நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
-
- 0 replies
- 580 views
-
-
இலங்கைக்கு எதிராக ஆஸி. செனற்சபையில் பிரேரணை இலங்கையின் யுத்தக் குற்றங்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய செனற் சபையில் எதிர்வரும் 21 ஆம் திகதி பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஆஸியின் கிறீன் கட்சியைச் சேர்ந்த செனட்டர் சரா ஹன்சன் யங் இப்பிரேரணையை அங்கு சமர்ப்பித்து உரையாற்ற உள்ளார். இலங்கையின் யுத்தக் குற்றங்களுக்கு எதிரான ஆதாரங்களை அவர் செனற்சபைக்கு சமர்ப்பித்து இலங்கைக்கு எதிரான சர்வதேச நீதி விசாரணைக்கு ஆஸ்திரேலியா ஐ.நா சபையில் ஆதரவு வழங்க வேண்டும் என்று அப்பிரேரணையில் கோருவார். இவரின் இந்நடவடிக்கைக்கு கிறீன் கட்சிக்கான தமிழர்கள் அரசியல் அமைப்பு பேராதரவு வழங்க முன்வந்துள்ளது. http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=444…
-
- 0 replies
- 682 views
-
-
100,000 ரூபாவுக்கு மேற்பட்ட வருமானம் பெறுவோருக்கும் வருமான வரி! By T. SARANYA 12 OCT, 2022 | 04:49 PM (நா.தனுஜா) அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித்திருத்தச் சட்டமூலத்தின் பிரகாரம் மாதாந்தம் குறைந்தபட்சம் 100,000 ரூபாவுக்கு மேற்பட்ட வருமானம் பெறுவோர்கூட வருமான வரியைச் செலுத்தவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருப்பதுடன், இதன்விளைவாக 20 சதவீதமான வரிவருமானத்தை நாட்டுக்கு ஈட்டித்தரும் தனிநபர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடக்கூடிய சாத்தியப்பாடு உயர்வடைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான உள்நாட்டு இறைவரித்திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் …
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
-
ஒருநாள் கப்டன் லலித் ஹேவா என்னை அழைத்தார். மண்வெட்டியை விரைந்து எடுத்துவருமாறு கட்டளையிட்டார். அவர் குறிப்பிட்டபடியே மண்வெட்டியை எடுத்துக் கொண்டு அவர் இருக்கும் இடம் நோக்கி நகர்ந்தேன். நான் அவ்விடத்தை அடைந்தபோது, அங்கு ஆடையின்றி பெண் ஒருவர் நிர்வாணக் கோலத்தில் நின்றார். கப்டன் ஹேவா அந்தப் பெண்ணை மானபங்கப்படுத்தினார். பின்பு நான் எடுத்துவந்த மண்வெட்டி மற்றும் அங்கிருந்த இன்னும் சில ஆபத்தான பொருள்களைக் கொண்டு அந்தப் பெண்ணையும் அவருடைய துணைவரையும் தாக்கிக் காயப்படுத்தினார்.இருவரும் அந்த இடத்திலேயே சாவடைந்தனர்.அவர்கள் இருவரும் முன்பு முகாமுக்கு அழைத்துவரப்பட்டவர்கள்.” …
-
- 0 replies
- 856 views
-
-
வருடங்கள் வெகுவாகவே உருண்டோடி விடுகின்றன. இக்காலகட்டத்தில் எதனை நாம் சாதித்தோம் எம்பதை வைத்தே அவ் வருடத்தின் வெற்றி, தோல்வியை நிர்மாணிக்க முடியும். தமிழீழ விடுதலையை மூச்சாக சுமந்து மாண்டவர்களின் கனவுகள் அனைத்தையும் சிங்கள ஏகாதிபத்திய அரசின் இராணுவ கட்டமைப்பு மே 2009-இல் அழித்துவிட்டதாகத் தம்பட்டம் அடித்தது. மாவீரர்கள் என்பவர்கள் மரணத்தையும் வென்றவர்கள் என்பதை சிங்கள அரசுகள் உணரவில்லை. புனிதமானவர்கள் எப்பொழுதுமே மக்களுடன் வாழ்வார்கள். அய்யன் வள்ளுவர், புத்தர் போன்ற மகான்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் இறந்திருந்தாலும் அவர்களைப் பூசித்து வழிபடுகிறார்கள் பல கோடி மக்கள். ஆகவே இப்புனிதர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக அவர்களின் குறிக…
-
- 0 replies
- 606 views
-
-
