நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் G .L. Peiris யேர்மனியில் சென்ற வாரம் 13 -16 திகதிகளில் யேர்மனி பெர்லின் நகரத்திற்கு இன அழிப்பை மூடி மறைக்கும் பொய்ப் பரப்புரை பயணத்தில் யேர்மன் வெளிவிவகார அமைச்சர் Gido Westerwelle மற்றும் யேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து சென்றுள்ளார் . அத்துடன் இவ் வருகையில் சிறீலங்கா மற்றும் யேர்மன் அரசுக்கு இடையான ராயதந்திர உறவின் 60 வது வருட தினத்தை சிறீலங்காவின் தூதரகத்தின் வளாகத்தில் ஈழத்தமிழர்களின் மீதானா இன அழிப்பை மூடி மறைக்கும் முகமாக பாரிய விழாவாக கொண்டாடி உள்ளார்கள் . வெளிவிவகார அமைச்சுடன் நடைபெற்ற சந்திப்பில் G .L. Peiris சிறீலங்காவில் போர் முடிந்து மிக சிறப்பான முறையில் சமூக அபிவிருத்திநடைபெறுகின்றது என்றும் , தாம் சர்வதேச …
-
- 0 replies
- 260 views
-
-
2009 ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்பு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை நடவடிக்கைகள் புதிய வடிவத்தை எடுத்துள்ளன. இது காலவரை தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகளைப் பறிப்பது என்ற இலக்கை நோக்கி நகர்ந்த ஒடுக்குமுறை தற்சமயம் எமது இனத் தனித்துவத்தையும் ஒரு தேசிய இனத்துக்கான தகைமையையும் அழித்து எம்மை ஓர் உதிரித் தன்மை கொண்ட இனக் குழுமமாக மாற்றும் முயற்சியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக எமது தாயகத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களை விரட்டி அவர்களை நிரந்தரமாகவே அகதிகள் நிலைக்குத் தள்ளிவிட்டு அந்த நிலங்களைப் பாதுகாப்பு, அபிவிருத்தி…
-
- 0 replies
- 262 views
-
-
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இரட்டை வேடங்களில் பிய்த்து உதறிய திரைப்படங்களில் ஒன்று கௌரவம்! வியட்னாம் வீடு புகழ் சுந்தரத்தின் இயக்கத்தில் உருவான கௌரவத்தில் வரும் "நீயும் நானுமா கண்ணா.. நீயும் நானுமா கண்ணா!" என்ற பாடல் இன்னும் இரசனைக்குரியது. அதற்கு முக்கிய காரணம் T.M.S இன் குரல்வளமும் கூட! தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=19260
-
- 0 replies
- 495 views
-
-
"இரண்டாயிரம் சாரம் கட்டிய பொடியங்களை ஒரு சிகரெட்டை பற்றி முடிப்பதுக்குள் அழித்து விடுவேன்"--முன்னாள் இந்திய அமைதிப்படைத் தளபதி ! இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியும்-அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் ஈழத் தமிழர்களின் சம்மதமின்றி தன்னிச்சையாக 1987 ஆடியில் செய்து கொண்டனர்.குறைந்தது இந்தியாவில் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்களைப் போல் இருந்தாலாவது ஓரளவு தமிழர்களை அன்று திருப்திப் படுத்தியிருக்க முடியும்.ஆனால் ஒரு மாநகர சபைக்கு உள்ள அதிகாரங்கள்கூட இல்லாத அந்த மாகாண சபைக்காகவா நாம் 12 வருடங்களாக போராடினோம்? என்று இந்தியாவிடம் நேரடியாகவே கேட்டார் தலைவர் பிரபாகரன்.ஆனால் அதையெல்லாம் பற்றி கவலைப்படும் நிலையில் அப்போது ராஜிவ்காந்தி இருக்க…
-
- 3 replies
- 613 views
-
-
