நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய நிலைப்பாடு தோல்வியடைந்ததா?- சர்வேந்திரா November 18, 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் 2024 – சில அவதானங்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. 159 ஆசனங்களைப் பெற்று, 2/3 பெரும்பான்மைக்குத் தேவையான 150 ஆசனங்களுக்கும் அதிகமான ஆசனங்களை NPP பெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் முன்னர் எனது நண்பர் ஒருவரைச் சந்தித்த NPP முக்கியஸ்தர் ஒருவர் ‘ நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவோம். அதன் பின் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 160 ஆசனங்கள் கைப்பற்றுவோம்’ என உறுதியாகக் கூறியுள்ளார். இத் தகவலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே நண்பர் என்னிடம் சொன்னார். இப்போது 159 ஆசனங்கள் கிடைத்திருக் கின்றன. 16…
-
- 0 replies
- 230 views
-
-
மு.க.ஸ்டாலின் தமிழ் இனத் தலைவரா?! மின்னம்பலம்2022-05-26 மே மூன்றாவது வாரத்தில் நடந்த நான்கு முக்கியமான நிகழ்வுகள் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் பற்றி சர்வதேச அளவில் பேச வைத்திருக்கின்றன. பேரறிவாளனை கட்டியணைத்த ஸ்டாலின் முதல் நிகழ்வு மே 18 ஆம் தேதி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தின் பேரில் விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலையை திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கடுமையாக எதிர்த்த நிலையில்... தன்னை சந்திக்க வந்த பேரறிவாளனை கட்டியணைத்து தனது உடல் மொழி மூலம் தன் உணர்வை வெளிப்படுத்தினார் ஸ்டாலின். இந்த காட்சி உலக…
-
- 0 replies
- 230 views
-
-
சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட உரிமை மாவைக்கு மறுக்கப்படுகிறதா.? - நா.யோகேந்திரநாதன் அண்மையில் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள ஒரு விருந்தினர் விடுதியில் தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கும் அரசியல் கட்சிகள், மத நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தலைமையில் ஒன்றுகூடி அனைத்து தமிழ்த் தேசிய சக்திகளும் எதிர்காலத்தில் ஒன்றிணைந்து தமிழர் பேரவை என்ற பேரில் செயற்படுவது பற்றி ஆலோசனை இடம்பெற்றது. கஜேந்திரகுமாரைத் தலைமையாகக் கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர்ந்த ஏனைய அமைப்புகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அனைவரும் ஒரே சக்தியாகத் திரண்டெழுந்து ஒரு குடையின் கீழ் செயற்படவேண்டும் என்ற கருத்து சகல தரப்பினரால…
-
- 0 replies
- 230 views
-
-
