நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
பாதுகாப்பாக புலம் பெயர்வோம். புலம்பெயர்ந்து செல்வதென்பது பொதுவாகத் தனிமனிதனுக்கும் , சமூகங்களுக்கும் , நாடுகளுக்கும்கூட நன்மைபயக்கக்கூடியதொன்றேயாகும். தனது உணவை வேட்டையாடி உண்ட ஆதிமனிதன் முதல் நவயுக மனிதர்கள்வரை அனைவரும் ஏதாவதொரு காரணத்துக்காகப் புலம்பெயர்ந்து வந்துள்ளனர். போர்க்காலச்சூழல் , இயற்கை அனர்த்தங்கள் , அரசியல் ஸ்திரமற்ற தன்மை போன்றவை பொதுவாக மனிதர்கள் புலம்பெயர்வதை ஊக்குவித்து வரும்நிலையில் வறுமை , பிணி , பஞ்சம் போன்றவை மற்றொரு வகையில் மனிதர்களைப் புலம்பெயரச் செய்து வருகின்றன. மனிதர்கள் அனைவரும் வளமாக வாழ விரும்புவது இயற்கை. இவ்வாறு வளமான வாழ்வைத்தேடி ஓடும் மனிதர்கள் புலம்பெயர்தலை விரும்பி ஏற்றுக்கொள்கின்றனர்.முறையான , பாதுகாப்பான புலம் பெயர்வால் சமூகத்…
-
- 0 replies
- 296 views
-
-
திலீபனின் தீர்க்கதரிசனம் – புகழேந்தி தங்கராஜ் September 26, 2023 திலீபனின் மரணத்தை ‘ஈடு இணையற்ற உயிர்க் கொடை’ என்று சொல்வதைவிட, ஈவிரக்கமற்ற படுகொலை என்று சொல்வதுதான் பொருத்தம். அண்ணல் காந்தியின் அகிம்சைக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகத் தம்பட்டமடிக்கிற இந்தியத் துணைக்கண்டம், தன்னுடைய ஆணவத்தாலும் அகம்பாவத்தாலும் தன்முனைப்பாலும், லட்சக்கணக்கான மக்களின் கண்ணெதிரில் அந்த இளைஞனைச் சிறுகச் சிறுகச் சாக விட்டது. அந்தச் சமயத்தில், ஈழத் தமிழரின் தாய்மண்ணில் நின்றுகொண்டிருந்த இந்திய அமைதிப்படையின் தலைவர் ஹர்கிரட்சிங், இந்த உண்மையை மனசாட்சியோடு அம்பலப்படுத்தினார். 1987 செப்டம்பர் 17ம் தேதி, திலீபனின் அறப்போர் தொடங்கிய மூன்றாவது நாளே, உயரதிகாரி தீபிந்தர…
-
- 0 replies
- 391 views
-
-
இலங்கைதீவின் இனப்பிரச்சினையில் தேர்வுகள் அற்றநிலையில் பன்னாட்டு சமூகம் -புரட்சி (தாயகம்)- சிங்கள அரசுகள் காலத்திற்கு காலம்;, தமது தேவைக்கேற்றபடி அமைதித் தீர்விலே மட்டுமே நம்பிக்கை கொண்டவர்களாகவும் கௌதம புத்தரின் அகிம்சை, சமாதானம், நல்லிணக்கம் போன்ற அன்புவழிக் கோட்பாடுகளை கடைப்பிடிப்பவர்களில் தாம் முதன்மையானவர்களாகவும் உலகத்திற்கு நாடகமாடி வருவது வழமையான ஒன்றாகும். அதாவது தமக்கெதிராக பன்னாட்டு சமூகமோ அல்லது பிராந்திய வல்லரசுகளோ இனப்பிரச்சினைக்கு ஒரு நீதியான நியாயமான தீர்வினை முன்வைக்குமாறு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளின் போதும், உள்நாட்டிலே அரசியல் சிக்கல்கள் கொந்தளிப்புக்கள் ஏற்படும்போதும் அல்லது பாரிய பின்னடைவுகளை படைத்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
மனித உரிமைகள் பேரவையில்இலங்கை தொடர்பான அறிக்கை ATBC வெளிச்சம் நிகழ்ச்சியில் (15/03/2019 9.30PM) மனித உரிமைகள் பேரவையில்இலங்கை தொடர்பான அறிக்கை சம்பந்தமாக கலந்துரையாட பிரான்சை தளமாகக் கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளர் திரு கிருபாகரன், தாயகத்தில் இருந்து அரசியல் ஆய்வாளர்கள் திரு கருணாகரன் , திரு நிலாந்தன், மனித உரிமைகள் சட்டத்தரணி திரு கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொள்ளுகின்றனர் தொகுத்து வழங்குவது அருள் பொன்னையா மற்றும் பூபால் சின்னப்பா
-
- 0 replies
- 416 views
-
-
பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024 ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன…
-
- 0 replies
- 196 views
-
-
Herninig நகரில் வேற்றினத்தவர்களின் அமைப்புக்களும் டெனிஸ் அமைப்புக்களும் இணைந்து தங்களுடைய அமைப்புக்களின் வேலைத்திட்டங்களை வெளிப்படுத்தும் நிகழ்வாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று கலாச்சார நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் Herninig நகரில் வாழும் தமிழீழ மக்கள் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பையும் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்ட முறையில் அழித்து வருவதை கண்காட்சி ஊடாக வெளிப்படுத்தினார்கள். இந் நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை அனைவரும் விருப்பத்தோடு சுவைத்து மகிழ்ந்தனர். இந் நிகழ்வில் இலவசமாக விநியோகிக்கப்பட்ட தமிழீழ பொருட்களை (தமிழீழ சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொருட்கள்) டெனிஸ் மற்றும் வேற்றின மக்கள் விருப…
-
- 0 replies
- 356 views
-
-
இமயமலைக் காடுகளில் நடமாடுவதாக ஆண்டாண்டு காலமாக நம்பப்பட்டுவரும் யெட்டி அல்லது பிக்ஃபூட் எனப்படும் இராட்சத பனிமனிதர்கள் உண்மையிலேயே விலங்குகள் தானா அல்லது அவை வெறும் கற்பனைத் தோற்றமா என்ற கேள்விகளுக்கு பிரிட்டன் விஞ்ஞானி ஒருவர் நவீன டிஎன்ஏ ஆய்வுகள் மூலம் விடை கண்டிருக்கிறார். பனிமனிதன் என்று செவிவழி நம்பிக்கையாக இருந்துவரும் விலங்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய துருவக்கரடி இனத்தின் வாரிசு என்று டிஎன்ஏ ஆய்வில் உறுதி இந்த இராட்சத பனிமனித விலங்கு துருவக்கரடியினதும் பழுப்புநிறக் கரடியினதும் கூட்டுக்கலவையில் உருவாகியிருக்க வேண்டும் என்று ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழக மரபணுத்துறை பேராசிரியர் பிரையன் சைக்ஸ் நம்புகிறார். 'இந்தக் கரடியை இதுவரை எவரும் உயிருடன் பார்த்ததில்லை.. ஆனால…
-
- 0 replies
- 414 views
-
-
“யாழ்ப்பாணக் கல்லூரியில் ‘கைவைக்க’ எத்தனிக்கும் கயவர் கூட்டம்” பஸ்தியாம்பிள்ளை ஜோண்சன் யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் - கொழும்பு பொதுவாக, இலங்கையின் இன்றைய நெருக்கடியானதும் துன்பகரமானதுமான நிலைமைகளை எடுத்துக்கொண்டால், அதற்குக் காரணமானவர்கள் ராஜபக்ஷர்கள் என்பதை எந்தக் குழந்தையும் சுட்டுவிரலைச் சுட்டும். குறிப்பாக, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுமாறு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டங்கள், உலகம் பூராவும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. போராட்டங்களும் அழுத்தங்களும் அவமதிப்புகளும் கூட, ஜனாதிபதி கோட்டாபயவை ஒன்றும் செய்துவிடவில்லை. அவர், தனது பதவியைக் கட்டிப்பிடித்தபடியே, ‘உணர்வுகள் அற்ற ஜடம்போல்’ இப்பொழுதும் இருக்கின்றார்.…
-
- 0 replies
- 688 views
-
-
புதுவரவும் -புது நகர்வும்..! தமிழ்த்தேசிய அரசியலில் ஜனநாயகப் போராளிகள்..!! (மௌன உடைவுகள் – 20) February 5, 2023 ~~~ அழகு குணசீலன் ~~~ சமகால தேர்தல்களத்தில் – தமிழ்த்தேசிய அரசியல் சந்தையில் ஜனநாயகப் போராளிகள் கட்சிகளமிறங்கி இருக்கிறது. இந்தப் பெயர் தமிழ் மக்களுக்கு பழக்கப்பட்ட ஒன்று அல்ல. அவர்கள் ஏந்தி வருகின்ற குத்துவிளக்கு சின்னமும் பழக்கப்பட்ட தல்ல. எனினும் “போராளிகள்” என்றவார்த்தைக்கு ,அதற்கே உரிய முழுமையான அர்த்தத்தை புலிகள் நடைமுறையில் கொண்டிருக்கவில்லை என்றாலும் தமிழர் அரசியலில் அது நன்கு பரீட்சையமானது என்று கொள்ளலாம். எந்த “தும்புத்தடியை” வேட்பாளராக நிறுத்தினாலும் தமிழ்த்தேசியம் – தமிழரசுதான் வெல்லும் என்ற கதைகளின் காலமல்ல இது. மக்கள் வே…
