Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழம் வேண்டாம் பெர்லினில் நடக்கும் இரகசிய மகாநாடு!

Featured Replies

தமிழீழம் வேண்டாம் பெர்லினில் நடக்கும் இரகசிய மகாநாடு!

எதிர்வரும் 26.27 திகதிகளில் ஜேர்மன் நாட்டின் பெர்லின்
நகரில் தென்னாபிரிக்க தலைமயிலான இலங்கை ஈழ தமிழருக்கான
தீர்வு தொடர்பாக பேச படும் இரகசிய தீர்மானங்கள்
நிறைவேற்ற படவுள்ளன. இதன் அடிப்படையில் உலக தமிழர் பேரவை .மக்கள் பேரவை .தமிழ் தேசிய கூட்டமைப்பு .போன்றன பங்கு பெறுகின்ற இந்த மூன்று கட்சிகளும் தாம் தொடர்ந்து ஒருங்கிணைந்த இலங்கைக்குள் வாழ தயார் என தெரிவித்துள்ளனர்
இதன் அடிப்படையில் இந்த இரகசிய தீர்மானம் நிறைவேற்ற படவுள்ளது இந்த மூன்று கட்சிகளும் தாம் தொடர்ந்து ஒருங்கிணைந்த இலங்கைக்குள் வாழ தயார் என தெரிவித்துள்ளனர்
இதன் அடிப்படையில் இந்த இரகசிய தீர்மானம் நிறைவேற்ற படவுள்ளது!
1997ம் ஆண்டு வட்டு கோட்டை தீர்மானத்தின் பொழுது தந்தை செல்வாவினால் தனி தமிழீழம் என்ற கோரிக்கை முன் வைக்க பட்டது, அதன் படி அவரின் பின்னர் எழுந்த தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுத ,அரசியல் போராட்டம் அதனை முன் நிறுத்தி போராடியது.
இதுவரை மூன்று லட்சத்துக்கு மேற்பபட்ட தமிழர்களை பலி கொண்ட
சிங்கள இனவாத அரசுகளுடன் எவ்விதம் மேலும் தமிழர்கள் இணைந்து வாழ முடியும் என இந்த பேரவை கும்பல்கள் கூறுகின்றன ..?
ஐநா மனித உரிமை கூட்ட தொடர் எதிர்வரும் பங்குனி மாதம் இடம்பெற உள்ள நிலையிலும் அமெரிக்கா இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்ற உள்ள நிலையிலும் அதன் பின் பாதுகாப்பு சபையில் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க
உள்ளதான நிலை தோன்றியுள்ள நிலையிலும் அதனை தடுக்கும் சீர் குலைக்கும் முயற்சியில் கோத்த பாய தனது புலனாய்வு இராச தந்திர நகர்வுகளை முடுக்கி விட்டுள்ள நிலையில் அவர்களின் அந்த சகதிக்குள் இந்த பேரவை கும்பல் சிக்கி சீரழிகிறது!
எங்களுக்கான தனி இறமையுள்ள ஒரு தீர்வு ஐநாவின் வழியாக கிடைக்க உள்ள நிலையில் இப்படியான திட்டமிட்ட செயற்பாடுகள் நடைபெறுகின்றன!

 

From face book

Blue bird

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் வேண்டாம் என்று சம்பந்தன் சொல்லலாம்.. சுமந்திரன் சொல்லலாம்.. சங்கரி சொல்லலாம்.. ஏன் புலம்பெயர் புண்ணாக்குத் தலைவர்கள் சிலர் சொல்லலாம்...

 

ஆனால் தமிழ் மக்கள்.. தமிழீழத்திற்கு ஆயுதப் போராட்டம் உச்சம் பெற முதலே வாக்களித்துவிட்டனர். அதுவே வட்டுக்கோட்டைப் பிரகடனத்துக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம். அதன் பின்னர்.. 2004 தேர்தலில் புலிகளுக்கு மக்கள் வழங்கிய ஆதரவு சொல்லிவிட்டது.. புலம்பெயர் நாடுகளில்.. வட்டுக்கோட்டைப் பிரகடனம் மீதான மீள் வாக்குப்பதிவு 99% வாக்குகள் வாங்கி மக்களின் மீள் விருப்பை 2009 மே க்குப் பின்னர் உறுதி செய்துவிட்டுள்ள நிலையில்.. தமிழீழத்தை.. வேண்டாம் என்று சொல்லுறவை சொல்லிட்டு இருக்க வேண்டியது தானே தவிர மக்களை அதனைச் சொல்லச் செய்ய முடியாது.

 

தென்னாபிரிக்காவில்.. வெள்ளையின ஆட்சியில்.. ஒரு பங்கு வாங்கிக் கொண்டு அருகில் உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி இருந்தால் மண்டேலா ஏற்றுக் கொண்டிருக்கலாம்.. ஆனால் தென்னாபிரிக்க கறுப்பின மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பரா. இல்லை அல்லவா.. அதுபோல் தான் இதுவும்..!

 

எல்லோரும் வரலாற்றில் இருந்து பாடம் படிக்கனும் என்று சொல்லினமே தவிர.. ஆனால் எதனையும் வரலாற்றில் இருந்து படிப்பதாகத் தெரியவில்லை. மாறாக நரித்தனங்களை வெளிப்படுத்தி தவறுகளையே அதிகம் செய்கின்றனர். இது மக்கள் சலிப்படைந்து மீண்டும் ஆயுதத்தை நாடவே வகை செய்யும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சந்திப்பில் "சுதந்திர தமிழீழமே ஈழத் தமிழர்களுக்கான நிலையானதும்- நீதியானதுமான அரசியல் தீர்வாக இருக்கும்" என்ற நிலைப்பாட்டினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத் தரப்பு பிரதிநிதிகள் வலியுறுத்தியிருந்தனர்.

 

அதனால் அவர்களை தவிர்த்து விட்டு பிற புலம்பெயர் தமிழ்அரசியல் தரப்பினை அழைத்து ஓன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வொன்றினை காணும் நிகழ்சி நிரலுக்குள் கொண்டுவருவதற்கனா இரகசிய மாநாடொன்றிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

என்று இந்த திரியில் கூறப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=115514

 

இவ்விடயத்தில் நாடுகடந்த அரசாங்கம் கூறியதே சரி. ஏனைய அமைப்புகளும் தமிழீழத்துக்கான அவசியத்தை வலியுறுத்த வேண்டும்.

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.