விளையாடும் அரசியல் வணிகர்கள்; வேடிக்கை பார்க்கும் மக்கள் July 21, 2022 — கருணாகரன் — இலங்கை நன்றாகக் குழம்பிவிட்டது. (அல்லது யாரோ குழப்பிவிட்டார்கள்!) ஏறக்குறையப் பைத்தியம் முற்றிய நிலையில் பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு இப்போதைக்கு முடிவில்லை. பெரும்பாலான சனங்களுக்கு என்ன நடக்கிறது? என்ன நடக்கப்போகிறது என்றே தெரியவில்லை. “ஏதோ நடக்கிறது நடக்கட்டும். இதில் நாம் என்ன செய்ய முடியும்? நம்மால் என்ன செய்ய இயலும்?” என்று சிலர் நினைக்கிறார்கள். முதலில் பொதுஜன பெரமுனவே பிழையானது. அதன் தலைமைப்பீடம் மோசமானது. ஜனாதிபதி கோட்டபாய, பிரதமர் மகிந்த உள்பட அத்தனை ராஜபக்ஸக்களும் குற்றவாளிகள் என்றெல்லாம் சொல்லப்பட்டது. அதற்கெதிராகத் திரண்டவர்கள் ரா…
-
- 0 replies
- 230 views
-
-
காணாமற்போன சம்பவங்கள்: இராணுவம் கடந்த காலத் தவறுகளுக்கு பொறுப்புக் கூறவேண்டிய தருணம் வந்திருக்கிறது! Photo, TAMILGUARDIAN கடந்த வாரம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க வழக்கொன்றின் போது 2019 மே மாதம் இராணுவத்திடம் சரணடைந்த மூன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென வவுனியா உயர் நீதிமன்றம் கட்டளையிட்டது. அந்த மூன்று உறுப்பினர்களும் அன்று தொடக்கம் காணாமற் போயிருப்பதுடன், அவர்களுடைய மனைவிமார் அது தொடர்பாக ஆட்கொணர்வு மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்கள். தமது கணவன்மாரை இராணுவத்திடம் ஒப்படைத்ததாக அப்பெண்கள் வழங்கிய சாட்சியத்தை தான் நம்புவதாகக் கூறிய நீதிபதி, இராணுவம் அவர்களை ஆஜர் செய்யத் தவறினால் அந்த நபர்கள் க…
-
- 0 replies
- 229 views
-
-
கோழியுடன் எழுந்திருந்து கோட்டானுடனே துயிலும் கோலமே வாழ்க்கை ஆச்சு!- 24 ஜனவரி 2016 செய்தியாக்கம்- குளோபல் தமிழ் விசேட செய்தியாளர், கிளிநொச்சி இப்பொழுதெல்லாம் கிளிநொச்சியில் உயர்தரப் பரீட்சை எழுதிய பிள்ளைகள் சித்திபெறத் தவறியதும் ஆடைத் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றுவிடுகிறது என்றும் நல்ல திறமையான மாணவர்கள்கூட இவ்வாறு வீட்டு நிலமை மற்றும் வருவமானத்திற்காக தங்கள் கல்வியை முடித்துக் கொள்கிறார்கள் என்றும் ஆசிரியராக பணியாற்றும் எனது நண்பன் ஒருவன் கவலையோடு சொன்னான். தினமும் இருள் புலராத அதிகாலையிலும் இருள் சூழ்ந்த மாலையிலும் ஆடைத்தொழிற்சாலைக்கு செல்லும் யுவதிகளைப் பார்க்கும் ஒவ்வொரு தருணத்தில் அந்த வா…
-
- 0 replies
- 229 views
-
-
ஜனாதிபதிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட கோட்டோ கோ கம போராட்டம் எழுபத்தைந்து நாட்களைக் கடந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்தப் போராட்டத்தின் எதிர்காலம் என்ன? பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கவினால் என்ன சாதிக்க முடியும்? பொருளாதார நெருக்கடியின் அடுத்த கட்டம் என்ன போன்ற கேள்விகளுடன், பொருளாதார நிபுணரும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி அவர்களை இந்த வாரம் தாயகக்களம் நிகழ்வுக்காக வழங்கிய செவ்வியின் முக்கியமான ஒரு பகுதியை இலக்கு வாசகர்களுக்குத் தருகிறோம். மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/ https://www.ilakku.org/weekly-epaper-...
