Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. மன்னார் மாவட்ட காற்றாலைகளும் கரிசனைகளும் By DIGITAL DESK 5 03 SEP, 2022 | 08:30 PM -ஆர்.ராம்- மன்னார் மாவட்டத்தில் மன்னார்த்தீவு, மன்னார் பெருநிலப்பரப்பு ஆகிய இரு பகுதிகளில் மூன்று கட்டங்களாக காற்றாலைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முதலாம் கட்டத்தில், மன்னார்த் தீவின் தென்பகுதியான தாழ்வுப்பாடிலிருந்து துள்ளுகுடியிருப்பு வரையில் இலங்கை மின்சார சபையினால் 30காற்றாலைகள் ஏலவே அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நீட்டிக்கப்பட்ட முதலாம் கட்டத்தில் 50மெகாவோல்ட் மின்சாரத்தைப் பெறுவதை இலக்காகக் கொண்டு 21காற்றாலைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மும்முரமாகியுள்ளன. அதில், 7காற்றாலைகள் தாழ்வுப்பா…

  2. ஜெனிவா... யதார்த்தம் ? நிலாந்தன். இம்மாதம் பன்னிரண்டாம் திகதி ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கின்றது.இக்கூட்டத்தொடரில் அரசாங்கத்திற்கு எதிரான போக்கு அதிகமாகக் காணப்படலாம் என்று ஓர் எதிர்பார்ப்பு உண்டு. ஆனால் கடந்த 13 ஆண்டு கால அனுபவத்தின்படி, அதிலும் குறிப்பாக ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட ஜெனிவாத் தீர்மானங்களை தொகுத்துப்பார்த்தால் ஒரு முடிவுக்கு வரலாம்.அதாவது,இம்முறை ஜெனிவாவில் ரணில் விக்கிரமசிங்கவை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகள் பெரியளவுக்கு இருக்காது. கடந்த சில ஆண்டுகளாக ஜெனிவாவை நோக்கிச் செல்லும் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் தொகை குறைந்து வருவதைக் காணலாம்.பெருந்தொற்று நோய் ஒரு காரணம். எனினும்,த…

  3. Factum சிறப்பு கண்ணோட்டம் : தாய்வான் – மேற்கு பசுபிக்கின் ஆபரணம் By Digital Desk 5 03 Sep, 2022 | 01:57 PM குசும் விஜேதிலக 1895ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது சீன-ஜப்பானிய யுத்தத்தைத் தொடர்ந்து தாய்வான் தீவினை கைவிட்ட குயிங் வம்சம், ஜப்பான் ஏகாதிபத்தியத்தின் முதலாவது குடியேற்றத்தை உருவாக்கியது. "ஜப்பானியமயமாக்கலின்" அனுகூலங்களை வெளிப்படுத்த, "மாதிரி" குடியேற்றத்தை உருவாக்க ஜப்பானியர்கள் திட்டமிட்டனர். வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதார கட்டமைப்புகள் மற்றும் பொதுச் சுகாதார சிகிச்சை நிலையங்களின் வலையமைப்புகள் ஆகியன உருவாக்கப்பட்டன. கட்டாய ஆரம்பக் க…

  4. அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது குறைப்பு; யார் விட்ட பிழை? புருஜோத்தமன் தங்கமயில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த செவ்வாய்க்கிழமை (30) முன்வைத்த இடைக்கால வரவு -செலவுத் திட்டத்தில், அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை 60ஆக நிர்ணயிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரச மற்றும் அரச சார் நிறுவனங்கள் பலவற்றில், ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லை 65ஆகக் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில், இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில், 60 வயதைக் கடந்துவிட்ட அனைத்து அரச ஊழியர்களும், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியோடு, ஓய்வுபெற்றுச் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, சர்வதேச நாணய நிதியத்திடம் உதவ…

