Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த.தே.கூட்டமைப்பின் கோரிக்கை

Featured Replies

சிறுதுளி பெருவெள்ளம்.cleardot.gif வெளிநாட்டில் நமது பிரசாரங்கள் தொடர்கையில், தாயகத்தில் கூட்டமைப்பு தனது பங்கையும் சரிவரச் செய்ய வேண்டும். இரண்டும் இரண்டு கண்கள். ஒரு கை தட்டி ஓசை வெளியே கேட்காது. இயன்றவர்கள் உதவுவதால் கூட்டமைப்பு தனது திட்டப்படி தனது பிரசாரங்களை முன்னெடுக்க முடியும்.

[size=4]NA Global suresh@tnaglobal.org

August 9, 2012

Dear Friends,

As you are aware, there is an Eastern Provincial Council Election being held on September 8, 2012. This is a provincial election, and the result won’t change many things. However, this is an important election, and the TNA is contesting it.

The Provincial Council is a powerless institution, but we must bring it under our control and we must win the Maximum Tamil seats. This will send a message to the Sri Lankan Government as well as to the International Community.

Colombo is using every resource at hand to defeat the TNA.

The TNA needs money to help Tamil voters get to the polls, and for these reasons:

1. The handicapped, people affected by war, and poor people who otherwise cannot get to the polling places need help. The TNA wants provide transportation, but getting cars and buses to take Tamil voters to the polling places costs money, and the TNA does not have it.

2. The TNA needs to print pamphlets and other materials to explain to Tamil voters why this election is important to them, and why they need to vote. The TNA hopes to energize the Tamil voters and raise the pro-Tamil turnout.

3. TNA volunteers need to travel to the places where election work needs to be done. For instance, its about 300 KM between Trincomalee to Potuvil, and the TNA needs to take them back and forth. It costs money, and the TNA is short of money.

We are trying to raise money to win the election. We hope to raise $10,000, and we hope you will help us do it.

Please go to www.tnaglobal.org to make a contribution, if you have not done so already. Every penny contributed goes directly to help the TNA win the EP Election.

Thank you.

Lovingly Yours,

Suresh K. Premachandran,

Member of Parliament, Jaffna District.

Official Spokes Person,

Tamil National Alliance (TNA)

Phone: (94) 777 36 2481

Visit us at www.TNAGlobal.org[/size]

Edited by மல்லையூரான்

ஐம்பது USD நன்கொடையாக வழங்கி உள்ளேன்.

[size=5]இலக்கு : 10,000[/size]

[size=5]தற்பொழுது : 01,515 [/size]

ஐம்பது USD நன்கொடையாக வழங்கி உள்ளேன்.

[size=5]இலக்கு : 10,000[/size]

[size=5]தற்பொழுது : 01,515 [/size]

[size=4]அன்பார்ந்த உறவுகளே![/size]

[size=4]இலங்கையின் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டது. இதனால் அரசும் அதன் அடிவருடிகளும் மாகாணசபையைத் தமது ஆளுமைக்குள் கொண்டுவந்தனர். இதனால் தமிழ் மக்கள் மேலும் மேலும் பலவழிகளில் துன்புறுத்தப்பட்டனர். இவர்களது ஆட்சியில் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். வடக்கு-கிழக்கு இணைப்பு தேவையற்றது எனும் பிரச்சாரம் இவர்களால் மேற்கொள்ளப்பட்டது. அரசியல் தீர்வு தேவையில்லை என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டது. பொலிஸ், காணி அதிகாரங்கள் தேவையே இல்லை என்றுகூட இவர்களால் கூறப்பட்டது. இந்நிலை மாற்றியமைக்கப்பட்டாக வேண்டும். கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தை ஆதரித்து நிற்கிறார்கள். வடக்கு-கிழக்கு இணைப்பை ஆதரித்து நிற்கிறார்கள் என்னும் ஒரு நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். வடக்காய் இருந்தாலும் கிழக்காய் இருந்தாலும் தமிழ் மக்கள் ஒரே சிந்தனையில் இருக்கிறார்கள் என்பதை மீண்டும் மீண்டும் இந்த அரசிற்கும், உலகிற்கும் உணர்த்தப்பட வேண்டும். ஆகவேதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஐந்து கட்சிகளின் கூட்டாகும். இதில் தமிழரசுக் கட்சி மிகப்பெரும்பான்மையான இடங்களில் போட்டியிடுகின்றது. ஏனைய நான்கு கட்சிகளும் 15 ஆசனங்களில் போட்டியிடுகின்றன. இவர்களையும் வெல்ல வைப்பதினூடாகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கட்டுக்கோப்பான, உறுதியான அமைப்பாக முன்னெடுத்துச் செல்ல முடியும்.

