Leaderboard
Popular Content
Showing content with the highest reputation since வியாழன் 17 டிசம்பர் 2020 in all areas
-
கொவிட்-19 க்கு எதிரான தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நடவடிக்கைகள் உலக அரங்கில் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வகையில்.. யாழ் கள உறவுகள் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது.. இன்னும் தடுப்பூசி போடாதவர்களுக்கு அறிவூட்டலையும் அச்ச நீக்கத்தையும் அளிக்க உதவும். உங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். எனது அனுபவம்... கடந்த வாரம்.. முன்கள உயிரியல், மருத்துவ சுகாதாரப் பணியாளர் என்ற வகையில்..எனக்கான தடுப்பூசியை இங்கிலாந்தில் ஒரு தேசிய சுகாதார சேவை மருத்துவமனையில் போட்டார்கள். Primary vaccine - முதல் தடுப்பூசி போடப்பட்டது. Pfizer - ஆர16 points
-
கொவிட் 19 அல்லது கொரானோ பலருக்கு பதட்டம். சிலருக்கு உயிர்க்கொல்லி. நமக்கு விளையாட்டு. தினமும் கொவிட் பி சி ஆருடன் (PCR- Polymerase Chain Reaction) காலை தொடங்கி மாலை வரை.. முதலில்.. கோழி உரிப்பது போல கொவிட்டை உரித்தல்.. அல்லது கொழுக்கட்டையை பிய்ப்பது போல் பிய்த்தல்... கொவிட்டை உரித்து.. இதற்கு எக்ஸ்ராக்சன்.. extraction என்பது. கொவிட் கோதை உடைத்து அதன் உள்ளீட்டில் உள்ள ஆர் என் ஏ (RNA- Ribo Nucleic Acid)யை அதாவது கொழுக்கட்டையை பிச்சு உள்ளீட்டை எடுத்து அதற்குள் உள்ள அவித்த பயறைப் பொறுக்கி உண்பது போல்... தனியாக்குதல். இதனை நாம் செய்யத் தேவையில்லை. ஒரு ரோபோவே செய்யும்...15 points
-
கள உறவுகளுக்கு வணக்கம், நம் நாளாந்த வாழ்க்கையில் பல்வேறு அறிஞர்கள், ஞானிகள், பெரியோர் என்று பலரிடமிருந்து எண்ணற்ற நற்சிந்தனைகளை, வாழ்வியல் தத்துவங்களை, கோட்பாடுகளைக் கேட்டிருப்போம், கற்றிருப்போம். அவை பெரும்பாலும் அவர்களது வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடாக இருந்திருக்கும். யோகரோ, இயேசுவோ, புத்தரோ, லெனினோ, பெர்னாட் ஷாவோ, தந்தை பெரியாரோ, ஓஷோவோ, டேல் கார்னகியோ யாராக இருந்தாலும் அவர்களின் சுய சிந்தனையில், கண்ணோட்டத்தில் அவரவருக்குச் சரியெனப்பட்டதைத் தத்துவங்களாக, நற்சிந்தனை மொழிகளாக உலகிற்கு எடுத்துரைத்தார்கள். எனினும், இந்தத் திரியின் நோக்கம் பிற ஞானிகள், அறிஞர் கூறிய நற்சிந்தனைகளை, தத14 points
-
தமிழ்ச் சொந்தங்களுக்கு வணக்கம்! அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடப் போகும் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி, நமது பெருமை மிகு மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் தொடர் முயற்சியால், 2021 ஆம் ஆண்டு சனவரி மாதத்தை "தமிழ் மொழி மற்றும் மரபு மாதமாக" கொண்டாடும் வகையில் மினசோட்டா மாநில ஆளுநர் திரு.டிம் வால்ச் அரசு முத்திரையுடன், கையெழுத்திட்டு பிரகடனம் செய்துள்ளார். வட அமெரிக்காவில் ஒரு மொழிக்கும் அதன் மரபுக்கும் மினசோட்டா மாநில அரசால் முதல் முறையாக, ஒப்புமை பெற்று, அடையாளப்படுத்தப்பட்ட ஒரு மொழி என்றால் அது நமது தமிழ் மொழிக்கே ஆகும். கடந்13 points
