அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9219 topics in this forum
-
-
- 1 reply
- 873 views
-
-
ஐ.எம்.எவ் கடன்: மூன்றாமுலகக் கடன் பற்றிய கதைகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் பொருளாதார நெருக்கடியை, இன்னும் கடனை வாங்குவதன் மூலம் தீர்த்து விடலாம் என்று பலரும் நம்புகிறார்கள். இலங்கையின் பொருளாதார நெருக்கடி, இரண்டு விடயங்களை அடிப்படையாகக் கொண்டது. முதலாவது, பொருளாதாரக் கொள்கை; இரண்டாவது, அதன்வழியமைந்த பொருளாதாரக் கட்டமைப்பு. இவை இரண்டிலும், அடிப்படையான மாற்றங்களைச் செய்யாத வரை, இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வில்லை. கடன் வாங்குவது, தற்காலிகமான ஆறுதலைத் தரும். ஆனால், வாங்கிய கடனையும் அதற்கான வட்டியையும் சேர்த்தே மீளச்செலுத்த வேண்டும் என்பதே யதார்த்தம். இன்று தனிமனிதர்கள் வாழ்வில், நிதிநிறுவனங்கள் எவ்வாறு செயற்படுகி…
-
- 0 replies
- 566 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வயது 20 …. கூட்டமைப்பு ஏன், எவ்வாறு, உருவாக்கப்பட்டது டி.பி.எஸ்.ஜெயராஜ் ………………………………. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இப்போது 20 வயது. இலங்கையின் வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் முதன்மையான அரசியல் அணியான கூட்டமைப்பு 2001 டிசம்பர் பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு சில வாரங்கள் முன்னதாக 2001அக்டோபர் 22 அமைக்கப்பட்டது. அதற்கு பிறகு ஆனையிறவின் இருமருங்கிலும் எத்தனையோ நிகழ்வுப் போக்குகள் நடந்தேறிவிட்டன. வடக்கு,கிழக்கில் தமிழ் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் தேர்தல்களில் தொடர்ச்சியாக பெரும்பாலான ஆசனங்களை வென்றதன் மூலம் இலங்கைத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் அணியாக கூட்டமைப்பு விளங்கிவருகிறது. 2001, 2004, 2010, 2015, மற்றும…
-
- 0 replies
- 382 views
-
-
ஆரியர்கள் தமது பண்பாட்டை பரப்பும் நோக்குடன் இந்தியப் பெருந்தேசத்தின் குறுநில அரசுகளை அழித்து வருகையில், பலமிக்க சுதேசிய மன்னர் கடுமையான எதிர்ப்பைக் காட்டினர். தம் மொத்த பலத்தையும் திரட்டிப் போரிட்டனர். இவ்வாறு எதிர்த்துப் போரிட்டவர்களும் ஆரியப் பண்பாட்டு ஆக்கிரமிப்பாளர்களிடம் அடிமைப்பட்டே போனார்கள். ஆனால் அந்தப் பகை உணர்வை ஆரியர்கள் வரலாறு முழுவதும் கடத்தினார்கள். தீபாவளிக்கு இப்படியொரு பின்னணிக் கதையே சொல்லப்படுகிறது. நரகாசுரன் (பெயர்கூட மாற்றப்பட்டிருக்கலாம்) என்ற மன்னனை குரூரமானவனாக வரலாற்றில் சித்திரித்து, அவனது மக்களையே, அவன் படுகொலைசெய்யப்பட்ட தினத்தைக் கொண்ட வைத்திருக்கிறது ஆரியது. இந்தச் சம்பவம் இனங்களின் வரலாறு, ஐதீகங்கள் கட்டமைப்பட்ட காலத்திலேயே உருவாகிவிட்…
-
- 2 replies
- 593 views
-
-
