Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ‘காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது இல்லை’ என்று பிரபல சிந்தனையாளரும், ஆற்றல் மிக்க எழுத்தாளருமான அருந்ததிராய் வெளியிட்ட கருத்தில், எந்தக் குற்றமும் இல்லை என்பதே நமது உறுதியான கருத்து. அருந்ததிராய் மீது தேச துரோகக் குற்றச்சாட்டை ‘தேச பக்தர்கள்’ வீசுகிறார்கள். வழக்குத் தொடருவதற்கு இந்திய ஆட்சி ஆலோசித்து வருவதாக செய்திகள் வருகின்றன. அருந்ததிராய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பார்ப்பனிய இந்துத்துவ சக்திகள், பார்ப்பன ஏடுகள் கூக்குரலிடுகின்றன. காஷ்மீர் மக்கள் மீது ராணுவ ஆட்சியைத் திணித்து, அம்மக்களின் சுயநிர்ணய உரிமையை துப்பாக்கி முனையில் பறித்து வைப்பதற்குப் பெயர்தான் தேச பக்தியா என்று கேட்க விரும்புகிறோம். தேச பக்தர்களுக்கு சில கேள்விகளை முன் …

    • 0 replies
    • 800 views
  2. கடந்த வாரங்களில் ஆசியாவில் அமெரிக்காவின் தீவிர இராஜதந்திரப் பிரசாரமானது அமெரிக்க வெளியுறவுச் செயலாளரான ஹிலாரி கிளின்டனின் வார்த்தைகளில் சொல்வதானால் சீனாவுக்கு எதிரான முழு மைதானத் தடுப்பு என்கிற மட்டத்திற்குச் சென்றுள்ளது. வருங்காலப் போருக்கான சாத்தியமான களங்களாய் மேற்கு பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் எழுந்து கொண்டிருக்கின்றன. இந்தியா, இந்தோனேசியா, தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பயணங்களும் மற்றும் வியட்நாம், கம்போடியா, மலேசியா, பபுவா நியூகினி, நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு ஹிலாரி கிளின்டன் மேற்கொண்ட பயணங்களும் அமெரிக்காவின் தலைமையில் சீனாவை மூலோபாய ரீதியாய் சுற்றி வளைப்பதற்கு இருக்கும் கூட்டணிகளைப் பலப்படுத்துவதற்கோ…

  3. "கொழும்பை பற்றிக் கொள்ளும் பரபரப்பு" இலங்கை அரசியலில் கடந்தவாரம் தோன்றிய பரப்பரப்பு அடங்குவதற்கு இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் செல்லப் போகிறது. கடந்த வருடம் மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர், நவம்பர் மாத இறுதியில் இதுபோன்றதொரு பரபரப்புத் தொற்றிக் கொள்வது வழக்கம். புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர்நாள் உரை தான் அந்தப் பரபரப்புக்கான காரணமாக இருப்பதுண்டு. புலிகள் இயக்கம் ஒரு தவிர்க்கப்பட முடியாத சக்தியாக விளங்கிய காலத்தில்இ பிரபாகரனின் மாவீரர் நாள் உரையை அவதானித்து, அதுபற்றி ஆராய்வதற்காக வெளிநாட்டு இராஜதந்திர மட்டங்கள் கூட உன்னிப்பாக இருக்கும். ஆனால், இப்போது அந்த நிலை இல்லை. அதனால் ஏற்படும் வழக்கமான பரப…

  4. அண்மையில் நாலு நாடுகளுக்கு பிரயாணம் கொண்டு அங்கு நிற்கும் ஒபாமாவை அவரது உண்மையான நோக்கம் பற்றி ஒரு கட்டுரை நியூ யார்க் டைம்ஸில் வந்துள்ளது. ( எமக்கும் இது பிரயோசனமாக இருக்கும் என நம்புகின்றேன்) ========================================================= "Gone today are the artificial divisions of cold-war-era studies: now the “Middle East,” “South Asia,” “Southeast Asia” and “East Asia” are part of a single organic continuum. In geopolitical terms, the president’s visits in all four countries are about one challenge: the rise of China on land and sea." வளர்ந்து வரும் ஆசியாவின் பொருளாதாரமும் அதில் சீனாவின் வளர்ச்சியும் அந்த வளர்ச்சியை அது பொருளாதாரம் என்பதில…

