Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. எம்ஜியார்களாக மாறிய படை அதிகாரிகள் – நிலாந்தன் June 17, 2018 1995ல் புலிகள் இயக்கம் தமது ஆட்சி மையத்தை வன்னிப் பெருநிலத்திற்கு நகர்த்தியது. அதிலிருந்து தொடங்கி 2009ம் ஆண்டு வரை அங்கு ஓர் அரை அரசை அந்த அமைப்பு நிர்வகித்தது. அந்த அரசு இலங்கைத் தீவில் எழுச்சி பெற்ற இரண்டாவது அதிகார மையமாகவும் இரண்டாவது பெரிய பொருளாதார மையமாகவும் திகழ்ந்தது. அக்காலப் பகுதியில் வன்னிப் பொதுச்சனங்கள் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பில் வேலை செய்தார்கள். ஆயிரக் கணக்கான பொது மக்களுக்கு புலிகள் இயக்கம் வேலை வழங்கியது. இலங்கை அரசாங்கத்திற்கு அடுத்த படியாக மிகப்பெரிய வேலை வழங்குனராக அந்த அரை அரசு காணப்பட்டது. ஆனால் 2009 மே மாதம் புலிகள் இயக்கம் அரங்கிலிருந்து அகற்றப்பட்ட …

  2. இன்­னொரு ஹிட்­லரை அனு­ம­திக்­குமா உலகம்? கோத்­தா­பய ராஜபக் ஷ இரா­ணுவ ஆட்­சியை – கடும்­போக்கு ஆட்­சியை விரும்­பு­பவர். அத­னையே தனது அடை­யா­ள­மாக நிரூ­பிக்­கவும் எத்­த­னிப்­பவர். இது அவரைச் சுற்­றி­யி­ருப்­ப­வர்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும். அதனால் தான், அவ­ரது அந்த அடை­யா­ளத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி, அவரை மேல் மட்­டத்­துக்குக் கொண்டு வர முனை­கி­றார்கள். ஆனால், அர­சியல் என்­பது வேறு. அதற்கும் இரா­ணுவ ஆட்­சிக்கும் ஒரு­போதும் ஒத்­துப்­போ­காது. ஜன­நா­யகப் பாரம்­ப­ரி­யங்­களை மதிக்­கின்ற வகை­யி­லான, பண்­பு­களைக் கொண்­ட­வர் க­ளுக்குத்தான் அர­சியல் பொருத்­த­மு­டை­யது ஹிட்­ல­ராக மாறி, இரா­ணுவ ஆட்­ச…

  3. ராஜபக்‌ஷக்களுடனான சந்திப்பு: சம்பந்தன் யாரை எச்சரிக்கிறார்? புதிய அரசமைப்புக்கான வாய்ப்புகள் அனைத்தும் பொய்த்துப்போன புள்ளியில், இரா.சம்பந்தனுக்கும் ராஜபக்‌ஷ சகோதரர்களுக்கும் இடையிலான மிக முக்கிய சந்திப்பொன்று, அண்மையில் இடம்பெற்றிருக்கின்றது. இந்தச் சந்திப்பின் ஏற்பாட்டாளராக இலங்கைக்கான சீனத்தூதுவர் செங் ஷியுவான் இருந்திருக்கின்றார் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. சீன இராணுவத்தின் 91ஆவது ஆண்டு நிறைவையொட்டி, சீனத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு, கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, பிரதமர் விக்ரமசிங்கவோ அல்லது மூத்த அமைச்சர்களோ …

  4. செப்டெம்பர் நினைவுகள்: காலம் வரைந்த கோலம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / எல்லா மாதங்களும் நினைவுகளைச் சுமந்துள்ளன. இருந்தபோதும், உலக அரசியலில் செப்டெம்பர் மாதம், கொஞ்சம் சிறப்பானது. செம்டெம்பர் நிகழ்வுகள், வரலாற்றின் திசைவழியில் முக்கியமான காலங்களை உள்ளடக்கியுள்ளன. அக்காலங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக, எமக்குச் சில முக்கியச் செய்திகளைச் சொல்கின்றன. அச்செய்திகள் வலியன. எமது நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதைத் தீர்மானிக்க அவை உதவக்கூடும். சிலியில் செப்டெம்பர்: 45 ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைக்கு 45 ஆண்டுகளுக்கு முன்னர், தென்னமெரிக்க நாடான சிலியில், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி சல்வடோர்…

