நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
இனியும் வேண்டாமே பயங்கரவாதத் தடைச் சட்டம்!! பயங்கரவாதத் தடைச் சட்டமானது இலங்கையில் மோசமான மனித உரிமை மீறல்களுக்குத் துணைபோயிருக்கிறது என்று சாடியிருக்கின்றது, அனைத்துவிதமான அநீதிகள் மற்றும் இனவாதங்களுக்கு எதிரான பன்னாட்டு இயக்கம். அதிலும் குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிராக இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் அது குறிப்பிட்டிருக்கின்றது. பயங்கரவாதத் தடைச்ச ட்டத்தின் ஊடாகத் தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்து வைத்தல்கள் இடம்பெற்றுள்ளன, சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளன, சட்டத்தரணியின் துணை இன்றிப் பாதிக்கப்பட்டவரின் ஒப்புதல் வாக்குமூல…
-
- 0 replies
- 321 views
-
-
வடக்கு மாகாண கல்வித் துறையில் கவனம் கொடுக்கவேண்டிய துறையும் கவனிப்பாரற்ற நிலையும் இலங்கையின் பாடசாலைக் கல்வி முறையில் காலத்துக்கு காலம் அறிமுகப்படுத்தப்படும் பல்வேறு புதிய சிந்தனைகளில் வழி அண்மைக்காலத்தில் அதிகம் கவனம் கொடுக்கப்படும் விடயமாக மாறியிருப்பது பாடசாலைகளில் அமைந்துள்ள ஆலோசனை மற்றும் வழிகாட்டல் அலகு (Counselling and Guidance Unit ) ஆகும். ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வரா தனது கட்டுரையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாறிவரும் உலகின் இயல்புக்கும், சவாலுக்கும் ஏற்ற விதத்தில் நமது மாணவர்களைத் தயார்ப்படுத்தவும் அவர்கள் தினம் தினம் சந்திக்கும் பு…
-
- 0 replies
- 1k views
-
-
மிருகபலியும் பெரஹெரக்களில் யானைகளும் Gopikrishna Kanagalingam / இந்து ஆலயங்களில், சடங்குகளுக்காக மிருகங்களைப் பலிகொடுப்பதைத் தடைசெய்வதற்காக, இந்து சமய விவகார அமைச்சுச் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்ற செய்தி, நேற்று முன்தினம் (11) எம்மை எட்டியிருந்தது. இச்செய்தி வெளியானதும், இதை எப்படி ஆராய்வது என்பதில் குழப்பம் நிலவியதென்பது உண்மை தான். ஏனென்றால், இந்து ஆலயங்களில் மிருகபலிகளைத் தடைசெய்யுமாறு, இந்து அமைப்புகளும் இந்து ஆலயங்களில் சிலவும், தொடர்ச்சியான வேண்டுகோள்களை விடுத்து வந்தன. ஆகவே, அவர்களைப் பொறுத்தவரை, அவர்களின் கோரிக்கைகள் மதிக்கப்பட்ட ஒரு விடயமாக இது அமைந்திருக்கிறது. …
-
- 0 replies
- 378 views
-
-
புதிய அரசியலமைப்பு முயற்சி தொடர்பில் சம்பந்தனின் ஆதங்கம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை உள்ளடக்கி புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு இந்தியா உதவி புரிவதுடன் அதற்கான அழுத்தங்களையும் வழங்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். அரசியல் யாப்பை உருவாக்கும் முயற்சி தோல்வியில் முடிவடையுமானால் வடக்கு, கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைவிட தீவிரமான போக்கைக் கொண்ட தமிழ் தலைமை உருவாவதற்கு வாய்ப்பு ஏற்படுமென்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். சபாநாயகர் கரு ஜ…
-
- 0 replies
- 428 views
-
-
இதயசுத்தியுடனான நடவடிக்கையே அரசியல் தீர்வுக்கு வழிவகுக்கும் அரசியல் தீர்வின் அவசியம் குறித்து தமிழ் தரப்பினரால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றபோதிலும் இன்னமும் உறுதியான தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதன் மூலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனாலும் இந்த முயற்சி விடயத்திலும் தொடர்ச்சியான இழுபறி நிலை காணப்பட்டு வருகின்றது. 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்று எதிர்க்கட…
-
- 0 replies
- 336 views
-
-