எனக்குள் நிறைய கேள்விகள் எழுகிறது??? உங்களுக்கும் இதே கேள்விகள் எழுந்தால், நீங்களும் தமிழனே ***கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்தார் ஜெயா....அந்த வழக்கு என்ன ஆனது??? ***ஜெயாவை கைது செய்து சிறையில் அடைத்தார் கருணாநிதி......அந்த வழக்கு என்ன ஆனது???வழக்கு எந்த நிலையில் உள்ளது??? ***மதுரையில் ரயில் நிலையத்தில், ஸ்டாலினை ஒருவர் கத்தியால் குத்த முயன்றார் என்றொரு வழக்கு, அது என்ன ஆனது ??? வழக்கு எந்த நிலையில் உள்ளது??? ***தா.கி யை வெட்டி கொன்ற வழக்கில், அழகிரி விடுதலை....அரசு, மேல்முறையீடு செய்தார்களா??? வழக்கு எந்த நிலையில் உள்ளது??? ***சுடுகாட்டு கூரை வழக்கில் செல்வகணபதி விடுதலை...அரசு, மேல்முறையீடு செய்தார்களா??? வழக்கு எந்த நிலையில் உள்ளது??? ***வரிசையாக ஜெயாவின் ஆ…
-
- 3 replies
- 1.9k views
-
-
ராஜீவ் கொலை : பழிக்குப் பழிதான் ! அடையாளம் தெரியாள அளவிற்கு துண்டு துண்டாகப் பிய்த்தெறியப்பட்டு ராஜீவ்காந்தி அழித்தொழிக்கப்பட்டு விட்டார். அவரது எலும்புகளையும் சதைகளையும் மூவர்ணக் கொடியில் மூட்டை கட்டி அள்ளிப் போட்டுத்தான் சடலம் எடுத்துச் செல்லப்பட்டது. நாட்டையே சூறையாடிய ஒரு ஊதாரியும் பீரங்கித் திருடனும் ஏகாதிபத்திய அடிவருடியும் கொலைகார பாசிஸ்டுமான ஒரு நபர் இப்படி சாகடிக்கப்படுவது பொருத்தமானதுதான். அதைக் கண்டிப்பதோ, அதற்காக அனுதாபப்படுவதோ அவசியமில்லை. அதேவேளையில், ஒரு தனிநபரைக் கொன்று விடுவதன் மூலம் அவர் சார்ந்த அமைப்பையோ, அதன் வர்க்கத் தன்மையையோ மாற்றிவிட முடியாது; அவ்வமைப்பை அம்பலப்படுத்தி, பரந்துபட்ட மக்களை அரசியல்படையாக திரட்டி மட்டுமே ஒழிக்க முடியும் என்…
-
- 1 reply
- 639 views
-
-
இன்று அராலித்துறை பகுதியில் இந்திய அமைதிப்படையினரால் கொல்லப்பட்ட 35 இற்கும் மேற்பட்ட பொதுமக்களின் 22ம் ஆண்டு நினைவு தினமாகும். அராலித்துறை யாழ் மாவட்டத்தின் வலிகாமம் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. சிறிலாங்கா இராணுவம் யாழ்கோட்டைப்பகுதியில் நிலைகொண்டிருந்ததால், யாழ் கோட்டைப் பகுதியின் அருகாமையிலுள்ள பண்ணைப் பாலம் ஊடான தீவு பகுதிகளுக்கான பிரதான போக்குவரத்துத் தடைப்பட்டிருந்தது. இதன் காரணமாக தீவுப் பகுதிக்கான பிரதான போக்குவரத்துப் பாதையாக அராலித்துறை விளங்கியது. வழமை போல தீவுபகுதியினை சேர்ந்த 200ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் 1987.10.22 அன்றும் யாழ் நகரம் நோக்கி பதினைந்து இயந்திரப் படகுகளில் வந்து கொண்டிருந்தனர். நண்பகல் அராலித்துறையினை வந்தடைந்த பொதுமக்கள் மீது திடீரென இந்தி…
-
- 6 replies
- 447 views
-
-
அளவெட்டிக் கிராமம் யாழ்.மாவட்டத்தில் வலிகாமத்தின் வடக்குப் பகுதியில் தெல்லிப்பளைப் பிரதேசசெயலகப் பிரிவினுள் அமைந்துள்ளது. அளவெட்டி அம்பனைப் பகுதியில் அளவெட்டி-மல்லாகம் ப.நோ.கூ.சங்கம் அமைந்துள்ள கட்டடத்திற்கு முன்பாக அளவெட்டி இந்து ஆச்சிரமம் அமைந்துள்ளது. அளவெட்டிப் பிரதேசத்திலுள்ள இந்த இந்து ஆச்சிரமம் இந்து மக்களின் வயோதிபர் மடமாகவும், கடந்த கால வன்செயல்களால் கடும் பாதிப்புற்ற இளஞ்சிறார்கள் கல்வி கற்கும் இடமாகவும் செயற்பட்டுக்கொண்டிருந்தது. அமைதிப்படையாக வந்த இந்திய இராணுவத்தினர் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டிய வைத்தியசாலை, பாடசாலைகள், பல்கலைக்கழகம், பத்திரிகை அலுவலகம், என பொதுமக்களின் பயன்பாட்டிடங்களின் மீதும் தமது தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தது. இ…
-
- 19 replies
- 796 views
-
-
