அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9217 topics in this forum
-
வருகிறது... சீனக் கப்பல்? – நிலாந்தன். இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு அடுத்த நாள் பதினாறாம் திகதி இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துட் காணப்படும் இலங்கைத்தீவின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு, சீனாவின் “யுஆன் வாங் 5” என்ற கப்பல் வருகிறது. இதை, இலங்கை தீவின் மீதான இந்திய ராஜதந்திரத்தின் ஆகப் பிந்திய ஒரு பின்னடைவாக எடுத்துக் கொள்ளலாமா? கப்பலின் வருகை ஏற்கனவே இரண்டு அரசுகளினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. எனினும் இந்திய ஊடகங்கள் அந்தக் கப்பலின் வருகையைக் குறித்து பதட்டமான செய்திகளை வெளியிட்டன.இது விடயத்தில் இந்திய வெளியுறவுத் துறையை விடவும் இந்திய ஊடகங்கள் அதிகம் பதட்டமடைவதாகத் தெரிகிறது கிடைக்கப்பெறும் தகவல்களின்படி அந்தக் கப்பலானது ஆராய்ச்சி கண்க…
-
- 1 reply
- 380 views
-
-
உக்ரேன் ஆயுத உற்பத்தியாளர்களின் பரீட்சைக் களம் ? By DIGITAL DESK 5 13 AUG, 2022 | 12:13 PM சுவிசிலிருந்து சண் தவராஜா ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்களைக் காப்பதற்காகவும், ஜனநாயகத்தை மீட்பதற்காகவும் போர் புரிவதாக உக்ரேன் தரப்பிலும், அந்த நாட்டுக்கு ஆதரவாகச் செயற்படும் மேற்குலகின் சார்பிலும் முன்வைக்கப்படும் பிரசாரங்களைப் பொய்ப்பிக்கும் வகையிலான அறிக்கை ஒன்றை சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ளது. 'உக்ரேன்: குடிமக்களைப் பாதிக்கும் உக்ரேனின் போர்த் தந்திரங்கள்" என்ற தலைப்பில் ஆகஸ்ட் 4ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு முரணாக உக்ரேன் நாட்டுப் படையினர் பல சந்தர்ப்பங்களில் செயற்ப…
-
- 0 replies
- 339 views
-
-
இந்திய சுதந்திர தினம்: பணக்காரர்கள் பெருகும் நாட்டில், ஏழைகள் துயரப்படுவதன் 'ரகசியம்' என்ன? ஜி எஸ் ராம்மோகன் ஆசிரியர், பிபிசி தெலுங்கு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகால பயணத்தைப் பற்றிய பெரும்பாலான பகுப்பாய்வுகள், கடந்த 30 ஆண்டுகளைச் சுற்றியே உள்ளன. இந்தக் காலக்கட்டத்தில் இந்தியா எப்படி அடையாளம் காண முடியாத அளவுக்கு மாற்றமடைந்துள்ளது என்பதை அவை வலியுறுத்துகின்றன. லேண்ட்லைன் இணைப்புக்காக ஒருவர் தனது தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரிடம் எப்படி நடையாக நடக்கவேண்டும், எரிவாயு இணைப்பைப் பெற ஒருவர் எப்படி பல மாதங்கள் காத்…
-
- 0 replies
- 402 views
- 1 follower
-
-
தாயை பாலியல் வல்லுறவு செய்தவர்களை 28 ஆண்டுகளுக்குப் பின் நீதியின் முன் நிறுத்திய மகன் ஆனந்த் ஜனானே லக்னௌவிலிருந்து பிபிசி செய்தியாளர் 10 ஆகஸ்ட் 2022, 04:51 GMT படக்குறிப்பு, சித்தரிப்பு படம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிக்கு பிறந்த மகனால், 28 ஆண்டுகளுக்கு பின் அப்பெண்ணுக்கு நியாயம் கிடைக்கவிருக்கிறது. தன் தாயின் 12 வயதில் நடந்த அநீதிக்காக 28 ஆண்டுகள் கழித்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார், 13 ஆண்டுகளுக்கு முன் தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட மகன். இதில் நடந்ததும் நடப்பதும் என்ன? ஆறு மாதங்கள் பாலியல் தொல்லை 28 ஆண்டுகளுக்கு முன…
-
- 4 replies
- 575 views
- 1 follower
-
-
