள் மற்றும் பிணைமுறிகளை மீண்டும் பெறவுள்ள திறைசேரி புதிய பிணைமுறிகளை வழங்கவுள்ளது. அதற்கு 12 வீத மற்றும் 9 வீத வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே அதிகளவு வட்டிக்கு பெறப்பட்டிருந்த பிணைமுறிகளும் இந்தப் புதிய வட்டி முறைக்கு மாற்றப்படுவதால் அதில் ஒரு வட்டி இழப்பு சேமலாப நிதியத்துக்கு ஏற்படுகிறது. அதேபோன்று இந்தக் கடன்களை மீள் செலுத்தும் காலமும் நீடிக்கப்பட இருக்கின்றது. முதிர்ச்சிக் காலம் நீடிக்கப்படுவதால் சேமலாப நிதியத்துக்கு ஓர் இழப்பு ஏற்படுகின்றது. ஆனால் அந்த இழப்பு நிதியத்த…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
தமிழ் கட்சிகளுக்கு அரசியல் நீரிழிவு! வவுனியா கரும்பும் கசக்கிறது! July 5, 2023 – கருணகரன் – “கரும்பு இனிக்குமா? கசக்குமா?” என்ற விவாதம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் சூடுபிடித்துள்ளது. அரசியல், ஊடகப் பரப்புடன் தொடர்ச்சியான அவதானிப்புக் குறைந்தவர்கள், “அதென்ன கரும்புக் கதை?” என்று ஆச்சரியமாகக் கேட்கக் கூடும். அந்தக் கதை இதுதான். வடக்கில் – வவுனியா மாவட்டத்தில் – கரும்பு ஆலையை நிறுவுவதற்கு அரசாங்கத்திடம் அனுமதியைக் கேட்டிருக்கிறது வெளிநாட்டு நிறுவனமொன்று. இது நடந்தது 2018 இல். அது நல்லாட்சி அரசாங்கக் காலம். 2018 ஜூலையில் தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான்ஓசா, அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்திருந்தார…
-
- 2 replies
- 472 views
- 1 follower
-
-
ஒட்டுசுட்டான் வனப்பகுதியில் தொடரும் சட்ட விரோத கருங்கல் அகழ்வுப் பணிகள் Posted on July 1, 2023 by தென்னவள் 26 0 ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக கருங்கல் அகழ்வுப் பணிகள் சட்ட விரோதமாக இடம்பெற்று வருவதால் பாரிய சுற்றுச்சூழல் சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என அப்பகுதி மக்கள் தொடர்ந்து தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய் என்று இயற்கை உரக்கப் போதித்தாலும், நாங்கள் செவிமடுப்பதாக இல்லை. நாங்களே இயற்கையை ஆளப் பிறந்தவர்கள் என்ற மமதையில் இயற்கையை தொடர்ந்தும் அடிமைப்படுத்துகிறோம். நிலத்துக்கு நீரை பருக்கும் வாய்களான குளங்களை இறுக்கி மூடியும், வெள்ள வாய்க்கால்களை கூட வ…
-
- 0 replies
- 371 views
-
-
பிரான்சும் வன்முறையும்-பா.உதயன் ஐரோப்பிய நாடான பிரான்சின் தலைநகர் பாரிஸ் அடுத்துள்ள புறநகரான நான்தெரே பகுதியில் கடந்த 27 ம் திகதி போக்குவரத்து விதியை மீறியதாக சில இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பொலிசாரின் கட்டளைக்கு பணியாமல் வண்டியை நிறுத்தாமல் போனதால் இதில் 17 வயதான அல்ஜீரியாவை பூர்வீகமாகக் கொண்ட நாஹெல் என்ற முஸ்லிம் சிறுவன் கொல்லப்பட்டான் இந்தச் சிறுவனை கொல்லப் பட்டது பெரும் துயராக இருந்தாலும் இதை தொடந்து வெடித்த வன்முறையால் பிரான்ஸ் தேசமே பற்றி எரிவது போல் இருந்தது. எவராக இருந்தாலும் வன்முறை மூலம் எந்தப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது. ஜனநாயக வழியில் போராட வேண்டும். பாடுபட்டு வியர்வை சிந்தி எல்லோரும் சேர்ந்து கட்டியதை அவர்களே நாசம் செய்வது நாகரீ…
-
- 1 reply
- 541 views
-
-
