Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''ராஜா (பக்‌ஷ) வேஷம் கலைஞ்சு போச்சு! டும்..டும்..டும்...!!''

Featured Replies

mahinda-rajapaksa1.jpg

இலங்கைத்தீவின் நவ பௌத்த காவலரணில் குந்தியுள்ள வகையறா தொகையறாக்களில் ஒன்றான 'ராவண பலய' அல்லது ராவணா சக்தி, தமிழக திரையுலக நட்சத்திரங்களை குறிவைத்தமைக்கான பச்சைக்கொடி ஶ்ரீலங்காவின் திரைப்படக் கூட்டுத்தாபனத்திலிருந்து கிளம்பிவிட்டது.

 

குறிப்பாக, தமிழக நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், சரத்குமார், விஜயகுமார் போன்றோர் நடித்த திரைப்படங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய வேண்டுமாயின் சிறப்பு அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென ஶ்ரீலங்கா திரைப்படக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது.

 

புதிய நடைமுறையின் அடிப்படையில் மேற்படி நடிகர்கள் நடித்த திரைப்படங்களை இறக்குமதி செய்ய வேண்டுமாயின் மகிந்த & co வின் அமைச்சரவை அனுமதி அவசியம் எனவும் குறிப்பிடப்படுகிறது. அதாவது, இலங்கைக்கு எதிராக செயற்படுபவர்கள் என்ற அடிப்படையில் மேற்படி நடிகர்களின் படங்களை 'தணிக்கை' செய்யும் புதிய கைங்கரியத்தையும் மகிந்த & co அமைச்சரவை கையில் எடுக்கிறது.

 

மியன்மார், ஶ்ரீலங்கா ஆகிய நாடுகளிலுள்ள பௌத்த பிக்குகள் அகிம்சை வழியைச் சிந்திக்க வேண்டுமென இடித்துரைத்தாலும், ராவண பலயவின் 'சத்தாதிஸ்ஸ தேரர்' போன்றவர்கள் தமிழக திரைத்துறை நடிகர்களுக்கு எதிரான தடைகளுக்கு சட்டரீதி அங்கீகாரம் தேட தமது காவி உடைகளை வரிந்துகட்டிக்கொண்டு கிளம்பிவிட்டனர். அவ்வாறான வரிந்துகட்டலின் ஒரு விளைவாகத்தான் தமழிக நடிகர்களின் திரைப்பட இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடு செருகப்பட்டுள்ளது.

 

தாமே முன்னின்று இயக்கும் பலசேனாக்களும், உறுமயக்களும், பலயக்களும் போடும் பௌத்த குத்தாட்டத்தை மகிந்த & co உள்ளூர ரசித்துத் தட்டிக்கொடுக்கும் நிலையில், கமல்-ஶ்ரீதேவி நடித்த மூன்றாம்பிறை திரைப்படத்தில் வரும் 'நரிக்கதைப் பாட்டு' சற்று நினைவுக்கு வருகிறது. அதிலும் குறிப்பாக, நீலச்சாயம் வெளுத்துப் போச்சு டும்..டும்..டும்... ராஜாவேஷம் கலைஞ்சு போச்சு டும்..டும்..டும்... என்ற வரிகள் மகிந்தவின் மத்தல விமான நிலையத்தில் மத்தளமாக அடிக்கின்றன.

 

ஶ்ரீலங்காவின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையம் என்ற பெருமையைப் பெறுவதற்காக தனது 'ராஜபக்ச' குடும்பப் பெயரில் இதனை மகிந்த அதிகார மையம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திறந்து வைத்திருந்தது. அனைத்துலக விமானங்கள், ராஜபக்ச இன்டர்நஷனல் எயார்போர்ட்டில் தரையிறங்கி தமது ஒலிகார்க்கி (Oligarchy) இராச்சியத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற வரட்டுப் பெருமை ஒன்றுக்காக மட்டும் கோடானுகோடிகளைக் கொட்டி மத்தல விமான நிலையம் உருவாக்கப்பட்டது.