  5. பதவியிலிருந்து அகற்றப்பட்ட தலைவர் ஏன் மீண்டும் இலங்கை வந்துள்ளார்? By RAJEEBAN 03 SEP, 2022 | 12:57 PM சிஎன்என் ஐம்பதுக்கும் அதிகமான நாட்களின் பின்னர் அவர் மீண்டும் வந்துள்ளார். இலங்கையிலிருந்ததப்பியோடி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சனிக்கிழமை காலை இலங்கை திரும்பினார் என சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரியை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. நெருக்கடியில் சிக்கியுள்ள நாட்டில் மீண்டும் பதற்றங்களை உருவாக்ககூடிய நடவடிக்கையாக இது காணப்படுகின்றது. இலங்கையை ஒரு காலத்தில் இரும்புபிடியுடன் ஆட்சி செய்த ராஜபக்ச – தசாப்த காலத்தில் நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியை அவர் கையாண…

  6. மஹிந்தவின் கட்சியில் தனித்து இயங்கும் எம்பிக்கள் - உடைகிறதா ராஜபக்ஷ கோட்டை? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுயாதீனமாக செயல்பட தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் விசேட உரையொன்றை ஆற்றிய, நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளருமான ஜீ.எல்.பீரிஸ், இந்த தீர்மானத்தை அறிவித்தார். இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகபெரும, டிலான் பெ…

  7. புலம்பெயர் தமிழர்களும் இலங்கை அரசின் தந்திரம்-பா .உதயன் பல ஆண்டு காலமாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை முதலில் விடாமல் தொலைந்து போன தமிழ் மக்களுக்காய் இன்று வரை ஒரு நீதியை வழங்காமல் வட கிழக்கில் ஆக்கிரமித்து இருக்கும் இராணுவ முகாம்களை அகற்றாமல் தமிழர் அரசியல் தீர்வுக்கான எந்த வித கரிசனையும் இல்லாமல் புலம் பெயர் சில அமைப்புகளையும் சில தனி நபர்களையும் பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறதாம் இலங்கை அரசு. தடையை நீக்குவதும் பின் தடையை போடுவதுமாக தங்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பயங்கரவாதிகள் பிரிவினைவாதிகள் என்று முத்திரை குத்துவதுமாக ஓர் இனவாத போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. இந்த இனவாத சிந்தனைப் போக்கினால் தான் இலங்கை இன்று இவ்வளவு…

  8. கட்சியரசியலுக்குள் சிக்குண்டிருக்கும் தமிழ்த் தேசியம் By DIGITAL DESK 5 27 AUG, 2022 | 03:34 PM சி.அ.யோதிலிங்கம் தற்போதைய நெருக்கடிக்கான தீர்வைத்தேடும் அரசியலில் தமிழ்த்தரப்பு பங்காளிகளாக இல்லாத நிலையில், இந்த வாரம் தேர்தல் மையகட்சி அரசியலுக்குள் தமிழ்த்தேசிய அரசியல் சிக்குண்டிருக்கும் காரணியைப் பார்க்கலாம். தேச விடுதலை அரசியலும், தேர்தலை மையமாகக் கொண்ட கட்சி அரசியலும் ஒரேநேர்கோட்டில் செல்வது எப்போதும் கடினமானதாகவே இருக்கும். உலகின் பல விடுதலைப் போராட்டங்கள், ஒடுக்கு முறைக்கான போராட்டங்கள் இந்த அனுபவங்களைக் கொண்டுள்ளன. தேச விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் சமூகம் தேர்தல் மையக்கட்சி அரசியலுக்குள் புகுந்ததும் தே…

    • 0 replies
    • 247 views
  9. நலத்திட்டம் இலவசமா ? - சுப. சோமசுந்தரம் 'இலவசங்கள்' பற்றிப் பெரிய அளவில் சர்ச்சை ஏற்பட்டு (உபயம் : இந்திய ஒன்றிய அரசும் தமிழக நிதி அமைச்சர் திரு பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்களும்) சற்றே ஓய்ந்திருக்கிறது. சற்று தாமதமானாலும் கூட நாமும் பேசாவிட்டால் எப்படி என்ற எண்ணத்தின் விளைவே இக்கட்டுரை. சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டவற்றை தொகுத்தளிப்பதாக அமையலாம். புதிதாக நம் சிந்தனையும் சேரலாம். எவ்வாறாயினும் ஒரே கருத்தைச் சொல்வதில் ஒவ்வொருவருக்கும் தனியானதொரு பாணி என்று உண்டே ! இதோ : வளர்ச்சித் திட்டம் எதுவும் பற்றி எட்டு ஆண்டுகளாக சிந்தித்தே பார…