பொருளாதாரத்தை அடியோடு இல்லாதொழிக்கவே தாக்குதல் ; அரச பயங்கரவாதம் தலைதூக்குமோ என அச்சம் - பாதிக்கப்பட்டவர்கள் அங்கலாய்ப்பு ( களத்திலிருந்து எம்.டி. லூசியஸ், வீ.பிரியதர்சன் ) இரத்தக்கறை படிந்த மரண வேதனைகள் நிறைந்த அந்த '21 ஆம் திகதி" இன்னும் நினைவில் இருந்து நீங்கவில்லை. பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் புதையுண்ட இடங்களில் இன்னும் புற்கள் கூட முளைக்கவில்லை. அதற்குள் இனவாதம், மதவாதம், துவேஷம், வன்முறைகள் என நாடே அதாளபாதாளத்துக்குள் சென்றுக்கொண்டிருக்கின்றது. உயிர்த்த யேசுவின் பெருநாள் அன்று பல அப்பாவிகள் கொல்லப்பட்டாலும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் ஒவ்வொரு சொல்லுக்கும் கட்டுப்பட்டு கிறிஸ்த்தவர்கள் அமைதி காத்து வந்த…
-
- 0 replies
- 399 views
-
-
அம்மாவின் கருத்தையும் கேளுங்க | தமிழ் வீரப்பெண்கள் இவர்கள் | srilanka | tamil இன்றைய அரசியலோடு தொடர்புடைய உரையாடலாக இருப்பதால் இணைத்துள்ளேன்.புலத்திலே எமது பேரப்பிள்ளைகள் வரை வசதியான வாழ்வுக்கு நாம் தயாராகிவிட்டுள்ள சூழலில் தாயத்திலே அன்றாடம் உழைத்துவாழும் ஒரு அன்னையின் பார்வை. நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
- 0 replies
- 355 views
-
-
சஜித் பொருத்தமானவரா? பேராசிரியர் மா.செ. மூக்கையா இலங்கையில் தற்போதைய அரசாங்கம் தொடர்பில் பெரும்பாலான மக்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த மாயைகளிலிருந்து அவர்களை விடுவித்து வெளிக் கொண்டு வருவதற்கும் வாக்காளர்களை தம் பக்கமாகக் கவருவதிலும் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. சராசரி பொதுமக்கள் மத்தியில் நாட்டின் அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் சட்டச் சீர்திருத்தங்கள், நிலைமாற்றத்திற்கான நீதி, வெளிநாட்டுக் கொள்கைகள் என்பன பற்றி பெரும் அக்கறை காணப்படவேண்டும் என்றோ மற்றும் அவற்றின் உள் தாற்பரியங்கள் பற்றி சரியாக விளங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்றோ பெருமளவு எதிர்பார்க்க முடியாது. 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது மக்களிடம் தாம் நாட்டில் ஊழலற்ற…
-
- 0 replies
- 329 views
-
-
ஜிரோமன் கிமுரா - பிறந்த நாள் 19-04-1897 http://www.youtube.com/watch?v=ed_xWgbbEqM
-
- 0 replies
- 641 views
-
-
-
- 0 replies
- 396 views
-
-
இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஆண்டாக அமையும் என்று கருதப்படும் நிலையில்... இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும், வடக்கை அபிவிருத்தி செய்வதற்கும், தம்முடன் இணைந்து பணியாற்ற முன்வருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் வரவு - செலவுத் திட்ட விவாதத்தின் நிறைவில் பதிலுரை ஆற்றியபோதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். கூடவே இன்னொரு விடயத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாடுகளிடம் தீர்வைத் தேடித் திரிய வேண்டாம் என்றும், உள்நாட்டில் தீர்வைப் பெறுவதற்கு முன்வருமாறும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதுபோன்று ஜனாதிபதி மஹிந்த ராஜப…
-
- 0 replies
- 426 views
-
-
மீளவும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை; மலேசியாவில் தவிக்கும் அகதிகள் கண்ணீர் மலேசியப் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு மலேசிய முகாம்களில் தவித்துக் கொண்டிருக்கும் 75 இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பில் 60 நாட்கள் ஆகியும், இதுவரை எந்த முடிவும் எட்டப்படாமல் தொடர்ந்து இருட்டறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களினுடைய கோரிக்கையாக 'எங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் நாட்டுக்கு அனுப்புங்கள்' என்று உண்ணாவிரதம் இருந்தும், அதற்கான பலன் கிடைக்கவில்லை. அதன் பிறகு, கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று மலேசிய அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை அதற்கான முயற்சிகள் எடுக்கவில்லை.நோர்வே, கனடா போன்ற நாடுகள், இவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, போலி முகவர்கள் மூலம் வந்தவர்க…
