நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
தமிழர்களின் கோரிக்கைகளால் பயனடையும் பேரினவாத சக்திகள் ஒவ்வொரு தேசிய மட்டத் தேர்தல்களின் போதும், மாகாணம், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போதும் தமிழ் அரசியல் கட்சிகள், மரபு ரீதியான சில கோரிக்கைகளைப் பிரதான தேசிய அரசியல் கட்சிகளிடம் முன்வைக்கின்றன. அல்லது, அவற்றை அடிப்படையாகக் கொண்டு தமது தேர்தல் விஞ்ஞாபனங்களைத் தயாரிக்கின்றன. இம்முறையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, வடக்கு மாகாணசபையின் முன்ளாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய ஐந்து கட்சிகளும் 13 கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளன. தமிழ்க் கட்சிகள், இது போன்ற கோரிக்கைகளைத் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடும் போதெல்லாம், அந்த…
-
- 0 replies
- 564 views
-
-
கோத்தா வென்றதும் மஹிந்த பிரதமராக நியமிக்கப்படுவார்: 120 பேருடன் அரசாங்கம் அமையும் - அமரவீர (செ.தேன்மொழி ) தற்போதைய அரசாங்கத்தினால் அரச ஊழியர்களுக்கு எந்தவித நலனும் பெற்றுக்கொடுக்கப்பட வில்லை. புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அரச ஊழியர்கள் தொடர்பில் எந்தவிதமான சிறந்த வேலைத்திட்டமும் உள்ளடக்கப்பட வில்லை. ஆனால் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரச ஊழியர்களுக்கு பல சிறந்த கொள்கைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கோத்தாப…
-
- 0 replies
- 213 views
-
-
மனிதர்களின் மூதாதையர்கள் இரு கால்களில் நடக்க ஆரம்பித்தது எப்போது? ஹெலன் பிரிக்ஸ்பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைVELIZAR SIMEONOVSKI பரிணாம வளர்ச்சி குறித்து எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? முதன் முதலாக இரண்டு கால்களில் நடக்க ஆரம்பித்தது எப்போது, எப்படி என்று அறிந்து கொள்ளும் …
-
- 0 replies
- 340 views
- 1 follower
-
-
பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி விட்ட போதும், அந்தச் செய்திகளை விட மக்களிடம் கூடுதல் கவனத்தைப் பெற்றிருப்பது கொரோனா வைரஸ் தான். கடந்த வியாழக்கிழமை 22 மாவட்டச் செயலகங்களில் அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய ஆரம்பித்து விட்டன. வழக்கத்தில், வேட்புமனுத் தாக்கல் தொடங்கினால், ஊடகங்களில் அதுபற்றிய செய்திகளே முதன்மை பெற்றிருக்கும், எந்தக் கட்சி எந்த இடத்தில், எந்தக் கட்சியில் எந்தெந்த வேட்பாளர்கள் என்ற விலாவாரியான செய்திகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கும். வாசகர்களும், அத்தகைய செய்திகளை தேடிப்பிடித்து வாசிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், கடந்தவாரம் நடுப்பகுதி வரையில் முதலாவது கொரோனா நோயாளி இ…
-
- 0 replies
- 563 views
-
-
நினைவுச்சின்னங்கள் பூஜிக்கப்படுவதற்காக மட்டுமல்ல - உமா ஷானிகா நாம் பிரான்ஸ் சென்றிருந்த போது, 1944 இல் ஹிட்லரின் SS- படையினரால் முற்றாகத் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்ட Oradour-sur-Glane எனும் கிராமத்தையும், அதனையொட்டியிருந்த நூதனசாலையையும் போய் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு நினைவுச் சின்னமாக அந்தக் கிராமம் அழிந்த நிலையில் விடப்பட்டு, அதற்கண்மையில் அதே மாதிரியான சிறு கிராமம் நிர்மாணம் செய்யப்பட்டிருந்தது. எமது தந்தையுடன் பலகாலமாகப் புரட்சிகர மார்க்சியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்ட, நாங்கள் வில்பிரட் அங்கிள் என்றழைக்கும் வில்பிரட் சில்வாவுடன் தான் நாம் அங்கு சென்றிருந்தோம். அங்கு காட்சிப் படுத்தப்பட்டிருந்த ந…