-
- 0 replies
- 476 views
-
-
திடீர் வெள்ளத்தால் திணறிய கிளிநொச்சி முல்லைத்தீவு – மு.தமிழ்ச்செல்வன் December 28, 2018 கடந்த 21 ஆம் திகதி கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பெய்த கடும் மழை காரணமாக மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. கால நிலை மாற்றம் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்த போதும் 365 மில்லி மீற்றருக்கு மேல் மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு எவரிடமும் இருந்திருக்கவில்லை. 21 ஆம் திகதி இரவு முதல் பெய்த கடும் மழை காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி வழிந்தது. பாரியளவிலான நீர்ப்பாசன குளங்கள் முதல் சிறிய நீர்ப்பாசன குளங்கள் வரை வழமைக்கு மாறாக நிரம்பி வழிந்தது. ஊருக்குள் காணப்பட்ட வாய்க்கால்கள், கால்வாய்கள் என …
-
- 0 replies
- 571 views
-
-
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கடுமையானது - விளக்குகின்றார் ஜனாதிபதி சட்டத்தரணி தவராஜா புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கான சட்டமூலத்தில் நெகிழ்ச்சித் தன்மை இருப்பதுபோன்று காண்பிக்கப்பட்டாலும் கடுமையான பிரிவுகள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன. ஆகவே அச்சட்டமூலத்தினை உடன் விலக்கிக்கொள்ளவேண்டுமென ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா தெரிவித்தார். தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டத்தினை நீக்கி சர்வதேச நியமங்களுக்கு அமைவாக புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் குறித்து வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, அனுபவமும் பி…
-
- 0 replies
- 424 views
-
-
சனத் நிசாந்தவின் அகால மரணமும் பிரதிபலிப்புகளும் February 4, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — மரணத்தைக் கொண்டாடுவது உண்மையில் ஒரு மனப்பிறழ்வு. இறந்தவர்களைப் பற்றி நாம் பொதுவில் கெடுதியாகப் பேசுவதில்லை. ஆனால்,காலங்காலமாக அந்த பண்பை மீறிய நிகழ்வுகளை நாம் கடந்து வந்திருக்கிறோம். ஜனாதிபதி பிரேமதாச மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டபோது வடக்கு,கிழக்கில் அல்ல, தென்னிலங்கையில் பல பகுதிகளில் பட்டாசு கொளுத்தியும் பாற்சோறு வழங்கியும் பலர் மகிழ்ந்த சம்பவங்கள் பற்றி கேள்விப்பட்டோம். அவர்கள் நிச்சயமாக விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் அல்ல. அதற்கு ஒரு தசாப்தம் முன்னதாக புதுடில்லியில் இந்தியப் பிரதமர் இந…
-
- 0 replies
- 227 views
-
-