  5. இன்று உலகிலே விடுதலை வேண்டிப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் நாடுகள் எனப்பல உள்ளன. இந்நாடுகள் இன்றும் தமது விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த வீர்ர்களை நெஞ்சினில் வருடாவருடம் நிறுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீர்ர்களை நினைவு கூரிவருகின்றமை தெரிந்ததே. முதலாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜேர்மனி கைப்பற்றிய பிரதேசங்களை எல்லாம் நேச நாடுகள் மீளக் கைப்பற்றிய வேளையில் ஜேர்மனியின் அரசர் இரண்டாம் ஹைகர் வில்லியம் 1918 இல் முடிதுறந்து போக ஆட்சியை. அரசு பொறுப்பேற்றது. அரசு பொறுப்பேற்ற மறுகணமே நிலைமை தலைகீழானது. ஜேர்மனியின் படைகள் திக்குத் திசை…

    • 0 replies
    • 1.2k views
  6. புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளின் சுதந்திரமான நடமாட்டம் தொடர்பில் அமைச்சர்களும், அதிகாரிகளும் வெவ்வேறான கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். முன்னாள் போராளிகளை சமூகத்தில் எவ்வாறு இணைத்துக் கொள்வது என் பது தொடர்பில் பொதுமக்களுக்கும் அரச அதிகாரிகளுக்கு மதத் தலைவர்களுக் கும் இராணுவம் பாடம் நடத்தி வருகையில் இந்த முரண்பாடு வெளிவந்துள்ளது. புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படும் முன் னாள் போராளிகள் விடுவிக்கப் பட்ட பின்னர் சமூகத்தில் சுதந் திரமாக வாழ முடியும் என்றும் இவர்களுக்கு எவரும் இடையூறு விளைவிக்க முடியாது என்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். ஆனால், யாழ். நகரில் …

    • 0 replies
    • 794 views
  7. Started by ஈசன்,

    .

    • 7 replies
    • 1.2k views
  8. ஆசியா முழுவதும் தனது பிரசன்னத்தை அதிகரிக்க அமெரிக்கப் படைத்தரப்பு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க படைத்துறை அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ், அவுஸ்திரேலிய படைத்தரப்பினருடன் உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுடன் படைத்தரப்பு ஒத்துழைப்பை கட்டி எழுப்புவதன் மூலம் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கப் படைத்தரப்பின் பங்களிப்பை விரிவுபடுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். மெல்போர்னுக்கு கடந்த சனிக்கிழமை விஜயம் செய்த அமெரிக்க படைத்துறை அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ் விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் ஊடகவியலாளர் மத்தியில் இக் கருத்துகளைக் கூறியிருக்கின்றார். இவர் மேலும் கூறி…

  9. பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் யூனியன் சொசைற்றியில் உரையாற்றுவதற்காக இந்தமாத இறுதியில் லண்டன் செல்லவிருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ. ஆனால் அவர் தனது பயணத்தை திடீரென ஒத்திவைத்துள்ளார். இந்த விவகாரம் இப்போது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர்க்குற்றச்சாட்டுகளின் பேரின் லண்டனில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தினாலேயே, இந்தப் பயணத்தை அவர் ரத்துச் செய்திருப்பதாக வெளியான செய்திகள் தான் இந்தப் பரபரப்புக்கான காரணம். இந்தியாவின் ரைம்ஸ் ஒவ் இந்தியா ஊடகம் தான் முதலில் இந்த விவகாரத்தைக் கிளப்பி விட்டது. இப்போது இது சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் முக்கிய செய்தியாகி விட்டது. இது இலங்கை அரசாங்கத்தைப் பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்திய…