கடந்த உள்ளுராட்சி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் ஒன்றான செங்கலடி பிரதேச சபையை ( ஏறாவூர்பற்று ) பிள்ளையான் குழுவின் ஆதரவுடன் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா மாவட்ட அமைப்பாளராக இருக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி கைப்பற்றிய போது தமது பிரதேசம் அபிவிருத்தி அடையும் என சிலர் நம்பினர். தமிழ் பிரதேசம் ஒன்று அமைச்சர் ஹிஸ்புல்லாவின் கைகளுக்கு செல்வது தமிழ் மக்களுக்கு எவ்வளவு ஆபத்து என்பதற்கு புல்லுமலையில் அமைக்கப்படும் மஹா மினரல் வோட்டர் தொழிற்சாலை ஒரு எடுத்துக்காட்டாகும். செங்கலடி பிரதேசசபை சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அதிகாரத்தில் இருப்பதை பயன்படுத்தி புல்லுமலை பிரதேசத்திற்கு மட்டுமல்ல அதனை அண்டிய பல கிராமங்களின் நீர்வளங்களை சுரண்டும் தண்ணீர் தொழி…
-
- 2 replies
- 814 views
-
-
யாருக்கு இலாபம் – இந்த வழக்கால்? மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிரதிவாதிகள் பெயர் கூப்பிடப்படும்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எழுந்து நிற்பது கட்டாயம் என்று அறிவுறுத்தி அவரை எழுந்து நிற்கச் செய்திருக்கிறார் நீதியரசர் ஜானக டி சில்வா. ஒரு மாகாண முதலமைச்சராக இருந்தாலும், முன்னாள் நீதியரசராக இருந்தாலும், வயதில் மூத்தவராக இருந்தாலும், நீதியின் முன் எவருக்கும் பாகுபாடு காட்டப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் நீதியரசர் அவ்வாறு அறிவுறுத்தினார் என்பது ஏற்கத்தக்கதே. ஆனால், எந்த நீதிமன்றத்தின் உயராசனத்தில் அ…
-
- 1 reply
- 738 views
-
-
வீடமைப்புப் பணி துரிதம் பெறட்டும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வீடுகளை அமைப்பதில் நீடித்து வந்த இழுபறி நிலை நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. இதன்படி 65ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 25ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான ஒப்பந்தக்காரர்கள் உள்ளிட்ட விடயங்கள் ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டிருந்த போதிலும், எந்த அமைச்சின் கீழ் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதில் இழுபறி தொடர்ந்து வந்தது. அதுவும், அத்துடன் மேலதிகமாக 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகள் இந்தியாவிடமா அல்லது சீனாவிடமா வழங்…
-
- 0 replies
- 247 views
-
-
சீமானின் மேடைப் பேச்சுக்களை அடிக்கடி பார்ப்பதுண்டு. அவற்றில் பிடித்தவற்றை இங்கே இணைக்கப் போகிறேன். உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இந்த மேடைப்பேச்சு தேனியில் இடம்பெற்றுள்ளது. 45:00 நிமிடத்தில் பேசியதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தேன்.
-
- 226 replies
- 23.5k views
-
-
காங்கேசன்துறைமுகத்தின் விரிவாக்கத்தையும் விரைவுபடுத்துங்கள் வடக்கில் உள்ள பெரும் வானூர்தித் தளமான பலாலி வானூர்தித் தளத்தை விரிவாக்கி எதிர்வரும் -மார்கழி மாதம் அங்கிருந்து தென்னிந்தியாவுக்கு வானூர்திச் சேவையை வழங்குவதற்கான பணிகள் துரிதமாக இடம்பெற்றுவருகின்றன. எதிர்வரும் மார்கழி மாதத்துக்குள் முதலாவது வானூர்திச் சேவை பலாலியில் இருந்து தொடங்கப்படும் என்று எதிர்வுகூறப்படுகின்றது. அவ்வாறு நடப்பது மகிழ்ச்சிகரமானது.வரவேற்கத்தக்கது. வான் பறப்புப் பாதையில் உள்ள சிறிய சிக்கல்கள் தீர்க் கப்பட்டதும் பயணத்தைத் தொடங்குவதற்கான அனைத்துப் பணிகளும் முழுமையடைந்துவிடும…
-
- 0 replies
- 273 views
-
-