புவிசார் அரசியலே இந்திய- இலங்கை ஒப்பந்தம் -13 ஐ நடைமுறைப்படுத்தத் தமிழ்க் கட்சிகள் மூலோபாயம் வகுக்கத் தேவையில்லை. கட்சிகளாக நின்று தேர்தல் அரசியலில் ஈடுபட்டாலும், இன அழிப்பை வெளிப்படுத்திச் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த ஒரு தேசமாக எழ வேண்டும். தேசமாக எழுதல் என்பது ஜனநாயகத்தின் கூட்டு உரிமை. அந்தக் கூட்டு உரிமை பிரிவினைவாதமும் அல்ல. ஆகவே கூட்டு உரிமையை ஒரு தேசமாக நின்று வெளிப்படுத்துவதற்கான மூலோபாயம் மாத்திரமே தமிழர்களுக்குத் தேவை- -அ.நிக்ஸன்- ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான நீதியான தீர்வை வழங்க வேண்டுமெனக் கூறிக்கொண்டு புவிசார் அரசியல் நோக்கிலேயே இந்தியா அன்று முதல், இன்று வரை இலங்கைக்கு அழுத்தம்…
-
- 0 replies
- 284 views
-
-
கடலில் இறங்கிப் போராடிய தமிழ் அரசியல்வாதிகள்? நிலாந்தன்! மீனவர்களுக்காக போராடத்தான் வேண்டும். விவசாயிகளுக்காக போராடத்தான் வேண்டும். ஆனால் போராட்டங்கள் திடீர் ரசங்கள் ஆகவோ அல்லது தேர்தல்மைய நோக்கு நிலையில் இருந்து சிந்திக்கப்பட்டவைகளாகவோ இருக்கக்கூடாது. மக்களை ஒரு திரளாக கூட்டிக் கட்டும் நோக்கிலானாவைகளாக இருக்க வேண்டும். 2009க்கு பின்னர் தீர்க்கப்படாத பிரச்சினைகளில் ஒன்று மீனவர் பிரச்சினை அது மீனவர்களின் பிரச்சினை தான் என்றாலும் அதை மீனவர்களால் தீர்த்துக் கொள்ள முடியாது. அதை மீனவர்களே தீர்த்துக் கொள்ளட்டும் என்று இதுவரை காலமும் இழுபட விட்டதில் ஒரு தந்திரம் உண்டு. இருதரப்பு மீனவர்களையும் மோத விட விரும்பும் சக்திகள் அதனால் வெற்றி பெறுகின்றன. எனவே அதை மீனவர்களுக்கு இ…
-
- 0 replies
- 320 views
-
-
தமிழர் அரசியலில், மூலோபாய கூட்டு ஒன்றின் தேவை?- யதீந்திரா இந்தியாவின் வெளியுறவுச் செயலர் தமிழ் கட்சிகளின் ஒற்றுமை தொடர்பில் வலியுறுத்தியிருந்தார். ஆகக் குறைந்தது 13வது திருத்தச்சட்டத்திலாவது, தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதையே இந்தியா விரும்புகின்றது. நீங்கள் சில அப்படையான விடயங்களில் ஒன்றுபடாவிட்டால், இந்தியாவினால் பெரிதாக எதனையும் செய்ய முடியாது என்பதுதான் இதன் பொருள். இந்திய வெளியுறவுச் செயலரின் விஜயத்தை தொடர்ந்து, மாகாண சபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது. எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் தேர்தலை வைப்பது தொடர்பில் அரசாங்கம் ஆலோசித்துவருவதாக கூறப்படுகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவைய…
-
- 1 reply
- 333 views
-
-
ஆதவன் பக்கம் - பருத்தித்துறை தரையிறக்கமும் ட்ரோலர் அரசியலும் நியூயோர்க்கில் இருந்து கப்பலில் சிங்கப்பூர் வந்து கொண்டுள்ளோம். வருகின்ற வழியில் 4 தினங்கள் முன்பு செங்கடலில் ஒருவர் கடலில் வீழ்ந்துள்ளதாகவும் (Man over board), 7 தினங்கள் முன்பு மெடிட்டரேனியன் கடலில் (ஸ்பெயினின் தெற்கு கடல் பகுதியில்) ஒருவர் கடலில் வீழ்ந்துள்ளதாகவும், அவர்களைத் தேடும் படலம் (Rescue operation) தொடர்வதாகவும், குறித்த பகுதிகளின் வழி பயணிக்கவேண்டாம் என்றும் இப்பகுதிகளில் பயணிக்கும் அனைத்துக் கப்பல்களுக்கும் அவசர செய்தி அனுப்பப்பட்டது. எனது முதல் தர அதிகாரியுடன் இதுபற்றி (அதாவது ஏன் அடிக்கடி ஆட்கள் கடலில் வீழ்கிறார்கள்) கதைத்துக் கொண்டிருந்த பொழுது, அவர் தான் அறிந்த இரண்டு சம்பவங்களை கூறின…
-
- 2 replies
- 657 views
-
-