ஐந்து கட்சிகளும் ஒரே குடை அமைப்பாக – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகத் தமிழ் மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமாயின் இவர்கள் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வென்றாக வேண்டும்.

அந்த வகையில், இந்தத் தேர்தலை எதிர்கொள்வதற்கான நிதியுதவிகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட தேர்தல் எனும் அடிப்படையில், ஒவ்வொரு வேட்பாளரும் தனக்குரிய மாவட்டம் முழுவதிலும் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு பல இலட்சக்கணக்கில் நிதியுதவிகள் தேவைப்படுகின்றது. ஆகவே உங்களால் இயன்ற உதவிகளைச் செய்து இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்யுமாறு பணிவுடன் வேண்டுகின்றேன்.

நன்றி.

சுரேஷ;. க. பிரேமச்சந்திரன்,

உத்தியோகபூர்வ பேச்சாளர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

பாராளுமன்ற உறுப்பினர்,

யாழ் மாவட்டம்.[/size]

[size=4]அன்பார்ந்த உறவுகளே![/size]

[size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் எதிர்வரும் கிழக்குமாகாணத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். கடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவில்லை. அதனால் இலங்கை அரசாங்கம் ஒரு தமிழரைக் கொண்டுவந்து முதலமைச்சர் பதவியில் அமர்த்திவிட்டு, எமது பூர்வீக நிலங்களையும், இராணுவத்தின் அடாவடித்;தனங்களையும், ஆக்கிரமிப்பையும் மேற்கொண்டு, எமது வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரிய பூமிகளில் எமது அடையாளத்தையே இல்லாமல் செய்கின்ற நிலையை மேற்கொண்டுள்ளது என்பது எம் எல்லோருக்கும் தெரியும். இன்றைய காலக்கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே இலங்கை அரசாங்கம் வடக்கு-கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அடிமைகளாக்கப்பட வேண்டும், எமது வரலாறுகள் சிதைக்கப்பட வேண்டும் எனற நோக்கத்தோடுதான் தனது நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தி வருகின்றது.[/size]

[size=4]எமது உரிமைகளை, எமது இறையாண்மையை, வென்றெடுப்பதற்கும் எமது வாழ்வாதாரப் பிரச்சினைகளை நாங்கள் வெளியுலகிற்கு எடுத்துக் காட்டுவதற்கும் எமது செயற்பாடுகளைப் போராட்டத்தின் ஊடாகவும் முன்னெடுத்துச் செல்வதற்கு எமக்கு அங்கீகரிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தேவை. எனவே கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டாயம் போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.[/size]

[size=4]இன்று வடக்கு-கிழக்கி[/size][size=4]ல் பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. முள்ளிவாய்க்காலில் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளன என்பதை ஐ.நா. சபை நிரூபித்திருக்கின்றது.[/size]

[size=4]ஐ.நா.சபை கொண்டுவந்த இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் பிரச்சினைகள், தமிழ் மக்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை வெளியுலகிற்குக் காட்டுகின்ற அடையாளமாக நாம் இத்தேர்தலைப் பார்க்கின்றோம். தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தண்டனை அனுபவிக்க வேண்டும் தனது தவறுக்கான பெறுபேறுகளை அவர்கள் சந்திக்க வேண்டும் என்ற நிலையில், எமது மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதைத் தமது வாக்கு பலத்தோடு சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டி இந்த அரசாங்கத்தின் முகத்திரையைக் கிழித்தெறியக்கூடிய வகையில் இந்தத் தேர்தலின் முடிவுகள் அமைய வேண்டும். இது சாத்தியப்பட வேண்டுமானால் நாம் கூடுதலான ஆசனங்களைப் பெறவேண்டும் என்பது எனது கணிப்பு. எனவே புலம்பெயர் உயர்வுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகூடிய ஆசனங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித்தருவதற்கான உந்து சக்தியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.[/size]