சாவகச்சேரி சந்தைப் படுகொலையின் 26ம் ஆண்டு நினைவு - 27.10.1987 யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குத் திசையில் யாழ் நகரையும், வன்னிப் பெருநிலப்பரப்பையும் இணைப்பது தென்மராட்சிப் பிரதேசமாகும். யாழ்-கண்டி பிரதான நெடுஞ்சாலையில் யாழ். நகரத்திலிருந்து ஏறக்குறைய பதினைந்து கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சாவகச்சேரி நகரமானது, தென்மராட்சிப் பிரதேசத்தின் பிரதான நகரமாகும். தென்மராட்சி மக்களின் பிரதான சந்தை இங்கேயே அமைந்துள்ளது. எப்போதும் மக்கள் நடமாட்டம் கூடுதலாக உள்ள நகரமாகும். 1987 ஒக்டோபர் 27 ம் திகதி கந்தசட்டி கடைசி நாளாகும். மதியம் 12 மணியளவில் நகரத்தின் வழியாக சூரன் போருக்குரிய சூரன்; அவ்வீதியால் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தது. ஏராளமான பக்தர்களுடன் வீதியுலா வந்த சூரன் நகரத்தின்…
-
- 8 replies
- 779 views
-
-
இனப்படுகொலைக்கு முன்னோடி ‘இந்திய அமைதிப்படை’யே (10) (சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட பதிப்பு, பகுதி-10) “ஒரு முறை இந்தியப் படை, தளம் 14-ஐ முற்றுகையிட்டு பிரபாகரனை சுற்றி வளைத்தது. அப்பொழுது அவருடைய மெய்க்காப்பாளர்கள் பிரபாகரனுக்கும் இந்திய அமைதிப் படைக்கும் இடையே வலிமையான ஒரு சுவரைப் போல நின்றார்கள். இறுதியில் அந்த முகாமை இந்தியத் துருப்புகள் கைப்பற்றின. ஆனால் தளம் 14-ன் 17 மெய்க்காப்பாளர்கள் தங்கள் உயிரைத் துறந்து, பிரபாகரன் வன்னிக் காட்டிற்குள் தப்பிச் செல்ல போதுமான நேரத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அதுவே இந்திய அமைதிப்படை ம…
-
- 0 replies
- 436 views
-
-
1987 ஒக்டோபர் பத்தாம் நாள் இந்திய இராணுவத்திற்கும் - தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் யுத்தம் தொடங்கிய பின்னர் இந்திய இராணுவத்தின் பரவலான விமானக்குண்டு வீச்சு மற்றும் ஏறிகணைத் தாக்குதலுக்கு அஞ்சி கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்திய படையினரின் தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமடைந்ததால் பாதுகாப்பு தேடிய மக்கள் கொக்குவில் இந்துக்கல்லூரியில் தஞ்சமடைந்தனர். அத்துடன் தங்களை இடம்பெயர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தும் நோக்குடன் பாடசாலையின் முக்கிய இடங்களில் வெள்ளைக்கொடியைப் பறக்கவிட்டிருந்தனர். 1987 ஒக்டோபர் இருபத்து நான்காம் நாள் காங்கேசன்துறை வீதி வழியாக யாழ் நகரம் நோக்கிக் கவசவாகனங்கள், டாங்கிகள் சகிதம் முன்னேறிய இந்தியப் ப…
-
- 0 replies
- 425 views
-
-
13ஆவது திருத்த சட்டத்தில் உள்ள அதிகாரங்களை குறைத்தல், மாகாணசபை முறை இரத்து செய்யப்பட வேண்டும் என தென்னிலங்கை சிங்கள இனவாத தரப்புக்கள் போர்க்கொடி எழுப்பியிருக்கும் வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய பயணத்தை மேற்கொண்டிருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய அரசின் அழைப்பின் பேரில் புதுடில்லி செல்கின்றனர் என செய்திகள் பரப்பட்டிருந்தாலும் உண்மை அதுவல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இந்த பயண ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழுவில் இடம்பெற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஒப்புக்கொண்டிருந்தார். புதுடில்லி சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷியை சந்தித்த…