தொல்பொருள் திணைக்களத்தின் தவறான செயற்பாடுகள் முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைப்பகுதியில் புத்தர் சிலையை வைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. வெலிஓயா விகாரையைச் சேர்ந்த கல்கமுவ சத்வபோதி தேரர் தலைமையிலான புத்தபிக்குகள் குழு கடந்த செவ்வாய்க்கிழமை இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தது. புத்தபிக்குகளின் இந்த முயற்சிக்கு தொல்பொருள் திணைக்களத்தின் வவுனியா முல்லைத்தீவு உதவிப் பணிப்பாளர் உதவியுள்ளமையும் தெரியவந்துள்ளது. குருந்தூர் மலைப்பகுதியில் பௌத்த விகாரை ஒன்றை அமைக்கும் நோ…
-
- 0 replies
- 280 views
-
-
நல்லூரானும் பொற்கூரையும் Gopikrishna Kanagalingam / நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, வெகுவிமரிசையாக இடம்பெற்று வருகிறது. முக்கியமான திருவிழாக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. சாரை சாரையாக, பல்வேறு பகுதிகளிலிருந்தும், அத்திருவிழாக்களில் பொதுமக்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இவற்றுக்கு மத்தியில் தான், நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட பொற்கூரை, சமூக ஊடக வலையமைப்புகளில் முக்கியமான பேசுபொருளாக அமைந்திருக்கிறது. பொற்கூரையை விமர்சிப்போர் தொடர்ந்தும் விமர்சித்துக் கொண்டிருக்க, அதை நியாயப்படுத்துவோர், அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார்கள். வடக்கின் அரசியல் நிலைமை, அ…
-
- 1 reply
- 448 views
-
-
மீள்குடியேற்றத்துடன் விளையாடுகிறது அரசு தசாப்தங்கள் தாண்டி நீடித்த போர் முடிவுக்கு வந்த பின்னரும், பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் அதிகரித்துச் செல்கின்றது. போரினால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தி அவர்களுக்கு அடிப்படைக் கட்டுமானங்களை ஏற்படுத்திக் கொடுத்து, இயல்பு வாழ்க்கைக்கு அவர்களைத் திரும்பச் செய்யவேண்டிய மீள்குடியேற்ற அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடோ குறைந்து செல்கின்றது. 2016ஆம் ஆண்டு மீள்குடியேற்ற அமைச்சுக்கு 14 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டுக்கு வெறும் 750 மில்லியன் ரூபா மாத்திரமே கொழும்பு அரசு ஒதுக்கியிருந்தது. வடக்க…
-
- 0 replies
- 277 views
-
-
பிளவுகளை தவிர்க்கும் வகையில் செயற்படவேண்டியது அவசியம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனுக்குமிடையிலான முரண்பாடு தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எதிர்கால அரசியலில் தனிவழிசெல்லும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இந்த விடயமானது தமிழ் மக்களை பொறுத்த வரையில் அவர்களது அரசியல் எதிர்காலத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சிந்திக்கவேண்டிய நிலைமை தற்போது உருவாகியிருக்கிறது. 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற வடமாகாணசபைத் தேர்தலில் முன்னாள் நீதியரசரான சி.வி.விக்கினேஸ்வரனை தமிழ் தேசி…
-
- 0 replies
- 264 views
-
-
கௌதாரிமுனை காப்பாற்றப்படுமா? மு.தமிழ்ச்செல்வன்…. கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமமே கௌதாரிமுனை, மண்ணித்தலை, கௌதாரிமுனை,விநாசியோடை,கல்முனை போன்ற சிறிய பிரதேசங்கள் இதற்குள் அடங்குகின்றன.115 குடும்பங்களை சேர்ந்த சுமார் 386 பேர் வாழ்கின்றனர் என மாவட்டச்செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கௌதாரிமுனையின் அழகு அல்லது சிறப்பு என்பது ஒன்று அதன் தொன்மை, இரண்டாவது இயற்கை அழகு, குறிப்பாக கௌதாரிமுனையில் காணப்படுகின்ற பளிச் என்ற வெள்ளை மணல் மேடுகள் ஆங்காங்கே வெண்ணிற ஆடைகளில் காட்சிதரும் தேவதைகள் போன்றுள்ளன. அத்தோடு அங்கே காணப்படுகின்ற கண்டல் தாவரங்களும், பனைகளும் கௌதாரிமுனையின் அழக்கினை ம…
-
