Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மகிந்த பிரதமராக பதவி பிரமாணம் எடுத்த அடுத்த மணித்தியாலத்தில், முன்னால் ஊடகத்துறை அமைச்சர் கெஹிலிய ரம்புக்வெல தலைமையில் கும்பல் ஒன்று, ரூபவாஹினி, ITV செய்தி அறைகளை கையகப் படுத்தியது. மேலும் lakehouse நிறுவன, டெய்லி நியூஸ், சிலுமினா, டினமின, தினகரன் ஆசிரிய அலுவலங்களைக் கையகப் படுத்தியது. இந்த ரகளையில், ரூபவாஹினி நிகழ்ச்சி ஒளிபரப்பு தடையானது. ஐ தே க யினுள் ஊழல் செய்து பதவி இழந்திருந்த ரவி தலைமையிலான ஒரு குழுவுடன் மகிந்த அணியும், அரசுக்குள்ளே இருக்கும், தமிழர், இஸ்லாமியர்களை குறிவைத்து பசில் ராஜபக்சேவும் குதிரை பேரம் நடத்தி வருகின்றனர்.

  2. மீண்டும் மகிந்த அதிகாரத்திற்கு வந்துள்ளமை- இந்தியாவிற்கு கவலையளிக்கும்- டைம்ஸ் ஒவ் இந்தியா மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு திரும்பியுள்ளமை இந்தியாவை கவலையடையச்செய்யும் 2015 இல் இந்தியா ராஜபக்சவை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சிறிசேனவிற்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கூட்டணியை ஏற்படுத்துவதற்கான தனது செல்வாக்கை பயன்படுத்தியது ராஜபக்ச கொழும்பு துறைமுக நகரத்தை உருவாக்குவதற்கும் சீனாவின் நீர்மூழ்கிகளை இலங்கையில் தரித்து நிற்பதற்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் உதவியுடன் உருவாக்கவும் தீர்மானித்ததன் மூலம் இலங்கையில் சீனா மூலோபாய அடிப்படையில் காலடி எடுத்து வைப்பதற்கு உதவியதன் பின்னரே இந்தியா இந்த தீர்மானத்தை எடுத்தது. கடந்த மூன்று மாதங்…

  3. சின்மயியின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள் ஆர். அபிலாஷ் சின்மயி வைரமுத்து மீது குற்றச்சாட்டு வைத்த பின் 2004இல் இருந்து சமீபம் வரைஅவரும் அவரது தாயாரும் வைரமுத்துவை புகழ்ந்தது (வைரமுத்துவும் ரஹ்மானும்தண்ணீர் ஊற்றி வளர்த்த செடி என் மகள்), அவருக்கு பத்மஸ்ரீ கிடைத்த போதுகொண்டாடியது, தன் திருமணத்துக்கு அவரை அழைத்து காலில் விழுந்து ஆசீர்வாதம்வாங்கியது ஆகிய சான்றுகளைக் காட்டி “ஒருவர் உங்களிடம் 2004இல் தவறாகநடந்து கொள்ள முயன்றிருந்தால் அவரை எப்படி பாராட்டி திருமணத்துக்கு அழைக்கமுடியும்?” என டிவிட்டரில் பலரும் சின்மயியிடம் கேட்டார்கள். அதற்கு பதிலளித்தசின்மயி வைரமுத்துவுடன் 2004க்குப் பின் சில மேடைகளை பகிர்ந்து கொண…

  4. ‘தமிழ் மக்கள் பேரவை அநாதையா?’ Editorial / 2018 ஒக்டோபர் 25 வியாழக்கிழமை, பி.ப. 10:00 Comments - 0 வா. கிருஸ்ணா தமிழ் மக்கள் பேரவையை விக்னேஸ்வரன் தொடங்கினார். அதனை அரசியல் சாராத அமைப்பு என்றார். இன்று தமிழ் மக்கள் கூட்டமைப்புக்குப் போய்விட்டார். தமிழ் மக்கள் பேரவையில். இனி தான் இல்லையென்று தெளிவாகக் கூறிவிட்டார் என்று தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம், தமிழ் மக்கள் பேரவை அநாதையாக்கப்பட்டுவிட்டதா என்றும் வினவினார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், புதியக் கட்சியை ஆரம்பித்தமை தொடர்பில் மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில், இன்று (25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்ப…