  5. ரணிலும் மறதியும் மன்னிப்பும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 பெப்ரவரி 20 புதன்கிழமை, மு.ப. 12:10 Comments - 0 மறதியும் மன்னிப்பும் மானிட உன்னதங்களில் பிரதானமானவை. வேட்டை விலங்குகளைக் காட்டிலும் வன்மமும் வக்கிரமும் ஆதிக்க வேட்கையும் கொண்ட மானிட ஒழுங்கில், மறதியும் மன்னிப்பும் இருந்திருக்காவிட்டால், டைனோஸர் காலத்துக்கு முன்னரேயே, மனித இனம் அழிந்து போயிருக்கும். மானிட வளர்ச்சி என்பது, அதன் நற்குணவியல்புகள், ஒழுக்கத்தின் விருத்திகள் சார்ந்தது. அது தொடர்பிலான உரையாடல்கள், திறந்த மனதோடு நிகழ்த்தப்பட வேண்டியவை. ஆனால், அந்த உரையாடல்களின் போது, அறம் என்கிற இன்னொரு மானிட உன்னதம், பேணப்பட வேண்டும். கடந்த வாரம் கிளிநொச்சியில் வைத்து, போர்க் குற்றங்கள…

  6. தமிழர் அரசியல் அமைப்புகளிடையே புரிந்துணர்வுக்கு வாய்ப்புக்கள் உண்டா? கலாநிதி சர்வேந்திரா ஈழத்தமிழர் தேசம் தாயகத்திலும் புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்களைக் கொண்டதொரு நாடு கடந்த தேசமாக பரிணமித்திருக்கிறது. இந்நிலையில் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள அரசியல் அமைப்புக்கள் தமக்கிடையே போதிய புரிந்துணர்வைக் கொண்டுள்ளனவா? இவ் அமைப்புக்கள் தமக்குள் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏதும் உண்டா? மே 2009 க்குப் பின்னர் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் தலைமை தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் ஒரே அமைப்பின் கையில் இல்லை. மே 2009 க்கு முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பே இரு தளங்களிலும் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் தலைமையாக விளங்கி…

  7. தமிழரசுக்கட்சி எதிர்நோக்கும் புறச்சவால்களும் அகச்சவால்களும் July 9, 2025 — டி.பி.எஸ். ஜெயராஜ் — ஒய்வுபெறும் உயர்நீதிமன்ற நீதியரசர் காமினி அமரசேகர அண்மையில் நீதிமன்றத்தில் உரையாற்றியபோது முக்கியமான பல கருத்துக்களை வெளியிட்டார். பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் பிரகாரம் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு வருகின்ற வெளி அச்சுறுத்தல்களை கூட்டாக எதிர்த்துநிற்க முடியும் என்கிற அதேவேளை, உள்ளிருந்து வருகின்ற சவால்கள் பெருமளவுக்கு நயவஞ்சகத்தனமான ஆபத்தை தோற்றுவிக்கின்றன. ” சரியான நம்பிக்கைகளைக் கொண்ட ஒரு நீதிபதியினால் வெளி நெருக்குதல்களை எதிர்த்துநிற்க முடியும். ஆனால், முறைமைக்குள் இருந்தே அச்சுறுத்தல்கள் வரும்போது அவற்றை எதிர்கொள்வது கடடினமானதாக இருக்கும்” என்று மாண்புமிக்க நீதி…