-
- 0 replies
- 315 views
-
-
“ஒரு இனத்தை அடையாளம் காட்டக்கூடியது மொழி தமிழைச் சிதைந்துவிடாமல் பேணிக்காப்பதும் வளர்ப்பதும் நமது கடமை” “அறிவின் அதியுயர்ந்த பண்பாகப் பிறப்பதுதான் எளிமை. தன்னலமும், தற்பெருமையும், அகன்ற நற்பண்பாக எளிமை தோன்றுகின்றது. இந்த எளிமை ஒருவரை அழகான மனிதராக ஆக்கிவிடுகின்றது.” எனத் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள், அறிவில் உயர்ந்தும் எளிமையாக வாழும் மனிதர்களைப் பற்றி மிக அழகாகக் குறிப்பிடுகின்றார். அண்மையில் பிரான்ஸ் வந்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்த்துறைப் பேராசிரியர் அறிவரசன் அவர்களைப் பார்த்தபோது தேசியத் தலைவரின் இந்த வாக்கியம் தான் நினைவில் தோன்றியது. புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு பேராசிரியர் அறிவரசன் அவர்கள் அறிமுகம…
-
- 0 replies
- 613 views
-
-
‘நடக்காதென்பார் நடந்துவிடும்!’ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்- உங்களுக்கும் அலுத்துத்தான் போயிருக்கும். எதனால் என்று கேட்கிறீர்களா? உண்மை நோக்கியும் இன நன்மை நோக்கியும், நம் தலைவர்களை நான் விமர்சிக்க, விமர்சிக்க, தலைவர்கள் மீதான உங்களது ஆதரவையும் எதிர்ப்பையும் பொறுத்து, நீங்களும் ‘டென்ஷ’னாகி, ‘டென்ஷ’னாகிக் களைத்துப் போனதைத்தான் சொல்கிறேன். எனது நியாயபூர்வமான கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல், சில (அப்)பிராணிகள் என்னையும் கம்பனையும் திட்டித்திட்டி, தமது ‘தினவு’ அகற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். நான் தொட்டதால் கம்பனுக்கு வந்த வினை! தர்க்கபூர்வமாக சான்றுகளோடு நான் முன் வைக்கும் விமர்சனத்தை, எதுவி…
-
- 0 replies
- 405 views
-
-
கூட்டைத் தடுக்கும் ‘புறச்சக்தி’ * விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியே கொண்டு வருவதில், அவரை மாற்று அரசியல் தலைமையாக வெளிப்படுத்துவதில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு இருக்கும் பங்கைப் போலவே, ஈ.பி.ஆர்.எல்.எவ்.வுக்கும் கணிசமான பங்கு உள்ளது. *ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முரண்பட்டுக் கொண்டு வெளியேறி வந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ், அங்கிருந்தும் காய்வெட்டிக் கொண்டு, ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டிருந்தது. உள்ளூராட்சித் தேர்தலில் அந்தக் கூட்டணி தோல்வியைச் சந்தித்…
-
- 0 replies
- 337 views
-
-
இன்று இந்திரா காந்தி நினைவு நாள். ஆங்கில டியூஷன் முடிந்து, தெஹிவல கடற்கரைப் பக்கத்தில் இருந்து, நண்பருடன் வெள்ளவத்தை நோக்கி ரயில் பாதை மேலாக நடந்து வந்து கொண்டிருந்தோம். இரு போலீஸ் காரர்கள், கிரந்தம் விட யோசித்து, கூப்பிட்டு அரை மணி நேரம் வதை பண்ணி கொண்டிருந்தார்கள். யாழ்ப்பாணம் அடையாள அட்டை வேறு அவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது. நேரம் ஆக எமக்கு கவலை வரத் தொடங்கியது. எம்மிடம் பிளேன் டீ காசு தான் இருந்தது. அவர்களோ, காசு வெளில வருமோ என்று வதை பண்ணிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து வந்த 'அன்னாசி' விற்பவர், 'தீடிரென' நின்று தனது சிறிய ரேடியோவில் நியூஸ் கேட்டு பதட்டத்துடன் 'இந்திரா காந்தி சுடப் பட்ட' செய்தியினை அறிவித்தார். எல்லோருக்கும் …