-
- 0 replies
- 229 views
-
-
இலங்கையில் இன்றைய சூழலிலிருந்து நாளைய நாளுக்காக நாம் நம்மை தேற்றிக் கொள்ள வேண்டும். என்னதான் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி சில காலங்களில் மறைந்து போவதற்கான பொருத்தப்பாடுகள் எவையும் நாட்டில் நடப்பதாக இல்லை. கடனை வாங்கி கடன் அடைப்பது தற்காலிக தீர்வன்றி விரைவான மாற்றங்களை தந்திடும் முயற்சியாக அது அமைந்தது விடாது. கடன் சுமை சுதந்திரம் அடையும் போது இலங்கை கடனோடு இருக்கவில்லை. ஆனாலும் கடந்து வந்த நாட்களில் கடனை வாங்கி குவித்து இன்று அது பெருத்து பெரும் பூதமாக இலங்கையை அச்சுறுத்துகின்றது. வாங்கிய கடனை அடைப்பதை விடுத்து புதிதாக கடன்களை பெற்றுக்கொள்ள நினைப்பது என்பது பொருத்தமற்ற சிந்தனை. இருந்தும் அவ்வாறு வா…
-
- 0 replies
- 229 views
-
-
வடக்கில் சடுதியாக அதிகரித்துள்ள பாடசாலை இடை விலகல்கள் By DIGITAL DESK 2 13 NOV, 2022 | 03:50 PM (ஆர்.ராம்) “இந்த ஆண்டில் தற்போது வரையில் 519மாணவர்கள் இடைவிலகியுள்ளதோடு இதில் வலிகாமம் கல்வி வலயம் முதலிடத்திலுள்ளது” வடக்கு மாகாணத்தில் பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளது. வடமாகாண கல்வித் திணைக்களத்தின் தகவல்களுக்கு அமைவாக, பாடசாலைகளில் இருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு 485ஆகவும், 2021ஆம் ஆண்டு ஆயிரத்து 105 ஆகவும், இந்த ஆண்டில் தற்போது வரையில் 519 ஆகவும் உள்ளது. வடக்கு மாகாணத்தில் 2020 ஆம் ஆண்டு ஆகக்கூடுதல…
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 02 பிற்பகல் 04.15) மூன்று மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் படுதோல்வியை தழுவிய சஜித் பிரேமதாசவின் தலைமையில் அன்று கூட்டணி சேர்ந்து இருந்த கட்சிகளை விடவும் குறைந்த அளவான கட்சிகளைக் கொண்டு 'ஐக்கிய மக்கள் சக்தி' என்ற பெயரில் உருவாக்கப்பட்ட புதிய கூட்டணி இன்று கொழும்பு தாமரை தடாகம் அரங்கில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்த முக்கிய கட்சிகளில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம், மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, ராதாகிருஷ்ணன் …
-
- 1 reply
- 228 views
-
-
முருகன், சாந்தன், நளினி விடுதலை விவகாரம்: தமிழக - இந்திய அரசாங்கங்களுக்கிடையில் அதிகாரப் போட்டி? இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கு, தமிழக தேர்தல்க் களத்தில் மீண்டும் பிரசார வியூகமாக மாறுகிறது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்ய வேண்டும் என்று விவாதம் இப்போது மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசாங்கத்துக்கும் மாநிலத்தில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்துக்கும் சர்ச்சைக் களமாக மாறிவிட்டது. இந்த ஏழு பேரில் ஜெயக்குமார், ரொபேர்ட் பையாஸ், ரவிச்சந்திரன் ஆகியோரும் அடக்கம். இவர்களில் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரொபேர்ட் பையாஸ் ஆகிய நால்வரு…
-
- 0 replies
- 228 views
-
-
பென்டகன் உயா் அதிகாரிகளின் இரகசிய விஜயத்தின் பின்னணி?-அகிலன் February 27, 2023 இரண்டு விஷேட விமானங்களில் கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்கிழமை இரகசியமாக கொழும்புக்கு வந்த அமெரிக்க அதிகாரிகள் யாா், எதற்காக அவா்கள் வந்திருந்தாா்கள் என்பனதான் கொழும்பு அரசியலை மட்டுமன்றி இராஜதந்திர வட்டாரங்களையும் குடைந்துகொண்டிருக்கும் கேள்வி. இலங்கை அரசாங்கமும், அமெரிக்க துாதரகமும் இவ்வாறான ஒரு விஜயம் இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொண்டிருக்கின்ற போதிலும், அது தொடா்பாக எந்தத் தகவல்களையும் வெளியிட மறுத்துவிட்ட நிலையில், உணடமைகள் வெளிவருமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது. இலங்கையை மையப்படுத்திய இந்துசமுத்திர வல்லாதிக்கப்போட்டி தீவிரமடைந்துசெல்லும் நிலையில் இவ்வ…
