Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறப்போர் -தமிழகத்தில் 28.07. அன்று வெளியீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

dzr86cop.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

7umh9q7n.jpg

Edited by செங்கொடி

  • கருத்துக்கள உறவுகள்

இது எம் பிள்ளைகளின் அறப்போர் !
----------------------------------------------------

பாலசந்திரன்.. வீதியெங்கும் எம்பிள்ளைகளையெல்லாம் பெரும் கதறலுடன் ஓடி வர வைத்தவன். அவனின் அந்த ஒற்றைப்பார்வையே மனசாட்சியுள்ள அத்தனைப்பேரையும் அசைத்துப்பார்த்தது.

அதன் விளைவே இந்தியா கண்டிராத ஒரு பெரும் மாணவர் எழுச்சியை கடந்த பிப்ரவரி மாதத்தை வரலாறு தன்னுள் பதிவு செய்து கொண்டது. 

உண்மையிலே அந்த நாட்கள் மிகுந்த மன உளைச்சலாக இருந்தது. முத்துக்குமார் மரணத்தினால் களத்திற்கு வந்து கோட்டைவிட்ட எங்களுக்கு பாலசந்திரனால் களத்திற்கு வந்த மாணவர் போராட்டம் கொஞ்சம் ஆறுதலைக் கொடுத்தது. 

லயோலா கல்லூரி மாணவர்கள் ஆரம்பித்து வைத்த உணர்ச்சியூட்டும் ஒரு சிறு நெருப்பு தமிழகம் எங்கும் பற்றி எரிந்தது. அந்த போராட்டம் வெற்றி தோல்வி என்ற விவாதத்தையெல்லாம் விட எங்களுக்கு அந்த போராட்டம் ஒரு நம்பிக்கையை அளித்தது. 

இன்று வீதிக்கு வந்த இந்த பிள்ளைகள் எல்லாம் ஈழத்தில் இறுதி யுத்த பேரழிவு நடந்த சமயத்தில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள். அதன்பிற்கு தமிழகம் முழுக்க பல்வேறு இயக்கத்தினர் இறுதி யுத்த கொடூரத்தை பிரச்சாரமாக செய்ததன் பலனே இன்று வீதிக்கு போராட வந்திருக்கிறார்கள் அந்த மாணவர்கள்.

இந்தி திணிப்புக்கு எதிராக எமக்கு முந்தைய தலைமுறை நடத்திய போராட்டங்களை அதனை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த களவாணிகளே அடுத்த தலைமுறைக்கு அதை சொல்லாமல் இருட்டடிப்பு பண்ணிய நிலையில், இப்போது நடந்த வரலாற்று சிறப்பு மிக்க இந்த போராட்டத்தை ஆவணப்படுத்துவது மிக முக்கியமான பணி.

அந்த பணியை எனக்கு பிடித்த நேர்மையான பத்திரிகையாளரும் இப்போது இயக்குனராக மாறியிருப்பவருமான வெற்றிவேல் சந்திரசேகர் சிறப்பாக செய்திருக்கிறார். 

`அறப்போர்’ என்றப்பெயரில் ஆவணப்படுத்தியிருக்கும் மாணவர் போராட்ட திரைப்படம் ஜூலை 28 ஞாயிறு மாலை 5:30க்கு அண்ணா சாலையில் ஸ்பென்ஸர் எதிரில் இருக்கும் புக் பாய்ண்ட் அரங்கத்தில் வெளியிடப்படுகிறது. நண்பர்கள் அனைவரும் தவறாது குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன். 

வாருங்கள் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்.. நம் பிள்ளைகள் நடத்திய அறப்போரின் வரலாற்றை !

இயக்குனருடன் பேச : 9994155339

-கார்ட்டூனிஸ்ட்.பாலா
27-7-13


fb

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் மீண்டும் அடிப்பார்கள்-காசியானந்தன்!