[size=4]எம்மிடம் ஆற்றல் இருக்கிறது, மனோதிடம் இருக்கிறது, உடலில் வலு இருக்கிறது. ஆனால் இவை அனைத்தையும் கொண்டு செலுத்துவதற்கான நிதி ஆதாரம் எம்மிடம் இல்லாமல் இருக்கின்றது. புலம்பெயர் உறவுகள் நினைத்தால் நிச்சயமாக எமது இந்த நிலையை மாற்ற முடியும். எமக்கு உந்து சக்தியை அளிக்க முடியும். எமது மக்கள் கூடுதலான வாக்குகளைப் பதிவு செய்ய வைக்க முடியும். அவ்வாறு கூடுதலான வாக்குகள் பதியப்பட்டால் எமக்கு நிச்சயம் கூடுதலான ஆசனங்கள் கிட்டும்.[/size]

[size=4]அந்த வகையில் நீங்கள் உங்களது உதவிக்கரத்தை நீட்டி எமது வெற்றிக்குப் பங்காற்ற வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். எமது உரிமைப்போராட்டத்திற்குப் பல இலட்சங்களையும் பொருளையும் வாரிவழங்கிய பெருமை புலம்பெயர் உறவுகளைச் சாரும். அந்த உதவிகளை ஒருபோதும் தாயகம் மறக்காது. அதனைப் போன்றே இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கும் நீங்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். உங்களது உழைப்பும் ஊக்கமும் பொருளுதவியும் நிச்சயம் எம்மை வலுவடையச் செய்யும். எமக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.[/size]

[size=4]தாயகத்தில் செயலாற்றுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்கின்ற குடும்பத்தைப் போன்று உள்ளது. ஆகவே உங்களது ஒத்துழைப்பு இல்லாமல் இத்தேர்தலை நாங்கள் முகங்கொடுப்பது கடினம். உங்களது உதவியோடு இந்த அரசாங்கத்திற்குத் தக்க பதிலடியை வழங்கி எமது இலட்சியப் பயணத்தை மிகவும் நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று கூறி உங்களிடமிருந்து நிதியுதவியை நாடி நிற்கின்றோம்.[/size]

[size=4]நன்றி.

அன்புடன்

அ. செல்வம் அடைக்கலநாதன்,

இணைச் செயலாளர்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

பாராளுமன்ற உறுப்பினர்,

வன்னி மாவட்டம்.[/size]

[size=4]அன்புடையீர்,

தேசப்பற்றுடனும், தமிழ்த் தேசியத்தின் மீது நம்பிக்கை வைத்தும், கிழக்கு மாகாணத் தேர்தலில் அரசாங்கம் கையாளுகின்ற அனைத்து வழிகளையும் முறியடித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெல்ல வைக்க வேண்டும் என்ற நல்ல நோகக்த்தின் அடிப்படையில் உங்கள் உழைப்பை வியர்வையாய்ச் சிந்தி அதில் கிடைத்த ஊதியத்தை இத்தேர்தலுக்கு தேர்தல் நிதியாக வழங்கிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நன்றி.

சுரேஷ; க. பிரேமசச்ந்திரன்,

உத்தியோகபூர்வ பேச்சாளர்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,

பாராளுமன்ற உறுப்பினர்,

யாழ் மாவட்டம்.[/size]

[size=6]இதுவரை சேர்க்கப்பட்டது : 2720. [/size]

[size=6][size="5"]http://www.tnaglobal.org/[/size][/size]

  • தொடங்கியவர்

தொடர்ந்து உதவிசெய்து கூட்டமைப்பின் வெற்றியை நிச்சயம் செய்து கொள்ளப்பாருங்கள் உறவுகளே.

$4456

நன்றி அகூதா மற்றும் முல்லையூரான் உங்கள் முயற்ச்சிக்கு.

நேற்று நானும் எனது பங்களிப்பாக $100௦ அனுப்பினேன். அதன் பின்னர் மொத்தத் தொகையில் எதுவித மாற்றமும் இல்லை.