கட்டியிருக்கும் கோவணமும் களவாடப்படும்-பா.உதயன் அதிகாரம், அடக்குமுறை, நாடுகளுக்கு இடையிலான அதிகார ஏகாதிபத்திய அரசியல் பொருளாதார சுயநலன்களுக்கு இடையிலான போட்டிகள் இவை தவிர இயற்கை அழிவுகளாலும் நோய் நொடிகளாலும் இந்த உலகு பல அழிவுகளை சந்தித்து வருகின்றது. பல கோடி மக்கள் இதனால் இறந்திருக்கிறார்கள் இன்னும் இறந்து கொண்டே இருக்கிறார்கள். மனிதத் தவறுகளினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் இந்த உலகு மிகக் கொடிய மனித அவலங்களை சந்தித்து வருகின்றது. தர்மமும் நீதியும் சார்ந்து இந்த உலகம் சுழலுவதில்லை. மனித அவலம் மனிதக் கொடுமைகள் நடந்த பொழுதெல்லாம் பலர் கண்ணை மூடி இறந்தவர்கள் போல் தங்கள் சுய நலன் கருதி பார்த்துக் கொண்டிருந்தார்கள் பல ஜனநாயகத்தின் காவலர்கள். எங்கு தான் என்ன மனித அ…
-
- 0 replies
- 335 views
-
-
மாகாணசபைத் தேர்தலும் -கிழக்கின் நிலையும் – மட்டு.நகரான் October 21, 2021 மாகாணசபைத் தேர்தல் தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளிவந்த வண்ணமுள்ளன. தமிழர் அரசியலில் கடந்த காலத்தில் மாகாணசபை தொடர்பில் ஆர்வம் குறைந்திருந்த நிலையிலும், இன்று அந்த நிலைமை மாற்றமடைந்துள்ள முழுமையான ஆர்வத்துடன் தமிழ்த் தேசிய அரசியலில் உள்ளவர்கள் செயற்படுவதைக் காணமுடிகின்றது. மாகாணசபைத் தேர்தல் என்பது, இன்று வடகிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் சூழ்நிலைக்குச் செல்லவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. வடகிழக்கு இணைந்த தமிழ்த் தேசியத்தின் மிக முக்கியமான கோரிக்கையாக வடகிழக்கு இணைந்த மாகாணசபையினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வாய்கிழியக் கூவியவர்கள்…
-
- 0 replies
- 330 views
-
-
ஏறும் விலை; சரியும் பொருளாதாரம்; திணறும் மக்கள்: அமைதி காக்கும் எதிர்க்கட்சி என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan “தன் மே தவஸ்வல காஸ் அதி நே காம உயன்னத்த காஸ் வளின் ஹொந்தட்ட தியனவனே காஸ் காஸ் நா மேக தமய் மே ஆண்டுவே பரிகம” (இப்ப இந்த நாள்களில காஸ் கிடைக்குது என்ன காஸில் தானே சமையல் நல்லா இருக்குது தானே காஸ் காஸ் இல்லை இதுதான் இந்த அரசாங்கத்தின் இயலாத்தன்மை). “ஹபய் இதின் றட இல்லுவா, வெனஸ துன்னா, வெனஸ தமய் மே பேன்னே அத காஸ் டிகத் நதிவெலா தியனவா காஸ் டிக சபயன்ன பரி ஆண்டுவக் மே தென பொறொந்துவ சபயய்த நா” (ஆனால், நாட்டைக் கேட்டார்கள்; மாற்றத்தைக் கொடுத்தோம்; மாற்றம் தான் இப்ப நல்லாத் தெரியுது இன்று காஸ் கூட இல்லாமல் இருக்குது காஸ் வழங்க இயலாத அரசாங்…
-
- 0 replies
- 435 views
-
-
வாக்குவாதங்களை உருவாக்கியிருக்கும் வளச் சுரண்டல் விவகாரம் லக்ஸ்மன் கிழக்கில் மாத்திரமல்ல, முழு நாட்டிலும் முக்கிய பேசு பொருளாக, அந்தந்தப் பிரதேசங்களின் வளங்கள் சுரண்டப்படுதல் மாறியிருக்கிறது. வடக்கு கிழக்கில் நீண்டகாலமாக கல், மணல் அகழப்பட்டுவந்தாலும் 2009இல் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் மிகப் பெரும் மாபியாவினுடைய தொழிலாக மாறி வளர்ந்திருக்கிறது. மண்ணினுடைய பாதுகாப்புப் பற்றிப் பேசியவர்களின் முக்கிய வருமானமீட்டும் துறையாகவும் இது இருக்கிறது. இந்நிலையில்தான், வடக்கு- கிழக்கிலுள்ள வளங்களைக் கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்யத் தேவையான வேலைத்திட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருக்கின்றது போன்ற விடயங்களை கடந்த நாடாளுமன்ற அமர்வில் இரா.சாணக்கியன் பேசினார். அரசாங்கத…