    • 0 replies
    • 992 views
  10. ஆயுதப் போராட்டம் மெனிக்கப்பட்ட பின் தமிழ்மக்கள் மிகவும் நிதானமகவும், அரசியல் விழிப்புணர்ச்சியோடும் செயலாற்ற வேண்டும் என்றும், அவ்வாறான செயற்பாடுகள் மூலமே சர்வதேசத்தினூடான ஆதரவோடு எமக்கான விடுதலையை முன்னெடுக்க முடியுமென்றும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தெரிவித்தார். இந்த நேர்காணலில் கலந்து கொண்ட கஜேந்திரகுமார் அவர்கள் பலதரப்பட்ட விடையங்களையும் பகிர்ந்துகொண்டார். அதில் முக்கியமாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலமாக இருந்த காலத்தில் தமிழர்களின் பலம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம், முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின் தமிழர்களின் அவல நிலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவு, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் …

    • 0 replies
    • 996 views
  11. அமெரிக்க நாடாளுமன்றத்துக்கான இடைக்கால தேர்தல் வாக்களிப்பு செவ்வாயன்று ஆரம்பமாகியுள்ளது. இதில் ஆளும் ஜனநாயகக் கட்சி பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அமெரிக்க நாடாளுமன்றத்துக்கான இடைக்காலத் தேர்தல் மேடையில் விவாதத்துக்கு எடுக்கப்படும் விடயங்கள் பெரும்பாலும் உள்ளூர் விவகாரங்களாகவே இருக்கின்ற போதிலும், அந்த தேர்தலின் முடிவுகள் அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த இடைக்காலத் தேர்தலைப் பொறுத்தவரை அங்கு தற்போது நிலைமை அதிபர் பராக் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சிக்கு எதிராகவே இருக்கின்றது. பெரும்பாலும் பிரதிநிதிகள் சபையில் தனது ஆதிக்கத்தை ஜனநாயகக் கட்சி இழக்கும் என்றே பெரும்பாலான ஆய்வாளர்கள் கூறு…

  12. முஸ்லிம் காங்கிரஸ் காலத்துக்குக் காலம் ஆபத்தான பல கண்டங்களுக்கு ஆளாகியிருக்கிறது! அதுவும் ஹக்கீம் தலைவரான பிறகு மு.கா. நிறையவே கண்டங்களைக் கண்டிருக்கின்றது. அவைகளில் சிலவற்றிலிருந்து அது - தப்பிப் பிழைத்திருக்கிறது, சிலவற்றுக்குப் பலியாகியிருக்கிறது! அந்தவகையில், மு.கா. மிக அண்மையிலும் ஒரு கண்டத்தைச் சந்தித்திருந்தது. 18 ஆவது திருத்த சட்டத்துக்கு மு.கா. ஆதரவு வழங்காது போயிருந்தால், அந்தக் கண்டம் மு.கா.வை பலிகொண்டிருக்கும். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆளுந்தரப்போடு இணைந்திருப்பார்கள். கட்சி மீண்டும் உடைந்து பலவீனப்பட்டிருக்கும். நல்லவேளை, சாதுரியமாக யோசித்ததால் - ஹக்கீம் தன்னையும், கட்சியையும் கண்டத்திலிருந்து காப்பாற்றி விட்டார். கண்டங்கள் என்பவ…