உக்ரேன் போரின் போக்கை மாற்றுமா வக்னர் சதி? Published By: VISHNU 02 JUL, 2023 | 08:54 PM சுவிசிலிருந்து சண் தவராஜா ரஷ்யாவில் பெரும் பிரளயம் ஒன்று நடைபெற்று முடிந்திருக்கின்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்கு எதிராக தனியார் இராணுவக் குழுவான வக்னர் மேற்கொண்ட சதி 24 மணி நேர இடைவெளியில் முறியடிக்கப்பட்டு இருக்கிறது. அதிலும், அயல் நாடொன்றில் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு தேசத்தில் இவ்வாறான ஒரு விரும்பத்தகாத சூழ்நிலை உருவாகியமை உள்நாட்டில் மாத்திரமன்றி வெளிநாடுகளிலும் ஒரு பதட்டமான சூழலைத் தேற்றுவித்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. பெரும் மோதல் ஒன்று தவிர்…
-
- 0 replies
- 295 views
-
-
ரணிலுக்கு, தமிழ் கட்சிகள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும்?- யதீந்திரா இனப்பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக வரவேண்டுமென்று, ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றார். அண்மையில் இங்கிலாந்திற்கு சென்றிருந்த, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாட்டு தலைவர், அண்ணாமலையும் இவ்வாறானதொரு கருத்தையே அங்கு வலியுறுத்தியிருக்கின்றார். தமிழ் கட்சிகள் அனைத்தும் இந்தியாவிடம் ஒன்றாகச் செல்ல வேண்டுமென்று அவர் தெரிவித்திருக்கின்றார். ரணில் இந்த வேளையில் இவ்வாறு கூறுவதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை காணப் போவதாக குறிப்பிட்ட, ரணில் விக்கிரமசிங்க, இப்போது, தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக வரவேண்டுமென்…
-
- 0 replies
- 578 views
-
-
வடக்கு-கிழக்கில் சைவ- தமிழ் வரலாற்று எச்சங்களை அழித்தலும் பௌத்த எச்சங்களாக திரித்தலும் ! Digital News Team கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் ++++++++++++++++++++++++++++++++++++++ “தேர்தலை நடத்துவதன் ஊடாக இலங்கை மக்களின் இறையாண்மை அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அதிகரித்த ஈடுபாட்டின் அவசியத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்”-இது இன்றைய பத்திரிகை செய்தி. இலங்கை மக்களின் (சிங்கள மக்களின்) இறையாண்மையை பாதுகாக்க ஐ.நா.தலையீடு வேண்டுமென சஜித் கேட்கலாம். அதனால், இந்த நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படாது.ஜே.வி.பிக்கெதிரான இராணுவ நடவடிக்கையில் சிங்கள மக்கள் கொல்லப்படுவதற்கெதிராக ம…
-
- 0 replies
- 438 views
-
-
75 ஆண்டுகளுக்கும் மேலாக கற்றுக்கொண்ட பாடம் என்ன ? Digital News Team லூசியன் அருள்பிரகாசம் 0000000000000000000000000000000000000 எங்கள் மரபணுவின் பொதுவான தன்மைகள் பேராசிரியர் காமனி தென்னக்கோன் மற்றும் ஏனையோரால் மேற்கொள்ளப்பட்ட மரபணு [டி .என். ஏ ]ஆய்வுகள் (த ஐலண்ட் இல் பெப்ரவரி 2019 யில் அவரது கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது) : “சிங்கள மற்றும் இலங்கைத் தமிழர்களின் பெரும்பாலான டி.என்.ஏ ஆய்வுகள் பாரியளவில் மரபணு ரீதியான வேறுபாட்டைக் காண்பிக்கவில்லை.மக்கள் இலங்கைத் தீவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பொதுவான வம்சாவளியைக் கொண்டுள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.மேலும், “மரபணுக் கலவை பற்றிய ஆய்வில், இலங்கையின் சிங்கள…
-
- 0 replies
- 590 views
-
-
