Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. இளங்கவி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    1291
    Posts
  2. அபிராம்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    4
    Points
    173
    Posts
  3. தயா

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    2
    Points
    11015
    Posts
  4. arjun

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    2
    Points
    9275
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/14/11 in all areas

  1. பாகம் இருபத்தினான்கு 2009 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் ஒரு நாள்... சஷ்டியை நோக்க சரவணபவனார்.. சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்.. கந்த சஷ்டி கவசம் லக்சபானாவில் இருந்து வரும் மின்சாரத்தில் ஒலித்து கொண்டிருக்க கணவன் நாதனை தட்டி எழுப்பினாள் ராணியம்மா. என்னங்க....ஒருக்கா எழும்பி வெளிக்கிட்டு உந்த ICRC அலுவலகம் மட்டும் போயிற்று வாங்கோவன்....புதுசா கொஞ்ச பேரின் பெயர் விபரம் வந்திருக்காம்..எங்கட நேசனின் பெயரும் இருக்கோ என்று பார்த்திட்டு வாங்கோவன்.. வழக்கமாக பாடும் பல்லவியாக இருந்தாலும் ... நாதனுக்கு இன்று ஏதோ மனம் சொல்லியது மகன் கிடைத்திடுவான் என்று.. சரியப்பா ..ஒரு கோப்பியைப் போடு குடிச்சிட்டு ஒரு எட்டு போய் என்ன என்று கேட்டுவிட்டு வாறன்... அண்டைக்கும் இப்படித்தான் ஒரு கந்தசஷ்டி நாளில் நேசன் இயகத்துக்கு போனான்..அவனைப்பார்த்து இன்றுடன் இரண்டு வருசம். இடையிலே தான் எத்தனை துன்பங்கள் துயரங்கள்..கடைசியாக போன மாசம் தான் இராமனாதன் அகதி தடுப்பு முகாமில் இருந்து விடுதலையாகி வவுனியாவில் ஒரு உறவினர் வீட்டுக்கு வந்து ஒருமாசம் ஆகிறது. முள்ளிவாய்க்காலில் இருந்து வந்ததிலிருந்து ராணியம்மா இரவு தூக்கத்தையும் தொலைதிருந்தா... சொல்லுங்கள் உறவுகளே எப்படி தூங்க முடியும்.. என்னும் எவ்வளவு நாட்கள் எடுக்குமோ அவர்கள் நிம்மதியாக தூங்க... கணவனுக்கு கோப்பியை போட்டு வழியனுப்பி விட்டு..முருகன் படத்துக்கு பூவை வைத்து..அப்பனே முருகா இன்றாவது அவர் ஒரு நல்ல செய்தியுடன் வரவேண்டும் என்று மனமுருக வேண்டினார்.. சரணடைந்த பெடியங்களை அங்கே வைச்சிருக்கிறாங்கள்..இங்கே வைச்சிருக்கிறாங்கள் என்று சொல்ல சொல்ல ராணியம்மா அலையாத இடம் இல்லை.. வைத்திய சாலைகள்..சிறைக்கூடங்கள்..என்று யார் யாருடையதோ கையை காலை பிடித்து தேடியலைந்தாகிவிட்டது.. இன்று இருக்கும் ஒரே நம்பிக்கை இந்த ICRC யின் பெயர் பட்டியல் தான்.. மதியம் ஒரு மணியை தாண்டி இருந்தது .. இன்னும் அவரை காணவில்லை.. வாசற் கதவில் தலை சாய்த்தபடி சாலையின் முனையை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி, தன் மகன் உயிரோடு இருக்கிறான் என்ற நற் செய்தியுடன் வருவார் தன் கணவன் என்று... காத்திருக்கிறாள்.... ஒரு போராளியின் அம்மா... (முற்றும்.)