 

அதனைவிட கட்டுநாயக்க பண்டாரநாயக்கவை முத்தமிடாமல் மத்தல ராஜபக்சவை விமானங்கள் முத்தமிட வேண்டுமென்பதற்காக விமான நிறுவனங்களுக்கு பல சலுகைகளும் வீசியெறியப்பட்டிருந்தன. ஆனால்... ஆறு வாரங்கள் கூட ஆகவில்லை! அதற்கிடையில் 'மத்தலவின்' சாயம் வெளுத்துவிட்டது! மத்தலவின் முதலாவது அனைத்துலக விமான சேவையாக ஆரம்பிக்கப்பட்ட எயார் அரேபியா, தற்போது மத்தலவை வெறுத்து ஒதுக்கிவிட்டது. இந்த மாதத்துடன் தற்காலிகமாக மத்தல சேவைகளை இடைநிறுத்துவதாக எயார் அரேபியா குறிப்பிடுகிறது.

 

இனியென்ன, கிடைத்த ஒரேயொரு அனைத்துலக வாடிக்கையாளரும் கைநழுவி விடக் கூடாதென்பதற்காக சில தில்லாலங்கடிகளை மேலும் செய்து, மத்தலவில் எயார் அரேபியாவைத் தக்கவைக்க மகிந்த & co கடுமையாக முயலலாம். ஆனால் புத்தம்புதிய விமான நிலையம் ஒன்றை மையப்படுத்தி அது திறக்கப்பட்டு சில வாரங்களில் எடுக்கப்பட்ட இந்த முடிவின் கருத்தியல் மிக முக்கியமானது.

 

அதாவது நாட்டின் வளர்ச்சிக்கு உகந்த வகையிலான திட்டமிடலைவிட தமது அதிகாரமைய பெருமைகளுக்கான 'டமாரங்களின்' திட்டமிடலாகவே மகிந்த & co வின் பெரும்பாலான நகர்வுகள் இருப்பதையே இது புலப்படுத்துகிறது. 'ஹம்பாந்தோட்டை' தமது குடும்ப பூர்வீகத்தின் இடம் என்பதற்காக புவியியல் ரீதியில் பொருந்தாத துறைமுகங்களையும் விமான நிலையங்களையும் மகிந்த அதிகார மையம் கட்டியெழுப்பினாலும் 'கடைவிரித்தோம், கொள்வார் இல்லை' என்பதாக கதை மாறிவிட்டது.

 

நிர்மாணக் கட்டளைகள் கிடைத்தாலே இலாபம் எனக் கருதும் சீனா போன்ற அனைத்துலகப் பங்காளிகளும் கொழும்புக்கு உதவுவதால் கட்டடங்கள் எழும்புகின்றன. ஆனால் நோக்கம்தான் கடுமையாகத் தள்ளாடுகிறது. நாட்டின் வளர்ச்சி குறித்த நோக்கம் இவ்வாறு தள்ளாடினாலும், தமிழினத்தின் கையறு நிலையில் அரசியல் பார்க்கும் வேலைகள் தளராமல் செல்கின்றன.

 

இனரீதியில் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் வடக்கில், அவர்களின் தீர்மானம் எடுக்கும் சக்தியைக் குறிவைத்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட காய்களை நகர்த்துகிறது. வடக்கில் தமது பூர்வீக நிலங்களை இழந்த மக்களுக்கு இதுவரை நீதிவழங்கப்படாத நிலையில், தனது 'வாக்காளர் பதிவு' விசேட ஏற்பாட்டு சட்டமூலத்துக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார் ஶ்ரீலங்காவின் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்!

 

வடமாகாண சபைத் தேர்தலை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த நகர்வின் மூலமாக இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் வடக்கே வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதாவது, வாக்காளர்களாக தகைமை பெறுவதற்குரிய முகவரி குறித்த அவசியம் அற்ற வகையில் அவர்கள் தமது முன்னைய இடங்களில் வாக்களிக்கும் சூட்சுமத்துடன் இந்த அவசரச் சட்டம் தயாரிக்கப்படவுள்ளது.