-
- 0 replies
- 440 views
-
-
தேர்ந்தெடுக்கப்பட்ட அநீதி by vithaiJuly 23, 2021089 1 எங்களுடைய உயர்தரப்பாடத்திட்டத்தில் எழுபதுகளில் அறியப்பட்ட எழுத்தாளர் செ. கதிர்காமநாதனின் ‘வெறும் சோற்றுக்கே வந்தது’ என்ற சிறுகதை இருந்தது. கதையில் கிளிநொச்சியில் குடியேற்றப்பகுதியைச் சேர்ந்த வள்ளி என்ற சிறுமியொருத்தி தன்னுடைய வறிய வீட்டில் கிடைக்காத ‘இறைச்சி, மீன், முட்டை’ ஆகிய நல்லுணவுகளை தினமும் கிடைக்கும், என்ற கனவுடன் கொழும்பிலுள்ள பணக்கார வீடு ஒன்றுக்கு வேலைக்குச் செல்கிறாள். ஆசிரியர் இறைச்சி, மீன் , முட்டை என்பதை மீண்டும் மீண்டும் அழுத்தி அவளுடைய கனவாக விபரிக்கிறார். இப்படியாகக் கதை வளர்ந்து சென்று அவள் வேலையை விட்டு விட்டு சுதந்திரமாக தந்தையுடன் வீடு திரும்புவதாகக் கதை முடியும். பிள்ளை இறுதியி…
-
- 0 replies
- 664 views
-
-
கிறீஸ் மனிதனை நாம் மறந்திருக்க முடியாது. இரண்டு வருடங்களுக்கு முன்னதாக ஒரு சில மாதங்கள் இந்த நாட்டிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்களையெல்லாம் அலைக்கழித்த பயங்கரம். பெருந்தோட்டப்பகுதியில்தான் இது ஆரம்பித்தது. இரத்தினபுரி மாவட்டத்தில் பெண்கள் பொதுவிடங்களில் தனியே போக முடியாத அளவுக்கு அவர்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன எனச் செய்திகள் எங்களை வந்தடைந்து கொண்டிருந்த வேளையில் திடீரென யாரோ ஒரு மர்ம மனிதன் பெண்கள் இருக்கும் வீடுகளில் புகுந்து அவர்களைப் பிராண்டி விட்டு ஓடுகின்றான் என்கின்ற செய்திகள் கிளம்பத் தொடங்கின. முதலில் ஒன்றுமாக விளங்கவில்லை. ஆனால், நாம் சிந்தித்து செயலாற்ற நேரம் கொடுக்காமல் இந்த மர்ம மனிதனின் வெளிப்பாடு கடகடவென மலையகத்தில் அனேக பிரதேசங்களில் பரவி…
-
- 0 replies
- 681 views
-
-
புலிகள் பற்றி பேசி அரசியல் செய்வதைவிட, புலித்தடையை நீக்க, நீதிமன்றம் போகலாம்… October 7, 2018 1 Min Read அமைச்சர் மனோ கணேசன்.. விடுதலை புலிகள் மீண்டும் வரவேண்டும் என பகிரங்க மேடையில் பேசியதால் இன்று விஜயகலா எம்பி சிக்கலில் இருக்கிறார். ஆனால், நீதிமன்றத்துக்கு போய், புலிகளின் மீதான தடையை நீக்க சொல்லி எவரும் வழக்கு தொடரலாம். வாதங்களை முன் வைக்கலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. நீதிமன்றத்தில் போய், நீதியின் பாதுகாப்பில் இருந்தபடி, இன்று புலிகள் ஆயுத போரில் இல்லை எனவும், இலங்கையில் வாழும் சுமார் 12,000 முன்னாள் போரளிகளை முன்னிலைப்படுத்தி, அவர்கள் இன்று ஜேவீபியை போல் ஜனநாயக வழக்கு திரும்பி விட்டார்கள் எனவும் எவரும் வாதிட முடியும்.…
-
- 0 replies
- 650 views
-
-
பேரினவாத எழுச்சிக்கு உதவும் ஞானசார தேரரின் விடுதலை நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான ஆவணங்களில் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டதையடுத்து நேற்று அவர் விடுவிக்கப்பட்டிருக்கின்றார். நீதிமன்றை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அனைத்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவரை குற்றவாளியாக கண்ட மேன்முறையீட்டு நீத…
