Leaderboard
Popular Content
Showing content with the highest reputation since 04/22/22 in all areas
-
என் பிள்ளையின் திருமணம் இப்போதெல்லாம் பிள்ளைகளை மணவறை வரை கொண்டு வருவதென்பது பெற்றோருக்கு மிகக் கடினமானதொரு செயலாகி வருகிறது. அந்த வகையில் எனது மூத்த மகனுக்கு அத்தருணம் கைகூடி வந்தவேளை.... எந்த நிலை வந்த போதும் பெற்றோர் கேட்டதை செய்து முடித்த பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றுவதை தவிர வேறேன்ன பேறு வேண்டும் எமக்கு. வருக மருமகளே வாழ்க மணமக்கள் வாழ்க வளமுடன் இப்படி திரிந்தவர்... இப்ப .....21 points
-
நான் யாழ் தளத்தை பல ஆண்டுகளாக அறிவேன் என்றாலும் இப்பொழுது தான் உறுப்பினர் ஆக இணைந்து கொண்டேன். நான் உக்ரைனில் 2006 புரட்டாசி மாசம் மருத்துவம் படிக்க போனேன்.2014 - 2015 அளவில் இலங்கைக்கு திரும்பினேன். இலங்கையில் சில வருடம் வேலை செய்து விட்டு இப்பொழுது கனடாவில் Alberta வில் வசிக்கிறேன். Canadian emergency Ambulance service இல் வேலை செய்கிறேன். படிக்க போன இடம் luhansk ( லூகான்ஸ்க்,டன்பாஸ் இல் உள்ள Donesk (டோனேஸ்க் ) க்கு அடுத்த பெரிய province. போன புதிதில் நான்கு இலங்கை மாணவர்கள் தான்போனோம். அப்பொழுது நாங்கள் தான் ஒரே இலங்கை மாணவர்கள். கொஞ்சம் தமிழ் நாட்டு மாணவர்களும் இருந்ந்தார்கள்.லீவு கிடைக்கும் பொழுது பல வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா இலங்கை போய் விடுவார்கள். நான் டிக்கெட் செலவு கூட என்பதால் ukraine க்குள் சுத்துவது வழக்கம். அப்படி போன இடங்களில் ஒன்று தான் மரிப்புல். இது தவிர கிரீமியா கீவ் கார்க்கிவ்,liviv, zaporizhzhia போன்ற இடங்களில் ஓரிரு மாதங்கள் ஆவது இருந்து இருப்பேன். டன்பாஸ் பிறதேசத்தில் இருப்பவர்களில் 90 வீதம் பேர் ரஷியன் தாய் மொழி ஆக கொண்டவர்கள். பலர் சுரங்க தொழிலாளிகள். ரஷ்யாவுடன் குடும்பம் பிணைப்புகள் அதிகம் கொண்டவர்கள். நானே சில தடவைகள் ரஷ்யாவுக்குள் போனேன் என்று தெரியாமலே உள்ளுக்குள் போய் இருக்கின்றேன் இவர்களுடன். குணம் என்று வரும் பொழுது மிகவும் பொதுவாக நல்ல மனிதர்கள் தான். நான் இளம் வயது ஆட்களை வைத்து அந்த சமூகத்தை மதிப்பிடக்கூடாது என்று நம்புகிறேன். ஆகவே 60 கடந்தவர்கள் என்று பார்த்தால் ஓரளவுக்கு நல்லவர்கள் தான் அவர்கள். என்றாலும் எல்லோரையும் அப்படி சொல்ல ஏலாது. கம்யூனிஸ்ட் சித்தாதத்தில் பற்று கொண்டவர்கள். வெளியே சொல்லிக்கொண்டு இருக்க மாட்டினம் ஆனால் உள் மனது அது தான். நான் கூட பழகியது பாட்டிகள் தாத்தாக்களுடன் தான். சில வருடங்கள் அவர்கள் வீட்டில் வாடகைக்கு வாழ்ந்தும் இருக்கின்றேன். Danbaas உண்மையில் ukraine க்கான பிரதேசம் தான். ஆனாலும் சோவியத் காலத்தில் ஸ்டாலின் சைபிரியாவுக்கு நாடு கடத்திய கிரிமினல்களில் ஓரளவுக்கு குறைவான பிழைகள் செய்தோரை இங்கே டன்பாசில் குடியெற்றி அங்குள்ள சுரங்க வேலைக்கு பயன்படுத்திக்கொண்டார். அவர்களின் பரம்பரை தான் இப்போது அங்கே இருப்போர். வெள்ளை இன வெறி உண்டு. அதுவும் எல்லோரும் அப்படி என்று ஒரேஅடியாக சொல்ல முடியாத அளவுக்கு நல்ல மனிதர்களின் ஞாபகங்கள் வந்து போகின்றது. இரவில் வெளியே நம்பிக்கையோடு சுற்ற முடியாது நன்கு ரஷியன் தெரியாவிட்டால். நான் பல முறை மாட்டி இருக்கின்றேன். குடிகாரர் குடித்து விட்டு காசுக்கு வெளிநாட்டு ஆக்களை அடித்து காசு வாங்குவது வளமை.. அப்படி அடிக்கும் பொழுதே அங்குள்ள இன்னொருவர் காப்பாற்றியும் விடுவார். நான் ஒருமுறை இரவு கடைக்கு போய் சாமான் வாங்கி வெளியே வரும் பொழுது சைக்கிள் செயின் கொண்டு அடிக்க ஒருவர் வந்து இருந்த காசை கொடுத்து தப்பிய சம்பவம் ஞாபகம். எல்லோருக்கும் ஒரு வீடு அங்கு உண்டு. குவர்த்திரா ( அப்பார்ட்மெண்ட் ) என்று சொல்வோம். ஏற்கனவே சொன்னது போல வாயோதிப்பர்கள் பழக இனிமையானவர்கள். அவர்களிடமும் வெள்ளை இன வெறி, உடைந்து போன சோவியத் பற்றிய கனவுகள், ரஷியன் மொழி மீதான தீரா தாகம், conservetive மனநிலை, மனிதாபிமானம், கடவுள் பக்தி, வெளியே காட்டாத அமெரிக்க வெறுப்புணர்வு, இந்தியா மீது பாசம்,உழைப்பு, சுற்றதாருடன் மனித பன்புடன் பழகுவது, இயலுமான வரை மற்றவர்களுக்கு உதவி, சிக்கனம், உபசரிப்பு என்று எல்லாம் கலந்த சாதாரண மனிதர்கள் அவர்கள். இவர்கள் கிழக்கு உக்ரைனியர்கள்.mariupol zaporizhzhia, கார்கிவ் போன்ற இடங்களில் வாழ்வோரும் இப்படி பட்டவர்கள் தான் என்றாலும் கார்கிவ் மேற்கத்தேய நாகரிக மோகம் கொஞ்சம் அதிகம் கொண்ட பகுதி. மேற்கு ukraine இல் உள்ள மக்கள் அப்படியே வேறு ஒரு மக்கள் கூட்டம். ரஷியன் தெரிந்தாலும் விடாப்பிடியாக பேச வேண்டாம் என்று இருக்கும் மக்கள் அவர்கள். ஒப்பீட்டளவில் மிகவும் நாகரிகம் ஆன மக்கள். ஒரு காலத்தில் யூதர்கள் சோவியட் ரஷ்யா உடன் சேர்ந்து இவர்களை அடக்கிபலரை படுகொலை செய்தது எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கு இவர்கள் பின்னர் ஜெர்மனிஉடன் சேர்ந்து யூதர்களை படுகொலை செய்ததும் உண்மை. கம்யூனிஸ்ட் சித்தாந்தம், Soviet ரஷ்யா இந்த இரண்டும் இவர்களை முன்னேற விடாமல் இறுக்க பிடித்திருக்கிறது என்று மனதார உணருகின்றர்கள்.யூத வெறுப்புணர்வு ஓரளவு உண்டு என்பது உண்மை என்றாலும் எல்லோரிடமும் சமமாக இழையோடி இல்லை. இவர்களில் பலருக்கு poland ருமேனியா, அஸ்திரியா நாடுகளோடு குடும்ப பிணைப்பு உண்டு. கிழக்கு மக்கள் ரஷியன் ஆர்த்தோடோக்ஸ் என்றால் இவர்ககளில் பலர் கத்தோலிக்கார்கள். யாழ்ப்பாண மொழியில் சொல்வது என்றால் புழுத்த கத்தோலிக்கர்கள். இங்கே குடி போதையில் அடிப்பவன் இல்லை. எங்களை கறுப்பு குரங்கே என்று கூவி நக்கல் அடிப்பவர்களும் இல்லை.சுதந்திர நாட்டுக்கான தணியாத தாகம் கொண்டவர்கள். இங்கே liviv என்று ஒரு இடம் உண்டு அழகான இடம். ஒரு போட்டோ கூட எடுக்கவில்லை என்று இப்போது நினைத்து வருந்துகிறேன் கிவ் இது இன்னொரு அற்புதம். இங்குள்ள டேனிப்பர் ஆற்றின் கரையோரங்களில் நடந்து திரிந்த நாட்கள் பசுமையான நினைவுகள். மிகவும் ஆழத்தில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள் எந்த குண்டு வெடிப்பிலும் இருந்தும் உங்களை பாதுக்காக்கும். இங்கே உள்ளவர்கள் அனைவரும் நன்கு ரஷியன் பேசுவார்கள், ரஷியன் தான் இங்கேயும் பெரும்பாலும் பேசப்படும் மொழியும், எனினும் கம்யூனிஸ்ட் சித்தாதம் மீது எந்த ஈடுபாடும் இல்லை. (கொழும்பு தமிழர்க்கு தமிழ் பாசம் போல.) ரஷியன் தான் இவர்களின் தாய் மொழி எனினும் பெரிய பற்று என்று ஒன்றும் இல்லை. Ukraineனை நேசிப்பவர்கள் என்பதை விட கீவை நேசிப்பவர்கள். எப்படி யாவது யூரோப் இல் இணைந்து விட்டால் தமது செல்வ செழிப்புக்கு நல்லது என்று கருத்துப்பவர்கள். கிரிமியா இது வரலாற்று முக்கியத்துவம் உள்ள குடா நாடு. Turkey யும் ரஷ்யாவும் பிரித்தானியாவும் சண்டை போட்டு களைத்துபோன இடம். இங்கே கருங்கடலில் குளித்து தான் நான் நீந்தவே பழகினேன். இரண்டாவது உலகப்போர் நிறுத்தபடவும் சர்வதேச சங்கம் ஐக்கிய நாடுகள் சங்கமாக மாறவும் கையெழுத்து போடப்பட்ட இடம். இங்கே உள்ளவர்கள் கொஞ்சம் பழுப்பு தோல் கொண்டவர்கள். ரஷியன் போல் அவித்த றால் போல் இருக்க மாட்டினம். அரேபிய, ஒஸ்மானிய, யூத, ரஷிய, உக்கரைன் கலப்பு மக்கள் தான் இங்கு அதிகம். நல்ல திராட்சை ரசத்துக்கு பெயர் போன இடம்.பல மேற்கு நாட்டவர்கள் summer ஹாலிடேக்கு வந்து போகும் இடம். 2014 இல் மைதான் ( தமிழில் மைதானம் ) புரட்சிக்கு பின் அப்போதைய அதிபர் விக்டர் யானுக்கோவிச் பதவியில் இருந்து அகற்றப் பட்ட பின் கிரீமியா ரஷ்யாவால் சண்டை இன்றி பிடிக்கப்பட்டது. பின்னர் நான் இருந்த luhansk மற்றும் donesk இல் ரஷ்ய சார்பு ஆட்களால் பிரச்னை ஏற்படுத்தப்பட்டு அங்குள்ள போலீஸ் ஸ்டேஷன்,நிர்வாக அலகுகள் கைப்பற்றபட்டது. அங்குள்ள வேலை இல்லாத ரவுடிகளுக்கு ரஷ்யா பணம் ஆயுதம் கொடுத்து தான் இது நடந்தது. அப்பொழுது நான் அங்க தான் இருந்தேன். படிப்பு முடிந்து பட்டமளிப்பும் முடிந்தது விட்டது ஆனால் இன்னும் கையில் எல்லாம் செர்டிபிகேட் documents வரவில்லை என்பதால் கொஞ்ச நாள் கஷ்டத்திலும் அங்கு நாங்கள் இருந்தோம். பின்னர் குண்டு சத்தம் கேட்க நான் கார்கிவ் போய் விட்டேன். வரமால் அங்கு மாட்டிய ஆபிரிக்க மாணவர்களை இந்த ரவுடிகள் பிடித்து அமெரிக்கன் army uniform போட்டு அங்குள்ள டிவி களில் அமெரிக்க ராணுவம் இங்கு வந்து விட்டது என்றும் தாம் அவர்களை பிடித்து விட்டோம் என்றும் சனங்களுக்கு பேய்க்காட்டினர்கள்.அங்கு ( கார்கிவ் )கிட்டதட்ட ஒரு வருடம் இருந்து பின்னனர் lugansk வந்தேன் என்னுடைய documents எடுக்க வரும் பொழுது முகமாலை ஆனையிறவு வழியில் வருவதை விட செக்கிங் அதிகம். luhansk railway station இல் வைத்து என்னை ரஷியன் பிரிவினைவாதிகள் பிடித்து கிழே ஒரு இடத்துக்கு கொண்டு போய் இரண்டு மணி நேரம் ஆவது விசாரித்து இருக்கிற காசை பிடுங்கி விட்டு அனுப்பி விட்டார்கள். நான் இவர்கள் காசு வாங்கமல் விட மாட்டார்கள் என்று ஏற்கனவே தெரியும் என்பதால் வேறு பணம் ஒழித்து வைத்து இருந்தேன். விட்டுக்கு போனால் தண்ணி இல்லை, மின்சாரம் இல்லை, பெரிய விற்பனை நிலையன்கள், சந்தை, நகரம் என்று எல்லாம் சுக்கு நூறாய் கிடந்தது. ஒரு கிழமை சமாளித்து விட்டு எல்லா documents ம் எடுத்துக்கொண்டு இலங்கைக்கு வந்து விட்டேன். இவை வெகு சுருக்கமான தகவல்கள் மட்டுமே.. அனுப்பவ படிப்பினைகள் இவைதான் 1) ஒரு நாட்டுக்கு போனால் உங்கள் மொழி பேசுபவர்கள், உங்கள் நாட்டவர்கள் உடன் மட்டுமே தொடர்பில் இருக்காதீர்கள். நான் கார்கிவ் போன பொழுது கையில் உடனடியாக பணம் இல்லை. தங்கியது எல்லாம் அங்குள்ள எனது உக்கீரைன் நண்பர் வீட்டில். 