-
- 0 replies
- 637 views
-
-
சிறிலங்கா இந்திய பொருளாதார உதவியில் பொருளாதார நெருக்கடியினை எதிர்கொள்ளவதைத் தவிர வேறுவழியில்லாதநிலையில் இந்தியாவிடம் இருந்து கடனுதவி எரிபொருள் உதவி, அரிசி உதவியென தொடர்ச்சியாகப் பொருளாதார உதவிகளைப் பெற்று தான் வாழும் நிலை வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக செப்டெம்பர் மாதமளவில் இலங்கை ரூபாவின் வீழ்ச்சியால் இந்திய ரூபாவை இலங்கை பயன்படுத்த வேண்டி வருமென இலங்கையின் முன்னாள் கணக்காளர் நாயகம் காமினி விஜேயசிங்க மே 27இல் செய்த எச்சரிப்பும், . அத்துடன் இந்தியா வழங்கும் கடன்களை திருப்பிச் செலுத்த இயலாத நிலையில் நாட்டில் உள்ள துறைமுகங்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவுக்கு வழங்க வேண்டிய பாரதூரமான நிலை ஏற்படும் என்னும் அவருடைய எதிர்வு கூறலும், உண்மையாக்கக் கூடிய முறையிலேயே, மேலும் 5…
-
- 0 replies
- 208 views
-
-
ஆத்ம திருப்தியை மட்டும் தந்த பாத யாத்திரை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் மஹிந்த ராஜபக்ஷ அணியினர், கடந்த வியாழக்கிழமை பேராதனை கெட்டம்பே விஹாரையிலிருந்து கொழும்புக்கு ஐந்து நாள் பாத யாத்திரை ஒன்றை ஆரம்பித்தனர். பாத யாத்திரை என்னும் போது தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களுக்கு 1957 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன மேற்கொண்ட பாத யாத்திரையே ஞாபகத்துக்கு வரும். 1956ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டத்தை அறிமுகப்படுத்திய அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, அதனால் மனமுடைந்த தமிழ்த் தலைவர்களை சமாதானப்படுத்த தமிழர்களின் சில உரிமைகளைப் பற்றி, அப்போதைய தமிழரசுக் கட்சியின் த…
-
- 0 replies
- 282 views
-
-
நேற்று முன்தினம் ஐநா செயலர் பான்கி மூன் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்திருந்தார். பான்கிமூனின் யாழ்ப்பாண வருகையையொட்டி யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள், இதுவரைகாலமும் மீள் குடியேற்றம் செய்யப்படாது முகாம்களில் வசிக்கும் மக்கள் எனப் பெருமளவானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது எமது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு மக்கள் கொடுத்த மரியாதையை இந்தக் காணொளிமூலம் நீங்களும் அறிந்துகொள்ளுங்கள். http://thuliyam.com/?p=40139
-
- 0 replies
- 304 views
-
-
சுமார் 1900 வருடங்கள் அகதிகளாக, அடிமைகளாக உலகம் முழுவதும் பரவி வாழ்ந்து வந்த யூத இன மக்களால் தங்களுக்கென்று ஒரு தேசத்தை எவ்வாறு அமைத்துக்கொள்ள முடிந்தது? தமது விடுதலையை இஸ்ரேலியர்கள் எவ்வாறு பெற்றுக்கொண்டார்கள்? தமது விடுதலைக்காக அவர்கள் அமைத்த வியூகங்கள் என்ன? அவர்கள் கடைப்பிடித்த வழிமுறைகள் என்ன? – இவை பற்றித்தான் இந்தத் தொடரில் நாம் விரிவாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். இஸ்ரேல் தேசம் என்பது இஸ்ரேலியர்களை மிக மோசமாக விரோதிக்கின்ற அரபு நாடுகளை அயல்நாடுகளாகக் கொண்டுள்ளது. எகிப்து, யோர்தான், லெபனான், சிரியா என்று இஸ்ரேலை விழுங்கி ஏப்பமிட்டுவிடத் துடிக்கும் நாடுகளை தனது அயல் நாடுகளாகக் கொண்டு, எந்த நேரத்திலும் ஆபத்துக்களை எதிர்கொண்டபடி இருக்கின்ற ஒரு தேசம்தான் இஸ்ரேல்…