  2. பாகம் இருபத்திமூன்று எனது அன்பிற்கினிய உறவுகளே... இந்த வேளையில் இந்த பாகத்தை எழுத முடியாமைக்கு நான் மிகவும் வருந்துகிறேன்... உங்களை ஏமாற்றவோ, உங்கள் மனசை காயப்படுத்துவதற்கோ நான் ஒரு நாளும் எண்ணியதில்லை.. காலத்தின் தேவை கருதி இந்த பாகத்தை இப்போது எழுதுவதை தவிர்த்துள்ளேன்.. நிச்சயம் ஒரு நாள் உங்களுக்காக எழுதுவேன்.. அதுவரை என்னை உளப்பூர்வமாக மன்னித்து காத்திருப்பீர்கள் என்று பணிவன்புடன் நம்புகிறேன்.. நன்றியுடன், உங்கள் அபிராம் (தொடரும்)
  3. பாகம் இருபத்திரண்டு அந்த நாள் ஏன் விடிந்தது என்று இருந்தது ராணியம்மாவுக்கு... அதிகாலையிலேயே யுத்த தாங்கிகளின் ஓசையும் அந்த இடமெல்லாம் சுடுகாடாக்கும் வண்ணம் விழுந்த எறிகணைகளும் தான் ராணியம்மாவை துயில் எழுப்பின. ஐயோ ..ஆமி சுட்டு கொண்டு வாறான்..பதுங்கு குழிகளுக்குள் கைக்குண்டுகள் வீசி கொண்டு வாறான் என்ற செய்தி காற்றுடன் மக்களோடு கலந்தது.. மக்கள் செய்வது அறியாமல் திகைத்து நின்றார்கள்... ஆமி வரும் வரை ..பதுங்கு குழிக்குள் இருப்பம் என்ற கனவும் மண்ணாகி போனது அவர்களுக்கு... உண்டியல் சந்தியை அண்மித்த வடக்கு பக்கத்தில் இன்னும் புலிகள் தீரமுடன் போரிடும் சத்தம் கேட்டு கொண்டிருந்தது... கடற்கரை பக்கமாக வடக்கு ஆமியும் தெற்கு ஆமியும் இணைந்து மேற்கு பக்கமாக முன்னேறி வருவதையும் தடுத்தி நிறுத்தி புலிகள் போரிட்டு கொண்டிருந்தார்கள்.. இதுக்கெல்லாம் எவ்வளவு ஆன்ம பலம் வேண்டும்.. நான்கு பக்கமும் ராணுவத்தால் சூழப்பட்ட நிலையிலும்.. ஒரு இஞ்சி இடம் விடாமல் கொத்து குண்டுகளும் பொஸ்பரஸ் குண்டுகளும் எறிகணைகளும் ராணுவம் மிச்சம் விடாமல் தாக்கி கொண்டிருந்த நிலையிலும் ... கைகளில் இருக்கும் துப்பாக்கியையும் ஒரு கொஞ்ச ரவைகளையும் வைத்து கொண்டு இரண்டு சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் சாகத்தான் போகிறோம் என்று தெரிந்து கொண்டு .. மக்களையும் தலைவரையும் ராணுவம் அணுக விடாமல் சண்டை போடுவது என்பது சாதாரண காரியமா உறவுகளே.. எரிந்து கொண்டிருக்கும் ஆயுத லொறிகளுக்கு மத்தியிலும், பிணங்களுக்கு மத்தியிலும் , தலைவரை காப்பாற்றி விட்டால் போதும் நிச்சயமாக எங்களுக்கு ஈழம் கிடைத்து விடும் என்ற மன நிலை தான் அங்கெ இருந்த பெரும்பாலான போராளிகளுக்கு.. ராணுவம் வட்டுவாகலில் இருந்து பாரிய படை நகர்வை தொடங்கி இருந்தது. அதே வேளை கடற்கரை பக்கம் இருந்தும் நந்தி கடல் நோக்கி ஒரு நகர்வை தொடங்கி இருந்தது.. மக்கள் கூட்டம் கூட்டமாக முன்னேறி வரும் ராணுவத்தை நோக்கி நகர தொடங்கினார்கள். வீதியோரத்தில் இருந்த காயமடைந்த போராளிகளை ராணுவம் சுட்டு கொண்டு வருகிறது என்று கேள்வி பட்ட ஏனைய போராளிகள் மக்களை பார்த்து கெஞ்ச தொடங்கினார்கள்.. குறிப்பாக காயமடைந்த பெண் போராளிகள் ..