-
- 0 replies
- 667 views
-
-
முஸ்லிம்களின் பேரம்பேசலை பறித்தெடுக்கும் தேரவாத வியூகம் முஸ்லிம் சமூகத்தின் கூட்டுப்பொறுப்பை உணர்த்தி பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள், எதைச் சாதித்தனர், இந்தப்பதவி விலகல் உணர்த்திய செய்திகள் என்ன? இந்தக் கேள்விகளின் எதிரொலிகளே முஸ்லிம் அரசியல் களத்தின் எதிர்கால நகர்வுகளைக் கட்டியங் கூறப் போகின்றன முஸ்லிம் பெயர்தாங்கிய ஒரு சில இளைஞர்களின் பயங்கரவாதச் செயற்பாடுகளை ஒட்டுமொத்தமாக முஸ்லிம் சமூகத்தின் மீது திணிக்க முயன்ற, தேரவாதிகளின் பிரயத்தனங்களை, இப்பதவி விலகல்களால் முறியடிக்க முடிந்ததை மட்டும் எல்லோரும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். முஸ்லிம் எம்.பி.க்களை மீண்டும் அமைச்சரவைக்குள் உள்வாங்கும்…
-
- 0 replies
- 236 views
-
-
தேசம் முழுவதும் பரவவேண்டிய அச்சம் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஒக்டோபர் 31 , மு.ப. 11:55 தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளுக்கு ஒருபோதும் பஞ்சமிருப்பதில்லை. அநேகமாக எல்லா வேட்பாளர்களும் வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டேயிருக்கின்றனர். அவற்றில் நிறைவேற்றுவதற்கு சாத்தியமற்றவையும் உள்ளன. ஆனாலும், அவை குறித்து வாக்குறுதிகளை வழங்குவோர் அலட்டிக் கொள்வதில்லை. மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதுதான் அவர்களின் உடனடித் தேவையாகும். வாக்குறுதி என்பது, ஒரு வகையான கடனாகும். வாக்குறுதியை வழங்கி விட்டால், நிறைவேற்றியே ஆக வேண்டும். ‘கடன் அன்பை முறிப்பது போல்’, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத போது, பகைமை ஏற்படுகிறது. ‘வாக்குறுதியைப் பொறுத்தமட்டில் எல்லோரும் கோடீஸ்வரர…
-
- 0 replies
- 733 views
-
-
தற்போது கொரோனாவால் முழு உலகமே பாதிக்கப்பட்டு பயந்து அதற்கான தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது.சைனாவின் வுகான் மாகாணத்தில் ஆரம்பித்த இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதிலும் பரவிக்கொண்டிருக்கிறது.அரசாங்கம் முழு மூச்சுடன் வைரஸ் மேலும் பரவுதலை தடுக்கமுயன்றுகொண்டிருக்கிறது இதற்கு நாம் ஒத்துளைப்புதரும்வகையில் எம்மை வீடுகளில் தனிமைப்படுத்திவைத்திருப்பது மிக அவசியம் ஏனென்றால் இந்த வைரஸ் எம்மூடாகவே அடுத்தவர்களுக்கு பரவும்தன்மையைக்கொண்டது எமது அலட்சியப்போக்கால் எம் வீடு மாத்திரமல்ல ஒரு ஊரே இன் நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது எனவே இதுபோன்ற அவசரகால நிலமையின்போது சமயவழிபாடுகள் போன்றவற்றை வீட்டில் இருந்தே நாம் கடற்பிடிப்பதும் பொது இடங்களில் கூடாமல் இருப்பதும…
-
- 0 replies
- 630 views
-
-
http://youtu.be/KqRaGYd85a8 [size=5](14-11-12)» ஐ.நா. தவறு செய்தது என்பதை பிபிசி சுட்டிக்காட்டிய பிறகு எழுந்த எதிர்வினையாக தமிழக தொலைக்காட்சிகளில் வெளிவந்த செய்திகள்.[/size]
-
- 0 replies
- 639 views
-
-