  10. ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பும் ரணிலும் 01 SEP, 2022 | 03:59 PM 'அறகலய' மக்கள் கிளர்ச்சி உச்சக்கட்டத்தில் இருந்த நாட்களில் 'கோட்டா வீட்டுக்கு போ ' என்ற சுலோகத்துக்கு நிகராக ' நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படவேண்டும் ' என்ற கோரிக்கைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.பெரும்பாலும் சகல அரசியல் கட்சிகளுமே அதற்கு ஆதரவாக குரல் கொடுத்தன.மக்கள் கிளர்ச்சியினால் பெரும் நெருக்குதல்களுக்கு ஆளான நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூட ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய முயற்சிகளை ஆதரிக்கத்தயாராயிருப்பதாக கூறவேண்டியேற்பட்டது. மக்கள் கிளர்ச்சி தணிந்துபோயிருக்கும் நிலையில…

  11. நாடு திரும்பும் கோட்டாவின் அடுத்த நிகழ்ச்சி நிரல்கள் என்ன – உபுல் ஜோசப் பெர்னாண்டோவின் அரசியல் அலசல் கோட்டா மீண்டும் இலங்கைக்கு வருவார் என்ற வதந்திகள் பரவி வரும் நிலையில், மூத்த அரசியல் ஆய்வாளர் உபுல் ஜோசப் பெர்னாண்டோ சிங்கள இதழுக்கு எழுதிய ஆய்வுக்கட்டுரையின் தமிழாக்கம் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக பதவி நீக்கப் பிரேரணை முன்மொழியப்பட்டபோது, அவருக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய பிக்கு ஒருவர் ஆலோசனை வழங்கினார். பிரேமதாசவின் ஜாதகத்தை கவனமாகப் படித்த பிறகு, பிக்கு அவருக்கு ஆலோசனை வழங்கினார். நீங்கள் இப்போது ஒரு பயங்கரமான சாபத்தை அனுபவித்து வருகிறீர்கள். அரசனின் தீய காலம் வந்தபோது, அவன் தீமையிலிருந்து தப்பிக்க …

  12. கல்முனை தமிழ்ப் பிரிவின் தரமுயர்வு? லக்ஸ்மன் கிழக்கின் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று கல்முனை (வடக்கு) தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகமாகும். அப்பிரதேச செயலகம் இன்னமும் தரமுயர்த்தப்படவில்லை. உண்ணாவிரதங்களையும் போராட்டங்களையும் நடத்தியதுடன் பல்வேறு நிர்வாக ரீதியான முயற்சிகளையும் அரசியல்வாதிகள், கல்முனை சிவில் சமூகத்தினர் மேற்கொண்டிருந்தபோதும் இதுவரையில் எதுவுமே நடைபெறவில்லை. போராட்டங்களுக்கும் முயற்சிகளுக்கும் முடிவு கிடைக்காத நிலையில், தற்போது, இதுவரையில் அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் ஒன்றாகக் காட்டப்பட்ட கல்முனை வடக்கு (கல்முனை தமிழ் பிரிவு) பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளத்திலிருந்து நீக்கப்பட்டதாக சில தி…

  13. அவர்கள் என்னைத் தேடி வந்தபோது... தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ நாடு வழமைக்குத் திரும்பிவிட்டதாக பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அடிப்படைப் பொருட்களை வரிசையில் நிற்காமல் பெறமுடிகின்றமை, உணவுப்பொருட்களின் விலை குறைந்துள்ளமை, போராட்டக்காரர்கள் காலிமுகத்திடலில் இருந்து அகன்றுள்ளமை போன்றன நிலைமை, சீராகியுள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், இங்கு நாம் கேட்க வேண்டிய அடிப்படையான கேள்வி இன்னமும் கேட்கப்படாமலேயே இருக்கிறது. நாட்டை இந்த நெருக்கடிக்குத் தள்ளிய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டனவா? இல்லையெனில், எதன் அடிப்படையில் நாடு வழமைக்குத் திரும்பி விட்டது என்று நாம் நம்புகிறோம்? இப்போது நாட்டில் நடைபெறுகின்ற விடயங்கள் தொடர்பில் அக்கறை கொண்டுள்ளோமா? இ…