    • 0 replies
    • 729 views
  13. அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளில் இந்தியா தன் நிலையை இந்த மூன்று தேசங்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளவேண்டும்: அமெரிக்கா, சீனா, ஜப்பான். பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளின்படி, இந்த மூன்று தேசங்களுக்கு அடுத்தபடியாக இந்தியா மொத்த உற்பத்தியில் (Gross Domestic Product - GDP) நான்காவதாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த மூவரில் யாரோடு இந்தியா நெருக்கமான உறவு கொள்ளமுடியும்? அதன்மூலம் பயன் பெறமுடியும்? அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளில், இந்த நான்கு தேசங்களுள் இந்தியாவில்தான் ஏழைமை அதிகமாக இருக்கும். படிப்பறிவற்ற நிலை அதிகமாக இருக்கும். உள்நாட்டுக் குழப்பங்கள் அதிகமாக இருக்கும். ஊழல் அதிகமாக இருக்கும். ஆனால் முன்னேற்றத்துக்கும் புதுமைக்கும் வாய்ப்புகளும…

    • 8 replies
    • 1.3k views
  14. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்குமுன், தமிழர்களையும் இணைத்துக்கொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விருப்பத்தை வெளிவிவகார அமைச்சரான ஜி.எல்.பீரிஸ் அண்மையில் புதுடில்லிக்கு வந்தபோது மீண்டும் வலியுறுத்திக் கூறினார். இதையேதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழாவில் கலந்துகொள்வதற்காக புதுடில்லி வந்தபோது இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிடமும் கூறியிருப்பார் என எடுத்துக்கொள்வோம். மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டபின் இரு தடவைகள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் பற்றியும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார். சென்னையில் மருத்துவ சிகிச்சை பெற்ற தமிழ் தேசியக…

  15. அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் என்ற தகவல் தான் தற்போது ஆசிய கண்டத்தின் பரபரப்பான செய்தியாகியுள்ளது. அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்கும் முன், முந்தைய அதிபர் புஷ்ஷை காட்டிலும் இந்திய, அமெரிக்க உறவிலும், இந்திய, அமெரிக்க அணு ஒப்பந்த விஷயத்திலும் அதிக ஆதரவுடன் இருப்பார் என்று பெரும்பாலான இந்தியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இந்தியாவை காட்டிலும், சீனாவுடனான உறவை பலப்படுத்துவதிலேயே ஒபாமா அதிக ஆர்வம் காட்டி வந்தார். இது, அவரை மிகவும் எதிர்பார்த்த இந்தியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அடுத்து வரும் ஆண்டுகளில், ஒபாமாவின் செயல்பாடுகள் எப்படி இருக்குமோ என்று ஐயப்பட்டனர்.ஹிலாரியின் விஜயத்தால் திருப்பு முனை: அடுத்தடுத்து நடந்த பல ச…

    • 0 replies
    • 748 views
  16. உலகில் பரப்பளவு ரீதியாக 121ஆவது இடத்தில் உள்ள நாடு இலங்கை. ஆனால் பாதுகாப்புக்காக அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 60 ஆவது இடம். இது 2009ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களின் அடிப்படையிலான நிலைமை. அடுத்த வருடம் இலங்கை இந்தப் பட்டியலில் மேலும் முன்னேற்றம் காணப்போகிறது. 2009ஆம் ஆண்டை விடவும் 2010ஆம் ஆண்டில் இலங்கையின் பாதுகாப்புச் செலவு 2,500 கோடி ரூபாவினால் அதிகரித்திருந்தது. அடுத்த வருடம் பாதுகாப்புச்செலவு 1,300 கோடி ரூபாவினால் அதிகரிக்கப்போகிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையின் பாதுகாப்புச் செலவினம் கிட்டத்தட்ட 3,800 கோடி ரூபாவினால் அதிகரிக்கின்ற நிலையில், இந்தப் பட்டியலில் இலங்கை மேலும் முன்னேறும் வாய்ப்புகள் அதிகம். உலகில் பரப்பளவு ரீதியாக 121 ஆவத…