2) நன்கு அந்த நாட்டின் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். கடையில் போய் பால் வெங்காயம் வாங்கும் அளவில் தான் இன்று பலரின் மொழியறிவு . 3) பிரச்சனைக்கு உள்ளான இடங்களில் பிரச்னை மீண்டும் வரும். அது தீர்ந்து விட்டதாக தோன்றும். அந்த மாயத்துக்குள் உட்பட்டு விடாதீர்கள்.luhansk இல் இருந்த பொழுது போர் எல்லாம் வரவே வராது என்று தான் 99 வீதம் பேர் சொன்னார்கள். சொன்னவர்களில் பலர் இன்று உயிரோடு இல்லை. 4)கொஞ்சம் நிலைமை சரி இல்லை என்றால் அந்த இடத்தை விட்டு ஓட தயங்க வேண்டாம். நாங்கள் சவாகச்சேரியில் இருந்து வவுனியா 1991 இல் வந்தோம்.. ஆகவே எந்த பெரிய சண்டையிலும் சிக்கவில்லை. Luhansk திரும்பிய பொழுது ஒரு தெரிந்த குடும்பம் நான் இலங்கை போவதாக சொன்ன பொழுது இரவு சாப்பிட்டுக்கு அழைத்தார்கள். அவர்கள் முன்று மாசம் உருளைக்கிழங்கு, உள்ளி இந்த இரண்டும் மட்டுமே உண்டு வாழ்ந்து இருக்கிறார்கள்.அவர்கள் இலக்குவாக வேறு ஒரு இடத்துக்கு போய் இருக்கலாம். 4) எப்பொழுதும் எங்கு வாழ்ந்தாலும் அவசரம் என்று வெளியில் ஓட வேண்டி வரலாம். ஒரு bag இல் ஒரு மூன்று நாளைக்கு தேவையான உணவு, இதர அவசிய பொருட்கள், மற்றும் உங்கள் டாக்குமெண்ட்ஸ் அதில் வைத்துக்கொள்ளுங்கள்.18 points
-
நான் இப்போது யாழ்ப்பாண த்தில் தான் நிற்கிறேன் கோமகனின் இழப்பை யாழ் ஊடாக அறிந்து இருந்தேன் . இன்றைய பேப்பரில் அவருடைய இறுதி சடங்கு பற்றி காணக் கிடைத்தது காலை 10 மணி அளவில் அவருக்கு இறுதி அஞ்சலி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது . யாழ் இணையம் சார்பாக மலர்வளையம் வைத்து கருத்துக்கள உறவுகள் சார்பாகவும் இறுதி வணக்கம் செலுத்தி விட்டு வந்தேன். அதிக நேரம் அங்கு நிற்க முடியவில்லை. காரணம் எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று மாலைதான் நடை பெற்றது விபரமாக பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்18 points
-
இந்த வருசம் மட்டும் ஆரியகுளம் பகுதியில் வெசாக் கூடு அமைக்கும் பணியினை யாழ்மக்களே ஒருதடவை மேற்கொள்ளலாம், தமது தேசம் முழுவதும் ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதும் தமிழர்கள்மீதும் அவர்கள் பக்க நியாயங்கள்மீதும் ஏதோ கொஞ்சம் காரணங்கள் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்றும் காலிமுகதிடலில் கூடிய சிங்களர்கள் ஓரளவு அனுதாபத்துடன் பார்க்க தொடங்கியிருக்கிறார்கள். பிரபாகரன் செய்தது எல்லாம் ஒட்டுமொத்த தவறல்ல என்று உணரவும் தொடங்கியிருக்கிறார்கள். புலிகள் மே 18ல் தாக்குதல் நடத்த போகிறார்கள் என்று ஒரு செய்தி வந்தபோது, யாழ்பக்கம் போய் பாருங்கள் யாழ் இளைஞர்கள் எவ்வளவு கஷ்டபடுகிறார்கள், வேண்டுமென்றே புலி பூச்சாண்டி காட்டி எங்களை ஏமாற்றாதீர்கள் என்று சமூக வலைதளங்களீல் சிங்களவர்கள் சிரிப்பாகவும் சீரியசாகவும் பேச தொடங்கிவிட்டார்கள் என்று செய்தி ஊடகங்கள் ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன. கீழே வரும் இந்த காணொலியில் 5:43 லிருந்து சிங்களவர்களின் கருத்துக்கள் பற்றி செய்தி விளக்குகிறது .... தமக்கு ஒரு பிரச்சனை வந்தால் தமிழர்மீது கரிசனை காட்டுவது ஒரு நடிப்பாக இருந்தால், எமக்கு கிடைக்கும் ஒரு சந்தர்ப்பத்தை நாம் உங்களுக்கு எதிர்கள் அல்ல என்று வெசாக் கூடுகளை தமிழர் பகுதியில் இந்த வருசம் மட்டும் தமிழர்களே கட்டி நடிக்கலாம் அதில் தப்பு எதுவுமே இல்லை. தமிழ்கட்சிகள்மீது என்றைக்கும் எம்மில் பலருக்கு உள்ளதுபோல் நம்பிக்கை இருந்ததில்லை ஆனாலும் அவர்கள் செய்த செயலில் ஒன்று மட்டும் ஈர்த்தது, தமிழகத்திலிருந்து உணவுபொருட்கள் இலங்கை தமிழருக்கு மட்டுமே அனுப்புவதாக இருந்தால் அது எமக்கு வேண்டாம் ஒட்டு மொத்த இலங்கை மக்களுக்காகவும் அனுப்புவதாயிருந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று சொன்னது வரலாற்று காய் நகர்த்தல். நாம் உங்களுக்கு எதிரிகள் இல்லை என்று பலதடவை நிரூபித்திருக்கிறோம், இன்று ஒருதுளி அளவாவது எமக்கு தமிழர்கள் எதிரி அல்ல, ஆட்சிட்யாளர்கள் மட்டுமே என்று அவர்கள் உணரும் சூழலில் இதுவரைகாலமும் எம்மை எதிரியாகவே பார்த்த அந்த பேரினத்தை அவமானபடுத்தவாவது வெசாக்கூட்டை தமிழர்கள் ஏற்றலாம் தப்பில்லை. இனம் என்ற ரீதியில் பல கொள்கைகள் கோட்பாடுகள் காய்நகர்த்தல்கள் இருந்தாலும், தனிமனிதன் என்ற ரீதியில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கும் அல்லவா, அந்த வகையில் எந்த கால கட்டத்திலும் இலங்கை தமிழரை சரிசமாக அரியணையேற்றவோ அணைத்து செல்லவோ சிங்கள சமூகம் அனுமதிக்காது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எப்போதுமே உண்டு. இன்று தமக்கு வலிக்குது என்றால் அவர்களுக்கும் அப்படித்தானே வலிச்சிருக்கும் என்று மெலிதாய் உணர்கிறார்கள், நாளை தமது பிரச்சனை தீர்ந்துவிட்டால் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று எகத்தாளமாக சிரிப்பார்கள், இதுவே எமது முப்பாட்டன் காலத்திலிருந்து சிங்கள தேசத்தில் உணர்ந்த பாடம். மற்றும்படி நாமும் ராஜதந்திர அரசியல் செய்வோம்.13 points
-
குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடும்பங்கள் நமது மற்றும் அரசின் அனுதாபத்திற்கும் ஆதரவிற்கும் உரியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பேரறிவாளன் சந்தித்த வழக்கு எத்தகையது ? அன்றைக்கு இந்தியாவில் தடைசெய்யப்படாத ஒரு இயக்கத்தின் ஆதரவாளவாராக ஒரு பத்தொன்பது வயது இளைஞன் இருந்தது இயற்கையான ஒன்று. பேட்டரியை சொன்ன இடத்தில் கொடுக்கத்தான் பணிக்கப்பட்டிருப்பாரே தவிர, அது எதற்காக என்று அந்த செயலில் முதல் நிலையில் இருந்தோர் தவிர வேறு யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தாம் காரணத்தை அறிந்திருக்கவில்லை என அவர் தந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்யாதது விசாரணை அதிகாரி தியாகராஜனின் குற்றம் (பணியில் இருந்தபோது இவ்வளவு பெரிய விடயத்தை மறைத்தது கவனக் குறைவாக இருந்திருக்க வாய்ப்பில்லை). இருப்பினும் ஓய்வுபெற்ற பின்னர் நீதிமன்றத்தில் அதை ஒத்துக் கொண்டது வழக்கின் திருப்புமுனை (மனசாட்சி விழித்துக் கொண்டதோ என்னவோ !). சுருக்கமாக பேரறிவாளன் மீதான வழக்கு இவ்வளவுதான். இதற்கு 31 வருடக் கடுங்காவல் நியாயம்தானா ? மரண தண்டனைக்கு நாள் குறிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன் கால அவகாசம் நீட்டிக்கப்பெற்று அவர் தப்பித்தது பெரிய விடயம். அக்கால கட்டத்தில் ஒரு மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தம் மரணத்தை விடக் கொடியது என்பது வேறு. ஒரு முன்னாள்/அந்நாள் பிரதமரின் கொலை எவ்வளவு பெரிய சூழ்ச்சியின் விளைவு எனக் காட்ட, இயன்ற வரை நிறையப் பேரை அதில் சிக்க வைப்பது காலங்காலமாய் நிகழும் கொடுமையாகத் தெரிகிறது. இந்திரா காந்தி கொலை வழக்கில், துப்பாக்கியால் சுட்ட பாதுகாவலர்கள் பியாந்த் சிங், சத்வந்த் சிங் தவிர பெரிய அளவில் யாரும் சிக்கவில்லை என்பதற்காகவே சத்வந்த் சிங்கின் உறவினர் கேஹார் சிங் சிக்க வைக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. கேஹார் சிங் நிலை மிகவும் கொடுமை. கொலைக்கு மூன்று மாதங்கள் முன்பு பொற்கோயிலுக்குக் குடும்பமாகச் சென்ற போது, அவரும் சந்த்வந்த் சிங்கும் தனியாகச் சென்று உரையாடியதற்கான சாட்சி மட்டுமே உண்டு. "ஏதோ சதித் திட்டமன்றி வேறு எதற்காகக் குடும்ப உறுப்பினர்களைத் தவிர்த்து தனியாக உரையாட வேண்டும்?" என்று தீர்ப்பில் உள்ளதாக வாசித்த நினைவு. பெரும் வேடிக்கையாகப் பரிகசிக்கப்பட்ட ஒன்று. குல்தீப் நய்யார் போன்ற மூத்த பத்திரிகையாளர்கள் எவ்வளவோ முயன்றும் கேஹார் சிங்கைத் தூக்கிலிருந்து காப்பாற்ற இயலவில்லை. கேஹார் சிங் அளவிற்கு பேரறிவாளன் துரதிர்ஷ்டசாலி இல்லை என்பது நமக்கான சிறிய மகிழ்ச்சி. நல்லோர் பலர் பேரறிவாளன் பக்கம் நின்றதும் வென்றதும் வரலாற்று நிகழ்வு. தீர்ப்பில் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் அதிகார வரம்பு சுட்டிக் காட்டப்பட்டது மற்றொரு வரலாற்று நிகழ்வு. குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டோர் பேரறிவாளனின் விடுதலையை எதிர்ப்பது வெறும் உணர்ச்சிக்கு அடிமையாவது; வருத்தத்திற்குரியது.12 points
-
ராஜபக்ஷக்களின் ஆதரவாளர், எதிர்ப்பாளர் இரண்டு பக்கமும் காடைத்தனத்தைக் காட்டும் சிங்களவர்கள்தான் இருக்கின்றார்கள். இதே காட்டான்கள்தான் முள்ளிவாய்க்காலில் தமிழரையும் குடும்பங்களின் முன்னிலையிலேயே நிர்வாணப்படுத்தினார்கள். அடிப்பது, உதைப்பதை விட நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்துவது அவர்களின் விகாரமான மனப்பான்மையைத்தான் காட்டுகின்றது. இதில் தமிழர்கள் இரசிக்க எதுவுமில்லை. நாளை இந்த இரண்டு பக்கமும் சேர்ந்து தமிழரையும், முஸ்லிம்களையும் நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தவும் கூடும். ஏற்கனவே செய்தவர்கள்தானே!12 points