  8. பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, எக்ஸ்-பிரஸ் கப்பல் விபத்துக்குப் பிறகு கொழும்பு கடற்கரையில் பிளாஸ்டிக் உருண்டைகள் (நர்டுல்ஸ்) மற்றும் பிற குப்பைகளை அகற்ற இலங்கை கடற்படை வீரர்கள் பணியாற்றினர். புகைப்படம்: மே 2021 கட்டுரை தகவல் எழுதியவர், லியானா ஹோசியா & சரோஜ் பதிரானா நீர்கொழும்பு, இலங்கை 28 ஜூலை 2025 நான்கு ஆண்டுகளுக்கு முன், ஒரு சரக்குக் கப்பல் விபத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய பிளாஸ்டிக் கசிவுக்கு பிறகு, இன்னும் இலங்கை கடற்கரைகளின் மணலில் இருந்து நச்சுத் தன்மை கொண்ட சிறிய பிளாஸ்டிக் உருண்டைகளை (நர்டுல்ஸ்-nurdles) தன்னார்வலர்கள் பிரித்தெடுத்து வருகிறார்கள். 2021 ஆம் ஆண்டு எக்ஸ்-பிரஸ் பேர்ல் சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பில்லியன் கணக்…

  9. ‘கொப்பி பேஸ்ட்’ மட்டுமே அனுரகுமார அரசின் நடவடிக்கை முருகானந்தன் தவம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசு ‘நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக’ அரசுக்குள் முரண்பாடுகள், அரசு மீதான குற்றச் சாட்டுக்கள், சர்ச்சைகள், விமர்சனங்கள், கிண்டல்கள் என ஏதோவொன்றுக்குள் சிக்கி வருகின்றது. ஒரு சிக்கலுக்குள் இருந்து விடுபடுவதற்குள் இன்னொரு சிக்கலுக்குள் மாட்டுப்பட்டு எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் பிரசாரங்களுக்கும் நன்றாகத் தீனி கொடுப்பதே அரசின் நிலையாகவுள்ளது. அனுரகுமார அரசு ஆட்சி அரியணை ஏறிய நாள் முதல் கலாநிதிப் பட்டம், அரிசி, தேங்காய், குரங்கு, உப்பு, பாதாள உலகம், படுகொலைகள், சர்வாதிகாரம், இந்தியப் பிரதமரின் வருகை, ஜனாதிபதியின் இந்திய, சீ…

  10. மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம் 76 வருட ஆட்சியின் "அபிவிருத்தி" என்ற பழைய அணுகுமுறை மீணடும் சாத்தியக்கூற்று - சுற்றுப்புறச் சூழல் அறிக்கைகள் எதுவும் இல்லாத அரசியல் நிகழ்ச்சி பதிப்பு: 2025 செப். 13 19:14 யாழ்ப்பாணம் மண்டைதீவு பிரதேசத்தில் சர்வதேச கிரிக்கெட் (Cricket) விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கு அநுர அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள பின்னணியில், யாழ்ப்பாணத்தின் தீவுப் பிரதேசங்கள் பற்றிய கரிசனை குறிப்பாக அங்கு வாழும் மக்களின் அடிப்படை வசதிகள், தொழில் முயற்சிகளில் கவனம் செலுத்தப்பட்டதா என்பது தொடர்பான சந்தேகங்கள் எழுகின்றன. சாத்தியக்கூற்று அறிக்கைகள் (Feasibility Report) சுற்றுப்புறச் சூழல் அறிக்கைகள் (Environmental Report) எதுவும் இன்றி வடக்கு கிழக்கில் …

  11. பயங்கரவாத தடுப்புச் சட்டம் இன்னமும் எதற்கு? எம்.எஸ்.எம். ஐயூப் தாம் முன்வைத்த குடியிருப்பாளர் பாதுகாப்புச் சட்ட மூலத்தை தற்காலிக்மாக இடைநிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் சார்பில் அதனை தெரிவித்த பொதுமககள் பாதகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பலர் தெரிவித்த எதிர்ப்புகளை அடுத்து சட்ட மூலத்தை மீளாய்வு செய்து மீண்டும் சமர்ப்பிப்பதற்காகவே அதனை இடைநிறுததுவதாக கூறியுள்ளார். ஆயினும் இது முதன் முதலாக தமது அரசாங்கம் முன்வைக்கும் சட்டமூலமொன்றல்ல என்றும் 2023 ஆம் ஆண்டு அப்போதைய ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் முன்வைத்த சட்டமூலமொன்றையே தமது அரசாங்கம் முன்வைத்துள்ளது என்றும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூறுகின்றனர். அதில் ஓரளவு உண்மை இருக்க…