  5. நெருப்­பாற்றை நீந்தி கடக்­கும் முயற்சி பதிவேற்றிய காலம்: Oct 25, 2018 கடை­சி­யில் பூனை சாக்­கில் இருந்து வெளியே குதித்­து­ விட்­டது. புதிய கட்சி ஒன்­றைத் தொடங்­கப் போகி­றார் என்­கிற அறி­விப்பை நேற்று வெளி­யிட்­டி­ருக்­கி­றார் வடக்கு மாகா­ணத்­தின் முன்­னாள் முத­ல­மைச்­சர் க.வி.விக்­னேஸ்­வ­ரன். தமிழ் மக்­கள் கூட்­டணி என்று அதற்­குப் பெய­ரும் சூட்­டி­யி­ருக்­கி­றார். அந்­தக் கட்­சி­யில் அவ­ரைத் தவிர வேறு எவ­ரும் நேற்­றைய தினம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­றா­லும் தமிழ் மக்­கள் பேரவை என்­கிற தனது அர­சி­யல் அமைப்­பின் ஆத­ர­வு­டன் இந்­தக் கட்­சி­யைத் தான் தொடங்­கப் போகி­றார் என்று அறி­வித்­துள்­ளார் விக்­னேஸ்­வ­ரன். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பால் அர­சி­ய…

  6. ராவணன் தீய சக்தியா, நல்ல சக்தியா? டி.எஸ்.எஸ்.மணி 2018, அக்டோபர் 19ஆம் தேதி வழக்கம் போல வடநாட்டில் தலைநகர் டெல்லி உட்பட பல இடங்களில், தசரா பண்டிகை கொண்டாட்டம் என்ற பெயரில் தமிழன் ராவணனை ஒரு தீய சக்தியாக வர்ணித்து, ராவணன் கொடும்பாவியை எரிப்பது என்ற ஆண்டாண்டு காலமாய் செய்துவரும் பழக்கத்தைப் பின்பற்றினார்கள். வழக்கம் போல, இந்தியாவை ஆளும் கட்சிகளின் தலைவர்கள் முன்னே நின்று அந்தக் கொண்டாட்டத்தைச் செய்தார்கள். இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஆகியோர் ராவணன் வதத்தில் கலந்து கொண்டனர். ராவணன் கொடும்பாவி எரிப்பு ராவணனின் கொடும்பாவி மீது பிரதமர் நரேந்திர மோடி வில்லைக் கையில் எடுத்துக் கொண்டு ஓர் அம்பை எய்வது போன்ற படங்க…

    • 15 replies
    • 3.2k views
  7. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி! புதிய குதிரையா? Prem மாற்றம் ஒன்று தான் மாறாதது என்ற கருத்தியலில் சாமானியர்களுக்கு ஆழமான புரிதல் இருந்ததோ இல்லையோ அதனை முன்னாள் முதல்வராகும் சீ.வி விக்னேஸ்வரன் தனது 79 வது பிறந்தநாளுக்கு மறுநாளான இன்று சரியாக புரிந்துகொண்டுள்ளார். அவரது இந்தப்புரிதலைத்தான் அவரது வாயால் இன்று தனக்குரிய புதியகட்சியாக பகிரங்கப்படுத்திய தமிழ் மக்கள் கூட்டணியின் முன்னோட்ட அறிவிப்பு வெளிப்படுத்தியது. ஆனால் விக்னேஸ்வரனின் இந்த அறிவிப்பு முழுஆச்சரியகரமான விடயமே அல்ல. மாறாக இது ஓரளவு எதிர்பார்கப்பட்;ட விடயம்தான். ஏனெனில் வட மாகாண சபையின் ஆயுட்காலம் இன்றுடன் முடிவுக்குவருவதால் ஏற்கனவே தன்னுடன் கடுமையான உரசலுக்கு உள்ளாகிவிட்ட தமிழ்தேசியக் க…