-
இலங்கையில் இன்று தமிழர் நாம் படும் அவஸ்த்தைக்கு நம் முன்னோர்களே காரணம் என்பேன். மலையகத் தமிழரை அன்று திருப்பி அனுப்புவதை நாம் எல்லோரும் சேர்ந்து எதிர்த்து இருந்தால் இன்று இலங்கை சனத்தொகையில் 40 வீதம் தமிழர் இருந்திருப்போம். ஒரு நாள் மலையகத் தமிழரை நாடற்றவர்கள் ஆக்கி கப்பலில் இந்தியாவுக்கு அனுப்பும் வீடியோ ஒன்று பார்த்தேன். ஒரு வயசு போன அம்மா தேம்பித் தேம்பி அழுறா.. அந்தக் கண்ணீர் வலிமிகுந்தது..தலைமுறை தாண்டியும் காவு வாங்கும் சக்தி கொண்டது. எத்தனை வீட்டு வேலை செய்த மலையக பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் அன்று இறந்து இருப்பார்கள்? இறந்த மகளின் உடலை வாங்க வர பணமில்லாமல் வாழ்ந்து செத்த பெற்றோரின் கண்ணீற்கு என்னை விடை? இது சம்பந்தமாக ஓரளவுக்கேனும் நாம் யோசிப்பதில்லை, மனம் கசப்பதும் இல்லை.இலகுவாக வேறு ஒருவர் தவறு என்று கடந்து போய் விடுகின்றோம். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். காலம் எங்களுக்கு அதிகாரத்தையும் அந்தஸ்தையும் கொடுத்தபொழுது, அதை எங்கள் சமூகத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களை நசுக்க பயன்படுத்தினோமேயன்றி அவர்களை தூக்கி விட என்றும் நாங்கள் நினைத்ததில்லை. இவ்வளவத்தையும் செய்து விட்டு இப்பொழுது குத்துதே குடையுதே என்றால்..11 points
-
நான் யாழ் தளத்தை பல ஆண்டுகளாக அறிவேன் என்றாலும் இப்பொழுது தான் உறுப்பினர் ஆக இணைந்து கொண்டேன். நான் உக்ரைனில் 2006 புரட்டாசி மாசம் மருத்துவம் படிக்க போனேன்.2014 - 2015 அளவில் இலங்கைக்கு திரும்பினேன். இலங்கையில் சில வருடம் வேலை செய்து விட்டு இப்பொழுது கனடாவில் Alberta வில் வசிக்கிறேன். Canadian emergency Ambulance service இல் வேலை செய்கிறேன். படிக்க போன இடம் luhansk ( லூகான்ஸ்க்,டன்பாஸ் இல் உள்ள Donesk (டோனேஸ்க் ) க்கு அடுத்த பெரிய province. போன புதிதில் நான்கு இலங்கை மாணவர்கள் தான்போனோம். அப்பொழுது நாங்கள் தான் ஒரே இலங்கை மாணவர்கள். கொஞ்சம் தமிழ் நாட்டு மாணவர்களும் இருந்ந்தார்கள்.லீவு கிடைக்கும் பொழுது பல வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா இலங்கை போய் விடுவார்கள். நான் டிக்கெட் செலவு கூட என்பதால் ukraine க்குள் சுத்துவது வழக்கம். அப்படி போன இடங்களில் ஒன்று தான் மரிப்புல். இது தவிர கிரீமியா கீவ் கார்க்கிவ்,liviv, zaporizhzhia போன்ற இடங்களில் ஓரிரு மாதங்கள் ஆவது இருந்து இருப்பேன். டன்பாஸ் பிறதேசத்தில் இருப்பவர்களில் 90 வீதம் பேர் ரஷியன் தாய் மொழி ஆக கொண்டவர்கள். பலர் சுரங்க தொழிலாளிகள். ரஷ்யாவுடன் குடும்பம் பிணைப்புகள் அதிகம் கொண்டவர்கள். நானே சில தடவைகள் ரஷ்யாவுக்குள் போனேன் என்று தெரியாமலே உள்ளுக்குள் போய் இருக்கின்றேன் இவர்களுடன். குணம் என்று வரும் பொழுது மிகவும் பொதுவாக நல்ல மனிதர்கள் தான். நான் இளம் வயது ஆட்களை வைத்து அந்த சமூகத்தை மதிப்பிடக்கூடாது என்று நம்புகிறேன். ஆகவே 60 கடந்தவர்கள் என்று பார்த்தால் ஓரளவுக்கு நல்லவர்கள் தான் அவர்கள். என்றாலும் எல்லோரையும் அப்படி சொல்ல ஏலாது. கம்யூனிஸ்ட் சித்தாதத்தில் பற்று கொண்டவர்கள். வெளியே சொல்லிக்கொண்டு இருக்க மாட்டினம் ஆனால் உள் மனது அது தான். நான் கூட பழகியது பாட்டிகள் தாத்தாக்களுடன் தான். சில வருடங்கள் அவர்கள் வீட்டில் வாடகைக்கு வாழ்ந்தும் இருக்கின்றேன். Danbaas உண்மையில் ukraine க்கான பிரதேசம் தான். ஆனாலும் சோவியத் காலத்தில் ஸ்டாலின் சைபிரியாவுக்கு நாடு கடத்திய கிரிமினல்களில் ஓரளவுக்கு குறைவான பிழைகள் செய்தோரை இங்கே டன்பாசில் குடியெற்றி அங்குள்ள சுரங்க வேலைக்கு பயன்படுத்திக்கொண்டார். அவர்களின் பரம்பரை தான் இப்போது அங்கே இருப்போர். வெள்ளை இன வெறி உண்டு. அதுவும் எல்லோரும் அப்படி என்று ஒரேஅடியாக சொல்ல முடியாத அளவுக்கு நல்ல மனிதர்களின் ஞாபகங்கள் வந்து போகின்றது. இரவில் வெளியே நம்பிக்கையோடு சுற்ற முடியாது நன்கு ரஷியன் தெரியாவிட்டால். நான் பல முறை மாட்டி இருக்கின்றேன். குடிகாரர் குடித்து விட்டு காசுக்கு வெளிநாட்டு ஆக்களை அடித்து காசு வாங்குவது வளமை.. அப்படி அடிக்கும் பொழுதே அங்குள்ள இன்னொருவர் காப்பாற்றியும் விடுவார். நான் ஒருமுறை இரவு கடைக்கு போய் சாமான் வாங்கி வெளியே வரும் பொழுது சைக்கிள் செயின் கொண்டு அடிக்க ஒருவர் வந்து இருந்த காசை கொடுத்து தப்பிய சம்பவம் ஞாபகம். எல்லோருக்கும் ஒரு வீடு அங்கு உண்டு. குவர்த்திரா ( அப்பார்ட்மெண்ட் ) என்று சொல்வோம். ஏற்கனவே சொன்னது போல வாயோதிப்பர்கள் பழக இனிமையானவர்கள். அவர்களிடமும் வெள்ளை இன வெறி, உடைந்து போன சோவியத் பற்றிய கனவுகள், ரஷியன் மொழி மீதான தீரா தாகம், conservetive மனநிலை, மனிதாபிமானம், கடவுள் பக்தி, வெளியே காட்டாத அமெரிக்க வெறுப்புணர்வு, இந்தியா மீது பாசம்,உழைப்பு, சுற்றதாருடன் மனித பன்புடன் பழகுவது, இயலுமான வரை மற்றவர்களுக்கு உதவி, சிக்கனம், உபசரிப்பு என்று எல்லாம் கலந்த சாதாரண மனிதர்கள் அவர்கள். இவர்கள் கிழக்கு உக்ரைனியர்கள்.mariupol zaporizhzhia, கார்கிவ் போன்ற இடங்களில் வாழ்வோரும் இப்படி பட்டவர்கள் தான் என்றாலும் கார்கிவ் மேற்கத்தேய நாகரிக மோகம் கொஞ்சம் அதிகம் கொண்ட பகுதி. மேற்கு ukraine இல் உள்ள மக்கள் அப்படியே வேறு ஒரு மக்கள் கூட்டம். ரஷியன் தெரிந்தாலும் விடாப்பிடியாக பேச வேண்டாம் என்று இருக்கும் மக்கள் அவர்கள். ஒப்பீட்டளவில் மிகவும் நாகரிகம் ஆன மக்கள். ஒரு காலத்தில் யூதர்கள் சோவியட் ரஷ்யா உடன் சேர்ந்து இவர்களை அடக்கிபலரை படுகொலை செய்தது எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கு இவர்கள் பின்னர் ஜெர்மனிஉடன் சேர்ந்து யூதர்களை படுகொலை செய்ததும் உண்மை. கம்யூனிஸ்ட் சித்தாந்தம், Soviet ரஷ்யா இந்த இரண்டும் இவர்களை முன்னேற விடாமல் இறுக்க பிடித்திருக்கிறது என்று மனதார உணருகின்றர்கள்.யூத வெறுப்புணர்வு ஓரளவு உண்டு என்பது உண்மை என்றாலும் எல்லோரிடமும் சமமாக இழையோடி இல்லை. இவர்களில் பலருக்கு poland ருமேனியா, அஸ்திரியா நாடுகளோடு குடும்ப பிணைப்பு உண்டு. கிழக்கு மக்கள் ரஷியன் ஆர்த்தோடோக்ஸ் என்றால் இவர்ககளில் பலர் கத்தோலிக்கார்கள். யாழ்ப்பாண மொழியில் சொல்வது என்றால் புழுத்த கத்தோலிக்கர்கள். இங்கே குடி போதையில் அடிப்பவன் இல்லை. எங்களை கறுப்பு குரங்கே என்று கூவி நக்கல் அடிப்பவர்களும் இல்லை.சுதந்திர நாட்டுக்கான தணியாத தாகம் கொண்டவர்கள். இங்கே liviv என்று ஒரு இடம் உண்டு அழகான இடம். ஒரு போட்டோ கூட எடுக்கவில்லை என்று இப்போது நினைத்து வருந்துகிறேன் கிவ் இது இன்னொரு அற்புதம். இங்குள்ள டேனிப்பர் ஆற்றின் கரையோரங்களில் நடந்து திரிந்த நாட்கள் பசுமையான நினைவுகள். மிகவும் ஆழத்தில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள் எந்த குண்டு வெடிப்பிலும் இருந்தும் உங்களை பாதுக்காக்கும். இங்கே உள்ளவர்கள் அனைவரும் நன்கு ரஷியன் பேசுவார்கள், ரஷியன் தான் இங்கேயும் பெரும்பாலும் பேசப்படும் மொழியும், எனினும் கம்யூனிஸ்ட் சித்தாதம் மீது எந்த ஈடுபாடும் இல்லை. (கொழும்பு தமிழர்க்கு தமிழ் பாசம் போல.) ரஷியன் தான் இவர்களின் தாய் மொழி எனினும் பெரிய பற்று என்று ஒன்றும் இல்லை. Ukraineனை நேசிப்பவர்கள் என்பதை விட கீவை நேசிப்பவர்கள். எப்படி யாவது யூரோப் இல் இணைந்து விட்டால் தமது செல்வ செழிப்புக்கு நல்லது என்று கருத்துப்பவர்கள். கிரிமியா இது வரலாற்று முக்கியத்துவம் உள்ள குடா நாடு. Turkey யும் ரஷ்யாவும் பிரித்தானியாவும் சண்டை போட்டு களைத்துபோன இடம். இங்கே கருங்கடலில் குளித்து தான் நான் நீந்தவே பழகினேன். இரண்டாவது உலகப்போர் நிறுத்தபடவும் சர்வதேச சங்கம் ஐக்கிய நாடுகள் சங்கமாக மாறவும் கையெழுத்து போடப்பட்ட இடம். இங்கே உள்ளவர்கள் கொஞ்சம் பழுப்பு தோல் கொண்டவர்கள். ரஷியன் போல் அவித்த றால் போல் இருக்க மாட்டினம். அரேபிய, ஒஸ்மானிய, யூத, ரஷிய, உக்கரைன் கலப்பு மக்கள் தான் இங்கு அதிகம். நல்ல திராட்சை ரசத்துக்கு பெயர் போன இடம்.பல மேற்கு நாட்டவர்கள் summer ஹாலிடேக்கு வந்து போகும் இடம். 2014 இல் மைதான் ( தமிழில் மைதானம் ) புரட்சிக்கு பின் அப்போதைய அதிபர் விக்டர் யானுக்கோவிச் பதவியில் இருந்து அகற்றப் பட்ட பின் கிரீமியா ரஷ்யாவால் சண்டை இன்றி பிடிக்கப்பட்டது. பின்னர் நான் இருந்த luhansk மற்றும் donesk இல் ரஷ்ய சார்பு ஆட்களால் பிரச்னை ஏற்படுத்தப்பட்டு அங்குள்ள போலீஸ் ஸ்டேஷன்,நிர்வாக அலகுகள் கைப்பற்றபட்டது. அங்குள்ள வேலை இல்லாத ரவுடிகளுக்கு ரஷ்யா பணம் ஆயுதம் கொடுத்து தான் இது நடந்தது. அப்பொழுது நான் அங்க தான் இருந்தேன். படிப்பு முடிந்து பட்டமளிப்பும் முடிந்தது விட்டது ஆனால் இன்னும் கையில் எல்லாம் செர்டிபிகேட் documents வரவில்லை என்பதால் கொஞ்ச நாள் கஷ்டத்திலும் அங்கு நாங்கள் இருந்தோம். பின்னர் குண்டு சத்தம் கேட்க நான் கார்கிவ் போய் விட்டேன். வரமால் அங்கு மாட்டிய ஆபிரிக்க மாணவர்களை இந்த ரவுடிகள் பிடித்து அமெரிக்கன் army uniform போட்டு அங்குள்ள டிவி களில் அமெரிக்க ராணுவம் இங்கு வந்து விட்டது என்றும் தாம் அவர்களை பிடித்து விட்டோம் என்றும் சனங்களுக்கு பேய்க்காட்டினர்கள்.