-
- 0 replies
- 278 views
-
-
அரசியலாகிய ஒரு பாடகி! - நிலாந்தன். ஒரு வைரஸ் காலத்தில் “வைரலாகிய” ஒரு குரல் யொகானியின் உடையது. அந்தப் பாடலை அவர் கரகரத்த குழந்தைக் குரலில் பாடத் தொடங்குகிறார். நோகாமல் அதிகப் பிரயத்தனமின்றி லேசாக தலையை அசைத்து பாடுகிறார். காணொளியின் முழு சட்டகத்துக்குள்ளும் அவருடைய முகம் குழந்தை பிள்ளைத்தனமாக சிரித்துக்கொண்டு நிறைகிறது. அது அப்படியொன்றும் உன்னதமான, நுட்பமான பாடல் அல்ல. அவர் பாடிய எனைய பாடல்களும் உன்னதமானவை என்று கூற முடியாது. எனினும் அது ஒரு எளிமையான பாடலாக இருந்தபடியால் எளிதில் வைரல் ஆகியது. சமூக வலைத்தளங்களின் காலத்தில் வைரலாகும் விடயங்கள் எல்லாமும் ஆழமானவைகளாக, உன்னதம் ஆனவைகளாக இருக்க வேண்டும் என்றில்லை. அதன் ஜனரஞ்சகப் பண்பு; அது வெளிவரும் காலம் ; அதைக் க…
-
- 4 replies
- 836 views
-
-
அனைத்துலக வறுமை ஒழிப்புத் தினத்தில் ஈழத்தமிழர் வறுமை ஒழிப்புக்கான சில சிந்தனைகள் – சூ.யோ.பற்றிமாகரன் October 18, 2021 – சூ.யோ.பற்றிமாகரன் அனைத்துலக வறுமை ஒழிப்புத் தினத்தில் ஈழத்தமிழர் வறுமை ஒழிப்புக்கான சில சிந்தனைகள்: வாய்ப்புக்கள் மறுக்கப்படுதல், வளர்ச்சிகள் தடுக்கப்படுதல் வறுமை அதனை அரசாங்கமே திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளல் மனிதகுல அழிப்பு இதை மாற்றிடப் புலம்பதிந்த தமிழர் குடைநிழல் அமைப்பு நிறுவப்படல் அவசியம். உலக வறுமை ஒழிப்பு தினம் அக்டோபர் 17ஆம் திகதியை உலக வறுமை ஒழிப்பு தினமாக ஐக்கிய நாடுகள் சபை கொண்டாடி வருகிறது. வறுமை என்றதுமே உடனடியாக நாளாந்த வாழ்வுக்கான நிதிவளப் பற்றாக்குறை அல்லது நிதியின்மை என்றே கருதப்படுவது வழமை. உண்மையில் வறு…
-
- 1 reply
- 507 views
-
-
சம்பந்தனுக்குப் பின்னர் கூட்டமைப்புத் தலைவர்? – அகிலன் October 18, 2021 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குப் பின் தான் தலைமைப் பதவிக்குத் தகுதியானவர் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருப்பது தமிழ் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மட்டுமன்றி, பிரதான கட்சியாக இருக்கின்ற தமிழரசுக் கட்சிக்குள்ளும் இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. சுமந்திரன் கொழும்பில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே, “கூட்டமைப்பின் தலைமைப்பதவிக்கு தான் தகுதியானவர்” என சுமந்…
-
- 0 replies
- 434 views
-
-
இலங்கை குறித்த இந்திய வெளியறவு கொள்கையில் மாற்றம் வருமா? –ஈழத்தமிழர்களுக்கும் இந்தியாவுக்குமான இடைவெளி மேலும் மேலும் அதிகரிக்கும். ஆனால் இதற்குத் தீர்வு 13 அல்ல என்பதை புதுடில்லி புரிந்துகொள்ளாதவரை, இலங்கையின் துணிச்சலும் இந்தியாவைப் புறக்கணித்துச் செயற்படும் தன்மையும் மேலும் கையோங்கும்– -அ.நிக்ஸன்- இலங்கையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகக் காலம் கடந்து இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மத்தியில், பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த உறுப்பினரும் மூத்த அரசியல்வாதியுமான சுப்பிரமணியன் சுவாமியின் கொழும்பு வருகை ஆரோக்கியமான உறவை உருவாக்குமெனக் கூறமுடியாது. ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய ந…