-
- 0 replies
- 574 views
-
-
வருமானங்கள் இல்லாமல் போவதால், மக்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்கின்றார்கள் – அகிலன் கதிர்காமர் வருமானங்கள் இன்றி மக்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்கிறார்கள்: கொரோனாவும் அதன் பொருளியல் சமூக தாக்கங்களும் தொடர்பாக யாழ் பல்கலைக் கழகத்தின் சமூகவியல் துறை மூத்த விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் உயிரோடைத் தமிழின் தாயகக்களம் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியின் முக்கிய பகுதிகள் இலங்கையின் பொருளாதாரத்தில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் கேள்வி ? இலங்கையின் பொருளாதாரத்தில் கொரோனா எவ்வாறான பாதிப்பைக் கொடுத்திருக்கின்றது? பதில் ! இலங்கையின் பொருளாதாரத்தில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம்: ஒன்றரை வருடத்திற்கு முன்பு கொரோனா அனர்த்தத்துடன், எங்கள் முக்கியமான துறைகள், அதாவது…
-
- 0 replies
- 260 views
-
-
ஆசிரியைகள் கலாச்சாரக் காவிகள்? நிலாந்தன். கடந்த ஏப்ரல் மாதம் அரசாங்கம் வெளியிட்ட 05/2022ஆம் இலக்க சுற்றுநிருபத்தின்படி அரச ஊழியர்கள் தமக்கு இலகுவான ஆடைகளை அணியலாம் என்று கூறப்பட்டிருந்தது.அதை மேற்கோள் காட்டி இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவராகிய ஸ்டாலின் கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி கல்வி அமைச்சுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.அதில் அவர் ஆசிரியர்களும் குறிப்பாக ஆசிரியைகளும் தமக்கு இலகுவான ஆடைகளை அணிய அனுமதிக்கப்பட வேண்டும் என்று கேட்டிருந்தார்.ஆனால் மகா சங்கத்தைச் சேர்ந்த பிக்குமார் ஒரு தொகுதியினர் அதற்கு எதிர்ப்பு காட்டியதினையடுத்து கல்வி அமைச்சு அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது. ஏனைய அரசு ஊழியர்களைப் போலன்றி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரிகள்…
-
- 0 replies
- 278 views
-
-
நெடுமாறனின் அறிவிப்பினால் யாருக்கு பயன்? February 24, 2023 — வீரகத்தி தனபாலசிங்கம் — விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் கடந்த வாரம் கூறியது நிதானமாக சிந்திக்கக்கூடிய எவரையும் பரபரப்புக்கோ குழப்பத்துக்கோ உள்ளாக்கியிருக்க முடியாது. இதற்கு முன்னரும் சில தடவைகள் அவர் அவ்வாறு கூறியிருந்தார். கடந்த திங்கட்கிழமை தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நெடுமாறன் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்புக்கு பிறகு இந்திய ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது அவர் 2010 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் செய்தியாளர்கள் மத்தியில் முதற்தடவையாக பிரபாகரன் உயிருடன் இருப்பதாக க…
-
- 0 replies
- 332 views
-
-
இராணுவ சின்னங்களும் நல்லிணக்கத்தின் தேவையும் வடக்கில் உள்ள இராணுவச் சின்னங்களை அகற்றுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளமை தென்பகுதியில் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. பல்வேறு தரப்பினரும் முதலமைச்சரின் கோரிக்கை தொடர்பில் தமது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். வடக்கில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச்சின்னங்கள் சிங்கள மேலாதிக்கத்தை எடுத்துக்காட்டுவதாக இருப்பதால் அவை எமது நல்லெண்ணத்திற்கும் சமாதானத்திற்கும் இடையூறாக உள்ளன. இதனால் அதனை அகற்றினால் கூடியளவான சமாதான சூழலை ஏற்படுத்த முடியும் என்று வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சுட்…