அங்கு ( கார்கிவ் )கிட்டதட்ட ஒரு வருடம் இருந்து பின்னனர் lugansk வந்தேன் என்னுடைய documents எடுக்க வரும் பொழுது முகமாலை ஆனையிறவு வழியில் வருவதை விட செக்கிங் அதிகம். luhansk railway station இல் வைத்து என்னை ரஷியன் பிரிவினைவாதிகள் பிடித்து கிழே ஒரு இடத்துக்கு கொண்டு போய் இரண்டு மணி நேரம் ஆவது விசாரித்து இருக்கிற காசை பிடுங்கி விட்டு அனுப்பி விட்டார்கள். நான் இவர்கள் காசு வாங்கமல் விட மாட்டார்கள் என்று ஏற்கனவே தெரியும் என்பதால் வேறு பணம் ஒழித்து வைத்து இருந்தேன். விட்டுக்கு போனால் தண்ணி இல்லை, மின்சாரம் இல்லை, பெரிய விற்பனை நிலையன்கள், சந்தை, நகரம் என்று எல்லாம் சுக்கு நூறாய் கிடந்தது. ஒரு கிழமை சமாளித்து விட்டு எல்லா documents ம் எடுத்துக்கொண்டு இலங்கைக்கு வந்து விட்டேன். இவை வெகு சுருக்கமான தகவல்கள் மட்டுமே.. அனுப்பவ படிப்பினைகள் இவைதான் 1) ஒரு நாட்டுக்கு போனால் உங்கள் மொழி பேசுபவர்கள், உங்கள் நாட்டவர்கள் உடன் மட்டுமே தொடர்பில் இருக்காதீர்கள். நான் கார்கிவ் போன பொழுது கையில் உடனடியாக பணம் இல்லை. தங்கியது எல்லாம் அங்குள்ள எனது உக்கீரைன் நண்பர் வீட்டில். 2) நன்கு அந்த நாட்டின் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். கடையில் போய் பால் வெங்காயம் வாங்கும் அளவில் தான் இன்று பலரின் மொழியறிவு . 3) பிரச்சனைக்கு உள்ளான இடங்களில் பிரச்னை மீண்டும் வரும். அது தீர்ந்து விட்டதாக தோன்றும். அந்த மாயத்துக்குள் உட்பட்டு விடாதீர்கள்.luhansk இல் இருந்த பொழுது போர் எல்லாம் வரவே வராது என்று தான் 99 வீதம் பேர் சொன்னார்கள். சொன்னவர்களில் பலர் இன்று உயிரோடு இல்லை. 4)கொஞ்சம் நிலைமை சரி இல்லை என்றால் அந்த இடத்தை விட்டு ஓட தயங்க வேண்டாம். நாங்கள் சவாகச்சேரியில் இருந்து வவுனியா 1991 இல் வந்தோம்.. ஆகவே எந்த பெரிய சண்டையிலும் சிக்கவில்லை. Luhansk திரும்பிய பொழுது ஒரு தெரிந்த குடும்பம் நான் இலங்கை போவதாக சொன்ன பொழுது இரவு சாப்பிட்டுக்கு அழைத்தார்கள். அவர்கள் முன்று மாசம் உருளைக்கிழங்கு, உள்ளி இந்த இரண்டும் மட்டுமே உண்டு வாழ்ந்து இருக்கிறார்கள்.அவர்கள் இலக்குவாக வேறு ஒரு இடத்துக்கு போய் இருக்கலாம். 4) எப்பொழுதும் எங்கு வாழ்ந்தாலும் அவசரம் என்று வெளியில் ஓட வேண்டி வரலாம். ஒரு bag இல் ஒரு மூன்று நாளைக்கு தேவையான உணவு, இதர அவசிய பொருட்கள், மற்றும் உங்கள் டாக்குமெண்ட்ஸ் அதில் வைத்துக்கொள்ளுங்கள்.11 points
-
அன்னைக்கு ஒரு தினம் தன்னை ஈய்ந்தவளுக்கு தரணியில் உயர்ந்தவளுக்கு ஈடு இணை இல்லா இல்லத்து அரசிக்கு அவளை வாழ்த்த ஒரு தினம்.அன்னையர் தினமாம் இல்லை அன்னையை மறந்தவருக்கான தினம் பரபரப்பான உலகில் அவளை வாழ்த்த ஒரு தினம். இரத்தத்தை பாலாக்கி , நோய் கண்டால் கண்விழித்து தன் பசி மறந்து என் பசி போக்கியவள் தாயாய் தாரமாய் சகோதாரியாய் அன்போடு அறுசுவையும் தந்திடுவாள். குடும்ப நிர்வாகி, அன்பால் அதிகாரம் செய்தவள் இன்பத்திலும் துன்பத்திலும் தோழி,அன்னையாய் நல் ஆசானாய் அகரம் கற்றுத் தந்தவள் ஈன்ற பொழுதிலும் தன் மகவைச் சான்றோன் எனக் கேட்டு மகிழ்ந்தவள். தந்தைக்கு தோளோடு துணை நின்றவள் ஈடு இணை இல்லாதவள் தெய்வமாய் நின்றவள். அழகானவள் ,அன்பானவள் அப்பாவை அடையாளம் காட்டியவள். மறக்க முடியாதவள் , மன்னிக்க தெரிந்தவள். மனம் கோணாத மகாலடசுமித் தாயே மண்ணுலகில் எனக்கு தினமும் அன்னையர் தினம் யாழ் கள அன்னையருக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்.10 points
-
என்னுடைய கருத்தையும் பதிவிடுகிறேன்: ஒட்டு மொத்தமாக "சிங்கள இனத்தவரை" நம்பி அவர்கள் மூலம் தமிழர் எமக்கு தேனும், பாலும் ஓடும்.. ஒழுகும் என்று எந்த ஒரு தமிழனும் எப்போதும் நினைக்கும் நிலையில் இல்லை. ஆனாலும் சில யதார்த்தங்களும் உண்டு. இன்றும் கூட சில மூத்த சிங்கள பத்திரிகையாளர்கள், சமூக செயட்பாட்டாளர்கள், மாணவர்கள் என்று பல தரப்பில் இருந்து தமிழர்களின் உரிமை பறிப்பு, அவர்களின் அழிவுகள் குறித்த ஆழமான பார்வையும், அதற்கான நீதிக்கான செயல்பாடுகளும் இன்றுவரை இருக்கத்தான் செய்கின்றன. இந்த மெல்போர்ன் நிகழ்ச்சிகூட எமக்கு ஒருவகையில் சாதகம் தான். இதன்மூலம் மீண்டும் பெரும்பாலான சிங்கள மக்களின் நிலைப்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய கருத்துக்கள், நியாயங்கள் பக்கம் பக்கமாக இங்கே எழுதுவதைவிட சொல்லப்பட வேண்டிய இடத்தில் சொல்லப்பட்டால் வெண்டும். மேலே உள்ள மெல்போர்ன் தொடர்பான செய்தியில் உள்ள பின்னூட்டங்களையும் பாருங்கள், அதில் கருத்திடும் சிங்களவர்கள் அந்த செயலை எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் பாருங்கள். என்னை பொறுத்தவரை இதுகூட தேவைதான். கடமையை செய்... பலனை எதிர்பாராதே.10 points
-
இப்படியான சின்ன சின்ன மன மாற்றங்கள் மக்களிடையே நிகழும் பொழுது அதனை தட்டிக்கொடுப்போம். துவேசத்தை தூண்டாத, நம்பிக்கை வளர்க்கும் வகையிலான எமது பணியை தொடர்ந்தும் செய்வோம். பலனை எதிர்பாராது கடமையை செய்வோம்.9 points
-
நான் இதைச் சொல்லவந்தேன், தாங்கள் ஏற்கனவே கூறிவிட்டீர்கள். இந்த நிகழ்ச்சிக்குச் சென்ற இளையோர் தமிழின உணர்வாளர்களே (22 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணே தலைவி; ஏதிலிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் ஆஸ். வாழ் தமிழ்ப்பெண்). அவர்களின் அமைப்பின் நிகராளி கோத்தா மாமாவிற்கு எதிரான போராட்டத்தில் தமிழர் சார்பில் பங்கெடுக்க அழைக்கப்பட்டதின் காரணமே அவர்கள் அங்கு சென்றனர். சென்று தமிழினப்படுகொலை பம்லெட்களை அப்போராட்டத்தில் வழங்கினர். இனவாதமும் வெடித்தது; சிங்கள பெரும்பான்மையின் இனவாத முகம் மீண்டொருமுறை சிரித்தது. --------------- சிங்களவர் எப்போதும் இந்த இனவாத மனநிலையில் தான் இருக்கின்றார்கள்; அது இடத்திற்கும் சூழ்நிலைக்கும் தக்காற்போல மாறும். அவர்கள் அதிலிருந்து ஒருபோதும் மீளப்போவதில்லை. துவிட்டரில் கருத்திட்டுள்ள சிங்களவர் (தமிழ் இனப்படுகொலையை ஓமென்ற ஐயா தவிர்த்து) அனைவரும் தங்கள் இனமோர் 'இனவாத இனம்' என்ற சிந்தனை மீண்டும் வெளிப்பட்டுள்ளது/ தெரியவந்துள்ளது என்ற அச்சத்தாலே அங்கு நொண்டிச்சாட்டுக்கள் கூறியுள்ளனரே ஒழிய இவர்களும் அவ்விடத்தில் இருந்திருந்தால் இதுதான் அவர்களின் கருத்தாகவும் இருந்திருக்கும் என்று உறுதியாக நம்பிக்கூறுகிறேன். அவர்கள் இதைக் கண்டித்ததின் காரணம், தற்சமயம் அவர்கட்கு தமிழனின் கை தேவைப்படுவதால்தான். இல்லையேல் இன்று தமிழ்கார்டியனை வசை பாடியிருப்பர்.9 points
-
டமார்…..காதை கிழிப்பது போல ஒரு பெரும் சப்தம். எங்கும் கந்தக நெடி… நாசி எங்கும் ரத்தமும், சதையும் கந்தகமும் நிரம்பி மூச்சு முட்டுவதை போல ஒரு உணர்வு. ஓடு…ஓடு…பங்கருக்குள் ஓடு…மனம் ஆட்காட்டி பறவையாய் ஓலமிடுகிறது. எப்படியாவது உயிர் வாழ்ந்து விட்டால் போதும் என்ற உத்தரிப்பு. பெரியார், கால்மார்க்ஸ், கடவுள் மறுப்பு எல்லாம் கண நேரத்தில் மறந்து போக, வாய் தன் பாட்டில் “நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க” என முணுமுணுக்கிறது. இங்கே அருகில் மரம் போல கிடப்பது அப்பாவா? “அப்பா எழும்புங்கோ, மிக் அடிக்குது பங்கருக்க ஓடுவம்”. இந்த மனிசன் ஏன் அசையாமல் கிடக்குது…. உடம்பு வேற சில்லிட்டு போச்சு…. ஐயோ அப்பா…எழும்பனை எண்ட ராசா…. இதோ இன்னொரு மிக்கின் மிகை ஓலி வெடிப்பு. வேற வழி இல்லை கட்டிலுக்கு கீழ பாயுவம். பொத்…..எங்கும் ஒரே இருட்டு….. திடீரென லைட் எரிகிறது ….. “என்னப்பா மறுபடியும் கனவே….” சலித்துக்கொண்டு கட்டிலுக்கு திரும்புகிறாள் 83 இல் கைக் குழந்தையாக வெளி நாடு வந்து விட்ட மனைவி. கட்டிலில் நாளை வாட்டர் பார்க் போகும் சந்தோசத்தோடு சலனம் இன்றி உறங்கிகொண்டிருக்கிறான் மகன். அப்பா? போடா பைத்தியக்காரா என ஏளனமாக சிரிக்கிறது கட்டில் அருகே இருக்கும் விளக்கு மேசையின் கால். மறுநாள் “மிஸ்டர் ராஜு உங்களுக்கு இருப்பது சிறுவயது யுத்த அனுபவங்கள் தந்த Post Traumatic Stress Disorder - நீங்கள் கொஞ்சகாலம் இந்த உக்ரேன் செய்திகளை பார்க்காமல் விடுங்கள்”. அட்வைஸ் பண்ணுகிறார் ஆங்கில வைத்தியர் மில்லர். “உங்கள் வலியை என்னாலும் உணர முடிகிறது ராஜு”. மில்லரின் கண்கள் பரிவை சொரிகிறன. “இது வலி இல்லை டாக்டர், வடு. ஆழ்மனதில் பதிந்து விட்ட அனுபவச் சுவடு. இன்னுமொருவனுக்கு அதுவே நடக்கும் போது இந்த சுவடு என்னை அறியாமலே தலையை தூக்கி பார்க்கும். இதை நீங்கள் அறியவோ, உணரவோ முடியாது”. வாய் வரை வந்த வார்த்தைகளை வலுகட்டாயமாக விழுங்கியபடி, “தங்க்யூ டொக்டர்” வினநயமா விடை பெற்றான் ராஜு.9 points
-
எழுதியவை எல்லாம் கவிதையா? என எண்ணிய வேளையில் என்னிடம் பேசியது என் எழுதுகோல் உள்ளத்தில் உறையும் உணர்வை ஊற்றாய் உரைப்பது கவிதையா? நெஞ்சத்தில் நெருடும் நினைவுகளை நிரல்படக் கோர்ப்பது கவிதையா? வலிகளுக்கு அருமருந்தாய் மனதை வருடுவது கவிதையா? வரலாற்றின் பழம்பெரும் உண்மையை அழியாமல் வடிவமைப்பது கவிதையா? இயற்கையின் கொடையை இனிமையாய் இயம்புவது கவிதையா? காதலின் கவிரசத்தைக் காய்ச்சி பருகுவது கவிதையா? எது கவிதை? என்னுள் ஆயிரம் கேள்விகள் உதயம் கவிதை ஆயிரம் எழுதுபவர் பலராம் கவிதையாய் வாழ்பவர் வெகுசிலராம் விதையை விதைத்திடும் கவிதை விடைபெறா உலகின் நடைப்பாதை எது கவிதை? எழுதும் அனைத்தும் கவிதையல்ல இதை ஆராய்ந்து உணர்ந்தால் தவறுமல்ல காட்சியின் வழியே ஓவியம் பேசும் கவிதையின் வழியே மானுடம் பேசும் கற்பனைக் கவிதைக்கு அழகு என்றாலும் கற்பனையே கவிதை அல்லவே விழுமியம் தானே நம் பண்பாடு விழித்தெழுவோம் புத்துணர்வோடு கவிதையை ஆய்வோம் நடுநிலையோடு விமர்சனம் தானே வெற்றியின் வெளிப்பாடு சரவிபி ரோசிசந்திரா8 points
