Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொறன்ரோ பல்கலைக்கழக இசுகாபரோ ( UTSC) மாணவர் முன்னெடுத்த மாவீரர் நாள் நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

news.JPG

தமிழ் மக்களின் வாழ்வில் முதன்மை பெற்ற மாதம் கார்த்திகை மாதம். எமது மாவீரரை, அவர்களின் புனிதமான தியாகங்களை நினைவு கூர்ந்து எழுச்சி கொண்டு எழும் மாதம் கார்த்திகை மாதம். எங்கள் மாவீரரின் கனவை நிவைவேற்றுவோம் என்று உறுதி எடுத்துக்கொள்ளும் மாதம் இக்கார்த்திகை மாதம்.

இக்கார்த்திகை மாதத்தில் மாவீரரை நினைவு கூறும் முகமாக மாவீரர் எழுச்சி வாரத்தின் மூன்றாவது நாளான வியாழக்கிழமை நேற்று university of toronto scarborough பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடுசெய்யப்பட்ட மாவீரர் தின நிகழ்வு ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிவரை நடைபெற்றது ரொறன்ரோ பல்கலைக்கழகம் இசுகாபுரோ வளாகத்தின் மீட்டிங் பிலேஸ் அரங்கத்தில் மிகவும் எழுச்சிகரமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான தமிழ் மற்றும் வேற்றினத்து மாணவர் கலந்து கொண்டனர்.

பிற்பகல் 6:00 மணிக்கு கனடிய மற்றும் தமிழீழத் தேசியக் கொடியேற்றங்களுடன் மாவீரர் நாள் நிகழ்வு தொடங்கியது. தொடர்ந்து, ஈகைச் சுடர் ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து மாவீரருக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

பின்னர் கனடிய தேசிய நினைவெழுச்சி அகவத்தின் தலைவர் திருமதி கலாநிதி குலமோகன் அவர்களின் மாணவர்களின் முன் சிறப்புரை ஆற்றியிருந்தார் எனபது குறிப்பிடதக்கது

தொடர்ந்து, மாணவரால் நடனங்கள், பாடல்கள், கவிதைகள் உள்ளிட்ட பல எழுச்சிமிக்க நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன. ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் இசுகாபரோ வளாகத்தின் தமிழ் மாணவர் அமைப்பின் சார்பாகவும் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் கனடியத் தமிழ் தேசிய மக்கள் அவை சார்பாகவும் உணர்வுமிக்க பேச்சுகள் வழங்கப்பட்டன. எமது மாவீரரின் தியாகங்களின் உன்னதம், எமது வரலாற்றுக் கடமை போன்ற கருத்துகள் இப்பேச்சுகளில் இடம்பெற்றன.

நிகழ்வின் நிறைவில் மாவீரரின் தமிழீழ இலட்சியத்தை நனவாக்க நாம் தொடர்ந்தும் போராடுவோம் என்று உறுதி மொழி எடுக்கப்பட்டது. கனடிய மற்றும் தமிழீழத் தேசியக் கொடி இறக்கத்துடன் பிற்பகல் 9:00 மணிக்கு மாவீரர் நாள் நிகழ்வு நிறைவு பெற்றது

c1.JPG

c2.JPG

c3.jpg

c4.jpg

c5.jpg

c6.JPG

c7.JPG

http://www.vannionli...11/11/utsc.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த தமிழ் சின்னஞ்ச்சிருசுகளிடம் எங்களுடைய பெரியவர்கள் ஒற்றுமையை பயிலவேண்டும்.

நிவர்த்தியாக தமது மரியாதையை செய்து தமிழ் ஈழத்திற்காக இறந்தவர்களை மறக்காமல் இருக்கிறார்கள்.

ஒரு மாற்றத்திற்கு நல்ல செய்தி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.