எதிர்வரும் மாவீரர் தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில்(United Kingdom ) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் லண்டனில் இன்று (24.11.2024) போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. இதன்போது தமிழீழ தேசிய கொடிநாள் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. கார்த்திகை 21 1990 ஆம் ஆண்டு கார்த்திகை 21 ஆம் நாள் எமது தேசிய கொடியை தேசியத் தலைவர் அறிமுகப்படுத்தி முதன்முதலாக ஏற்றி வைத்தார். எமது தேசியக்கொடி எமது இனத்தின் தனித்துவத்தின் ஒரு அடையாளமாக விளங்குகின்றது. இதன் தனித்துவத்தையும் புனிதத்துவத்தையும் நிலைநிறுத்தி அடுத்த சந்ததியிடம் கையளிப்பது எமது கடமையென இதன் ஏற்பாட்டாளர்கள் வெ…
-
- 0 replies
- 155 views
-
-
ஊடகங்களின் உளறல்களும், பக்கசார்பான பதற்றங்களும் - இராஜவர்மன். தமிழீழத் தேசியத் தலைவர் இருக்கிறார். இருக்க வேண்டும். போராட்டத்தைக் கொண்டு நடத்த வேண்டும் என்ற அவா ஒவ்வொரு தமிழனின் மனதிலும் நிரந்தரமானதாகப் பதிந்ததோடு, பிரார்த்தனையாகவும் அமைந்துவிட்டது. அதுவே எனது பிரார்த்தனையும் கூட. ஆனால் உண்மை அதற்கு மாறுபட்டதாக துரதிஸ்டவசமாக அமைந்துவிட்டால் அதனை அவர் நியமித்த பிரதிநிதியே அறிவிக்கும் போது அதனை நேர்மையாக மக்களிடம் எடுத்துச் செல்வதில் என்ன தயக்கமிருக்கிறது என்பதே எங்களது தற்போதைய கேள்விக்குறி. தமிழீழத் தேசியத் தலைவரால், தமிழர்களின் தலைமையால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட, அதிகாரபூர்வமுள்ள ஒரு தொடர்பாக தற்போது புலம்பெயர் தமிழர்களிற்கு உள்ளவர் திரு. கே.பி. பத்மாநதன…
-
- 0 replies
- 463 views
-
-
பெரியார், அண்ணா உருவாக்கிய அரசியல் தத்துவ இரட்டைக் குழல் துப்பாக்கி! மின்னம்பலம்2021-09-15 ராஜன் குறை ஆண்டுதோறும் தி.மு.க செப்டம்பர் 15, 17 ஆகிய இரு தினங்களை ஒட்டி முப்பெரும் விழா என விழா கொண்டாடுவது வழக்கம். அண்ணா பிறந்த தினம், பெரியார் பிறந்த தினம், தி.மு.க உருவான தினம் ஆகியவை இந்த தேதிகளில் அடங்குகின்றன. அண்ணா ஒருமுறை தி.க-வும், தி.மு.க-வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று கூறியது அனைவரும் அறிந்ததே. அந்தக் கூற்றினை அரசியல் தத்துவ அடிப்படையில் எப்படிப் புரிந்துகொள்ளலாம் என்பதை பரிசீலிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். திராவிட இயக்கம் என்று பொதுவாக அறியப்படும் அரசியல் இயக்கங்களின் நோக்கம் திராவிட - தமிழ் அடையாளம் கொண்ட ஒரு மக்கள் தொகுதியினை கட்டமைப்பதே. அ…
-
- 0 replies
- 510 views
-
-
இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு 9 ஆண்டுகள் கழித்து 1956 நவம்பர் 1-ம் தேதி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது `மெட்ராஸ் பிரசிடென்ஸி' என்ற பெயரில் இணைந்திருந்த கர்நாடகத்தின் சில பகுதிகளும், ஆந்திராவின் சில பகுதிகளும் நவம்பர் 1-ம் தேதியன்று பிரிக்கப்பட்டு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா என உருவானது. ``பிரிக்கப்பட்ட அன்றுதான் தமிழகத்தின் சில பகுதிகள் கர்நாடகத்துக்கும், கேரளத்துக்கும், ஆந்திராவுக்கும் சென்றுவிட்டன. எனவே நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்பட வேண்டிய நாள் அல்ல. தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ம் நாள் தான் உண்மையான தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்பட வேண்டும்" என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், பேராசிரியர் சுப.வீரபா…
-
- 0 replies
- 384 views
-
-