  8. சிலை திறப்பின் உணர்வலைகள் ! (ஸ்ரீ கிருஷ்ணர் ) 2000ம் காலப்பகுதியில் மட்டக்களப்பில் வாழ்ந்த புத்திஜீவிகள் எனப்படும் சிலருக்கு உயர்பதவிகளைப் பிடிக்க பிரதேசவாதம் தேவைப்பட்டது. இதே வேளை அன்றைய ஆயுதப்போராளியான கருணா எனப்படும் (விநாயகமூர்த்தி முரளிதரன்) புலிகள் இயக்கத்திலிருந்து பல்வேறு தவறுகளையும், மோசடிகளையும் செய்தபின்னர் தன்னைச் சுற்றவாளியாக வெளியுலகத்துக்கு காட்ட அவருக்கு தேவைப்பட்ட ஆயுதம் பிரதேசவாதமாகும். ஒருசில பிரதேச கல்விமான்கள் தமது இலக்கை அடைவதற்காகக் காலத்துக்கு காலம் மெதுவாகச் சில மூத்த போராளிகளின் மூளையில்பிரதேசவாத நஞ்சை ஏற்றினர்.மட்டக்களப்புப் பிரதேச அதீத பற்றுக் சில கொண்ட மூத்த போராளிகள் இந்த கல்விமான்கள் எனப்படும் கபடர்களின் வலைக்குள் வீழ…

  9. காலிமுகத்திடல் போராட்டம் : நடந்தது என்ன? தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி மலையக இளைஞர்கள் கொழும்பில் 24/10/2018 அன்று கூடி பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர். காலை 10 மணியளவில் கொழும்பிலும் மற்றும் வெளியிடங்களிலிருந்தும் பெருந்திரளான மலையக இளைஞர்கள் காலிமுகத்திடலில் அணி திரண்டனர். இதேநேரத்தில் செட்டியார் தெரு மற்றும் பிரதான வீதி பகுதியிலிருந்து மேலும் பெருந்திரளான இளைஞர்கள் பேரணியாக வந்தனர். பேரணியாக வந்த இளைஞர்கள் ஹில்டன் ஹோட்டலுக்கு அருகில் பொலிஸாரினால் இடை மறிக்கப்பட்டு அங்கிருந்து பேரணியாக செல்ல விடாது பொலிஸாரே தங்களின் பஸ்களை பயன்படுத்தி காலி முகத்திடலுக்கு அவர்களை அழைத்துச் சென்றனர். அத்துடன் காலி முகத்திடலுக…

  10. பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு சட்டவிரோத குடியேற்றங்கள் அரங்கேற்றம் வவுனியா சாளம்பைக்குளம் பகுதியிலிருந்து யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து சென்ற மக்கள் தற்போது கடந்த 2017ஆம் ஆண்டு சாளம்பைக்குளத்தை அண்டிய வேறு பகுதிகளில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளனர். இதனால் பல ஏக்கர் தனியாரின் நிலப்பரப்புக்கள் அபகரிக்கப்பட்டுள்ளதுடன் தயாரிக்கப்பட்ட வரைபடத்திற்கு அப்பால் சென்று குடியேற்றங்களுக்காக காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மத்திய அமைச்சர் ஒருவரின் அடாவடி நடவடிக்கையினாலும் வன்னிப்பிராந்தியத்திலுள்ள கையாலாகாத மக்கள் பிரதிநிதிகளின் இயலாத்தன்மையினாலும் இப்பூர்வீக நிலங்கள் தமிழர்களிடமிருந்து அபகரிக்கப்பட்டு சட்டவிரோத குட…

  11. சபரிமலை விவகாரம்: போராட்டத்துக்கு வித்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு எம். காசிநாதன் / 2018 ஒக்டோபர் 22 திங்கட்கிழமை, மு.ப. 01:35 கேரள மாநிலத்தின் ‘சபரிமலை’ இன்றைக்குப் போராட்ட பூமியாக மாறியிருக்கிறது. பக்தி என்ற அடிப்படையில் உரிமைகளை நிலைநாட்டப் பெண்களும் அந்த உரிமைகளைப் பெண்களுக்கு அளிக்க முடியாது என்று சில அமைப்புகளும் செய்யும் இந்தப் போராட்டம், கேரள மாநிலத்தில் சட்டம், ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஷ்ரா, ஓய்வு பெறுவதற்கு ஐந்து நாள்களுக்கு முன்பு, வழங்கிய தீர்ப்புதான், கேரளாவை இப்போது போராட்டக் களமாக மாற்றியிருக்கிறது. 10 வயதுக்கு மேலும் 50 வயதுக்கு உட்பட்ட பெண்க…

