Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு தொலைக்காட்சியால் என்ன செய்ய முடியும்?

Featured Replies

ஒரு தொலைக்காட்சியால் என்ன செய்ய முடியும்?
                


            
பதிவு செய்த நாள் -    / மார்ச் 22, 2013  at   10:16:30 PM

            
        


     

எந்தவொரு பொதுப் பிரச்சினையிலும் கருத்தொருமிப்பை உற்பத்தி செய்யும்
வலிமை கொண்டவை ஊடகங்கள். உண்மையை ஊருக்குச் சொல்லுவதும் ஊடகங்களால்
சாத்தியம்; உண்மையை மறைப்பதும் அவற்றால் சாத்தியம்.


ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்று கிளர்ந்தெழுந்த்த தமிழக மாணவர்
சமூகத்திற்கு முகம் கொடுத்தது புதிய தலைமுறை தொலைக்காட்சி. நீதிக்கான
அறப்போராட்டம் பற்றிய தொடர் நேரலைகள், இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள்
சபையின் மனித உரிமைக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதில் முக்கியப்
பங்கு வகித்தன.


2009 ஆம் ஆண்டில் புதிய தலைமுறை தொலைக்காட்சி இருந்திருந்தால் நான்காவது
ஈழப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுகூட தடுக்கப்பட்டிருக்கும்
என்கிற அளவுக்கு இளம்வழுதி போன்ற தமிழக சட்டப்பேரவை ஊழியர்கள் போற்றிப்
பாராட்டியிருக்கிறார்கள்.


2009 ஆம் ஆண்டில் தமிழகத்தில் முன்னணி தொலைக்காட்சிகளாக இருந்த இரண்டுமே
(சன் நியூஸ், கலைஞர் செய்திகள்) எப்படியெல்லாம் இலங்கைப் போரின்
இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற அத்துமீறல்களை, பேரழிவை மறைத்தார்கள் என்பது
அனைவரும் அறிந்ததே. அப்போது நடந்தவற்றை உறுதியாக படம் பிடித்துக் காட்ட
முயற்சித்த மக்கள் தொலைக்காட்சி மீது அடக்குமுறை ஏவப்பட்டது வரலாறு.


இப்போது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பன்னிரண்டு வயது மகன்
பாலச்சந்திரன் சிறைபிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை உறுதி செய்த
பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சிக்கு இந்த நீதியின் போராட்டத்தில் பெரும்
பங்கு இருக்கிறது.


அறத்திற்கான தேடலில், ஊடகங்களுக்கு சிறப்பான இடம் இருக்க முடியும்
என்பதை சேனல் 4 மறுபடியும் உறுதி செய்திருக்கிறது. சமூகத்தின்
அடித்தட்டுகளில் அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத கடைநிலைகளில் வாழும்
மக்களுக்கு முகம் கொடுப்பதன் மூலம் ஓர் ஊடக நிறுவனமோ, அரசியல் அமைப்போ
சமூகத்தில் மக்களின் அங்கீகாரத்தை, வரவேற்பைப் பெறுகின்றன.


அறம் நிலைக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படும்
செயல்பாடுகளுக்கு சமூகம் தருகிற மரியாதை இது. மாணவர்களின் எழுச்சியை தமிழக
முதல்வர் ஜெயலலிதா, “மக்களின் நியாயமான கோபத்தின் வெளிப்பாடு” என்று
வர்ணித்தார்.


மக்களின் கோபத்துக்கு மதிப்பளித்து கடைசியாக தி.மு.கவும் மத்திய
அரசைவிட்டு வெளியேறியது. இது காலம் கடந்த நடவடிக்கை; இதனால் என்ன
ஆகப்போகிறது என்றெல்லாம் சந்தேகம் எழுப்புகிறவர்கள் ஒருபுறம் இருந்தாலும்,
நம்பிக்கையை மட்டுமே நெஞ்சில் சுமந்து அறிவோடும் அற உணர்வோடும் அடுத்த
கட்டம் என்ன என்று போராடுகிறவர்கள் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வல்லுறவுக்கு
ஆளாக்கப்பட்டதற்கு எதிராக தன்னெழுச்சியோடு வீதிக்கு வந்து போராட்டம்
நடத்திய இளம் தலைமுறையினர், பெண்களுக்கு எதிரான வன்முறையாளர்கள்
அஞ்சக்கூடிய சட்ட திருத்தங்களுக்கு அடித்தளமாக இருந்தார்கள்.


நியாயத்திற்கான அறைகூவலை ஒரு தொலைக்காட்சியால் மக்களிடம் எடுத்துச்
செல்ல முடியும் என்பதை இரண்டு வாரங்களுக்கு மேலாக நடைபெற்ற தமிழக மாணவர்
எழுச்சி பற்றிய தொடர் செய்தி சேகரிப்புகள் நிரூபித்துள்ளன.


ஈழத்தமிழர்களுக்கு சம உரிமை கிடைப்பதற்கு எப்படியான அரசியல் முன்
நகர்வுகள் தேவை என்பது பற்றி ஊடகப்புலத்தில் தொடர் விவாதங்களுக்கும் இந்தப்
போராட்டங்கள் வழிவகுத்துள்ளன. ஒரு தொலைக்காட்சிக்கு சமூக அர்ப்பணிப்பு
உணர்வு இருக்க முடியும் என்பதற்கு இந்தப் போராட்டம் பற்றிய தொடர் செய்திகள்
சிறந்த எடுத்துக்காட்டு.


இதனால் என்ன ஆகிறது என்று கேட்பதைவிட, இதற்குப் பின்னால் இருக்கும்
நியாயத்திற்கான வேட்கையைப் புரிந்துகொண்டு அதற்கு வாழ்த்துக்களைச் சொல்வதே
சிறப்பு.


-பீர் முகமது.

 

 

http://puthiyathalaimurai.tv/the-power-of-puthiya-thalaimurai-channel

புதிய தலைமுறை தொலைக்காட்சியை தாக்கும் காங்கிரஸ்

 

http://www.youtube.com/watch?v=MTwC6Qo2Y0I

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.