- 0 replies
- 679 views
-
-
‘முஸ்லிம்களிடம் ஆயுதம்’: கரடிவிடுதல் மொஹமட் பாதுஷா / ஒரு நாட்டின் மீது, இனக் குழுமத்தின் மீது, போர் தொடுப்பதற்கு முன்னதாக, மெல்லமெல்ல ஏனைய மக்கள் மத்தியில், அதற்கான காரணத்தை விதைத்து வருவது, உலக அரசியலுக்குப் புதிதல்ல. முஸ்லிம் விரோத சக்திகள், ஓரிரு முஸ்லிம் நாடுகளில், உயிராபத்தை ஏற்படுத்தும் ஆயுதங்கள் இருப்பதாகச் சொல்லியும் பயங்கரவாதிகள் நிலைகொண்டுள்ளனர் எனக் கூறியும் கொடுங்கோல் ஆட்சி நடப்பதாகச் சித்திரித்தும், அந்நாடுகள் மீது போர் தொடுத்து, உள்நாட்டுக் கலவரங்களை ஏற்படுத்தி, அந்நாடுகளைச் சின்னாபின்னமாக்கியதற்கு, நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக, ஈராக்கில் உயிரழிவை ஏற்படுத்தும் ஆபத்தா…
-
- 0 replies
- 499 views
-
-
ஒடுக்கப்படுவதற்கும் அழிக்கப்படுவதற்கும் உபாயமான, வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்.. இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்டோர் தினமாகும். 150 நாட்களுக்கும் மேலாக காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்காக ஈழத்தில் மக்கள் போராடிக் கொண்டிருக்கும் இன்றைய காலத்தில் இந்த நாள் உலக சமூகத்தால் எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற கேள்வியே எஞ்சுகிறது. ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக பல நூறு நாட்கள் எமது மக்கள் தெருவில் கிடந்து போராடினார்கள். இன்றும் கண்ணீரோடும் கம்பலையோடு்ம் அவர்கள் வாழ்கின்றனர். மனிதாபிமானம் குறித்தும் மனித உரிமை குறித்தும் பேசும் இந்த உலகின் மத்தியில்தான் எ…
-
- 1 reply
- 511 views
-
-
தீர்வு தாமதமாவது பதற்றத்தை அதிகரிக்கிறது அரசியல் தீர்வு தாமதமாவதன் விளைவாக இனங்கள் இடையிலான பதற்றம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. கொழும்பு இது தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி பதற்றத்தைத் தணிக்கக் காத்திரமான நடவடிக்கை எடுக்கவில்லையாயின் அது பாரதூரமான விளைவுகளை நோக்கி இந்த முரண்பாட்டை மீண்டும் நகர்த்தும் என்பது வரலாறு கற்றுத் தந்திருக்கும் பாலபாடம். வெளிமாட்டங்களில் இருந்து வந்து முல்லைத்தீவில் நாயாறு கொக்கிளாய் பகுதிகளில் கடற்றொழில் செய்த சிங்கள மொழி பேசுபவர்களுக்கும் அங்குள்ள உள்ளுர் மீனவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பதற்றம் வெளியூரவர்…
-
- 0 replies
- 472 views
-
-
துரித்திக்கொண்டு இருக்கும் போர் வெற்றிச் சின்னங்களும் எரிந்து கொண்டிருக்கும் காயங்களும்! குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக தீபச்செல்வன் வடக்கு கிழக்கு நிலரப்பின் எத்தனையோ ஏக்கர் நிலப் பகுதிகளை சுதந்திர இலங்கையின் பின்னர் ஈழத் தமிழர்கள் இழந்துவிட்டனர். இலங்கைத் தீவு முழுவதுமுள்ள, ஈழத் தமிழர்களின் வரலாற்றுத் தொன்மங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் வடக்கு கிழக்கில் எஞ்சியிருந்த தொன்மங்களையும் அழித்து ஒழித்துவிட்டு, அங்கு பெரும்பான்மையின மக்களின் தொன்மங்களை நிறுவும் முயற்சிகளை பெரும்பான்மையின மக்கள் முன்னெடுக்கின்றனர். சிவனொளிபாத மலைக்கு செல்லும் வழியில் சிவனொளிபாத மலை என்ற பெயரை புத்த பாதம் என மாற்றப்பட்டுள…
-
- 0 replies
- 344 views
-
-