  12. மருத்துவமனையை சவச்சாலையாக்கிய இந்தியப் படைகள்! October 21, 2018 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்… 1987 ஒக்டோபர் 21, ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத ஒருநாள். இந்தியப் படைகள் யாழ்மருத்துவமனையில் படுகொலை புரிந்த நாள். இந்திய அமைதிப் படைகள் மேற்கொண்ட படுகொலைகளில் ஒன்றான யாழ் போதனா வைத்தியசாலைப் படுகொலைகள் அல்லது யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் நிகழ்ந்து 31 வருடங்கள் கடந்துவிட்டன. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியப் படைகள் அமைதிகாக்கும் படைகள் என்ற பெயரில் இலங்கைக்கு வந்தனர். அமைதியை ஏற்படுத்தவே இந்தியப் படைகள் வருகின்றன என்று ஈழத் தமிழர்களும் நம்பியிருந்தனர். தமிழ் மக்கள்மீது தமது தீர்வை திணிப்பதன் ஊடாக தமது …

  13. துப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தம் தொடர்கிறது…. October 20, 2018 இன்றைய இந்த நிகழ்வைத் தலைமை தாங்கி நடாத்திக் கொண்டிருக்கின்ற யாழ் பல்கலைக்கழக அரசறிவியற்துறை தலைவர் கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் அவர்களே, அரசியல் ஆய்வாளர் திரு.நிலாந்தன் அவர்களே, கௌரவ வடமாகாணசபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் அவர்களே, ஜெரா-ஊடகவியலாளர் திரு.து.ஜெயராஜ் அவர்களே, கிழக்கு மாகாண முன்னாள் காணி ஆணையாளர் திரு.க.குருநாதன் அவர்களே, சட்டத்தரணி திரு.ஜே.பி.ஏ.ரஞ்சித்குமார் அவர்களே, ஏனைய சிறப்பு அதிதிகளே, சகோதர சகோதரிகளே! இன்றைய இந்த உரையரங்கம் நிகழ்விலே ஒவ்வொரு துறைசார்ந்த விற்பன்னர்களும் வேறு வேறு தலைப்புகளின் கீழ் தமது ஆய்வு உரைகளை சிறப்பாக முன்னெடுத்து அ…

  14. பற வே**, பறைச்சி என்றெல்லாம் சாதிய மற்றும் கேவலமான பிரயோகங்களுடன் நடக்கும் கிறிஸ்தவ நிகழ்வு. இது மட்டக்களப்பில் நிகழ்ந்ததாகவும், இதை நடத்துகின்ற அந்த தரம் கெட்ட மனிதர் இயக்குநர் பாலுமகேந்திராவின் சகோதரர் என்றும், வெளிநாட்டில் இருந்து அண்மையில் தான் வந்து இந்தளவுக்கு சாதிவெறியையும் மதவெறியையும், மூட நம்பிக்கையையும் பரப்புகின்றார் என்றும் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வருகின்றன. இப்படியானவற்றை எம் மண்ணில் இருந்து ஆரம்பத்திலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். இந் நிகழ்வு தொடர்பான சரியான மற்றும் மேலதிகமான தகவல்கள் இருப்பின் பகிரவும்.

  15. மதி சுதா எனும் ஈழத்து சினிமா படைப்பாளி தன் முகனூலில் அவருடைய நண்பரின் பதிவை பகிர்ந்து இருந்தார். அவரின் எழுத்து மூலமான பூரண சம்மதத்துடன் இதை யாழில் பகிர்கின்றேன். நிழலி ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------எம் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் அக்கறை உள்ள ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு இது. நல்லூர் திருவிழாவில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட நண்பரான லவகீசன் இதைப் பகிர்ந்திருக்கிறார். பதிவின் செறிவைக் கருதி அவர் பெயர் tag பண்ணவில்லை கீழே கருத்தில் அவர் பெயர் tag வரும்... நல்லூர் முருகன் திருவிழாவும் - அதைச் சுற்றிய பொருளாதார சுரண்டலும்…