எங்களை உங்களுடன் தூக்கி செல்லுங்கள் இல்லை என்றால் இங்கேயே கொன்று விட்டு போங்கள் என்று மக்களிடம் இறைஞ்சினார்கள்.. சிலர் சில போராளிகளை காவி சென்றார்கள்.. பெரும்பாலானவர்கள் இவர்களை பார்த்தும் பாராமலும் போய் கொண்டிருந்தார்கள்.. மக்களுக்காக தங்கள் அவையவங்களை இழந்து, மக்களின் காலை பிடித்து கெஞ்சும் அந்த பெண் போராளிகளின் நிலை உலகில் எந்த விடுதலை போராளிகளுக்கும் வர கூடாது.. எல்லாரையும் பார்த்து கெஞ்சினார்கள்... கடுமையாக காயபட்ட போராளிகளுக்கு சயனைட் கொடுப்பதில்லை. வலி தாங்காமல் கடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில்.. அத்துடன் செஞ்சிலுவை சங்கம் பொறுப்பேற்கும் போது சொன்ன நிபந்தனைகளில் காயமடைந்த போராளிகள் எந்த விதமான இராணுவ அடையாளங்களையும் வைத்திருக்க கூடாது என்பதும் அடங்கி இருந்தது. சாக கூட வழியில்லாமல் அந்த பெண் போராளிகள் மக்களை பார்த்து கெஞ்சினதை பார்த்த எவனுமே சாவின் வலியை ஆயிரம் தடவை உணர்ந்திருப்பான். நேற்று சென்ற மக்கள் கூட்டத்துடன் கலந்து சென்ற போராளிகள் கழட்டி வீசி விட்டு சென்ற சயனைட் குப்பிகளும் கழுத்து தகடுகளும் அந்த வீதி எங்கும் கிடந்தன... அம்மா ...அக்கா ...அண்ணா ....தம்பி ..அந்த குப்பியையாவது பொறுக்கி தந்துவிட்டு போங்கள் ..கெஞ்சினார்கள் உங்களுக்காக போராடிய அந்த வீர பெண் புலிகள்.. சொல்லுங்கள் உறவுகளே... உங்கள் மனசை தொட்டு சொல்லுங்கள் .. உங்கள் ஆன்மாவை உலுக்கவில்லையா ... தங்கள் குடும்ப உறவுகளை விலகி உங்களுக்காக போராடி, தங்கள் அவையவங்களை உங்களுக்காக கொடுத்து விட்டு இன்று எதிரியிடம் கையகலாமல் கொல்லபடுவதை தடுக்க உங்களால் முடியவில்லை என்று நினைக்கும் போது உங்களால் எப்படி இயல்பாக இருக்க முடிகிறது ... சாவோம் என்று தெரிந்து தான் போராட்டத்திற்கு வந்தார்கள்.. அவர்கள் இன்று சாவுக்காக பயப்படவில்லை ..எதிரியின் காம பசிக்கு இரையாகாமல் மானத்தோடு சாகத்தான் அவர்கள் கெஞ்சினார்கள்.. ஒரு சின்ன பையன் தன்னால் ஆனமட்டும் குப்பிகளை பொறுக்கி ஒவ்வொருவருக்கும் கொடுத்துவிட்டு போனான்.. அந்த பையனின் முகம் வாழ் நாளுக்கும் மறக்க முடியாது.. அவன் அந்த பெண் போராளிகளுக்கு ஆற்றிய உதவி ..ஆயிரம் விடுதலை போராட்டத்தில் பங்கு கொண்டமைக்கு சமன். அந்த சிறுவன் அந்த பெண்புலிகளின் மானத்தை மட்டுமல்ல உங்களின் எங்களின்..ஏன் இந்த உலகெங்கும் வாழும் தமிழ் பெண்களின் மானத்தை காத்தவன்... எங்கிருந்தோ வந்த ஒரு எறிகணை ராணியம்மாவின் கணவனின் காலை பதம் பார்த்தது... ஒரு சீலையை எடுத்து வழியும் குருதியை சுத்தி கட்டினார். அம்மா ..இனி இங்கே இருந்து அண்ணாவை தேடினால் ..அப்பாவையும் இழக்க வேண்டி வரும்..என்று நா தழுவி தழுக்க சுபா கூறினாள்.. இன்னும் கொஞ்ச நேரம் ...என்று ராணியம்மா இழுக்க ..இல்லை அம்மா ..அப்பாவுக்கு இரத்தம் ஓடுது ..வைச்சிருந்தால் இங்கேயே இழக்க வேண்டி வரும் என்று குண்டை தூக்கி போட்டாள் மற்றவள் மதி .. என்ன செய்வது என்றே புரியவில்லை ராணியம்மாவுக்கு ...