கூட்டமைப்பு கைக்கூலிகளின் கூட்டு ஆகிறதா? புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ‘ரணில்- ராஜபக்ஷ’ கூட்டடம், விலை போய்விட்டதாக புகைந்து கொண்டிருந்த சந்தேகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எண்ணைய் ஊற்றியிருக்கிறார். சர்வகட்சி அரசாங்கத்தினை அமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளை அழைத்து ரணில் சந்தித்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை கடந்த வாரம் நிகழ்த்தினார். இதன்போதே, ஜனாதிபதித் தெரிவின் போது, டலஸுக்கு ஆதரவளிப்பது என்ற கூட்டமைப்பின் தீர்மானத்தினைத் தாண்டி, சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்தாக கூறியிருக்கிறார். இதனை, கூட்டமைப்ப…
-
- 1 reply
- 674 views
-
-
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு வருமா? என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதில் அக்கறை செலுத்தி வருகிறார். ‘சர்வகட்சி அரசாங்கம்’ என்பதன் மூலம், பொருளாதாரத்தில் வீழ்ந்துபோய், வங்குரோத்து நிலையிலுள்ள நாட்டை, மீளக்கட்டி எழுப்புவதற்கான முயற்சிகளை எடுப்பதே அவரது திட்டம். அனைத்துக் கட்சிகளும் ஒரு பொது நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவு தெரிவிக்கும் போது, அதை நடைமுறைப்படுத்துவது மிக இலகுவாயிருக்கும். அத்துடன், மக்களை திருப்திப்படுத்துவதும், அல்லது குறைந்தபட்சம் சாந்தப்படுத்துவதும் பெருமளவுக்குச் சாத்தியமாகும் என்பதுதான், சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதன் பின்னணியிலுள்ள சிந்தனையாக இருக்கும். வழமைபோல…
-
- 0 replies
- 391 views
-
-
ரணிலின் தென்னிலங்கை நகர்வுகள்? - யதீந்திரா ரணில் விக்கிரமசிங்க அவரது, நீண்டநாள் இலக்கில் வெற்றிபெற்றிருக்கின்றார். ஆனாலும் இதனை முழுமையான வெற்றியென்று கூறவிடமுடியாது. ஏனெனில் அவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு இந்த இடத்தை அடையவில்லை. ஆனாலும் கிடைத்த இடத்தை கெட்டியாக பற்றிக்கொள்வதும் அதே வேளை, எதிர்காலத்தில் முடிந்தால் மீண்டுமொருமுறை சதுரங்கத்தை ஆடுவதும்தான் அவருக்கு முன்னாலுள்ள தெரிவுகளாக இருக்கின்றன. எனவே அடிப்படையில் ரணில் ஆடப்போவது முற்றிலும் தென்னிலங்கைக்கான அரசியல் ஆட்டம்தான். எனவே இதில் தமிழர்கள் அதிகம் தலையை பிய்த்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் இந்தத் தென்னிலங்கை ஆட்டத்திற்குள் எந்தளவு தூரம் போகலாம், போகக் கூடாது என்பதில் தமிழ் தேசிய தரப…
-
- 0 replies
- 474 views
-
-
ஒன்பதாந் திகதி என்ன காத்திருக்கிறது? நிலாந்தன் வரும் ஒன்பதாம் திகதியும் மக்கள் தெருவில் இறங்குவார்கள் என்ற தொனிப்பட சரத் பொன்சேகா எச்சரித்திருந்தார்.அவர் அவ்வாறு கூறியதை அரகலயக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.சரத் பொன்சேகா அரகலயவை “ஹைஜாக் “ பண்ணப் பார்க்கிறார் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த மூன்று மாத காலத்துக்கும் மேலான மக்கள் எழுச்சிகளின்போது ஒவ்வொரு ஒன்பதாம் திகதியும் அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக ராஜபக்ச குடும்பத்துக்கும் அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் கெட்ட நாட்களாகக் காணப்பட்டன. இந்த அரசியல் எண்கணிதத் தர்க்கத்தின்படி வரும் ஒன்பதாம் திகதியும் அரசியல்வாதிகளுக்கு கெட்ட நாளாக அமையுமா? அந்த ஆபத்தை எதிர்கொள்ளும் தற்காப்ப…
-
- 5 replies