-
- 0 replies
- 228 views
-
-
இலங்கை பொருளாதார நெருக்கடி: நாட்டில் பழைய கார்கள் மட்டுமே ஓடுவது ஏன்? எம் மணிகண்டன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கைச் சாலைகளில் புதிய கார்களைக் காண்பது அரிது. பளபளப்பாகத் தெரியும் சில கார்களும் சில ஆண்டுகளுக்கு முன்பே வாங்கப்பட்டவையாகவே இருக்கும். காரணம் இலங்கையில் புதிய மோட்டார் வாகனங்கள் எதுவும் கிடையாது. இலங்கையில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் உற்பத்தி செய்யப்படுவதில்லை. அசெம்ப்ளிங் எனப்படும் உதிரிபாகங்களை இறக்குமதி செய்து வாகனங்களைத் தயாரிக்கும் பணிகளும் பெரிய அளவில் கிடையாது. ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், ஜப்பானில் இருந்தும்தான் பெரு…
-
- 0 replies
- 227 views
- 1 follower
-
-
சிறுமிகளது படுகொலைகளின் பின்னணியில் கருணா, பிள்ளையான்? இஷாலினி என்ற ஒரு சிறுமியின் மரணம் இன்று இலங்கை முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அந்தச் சிறுமியின் மரணத்தில் ‘ரிசட் பதியுதின்’ என்ற பிரபலத்தின் பெயர் சம்பந்தப்பட்டிருப்பதால் அந்தச் சிறுமியின் மரணம் ஒட்டுமொத்த இலங்கையின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது. ஆனால், இன்றைக்கு சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் கிழக்கில் இரண்டு சிறுமிகள் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த அளவிற்கு முழு இலங்கையின் கவத்தையும் ஈர்த்திருக்கவில்லை. அந்த சிறுமிகளின் படுகொலைகளின் பின்னாலும் கருணா மற்றும் பிள்ளையான் போன்ற பிரபல்யங்களின் பெயர்கள் சம்பந்தப்பட்டிருந்த போதிலும் கூட, இன்று இஷாலினியின் படுகொலை பே…
-
- 0 replies
- 227 views
-
-
யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் …
-
- 0 replies
- 226 views
-
-
பாவமன்னிப்பா? பரிகாரமா? -கருணாகரன் செந்தில் என்று அழைக்கப்படும் முருகுப்பிள்ளை ரவீந்திரராஜா விடுதலைப்புலிகள் அமைப்பில் ஒரு காலம் செயற்பட்ட போராளி. அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனையிலிருந்து மிக இளைய வயதில் புலிகளோடு இணைந்தவர். இராணுவத்தினருடனான போர்க்களமொன்றில் செந்தில் ஒரு காலை இழந்தார். அதற்குப்பிறகு அவர் கல்முனைக்குச் செல்லவில்லை. பொதுமக்களுக்கான பணிகளையே செய்தார். பழகுவதற்கு இனிய செந்தில், அமைதியான சுபாவமுடையவர். அதனால் மக்களின் மத்தியில் செல்வாக்கைப் பெற்றிருந்தார். இறுதி ஈழப்போரில் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பிறகு, படையினரின் புனர்வாழ்வு முகாமுக்கு (தடுப்புக்கு) சென்று மீண்டார். இப்பொழுது கிளிநொச்சி நகருக்கு அண்மையில் குடும்…
-
- 0 replies
- 226 views
-
-