-
- 0 replies
- 435 views
-
-
தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடியே திருடப் போகலாம் என்ற பழமொழி வேறு எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நேற்று முன்தினம் கொழும்பு அதிகார மையத்தால் வெளியிடப்பட்ட '13' தொடர்பான நாடாளுமன்ற விசேட குழுவுக்கு மிகக் கச்சிதமாகவே பொருந்துகிறது. தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=18379
-
- 1 reply
- 423 views
-
-
லண்டனில் தமிழ்ப் பெண்ணை எட்டி உதைத்த சிங்களவரின் பேஸ்புக் கணக்கு முடக்கம்! June 22nd, 2013 அன்று வெளியிடப்பட்டது - கருத்துக்களேதுமில்லை லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணியை புறக்கணிக்குமாறு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்ப் பெண்ணொருவரை எட்டி உதைத்த சிங்கள இளைஞரின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. நிபுல் தெவரப்பெரும என்ற இந்த இளைஞர் லண்டன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் பெண்ணொருவரை எட்டி உதைத்திருந்தார். பின்னர் அது குறித்து அவர் தனது சிங்களவர்களிடமிருந்து பேஸ்புக் தளத்தில் தகவல் வெளியிட்டதையடுத்து, அவருக்கு பேஸ்புக் வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவியத் தொடங்கியது. மேலும் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் சிங்களவர்கள் மத்தியில் அவர் ஒரு ஹீரோ அந்தஸ்தில் மதிக்…
-
- 12 replies
- 1.4k views
-
-
10 cm அசாதாரணமான வால் வளர்ச்சி கொண்ட சிறு குழந்தையின், தாயிடம் இலகுவாக அதனை நீக்க முடியாது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். முள்ளம்தண்டில், அடிப்படை பிரச்னையினை தீர்க்காமல் இதனை அகற்றினாலும் மீண்டும், மீண்டும் வளரும் என தெரிவிக்கிறார்கள் சீன டாக்டர்கள். 800 பிள்ளைகளுக்கு 1 பிள்ளை இந்த வகையில் பாதிப்புறுகின்றது எனினும் இந்த குழந்தை அதிகமாக பாதிப்டைந்துதுள்ளதாக படத்தினை பார்க்கையில் தெரிகிறது. குழந்தை நலம் பெற வாழ்த்துவோம். http://news.uk.msn.com/trending-blog/mum%E2%80%99s-appeal-for-help-over-child%E2%80%99s-%E2%80%98tail%E2%80%99 Mum’s appeal for help over child’s ‘tail’
-
- 0 replies
- 596 views
-
-
ஶ்ரீலங்கா மாதாவின் வெறித்தனம் மிகுந்த புத்திரர்களால், கடந்த திங்களன்று லண்டன் ஓவல் மைதான முன்றலில் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களுக்கான அறவழி எதிர்ப்பு வேல்ஸில் எதிரொலிக்கும் என்ற அச்சத்துடன் கொழும்பு தனது இராஜதந்திர தொடர்பாடல் மூலமாக ஒரு அவசர முன்னெச்சரிக்கையை செய்திருந்தாலும் தமிழர்களின் அறவழி ஒன்றுகூடல் இடம்பெறத்தான் செய்திருந்தது. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=17978
-
- 0 replies
- 706 views
-
-