- 1k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 364 views
-
-
நெருப்பு சமரில் நான்சி வெற்றி! யூசுப் என் யூனுஸ் அமெரிக்காவின் அதிகாரமிக்க மூன்றாம் நிலை பதவியில் இருக்கின்றவர்தான் நான்சி பெலோசி.இவர் தைவானுக்கு சுற்றுப் பிரயாணம் வருகின்றார் என்று சொன்னால் அதில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும்? அமெரிக்காவின் சபாநாயகர் பதவியில் இருக்கின்ற நான்சி பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா, தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வமான விஜயம்.அவை எல்லாம் ஓகே. அது பற்றி எந்தக் கேள்விகளை யாரும் எழுப்பவில்லை.அவர் அந்தப் பயணத்தில் தைவானுக்கும் போய் கால்பதிக்க இருக்கின்றார் என்ற தகவல் கசிந்த போது கொதித்துப் போனது சீனா. இந்த விடயத்தில் ஏன் சீனா கொதித்தப் போனது.அவர் அப்படி அங்கு போய் இறங்கினால் பெரும் அழிவுதான்…
-
- 0 replies
- 290 views
-
-
மதுவுக்குள் சிக்குண்ட மலையகம் : அடிமைப்படுத்தலின் நவீன உத்தி அதிகார வெறியும் ஆடம்பர ஆர்ப்பாட்டங்களும் ஆர்ப்பரித்து இருந்த ஒரு காலகட்டத்தில் மாபெரும் மனிதக் கூட்டங்கள் மந்தைகள் என மண்ணில் வீசப்பட்டிருந்தன. 17 ஆம் ,18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுகளில் அந்நிய ஆக்கிரமிப்பு வெறியர்கள் ஏகாதிபத்தியங்களாக எழுச்சி பெற்று உலகம் முழுவதையும் தம் காலடியில் போட்டு மிதித்து விடவேண்டும் என்று வேட்கை கொண்டிருந்தனர். பிரிட்டிஷ்காரன் என்ற மகா பாதகன் ஆப்பிரிக்கக் கண்டத்தை சின்னா பின்னப்படுத்திய பின்னர் ஆசியாவை நோக்கி படை திரட்டிக்கொண்டு வந்தான். அதற்கென கிழக்கிந்திய வர்த்தக கம்பெனி என்று ஒரு பாரிய நிறுவனத்தை பெரும் செலவில் தோற்றுவித்தான். அதனால் ஏற்பட்ட பெரும் பணச்செலவை அவர்கள் ஆக்கி…
-
- 0 replies
- 674 views
-
-
ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு தொடர்பில் ரணிலின் நழுவல் போக்கு Veeragathy Thanabalasingham on August 8, 2022 Photo, AP Photo/Eranga Jayawardena, CP24 ரணில் விக்கிரமசிங்க தனது 45 வருடகால நாடாளுமன்ற அரசியல் வாழ்வில் 6 தடவைகள் பிரதமராகவும் அதற்கு முன்னர் அமைச்சராகவும் பெருமளவு உரைகளை நிகழ்த்தியிருக்கிறார். ஆனால், இலங்கையின் புதிய ஜனாதிபதி என்ற வகையில் கடந்தவாரம் தற்போதைய நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து நிகழ்த்திய நீண்ட கொள்கை விளக்கவுரை இதுகாலரையிலான அவரின் உரைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அது பரவலான வரவேற்பை பெற்றிருக்கிறது. உரை என்ற வகையில் அத…
-
- 1 reply
- 381 views
- 1 follower
-
-
களத்தில் குதித்துள்ள பொருளாதார அடியாட்கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையர்களின் கதையாடல்கள், இப்போது வேறு தளத்தை நோக்கி நகர்ந்துள்ளன. இன்னும் சரியாகச் சொல்வதானால் நகர்த்தப்பட்டுள்ளன. நேற்றுவரை போராட்டத்துக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஆதரவாக இருந்தவர்கள், கருத்துரைத்தவர்கள் பலர் இன்று அரசாங்கத்துடன் ஐக்கியமாகி, பதவிகளைப் பெற்றுள்ளார்கள். அவர்கள், போராட்டத்துக்கும் போராட்டக்காரர்களுக்கும் எதிராக, இன்று கருத்துரைக்கிறார்கள்; அவ்வாறான கருத்துருவாக்கம் ஒன்றைச் செய்கிறார்கள். இன்னொரு தரப்பினர், பொருளாதார மீட்சியின் அவசரம் பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள், போராட்டக்காரர்களை அமைதிகாக்கும்படி கோருகிறார்கள். மற்றுமொரு தரப்பினர், போராட்டம், வன்முறையைக் க…