கத்தரிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரத்தினை அரசியில் ரீதியில் பலமாக்குவதற்கு முயற்சி ;சட்டத்தரணி குருபரன் 19ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் கத்தரிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரத்தினை அரசியல் ரீதியில் பலமாக்குவதற்கான முயற்சியாகவே ஜனாதிபதியின் செயற்பாட்டினை பார்க்க முடியும் என யாழ்.பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தலைவர் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் கேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு, ஜனாதிபதிக்கு காணப்பட்ட நிறைவேற்று அதிகாரங்கள் 19ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் காரணமாக வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன என்பது யாவரும் அறிந்தவொரு விடயமாகின்றது. அவ்வாறிருக்கையில், 19ஆவது திருத்தச்சட்டத்தினையும் உள்வாங்கிய …
-
- 0 replies
- 226 views
-
-
இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகியுள்ள நிலையில், அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலை வலியுறுத்துவதற்கு விசேட கூட்டத்தொடர் ஒன்றை நடத்துமாறு இணை அனுசரணை வழங்கிய நாடுகளிடத்தில் கோருவதே பாதிக்கப்பட்ட தரப்புக்கு உடன் காணப்படும் நடைமுறைச்சாத்தியமான வழியாகும் என்று; தமிழர் இயக்கத்தின் அனைத்துலக வெளியுறவுத்துறைக்கான ஒருங்கிணைப்பாளர் பொஸ்கோ தெரிவித்தார்.; ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் அதில் பங்கேற்றுள்ள அவர் ஜெனீவாவிலிருந்து வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய சிறப்பு செவ்வியில் தெரிவித்தார் அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,; கேள்வி:-ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் வலுவற்றதொன்றாகும் என்று …
-
- 0 replies
- 226 views
-
-
இலங்கையின் வடக்கு நோக்கி நகரும் சீனாவின் பிரசன்னம்: யாரைப் பாதிக்கும்? இந் நிலையில், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம், தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் எத்தகைய அச்சுறுத் தல்களை உருவாக்கலாம் என்பது தொடர்பான விளக் கம் ஒன்றைப் பெறுவதற்காக சென்னை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும், பாரதி புத்தகா லய பதிப்பாசிரிய ருமான, ப.கு.ராஜன் அவர்களிடம் ‘இலக்கு’ ஊடகத்தினர் நேர்காணல் ஒன்றைப் பெற்றி ருந்தனர். கேள்வி: இலங்கையின் தென் பகுதியில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து வரும் சீனாவின் பிரசன்னத் தினால் தமிழகத்தில் நிகழும் ‘நன்மை’ என்ன?’ பதில்: மிகவும் சிக்கலான கேள்வி. இன்று தமிழ் நாட்டிலும், ஈழத் தமிழ் பகுதியிலும் …
-
- 0 replies
- 226 views
-
-
குறுகிய சந்துக்குள் கூக்குரலிடாமல் விரிந்த வெளியில் சிறகை விரியுங்கள் November 15, 2022 — கருணாகரன் — “தமிழரசுக் கட்சி காலமாகி விட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏறக்குறைய செல்லாக் காசாகி விட்டதாகச் சொல்கிறீர்கள். அப்படியென்றால், அடுத்ததாக உங்கள் தெரிவு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியா? அல்லது விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியா? அல்லது ஐங்கரநேசனின் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கமா? அல்லது சிவாஜிலிங்கம் –ஸ்ரீகாந்தாவின் தமிழ்த்தேசியக் கட்சியா? அல்லது வேறு ஏதாவது உண்டா?” என்று கேட்கின்றனர் சில நண்பர்கள். இதற்கு என்ன பதிலைச் சொல்ல முடியும்? ஏனென்றால், இவர்கள் தேடுவது தங்களுக்குத் தெரிந்த வட்டத்திற்குள்தான். அதற்கப்…
-
- 0 replies
- 225 views
-
-