    • 0 replies
    • 577 views
  17. 'காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடிப் பிடிப்பது உந்தன் முகமே' என்று பாடல் வரிகளில் பனியின் இதம், 'கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ் சாபம்' என்று இந்திய அரசைச் சாடும் கவிதையில் வெடிகுண்டு வீரியம்... நெருப்பும் மழையும் நிரம்பியவை தாமரையின் எழுத்துக்கள். கவிஞர், பாடலாசிரியர், பெண்ணியவாதி, மரண தண்டனையை ஒழிக்கக் கோரும் மனித உரிமைப் போராளி என இந்தத் தாமரைக்கு இதழ்கள் பல! "எனக்கு இலக்கியம் எப்படி முக்கியமோ... அரசியல் அதைவிட முக்கியம்!" என்கிறார். "சினிமா என்பதே ஆணாதிக்கம் நிறைந்த சூழல்தான். பெண்ணியம் பேசும் உங்களால், சுதந்திரமாக இயங்க முடிகிறதா? பெண்ணாக நீங்கள் ஏதேனும் அவதிகளைச் சந்தித்தது உண்டா?" "திரைப்படத் துறை மட்டும்தான் ஆணாதிக்கம் நிறைந்ததா? அரசாங்கம், ந…

    • 0 replies
    • 540 views
  18. ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியா ஒருங்கிணைந்த இந்தியா என்பது பல்வேறு மொழி பேசும் நாடுகளின் தொகுப்பு. நிறம், உடல் அமைப்பு ஒற்றுமை என்னும் இன அடையாளத்தால் அங்கு வாழும் மக்களை இந்தியர், நிலத்தை இந்தியா என்கிறோம், அதிலும் சில சிக்கல்களாக வட எல்லையை ஒட்டிய நிலப்பரப்பு மக்கள் சீனர்களின் முக அமைப்பை ஒத்த மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர்கள். அனைத்து வகையான மொழி பேசுபவர்களும் இணைந்து ஒரு நாடாக இருக்கலாம் என்று முடிவு செய்ததது ஒரு பெரும் நிலப்பரப்பின் கீழ் பிற இன ஆளுமை இல்லாமல் இணைந்திருப்பது தான் பாதுகாப்பானது என்கிற நம்பிக்கை. இந்தியா என்பது ஒரே நாடு என்றாலும் அதன் மாநில மொழி பேசுபவர்களுக்கும் சம உரிமை, அவர்களின் அடையாளங்களும் பேணப்படும் என்பது தான் ஒவ்வொரு இந்தியனின் நம்பிக்கை.…

  19. 'சீன எல்லைக்குள் அருணாசலப் பிரதேசம்'-அதிர்ச்சி தரும் ஆப்பிள் இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசம் சீனாவுக்குச் சொந்தமானது என்று குறிப்பிடும் வகையில் தனது ஐபோனில் புதிய வரைபடத்தைக் காட்டியுள்ளது ஆப்பிள் நிறுவனம். வட பகுதியான இமயமலையில் அமைந்துள்ள அருணாசலப் பிரதேசத்தை சீனா பல ஆண்டுகளாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் கண்டுகொள்ளாத சீனா, அருணாசலப் பிரதேச எல்லையில் ஏராளமான ராணுவ படைகளை குவித்துள்ளது. அடிக்கடி சீன ராணுவம் இந்த எல்லைக்குள் ஊடுருவி அங்குலம் அங்குலமாக நிலத்தை அபகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் இந்தியாவும் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது. இந் நிலையில் சர்வதேச அளவில் கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இருக்…

    • 11 replies
    • 1.4k views
  20. நிரந்தர நிலைப்பாட்டுக் கோலமா? இடம்பெயர்ந்திருக்கும் ஒன்றரை லட்சம் சிங்கள மக்களையும் வடக்கு, கிழக்கில் குடியமர்த்துமாறு ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தி உள்ளது. அதற்கு அடை மொழி வைத்தால் போன்று யாழ்ப்பாணம் ரயில் நிலை யத்தில் தெற்கிலிருந்து வந்து தங்கி இருக்கும் சிங்கள மக்களை யாழ்ப்பாணத்தில் அவர்களின் சொந்த இடங் களில் குடியேற்ற வேண்டும் என்று ஹெல உறுமயவின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் வலியுறுத்தி உள்ளார். யாழ்ப்பாணம் சென்றுள்ள சிங்கள மக்களின் மீள்குடி யேற்றம் குறித்து மீள்குடியேற்றத்துக்குப் பொறுப்பான அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்திருப்பதா கவும், அவர் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லையென் றால் இவ்விடயத்தை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிவரும் என்றும் எச்…