[size=3]அன்புடையீர்,[/size]

[size=3]தேசப்பற்றுடனும், தமிழ்த் தேசியத்தின் மீது நம்பிக்கை வைத்தும், கிழக்கு மாகாணத் தேர்தலில் அரசாங்கம் கையாளுகின்ற அனைத்து வழிகளையும் முறியடித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெல்ல வைக்க வேண்டும் என்ற நல்ல நோகக்த்தின் அடிப்படையில் உங்கள் உழைப்பை வியர்வையாய்ச் சிந்தி அதில் கிடைத்த ஊதியத்தை இத்தேர்தலுக்கு தேர்தல் நிதியாக வழங்கிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.[/size]

[size=3]நன்றி.[/size]

[size=3]சுரேஷ; க. பிரேமசச்ந்திரன்,[/size]

[size=3]உத்தியோகபூர்வ பேச்சாளர்,[/size]

[size=3]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,[/size]

[size=3]பாராளுமன்ற உறுப்பினர்,[/size]

[size=3]யாழ் மாவட்டம்.[/size]

Edited by Gajen

[size=4][size=4]

நேற்று நானும்[/size] [size=6]எனது பங்களிப்பாக $100௦ அனுப்பினேன்[/size].[size=4] அதன் பின்னர் மொத்தத் தொகையில் எதுவித மாற்றமும் இல்லை.
[/size][/size]

[size=4]இதை பங்களிப்பு என்பதுடன் [size=5]கொடை [/size]என்பதே சரியானதாக இருக்கும். நன்றிகள். [/size]

  • தொடங்கியவர்

[size=4]தொடர்ந்து உதவிசெய்து கூட்டமைப்பின் வெற்றியை நிச்சயம் செய்து கொள்ளப்பாருங்கள் உறவுகளே.[/size]

[size=4]$6197[/size]

  • தொடங்கியவர்

அன்பான புலம்பெயர் மக்களே!

இலங்கை அரசாங்கம் மீண்டுமொரு அரசியல் போரை கிழக்கு மாகாண மக்கள் மீது திணித்துள்ளது. அந்தப் போர்தான் எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலாகும்.

இந்தப் போரில் தமிழர்களின் வெற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உண்மையில் தமிழர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கடந்த காலங்களில் பல ஜனநாயகப் போர்க்களங்களை சந்தித்துள்ளோம். அதில் வெற்றியும் பெற்றுள்ளோம்.

இந்தத் தேர்தலை ஏன் நான் ஜனநாயகப் போர் என்கின்றேன் என்றால் இது இரண்டு இனங்களுக்கு இடையிலான 60வது ஆண்டுகால உரிமைப் போராட்டம். அதில் ஆயுதங்களுடனும் போரிட்டுள்ளோம், ஜனநாயக தேர்தல் களங்களின் ஊடாகவும் போரிட்டுள்ளோம்.

இதில் எந்தப் போராக இருந்தாலும் சரி அதில் வடகிழக்கு தமிழர்கள்தான் தொடர்ச்சியாக வெற்றிபெற்று வருகின்றார்கள்.

மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் எத்தனையோ பிரித்தாளும் தந்திரங்களையும், சூழ்ச்சிகளையும் செய்தபோதும், எத்தனையோ துரோகிகள் ஒன்றிணைந்து எமக்கெதிராக செயற்பட்ட போதும் எத்தனையோ அப்பாவி தமிழர்களின் நெஞ்சுகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த போதும் உச்சிமீது வானிடிந்து வீழ்கின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்ற நெஞ்சுறுதியுடன் உரிமைக்காக போரிட்டும் வென்றுள்ளோம், உரிமைக்காக வாக்கிட்டும் வென்றுள்ளோம்.

இன்றும் அதே போராட்டம் தொடர்கின்றது. தமிழர்களாகிய நாங்கள் ஆயுதங்களை மௌனமாக்கியுள்ளோம். இன்று எங்களுக்கான உரிமைகளை தாருங்கள் என்று கேட்டோம். இல்லை தரமுடியாது. நீங்கள் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல என்று சொல்லி அதை கிழக்குமாகாண தேர்தல் களத்தில் நாங்கள் நிரூபித்துக் காட்டுகின்றோம் என்று மீண்டும் ஒருமுறை சிங்கள அரசும் அவர்களது கைக்கூலிகளும் நெஞ்சை நிமிர்த்தி மார்புதட்டி நிற்கின்றனர்.