ஆ.விஜயானந்த் பிபிசி தமிழுக்காக பட மூலாதாரம்,NAAM TAMILAR `தமிழ்நாட்டை தமிழர் ஆள வேண்டும்' என உரத்துக் குரல் எழுப்பும் சீமானின் தொடக்ககால அரசியல் வாழ்வுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது திராவிட இயக்க மேடைகள்தான். ஈழ விடுதலை ஆதரவுப் பேச்சுக்காக தொடர் கைதுகள், இனவாதப் பேச்சு என்ற விமர்சனம் என அனைத்தையும் தாண்டி தனக்கான கூட்டத்தைப் பேசிப் பேசியே சேர்த்தவர் சீமான். உதயசூரியன் மோகம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரணையூர் என்ற கிராமத்தில் 1966-ம் ஆண்டு சீமான் பிறந்தார். இவரது பெற்றோர் செந்தமிழன் - அன்னம்மாள். அரணையூரில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை படித்தார். ஆறாம் வகுப்பு முதல் 10 ஆம் வ…
-
- 0 replies
- 736 views
-
-
இலங்கையில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்னும் சரியாக ஒரு மாதத்தில், வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. எனினும், வடமாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகள் இன்னும் வேகம் பெறாத நிலைமையே பொதுவாகக் காணப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு கூட்டம் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்ற முக்கிய கட்சியாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உட்பட எந்தக் கட்சியும் இன்னும் தமது கொள்கைகளை வெளிப்படுத்துகின்ற தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. ஆயினும் வேட்பாளர்களும், கட்சி முக்கியஸ்தர்களும் கிராமங்களில் சிறிய அளவில் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் ஆதரவைத் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் வடமாகாணத்தின் பல பகுதிகளிலும் உள்ள மக்கள் இந்தத் தேர்தல…
-
- 0 replies
- 368 views
-
-
தொடர்பாடல் திறன், தீர்மானமெடுத்தல் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ச.சேகர் கொவிட்-19 தொற்றுப் பரவலினால் இலங்கையில் நாளாந்தம் சராசரியாக 150க்கும் மேலான மரணங்கள் பதிவாகும் நிலையில், ஒரு புறத்தில் நாட்டை முடக்குமாறு கோரிக்கைகள் சுகாதாரத் தரப்பிடமிருந்து வலுக்கும் நிலையில், மறு புறத்தில் பொருளாதாரத்தையும், நாட்கூலியை பெறும் தொழிலாளர்களின் வருமானத்தையும் கவனத்தில் கொண்டு, பொருளாதார நெருக்கடிக்கு முகங் கொடுத்துள்ள அரசாங்கத்தினால் அவ்வாறானதொரு பொது முடக்கத்துக்கு செல்லாமல், படிப்படியாக கட்டுப்பாடுகளை விதித்து, இயலுமானவரை நாட்டை திறந்த நிலையில் நடத்திச் செல்ல முற்படுவதை காண முடிகின்றது. இதில் இரவு நேர தனிமைப்படுத்தல் ஊரடங்கும் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறிரு…
-
- 0 replies
- 252 views
-
-
லஞ்சம் வாங்கியதாக, கைது செய்யப் பட்ட சுங்கத் திணைக்கள உயர் அதிகாரி ரஞ்சன் கனகசபை, தன்னை, திட்டம் போட்டு சிக்க வைத்து உள்ளனர் என சொல்கிறார். கண்டிப்ப்பான அதிகாரி என பெரும் பாராட்டுகளையும், அதே வேளை எரிச்சல், புகைச்சல்களையும் பெற்றுக் கொண்ட இந்த அதிகாரி இன்று 5 லட்சம் பிணையில் விடுவிக்கப் பட்டார். இவர் சொல்வது உண்மையாயின், தமிழர் என்பதற்காக குறி வைக்கப் பட்டாரா என்பது கேள்விக்குரியது. மறுபுறத்தே போலீசாரோ, எதுவாயினும் இவர் கையை நீட்டி காசு வாங்கினார் தானே என்கின்றனர். யாரு சொல்வது சரியாக இருக்கும்? இருந்தாலும் இலங்கை சுங்கத் திணைக்களம் லஞ்சத்துக்கு பெயர் போனது என்பது மறுக்க முடியாத உண்மை. பார்ப்போம்!!! http://www.dailymirror.lk/news/37052-t…
-
- 0 replies
- 568 views
-
-