-
பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், TWITTER ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். முன்னதாக இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏழு பேரையும் விடுவிக்கப் போவதாக ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய தமிழ்நாடு அரசு 2014ம் ஆண்டு அறிவித்து, மத்திய அரசின் கருத்தைக் கோரியிருந்தது. ஆனால், மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) விசாரித்த வழக்கு என்பதால், இந்த விவகாரத்தில் தாங்கள்தான் முடிவெடுக்க முடியுமென மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு, தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ராஜீவ் காந்தி படுகொலையும் போலீஸ் தொப்பியும்: ஓய்வுபெறும் நாளில் கலங்கவைத்த ஐ.பி.எஸ் அதிகாரி ராஜீவ் படுகொலை: நார்வே முன்னாள் தூதரிடம் ஆன்டன் பாலசிங்கம் வெளியிட்ட முக்கிய தகவல் வழக்கில் முக்கிய வாதங்கள் இந்த வழக்கு நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு முன்பு கடந்த ஏப்ரல் 27ம் தேதி விசாரணைக்கு வந்த போது, "யார் விடுதலை செய்ய வேண்டும் என்ற குழப்பத்திற்கிடையில் அவர் (பேரறிவாளன்) ஏன் சிக்கிக் கொள்ள வேண்டும்? நாங்களே (உச்ச நீதிமன்றம்) ஏன் விடுதலை செய்யக்கூடாது?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பட மூலாதாரம், GETTY IMAGES மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ், "அமைச்சரவையின் தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்," என தெரிவித்தார். இதையடுத்து, ஆளுநர், மத்திய அரசை நோக்கி பல்வேறு கேள்விகளை முன் வைத்து, வழக்கு விசாரணையை மே 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். ஒருவார காலத்தில் பேரறிவாளன் விடுதலை குறித்து தெளிவான முடிவை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதே வேளை, இவ்விவகாரத்தில் யார் முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்த விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்டனர். குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்? இதையடுத்து, கடந்த 4ம் தேதி நடைபெற்ற விசாரணையில், மத்திய அரசு வழக்குரைஞரிடம் பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். குறிப்பாக, ''விடுதலை செய்யும் அமைச்சரவை முடிவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்?,'' என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, ''30 ஆண்டுகள் முடிந்து விட்டன. பேரறிவாளன் நன்னடத்தையில் பிரச்னை இல்லை. அவரை விடுதலை செய்வதில் என்ன பிரச்னை உள்ளது? நீங்கள் முடிவெடுக்கவில்லை என்றால், நீதிமன்றம் விடுதலை செய்யும் என ஏற்கெனவே தெரிவித்துள்ளோம்.'' என்றனர். மேலும் 'குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ, என்ன அதிகாரம் இருந்தாலும், அரசியல் சாசனத்தை மீறி யாரும் செயல்பட முடியாது. அரசியலைப்பு, சட்டத்திற்கு மேல் ஒருவரும் கிடையாது. குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு எங்களால் உத்தரவிட முடியாது. ஆனால் இந்த வழக்கில் அரசியல்சாசன அடிப்படையில் தீர்ப்பை வழங்க முடியும்,'' என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், "அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஒரு முடிவை எடுத்து, அதை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். இது அரசியல்சாசனத்திற்கு முற்றிலும் எதிரானது. இதை மத்திய அரசு ஏன் ஆதரிக்கிறது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வழக்கின் விசாரணையை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைத்தனர். இந்த வழக்கு மே 11 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அமைச்சரவை முடிவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய ஆவணம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், கவாய் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. பட மூலாதாரம், NOT SPECIFIED அப்போது, 'விடுதலை குறித்து முடிவு எடுப்பதில் ஆளுநர் பல ஆண்டுகள் தாமதப்படுத்தியுள்ளார். இது குறித்து என்ன சொல்கிறீர்கள்? அமைச்சரவை முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா? ஆளுநர் தொடர்புடைய வழக்கில் நீங்கள் ஏன் ஆஜராகிறீர்கள்?' என்பன உள்ளிட்ட கேள்விகளை மத்திய அரசு தரப்பு வழக்குரைஞரிடம் கேட்டனர். மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் நட்ராஜ், 'மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்திய வழக்குகளில் கருணை அல்லது நிவாரணம் அளிக்க மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது. ஆகையால், ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். ஆளுநரின் முடிவு சரியானதுதான்.' என்று விளக்கமளித்தார். தமிழ்நாடு அரசு தரப்பு வழக்குரைஞர் ராகேஷ் திரிவேதி கூறுகையில், "மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தின்படிதான் விடுதலை செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தேவையின்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளனர். இது, அரசியல் சாசனப்படி தவறானது.' என்றார். மேலும், 'இது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் கீழ் வருகிறது. கொலை வழக்கின் கீழ் முடிவு செய்ய மத்திய, மாநில இரு அரசுகளுக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால், மத்திய அரசுக்குத்தான் முக்கியத்துவம் முன்னுரிமை.' என்று மத்திய அரசு வழக்குரைஞர் கூறினார். இதை தமிழ்நாடு அரசு தரப்பு வழக்குரைஞர் மறுத்தார். தமிழ்நாட்டில் நடைபெற்றால், விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்கிற வாதத்தை முன்வைத்தார். ஆனால், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகள் சட்டம், ஒழுங்கு சார்ந்த வழக்குகள். இதில், மாநில அரசுக்குத்தான் முக்கியத்துவம் உள்ளது.' என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்த நிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. https://www.bbc.com/tamil/india-614891348 points
-
https://www.facebook.com/supramaniyapiraba/posts/1228303990909177 மேலே உள்ள, இணைப்பை... கிளிக் பண்ணி பார்க்கவும். சம்பவம் செய்யப் போய்... கோவணம், கழண்ட கதை.8 points
-
தமிழ் கடை அநியாயங்கள் பல.. பாழாப் போன சாமான்களுக்கு.. பழைய லேபிளை பிச்சிட்டு புது லேபிள் போட்டு விற்கிறது.. பழைய லேபிளுக்கு மேல புது லேபிள் ஒட்டிறது.. அழுகினதுகளை பக்கட் பண்ணி அழுகளை மறைச்சு விற்கிறது.. அழுகினதை கழட்டி எறிஞ்சிட்டு அழுகாததை காட்டி அதே விலைக்கு விற்கிறது.. சந்தையில இல்லை என்றவுடன் அளவுக்கு அதிகமான விலையில் விற்கிறது.. நாள் கடந்த பொருட்களை செல்பில் இருந்து அகற்றாமல் வைச்சிருப்பது.. மீன்களுக்கு போமலின் கலந்து அடிப்பது.. நாறல் மீன் நண்டு இறாலை.. நாறிய பின் அகற்றாமல் அதனை பிறீசருக்குள் போட்டு பக்கட் பண்ணி விற்கிறது... முளை வந்ததையும் முளை வெட்டிட்டு விற்கிறது.. .... வேலை செய்ய வாற ஆக்களிடம் மலிவு விலைக்கு வேலை வாங்குவது.. சரியான விடுமுறையோ.. ஓய்வோ கொடுப்பதில்லை.. சட்டத்துக்கு அடங்க. வேலையை விட்டு தூக்கிடுவன் என்று மிரட்டுறது.. சட்டத்துக்குப் பிறம்பான வகைக்கு ஆட்களை எடுப்பது குறைஞ்ச கூலிக்கு வேலை வாங்குவது.. வாற தமிழாக்களை பழக்கம் பிடிச்சு சீட்டுப் போடுவது.. அதில் கழிவு கிழிவென்று வெட்டி தாங்கள் சுருட்டிக்கிறது.. கொடுக்க வேண்டிய காசையும் உரிய காலத்தில் கொடுக்காமல்.. கடைக்குள் போட்டுப் புரட்டுவது... கள்ளக் கணக்கீடு காட்டுவது.. கொள்ளை இலாபத்தை.. கொள்ளை நட்டமென்று கணக்குக்காட்டி வரி ஏய்ப்பு செய்வது.. வங்கிக் கணக்கில் கடையை காட்டி கடன் வாங்கிட்டு அதை கடைக்குள் முதலிடாமல்.. வீடு.. சொத்து.. நகை வாங்க முதலிடுவது... பின் வங்கிக்கு.. கணக்குக் காட்டிறது எல்லாம் நட்டமாப் போச்சுன்னு. வாங்கின கடனை கொஞ்சம் கொஞ்சமாத்தான் கட்டுவன் என்றிடுறது. கடையை லீசுக்கு எடுத்திட்டு.. அதனை தெரிஞ்சாக்களுக்கு கூடின விலைக்கு வாடகைக்கு விடுவது.. இப்படி எதுவுமே சட்டத்துக்குள் நின்று செய்யாத புலம்பெயர் தமிழ் வியாபாரிகள்.. அகதிகளாக வந்து விசாக்கிடைக்காமல் அந்தரிப்பவர்களிடம் தவிச்ச முயல் அடிப்பதை.. உதவி.. மனிதாபிமானம்.. என்றது ரெம்ப ஓவர். அதுவும் இமிகிரேசன் சுற்றி வளைச்சிட்டால்.. தாங்கள் தப்பிக்க இல்லாத பொல்லாத பொய்யைச் சொல்லி அந்த விசா இல்லாததுகளை மாட்டுவிடுறது.. இவ்வளவுக்கும் இவை கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கிறதே இல்லை.8 points
-