    • 0 replies
    • 569 views
  21. தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் பொருளாதார நலன்கள் போர் ஏற்படுத்திய காயங்களை ஆற்றும் அளவுக்கு வலிமையானதல்ல. அதற்கும் அப்பால் செல்ல வேண்டும் என்பதே அமெரிக்காவின் ஆலோசனை அவ்வப்போது அமெரிக்கா வெளியிடும் கருத்துகள் இலங்கை அரசாங்கத்தைப் பெரிதும் சீற்றமடையச் செய்வது வழக்கம். குறிப்பாக அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் போன்றவர்களின் கருத்துகளுக்கு எப்படியாவது இலங்கை அரசிடம் இருந்து பதிலடி ஒன்று வந்து விடும். அண்மையில் றொபேட் ஓ பிளேக் இலங்கை வந்திருந்த போது, 17வது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து வெளியிட உள்நாட்டு விவகாரத்துக்குள் அவர் தலையிடுவதாகக் கூற…

  22. ஒரு கைதியைச் சுற்றிச்சுழலும் அரசியல் விளையாட்டுக்கள் [ தினக்குரல் ] - [ Oct 12, 2010 04:00 GMT ] இலங்கையின் இன்றைய அரசியல் வெலிக்கடைச் சிறையில் இருக்கும் கைதியொருவரின் கதியுடன் தொடர்புடைய நிகழ்வுப்போக்குகளினால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. 16 மாதங்களுக்கு முன்னர் "உலகின் தலைசிறந்த இராணுவத் தளபதி" என்று புகழ்ந்துரைக்கப்பட்ட சரத்பொன்சேகா என்ற அந்தக் கைதி இன்று 0/22023 என்ற இலக்கத்தை மாத்திரம் அடையாளக் குறியாகக்கொண்டு கடூழியச் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இலங்கை இராணுவத்தின் 6 தசாப்தகால வரலாற்றில் சேவையில் இருந்தவேளையிலேயே ஜெனரலாக தரமுயர்த்தப்பட்ட முதல் இராணுவ அதிகாரியென்ற பெருமைக்குரியவராக விளங்கிய பொன்சேகா சிறைச்சாலையில்…

    • 0 replies
    • 772 views
  23. 1) பொருளாதாரத் துறையில், சீனாவும் ஜப்பானும் முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளாகும். ஜப்பான் தொடர்ந்து 10 ஆண்டுகளாக, சீனாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக விளங்கிவருகின்றது. ஜப்பானின் 2வது பெரிய வர்த்தக நாடாகவும் 2வது பெரிய ஏற்றுமதிச் சந்தையாகவும் சீனா திகழ்கின்றது. 2) வரலாற்றை அணுகும் பிரச்சினை: 2001ஆம் ஆண்டு முதல், ஜப்பானில், வரலாற்று உண்மையைப் பொருட்படுத்தாமல், வரலாற்றுப் பாட நூலைத் திருத்தி, ஜப்பான் சீனாவை ஆக்கிரமித்த வரலாற்று உண்மையைத் திரித்துப்புரட்டும் நிகழ்ச்சிகளும், ஜப்பானிய தலைமையமைச்சர் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நிகழ்ந்தன. இவை, சீன-ஜப்பானிய உறவுக்குக் கடும் தொல்லையை ஏற்படுத்தியுள்ளன. 3) தைவான் பிரச்சினை: ஜப்பானிய-தைவான் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.