  12. கடவுள் அவர்கள் பக்கம் | அச்சம் தரும் எதிர்காலம் மியான்மாரின் பாதையில் இலங்கை அரசியல் அலசல்: சிவதாசன் ஜூன் 2ம் திகதி ஜனாதிபதி ராஜபக்சவினால் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் உருவாக்கப்பட்ட, கிழக்கு மாகாணத்துக்கான தொல்பொருளியல் பாரம்பரிய முகாமைத்துவப் பணிக்குழுவில் தமிழர்களோ, முஸ்லிம்களோ சேர்க்கப்படாதது அங்குள்ள சிறுபான்மை மக்களிடையே அச்சத்தைத் தோற்றியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் மூன்றில் இரண்டு பங்கினர் தமிழ், முஸ்லிம் மக்களாக இருக்கும்போது ஜனாதிபதியின் இந் நடவடிக்கையின் பின்னால் பூர…

    • 0 replies
    • 402 views
  13. எகிய ராஜ்யவும் இளங் கலைஞர் மன்றச் சந்திப்பும் - நிலாந்தன் அண்மை மாதங்களாக அரசாங்கம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு என்று ஒரு புதிய யாப்புருவாக்க முயற்சியைத் தொடங்கலாம் என்று கஜேந்திரக்குமார் எச்சரித்து வருகிறார். அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் அவ்வாறு உண்டு.ரணில்-மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில் தயாரிக்கப்பட்டு இடையில் நிறுத்தப்பட்ட இடைக்கால வரைபை அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்து செல்ல அரசாங்கம் முயற்சிக்கலாம் என்றும் கஜேந்திரகுமார் எச்சரிக்கின்றார். சில மாதங்களுக்கு முன்பு சுவிற்சர்லாந்தில் நடந்த ஒரு சந்திப்பில் அரசாங்கத்தின் பிரதிநிதியாக வந்திருந்தவர் அவ்வாறு எகிய ராஜ்ஜிய என்று அழைக்கப்படும் அந்த இடைக்கால வரைபை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுக்கவிருப்பதாகத் தெரிவ…

  14. விக்கியால் தமிழருக்கு என்ன செய்ய முடியும்? காரை துர்க்கா / 2020 ஜூன் 30 தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்ற வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், கூட்டமைப்பை விமர்சிக்கலாம்; அதை விடுத்து, தமிழ் மக்களுக்கு அவரால் என்ன செய்ய முடியும்” எனத் தெரிவித்து உள்ளார். “விக்னேஸ்வரனை, நானே அரசியலுக்குக் கொண்டு வந்தேன். வடக்கு மாகாண சபைத் தேர்தலில், அவருக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கூறியிருந்தேன். ஆனால், அவர் தற்போது என்ன செய்கின்றார்? தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்த வரையில், யாரையும் நாம் விலக்கவில்லை; சிலர் விலகினார்கள். அதற்கான காரணத்தை, அவர்கள் இன்றுவரை கூறவில்லை” என, இரா. சம்ப…

    • 1 reply
    • 680 views
  15. சுனில் கில்னானி வரலாற்றாசிரியர் பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் உள்ள பெண்களையெல்லாம் சேர்ந்து ஒரு நாடாக கருதிக்கொள்வோம். இந்திய பெண்கள் குடியரசு என அதனை அழைப்போம். 60 கோடி பேரை கொண்டிருக்கும் அந்த நாடு, உலகின் மூன்றாவது பெரிய நாடாக இருக்கும். 2014ஆம் ஆண்டின் ஐ.நா. மனித உரிமைக் குறியீட்டு தரவரிசையின்படி அந்த நாடு மியான்மருக்கும், ருவாண்டாவுக்கும் இடையில் இருக்கும். இந்திய பெண்கள் குடியரசில் குழந்தைகள் சராசரியாக 3.2 ஆண்டுகளே பள்ளிக்குச் செல்வார்கள். கிட்டத்தட்ட மொசாம்பிக் நாட்டின் நிலைதான் இருக்கும். தனிநபர் வரு…