கோத்தாவை சிக்க வைக்கும் ஐநாவின் வலை தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை விசாரணை என்றவுடன் பெரும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் சிங்களத்துக்கு, இப்போது திருடனுக்கு தேள் கொட்டியது போல முளுசும் வேலை ஒன்றினை கச்சிதமாக ஐநா செய்துள்ளது. DBS ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். இதில், கோத்தா எப்படி சிக்கி இருக்கிறார் என்று அழகாக விபரிக்கின்றார். சிங்களவர்களில் காணாமல் ஆக்கப்பட்டுள் ளோர் குறித்தும் அதில், கோத்தாவின் வகி பாகம் குறித்தும், ஐநா செய்த விசாரணை குறித்து, ஜனாதிபதி ரணிலுக்கு எழுதி உள்ளது. தமிழர் தொடர்பில் செய்வதுபோலவே, இதணையும் சிங்களம் எதிர்க்க முடியுமா? சிங்களம் என்ன செய்யும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம். உள்ளூர் விசாரணை என்று, ஐநாவுக்கு அல்…
-
- 9 replies
- 960 views
-
-
தமிழர்களால் ஒரு பலமாக திரட்சிபெற முடியுமா -யதீந்திரா தமிழ் தேசிய அரசியல் தொடர்ந்தும் தோல்வியின் பாதையிலேயே செல்கின்றது. இது தொடர்பில் பல்வேறு சந்தர்பங்களில் விவாதித்திருக்கின்றேன். தமிழர்களின் அரசில் பயணத்தை எடுத்து நோக்கினால், அதனை மூன்று கட்டங்களாக பிரிக்கலாம். ஒன்று, செல்வாநாயகம் காலகட்டம். இரண்டாவது, பிரபாகரன் காலகட்டம், மூன்றாவது, 2009இற்கு பின்னரான சம்பந்தன் காலகட்டம். இந்த மூன்று கட்டங்களும் தோல்வியில் முடிந்தமை தொடர்பில் நான் முன்னைய கட்டுரை ஒன்றில் விரிவாக எழுதியிருக்கின்றேன். நாம் கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் பல்வேறு சந்தர்பங்களில் எழுதியிருக்கின்றேன். ஆனால் முன்னேற்றங்களைத்தான் காணவில்லை. எனி…
-
- 2 replies
- 404 views
-
-
புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் நம்பிக்கையற்ற தலைமைப் பதவியும் –ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை என்ற உண்மையான உணர்வு இவர்களிடம் இருக்குமானால், எந்த நோக்கத்துக்காகத் தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினார்களோ அந்த நோக்கத்துக்கு மாறாக மீண்டும் தமிழரசுக் கட்சி போன்று இந்த ஐந்து கட்சிகளும் தனித் தனிச் செல்வாக்கை வளர்க்க முற்படுகின்றனர் என்பது புரிகிறது– -அ.நிக்ஸன்- ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டம் 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் ஒரு “தேசிய இயக்க…
-
- 0 replies
- 297 views
-
-
ஒரே இரவில் தீர்வு? என். கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், வலைத்தளத்தில் எழுதிவரும் ‘உரலார் கேள்வியும் உலக்கையார் பதிலும்’ என்ற கேள்வி - பதில் தொடரில், அண்மையில் கேட்கப்பட்டிருந்த, ‘ரணில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகண்டுவிவார் போல இருக்கிறதே’ என்ற கேள்விக்கு, ‘ஏறச்சொன்னால் கழுதைக்குக் கோபம்; இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்’ என்ற நிலையில்த்தான், நமது இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் பலகாலமாய் நடந்து கொண்டிருக்கின்றன’ என்று தனது பதிலில் குறிப்பிட்டு இருந்தமை, கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருந்தது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, இலங்கை அரசாங்கம், தமிழ்த்தேசம் ஆகிய இருதரப்பினரிடையே ஏற்பட வேண்டுமாயின், இருதரப்பும் சமரசங்கள…
-
- 0 replies
- 660 views
-
-