  14. பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிரான தென் இலங்கையின் விழிப்பு என். கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதன் காரணமாக, தென்இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிரான பிரக்ஞை அதிகரித்துள்ளது. ஏறத்தாழ 44 வருடங்கள் அமலில் இருக்கும் ஒரு தற்காலிக சட்டம், இந்நாட்டின் நிறைவேற்றுத்துறையிடம், தான் நினைக்கும் எவரையும், பயங்கரவாதி என்ற சந்தேகத்தின் பெயரில், நீதித்துறையின் தலையீடின்றித் தடுத்து வைக்கக்கூடிய அதிகாரத்தை, ஒப்புக்கொடுத்திருந்தது. இதுகுறித்து, தென்இலங்கை 44 ஆண்டுகள் கழித்தாவது, ஓரளவு விழித்துக்கொள்ள முனைவது ந…

  15. சீனா ஒரு பெரும் விளையாட்டுக்குரிய துருப்புச்சீட்டாக இலங்கையைப் பயன்படுத்தியுள்ளது - இந்திய அதிகாரி கடும் சாடல் By T YUWARAJ 30 AUG, 2022 | 06:20 AM (நா.தனுஜா) சீனா ஒரு பெரும் விளையாட்டுக்குரிய துருப்புச்சீட்டாக இலங்கையைப் பயன்படுத்தியிருக்கின்றது. கடந்த சில வருடங்களாக சீனாவினால் பின்பற்றப்பட்டுவந்த கொள்கையே இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது என்று இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்புப் பிரதி ஆலோசகர் பங்கச் ஷரன் கடுமையாக சாடியுள்ளார். அண்மைக்கால இராஜதந்திர விவகாரங்களை அடிப்படையாகக்கொண்டு கடந்த வார இறுதியில் மிகவும் காட்டமான கட்டுரையொன்றை வெளியிட்டிருந்த இலங்கை…

  16. தமிழ்த் தேசிய அரசியல் எதை நோக்கிப் பயணிக்க வேண்டும்? புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய அரசியல், சம்பவங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் பிரதிபலிக்கும் கட்டத்துக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றது. அரசியல் உரிமையையும் விடுதலையையும் முன்னிறுத்தி செயற்பட வேண்டிய தரப்பாக, தமிழ்த் தேசிய கட்சிகளும் அமைப்புகளும் அதுசார் ஓர்மத்தோடும் இராஜதந்திர அணுகுமுறையோடும் நகர வேண்டும். ஆனால், அவ்வாறான கட்டத்தை எந்தவொரு தமிழ்த் தரப்பும் கடந்த சில ஆண்டுகளாகப் பதிவு செய்யவில்லை. இலங்கை, அதன் அமைவிடம் சார்ந்து, எப்போதுமே சர்வதேச ரீதியில் கவனம் பெறும் நாடாக இருந்து வந்திருக்கின்றது. சீனா, தன்னுடைய தொழில், இராணுவ கட்டமைப்பு ரீதியான முன்னேற்றத்தை அடைந்த போது, சர்வதேச ரீதியில் தன்னுடை…

  17. தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஆற்றல் – உண்மைதானா? - யதீந்திரா ரணில் விக்கிரமசிங்க நிர்வாகம் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சில தனிநபர்கள் மீதான தடையை நீக்கியிருக்கின்றது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இது தொடர்பில் நான் முன்னரே குறிப்பிட்டிருக்கின்றேன். இதனை வெறுமனே பொருளாதார நெருக்கடியின் விளைவாக மட்டும் நோக்கினால், அது முழுமையான பார்வையாக இருக்காது. ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில் சிலர் மீதான தடைநீக்கப்பட்டது. கோட்;டபாய ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்ததை தொடர்ந்து மீளவும் தடைவிதிக்கப்பட்டது. இப்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானதை தொடர்ந்து மீளவும் தடைநீக்கப்பட்டிருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க நிர்வாகம் புலம்பெயர் சம…