மகனும் மண்ணுமா இல்லை கணவனும் மற்றைய பிள்ளைகளுமா .. சரி ஆமியிடம் போவோம் .. அரை மனசோடு சொன்னாள் ராணியம்மா .. ராணுவம் முன்னேறும் திசை நோக்கி தந்தையை காவியபடி நடந்தார்கள் தாயும் பிள்ளைகளும் .. அந்த வேளையில் .. எங்கள் வீர குல பெண்களின் உயிரை விட மானமே பெரிது என்று வாழ் நாள் முழுவதும் நினைக்கும் ஒரு சம்பவம் நடந்தது .. ஈர குலையே கருகியது.. குப்பி கிடைக்காத பெண்புலிகள் சிலர் ..எங்கள் தமிழ் மானத்தை காப்பாற்ற ..எங்கள் புலிகளின் கொள்கைக்காக ..அத்தனை மக்கள் கண் முன்னாலேயே ..எரிந்து கொண்டிருந்த ஒரு வெடி குண்டு வாகனத்தினுள் ஒன்றன் பின் ஒன்றாக பாய்ந்தார்கள் .. கருகி மடிந்தார்கள் .. என் இனிய பெண் உறவுகளே ... நீங்கள் இவர்கள் பிறந்த இனத்தில் தான் பிறந்தீர்கள் என்று மற்றவர்களிடம் சொல்லி பெருமை பட்டு கொள்ளுங்கள்.. மானத்துக்காக ..கொள்கைக்காக உயிரையும் கொடுக்கும் பெண்கள் எங்கள் சகோதரங்கள் என்று வாழ் நாள் முழுவதும் மனசிலே நிறுத்துங்கள்.. எதுக்காகவும் மானத்தையும் கொள்கையையும் விட்டு கொடுக்காதீர்கள் .. இது தான் அந்த வீர பெண்களுக்கு நீங்கள் செய்யும் இறுதி மரியாதை... இந்த காட்சியை நேரில் பார்த்த ராணியம்மாவுக்கு இதயமே உறைந்தது ..கண்ணீர் வரவில்லை ..மனசு மட்டுமல்ல உடம்பே கல்லானது.. சாலையோரத்திலே வாயிலே குப்பியுடன் மேலும் பல பெண் போராளிகளின் உயிரற்ற வெற்று உடல்கள்.. மக்களுக்காகவும் மானத்துக்காவும் மரணித்த அந்த வேங்கைகளின் கண்கள் இராணுவத்திடம் போய் கொண்டிருந்த மக்களை வெறித்து பார்த்தபடி இருந்தன.. இந்த நாள் இன்று விடிந்திருக்க கூடாதோ ..?? (தொடரும்)
  4. பாகம் இருபத்தொன்று அதிகாலை ஒரு மணியை தாண்டி நந்திகடலின் மேற்கு பக்கமாக இடியென அதிரும் வெடியோசைகளும், இரவை பகலாக்கும் பரா வெளிச்சங்களுமாக இருந்தது. இயக்கம் இறங்கிட்டுது..மக்கள் தங்களுக்குள் பேசி கொண்டார்கள். விடிகாலை ஐந்து மணிவரை இடைவிடாத செல்சத்தங்களும், கனரக ஆயுத வெடிச்சத்தங்களும் கேட்டு கொண்டே இருந்தன. அந்த கொடிய வேளையிலும் மக்கள் மனசில் ஒரு ஆத்மா திருப்தி..தலைவரும் தளபதிகளும் ..உயிரோட தப்பி போயிடுவார்கள் .. சிலர் வாய் விட்டே வேண்டினார்கள்.. "வற்றாப்பளை அம்மாவே ..எங்கள் தலைவனையும் அவன் பெடியளையும் நீதான் காப்பாத்த வேண்டும் ..அவங்கள் எங்களுக்காக பட்ட கஷ்டங்களை நீ பார்த்து கொண்டு தானே இருந்தாய்...இதையாவது எங்களுக்காக செய் ..அவங்களை காப்பாத்து தாயே .."" நெஞ்சுருக வேண்டினார்கள். தங்கள் பிள்ளைகள் கணவன்மார் மனைவிமார் என்று பறி கொடுத்தும், தலைவன் உயிரோடு இருக்க, ஆண்டவனை வேண்டின மக்களும் இருக்கத்தான் செய்தார்கள். ஆனால் காலையில் கேள்விபட்ட செய்தி வேறு விதமாக இருந்தது. "நேற்று இறங்கின பெடியள் அவ்வளவும் முடிஞ்சுதாம்..முதாவது இரண்டாவது லைனை உடைச்சிட்டாங்களாம். மூன்றாவது லைனிலே வைச்சு அவன் ஒரு பிடி பிடிச்சானாம் ..பெடியளும் என்ன செய்கிறது வேவு தகவல்கள் இல்லை ..செல் இல்லை ..பின்னணி பலம் இல்லை ..