தமிழ் ஈழத்தில் உக்ரைனில் உக்ரைன் மக்களையும், குடிமனைகளையும் ரஷ்ய ஆக்கிரமிப்பு படையினர் அழித்துள்ளனர். சிங்களப் படையினரின் அழிவுகளுக்குள் வாழ்ந்தவர்களுக்கு இந்த அழிவுகளின் வலிகள் புரியும். ஆனால் தமிழர்களின் வலிகளை வைத்து தமது வாழ்வை புலம்பெயர் நாடுகளில் வளமாக்கியவர்களுக்கு சர்வாதிகாரி பூட்டினின் மிலேச்சத்தனமான உக்கிரேன் மீதான ஆக்கிரமிப்பை ரசிக்கமுடியும், கொண்டாடமுடியும். யாழ் களத்தில் ஆசாரவாதிகளும், பிற்போக்குவாதிகளும், பிழைப்புவாதிகளும் தங்களை தமிழர்களின் போராட்டத்தின் ஆதரளவாளர்கள் என்று வேடம் போட்டுக்காட்டுவது வழமைதானே. அதில் சிலரை ரஷ்யாவின் உக்கிரேன் மீதான ஆக்கிரமிப்பு அம்மணமாக்கியுள்ளது. ஆனால் தாங்கள் அம்மணத்தை மறைக்க நேட்டோவின் எதிர்ப்பு, மேற்கின் எதிர்ப்பு என்று ஓட்டைகள் நிரம்பிய கோவணத்தை இடுப்பில் கட்டிவருவார்கள்!7 points
-
தமிழீழம் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கை நேர்மையாக இருந்திருந்தால் நானோ நீங்களோ போராட போகாமல் வெளி நாட்டுக்கு ஓடி வந்து இருக்க மாட்டோம். தமிழ் மக்களுக்கு நிம்மதியாக வாழ நிரந்தரமான ஒரு நியாயமான தீர்வு கிடைத்தாலே போதும். அதற்காக குரல் கொடுக்க முன்வரும் எவரையும் அது கனடாவாக இருந்தால் என்ன, நாளைக்கே ரஷ்சியாவாக இருந்தால் என்ன, பேய் பிசாசாக இருந்தால் என்ன என்பதில் அக்கறை இல்லை.7 points
-
ஹிட்லர் ஜேர்மனியில் யூதர்களை இனப்படுகொலை செய்யும் போது அதை தடுக்க முடியவில்லை. ஆனால் அதன் பின்னர் யூத மக்கள் ஏனைய நாடுகளின் ஆதரவை படிப்படியாக பெற்று இன்று என்ன நிலையினை அடைந்து இருக்கின்றார்கள் என்பதை பார்க்கின்றீர்கள். நாம் தமிழ் மக்கள் எப்பவும் இப்படியான சாதகமான விடயங்கள் நடக்கும் போதும், மீண்டும் மீண்டும் பழையவற்றுக்குள் மூழ்கி குறைகளை கண்டு பிடித்துக் கொண்டு இருப்போம்.7 points
-
7 points
-
லண்டனில்... விசா இல்லயென்ற ஒரே காரணத்திற்காக, புதருக்கு அருகிலுள்ள கராஜ் ஒன்றினுள் எந்தவித அடிப்படை வசதிகளுமற்று மறைவாகப் படுத்துறங்கி, ஒரு மணி நேரத்திற்கு... ஒரு பவுண்ட் மட்டுமே, சம்பளமாக வாங்கும் தமிழ் இளைஞர்களைச் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். 2018 ம் ஆண்டு Sky TV, அதை ஆவணமாக்கி ஒளிபரப்பியிருந்தது. மனம் பதறி, ஒரு தடவை நிலை குலைந்திருக்கும். அவர்களையே ஒத்த இளைஞர்கள்... இங்கு ஃபிரான்ஸிலும். சில தமிழ் முதலாளிகளிடம் சிக்கிச் சொல்லெண்ணாத் துன்பத்திற்கும். மன அழுத்தத்திற்குமுள்ளாகி வருகிறார்கள். சொந்த நிலங்களை விட்டு அகதிகளாய்ச் சிதறினாலும்... இன்னொரு வாழ்க்கையை எப்படியாவது அமைத்துக் கொள்ளலாமென்ற கனவுகளோடு வந்தவர்கள், மாதாந்தம் நானூறு யூரோக்கும் குறைவான சம்பளத்தோடும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களுக்கும் இடையில்.... அடிமைகளாய் வாழ்க்கையைத் தொலைத்து நிற்கிறார்கள். மனக் குமுறல்களை வெளிப்படுத்தி, "எங்காச்சும் ஒரு வேலை எடுத்துத் தர முடியுமா?" எனக் கண் முன்னே எப்போதும் வந்து நிற்கும் உயிர்களின் பரிதவிப்புகளுக்கிடையே விடைகளற்று நிற்கிறேன், நிற்கிறோம். நீண்ட காலமாய்த் தொடரும் இது போன்ற சுரண்டல்களும் அடிமைத்தனங்களும் இனியாவது வெளியுலகத்திற்கு வந்து இளைஞர்களின் வாழ்க்கை வெளிச்சத்திற்கு வர வேண்டும். பிரான்ஸ் நாட்டில், லாச்சப்பலில்... வாணிபங்கள் நாடத்தும் தமிழ் முதலைகள். அரச விடுமுறை நாட்களில் ஐரோப்பாவில் கல்வி கூடங்கள், அரச அலுவலகங்கள், வாணிப நிலையங்கள் யாவும் இயங்காது. ஆனால் பிரான்ஸ் நாட்டில் லாச்சப்பல் எனும் இடத்தில் தமிழர்கள் நடத்தும்... சில்லறை கடைகள், உடுப்பு கடை, உணவகங்கள் மட்டும் தம் கீழ் வேலை செய்யும் தம் தமிழ் ஊழியர்களுக்கு விடுமுறையை வழங்காது... இரத்ததை உறிஞ்சி, எடுத்து தம் கல்லாப் பெட்டிக்குள் காசை சேர்த்து... கையிலாயம், கொண்டு தாம் இறந்த பின் சவப்பெட்டியில் அடுக்கி கொண்டு போகலாம் என்று தமிழ் முதலாளிமார்கள் காசு ஆவேசம் பிடித்து இவ் நாளிலும் கடையை திறந்து வைத்து இருத்தல் என்பது இடங்கள் மாறினாலும் தமிழன் குணங்கள் மாறாது என்பதற்கு சாலசிறந்த உதாரணம். அங்காடித்தெரு படத்தின் நடக்கும் காட்சிகளை நீங்கள் நேரில் காண வேண்டும் என்றால் லாச்சப்பலுக்கு சென்று பார்வையிடுங்கள், விசா இல்லாது மாடாய் உழைக்கும் தமிழ் இளைஞர்களை நேரில் நினைவு கூற வைத்திடும். லாச்சப்பல் வாணிபங்களில் அடிமாட்டு சம்பளத்துக்கு வேலை செய்யும் தமிழ் இளைஞர், யுவதிகள். இவ்வாறு... பண ஆசையில் திறந்து வியாபாரம் நடத்தும் கடைகளில் விடுமுறை நாட்களில், தமிழர்கள் நீங்கள்... பொருட்களை கொள்வனவு செய்யாதீர்கள். இப்படி நீங்கள் செய்தால்.. விடுமுறை நாளில் வியாபாரம் மந்த கதியில் நடக்க எதிர்வரும் விடுமுறை நாட்களில், முதலாளிமார்கள் (அதுதான் தமிழ் முதலைகள்) கடையை திறக்க பின் வாங்குவாங்கள், இதனால் அங்கு அடிமாட்டு சம்பளத்துக்கு வேலை செய்யும் விசா இல்லாத... தமிழ் ஊழியர்களுக்கு, விடுமுறை நாளில் ஆவது... ஓய்வு கிடைக்கட்டும். உண்மை உரைகல்7 points
-
7 points
-
யாழ் களத்தில் ஒருகாலத்தில் அதிகம் கருத்துக்கள் எழுதிய கருத்தாளர் இரா. சேகர் (யாழ் இணையம் தமிழ்ச்சூரியன்) ஒரு சிறந்த இசையமைப்பாளர். அவர் பற்றிய நிகழ்ச்சி. கேட்டு பாருங்கள்.7 points
-
எந்த ஒரு தாக்குதலிலும் பொதுமக்கள் கொல்லப்படுவது கண்டிப்பாக வருத்தத்திற்குரியதே, அவர்கள் வலிகள் புறந்தள்ளபட முடியாதவையே. அதேநேரம் அவர்களுக்கு அந்த நிலமை ஏற்படுவதற்கான காரணங்களை ஏற்படுத்தியவர் யார் என்பதையும் பார்த்தே ஆகவேண்டும். விடுதலைபுலிகள்தான் எங்கள் முன்னாள் பிரதமரையும் அவரோடு சேர்த்து தமிழர்களையும் கொன்றார்கள் என்று நீங்கள் சொன்னால், முன்னாள் பிரதமரை அவர்கள் கொல்வதற்கு காரணம் என்ன என்பதை எப்போதும் நீங்கள் பார்க்க மறுப்பதேன்? நீண்டகால இனப்போரை தமக்குள்ள வளங்களை வைத்துக்கொண்டு உயிரை மட்டுமே பெரும் ஆயுதமாக பயன்படுத்தி தற்பாதுகாப்பு போரில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒருநாட்டில் கடல்கடந்து வந்து வல்லரசு திமிரில் லட்சம் படைகள் வளங்களை குவித்து அடிவாங்கி கொண்டிருந்த எம்முடன் எந்த ஒப்பந்தமும் செய்யாமல் மாறாக மிரட்டிக்கொண்டு, அடித்தவனுடன் மட்டும் ராஜீவ் செய்ததற்கு பெயர் அமைதி ஒப்பந்தமா? எந்த வகையிலும் நியாயமற்று சிங்களவன் எமக்கு செய்த கொடூரங்களைவிட பலமடங்கு வேகத்தில் ஓரிரு வருடங்களிற்குள்ளேயே தமிழர் தேசமெங்குமே சுடுகாடாக்கும் அளவிற்கு ஈழ தமிழர்கள்மேல் ராஜீவ் காந்திக்கு வன்மம் என்ன? சிங்களவன் எம்மை கொன்று குவித்ததைகூட ஏதோ ஒரு காரணத்திற்காக சகித்துக்கொள்ளலாம், ஏனென்றால் அவன் எம்மை எதிரியாக பார்த்தான் நாமும் அவனை எதிரியாக பார்த்தே மோதினோம், ஆனால் இந்திய படைகள் எம்ம்மீது கொலைவெறிகொள்ள எந்த வகை நியாயம் இருந்தது? அர்த்தமற்ற ஒரு போரை அந்நிய தேசம் ஒன்றில் நிகழ்த்தி பல ஆயிரம் மக்களை துடிக்க துடிக்க கொன்ற ராஜீவ்தான் அவர்மேல் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது கூடவே இருந்த பொதுமக்களுக்கும் பொறுப்பாமவர். கடல் கடந்துபோயப்பாவி ஈழதமிழரை கொன்று குவித்த ராஜீவ்காந்தியின் அட்டூளீயம் பற்றி பேசாமல், கடல்கடந்து வந்து முன்னாள் பிரதமரை கொன்றுவிட்டார்கள் அது மாபெரும் தவறு என்று ஒருசில அரசியல் கட்சிகள் கூவுகிறார்கள், அப்படியென்றால் இந்தியாவில் ஜூலியன் வாலா படுகொலையை செய்த பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியை இங்கிலாந்துவரை போய் தேடி கொன்றாரே ஒரு இந்தியன் அதுவும் மிக பெரிய தவறுதானே, அதை மட்டும் எப்படி நியாயம் தியாகம் என்று வாதிடுகிறீர்கள்? பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பியதற்காக இந்திராகாந்தி கொல்லப்பட்டார், இந்திராகாந்தியை கொன்றதற்காக அந்த கொலைக்கு பழிவாங்க அந்த சம்பவத்தில் எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத பலநூறு சீக்கியர்கள் டெல்லியில் கொல்லப்பட்டார்கள் என்கிறார்கள். அப்படி கொல்லப்பட்ட சீக்கியர்களுக்காக நியாயம் கேட்டபோது , ஒரு ஆலமரம் சரியும்போது அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும் என்று சொன்னாராம் இதே ராஜீவ் காந்தி, அவரின் வார்த்தைகளையே அவரின் படுகொலை விஷயத்திலும் எடுத்துக்கொள்ளலாம், அவரின் தாயார் பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பியதற்காக கொல்லப்பட்டு அதன் தொடர்ச்சியாக சீக்கியர்கள் கொல்லப்பட்டது ஆலமரத்தின் அதிர்வு காரணமாக என்றால், இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பிய முட்டாள்தனத்தினால் ராஜீவ் கொல்லப்பட அதன் தொடர்ச்சியாக ஒரு சில தமிழர்களும் கொல்லப்பட்டது ஆலமரத்தின் அதிர்வுதான். அந்த அப்பாவி மக்களின் இறப்பிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பொறுப்பேற்கவேண்டியது ராஜீவ் காந்தியேதான். இது விடுதலைபுலிகள்தான் எமது பிரதமரை கொன்றார் என்று நிற்பவர்களுக்கான தற்கரீதியான வாதம் மட்டுமே.6 points
-