-
- 0 replies
- 475 views
-
-
ஐ.எம்.எவ் கடன்: நம்பிக்கையைக் கழுவேற்றல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கை, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான ஒருவழி, ‘ஐ.எம்.எவ்’ என்று அறியப்பட்ட சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்துவதே என்று, எல்லோரும் கூறுகிறார்கள். அரசியல்வாதிகள் முதற்கொண்டு பொருளியல் அறிஞர்கள் வரை, அனைவரினதும் இறுதிப் போக்கிடமாக, சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதே வழியாக இருக்கிறது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் வேர்கள் ஆழமானவை. அது இலங்கையின் பொருளாதாரக் கொள்கை சார்ந்தது. அது குறித்து யாரும் பேசுவதில்லை. அதேபோல, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் எவ்வகையான தாக்கங்களை மூன்றாமுலக நாடுகளில் ஏற்படுத்தியுள்ளது என்பதையும் யாரும் பேசுவதில்லை. இவை இரண்டும் பேசப்பட வேண…
-
- 0 replies
- 520 views
-
-
13ஆவது திருத்தமும் புதிய யாப்பும்! - நிலாந்தன். October 17, 2021 ஒரு புதிய யாப்பை இந்த ஆண்டின் இறுதிக்குள் கொண்டு வரப்போவதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருக்கிறார். இலங்கை ராணுவத்தின் 72வது ஆண்டு நிறைவையொட்டி அனுராதபுரத்தில் உள்ள ஒரு படை முகாமில் நடந்த ஒரு வைபவத்தில் அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இது அரசாங்கம் அதன் யாப்புருவாக்க முயற்சியில் மெய்யாகவே ஈடுபடுகிறதா என்ற கேள்வியை மேலும் வலிமைப்பப்படுத்தியிருக்கிறது. யாப்புருவாக்கத்திற்கான நிபுணர் குழுவை சேர்ந்த ஒருவர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் ஒரு புதிய யாப்புக்கான சட்ட வரைபை அரசாங்கம் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. அதை நம்…
-
- 0 replies
- 419 views
-
-
-
- 1 reply
- 968 views
-
-
பன்டோரா அறிக்கை (Pandora Papers) October 16, 2021 * இலங்கையில் ஒரு புறம் மக்கள் மரணித்துக் கொண்டிருந்த வேளை இன்னொரு புறத்தில் ஒரு வம்சம் நாட்டின் செல்வத்தை வெளிநாட்டில் பதுக்கிய வரலாறு * ஒரு ஆளும்பரம்பரை தோற்றம் பெற்ற வரலாறு * சிங்கள பெருந்தேசியவாதம் என்ற பெயரில் நாடு கொள்ளையிடப்பட்ட வரலாறு — தொகுப்பு : வி.சிவலிங்கம் — இலங்கை அதிகார வர்க்கத்தின் சில குடும்பங்களைச் சேர்ந்த சிலர் ஆடம்பர வீடுகள், கலைப்படைப்புகள் மற்றும் பணங்கள் ஆகியவற்றை வெளிநாட்டு இரகசியக் கணக்குகளில் மறைத்து வைத்திருப்பது தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. இலங்கையின் அதிகாரத்திலிருக்கும் ராஜபக்ஸ குடும்பத்தினரைச் சேர்ந்த இருவரின் பெயர்கள் உலக ஊடகங்களில் வெளியாகி…
-
- 0 replies
- 546 views
-
-