1984-இல் நடந்த சீக்கியப் படுகொலை தொடர்பான வழக்கொன்றில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருந்த காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யான சஜ்ஜன் குமார், அவ்வழக்கு தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் – கொலைக்குற்றம் மற்றும் கலவரம் – விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 29 ஆண்டுகளாக நீதிக்காகப் போராடி வரும், நீதிக்காகக் காத்திருக்கும் சீக்கியர்களிடம் இந்த அநீதியான தீர்ப்பு எத்தகைய மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும் என்பதை எந்தவொரு வார்த்தையாலும் விவரித்துவிட முடியாது. 1984-ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று காலையில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, சீக்கிய மதத்தைச் சேர்ந்த இரண்டு மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்துத் தொடங்கிய சீக்கியப் படுகொலை நவம்பர் 3-ஆம் தேதி வரை …
-
- 0 replies
- 421 views
-
-
மகாத்மா காந்தியா ..நித்யானந்தாவா...நாறியது காந்தி புகழ்!! மகாத்மா காந்தி பற்றி இந்த வாரம் வெளிவந்த இந்தியாடுடே பல விசயங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி விட்டது..இந்தியா டுடேயில் பென்னிப்பென் என்ற பெண் உதவியாளர் டைரியில் குறிப்பிட்டிருந்தவற்றை கட்டுரை ஆக்கியிருக்கிறார்கள்..காந்தி தனக்கு பணிவிடை செய்ய நிறைய இளம்பெண்களை ஆசிரமத்தில் தங்க வைத்திருந்தார் அவர்களை ஷிப்ட் முறையில் இரண்டு இரண்டு பேராக தனது வலது இடது பக்கத்தில் ஒரே படுக்கையறையில் படுக்க வைத்துக்கொள்வார்....அணைப்பார்.. சில்மிசம் செய்வார்..பெரும்பாலும் நிர்வாணமாகதான் தன் பக்கத்தில் படுக்க வைத்துக்கொள்வார்.. அவர்கள் உணர்ச்சி வசப்படாமல் இருக்கின்றனரா என டெஸ்ட் செய்வாராம் இதற்கு பெயர்...பிரம்மச்சர்ய பரிசோதன என பெயரும் வைத…
-
- 7 replies
- 2.1k views
-
-
மக்களிடம் பேசப்படும் ஒரு விடயமாக இருந்தால் மட்டுமே, ஒரு 'Brand' பெயர் பரவி வியாபாரம் நடக்கும். இதற்கான விளம்பரங்கள் மிகவும் செலவு மிக்கவை. ஊடகங்கள், பெரும்பாலும் விளம்பர வருமானங்களில் தங்கி இருப்பதால், விளம்பரம் செய்ய விரும்பும் நிறுவனங்கள், இலவசமாக கிடைக்கக் கூடிய விளம்பரங்கள் குறித்து கூடிய கவனம் செலுத்துகின்றன. சில புத்திசாலித் தனமான, கில்லாடி வேலைகள் செய்து விளம்பரம் தேடுகின்றன. இதோ சில: VIRGIN நிறுவனத்தின் உரிமையாளர் சேர் ரிச்சர்ட் பிரான்சன் இவர் சில வருடங்களுக்கு முன்னர் தன்னை 'hot air baloon' பறப்பில் விருப்பம் உடையவராக காட்டிக் கொண்டார். தீடீரென, ஆபத்து மிக்க பறப்பு ஒன்றில் இங்கிலாந்தில் இருந்து, பிரான்சுக்கு செல்வதாக அறிவித்தார். சொன்னபடியே பறந்தார். …
-
- 0 replies
- 613 views
-
-
இசை (music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். இதை வடமொழியில் நாதம் என அழைப்பர். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அரும் சாதனம் இசை. இசை ஒரு கலை. உலகில் இசைக்கு மயங்காதோர் எவரும் இல்லை. இசை, நமது வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. இசை நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வுபூர்வமானது. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் திகழ்கிறது. இசை, அமைதி மற்றும் அழகான விஷயம். அனைவரிடத்திலும் இசையை பரப்பும் நோக்கிலும், இசைத்துறையில் சாதனையை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்…
-
- 4 replies
- 1.7k views
-
-
'நரிக்கு நாட்டாண்மை கொடுத்தால், கிடைக்கு இரண்டு வெள்ளாடுகளை கேட்கத்தானே செய்யும்!' 'சிங்கள மகா ஜனதாவ' இதன் கருத்தியலை உணரும் காலம் பிறந்துவிட்டமைக்கான அறிகுறிகள் தெரிகின்றன. http://tamilworldtoday.com/?p=17590
-
- 1 reply
- 517 views