  18. ஐ.நா.வில் பிரித்தானியா தலைமையில் புதிய பிரேரணை : அமெரிக்காவும் இணை அனுசரணை By VISHNU 28 AUG, 2022 | 03:20 PM -ஆர்.ராம்- · சாட்சியங்களை திரட்டும் பொறிமுறை நீடிப்பு · உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவமும் உள்ளீர்ப்பு · வரைவு தயாரிப்பு பணிகளில் சுமந்திரன் பங்கேற்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலைச் செய்வதற்கான புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டள்ளது. பிரித்தானியா தலைமையில் கொண்ட…

  19. தடை நீக்கமும்... ஜெனிவாவும். – நிலாந்தன்.- புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மற்றும் ஒரு தொகை தனி நபர்கள் மீதான தடைகளை அரசாங்கம் நீக்கி இருக்கிறது. இந்த தடை நீக்கம் ரணில் விக்ரமசிங்கவின் முடிவு அல்ல. ஏற்கனவே கோதாபய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒன்று. ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்தின் பிரகாரம் ரணில் விக்ரமசிங்க இப்பொழுது சில அமைப்புகளையும் நபர்களையும் தடை நீக்கி இருக்கிறார். இது தொடர்பாக நான் எழுதிய ஒரு கட்டுரை குறித்து கனடாவில் உள்ள எனது நண்பர் ஒருவர் என்னிடம் பின்வருமாறு கேட்டிருந்தார்… ‘புலம்பெயர்ந்த தமிழர்கள் ஓரணியாக அல்லது நிறுவனமயப்பட்டு நாட்டுக்குள் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்கள்.. ஆனால் நாட்டில் இருக்கும் தமிழ்த் …

  20. ரணில் பலமடைந்து வருகிறாரா? -நிலாந்தன் பயங்கரவாத தடைச் சட்டம் அரகலயவின் மீது பாயத் தொடங்கிவிட்டது. “மனித உரிமைகள் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்மா தேரர் ஆகியோர் இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன்.அவர்களை தடுப்புக் காவலில் வைக்கும் உத்தரவில் கையெழுத்திட வேண்டாம் என ஜனாதிபதி ரணிலிடம் கேட்டுக்கொள்கின்றேன், அவ்வாறு செய்வது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும்” என்று மேரி லோலர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். மனித உரிமைகளைப் பாதுகாக்கும் செயற்பாட்டாளர்கள் தொடர்பான ஐநாவின் விசேட அறிக்கையாளர் அவர்.எனினும், அந்த இருண்ட நாளை அவரால் தடுக்க முடியவில…

  21. தடைகளைத் தாண்டிய பயணத்தை ஆரம்பிக்கலாமா? ச.சேகர் தெரிவு செய்யப்பட்ட 305 பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த இறக்குமதித் தடை இந்த வாரம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்திருந்தமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டிருந்ததை காண முடிந்தது. இந்த இறக்குமதித் தடைகளுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்த பலர், தற்போதைய ஜனாதிபதியினால் தான்தோன்றித்தனமாக மேற்கொண்ட தீர்மானத்தின் விளைவாகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர். இதனால் நாடு மேலும் பின்னடைவை எதிர்நோக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். அந்நியச் செலாவணி இருப்பு குறைந்துள்ளமையின் காரணமாக தற்போது சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக நாடு பாதிக்கப்பட்டுள…

    • 0 replies
    • 179 views
  22. சமந்தா பவரை இலங்கைக்கு அனுப்புகிறது வொஷிங்டன் By VISHNU 23 AUG, 2022 | 05:23 PM (லியோ நிரோஷ தர்ஷன்) அமெரிக்க உதவி திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இறுதி திகதி உறுதிப்படுத்தப்படாத நிலையில் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் இவரது விஜயம் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச நாணய நிதிய பேச்சுவார்தைகள், ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் மற்றும் சீன கப்பலை அனுமதித்த விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்களை அரசாங்கம் எதிர்க்கொண்டுள்ள நிலையில் சமந்தா பவரின் விஜயம் அமைகின்றது. ஏழு நாட்களுக்கு பின்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விட்டு வெளியேறியுள்ளது சீன இரா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.