-
- 0 replies
- 359 views
-
-
கூட்டமைப்பின் தலைமைத்துவத்துக்கான கோரிக்கை புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் இருந்து, இரா.சம்பந்தன் விலகிக் கொள்ள வேண்டும் என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அண்மையில் தெரிவித்திருந்தார். சம்பந்தனின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், கூட்டமைப்புக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டு, அரசியல் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை, கடந்த பொதுத் தேர்தல் காலம் முதல் முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால், கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் இருந்து விலகும் எண்ணம் எதையும், சம்பந்தன் இந்தத் தருணம் வரையில் வெளிப்படுத்தவில்லை. மாறாக, தன்னால் செய்…
-
- 0 replies
- 486 views
-
-
சீனாவின் ராணுவ பலம்: அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளை ஆயுத போட்டியில் முந்தப்போவது எப்படி? டேவிட் பிரவுன் பிபிசி நியூஸ் 23 டிசம்பர் 2021 புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் சீனா தனது படைகளை அதிவேகமாக பெருக்கிக் கொண்டிருக்கிறது. ஏவுகணை தொழில்நுட்பம், அணு ஆயுதங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் அதன் முன்னேறும் வேகம் பல மேற்கத்திய நிபுணர்களிடையே தீவிர கவலையை ஏற்படுத்தியுள்ளன. ராணுவ ஆற்றல் அடிப்படையிலான உலகளாவிய சமநிலையில் திட்டவட்டமான மாற்றம் நடந்து வருவதாக அவர்கள் நம்புகிறார்கள். 2035-ஆம் ஆண்டுக்குள் சீனாவின் படைகளை நவீனமயமாக்குமாறு அத…
-
- 0 replies
- 402 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசியத்தை... நீர்த்துப் போகச் செய்ய, நீலன் திருச்செல்வம் வகுத்த வழியில்... சுமந்திரன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் அணி என வர்ணிக்கப்படும் அணியின் பிதாமகர் காலஞ்சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி நீலன் திருச்செல்வம் தமிழ்த் தேசிய அடிப்படைகளைப் புறந்தள்ளிவிட்டு, ஒற்றையாட்சிக்குள் 'அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு' என்ற பாதையூடாகத் தமிழ்த் தேசிய அபிலாசைகளைப் பூர்த்திசெய்துவிடலாம் என்ற ஏமாற்று வித்தையாக அவர் உருவாக்கிய ஆபத்தான இணக்க அரசியலின் பிடிக்குள்ளேயே சுமந்திரன் அணி இன்று ஆழமாகச் சிக்கிக்கொண்டுள்ளது. 1985 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியாக இருந்த தமிழரசுக்கட்சியினர் திம்புக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவர்கள். ஆனால், அவர்களை விடவும் மீளமுடியாத தாழ்ந்த நிலைக்கு…
-
- 1 reply
- 366 views
-
-
சர்வகட்சி அரசாங்கம் தீர்வைத் தருமா? எம்.எஸ்.எம். ஐயூப் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றைத் தாம் உருவாக்கப் போவதாகவும், அதில் இணையுமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் சகல உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கடிதமும் சர்வகட்சி அரசாங்கம் என்ற எண்ணக்கருவும், இப்போது அரசியல் கட்சிகளுக்கு இடையேயும் அரசியல்வாதிகளுக்கு இடையேயும் பல்வேறு வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், சர்வகட்சி அரசாங்கம் ஒன்றில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரனை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. ரணில் விக்கிரமசிங்க, சிங்கள மக்களின் து…