 

வடக்கிலிருந்து வெளியேறிய முஸ்லிம் மக்களுக்குரிய வாக்குரிமை மறுக்கப்பட முடியாதது என்பதில் ஐயமில்லை! ஆனால் 'விசேட ஏற்பாடுகள்' மூலமாக முகவரி குறித்த அவசியம் ஏதுமல்லாமல் ஒரு முஸ்லிம் வாக்களிக்கும் சமகாலத்தில் நிரந்தர முகவரியிருந்தும் தனது வாக்குரிமையைப் பயன்படுத்த முடியாமல் ஒரு தமிழர் இருப்பாரேயானால், அவ்வாறான நிலைமை தமிழ் - முஸ்லிம் பதற்றத்தையும் வளர்க்கக் கூடும்.

 

தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் தமிழ் - முஸ்லிம் உறவு மிகவும் அவசியமானது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் மிகப்பெரிய இன்னல்களை சுமந்த தமிழ் மக்களுக்குரிய முன்னுரிமையைப் புறந்தள்ளி, முஸ்லிம் மக்களுக்கான சிறப்பு மீள்குடியேற்றம் மற்றும் அவர்களின் வாக்குரிமைக்கான சிறப்புச் சட்டம் என்பதான அரசியல்மயப்பட்ட நகர்வுகள் எடுக்கப்பட்டால் அது நிச்சயமாகவே தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்துவதாகவே அமையும்.

 

தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், நல்லுறவு என்ற போர்வையில் எடுக்கப்படும் அரசியல் சுயலாப நகர்வுகள் மீண்டும் மீண்டும் தப்பான அபிப்பிராயத்தையே ஏற்படுத்தும் என்பதை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் உணர வேண்டும்.

 

பொதுசன வாக்குரிமை என்பது மக்களுக்குள்ள இறைமையின் முக்கிய அம்சங்களில் ஒன்றென்பது மறுக்கப்பட முடியாதது. ஆனால் இதில் தமிழ் என்றும், முஸ்லிம் என்றும் வேறுபாடு காணப்பட முடியாதது அவ்வாறான இறைமையைவிட முக்கியமானதாகும்.

 

http://tamilworldtoday.com/?p=10723

Edited by Kashni

புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதைப் பற்றி அதியுச்ச மனச்சாட்சியுடன் நேர்மையாக கருத்து தெரிவிக்கும் தமிழ் நடுநிலையாளர்கள் ஏனோ தமிழ் மக்கள் முஸ்லீம் அரசியல் தலைவர்களால் பாதிக்கபடும்போது மூச்சு கூட விடுவதில்லை.அவர்களின் மனச்சாட்சி புலிகளை நோக்கி குற்றம் சாட்டும் போது  மட்டும் தான் தட்டி எழுப்பபடுமோ? புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றிய போது தமிழ் மக்கள் அதை எதிர்க்கவில்லை என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் இவர்கள் தமிழ் மக்கள் மீது சிங்கள இனவாதிகளால் எடுக்கபட்ட எல்லா நடவடிக்கையைகளையும் முஸ்லீம்கள் எதிர்க்கவில்லை மட்டுமல்ல அதற்கு ஆதாரவாகவும்  இருந்ததை எவராலும் மறுக்க முடியாது.

 

அதற்காக புலிகளின் தவறுகளை நான் நியாயபடுத்தவில்லை. முஸ்லீம்களுடம் நாம் தமிழர்கள் சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும் என்பதை ஏற்றுகொள்ளும் அதேவேளை அவர்கள் பக்கத்து தவறுகளை மறைத்து தமிழர்கள் மட்டும் குற்றவாளிகளாக காட்டப்படுவதை ஏற்றுகொள்ள முடியாது. இதற்கு மாற்றுகருத்து இருந்தால் யாராவது தெரிவிக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.