-
-
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே. ஆனாலும் அவர்களுக்கு ஒருவிதத்தில் நன்றி சொல்லவும் வேண்டும்.நாம் எங்கு நிற்கின்றோம்.என்பதை எமக்கு வெகுவாக மிகவும் ஆணித்தரமாக புரிய வைத்ததற்காக.அவர்கள்தான் அடிக்கடி எமக்கு நினைவு படுத்திக்கொண்டே இருந்தாலும் நாமும்தான் அதனை உடனேயே கொந்தளித்து பின் மறந்து படுத்து கிடக்கின்றோம். .நேற்றைய லண்டனில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கான காரணம் எதுவாக இருந்தாலும் அதனில் மிகமிக முக்கியமான காரணம் அந்த போராட்டத்துக்கு அதிக அளவிலான தமிழ்மக்கள் போகாமல் விட்டதே என்பதாகும்.முன்ன…
-
- 9 replies
- 853 views
-
-
Monks behaving badly: Buddhists warned over flashy gear Thanyarat Doksone The Associated Press 17 hours ago YouTube http://youtu.be/sANFgwoJeic Buddhist monks were criticized over this video. Thailand's national Buddhism body said Monday it is monitoring monks nationwide for any inappropriate behavior following complaints ignited by a video showing Buddhist monks flying on a private jet. The YouTube video emerging recently showed one of the monks was wearing stylish aviator sunglasses, carrying a luxury brand travel bag and sporting a pair of modern-looking wireless headphones. It attracted criticism from Buddhists nationwide. Office of National Buddhism direc…
-
- 2 replies
- 656 views
-
-
ஆடி வேல் விழா இவ்வருடம் ஆவணி வேல் விழா ஆனது எப்படி! இலங்கையின் வரலாறு தொடங்கிய காலம் முதல் இத்தீவை ஆண்ட மன்னர்களின் போஷிப்பையும் கதிர்காம முருகனாலயம் பெற்றிருந்தமை பற்றி பாளி நூல்கள், வரலாற்று மூலகங்கள், சந்தேச நூல்கள் போன்றவற்றின் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. குபேரன், இராவணன், மகாநாகன் பாண்டிய கதிர்காம சத்திரிய மன்னர்கள், தேவநம்பிய தீசன், துட்டகாமினி, 2ஆம் காசியப்பன், 4ஆம் அக்ரபோதி, தம்புலன், 3ஆம் மகிந்தன் சோழ மன்னர்கள், விஜயபாகு, மகா பராக்கிரம பாகு என இலங்கையை ஆட்சிசெய்த பல மன்னர்களின் ஆதரவையும் மானியங்களையும் கதிர்காம முருகனாலயம் பெற்றிருந்தது. கி.பி.1581 முதல் 1593வரை சீதாவக்கை இராச்சியத்தை ஆட்சி செய்த முதலாம் இராஜசிங்கன் காலத்தில் கதிர்காமத்தில் இருந்…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழர்களின் தோல்வி என்பது தற்காலிகமானதுதான், தர்மம் மறுபடி வெல்லும், தமிழ் அடையாளம் அழிவதில்லை, தமிழ் வரலாறு அழிவதில்லை, அதை தூக்கி நிறுத்த அடுத்த தலைமுறை வந்தே தீரும் என கவிப்பேரரசு வைரமுத்து சுவிட்சர்லாந்தில் நேற்று மாலை நடைபெற்ற விழாவில் தெரிவித்தார். கவிப்பேரரசு வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் நூல் அறிமுகவிழா நேற்று மாலை சுவிட்சர்லாந்து லுசேன் நகரில் எழுத்தாளர் கல்லாறு சதீஸ் தலைமையில் நடைபெற்றது. தாய் மண்ணை விட்டு வந்தாலும் தமிழ் மொழியை தமிழ் பண்பாட்டை இன்றும் மறக்காமல் நெஞ்சில் சுமந்து வாழும் ஈழத்தமிழர்களால் உலகம் எல்லாம் தமிழ் வாழும் என்றும் அங்கு உரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்தார். Related posts: - See more at: http://www.thinakkathi…
-
- 4 replies
- 858 views
-