-
- 0 replies
- 664 views
-
-
இந்திய – இலங்கை ஒப்பந்தம் – 35 வருடங்கள்- எங்கிருந்து எங்கு செல்வது? - யதீந்திரா கடந்த பத்தியில் நமது அரசியல் சூழலிலுள்ள சில பலவீனங்கள் தொடர்பில் குறிப்பிட்டிருந்தேன். அதாவது, எதிர்பார்ப்புக்களை முன்னிறுத்துபவர்கள் எவரிடடும், அதனை அடையும் வழிமுறைகள் இல்லை. ஏனெனில் அது அவர்களுக்கு தெரியாதென்று குறித்த கட்டுரை சுட்டிக்காட்டியிருந்தது. இது தொடர்பில் சில நண்பர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். அந்த பதில் உங்களிடம் இருக்கின்றதா – என்று ஒரு புலம்பெயர் நண்பர் கேட்டிருந்தார். கேள்வி சரியானது. மற்றவர்களை நோக்கி தொடுக்கும் விமர்சனங்கள் என்பவை பூமறாங் போன்றது. பூமறாங் என்பது – அதனை வீசியவரையே நோக்கி தாக்கும் திறன் கொண்டது. எறிந்தவருக்கு அதனை மீளவும்…
-
- 0 replies
- 422 views
-
-
உக்ரைன் விவகாரத்தில் மௌனம் அவமானம் ராமச்சந்திர குஹா உக்ரைனுக்குள் ரஷ்ய ராணுவ டேங்குகள் நுழைந்து தாக்குதல் நடத்துவதும் உக்ரைனிய நகரங்கள் கிராமங்கள் மீது ரஷ்யப் போர் விமானங்கள் குண்டு வீசி அழிப்பதும் ஆரம்பித்து ஐந்து மாதங்கள் ஆகின்றன. இது மிகவும் கொடூரமான, ரத்த பலி கேட்கும் போர். இதுவரை சண்டையில் 20,000 ரஷ்யப் போர் வீரர்களும் அவர்களைப் போல இரண்டு மடங்கு உக்ரைன் வீரர்களும் இறந்துவிட்டனர். உக்ரைனைச் சேர்ந்த சிவிலியன்கள் ஆயிரக்கணக்கில் இறந்துள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் பாதுகாப்பான இடம் தேடி தங்களுடைய நாட்டை விட்டே ஓடி பிற நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துவிட்டனர். உக்ரைனின் பொருளாதாரம் நாசமாக்கப்படுகிறது. இந்த மோதல் முடிவுக்கு வந்தாலும்கூட, தன்னுடைய பழைய…
-
- 2 replies
- 401 views
-
-
இலங்கையின் மீளெழுச்சிக்கு இந்தியாவின் 'உயிர் மூச்சே' காரணம் - ரணில் விக்ரமசிங்க 46 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DEPARTMENT OF GOVERNMENT INFORMATION இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், சீனாவின் கண்காணிப்பு கப்பல் எதிர்வரும் 11ம் தேதி இலங்கைக்கு வருகைத் தரவுள்ள நிலையில், நாட்டின் பொருளாதார மீளெழுச்சிக்கு இந்தியாவின் 'உயிர் மூச்சே' காரணம் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளெழுவதற்கு, இந்தியா வழங்கிய 'உயிர் மூச்சே' காரணம் என ரணில் விக்ரமசிங்க, தனது கொள்கை பிரகடன உரையில் இன்று கூறினார். 9வ…
-
- 0 replies
- 769 views
- 1 follower
-
-
சீனாவின் ஆத்திரமூட்டல் சீனாவின் ஆத்திரமூட்டல் ஆபத்தில் இலங்கை துடித்துக்கொண்டிருக்கும் போதெல்லாம் எவ்விதமான தயவுதாட்சியம் இன்றியும் எதிர்ப்பார்ப்புகள் இன்றியும் ஓடோடி வந்து உதவிக்கரம் நீட்டிய, நீடிக்கொண்டிருக்கின்ற நாடு என்றால் அது இந்தியாதான். அதனால்தான் என்னவோ இந்தியாவை இலங்கையின் “பெரியண்ணா” என்றழைப்பார்கள். பெரியண்ணாவின் உதவிகளை குறைத்து மதிப்பிடமுடியாது. சுனாமி அனர்த்தத்தின் போது பெரும் சேவைகளை ஆற்றியிருந்தது. உதவிகளையும் செய்திருந்தது. அதன்பின்னர் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் போதெல்லாம் வியப்படைய செய்யும் வகையில் உதவிகளைச் செய்திருந்தது. கொரோனா வைரஸின் தாக்கம் தங்களுடைய நாட்டில் தாண்டவமாடிக்கொண்டிருந்த நிலையிலும் “அயலுறவுக்கு முதலிடம்” என்றஅடிப்…