கொழும்பு காலிமுகத் திடலில் தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 18 மே 2022, 04:32 GMT புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் இறந்த தமிழர்களுக்கு கொழும்பு காலிமுகத் திடல் போராட்டப் பகுதியில் தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து நினைவேந்தல் நிகழ்வு நடத்தி வருகிறார்கள். கடந்த காலங்களில் இத்தகைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் பொதுவாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கை வடகிழக்கில் மட்டுமே நடத்தப்படும் என்பது மட்டுமல்ல. இதற்கு அரசாங்கத்தின் தீவிர எதிர்ப்பும் இருக்கும். இந்த ஆண்டு அத்தகைய எதிர்ப்புகள் ஏதுமில்லை என்பதுமட்டுமல்ல. வரலாற்றில் முதல் முறையாக தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து இந்த நினைவேந்தலை நடத்துகிறார்கள். அது நடக்கும் இடமும் மிக முக்கியமானது. தலைநகர் கொழும்பில் ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள இந்த காலிமுகத் திடல் பகுதியில் கடந்த காலங்களில் ராணுவ வெற்றிக் கொண்டாட்டங்கள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி செயலகம் அருகிலேயே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடக்கிறது. இந்த நிகழ்வை செய்தியாளர் ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக செய்யும் ஃபேஸ்புக் நேரலையைக் காண இங்கே சொடுக்கலாம். தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் நடக்கும் இந்த நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி ஒன்று அமைக்கப்பட்டு, இனம் கடந்து மக்கள் அந்த நினைவு ஸ்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள். ஸ்தூபி அருகே நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. https://www.bbc.com/tamil/sri-lanka-614896336 points
-
இவ்வளவு காலம் பேசிப் பேசி என்னத்தை கண்டோம்.? தங்கள் தேவைக்கு மட்டும் தேடுவார்கள். பேசிப் பேசி கால நீடிப்பு த்தான். காகித ஒப்பந்தங்கள் மட்டுமே. பின் "பழைய குருடி கதவை திறடி " கதை தான். வீரமும் விவேகமும் துணிச்சலும் உள்ள ஒரு தலைவனை ..தேடுகிறோம்....6 points
-
கொழும்பிலை தான்... சோத்துக்கும், பாணுக்கும் பஞ்சம். அதனால் தான் கொழும்பில்... தமிழருடன் முரண்படாமல் நிற்கிறார்கள். அவுஸ்திலேயாவில்... பஞ்சம் இல்லை. அதுதான்... சிங்களவனுக்கு, இனத் துவேஷம், கொப்பளித்துக் கொண்டு வருகின்றது. சிங்களவனின் புத்தி... நாய் வாலைப் போன்றது, அதை நிமிர்த்த சான்ஸே... இல்லை.6 points
-
1000 தடவை சொல்லியும் நம்மவர் சிலர் விட்டில் பூச்சி போல் சிங்களவனுக்கு முன்னாள் போய் அவனின் செருப்பை கிளீன் பண்ண லைனில் நிற்பது வழமையானது . என்று புத்த பிக்குகள் இனவாதம் கதைக்கும் போது கலைத்து கலைத்து அடிபோட வெளிக்கிடுகிறார்களோ அன்று ஓரளவுக்கு நம்பலாம் . அந்த குண்டன் சத்தமிட்டு கிழித்தபின் மற்றவர்கள் துண்டை வாங்காமல் அமைதியாகி நிக்கினம் இதுதான் சிங்களம் .6 points
-
தமிழ்நாட்டு பிரபல சமையல் கலைஞர்... Chef தாமு போல்.... நேற்று முன்தினம் அடிவாங்கிய மகிந்தவின் ஆதரவாளர் உள்ளதால்... பலரும்... அந்தப் படத்தை, தாமுவிற்கு அனுப்பி... அவரை கோபப் பட வைத்துள்ளனர்.6 points
-
இங்கு சென்று பாடலைக் கேட்டுக்கொண்டே வாசியுங்கள் யாழ் களத்தை situation song6 points
-
இன்னும் ஓரிரு நிமிடங்களில் நேரடி நிகழ்ச்சி தொடங்குகின்றது. நேரமுள்ளவர்கள் இணைந்திருங்கள்.6 points
-
ஒல்லாந்தர் கால, தென்மராட்சி. (வரைந்த படங்களுடன்) சாவகச்சேரி. அப்ப.... சாவகச்சேரி சந்தியிலை, யானை நின்றிருக்குது. கச்சாய். வரணி. எழுதுமட்டுவாள். ஒல்லாந்தர்களால் வெளியிடப் பட்ட MALABAR en CHOROMANDEL புத்தகத்திலிருந்து... நன்றி:ThuvaraGan VelumMylum6 points
-
நன்றி அன்பரே! ஓரளவுக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டு, கனநாள் facebook இல் இருந்தேன். பின்னர் அது என்னை addict ஆக்கி விட்டதை உணர்ந்ததும் ஒரே அடியாய் அதை மூடி என்னுடன் தொடர்பில் இருந்த ஒரு 1500 பேருக்கு ஒரே நாளில் ராட்டா சொல்லி விட்டேன். இது நடந்து 2 வருடம் ஆகி விட்டது, facebook ஐ இன்னும் திரும்பியும் பார்க்கவில்லை.தொடர்ந்து எழுத விரும்புகிறேன். வாழ்த்தி வரவேற்றதற்கு இன்னுமொரு தரம் நன்றி. நான் இங்கே வந்து மெடிக்கல் எக்ஸாம் எல்லாம் முடித்து விட்டேன்.. என்றாலும் appointment தரவில்லை. அண்மைக்காலத்தில் இங்கு வந்த மருத்துவர்கள் அனைவருக்கும் இது தான் நிலைமை. என்னைப்போல் இங்கு ஒரு பத்தாயிரம் பேரின் நிலைமை இது தான்.ஆஸ்திரேலியா அல்லது யூஸ் இல் படித்து பின்னர் பட்ட மேற்படிப்பும் படித்து இருந்தால் இங்கே வேலை கிடைக்கும். ஆனால் இந்தியா, இலங்கை, பாக்கிஸ்தான், ரஷ்யா டாக்டர்ஸ் நிலையோ அந்தோ பரிதாபம்.சிலருக்கு அத்தி பூத்தால் போல் வேலை கிடைக்கும். அது வரை ஆறு மாசம் சொந்த நாட்டில் doctor வேலை மிச்சம் 6 மாசம் இங்கு ஏதாவது வேலை என்று பல வருடங்கள் கழிக்க எதிர்பார்ப்புடனேயே கழிக்க வேண்டும். இதில் சில சமயம் குடும்பம் இரண்டாகி விடும், இங்கே citizenship கிடைக்க இன்னும் சில வருடங்கள் ஆகும். கையில் காசும் இருக்காது, 45 வயதில் சில நேரம் வேலை கிடைக்கும், ஆனால் இப்படி ஒரு தியாக வாழ்க்கைக்கு நான் ரெடி இல்லை. Emergency service இல் டிரைவர் ஆக வேலை செய்யவில்லை. பலர் அப்படித்தான் நினைக்கிறார்கள். Pre hospital medical practice கடைசி பத்து ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை கண்டு விட்டது. அதில் advance care Paramedics ஆகவே வேலை செய்கிறேன். இதில் ஒரு 100 க்கு மேற்பட்ட அவசர மருத்துவ தேவைகளுக்கான medications நோயாளிகளுக்கு அளிக்க முடியும். ஒரு heart attack, stroke,அல்லது சுவாசம் சம்பந்தமாக ஏதும் நடந்தால் ஆஸ்பத்திரி கொண்டு போகாமலேயே வீட்டில் வைத்து சத்திர சிகிச்சை தவிர அனைத்து சிகிச்சைகளையும் அளித்து நோயாளி ஓரளவு சரியானவுடன் ஆஸ்பத்திக்கு அனுப்ப முடியும், stroke வந்தால் ambulance இன் உள்ளே வைத்து MRI scan எடுத்து தலையில் எங்கே எந்த நாளத்தில் இரத்தக் கசிவு உண்டு என்று பார்த்து அதை உடன் தடுத்து பாதிப்பின் அளவை கணிசமாகாக குறைக்க முடியும். தேவையானால் இரத்தம் ஏற்ற முடியும். கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் தான் இந்த தொழிலில் இவ்வளவு scope Of practice. ஒரு நாள் சம்பளம் $500 -$600. இரவு வேலை என்றால் இன்னும் கூட. இன்னும் சில வருடத்தில் Air ambulance இல் critical care para medics ஆக வர விரும்புகிறேன்.இதனால் தான் இந்த வேலையை தேர்ந்து எடுத்தேன். இதற்காக இங்கு 3 வருடம் படித்தேன். ( medical exam clear செய்த பிறகும் இதற்கு வேறு படித்து இன்னொரு எக்ஸாம் கொடுக்க வைத்தார்கள் படுபாவிகள்.)எனக்கு தெரிந்த பல இந்திய பாகிஸ்தான் டாக்டர்ஸ் இங்கு டாக்ஸி ஓட்டும் நிலை.. ஆகவே எனக்கு இது கிடைத்த வரை சந்தோசம். நான் செய்த பிழை கனடா வந்தது தான். இங்கு இந்த பிரச்னை இருக்கு என்று தெரிந்து தான் வந்தேன். எக்ஸாம் முடித்து விட்ட படியால் இவர்கள் எப்போதாவது சிலநேரம் தேவைப்பட்டால் கூப்பிட்டு எங்காவது கனடாவில் கண் காணாத தேசத்தில் appointment கொடுத்தால் நல்லம்.. இல்லாவிட்டால் ஒரு துன்பமும் இல்லை. ஏதாவது europ போய் இருந்தால் இந்த சிக்கல் இருந்து இருக்காது.. கல்யாண சம்பந்தம் அமைந்தது கனடாவில் தான்.திருமணம் செய்யும் குடும்பம் முக்கியமா எனது கனவு முக்கியமா என்ற நிலையில் முதலாவதை தேர்ந்து கொண்டு இங்கு வந்துவிட்டேன். நன்றி கிருபன்.6 points
-
ஜெலன்ஸ்கி : உங்களுக்கு ஒன்டு என்டா நாங்க சும்மா விட மாட்டம்னு.. சொல்லி இருப்பாலே.. பின்லாந்து , சுவீடன் : உங்களுக்கு எப்பிடி தெரியும்.? ஜெலன்ஸ்கி : ஏங்கிட்டயும் விட்டானுங்களே.... ====================== நம்மட வீட்டதான் இடிக்க வச்சானுங்க ; எல்லார் வீட்டையும் இடிக்க வச்சுடுவானுங்க போலயே..6 points
-
உகண்டாதான் உலகம் என்றால் இடி அமீன் தான் பெரும் கூட்டணி மேலே இருக்கும் கருத்து சரியாக புரியவில்லை சாதிய மேலாதிக்கம் பெரும்பாண்மையானராக பலமிக்கவராக இருந்தால் அடிபணிந்து போங்கள் என்ற ஒரு அச்சுறுத்தலாகவே மேலோட்ட்மக இருக்கிறது. உக்கரையின் ரஸ்யா என்று ஒவ்வருவரும் ஒரு சேலை தலைப்பை பற்றிக்கொண்டு தங்கள் தங்கள் பங்குக்கு நிலை சார்ந்து நியாயம் கற்பிக்க போனால் இறுதியில் இவ்வாறான ஆதிக்க ஆணவ கருத்துகளுடனேயே வந்து நிற்க நேரிடும் உலகில் வல்லாதிக்க போர் என்பது கடந்த 3000 ஆண்டுகளாக நடைபெறுகிறது இந்த அளவுக்கு நாகரீகமாக முன்னேறிய மனித இனம் இவாறான ஒரு மனித பேரழிவை செய்யத்தான் வேண்டுமா? உக்ரைன் ரஷ்ய போர் என்பது மேற்குலகால் கடந்த 20 வருடமாக நன்கு திட்டமிட்டமிட்டு நடத்தப்பட்டே வருகிறது. உக்ரனியே அரசுகளால் இதுவரை பல ஆயிரம் ரஷ்ய மொழி பேசும் மக்கள் கொல்லபட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கான நீதி நியாயம் இன்று இந்த யாழ் களத்திலும் இறந்தே கிடக்கிறது மேற்கு காப்பாற்றும் என்று மேற்கு நிலை சார்ந்து பூகோள அடிப்படை மறந்து வால்பிடித்த சதாம் குசேய்ன் ...... பின்லாடன் + முகாஜிதீன்கள் .... இன்றைய சிரிய அரசுகளுக்கு நடந்த சோகம் எதிர்கால உகரனியர்களுக்கும் உண்டு என்பதே கடந்தகால தீர்ப்பு அமெரிக்கநாட்டு வேக உணவு விடுதிகள் தயாரிக்கும் உணவுகள் நீரிழிவு மற்றும் இருதய நோயை பரப்புகிறது என்பதை பல மருத்த்துவர்கள் ஆதரபூர்வமாக நிரூபித்த காலம் கடந்துபோய் உயிரச்சுறுத்தல் இருந்தும் சில மருத்துவ ஆய்வாளர்கள் இன்று இது திட்டமிட்டே நடக்கிறது என்று ஆதரபூர்வமாக நிரூபிக்கிறார்கள். சொந்த நாட்டு மக்களின் நிலையே இதுவாக இருக்கும்போது (இன்னொரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன் .... 