தமிழர்களாகிய நாம் தமிழ் தேசிய உரிமைக்கான போராட்டத்தில் பல தடவைகள் வீழ்த்தப்பட்ட போதும் மீண்டும் மீண்டும் எழுச்சி கொண்டு எழுந்த வரலாறு ஜனநாயக தேர்தல் களத்தில் பல தடவைகள் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையிலேயே மீண்டும்ஒரு தடவை சிங்கள தேசம் தமிழர்களின் உரிமையை பறிப்பதற்காக, தமிழர்களின் தாயக மண்ணை இரண்டாக பிரித்து கிழக்கு தமிழர்கள் அரசியல் தீர்வு கேட்கவில்லை என்று சர்வதேசத்திற்கு சொல்வதற்காக கிழக்கு மாகாணத்தில் பல கோடி நிதிகளை செலவளித்து பல சுயேச்சைக் குழுக்களை களமிறக்கி தமிழர்களின் வாக்குகளை சிதறடித்து தமிழர்களின் வெற்றியை தமிழர்களை வைத்தே தடுத்து நிறுத்துவதற்கு மிகப்பெரிய அமைச்சர் பட்டாளங்களுடன் களமிறங்கிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

[size=5]இவ்வாறான காலகட்டத்தில் கிழக்கில் உள்ள சிலர் யதார்த்தத்தை அறியாதவர்களாய் அபிவிருத்தியின்பால் ஆசைகொண்டு தமிழர்களின் உரிமைகளை சிங்கள தேசத்திடம் அடகு வைப்பதற்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறானவர்களை தமிழ் தேசியத்துடன் இணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை கிழக்கு மாகாண தேர்தல் போர்க்களத்தில் வெற்றிபெற வைப்பதற்கு புலம்பெயர் தேசத்தில் உள்ள தமிழர்களும், மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் தமிழர்களும் கிழக்கு மாகாணத்தில் வாழும் தங்களது உறவுகளுக்கு தொலைபேசி மூலமாகவும், ஸ்கைப் ஊடாகவும், மின்னஞ்சல் ஊடாகவும் இந்த விடயங்களை தெளிவுபடுத்தி, வருகின்ற 8ம் திகதி நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு தெரிவித்து தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க துணைநிற்குமாறு அனைத்து புலம்பெயர் தமிழர்களுக்கும் உரிமையுடன் இந்தச் சந்தர்ப்பத்தில் அவசர வேண்டுகோளை விடுக்கின்றோம்.[/size]

“நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் எத்தனை தேர்தல் போர்க்களம் வரினும் தமிழ் தேசியம் வெல்லும்.”

நன்றி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு,

மட்டக்களப்பு மாவட்டம்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

கூட்டமைப்புக்கு உதவியோருக்கு நன்றி. அடுத்த நடவடிக்கையாக கிழக்கு மக்கள் 8ம் திகதி தவறாமல் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

ஏன், கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்? - கிழக்கு புத்திஐீவிகள் அமையம் விளக்கம் [ வியாழக்கிழமை, 06 செப்ரெம்பர் 2012, 14:26 GMT ] [ மட்டக்களப்புச் செய்தியாளர் ]

TNA-house.jpgதமிழ் மக்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் எமக்குள் இருக்கும் கருத்து பேதங்களை மறந்து, அவநம்பிக்கை வாதங்களை புறம்தள்ளி இது எங்களுடைய ‘வீடு’ – இது எங்களுடைய கூட்டமைப்பு - என்பதை உரத்துச் சொல்ல வேண்டிய காலமிது. அவ்வாறு நாம் சொல்ல வேண்டுமாயின், நடைபெறவிருக்கும் மகாணசபை தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றிபெற வேண்டும். அரசாங்க தரப்பில் போட்டியிடும் ஒரு தமிழ் வேட்பாளரும் வெற்றிபெறக் கூடாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தலில் பெறப்போகும் அமோக வெற்றி ஒன்றுதான் – நாங்கள் மாண்டுவிடவில்லை, இருக்கிறோம் என்பதைச் சொல்லும் முரசொலி ஆகும்.