  16. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் விரைவில் சிங்கள மயமாகுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமானால் இலங்கை இந்திய உடன்படிக்கையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடம் எனக் கூறப்பட்டிருக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு தனியான ஒரு மாகாண சபை ஏற்படுத்தப்பட வேண்டும். சிறுபான்மை மக்களின் உரிமைகளையும் , பிரச்சினைகளையும் பெரும்பான்மையினர் தொடர்ந்து திட்டமிட்டுப் புறக்கணித்து வருவதே இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் நாட்டுப் பிரிவினைப் போராட்டத்திற்கும் முக்கிய காரணங்களாகும். இலங்கையின் இனப் பிரச்சினைக்கும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்செயல்களுக்கும் தீர்வு காணும் அவசியத்தையும் இலங்கையில் வாழும் சகல இன மக்களின் பாதுகாப்பு , நல்வாழ்வு ஆக…

    • 10 replies
    • 1.3k views
  17. மதவாதமும் அரசாங்கமும் தமி­ழர்­களின் தாயகப் பிர­தே­சத்­தையும், தாயகப் பிர­தே­சத்­திற்­கான உரிமைக் குர­லையும் இல்­லாமற் செய்­வ­தற்­கா­கவும், அந்த அர­சியல் கோரிக்­கையை முறி­ய­டிப்­ப­தற்­கா­க­வுமே வடக்­கிலும் கிழக்­கிலும் தமி­ழர்­க­ளு­டைய பூர்­வீகப் பிர­தே­சங்­களில் வலிந்து சிங்­களக் குடி­யேற்­றங்­களை அர­சுகள் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்து வந்­தி­ருக்­கின்­றன. இலங்கை அர­சி­யலில் டிசம்பர் 8, 9, 10 ஆகிய மூன்று தினங்­களும் இந்த வரு­டத்தில் முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றன. சகிப்புத் தன்மை, விட்­டுக்­கொ­டுத்து இணைந்து வாழ்தல், மற்­ற­வர்­க­ளு­டைய உரி­மை­களை மதித்தல், சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்டி, நீதி­யான செயற்­பா­டு­களை ஊக்­…

  18. கோவிட் – 19இன் பின்னரான கூட்டு உருவாக்க அரசியலில் உலகமும் ஈழத்தமிழரும் – சனநாயகத்தின் அரசியலில் முதுநிலை அறிஞர் சூ.யோ. பற்றிமாகரன் 68 Views 2020ஆம் ஆண்டு உலக அரசியலிலும் ஈழ அரசியலிலும் ‘புளொக்ஸ்’ என்று ஆங்கிலத்திலும் ‘கூட்டு’ எனத் தமிழிலும் சுட்டப்படும் அரசியல் முறைமையை மீண்டும் அரசியல் வழக்கு முறையாக்கியுள்ளது. சீனாவின் சில்க் பாதைத் திட்டத்தின் வெற்றி, அதனைத் தரைவழி, கடல்வழி உலகச் சந்தையை ஆட்டிப்படைக்கும் பொருளாதாரப் பலத்தைச் சீனாவுக்கு அளித்து வருகிறது. இதனை கோவிட் – 19 வீரியின் தொற்றுப் பரவல் கூடப் பெரிதாகப் பாதிக்கவில்லை. இதன் காரணமாக உலக வல்லாண்மை நிலையில் சீனாவின் மேலாண்மை பூதாகரமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதனை நேருக்க…