இலங்கை ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் 21வது திருத்த சட்டவரைவு: ஒப்புதல் பெறுமா? 26 மே 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை ஜனாதிபதி வசம் காணப்படுகின்ற அதிகாரங்களை வரையறுத்தல், நாடாளுமன்ற பிரவேசத்திற்கு இரட்டை பிரஜாவுரிமையை ரத்து செய்தல் உள்ளிட்ட விடயங்கள் பலவற்றை உள்ளடக்கிய வகையில் கொண்டு வரப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21வது திருத்த சட்டவரைவை செயல்படுத்த பலர் முயற்சித்து வருகின்றனர். அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டவரைவை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்கு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி கட்சிகளின் ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. இல்லையென்றா…
-
- 0 replies
- 291 views
- 1 follower
-
-
நிரந்தர நிலைப்பாட்டுக் கோலமா? இடம்பெயர்ந்திருக்கும் ஒன்றரை லட்சம் சிங்கள மக்களையும் வடக்கு, கிழக்கில் குடியமர்த்துமாறு ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தி உள்ளது. அதற்கு அடை மொழி வைத்தால் போன்று யாழ்ப்பாணம் ரயில் நிலை யத்தில் தெற்கிலிருந்து வந்து தங்கி இருக்கும் சிங்கள மக்களை யாழ்ப்பாணத்தில் அவர்களின் சொந்த இடங் களில் குடியேற்ற வேண்டும் என்று ஹெல உறுமயவின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் வலியுறுத்தி உள்ளார். யாழ்ப்பாணம் சென்றுள்ள சிங்கள மக்களின் மீள்குடி யேற்றம் குறித்து மீள்குடியேற்றத்துக்குப் பொறுப்பான அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்திருப்பதா கவும், அவர் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லையென் றால் இவ்விடயத்தை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிவரும் என்றும் எச்…
-
- 0 replies
- 570 views
-
-
பொருளாதாரத்தில் மந்த நிலையை அடைந்து வரும் கிழக்கு மாகாணம்-மட்டு.நகரான் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழர்களின் நிலைமையென்பது மிகவும் கவலைக்குரியதாகவேயிருந்து வருகின்றது.குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலீடுகள் முன்னெடுக்கப்படாத காரணத்தினால் தமிழர்களின் பொருளாதாரம் என்பது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வளங்கள் உள்ளபோதிலும் அதனை பயன்படுத்துவதற்கான பொருளாதார வளம் இல்லாத காரணத்தினால் அந்த வளங்கள் வீண்விரயமாவதுடன் மக்களும் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையாத சூழ்நிலையே காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதானமாக காணப்படும் விவசாயதுறையினைக்கூட முழுமையாக கட்டியெழுப்பமுடியாத நில…
-
- 0 replies
- 178 views
-
-
ஜனாதிபதி தேர்தலுக்கான தினத்தை தீர்மானிக்கலாம் : மீண்டும் கூட்டரசு மஹிந்த - மைத்திரி இணைந்தால்.. : - பாலிதவின் அதிரடி கருத்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான தினத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானிக்க முடியும். மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஷவும் கூட்டிணைவார்களானால் மீண்டும் மஹிந்தவின் குடும்பத்தவர்களின் அதிகாரமே வலுக்கும். 2015 இல் மக்கள் கூட்டு அரசாங்கத்திற்கு வழங்கிய ஆணை உயிர்ப்புடன் உள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களை இணைத்து மீண்டும் கூட்டு அரசாங்கம் முன்னெடுக்கப்படும் என்று புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார வீரகேசரிக்கு…
-
- 0 replies
- 333 views
-