1970களில் அமெரிக்க சிகரெட் நிறுவனமான பிலிப் மோரிஸ் செக்கோஸ்லோவாக்கிய அரசை சந்தித்து புகை பிடித்தலை தூண்ட கூறியது விளம்பர செலவு அனைத்தையும் தாமே ஏற்பதாகவும். இவ்வாறு செய்தால் மக்கள் ஓய்வூதிய காலம் எட்டும்போது இறந்துவிடுவார்கள் என்றும்... அரசுக்கு பல கோடி லாபம் கிடைக்கும் என்றும் பரிந்துரை செய்தார்கள்) உக்ரேனிய மக்கள் இறக்கிறார்கள் என்று அமேரிக்க அரச தலைவர் அழுவது என்பது என்ன என்பதை உலகின் வேறு ஒரு இனம் புரிய மறந்தாலும் ........ அலற அலற அடிவாங்கிய ஈழத்தமிழரும் மறந்துதான் ஆகவேண்டுமா?? வட கொரிய மக்கள் தற்போதைய அரசின் கீழ் பட்டினியால் சாகிறார்கள் என்று எழுதும் நாம் வட கொரிய அரசு என்ன சீரழிவை மற்றைய நாட்டுக்கு செய்கிறது? ஏன் இவ்வளவு பொருளாதார தடைகள் என்பதை இலகுவாக மறந்துவிடுகிறோம். வட கொரிய மக்களின் பட்டினிக்கு வட கொரிய அரசே காரணம் எனும் நிலைக்கு இலகுவாக வந்துவிடுகிறோம். லிபியாவில் இலவச வீடு ....... இலவச கல்வி ... இலவச மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகள் கடந்தகால அரசினால் நிர்ணயமாக இருந்தது ........ இன்றைய லிபியர்கள் ரோட்டில் பிச்சை பெண்கள் உணவுக்கு விபச்சாரம் எனும் நிலையில் நிற்கிறது. நாம் மனிதம் பேசுவோம் தவரேல் எதோ ஒரு ஆதிக்க ஆணவ சக்தியை பிடித்து தொங்கிக்கொண்டு நிற்போம் அப்போதே அடிப்படை நீதி நியாயம் இறந்துவிடும். மேற்கொண்டு பந்தி பந்தியாக பெயிண்ட் அடிக்க என்ன இருக்க போகிறது? ( இதை கோஷனுக்கான பதிலாக நான் எழுதவில்லை. இவ்வாறான ஒரு கருத்தை இன்னொரு கருத்தை பதிவு செய்வதன் மூலம் புரியவைக்க முடியும் என்ற எண்ணம் எனக்கு அறவே இப்போது இல்லை. ரஷ்ய தான் வெல்லவேண்டும் உக்ரைந்தான் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் நீங்கி பாதிக்க படும் மக்களுக்கு ஒரு துரும்பை என்றாலும் எங்களால் கொடுக்க முடிந்தால் ... அதன் பிரதி பலன் எமது அடுத்த சந்ததிக்கு சென்று சேரலாம் எனும் ஒரு சிறிய நம்பிக்கை மட்டுமே உள்ளது)6 points
-
6 points
-
தலைவருடன் கடைசிவரை நிண்டவர்களில் உங்கள், எங்கள் தலைமுறையினரும் அடங்குவர் அண்ணை. 2009 க்கு முன் ஒரு தலைமை இருந்தது, ஆகவே புலத்தில் இருந்து தேசியப்பற்றை பறைசாற்றுவது, உழைப்பது முடியுமாய் இருந்தது. இப்போ எதுவும் இல்லை. ஆகவே எல்லா தலைமுறையினரும் அவரவர் பாட்டை பார்கிறோம். ஆனால் இதை வைத்து யுத்த வடுக்களை அனுபவித்தவர்களின் அனுபவத்தையும் அப்படி அனுபவிக்காமப் வெளிநாட்டில் இருந்து பங்களித்தவர் அனுபவத்தையும் ஒரு போதும் ஒரே தராசில் நிறுக்க முடியாது. சம்பந்தமே இல்லாமல் சின்ன சின்ன காரணங்களை காட்டி உக்ரேன் சண்டையில் எமது நியாயமான பழிக் கணக்கை தீர்க முயல்வது, இந்த அனுபவ குறைபாட்டையே காட்டுகிறது.6 points
-
பலகோடி மக்கள் வாழும் நாடொன்றைத் தன்னால் ஒரே ஏவுகளையால் அழிக்க முடியும் என்று மார்தட்டுபவனை விட உலகின் அதியுர்ந்த பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்க முடியாது. இதைக் கேட்டு மகிழ்பவரை என்னவென்று சொல்வது ? அதுவும் போரை அனுபவித்து ஒருக்கப்பட்ட இனத்திலிருந்து வந்தவர்களாம்.6 points
-
முள்ளிவாய்க்கால் முடிவில் வெடி கொழுத்தி கொண்டாடியவர்களுக்கும் இந்த வெடிக்கும் என்ன வித்தியாசம்? சிறிலங்கா பேரின வாத அரசுக்கு உதவியபோது உக்கிரேனில் ரஷ்ய சார்பு அரசாங்கம் இருந்தது. இப்போதுள்ள அதிபருக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது கூடவா தெரியாது.5 points
-
Outstanding Academic Excellence Award (Gold) 2022 (President’s Education Award Program) அமெரிக்க ஜனாதிபதியாலும்,அமெரிக்க கல்விச்செயலாளராலும் கூடவே பாடசாலை அதிபராலும் கையெழுத்திடப்பட்டு வழங்கப்பட்ட விருது. This certificate is signed by the US President, the U.S. Secretary of Education and the School principal. Congratulations sweetie for your high school journey யாழ்கள உறவுகளின் புதல்வி என்பதில் மிகவும் சந்தோசப்படுகிறோம்.5 points
-
5 points
-
உக்ரேனுக்காக மட்டும் மனமுருகி தேவாரம் பாடாதே. கட்டுரைகள் வரையாதே. கவிதைகள் வடியாதே. நீயும் உன் பாடுமாய் இரு. நானும் அப்படியே இருப்பேன்.5 points
-
ஆண் : யாவரும் கேளா என் பாடல் ஒன்றை நீமட்டும் கேட்கிறாய் தனிமைதான் எந்தன் துணை என்று வாழ்ந்தேன் எல்லாமே நீயாகிறாய் ஆண் : உடைந்தே கிடந்தேன் சோஃபியா ஆயிரம் துண்டென அணைத்தே இணைத்தாய் சோஃபியா ஆகினேன் ஒன்றென ஆண் : சுடாமலே தீண்டிய தீபோலே காதல் பேசுகிறாய் இருளின் கடைசி துளிகள் காய எரிகின்றாய் தீபமாய் ஆண் : உன் மௌனத்திலே சோஃபியா தாய்மொழி கேட்கிறேன் உன் கண்களினால் சோஃபியா உண்மையாய் ஆகிறேன் ஆண் : அழகால் உயிரைத் தொடுவாள் சிரிப்பால் என்னைப் பந்தாடுவாள் இனிமை இமையால் மனதுள் வீசுவாள் இசையின் சாரல் அமுதாய் மாற்றுவாள் தினம் நெஞ்சிலே மலராய் மலர்வாள் ஆண் : விரல்கள் கோர்க்கையில் சோஃபியா பூமியே கையிலே இதழ்கள் கோர்க்கையில் சோஃபியா வானமே நாவிலே ஆண் : சுடாமலே தீண்டிய தீபோலே காதல் பேசுகிறாய் இருளின் கடைசி துளிகள் காய எரிகின்றாய் வேகமாய் ஆண் : சோஃபியா சோஃபியா சோஃபியா [8] ஆண் : சுடாமலே தீண்டிய தீபோலே காதல் பேசுகிறாய் இருளின் கடைசி துளிகள் காய எரிகின்றாய் ஆண் : உடைந்தே கிடந்தேன் சோஃபியா ஆயிரம் துண்டென அணைத்தே இணைத்தாய் சோஃபியா ஆகினேன் ஒன்றென5 points
-
5 points
-
2020 இல் இந்த pandemic துவங்கியபோது, நிறைய நேரம் சும்மா இருந்தது. அப்பொழுது பிரியாணி செய்து பாப்போம் என்று விதம் விதமான ரெஸிபிகள், YouTube விடீயோகள் நிறைய பார்த்து செய்வது. ஆரம்பத்தில் ஒன்றுமே சரியாக வராது, தண்ணி அளவு பிழைக்கும், அல்லது அடிப்பிடிக்கும், சரியான ingredients இருக்காது, தம் சரியாக வைக்க வராது. அப்பிடி இருந்து படிப்படியாக இப்பொழுது, விருப்பமான சுவையில், உறைப்பில் செய்யும் அளவுக்கு வந்துவிட்டேன். ஒரே குறை, பிரியாணி செய்வது கொஞ்சம் நேரம் எடுக்கும் வேலை இதில் ஹைதராபாதி சிக்கன் பிரியாணி , எனது மகன்களில் ஒருவருக்கு பிடிக்கும் என்பதால் ஒவ்வொரு கிழமையும் அவருக்காகவே செய்வேன், நாங்களும் சாப்பிடுவோம். இந்த பிரியாணி மற்றைய வகைகளை விட கொஞ்சம் இலகுவானது, தண்ணி அளவு அவ்வளவு முக்கியமில்லை. இதற்கு நூற்று கணக்கில் விடியோக்கள் உள்ளது, நான் எனக்கென்று ஒரு அளவு, ingredients, செய்முறை வைத்து செய்வேன். எங்கள் மிளகாய்த்தூள் கூட கொஞ்சம் போடுவதுண்டு. தலப்பாக்கட்டி பிரியாணியும், வெவ்வேறு விடியோக்கள் பார்த்து பல தடவை செய்திருக்கிறேன், சில வேளைகளில் சரி வரும், சில வேளைகளில் பிழைக்கும். இந்த வகை பிரியாணிக்காக முன்பு வாங்கிவைத்த சீரக சம்பா அரிசி மூட்டை சும்மா இருந்ததால், கிட்டடியில் வேறு ஒரு நல்ல விடியோவை பார்த்து கடந்த இரண்டு தடவை செய்தது மிகவும் சுவையாகவே வந்தது. இப்பொழுது இது எப்பிடி சரியாக செய்வது என்று கொஞ்சம் பிடிபட்டு விட்டது. ஒரு கிழமைக்கு முன், முழுநாள் ஓய்வு கிடைத்தபோது இரண்டுவகை பிரியாணிகளையும் ஒரே நாளில், நேரம் எடுத்து செய்தேன். நான் இப்பிடியெல்லாம் செய்தேன், எனக்கு இப்பிடியெல்லாம் செய்யத்தெரியும் என்று வேறெங்கே படம் காட்டுவது? அதனால் கொஞ்ச படங்கள் கீழே: ஹைதராபாதி சிக்கன் பிரியாணி திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி தலப்பாக்கட்டி பிரியாணி செய்யும் முறை கீழே, இதில் இவர் போடும் காரம், தண்ணி அளவைவிட எனக்கு கொஞ்சம் கூட போட வேண்டி இருந்தது:5 points
-
நாமெல்லாம் சோம்பேறிகள் எண்ட அர்த்தம் இல்லை பாருங்கோ.... இப்ப நான் என்ன சொல்ல வாறனெண்டால் புங்குடுதீவார்ரை எந்தக்கடை எண்டாலும் பலசரக்கு கடை தொடக்கம் நகைக்கடை வரைக்கும்...... நீங்கள் அவையின்ரை கடைக்கு சாமான் பார்க்க/ வாங்கப்போனால் அது பிடிக்கேல்லை, இது பிடிக்கேல்லை, விலை கூட, பேந்து வாறன், நான் தேடினது இதில்லை , கலர் சரியில்லை, டிசைன் சரியில்லை , உழுந்து சரியில்லை, பருப்பு சரியில்லை எண்டு சாக்குப்போக்கு சொல்லிப்போட்டு வெறும் கையோடை கடையை விட்டு வெளியிலை வரமாட்டியள். அது எந்த கொம்பனெண்டாலும் சரி.எந்த மொழி விளங்காதவன் எண்டாலும் சரி...... வியாபார திறன். இப்ப நான் சொன்னது விளங்குதோ? திறமையும் முயற்சியும் அவர்களுக்கு கொஞ்சம் கூட இருக்கின்றது அவ்வளவுதான். ஊரிலை சும்மா ஒரு கதைக்கு ஒரு வசனம் சொல்லுவினம் "காகம் பறக்காத ஊருமில்லை புங்குடுதீவான் இல்லாத ஊருமில்லை" எண்டு5 points
-
5 points
-
நாம் ஈழத் தமிழர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. ஒவ்வொரு விதமான திரிகளில் நடைபெறும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் கள உறவுகளுடன் நட்புடனேயே பழக முயற்சிக்கிறேன். ஒருவர் எழுதிய கருத்தைப் பார்க்காமல் அது யார் எழுதியது என்று பார்ப்பதுதான் தவறு. அவர் தனக்குப் பிடித்தவராக இருந்தால் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பதற்கும் பச்சை குத்துவதற்கும் யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் இதுதான் குழுவாதம். ஆரோக்கியமானது இல்லை. பல தடவைகள் ஒவ்வொரு பிரச்சனைகளின்போது குழுவாதம் தவிர்க்கப்பட வேண்டும் என்பது தொடர்ச்சியாக நிர்வாகத்தால் அறிவுறுத்தப்படுவதற்கான காரணம் அது யாழின் வளர்ச்சிக்கு முற்றிலும் முரனானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நன்றி.5 points