Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கப்பலில் வந்துகொண்டிருக்கும் தமிழ் அகதிகளை வரவேற்பதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருக்கும் கனடியத் தமிழ் மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Aug 6, 2010 / பகுதி: செய்தி / கனடிய நிருபர்

கப்பலில் வந்துகொண்டிருக்கும் தமிழ் அகதிகளை வரவேற்பதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருக்கும் கனடியத் தமிழ் மக்கள்

200க்கும் அதிகமான தமிழ் அகதிகள் சிறிலங்கா அரசாங்கத்தின் பழிவாங்கல் நடவடிக்கையில் இருந்து தப்பி ஓடுகின்றனர்

ஜனநாயக முறைப்படி கனடாவாழ் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட கனடியத் தமிழ் தேசிய அவை உறுப்பினர்களும் பல கனடியத் தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து கப்பலில் கனடாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் தமிழ் அகதிகளுக்கு உதவி செய்வது தொடர்பாக 2010ம் ஆண்டு ஓகஸ்ட் 4ம் திகதி ஒரு கலந்துரையாடலை நடத்தினர். அந்த நிகழ்ச்சியின் போது சட்டத்தரணியும், குடிவரவு மற்றும் அகதிகள் தொடர்பான விடயங்களில் நிபுணருமான லோர் வோல்மன் சில மாதங்களுக்கு முன்னர் கடல்மார்க்கமாக வன்கூவரில் வந்து இறங்கிய 76 தமிழ் அகதிகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விபரங்களை எடுத்து விளக்கினார். அத்துடன் கனடாவை நோக்கி வந்து கொண்டிருக்கும், பெண்கள் குழந்தைகள் உட்பட, 200 அகதிகள் தொடர்பான நடவடிக்கைகளை தாமதிக்காமல் ஆர்ம்பிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் விளக்கிக் கூறினார்.

“கனடாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் தமிழ் அகதிகளுக்கு வழங்க வேண்டிய உடனடி உதவிகள் தொடர்பாக வன்கூவரில் வசிக்கும் தமிழ் மக்களுடன் இணைந்து செயற்படுகின்றோம். இந்த அகதிகளின் நிலைமையை வளக்கும் ஆவணங்களையும் நாம் தயாரித்துக் கொண்டிருக்கின்றோம்,” என கனடியத் தமிழ் தேசிய அவையின் பேச்சாளரான கிருஷ்ணா சரவணமுத்து கூறினார்.

இந்த அகதிகளுக்கு உடனடியான உதவிகளை வழங்குவதற்கு கனடியத் தமிழர் தேசிய அவை வேறு பல தமிழ் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுகின்றார்கள். நடைபெற்ற கலந்துரையாடலின் போது சட்ட ஒழுங்குகளைச் செய்வதற்கும், ஊடகத் தொடர்புகளை மேற்கொள்வதற்கும், குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சமூகத் தொடர்புகளை மேற்கொள்வதற்குமாக பல உபகுழுக்களும் நி;யமிக்கப்பட்டுள்ளன.

“கனடிய தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் எடுக்கும் சகல சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கும் நாம் மதிப்பளிக்கும் அதே வேளை வந்துகொண்டிருக்கும் தமிழ் அகதிகளின் பிரச்சினையை மனிதநேயத்துடன் நோக்குமாறு கனடிய அரசாங்கத்தைப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்,” என தேசிய அவையின் தலைவர் மோகன் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

pathivu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.