தமிழ் அரசியல்வாதிகளால் என்ன பயன்? | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தொடங்கியுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் ஜீ.எல். பீரிஸ் அவர்களின் உரை பற்றியும், இலங்கை அரசாங்கம் பீரிஸ் மூலம் கையாள்வது பற்றியும், அதே நேரம் தமிழ் தலைவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்ற கேள்வியுடன் இந்த ஆய்வு அமைகின்றது. மற்றும் தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/
-
- 0 replies
- 317 views
-
-
குற்றவாளிகளுக்கு மன்னிப்பா? பேராயர் மல்கம் ரஞ்சித்திற்குப் பகிரங்கக் கடிதம் –வத்திகானில் உள்ள திருத்தந்தையின் ‘கார்தினால்’ என்ற சர்வதேச அந்தஸ்தில் (International Excellence) இருந்து கொண்டு, இலங்கைத்தீவில் உள்ள ஏனைய சமூகங்களை ஓரக் கண்ணால் பார்க்கும் சிறுமைத் தனத்தில் (Smallness) இருந்து முதலில் தாங்கள் வெளியே வர வேண்டும்– அ.நிக்ஸன்– 1991 ஆம் ஆண்டு யூன் மாதம் பதினேழாம் திகதி தாங்கள் கொழும்பு துணைப் பேராயராக திருநிலைப்படுத்தப்பட்டுப் பின்னர் 1995 இல் இரத்தனபுரி மறை மாவட்ட ஆயராகவும் 1995 முதல் 2001 வரை இரத்தினபுரி ஆயராகவும் பணிபுரிந்தீர்கள். அதன் பின்னர் 2001 ஒக்ரோபர் முதலாம் திகதி உரோ…
-
- 0 replies
- 475 views
-
-
கூட்டுஒப்பந்தத்திற்குப் பின் உருவாகியுள்ள எதிர்ப்புகள் தோட்டத்தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்த விவகாரம் இன்னும் நீறுபூத்த நெருப்பாக கணன்று கொண்டிருக்கிறது. முதல் தடவையாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை தொழிற்சங்க கூட்டமைப்பு தவிர்த்துள்ளது. இரண்டு தொழிற்சங்கங்கள் மட்டுமே கைச்சாத்திட்டுள்ளன. மட்டுமல்லாது சில திருத்தங்களுடன் மீண்டும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படல் வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பெற்று வருகின்றன. ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத ஏனைய மலையக தொழிற்சங்கங்களைப்பற்றி இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கமும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தமது தரப்பில் பேச்சுக்களில் ஈடுபட்ட ஒரு தொழிற்சங்கம் கூட்டு ஒப்பந்தத்தை புறக்கணித…
-
- 0 replies
- 319 views
-
-
கருத்துப்படம் 15.01.2008 எண்ணக்கரு: செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 0 replies
- 4.7k views
-
-
தமிழ் ஊடகப் பரப்பும் அகற்றப்பட வேண்டியவையும் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர், இதோ போன்றதொரு காலையில் (ஜூன் 01) அரிய தொகுப்புக்கள், வரலாற்றுச் சுவடிகள் உள்ளடங்கலாக சுமார் 97,000 புத்தகங்களுடன், யாழ். பொது நூலகம் எரிந்து அடங்கியது. எரித்தவர்கள், இறுமாப்போடு கடந்து போனார்கள். எரிந்துபோன புத்தகங்களின் எச்சங்களைக் கட்டிக்கொண்டு அழுதவர்களின் மனவடு, எந்தவித ஆற்றுதலும் இன்றி, எரிந்து எழுந்த சுவாலைக்குள்ளும் அதன் வெம்மைக்குள்ளும் இன்னமும் தகித்துக் கொண்டிருக்கின்றது. யாழ். பொது நூலக எரிப்பு, தமிழர்களின் கல்வி, அரசியல் மற்றும் சமூக உரையாடல் வெளிக்கான அச்சுறுத்தலின் பிரதிபலிப்பு. தமிழ் மக்கள், தமது அரசியலுரிமைப் போராட்டங்களை ஆரம்பித்த காலம…
-
- 0 replies
- 385 views
-
-