  16. இதுவா நல்லாட்சி? இதுக்காகவா நல்லாட்சி அரசை உருவாக்கினோம்? October 17, 2018 1 Min Read சொந்த நிலத்தில் வாழ வேண்டும் – குளோபல் தமிழ்ச் செய்தியாயளர்… சொந்த நிலத்தில் நின்மதியாக வாழ வழியில்லாமல் இரவு நேரங்களில் பெண்கள் ஒன்றாகவும், ஆண்கள் ஒன்றாகவும் உறங்கி மழையிலும், வெயிலிலும் அவல வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதுவா நல்லாட்சி? இதுக்காகவா நல்லாட்சி அரசை உருவாக்கினோம்? என காஞ்சிரமோட்டை மக்கள் கண்ணீர் மல்க கேள்வி எழுப்பியிருக்கின்றனர். வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரமோட்டை கிராம மக்கள் 28 வருடங்களின் பினன்ர் தமது சொந்த நிலத்தில் மீள்குடியேறிவரும் நிலையில் வனவள திணைக்களம் மீள்குடியேற்றத்தை தடுத்து வருகின்ற…

  17. மு. நியாஸ் அகமது பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images கடந்த வாரம் மெக்சிகோ ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியான ஒரு செய்தி அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியது. அந்த செய்தி இதுதான். …

  18. ஒப்ரோபர் 13 காலை… அநுராதபுரம் சிறைச்சாலை… மாவை, அரசியல்கைதிகள்: நடந்தது என்ன? October 16, 2018 தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் முடிக்கப்பட்ட விதம், அன்றைய தினத்தில் நடந்தது என்ன என்பது தொடர்பான தகவல்களை தமிழ் பக்கம் திரட்டியுள்ளது. நடைபயணம் சென்ற பல்கலைகழக மாணவர்கள் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று சேர்வதற்கு முன்பாகவே, அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் முடித்து விட்டார்கள் என்றும், அரசியல் கைதிகள் விவகாரத்தில் முடிவில்லையேல் வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதாக மாவை சேனாதிராசா கூறியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், இந்த தகவல்கள் “மிக நுணுக்கமாக“ சரியானவை அல்ல. அப்படியானால், அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நடந்தது என்ன? அரசியல் …

  19. இப்ப இல்லாட்டி எப்ப! October 3, 2018 ஷோபாசக்தி இன்று தொடங்கியிருக்கும் யாழ் சர்வதேசத் திரைப்பட விழாவில், வரும் 5ம் தேதி மாலை 6.45 மணிக்கு திரையிடப்படுவதாக விழாக் குழுவினரால் அறிவிக்கப்பட்டு உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலிலும் சேர்க்கப்பட்டிருந்த ஜூட் ரட்ணத்தின் ஆவணப்படமான ‘Demons in Paradise’ இப்போது நிகழ்ச்சி நிரலிலிருந்து நீக்கப்பட்டிருப்பது வருத்தத்திற்கும் கண்டனத்திற்குமுரியது. இதையொத்த சம்பவமொன்று எங்களது ‘செங்கடல்’ திரைப்படத்திற்கும் நிகழ்ந்திருந்தது. செங்கடல் தயாரிப்பில் இருக்கும்போதே அது புலிகளிற்கு எதிரான படம் – இலங்கை அரசிற்கு எதிரான படம் என்றெல்லாம் ஊகங்கள் ஊடகங்களில் வெளியாகின. 2010 இந்தியன் பனோராமாவிற்கு தேர்வான ஒரேயொரு தமிழ்ப்படமாகச் செங்கடல்…

  20. புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தேவையில்லை…. October 11, 2018 1 Min Read நடைமுறையில் நிலவும் பயங்கரவாத தடை சட்டத்தை இல்லாதொழிப்பதே இன்றைய தேவை…. தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் தீர்வின்றி தொடர்வது தொடர்பில் நாங்கள் ஆழ்ந்த கரிசனை கொள்கின்றோம். இப்பிரச்சினைக்கான தீர்வு அரசியல் ரீதியாக எடுக்கப்படவேண்டியது. ஆனால் நல்லிணக்கத்தை பேசும் அரசாங்கம் இவர்களை அரசியல் கைதிகளாக அல்லாமல் குற்றவாளிகளாகவோ சாதாரண சந்தேக நபர்களாகவோ பார்க்கின்றது. இவ்விடயத்தை சட்டமா அதிபர் திணைக்களத்தின் முடிவுகளுக்கு அரசாங்கம் விடுத்து தனது பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. இதே வேளை 09.10.2018 அன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி புதிதாக ஒரு சட்டத்திற்…