-
- 4 replies
- 428 views
- 1 follower
-
-
கலைந்த கனவுகள் சிதைந்த திட்டங்கள் நஜீப்– மனித வாழ்வில் எதிர்பார்த்த விடயங்கள் கைகூடாமல் போன நிகழ்வுகள் பல சந்தர்ப்பங்களில் நடந்திருக்கலாம். அதேபோன்று நெடுநாள் கனவுகளும் கலைந்து போன நேரங்களும் நிறையவே நம் வாழ்வில் அனுபவித்திருக்கலாம்.அது போன்றுதான் சமூக ரீதியிலும் பல எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன.அப்படியான ஒரு எதிர்பார்ப்பாகத்தான் ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டமும் பார்க்கப்பட்டது.அதன் வெற்றி கூட பல இடங்களில் கொண்டாடப்பட்டும் இருந்தன.நாமும் ஏதோ எமது தீவு உலகிற்கு புதியதோர் நாகரிகத்தை கற்றுக் கொ…
-
- 0 replies
- 631 views
-
-
புதிய அரசியலமைப்பின் பின்னரே தேர்தல் -பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சம்மேளன ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே கூறுகிறார் வரலாற்றில் முதன்முறையாக,அநேகமான மக்களின் பார்வையில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் (ஐ.யூ.எஸ்.எவ் ) வித்தியாசமான தன்மையில் தோன்றுகிறது. இதன் பின்னணியில் உள்ள பிரதான காரணம், “அரகலய “[போராட்டம்] வெற்றிபெற ஐ.யூ.எஸ்.எவ் வழங்கிய பங்களிப்பு ஆகும். இலங்கையர்கள், இனம், மதம் அல்லது சமூக வர்க்கம் எதுவாக இருந்தாலும், ராஜபக்ச ஆட்சியால் மோசமடைந்த மிக கடினமான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக ஒன்றுபட்டு கூட்டாக எதிர்ப்பு தெரிவித்தனர். உணவு, எரிபொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இல்லாத பொதுமக்கள்…
-
- 0 replies
- 206 views
-
-
புதிய ஜனாதிபதியின் சீனா நோக்கிய வெளியுறவும் கேள்விக்குறியாகும் இலங்கையின் அரசியல் பொருளாதார இருப்பும் ”இந்தியாவை நிராகரித்தாலும் மேற்குலகத்தை பகைக்காத கிழக்குடனான அதீதீவிர நெருக்கமற்ற உறவு இலங்கைத்தீவின் அரசியல் பொருளாதார இருப்புக்கு ஆரோக்கியமானதாக அமையும்” இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் பல விடயங்கள் உள்ளாக்கப்பட்டாலும் இனப்பிரச்சினை பொறுத்து மேற்கொள்ளப்பட்ட வெளியுறவுக்கொள்கையே அடிப்படையானதாகும். இலங்கைத்தீவின் ஆட்சியாளர்கள் சுதந்திர காலப்பகுதியிலிருந்து அல்லது அதற்கு முற்பட்ட வரலாற்று காலத்திலிருந்து இந்திய எதிர்ப்புவாதத்தையே கொண்டவர்களாக காணப்படுகின்றனர். அத்தகைய பாரம்பரியத்தில் பிரித்தானியாவுட…
-
- 0 replies
- 426 views
-
-
ஆபத்தில், இந்திய.. தென் பிராந்தியம்? இந்தியாவின் தென்பிராந்தியம் அடுத்துவரும் நாட்களில் ஆபத்தில் சிக்கப்போகும் சூழல்கள் அதிகரித்துள்ளன என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்தியத் தென்பிராந்தியம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆசியப்பிராந்தியமும், அமெரிக்கா, மற்றும் மேற்குலக நாடுகளின் சுதந்திரமான இந்துசமுத்திரத்தின் ஊடான கடற்பிராந்தியமும் தான் நெருக்கடிகளை எதிர்கொள்ளப்போகின்றது. ஆம், சீனாவின் யுவான் வாங் – 5 என்ற கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிக்கவுள்ளது. இந்தக் கப்பல் எதிர்வரும் 11ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதி வரையில் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நங்கூரமிடப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ‘சீனக் கப்பலுக்கு அ…
-
- 0 replies
- 223 views
-