-பாறுக் ஷிஹான்-இலங்கையில் தற்போது மாறிவரும் காலநிலையை வெற்றிகொண்டு கடந்த 6 மாத காலப்பகுதியில் 3 தடவைகள் வலைவீட்டில் (Net house farming) வெற்றிகரமாக மரக்கறிப் பயிர்ச்செய்கையை செய்து கிளிநொச்சி செல்வா நகரை சேர்ந்த இராஜகோபால் என்கிற விவசாயி சாதித்துள்ளார்.வலைவீட்டில் சின்ன வெங்காயம், கீரை, பூக்கோவா ஆகியவற்றை வெற்றிகரமாக பயிரிட்டு அறுவடை செய்துள்ளார்.கடந்த சில தினங்களிற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு தொகுதி விவசாயிகள் வலைவீட்டில் வெற்றிகரமான மரக்கறி பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் குறித்த கிளிநொச்சி விவசாயியின் தோட்டத்துக்கு களப்பயணம் சென்றிருந்தனர். இதற்கான பயண ஏற்பாடுகளை UNDP நிறுவனம் செய்திருந்தது.முதலில் குறித்த விவசாயியின் வீட்டில் கிளிநொச்சி விவசாய திணைக்களத்தின் ஏ…
-
- 1 reply
- 1.1k views
-
-
குழப்பத்தில் கூட்டு எதிரணி மஹிந்த ராஜபக் ஷ அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஒரு வழி இருக்கிறது. அதனை இப்போது சொல்லமாட்டோம். நேரம் வரும்போது வெளிப்படுத்துவோம் என்று கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும சில வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அதைக் கேட்ட பலரும், 19 ஆவது திருத்தச்சட்டத்தில் எங்காவது ஓட்டை இருக்கிறதா என்று, திருத்தச்சட்டத்தின் வாசகங்களை மீண்டும் ஒரு முறை வரிக்கு வரி படித்துப் பார்த்துக் கொண்டனர். இந்தநிலையில் அண்மையில் கூட்டு எதிரணி ஒரு பரபரப்பைக் கிளப்பி விட்டிருக்கிறது. மஹிந்த ராஜபக் ஷ மாத்திரமல்ல, சந்திரிகா குமாரதுங்கவும் கூட அடுத்த ஜனா…
-
- 0 replies
- 362 views
-
-
அன்னை தெரேசா பிறந்த தினம் ஆகஸ்ட் 26,1910. அன்னை தெரேசா பிறந்த தினம் ஆகஸ்ட் 26,1910. அன்னை தெரேசாவை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த பதிவில் அவருடைய வாழ்க்கை வரலாற்றை கூறியுள்ளேன். பிறந்தது யூகோஸ்லோவியாவில் உள்ள ஸ்கோப்ஜி நகரம். பிறந்த தேதி 26-08-1910 இயற்பெயர் : ஆக்னஸ் கோஞ்செ பொயாஜியூ (Agnes Gonxha Bojaxhin). செல்லப்பெயர் : கோன்ஸா தந்தையின் பெயர் நிகோலா பொயாஜியூ (Nikola Bojaxhin). தந்தையின் தொழில் பிரபலமான கட்டட ஒப்பந்தக்காரர் (யுகோஸ்லோவியாவின் ஸ்கோப்ஜி என்ற நகரின் மிக உயர்ந்த கட்டடங்கள் அவரது பெயரை அலங்கரித்துக் கொண்டு இருந்தன). தாயின் பெயர் திரானி பெர்னாய் (Drane Bernai) தாயின் தொழில் : வ…
-
- 0 replies
- 2.9k views
-
-
அபிவிருத்தித் திட்டங்களில் கூட்டமைப்பின் பங்களிப்பு அவசியம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் புனரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது இரண்டு முக்கிய விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன. ஒன்று ஜனாதிபதி மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதி மற்றையது யாழ். பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறியுள்ள விடயம். முதலில் ஜனாதிபதி கூறியதை எடுத்துக்கொண்டால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் துரித அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக முன்னுரிமை அடிப்படையிலான செயற்திட்டங்களை முன்னெடுக்கவு…
-
- 0 replies
- 231 views
-
-
விளையாடாதீர்கள்! பெரும் விசித்திரமாக எவருமே ஆதரிக்காத ஓர் எல்லை வரம்பு அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகளுக்கான தேர்தலைப் புதிய தேர்தல் முறையின் கீழ் நடத்துவதற்காக நடத்தப்பட்ட தொகுதிப் பங்கீடு தொடர்பான அறிக்கையே, எல்லை வரம்பு அறிக்கை. இதனையே ஒருவர்கூட ஆதரிக்காது நிராகரித்துள்ளார்கள். அதனை நாடாளுமன்றத்தில் முன்வைத்த அமைச்சர்கூட அந்த அறிக்கையை ஆதரிக்கவில்லை. ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜே.வி.பிகூட அதனை ஆதரிக்க எவரும் இல்லாத நிலையில் வாக்கெடுப்பில் இருந்து ஒதுங்கிக்கொண்டது. சனத்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த எல்லை வரம்…
-
- 0 replies
- 401 views
-
-
பௌத்தம் !!! சிங்கள பௌத்தமா ??? தமிழ் பௌத்தமா ???
-
- 1 reply
- 2k views
-