கொஸ்கம - சலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற ஆயுதக்கிடங்கு வெடிப்பினை பற்றியே இன்று நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் பேசுகிறார்கள். குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் இந்த சம்பவம் அதிர்வினை ஏற்படுத்தி இருக்கின்றது. வெடியோசை சிங்கள மக்களுக்கு புதியது தான் ஆனால் எமது தமிழ் மக்களுக்கோ ஆலய மணியோசைதான். இன்றிலிருந்து ஏழு வருடங்கள் சற்றுப் பின்னோக்கி வடக்கு - கிழக்கினை பாருங்கள். அங்கு தமிழ் மக்கள் அனுபவித்த வலிகளையும் துன்பங்களையும் அளவிட்டால் உங்களுக்கே புரியும். நீங்கள் இன்று கேட்டு அதிர்ந்த வெடியோசைகள் எல்லாம் எள்ளவுதான் என. நாட்டில் இருக்கக் கூடிய ஒட்டுமொத்த ஆயுதக் கிடங்குகளையும், தமிழ் மக்களை அழிக்கும் நோக்குடன் கொட்டியவர்கள், இன்று கொஸ்கம சம்பவத்திற்காய் நீலிக…
-
- 0 replies
- 216 views
-
-
ஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக பட மூலாதாரம்,GETTY IMAGES நிலையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை நோக்கி இலங்கை நகர்ந்துள்ளதை இலங்கை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. 2020ம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தி 16.3 சதவீத வீழ்ச்சியை நோக்கி சரிவடைந்துள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டின் 2ஆவது காலாண்டில் பதிவான வளர்ச்சி வீதத்தின் 1.1 சதவீதத்துடன் ஒப்பிடும் போது, இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வீழ்ச்சியை நாடு சந்தித்துள்ளதாகவ…
-
- 0 replies
- 755 views
-
-
மக்கள் போராட்டங்களைப் பலவீனப்படுத்த ரணில் கையில் எடுத்துள்ள உபாயங்கள்-அகிலன் August 3, 2022 இலங்கையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தக் காரணமாக இருந்த ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்களில் முன்னணி செயற்பாட்டாளரான ஒருவர், டுபாய் செல்லவதற்காக சிறிலங்கன் விமானத்தில் ஏறிய பின்னர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுப் பலவந்தமாக இழுத்துச்செல்லப்பட்ட காட்சியை நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். விமானத்திலிருந்த பயணிகள் பலர் இந்த சம்பவத்தை தமது கைப்பேசிகளில் பதிவுசெய்து உடனடியாகவே பகிர்ந்திருந்தார்கள். விமானப் பயணிகளிலும் பலர் இந்தக் கைதை எதிர்த்தார்கள். ஆனால், எதனையிட்டும் கவலைப்படாமல் கைதான தனிஸ் அலி என்ற அந்த முன்னணி செயற்பாட்டாளர் விமானத்திலிருந்த…
-
- 0 replies
- 249 views
-
-
இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பிலான பல்வேறு தகவல்கள் நாளாந்தம் உலக ஊடகங்களை ஆக்கிரமித்து வருகின்றன. நாளுக்கு நாள் புலத்தில் தஞ்சம் அடைவதற்காக பயணிப்பவர்களும் கைது செய்யப்படுபவர்களும் என நீண்டு செல்லும் பட்டியலுக்குள் இன்னமும் ஈழத்தமிழர்களின் அவலம் தொடர் கதையாக மாறியிருக்கின்றது. மே 18 இன் பின்னர் இன்றுவரையில் குறைவடையா தொடர் அவலத்தினை தமிழினம் சந்தித்துவருகின்றது என்பதற்கு புலத்தில் தஞ்சம் கோரும் எம்மவர்களின் எண்ணிக்கை எடுத்துக்காட்டுவதாகத் தோற்றங்காட்டினாலும் அதனால் ஏற்பட்டு வருகின்ற பாதக நிலைமை தொடர்பிலும் கவனம் செலுத்தவேண்டிய தேவை உணரப் பட்டிருக்கின்றது. தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கு அறிந்தோ அறியாமலோ பங்கெடுத்தவர்கள் நாட்டில் வாழ்வியலை முன்னெடுப்பதில் நெருக்கடிகளை…
-
- 0 replies
- 473 views
-