 

இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் போராட்ட வரலாற்று ஆவணப்படமான அறப்போர் ஆவணப்படம் சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றம் பொது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு மாணவர்களை தமிழ்நாட்டு மாணவர்கள் என்று சொல்லுவதை விட தமிழ்நாட்டு மக்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் என்று நான் சொல்லுகின்றேன்.உண்மையிலேயே தமிழ்நாட்டு மக்களின் சிந்தனையில் ஒரு பெரிய மாறுதலை கொண்டுவந்தவர்களாக மாணவர்கள் போராட்டத்தை நடத்தி அவர்கள் யார் என்பதை வரலாற்றில் பதிவு செய்திருக்கின்றார்கள்.ன் ஆற்றல் மறைந்து கிடந்தது மாணவர்கள் போராளிகள் என்பதை நிறுவினார்கள் நிலைநாட்டினார்கள் அதனை நாங்கள் பார்த்தோம் மாணவர்கள் அப்படித்தான் வரலாற்றில் பெரிதும் இருந்திருக் கின்றார்கள். சிங்களவர் தமிழீழ மக்களை ஒடுக்கியபொழுது இந்த மண்ணில் இராயறாஜேந்திரன் போன்றவர்கள் சுந்தரபண்டியன் போன்றவர்கள் இங்கிருந்து படைஎடுத்துக்கொண்டு வந்து சிங்களவர்களை எதிர்த்து தமிழருக்கு துணையாக இருந்தார்கள் அது அந்தக்காலம்.இன்று அப்படி இந்த மண்ணில் இருந்து ஓடிவந்து காப்பதற்கு யாரும் இல்லை.இன்று ஏதும் இல்லாத தமிழனுக்கு யாரும் இல்லை இப்படிப்பட்ட மன்னர்களின் உணர்வுகளை மாணவர்களிடம் தான் அந்த எழுச்சியினை பார்க்கமுடிந்தது.என்றும் தெரிவித்த காசியானந்தன் அவர்கள்.

இன்று ஈழமண்ணில் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசிக்கொண்டிருக்கின்றார்கள் ஒன்றும் இல்லாத ஒன்றாக 13ஆவது சட்டதிருத்தம் காணப்படுகின்றது  முழுக்க முழுக்க சிங்களவர்களால் சிக்கிய அடிமகளாக தமிழர்களை ஆக்குகின்ற முயற்சிதான் 13ஆவது சட்டதிருத்தம் இன்றைக்க அதுதான் தமிழர்களுக்கு எல்லாமான தீர்வு என்று சொல்லப்படுகின்றது அது பச்சைப்பொய் அதில் எதுவுமேகிடையாது.

 

1833 ஆம் ஆண்டு கோல்புறுக்கால் சொல்லப்பட்டதுதான் தமிழர்களின் தாயகம் வடக்கு கிழக்கின் எல்லைகள் என்று.அவன் தமிழ்தேசத்தையும் சிங்கள தேசத்தையும் இணைப்பதற்காக வந்தவன் அதுதான் தமிழர்களின் தாயகம் என்று சொன்னான்.

தாயகத்தின் இன்று சொல்லணாத் துன்பங்களை மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்ற காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டில் மாணவர்கள் எழுச்சியினை காட்டினார்கள் இங்கு மாணவர்கள் எழுச்சியினை மேற்கொள்ள அமெரிக்காவின் அதிகாரிகள் கூட இந்த போராட்டத்தை பற்றி பேசியிருக்கின்றார்கள்.தமிழ்நாட்டில் மாணவர்களுடைய போராட்டம் தான் சிங்களவர்களுடைய எதிரிநாடு என்று தமிழ்நாட்டில் தீர்மானம் போடவைத்தது.

இந்த மாணவர்களின் போராட்டத்தை சிறப்பான ஒருஆவணமாக வெற்றிவேல் உருவாக்கி எடுத்திருக்கின்றார்.

ஒருபாலச்சந்திரனின் படம் உலகினை உலுக்கியது இப்படியான ஆவணங்கள் உலகினை உலுக்கும்,உலகினை உருவாக்கும்,உலகை தமிழீழவிடுதலை உரிமைபோர் நோக்கி நகர்த்தும் என்று உறுதியாக நம்புகின்றேன்.

தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் மீண்டும் அடிப்பார்கள் அப்படி அடிக்கின்ற போழுது தமிழ்நாட்டில் மாணவர்கள் நெருப்பாக எழுந்து தமிழீழத்தில் நடக்கினற் மிகப்பெரிய எழுச்சியான விடுதலைப்போருக்க தோழ் தாருங்கள் என்று நான் மாணவர்களை வேண்டிநிக்கின்றேன்.என்றும் காசியானந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அறப்போர் ஆவணப்படம் சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது

இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் போராட்ட வரலாற்று ஆவணப்படமான அறப்போர் ஆவணப்படம் சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் சென்னை அண்ணாசாலை புக்பாயின்ட்அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் வரவேற்புரையினை சி.கபிலன் நிகழ்த்த அரங்க நிகழ்வுகளை கவிபாஸ்கர் தொகுத்து வளங்கினார்.அறப்போர் ஆவணப்படத்தினை கவிஞர் காசியானந்தன் அவர்கள் வெளியிட மே 17இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி பெற்றுக்கொண்டார்.

 

தொடர்ந்து கருத்துரைகளை உணர்ச்சி கவிஞர் காசியானந்தன் அவர்கள்,தமிழ்தேசபொதுவுடமை கட்சியின் பொதுச்செயலாளர் வெங்கட்ராமன்,ம.செந்தமிழன்,வெற்றிவேல்சந்திரசேகர், ஆகியோர் நிகழ்த்த சிறப்புரையினை இயக்குனர் அமீர் நிகழ்தினார்தொடர்ந்து அறப்போர் ஆவணப்படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு நினைவு பரிசில்களை இயக்குனர்அமீர் வழங்கி மதிப்பளித்துள்ளார்.

 

http://www.youtube.com/watch?v=StvUE93W3RI

 

 

arappoor%2004.jpg

arappoor%2006.jpg

arappoor%2005.jpg

arappoor%2003.jpg

arappoor%2002.jpg

arappoor%2001.jpg

arappoor%2009.jpg

arappoor%2008.jpg

arappoor%2007.jpg

 

 

http://irruppu.com/?p=32884

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Documentary on Tamil Nadu student uprising released in Chennai

[TamilNet, Sunday, 28 July 2013, 21:42 GMT]

A documentary based on the Tamil Nadu student uprising that challenged establishments’ abetment of the genocide of the Eezham Tamil nation, was released to the public in Chennai on Sunday. Titled “A'rappoar” (Righteous Struggle), the documentary focuses on the student upsurge against the pro-LLRC US Resolution in March 2013. The documentary, screened at Book Point Hall in Anna Salai on Sunday to packed audiences, also saw speakers talking about the continued international injustice to the Eezham Tamil nation and the future of the students’ struggle in Tamil Nadu. 

Kollywood Director Ameer, Eezham Tamil poet Kasi Anandan, Thirumurugan Gandhi from the May 17 Movement, K. Venkatraman from the Tamizh Desiya Pothuvudamai Katchi, and director M. Senthamizhan spoke at the event. 

The documentary, written and directed by V. Vettrivel Chandrashekar is produced by C. Kabilan from Senkodi Media Works. 

Mr. Vettrivel was the author of the short book “Thuruppuch Cheeddu” about K. Muthukkumar, the youth activist who had triggered mass student protests in Tamil Nadu in early 2009 by his self-immolation for the cause of the Eezham Tamils.

He was also assistant director to the movie “Paalai” directed by M. Senthamizhan. 

The director of “A'rappoar” also directed the documentary “Ippadikku Thoazhar Sengkodi”, based on grassroots activist Senkodi from Tamil Nadu who had immolated herself for the cause of the three Tamils on death row in the ‘Rajiv Gandhi assassination case’.

 

http://tamilnet.com/art.html?catid=13&artid=36506

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.