-
- 0 replies
- 640 views
-
-
துப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தம் தொடர்கிறது…. October 20, 2018 இன்றைய இந்த நிகழ்வைத் தலைமை தாங்கி நடாத்திக் கொண்டிருக்கின்ற யாழ் பல்கலைக்கழக அரசறிவியற்துறை தலைவர் கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் அவர்களே, அரசியல் ஆய்வாளர் திரு.நிலாந்தன் அவர்களே, கௌரவ வடமாகாணசபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் அவர்களே, ஜெரா-ஊடகவியலாளர் திரு.து.ஜெயராஜ் அவர்களே, கிழக்கு மாகாண முன்னாள் காணி ஆணையாளர் திரு.க.குருநாதன் அவர்களே, சட்டத்தரணி திரு.ஜே.பி.ஏ.ரஞ்சித்குமார் அவர்களே, ஏனைய சிறப்பு அதிதிகளே, சகோதர சகோதரிகளே! இன்றைய இந்த உரையரங்கம் நிகழ்விலே ஒவ்வொரு துறைசார்ந்த விற்பன்னர்களும் வேறு வேறு தலைப்புகளின் கீழ் தமது ஆய்வு உரைகளை சிறப்பாக முன்னெடுத்து அ…
-
- 0 replies
- 516 views
-
-
ஈழத் தமிழர் நில மீட்ப்பு போராட்டத்தில் திரு வினேஸ்வரனைப் பலப்படுத்துவோம். தமிழர் வாக்கு பலத்தில் ஆட்ச்சிக்கு வந்தவர்களது உள் முரண்பாடுகளைக் கையாண்டு ரனிலைத் தனிமைப் படுத்திக் காரியமாற்றுவது அவசியம். ரணில் அடுத்த தேர்தலில் பிரதமர் பதவியை குறி வைத்திருப்பதால் தமிழருக்கு விட்டுத்தராத வகுப்புவாத நிலைபாடு எடுக்கிறார். ஆனால் ஜனாதிபதிக்குத் தேர்தலில் தமிழர் ஆதரவு அவசியம். இந்த முரண்பாட்டை சரியாகக் கையாண்டு ஓரளவுக்கேனும் நிலம் மீட்ட்ப்பு போன்ற உடனடிப் பிரச்சினைகளூக்கு தீர்வுகானா முனைய வேண்டும். திரு விக்னேஸ்வரன் இதனை உனாரத் தலைப் பட்டுல்ளார் என நம்புகிறேன். திரு விக்னேஸ்வரனின் வலாலாய் பேச்சு We are at the threshold of hope. A hope that those who have been denied what was…
-
- 0 replies
- 373 views
-
-
ஏ.எச்.ஏ. ஹுஸைன்) தினமுரசு வாரமலர் பத்திரிகையின் ஸ்தாப ஆசிரியரும், நாடாளுமன்ற உறுப்பினரும் அற்புதன் என்று வாசகர்களினால் அறியப்பட்டவருமான நடராஜா அற்புதராஜா படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அவர் 1999ஆம் ஆண்டு நொவெம்பெர் மாதம் 02 ஆம் திகதி கொழும்பில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். தினமுரசுப் பத்திரிகையை ஜனரஞ்சகப் பத்திரிகையாக மாற்றிய பெருமை அன்னாரையே சாரும். மிகக் குறுகிய காலத்தில் அவர் தினமுரசுப் பத்திரிகையை சூடு சுவை சுவாரசியம் என பிரபல்யப் படுத்தி ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகையாக மாற்றியிருந்தார். தினமுரசுப் பத்திரிகையின் ஜனரஞ்சக எழுத்தாற்றல் வாசகர்களை நின்று நிதானித்து உற்று நோக்க வைத்தது. …
-
- 0 replies
- 148 views
-
-
ஒர்லன்டோவும் சமபாலுறவும் முஸ்லிம்களும் வெறுப்பும் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா உலகத்தில், அதிகம் பாகுபாட்டுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகின்ற சிறுபான்மைக் குழுமமாக, சமபாலுறவாளர்கள் காணப்படுகிறார்கள் என்றால், அது மிகையில்லை. சாதாரண எள்ளலில் ஆரம்பித்து, அவர்களின் 'வித்தியாசமான' பாலியல் தெரிவுக்காக, 'சட்டங்களினால்' அல்லது சமுதாயக் கட்டமைப்புகளால் கொலை செய்யப்படுவது வரை, அவர்கள் மீதான அடக்குமுறை தொடர்கிறது. இந்நிலையில் தான், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள ஒர்லன்டோவில் காணப்படும் சமபாலுறவாளர்களுக்கான இரவு விடுதியில், ஆயுததாரியொருவர் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலால், குறைந்தது 50 பேர் உ…
-
- 0 replies
- 401 views
-