-பண்டோரா பேப்பேர்ஸ்- -திறக்கப்பட்ட பெட்டகமும் அவிழ்க்கப்பட்ட முடிச்சுகளும்-பா.உதயன் ————————————————————————————————————— ஆசை இல்லாத மனிதன் எவரும் இல்லை.ஆனால் அளவு கடந்த பணத்தின் மேல் இவ்வளவு ஆசை ஒரு மனிதனுக்கு ஏற்படுமா ஆசை கொண்ட மனிதர்கள் இத்தனை பில்லியன் டாலர் பணத்தை எப்படிச் சேர்த்தார்கள். வரி ஏற்பு, ஊழல், கருப்பு பணம் என்று மக்களின் பணத்தை ஏமாத்த எப்படி அந்த நாட்டின் தலைவர்களால் கூட முடிகிறது.சட்டத்தின் கண்களை எல்லாம் குருடாக்கிவிட்டு மக்களின் பணங்களை கொள்ளை அடித்து வெளி நாடுகளில் சொகுசு மாளிகைகள், சொகுசு வாகனங்கள், நட்ச்சத்திர விடுதிகள், பெரும் மாடி வீடுகள் இப்படிப் பல சொத்துக்களை சேர்த்த மோசடிக்காரர்களின் அதிசய பண்டோரா பெட்டகத்தின் கதவை (the International …
-
- 0 replies
- 451 views
-
-
மாகாண சபைத் தேர்தலுக்காக காத்திருக்கும் தமிழ்க் கட்சிகள் புருஜோத்தமன் தங்கமயில் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த மாகாண சபைகளுக்கான தேர்தல், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியால், அரசியல்வாதிகள் முடங்கியிருந்த நிலையில், மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பு, அவர்களை உற்சாகமடைய வைத்திருக்கின்றது. முதலமைச்சர் கனவோடும் அமைச்சர் கனவுகளோடும் பலரும் பல மாதங்களாகக் காத்திருக்கிறார்கள். அதிலும், பாராளுமன்றத் தேர்தலில் தோற்றவர்களின் பதவிக்கான காத்திருப்பு என்பது, சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அரசியல் தலைவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்குமான வித்தியாசம் என்பது ப…
-
- 0 replies
- 397 views
-
-
-
- 0 replies
- 701 views
-
-
ராஜபக்ஷர்கள் முன்னுள்ள வாய்ப்பு என்.கே. அஷோக்பரன் twitter: @nkashokbharan சுதந்திரகாலம் முதல் இனமுறுகல், இனவாதம், இனத்தேசியம் ஆகியவற்றால் விளைந்த இனத்துவேசம், இனப்பிரச்சினை ஆகியவற்றுக்குள் சிக்குண்டு, இலங்கை தீவின் அரசியல் சின்னாபின்னமாகி நிற்கிறது. சுதந்திரகாலம் மற்றும் அதற்கு முற்பட்ட தலைவர்கள் கனவு கண்டது போல, இனத்தேசியவாதம், இனவாதம், இனப்பிரிவினை ஆகியவையற்ற சிவில் தேசமாக, இலங்கை ஒருவேளை கட்டியெழுப்பப்பட்டு இருந்தால், இலங்கையின் நிலை இன்று வேறாக இருந்திருக்கலாம். ஏனெனில், சுதந்திர காலத்திலேயே பொருளாதார ரீதியில் பலமான நாடாகவும் வளமான எதிர்காலத்தை நோக்கிய நாடாகவும் இலங்கை இருந்தது. ஆனால், இனவாத அரசியல் இலங்கையின் தலையெழுத்தை மாற்றிப் போட்டது. இன…
-
- 0 replies
- 509 views
-
-
ஆப்கானிஸ்தான்: ‘பயங்கரவாதத்திற்கெதிரான’ அமெரிக்கப் போரின் முதற் பலிக்களமும் இறுதிச் சாட்சியமும்! ரூபன் சிவராஜா அமெரிக்காவின் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற அறைகூவலின் முதலாவது ஆக்கிரமிப்புக் களமாக்கப்பட்ட தேசம் ஆப்கானிஸ்தான். செப்ரெம்பர் 11 தாக்குதல்களை நடாத்திய (அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள், மற்றும் பென்ரகன் மீதான தாக்குதல்கள்) பின்லாடன் தலைமையிலான அல்ஹைடா பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்கியது என்பதே ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பிற்கு அமெரிக்கா கூறிய முதற்காரணம். அல்ஹைடா பயங்கரவாதிகள் தங்குவதற்கும் பயிற்சி எடுப்பதற்;குமான தளமாக ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்துவதற்கு தலிபான் ஆட்சிபீடம் அனுமதியை வழங்கியிருக்கின்றது என்ற அடிப்படையில் ஆப்கானி…
-
- 0 replies
- 378 views
-