  19. மெல்லச் சாகும் சிவில் நிர்வாகம் – பி.மாணிக்கவாசகம் 44 Views ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்காக நடத்தப்படுகின்ற ஆட்சி முறைமை. இது நியாயமான விட்டுக்கொடுப்புகளையும் நீதியான சகிப்புத் தன்மையையும் கொண்டிருத்தல் வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. சிறுபான்மை இன மக்களின் உரிமைகள், வாழ்வியல் இருப்புகள் என்பன பன்மைத்தன்மையின் அடிப்படையில் பெரும்பான்மையினரால் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டும். இது ஜனநாயகத்தின் கோட்பாடு. ஆசிய பிராந்தியத்தில் நீண்ட மரபைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்ற இலங்கையின் ஜனநாயகம் நேர் முரணான நிலையிலேயே காணப்படுகின்றது. ஆங்கிலேயரிடம் இருந்து நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதலாக ஜனநாயகத்தி…

  20. சுதந்திரக் கட்சியின் இரட்டைவேடம் - கே.சஞ்சயன் ஜனாதிபதியாகப் பதவியேற்று, இப்போதுதான் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார் மைத்திரிபால சிறிசேன. அதற்குள்ளாகவே, 2020 ஆம் ஆண்டு நடக்கும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் என்றொரு தீர்மானத்தை, அந்தக் கட்சியின் மத்திய குழு நிறைவேற்றியிருப்பதாக அமைச்சர் சரத் அமுனுகம கூறியிருக்கிறார். எனினும், அத்தகையதொரு தீர்மானத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எடுக்கவில்லை என்றும், அமைச்சர்கள் சிலரே அதனை வலியுறுத்தி இருக்கின்றனர் என்றும் சுதந்திரக் கட்சியின் போசகர்களில் ஒ…

  21. கூட்டமைப்பின் குழப்பம் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 30/1 தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வ­தற்கு அர­சாங்­கத்­திற்கு கால அவ­காசம் வழங்க வேண்­டுமா இல்­லையா என்­பது தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்குள் விவா­த­மாகத் தொடங்கி இப்­போது விவ­கா­ர­மாக விஸ்­வ­ரூ­ப­மெ­டுத்­தி­ருக்­கின்­றது. யுத்த மோதல்­க­ளின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்­குற்றச் செயற்­பா­டுகள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் தொடர்பில் அர­சாங்கம் எவ்­வாறு பொறுப்புக்கூற வேண்டும் என்­பதை ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் இந்தத் தீர்­மானம் மிகத் தெளி­வாக வரை­ய­றுத்து விட­யங்­களைச் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றது. இந்தப் பிரே­ர­ணையை உள்­ளது உள்­ள­வா­றாக ஏற்று, அதன்­…

  22. அரசியல் தலைவர்களின் தவறுகளுக்கும், சுயநல நோக்கங்களுக்கும்விலையாக மக்களின் உயிரகளே பலி கொடுக்கப்படுகின்றன. இதற்க்கு இலங்கைத்தீவும் விதிவிலக்கல்ல! பிரிவினைவாத முரண்பாட்டு அரசியல் புதைகுழிக்குள் இலங்கைத்தீவின் மக்களைத் தள்ளிவிட்டு, பிரித்தானியக் காலனித்துவவாதிகள்ஆட்சிப்பொறுப்பை சிங்களப்பெரும்பான்மையிடம ;ஒப்படைத்துவிட்டுச் சென்றார்கள். ஆட்சிப்பொறுப்பை மட்டுமல்ல இலங்கைத்தீவை முழுமையாக அபகரித்துக்கொள்ளும் காலனித்துவப் பேராசையையும் சேர்த்து பிரித்தானியர்களிடமிருந்து சிங்கள ஆட்சியாளர்கள் பெற்றுக்கொண்டார்கள். பிரித்தானிய எஜமானர்களிடம் கற்றுத்தேர்ந்த 'காலனித்துவக்கலையினை" ஏனைய பிற இனமக்களிடம் பிரயோகிக்கத் தொடங்கியது சிங்களத் தலைமை! இலங்கைத்தீவு முற்று முழுதான சிங்ஙள பௌத்த நாடாக மா…