எல்லாம் முடிஞ்சு போச்சு .." ஆனாலும் தலைவருக்கும் தளபதிகளுக்கும் ஒண்டும் நடக்கலையாம்..அவர்கள் பத்திரமாக இக்கரையில் இருகினமாம் என செய்தி ராணியம்மாவின் மனசில் பாலை வார்த்தது.. கும்பிட்ட தெய்வம் கைவிடவில்லை என்று தோணிச்சு.. இருந்தாலும் யார் பெத்த பிள்ளைகளோ தலைவனுக்காக தங்களை ஆகுதியாகுதுகள்.. என்று மடிந்த மறவர்களுக்காக ஏங்கவும் செய்தாள்.. அன்று பதினாறாம் திகதி..மாலை இரண்டு மணிக்காக காத்திருந்தார்கள் மக்கள்.. சர்வதேச செஞ்சிலுவை சங்கம் சொன்ன நேரத்துக்கு வரும் என்று நம்பி அந்த சுடு வெய்யிலிலும் ..அந்த நடு தார் சாலையில் மூடை முடிச்சுகளுடன்..குஞ்சு குருமங்களுடன் காத்திருந்தார்கள்.. காயமடைந்த போராளிகளும் சாலையோரத்தில் காய வேதனையுடன், இலையாங்களுடன் போராடி கொண்டிருந்தார்கள். இரண்டு மணி மூன்றாகி..நாலாகி ஐந்தாகி விட்டது .. அந்த முள்ளிவாய்க்கால் கரையில் சூரியன் மறைய தொடங்கிவிட்டான்..ஆழ் கடலில் கரைய தொடங்கிவிட்டான்... மக்கள் மனசில் இருந்த நம்பிக்கையை போல.. இந்தா வருகிறோம் வருகிறோம் என்று சொல்லி கொண்டிருந்த ICRC கடைசி வரை வரவே இல்லை.. மக்கள் மனசில் விரக்தியும் கோபமும் தான் மிஞ்சின. புலிகளின் தலைமைக்கும் தங்கள் இறுதி கட்ட தாக்குதலை பதினெட்டாம் திகதிக்கு பின் போட வேண்டிய நிலைமை. சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கூட நம்ப வைத்து கழுத்தறுத்தது.. மக்கள் பொறுமை இழந்தனர்.. மக்கள் நடுவே ஊடுருவி இருந்த புல்லுருவிகளும் நயவஞ்சகர் சிலரும், காவல் கடமையில் இருந்த கடற்புலி போராளி ஒருவனின் கையில் இருந்த ஆயுதத்தை பறித்தெடுத்து அவனை சுட்டு கொன்றனர். எந்த மண்ணை...எந்த மக்களை அவன் நேசிச்சானோ..அந்த மக்களே சுட்டு கொல்லும் போதும்..அண்ணே ஆமியிடம் போகாதீங்கள் எல்லாம் பிழைச்சு போயிடும்..அண்ணையை காப்பாத்த முடியாமல் போய்விடும் என்று சொல்லி சொல்லியே செத்து போனான். சொல்லுங்கள் உறவுகளே..இப்படி போராளிகள் கிடைக்க நாம் என்ன தவம் செய்தோம்.. ஏன் இவர்கள் எல்லாம் எங்கள் கூட வந்து பிறந்தார்கள்.. வேறு எங்காவது நாட்டில், வேறு எங்காவது இனத்தில் பிறந்திருந்தால் நல்லா இருந்திருப்பார்களே.. எங்களுக்காக சாகவேண்டும் என்று இவர்களுக்கு என்ன விதி .. அந்த போராளியின் சாவை தொடர்ந்து நிலைமை கட்டுகடங்காமல் போனது. புலிகளின் அரசியல் பிரிவு ஒலிபெருக்கி மூலம் மக்களை அறிவுறுத்தியது..மக்களை நிரையாகவும் வரிசையாகவும் செல்லும்படியும், எக்காரணம் கொண்டும் சாலையை விட்டு இறங்காமல் செல்லும் படியும் கேட்டு கொண்டது. மக்கள் விரக்தியின் விளிம்பில் புலிகளை விட்டு இராணுவ கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி, வட்டுவாகல் கரையை நோக்கி நகர தொடங்கினார்கள். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்து மூன்று மாதகாலமாக கடும் முயற்சி எடுத்தும் கடற்புலிகளால் தடுத்து நிறுத்தி வைக்கப்படிருந்த ராணுவத்தின் 59 ஆவது படைபிரிவு மக்களுக்கு நடுவாக புலிகளை நோக்கி நகர தொடங்கியது. தலைவரையும் தளபதிகளையும் வெளியேற்றும் வரை புலிகளுக்கு ஒரு தாய் நிலபரப்பு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது. அதை இல்லாமல் செய்யும் நோக்கோடு ராணுவம் மக்களை பணயமாக்கி மக்களுக்கு நடுவாக தனது நகர்வினை மேற்கொண்டது. உடனடியாக தலைமைக்கு தெரியபடுத்தபட்டு ஒரு பதில் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் புலிகளின் பிஸ்டல் குழுவினர். மக்களோடு மக்களாக வந்து, மக்களூடாக ஊடுருவும் ராணுவத்தை பிஸ்டல் கொண்டு சுட்டார்கள். தனது திட்டம் குலைவதை கண்ட ராணுவம், கனரக ஆயுதம் கொண்டு மக்களை நோக்கி சுட தொடங்கியது. செய்வதறியாத மக்களில் நூற்று கணக்கானோர் அந்த இடத்திலேயே உயிரை விட்டார்கள். ஒரு ஒடுங்கிய பாதையில் விழுந்து படுக்க கூட இடமில்லாமல் துடி துடித்து செத்தார்கள். சிலர் பயத்திலே பாதையை விடிறங்கி கண்ணிவெடி வயல்களுக்கு அகப்பட்டு சிதறி செத்தார்கள். அந்த காட்சியை வாழ்நாளில் யாருமே பார்க்க கூடாது. கண் முனாலேயே கைகள் கால்கள் சிதறிபறந்தன. ஒரு கால் சிதறியபடி நொண்டி நொண்டி இன்னொரு மிதிவெடியில் சிக்கி சிதறிய காட்சி..உங்கள் இனத்தில் தான் நடந்தது உறவுகளே. எங்கே ராணுவம் பாதையை பூட்டி விடுவார்களோ என்ற அச்சத்தில் கட்டிய கணவன் குண்டடிபட்டு சாகும்போது, அவனை கூட தூக்காமல் இராணுவத்திடம் ஓடிய மனைவி, பெத்த அப்பன் மிதிவிடியில் கால் சிதறி கத்தும் போது, அவரை கைவிட்டு ஓடிய மகன்கள்.. காயப்பட்டு தூக்கி கொண்டு வந்த வயதான அம்மாவை மிதி வெடி வயலில் தூக்கி எறிந்து விட்டு போன பிள்ளைகள் .. இப்படி சொல்லி கொண்டே போகலாம்.. மனித அவலத்தின் வெளிபாடு..மக்களை சுயனலவாதிகாளாக்கி இருந்தது.. அவர்கள் அந்த கோர நிகழ்வுகளில் பின்னர் மனிதர்களாக இருந்தார்களா என்பதே சந்தேகம் தான்.. அன்பான உறவுகளே..இவையனைத்தும் வேறு எங்கோ நடக்கவில்லை ...எங்கள் இனத்தில் எங்கள் மண்ணில் தான் நடந்தன.. எவ்வளவு வலி இருந்ததால் ..எவ்வளவு கோரங்களை கண்டிருந்தால் ..எங்கள் மக்களின் மனம் இவ்வளவு பேதலிச்சிருக்கும்.. ஒரு கணம் சிந்தித்து பாருங்கள்.. இந்த மனித பேரவலத்தை தொடர்ந்து புலிகள் சுடுவதை நிறுத்தி பின்வாங்குமாறு கட்டளை வந்தது. மக்கள் அலையலையாக ராணுவ கட்டுபாட்டு பகுதியை நோக்கி நடந்தார்கள். மாலை ஆறுமணியுடன் இராணுவம் மக்கள் உள்ளே வருவதை தடுத்து நிறுத்தியது. தனது நகர்வுக்காக படையணியை மாத்தியது.. யுத்த தாங்கிகள், கனரக ஆயுதங்களை தயார்படுத்தியது. அடுத்த நாள் காலையில் தனது இறுதி தாக்குதலை தொடுபதற்கான முழு முயற்சியில் இறங்கியது. அது தெரியாமல் ..இப்பகுதியில் காலையிலாவது ICRC வரும் என்ற நம்பிக்கையில்... காயமடைந்த போராளிகளும், இன்னொரு தொகுதி மக்களும் காத்திருந்தனர். அவர்களுடன் ராணியம்மாவும் காத்திருந்தார். (தொடரும்) பாகம் இருபத்திரண்டு இங்கே அழுத்துங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.