இலங்கை இனமுரண்பாட்டின் திருப்புமுனை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கறுப்பு ஜூலை நாற்பதாண்டுகளின் பின்னர் - 01 சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வுகள் மிகச்சில! அவை ஒவ்வொன்றும் வரலாற்றின் வழித்தடத்தில் விட்டுச்சென்ற செய்திகள் சிந்தனைக்குரியன. 75 ஆண்டுகால சுதந்திர இலங்கையின் வரலாற்றின் பெரும்பகுதியை, இனமுரண்பாடு நிறைத்திருப்பது தற்செயலானதல்ல. சுதந்திரத்துக்கு முந்தைய இலங்கையிலேயே இனமுரண்பாட்டுக்கான வித்துகள் இருந்தன. மகாவம்சம் என்ற புனைவு வரலாறாகக் கருக்கொண்டதும், அதன் வழிப்பட்ட சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையும் இதன் தொடக்கப் புள்ளிகள். 19ஆம் நூற்றாண்டு இறுதிப் பகுதிகளில் ‘கொச்சிக்கடை கலவரம்’ எனப்படும் பௌத்த-க…
-
- 5 replies
- 1.2k views
-
-
பொறுப்புக்கூறாமைக்கு யார் பொறுப்பு? நிலாந்தன். 53வது ஐநா மனிதஉரிமைகள் கூட்டத்தொடர் கடந்த 19ஆம் திகதி தொடங்கியிருக்கிறது. இதில் இலங்கை தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய்மூல அறிக்கை வாசிக்கப்பட்டுள்ளது.அதில் பொறுப்புக் கூறல் தொடர்பாக அழுத்தமான கருத்துக்கள் உண்டு. பொறுப்பு கூறல் எனப்படுவது இறந்த காலத்திற்கு பொறுப்பு கூறுவது. இறந்த காலத்தில் நடந்த குற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறுவது. அக்குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும் நிவாரணத்தையும் வழங்குவது. அவ்வாறு நீதியை நிலை நாட்டுவதன்மூலம் சமாதானத்தை,நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பது. இதை ஐநாவின் வார்த்தைகளில் சொன்னால் நிலைமாறு கால நீதியை ஸ்தாபிப்பது. ஐநாவின் முப்பதின் கீழ் ஒன்று தீர்மானம் 2015 ஆம் ஆண்…
-
- 0 replies
- 326 views
-
-
ஐ.எம்.எஃப்பைக் கையாள முடியாத தமிழர்கள் ? நிலாந்தன்! adminJune 25, 2023 ஐநா மனித உரிமைகள் பேரவையின் 53 வது கூட்டத்தொடர் கடந்த 19ஆம் திகதி ஆரம்பமாகியது. இக்கூட்டத்தொடரில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை வாசிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக மனித உரிமைகள் கூட்டத் தொடரை நோக்கிய தமிழ் மக்களின் கவனக்குவிப்பு ஒப்பீட்டளவில் குறைந்து விடுகின்றது. ஐரோப்பாவை மையமாகக் கொண்டு இயங்கும் தமிழர் அமைப்பு என்ற ஒரு அமைப்பு ஐநா விவகாரங்களில் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றது. அதேசமயம் இம்முறை நாட்டிலிருந்து மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு அரசியல்வாதிகள் யாரும் சென்றிருக்கவில்லை. அண்மை ஆண்டுகளாகமனித உரிமைகள் கூட்டத்தொடருக்குச் செல்லும் தமிழ் அரசியல…
-
- 0 replies
- 324 views
-
-
மீளாச் செலவு வழுவும் இனப்பிரச்சினைக்கான தீர்வும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக, அதாவது மாகாண சபைகளுக்கு பகிரப்பட்டுள்ள அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தால் பிடுங்கப்படாதவாறான முழுமையான அமல்ப்படுத்தல் வேண்டும் என்ற ரீதியில், முன்னாள் வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் முன்மொழிவு செய்துள்ளார். இந்தச் செய்திக்கு, பலவாறான எதிர்வினைகள் தமிழர்களிடம் எழுந்துள்ளன. அதில் மேவி நிற்கும் எதிர்வினை, 13ஆம் திருத்தத்துக்காகவா, தமிழர்கள் இத்தனையை இழந்தார்கள் என்ற உணர்ச்சிவசப்பட்ட நிலையாகும். உணர்ச்சிவசப்பட்ட நிலைக்கு அப்பால், பகுத்தறிந்து சிந்திப்பதுதான் அறிவார்ந்த செயலாகும். அதற்க…
-
- 0 replies
- 433 views
-