இவ்வாறு த.தே.கூட்டமைப்பிற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதை விளக்கி வெளியிட்ட துண்டறிக்கையில் திருக்கோணமலையை தளமாகக்கொண்ட கிழக்கு புத்திஐீவிகள் அமையம் தெரிவித்துள்ளது.

அத்துண்டறிக்கையின் முழுவிபரமாவது:

வரலாறு எங்களை விடுதலை செய்யும்.

புதிய சூழலில் பழைய அனுபவங்களுடன் மீண்டும் மீடுக்குடன் வாழ்வதற்கான அரசியலை வனைவோம்.

மீண்டும் தேர்தல். மீண்டும் வாக்களிக்கும் படலம். அதே தாளம். அதே பாடல். ஆனால் இப்போது நாம் ஆடும் களம் வேறு.

கடந்த அறுபது வருட காலமாக நமது தலைமைகள் ஆடிய அரசியல் சதிராட்டத்தால் ஆனது என்ன? இப்படியொரு கேள்வி உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் உண்டு.

ஆனாலும் நண்பர்களே! அன்புக்குரியவர்களே!

நாங்கள் ஆடித்தான் ஆக வேண்டியிருக்கிறது. இன்றைய சூழலில், இந்த அரசியல் சதிராட்டத்தில் பங்கு கொள்வது ஒன்றுதான் நமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கிருக்கும் ஒரேயொரு வழியாகும். ஏனெனில், இது நமது தலைமுறைகள் தழுவிய ஆட்டம். இப்பொழுது - நாங்கள் இருக்கிறோம் என்பதைச் சொல்லுவதுதான் மிகப்பெரிய அரசியல் ஆகும்.

இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்கை தாயகமாகக் கொண்டு வாழும், ஈழத் தமிழர்களாகிய நாங்கள் அனைவரும் மாண்டுவிடவில்லை, இருக்கிறோம் - இருப்போம் - எங்களது அடிப்படை உரிமைகளை வெற்றிகொள்வதற்கான தார்மீக வேட்கையை நாம் என்றுமே கைவிடப் போவதில்லை - என்பதை நாம் இலங்கையின் ஆட்சியாளர்களுக்கும், சர்வதேசத்திற்கும் உரத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. அச்சுறுத்தல் என்னும் புகை-மண்டலத்தால் எங்கள் கண்களை நிரந்தரமாக மூடிவிட முடியுமென்று எண்ணுவோருக்கும் நாம் தெளிவான செய்தியொன்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

அதனை எவ்வாறு சொல்லுவது?

பேரன்புக்குரிய தமிழ் மக்களே!

இப்பொழுது நாம் மகாணசபை தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய இக்கட்டு நிலைக்கு ஆளாகியுள்ளோம். இது நமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்றபட்ட ஓர் ஆடுகளம். நீங்கள் கேட்கலாம் - இத்தனைக்குப் பிறகும் மகாணசபையா? – அரசியலில் ஏற்ற இறக்கங்கள் தவிர்க்க முடியாதவை. இத்தகைய ஏற்ற இறக்கங்களுக்கு ஊடாகப் பயணித்துத்தான், நாம் நமது இலக்கை வெற்றி கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனெனில் நாம் கடந்த காலங்களில் சில அரிய வாய்ப்புக்களை தவறு விட்டிருக்கிறோம். இனியும் அத்தகைய தவறுகளுக்கு நாம் இடமளித்துவிடக் கூடாது.

இந்த மகாணசபையில் நாம் பங்குகொள்ள வேண்டியதன் அவசியம் என்ன?