  23. விக்னேஸ்வரனை ஏன் பலப்படுத்த வேண்டும்? நிலாந்தன் கடந்த வாரம் நடந்து முடிந்த கம்பன் விழாவில் வடக்கிலுள்ள கணிசமான அரசியல்வாதிகளையும் துறைசார் படிப்பாளிகளையும் காணமுடிந்தது. மாகாணசபைக்குள் கீரியும் பாம்புமாகக் காணப்படும் அரசியல்வாதிகள் பலரும் கம்பன் விழாவில் முன்வரிசையில் காணப்பட்டார்கள் . அவர்கள் மட்டுமல்ல விக்னேஸ்வரனின் தலையைச் சுற்றி ஒளிவட்டத்தை வரையும் ஒரு பத்திரிகாதிபரும் விக்னேஸ்வரன் எங்கே பிழைவிடுவார் என்று கண்டுபிடிக்க காத்திருக்கும் மற்றொரு பத்திரிகாதிபரும் கூட கம்பன் விழாவில் காணப்பட்டார்கள். விழாவின் இறுதிநாள் உரைநிகழ்த்திய கம்பன் கழக நிறுவுனர் ஜெயராஜ் பின்வரும் தொனிப்பட உரையாற்றியிருந்தார் ‘இங்கே மாகாணசபை உறுப்பினர்களைக் கண்டபோது இ…

  24. நம்பிக்கைத் துரோக வரலாற்றின் நூற்றாண்டு நினைவு – 1921 2021 - என்.சரவணன் இவ்வாண்டு தமிழ் மக்கள் சிங்கள தலைமைகளால் முதற் தடவையாக ஏமாற்றப்பட்டு நூறு ஆண்டுகளை எட்டியிருக்கிறது. 1921 ஆம் ஆண்டு சேர் பொன் அருணாச்சலம் இலங்கை தேசிய காங்கிரஸ் செய்த துரோகத்தினால் அதிலிருந்து வெளியேறினார். இனப்பாரபட்சத்தையும், நம்பவைத்து கழுத்தறுக்கும் போக்கையும், நம்பிக்கைத் துரோகத்தையும் முதற்தடவை அடையாளப்படுத்திய நிகழ்வு இது தான். பெரும்பாலும் தமிழ் மக்களின் போராட்டத்துக்கான அவசியங்கள் உருவான காலமாக 1956 க்குப் பிந்திய காலத்தைப் பார்க்கும் போக்கே நம்மில் நீடித்து வந்திருக்கிறது. சிங்கள பௌத்த தேசியவாதத்துக்கு இரண்டு நூற்றாண்டுக்கும் கூடிய வயதென நிரூபிக்க முடியும். அதேவேளை இலங்கைக்கான …

  25. மோடிக்கான கடிதம், 13ம் திருத்தம், இலங்கை-இந்திய ஊடகங்களின் நிலைப்பாடுகள். - யோ.திருக்குமரன் - - யோ.திருக்குமரன் - 1 தினக்குரலின் பொங்கல் வெள்ளி இதழ் (14.01.2022) தனது தலைப்பு செய்தியாக, (கொட்டை எழுத்துக்களில்) பின்வரும் செய்தியை தீட்டியிருந்தது: “மோடிக்கான கடிதம் முற்றாக மாற்றம்” கடிதம் இறுதியாக்கப்பட்டு, தினங்கள் கழிந்த நிலையில், மேற்படி ‘கொட்டை எழுத்தை’, ‘தலைப்பு செய்தியாக’ வாசிக்கும் வாசகனில், மேற்படி செய்தி பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்துவதாகவே இருக்கும். ஆனால், இதனைவிட அடுத்த அடியே, செய்தியாளரின் மரண அடி கொடுக்கும் அவாவினை பேசுவதாய் இருந்தது: “இதனை செய்தது தமிழரசு கட்சியே – சுமந்திரன்” …

    • 0 replies
    • 378 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.