  21. சபரிமலை ஐயப்பன் சர்ச்சை: பெண்ணுரிமைக்கு வேட்டுவைத்தல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 ஒக்டோபர் 11 வியாழக்கிழமை, மு.ப. 02:25Comments - 0 கடந்த மாதம் 28ஆம் திகதி, இந்திய உயர் நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், பெண்கள் நுழைவதற்கு இருந்த தடையை நீக்கி, தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பு, ஆண், பெண் சமத்துவ அடிப்படையை, மதித்து வழங்கிய தீர்ப்பு என்ற வகையில், முக்கியமாகக் கொள்ளப்படுகிறது. இத்தீர்ப்புக்கு எதிராகக் கண்டனப் போராட்டம் ஒன்றை, சபரிமலை குருசுவாமிகள் ஒன்றியம், கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. இப்போது, இவ்விடயம் இலங்கையிலும் பேசுபொருளாக்கப்படுவதால், அது குறித்து எழுதுவது அவசியமாகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், …

  22. வைரமுத்துவும் சிக்கியிருக்கின்ற ‘#நானும்’ Gopikrishna Kanagalingam / 2018 ஒக்டோபர் 11 வியாழக்கிழமை, மு.ப. 02:56Comments - 0 உலகின் முக்கிய விருதுகளில் ஒன்றாக முன்னர் கருதப்பட்டு, இப்போது பெரிதளவுக்குக் கவனத்தை ஈர்க்காத விருதுகளில் ஒன்றாக மாறியிருக்கும், அமைதிக்கான நொபெல் பரிசு, முக்கியமான தெரிவொன்றை, இவ்வாண்டு மேற்கொண்டிருந்தது. போரிலும் ஆயுத முரண்பாடுகளிலும், பாலியல் வன்முறைகளை ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டமைக்காக, டெனிஸ் முக்வெகி, நாடியா முராட் ஆகிய இருவருக்கும், சமாதானத்துக்கான நொபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதே முக்கியமானது என்பது ஒரு பக்கமாகவிருக்க, உலகம் முழுவதிலும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் …

  23. அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம்…. October 9, 2018 1 Min Read வடக்கில் செயலமர்வுகள் ஆரம்பம். ஜெசாக் நிறுவனமானது USAID-SDGAP நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் பெண்களினை அரசியலில் பங்காளிகளாக்குகின்ற செயற்பாட்டின் ஒரு பகுதியாக யாழ் மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 25 அரசியலில் ஆர்வமுள்ள பெண்களுக்கான பயிற்சி நெறி கடந்த வாரம் யாழ்ப்பாணம் TCT மண்டபத்தில் இடம்பெற்றது. நிறுவன இணைப்பாளர். ந.சுகிர்தராஜ் தலைமையில் ஆரம்பமான இந் நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக பிரபல அரசியல் ஆய்வாளர். நிலாந்தன் கலந்து கொண்டு பெண்களை அரசியலில் ஊக்கப்படுத்தும் வகையில் கருத்துக்களை வழங்கினார். அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவுள்ளமையினால்,…

  24. விஜயகலா கைது ஒரு அரசியல் நாடகமா? Gokulan இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த யூலை மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை அரசாங்கத்தின் நிகழ்வொன்றின்போது விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என கூறியிருந்தார். இதனால் இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவிவு நடத்திய பல கட்ட விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை முற்பகல் கைதுசெய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக இலங்கைப் பொலிஸ் திட்டமிட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு சட்டத்தரணிகளுடன்…

  25. சிவபூமி சிங்கள பூமியாகுமா? தீபச்செல்வன்… October 8, 2018 ஈழத்தில் உள்ள பஞ்ச ஈச்சரங்களையும் புனித பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒன்றை வடக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ளது. மிகவும் காலம் தாழ்த்தி நிறைவேற்றப்பட்டபோதும், இந்த தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பஞ்ச ஈச்சரங்கள் மாத்திரமின்றி ஈழத்தின் வடக்கு கிழக்கில் உள்ள பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்கள் பலவற்றையும் புனித பிரதேசங்களாக பாதுகாக்க வேண்டிய ஒரு நெருக்கடியான காலம் ஏற்பட்டுள்ளது. ஈழத் தமிழ் மக்களைப்போலவே, அவர்களின் கடவுகள்களும் இன அழிப்புக்கும் இடப்பெயர்வுக்கும் நில இழப்புக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். ஈழத்தின் சைவ ஆலயங்கள் சுதந்திரத்திற்கு பிந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.