இலங்கைத் தீவில் பாரபட்சமாக நடத்தப்பட்டுவரும் ஈழத் தமிழர்களுக்கு, தங்களை தாங்களே தீர்மானித்து வாழும் ஓர் ஆட்சி முறைமை அவசியம் என்பதை கருத்தளவிலும், கட்டமைப்பு ரீதியாகவும் ஏற்றுக் கொண்ட முதல் அரசியல் முன்மொழிவு மகாணசபையாகும். இது (1987) இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அறுவடை ஆகும். வடக்கு-கிழக்கை அடிப்படையாக் கொண்டு இதுவரை நமது தலைமைகளால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து அரசியல் முன்னெடுப்புக்களுக்கும் பக்கத்துணையாக இருந்ததும், இருப்பதும் இந்த மகாணசபை முறைமைதான். இதன் காரணமாகவே மகாணசபை முறைமையை அங்கீகரிக்கும் 13வது திருத்தச் சட்டத்தை அரசியல் யாப்பிலிருந்து நீக்க வேண்டுமென்று, சில அடிப்படைவாத சக்திகள் கோரி வருகின்றனர்.

மகாணசபை தோற்றம்பெற்ற காலத்தில், அதனை நாம் ஒரு அட்சயபாத்திரமாக பயன்படுத்தியிருக்க முடியும். அதனை அடித்தளமாகக் கொண்டு எங்களுக்கு தேவையான பலவற்றை பின்னர் அள்ளியெடுத்திருக்க முடியும். ஆனால் அரசியலில் 'தக்கன பிழைக்கும்' (Survival of fittest) கலையை நாம் சரிவரக் கற்காததால், கைக்கெட்டிய ஒன்று வாய்க்கு எட்டாமல் போனது. இதனால் மீண்டும் பழைய ஆட்டமொன்றுக்குள் புதிய சுலோகங்களுடன் நுழைய வேண்டிய இக்கட்டு நிலைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம்.

நமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், நாம் இந்த ஆட்டத்தில் பங்கு கொள்ளத்தான் வேண்டும். நாம் இதனைச் சரியாக கையாளாது விட்டால், இப்போது நமக்கு கிடைத்திருக்கும் (Political Space) அரசியல் வெளியையும் நாம் இழக்க நேரிடலாம். இறுதியில் நாம் பட்டுவேட்டிக்கு ஆசைப்பட்டு, இருக்கும் கோவணத்தையும் இழந்த கதைக்கு ஆளாகலாம்.

இன்று, வரலாறு நமக்கு பல்வேறு படிப்பினைகளைத் தந்துள்ளது. அந்த வரலாற்று படிப்பினைகளின் படி, நமது அரசியல் தலைமை முன்னகர ஆரம்பித்திருக்கின்றது. இதற்கு மக்களாகிய நாம் பக்கபலமாகவும் உந்துசக்தியாகவும் இருக்க வேண்டும். அதுவே நமது வரலாற்றுக் கடமையாகும்.

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பானது, மகாணசபை தேர்தலில் முதல் முதலாக போட்டியிடுகின்றது. இன்று - வீட்டுச் சின்னத்தின் கீழ் அணிதிரண்டிருக்கும் அனைத்து கட்சிகளும், தமிழ் மக்களின் ஒன்றுபட்ட அரசியல் சக்தியாக பரிணமித்திருக்கின்றன. இப்போது நமக்கிருக்கும் ஒரேயொரு பலம் - தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் பல்வேறு தரப்பினரும் ஓரணியில் நிற்கின்றனர் என்பது மட்டும்தான். இந்த பலத்தை நாம் ஒரு பேரம் பேசுவதற்கான அரசியல் பலமாக மாற்ற வேண்டுமாயின் மகாணசபையை நாம் கட்டாயமாக கைப்பற்றியாக வேண்டும்.

தமிழ் மக்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் எமக்குள் இருக்கும் கருத்து பேதங்களை மறந்து, அவநம்பிக்கை வாதங்களை புறம்தள்ளி இது எங்களுடைய ‘வீடு’ – இது எங்களுடைய கூட்டமைப்பு - என்பதை உரத்துச் சொல்ல வேண்டிய காலமிது. அவ்வாறு நாம் சொல்ல வேண்டுமாயின், நடைபெறவிருக்கும் மகாணசபை தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றிபெற வேண்டும். அரசாங்க தரப்பில் போட்டியிடும் ஒரு தமிழ் வேட்பாளரும் வெற்றிபெறக் கூடாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தலில் பெறப்போகும் அமோக வெற்றி ஒன்றுதான் – நாங்கள் மாண்டுவிடவில்லை, இருக்கிறோம் என்பதைச் சொல்லும் முரசொலி ஆகும்.