தமிழில்: ஜெயந்திரன் பாதுகாப்பான வாழ்வு கிட்டுமா? பல்லாயிரக் கணக்கான தஞ்சக் கோரிக்கையாளர்களை றுவாண்டா நாட்டுக்கு அனுப்புவதற்காக அந்த நாட்டுடன் தாம் ஒரு ஒப்பந்தத்தை கைச்சாட்டிருப்பதாக ஏப்பிரல் மாதத்தில் பிரித்தானிய அரசு அறிவித்தது. இந்த நாடுகடத்தல்கள், சட்டத்துக்கு விரோதமானவை என்பதுடன் மனிதாபிமானம் அற்றவை என்று கூறி பிரித்தானிய எதிர்க்கட்சி, அரச சார்பற்ற நிறுவனங்கள், சமயத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்றவர்களிடமிருந்து அரசாங்கத்தின் இந்த ஏற்பாட்டுக்கு எதிராக கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இது மிகவும் மோசமானது என்று முடிக்குரிய பிரித்தானிய இளவரசரான சாள்சும் தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை தஞ்சக் கோரிக்கையாளரை மேற்குற…
-
- 0 replies
- 225 views
-
-
கனடாவில் சுமந்திரன், சாணக்கியன் பங்கேற்ற கூட்டம் தொடர்பில் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் கருத்து தமிழ்தேசிய அரசியலோடு விளையாடுபவர்கள் இது தான் நிலைமை என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரன் அவர்கள் கனடாவில் உரையாற்றியபோது அங்கே இருந்த தமிழ் தேசிய உணர்வாளர்கள் அவரை பேச விடாமல் தடுத்து திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். சாணக்கியன் பேசி முடிக்கும்வரை மௌனமாக இருந்த தமிழ் தேசிய உணர்வாளர்கள் சுமந்திரன் பேசும்போது பல கேள்விகளை கேட்டு அவரைத் தொடர்ந்து உரையாற்ற விடாமல் தடுத்து திருப்பி அனுப்பியிருந்தார்கள். இந்த நிக்வினை தமிழ் அரசியல் நிலையிலிருந்து பார்க்கின்றபோது தெளிவை பெற்றுக்கொள்ள …
-
- 0 replies
- 225 views
-
-
ஆழமான கடன்பொறி பற்றி அச்சத்தை வெளிப்படுத்தும் வாங் யின் விஜயம்! சீன வெளிவிவகார அமைச்சரின் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான விஜயங்கள் ஆழமான கடன் பொறி பற்றிய அச்சத்தை உருவாக்குகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் ஒமிக்ரோன் மாறுபாட்டால் இயக்கப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையின் தொடர்ச்சியான அதிகரிப்புக்கு மத்தியில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு விஜயம் செய்தார். ஆனால் தேசியவாத இலங்கையர்களும் மாலைத்தீவர்களும் தங்கள் இறையாண்மையின் மீது சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும் கடன்பொறி இராஜதந்திரத்தினுள் சிக்கியிருப்பதையும் உணர்ந்துள்ளதாகவும் ஐரோப்பிய அடிப்படையிலான சிந்தனைக் குழு கூறியுள்ளது. நாட்டின் மோசமான ப…
-
- 0 replies
- 225 views
-
-
12 APR, 2024 | 09:10 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் இலங்கையின் தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நவீன பாதுகாப்பு தளவாடங்களை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன், இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்புகளை முழுமையாக வழங்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே மேற்கண்டவாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 225 views
- 1 follower
-
-
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சின் பதவியில் நானே அனைத்துத் தீர்மானங்களையும் எடுத்தேன் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிகள் முழுமையாக அவர்களது சிந்தனையிலிருந்து விடுபட்டனரா என்பது தொடர்பில் இன்னும் எனக்குச் சந்தேகம் நிலவுகிறது என்றும் சுட்டிக்காட்டினார். நேற்றிரவு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேரடி ஒளிபரப்புச் செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நான் பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்த காலப்பகுதியில் நேர்மையான முறையிலேயே எனது சேவையை முன்னெடுத்தேன். நான் எந்தவொரு ஊழல் மோசடிகளிலும் ஈடுபடவி…
-
- 0 replies
- 225 views
-