இப்போது நமது கடமை என்ன?

வாக்காளர்களாகிய தமிழ் மக்கள் முன் இரண்டு பிரதான கடமைகள் இருக்கின்றன.

1.வீட்டுச் சின்னத்தின் கீழ், தமிழ் மக்களின் ஒன்றுபட்ட சக்தியாக களமிறங்கியிருக்கும் - தமிழ் தேசியக் கூட்டமைப்பை அமோக வெற்றிபெறச் செய்வது. கூட்டமைப்பு அதிகூடிய ஆசனங்களை பெற வேண்;டுமாயின் மக்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும். குறிப்பாக வசிதியுள்ள மத்தியதரவர்க்க தமிழ் மக்கள் வாக்களிப்பில் பெரியளவில் நாட்டம் கொள்வதில்லை. ஆனால் ஒன்றை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேலும் பலமிழக்குமாயின் நீங்கள் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் வசதிகளையும் இழக்க நேரிடலாம். ஒரு அரசியல் அமைப்பு என்பது அந்த சமூகத்தின் பாதுகாப்பு. அந்த சமூகத்தின் அடையாளம். ஆந்த வகையில் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் த.தே.கூட்டமைப்பின் பக்கமாக அனைவரும் அணிவகுக்க வேண்டும்.

2.சரியான வேட்பாளரை தெரிவு செய்வது - சரியான வேட்பாளர் என்று நாங்கள் குறிப்பிடுவதற்கு பிறிதொரு காரணம் உண்டு. அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற முடியாது. ஒரு சிலர்தான் வெற்றீயீட்ட முடியும். எனவே அவ்வாறு நீங்கள் தெரிவு செய்யும் அந்த ஒரு சிலர் மக்களது பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பவர்களாகவும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெற்றி கொள்ளும் தார்மீகப் பயணத்திற்கு தொடர்ந்தும் தோள் கொடுக்கக் கூடியவர்களாகவும் இருப்பது கட்டாயமானதாகும். அத்தகைய வேட்பாளர்களை மக்கள் தெரிவு செய்யும் போதே ஒரு மக்கள் கூட்டம் தங்களின் கடமையை சரியாகச் செய்வதாக பொருள் கொள்ளப்படும். எனவே வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது அவர்களது கடந்தகாலம், தனிப்பட்ட நடத்தை, அறிவு ஆகியவற்றை துல்லியமாக மதிப்பிட வேண்டிய பொறுப்பு மக்களாகிய உங்களுக்கு உண்டு. தகுதியற்றவர்களை தங்களின் தலைவர்களாக தெரிவு செய்யும் சமூகம் தனக்குத்தானே புதைகுழியை தோண்டிக் கொள்கின்றது.

எமது மக்கள் சரியான காலத்தில், சரியான முடிவை எடுப்பார்கள் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு.

பேரன்புக்குரிய தமிழ் மக்களே!

வரலாற்றின் விசித்திர வெளியில் எங்களுக்கான வாய்ப்புக்கள் இன்னும் முழுமையாக அற்றுப் போய்விடவில்லை. அத்தகையதொரு அவநம்பிக்கை நமக்கு வேண்டியதுமில்லை. காலம் - அத்தகைய வாய்ப்புக்களுடன் அச்சொட்டாகப் பொருந்திப் போகுமொரு தருணத்தில் - எங்களது வெற்றி தீர்மானிக்கப்படும். அதுவரைக்கும் தலைமுறைகள் தழுவிய எங்களது ஆடுகளத்தை, உயிர்ப்பாக வைத்திருப்பது ஒன்றே எங்களது வரலாற்றுக் கடமையாகும்.

"வரலாற்றிலிருந்து நாம் எதைக் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்றால் எதையுமே கற்றுக் கொள்ளவில்லை என்பதைத்தான்" - ஜேர்மனிய அறிஞர் ஹெகல்.

வரலாறு எங்களை விடுதலை செய்யும்.

கிழக்கு புத்திஐீவிகள் அமையம்

திருகோணமலை

http://www.puthinappalakai.com/view.php?20120906106935

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.