-
வணக்கம் எல்லோருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள். எதிர்பாராத சிகிச்சை. 1997 கார்த்திகை 27இல் 41 வயதாக இருக்கும் போது மெலிதாக நெஞ்சுவலி என்று போய் அன்ஜியோபிளாஸ்ரி செய்து இரண்டு ஸ்ரென்த் வைத்தார்கள். அதிலிருந்து சாப்பாடு உடற்பயிற்சி எல்லாவற்றிலுமே மிகவும் கவனமாக இருந்தேன்.நான் இருந்தேன் என்பதைவிட துணைவியார் மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டார். இந்த நெஞ்சுவலிக்கு காரணம் புகைத்தல் தான் என்று டாக்ரர் சொன்னதும் பதின்ம வயதிலேயே பழகிக் கொண்ட புகைத்தலை அன்றிலிருந்தே இன்றுவரை தொட்டதில்லை.என்ன மனைவி மிகவும் அன்பாகவும் பக்குவமாகவும் கேட்டும் நிறுத்த முடியாததை டாக்ரர் சொல்லி நிறுத்தியதை எண13 points
-
சபீதா-சிறுகதை-சாத்திரி இம்மாத நடு இணைய சஞ்சிகையில் . இப்போதெல்லாம் வரும் தமிழ்ப்படங்களையோ செய்தி சனல்களையோ பார்ப்பதை விட நசினல் ஜியோ கிராபி சனலை பார்க்கலாம். அதை பதிவுசெய்யும் கமராமேன்களுக்குத்தான் உண்மையில் அவார்டு கொடுக்கவேண்டும். காலை எழுந்ததுமே தேநீரோடு கொஞ்சநேரம் ஜெயோ கிராபி சனலை பார்க்கத் தொடங்கி விடுவேன். அதுவும் சிறுத்தை ஒரு மிருகத்தை வேட்டையாட பதுங்கியபடி நடக்கும்போதே ஒரு அழகியின் நடையை பின்னிருந்து இரசிப்பது போல அதன் அசைவுகளை அங்கம் அங்கமாக இரசிக்கத் தொடக்கி விடுவேன். குறி தவறாமல் அது தன் இலக்கின் கழுத்தை பாய்ந்து கவ்வும்போதே நானும் பாய்12 points
-
Bondi to Coogee walk என்பது சிட்னியில் பிரபல்யமான ஒரு விஷயம். தொண்டுநிறுவனங்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை இந்த கடற்கரையோர நடையை விரும்பி செய்வதுண்டு. அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.. காலை 7மணிக்கு Bondi கடற்கரையில் தொடங்கிய நடை சுமார் 8.40மணியளவில் Coogee கடற்கரையில் முடிந்தது.. இந்த நடைப்பயணத்தில் மனதை கொள்ளைகொள்ளும் காட்சிகள், கடற்கரைகள், பூங்காக்கள், பாறைகள், விரிகுடாக்கள் மற்றும் பாறைகளிற்கிடையில் அமைந்த நீச்சல் குளங்கள், Sculpture by Sea திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் போன்றவற்றை ரசிக்கலாம். அதுமட்டுமல்ல காலைநேர கடற்கரை காற்று, ஆரவாரமற்12 points
-
ஞாபகங்கள் ஒரு வகையில் விசித்திரமானவை. அண்மையில் நடந்த சம்பவமொன்று மறந்து போகிறது.கடைத்தெருவில் சந்திக்கிற மனிதர் ஒருவர் என்னை ஞாபகமிருக்கிறதா என கேட்கிறபோது அசடு வழியவேண்டிவருகிறது. எங்கேயோ பார்த்த முகம் போல இருக்கும். பெயர் நினைவுக்கு வராமல் அடம் பிடிக்கும். முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னர் நடந்த சில சம்பவங்கள் இப்போதும் அச்சொட்டாக ஞாபகத்தில் இருக்கிறது. பல நூறு மனிதர்களையும் சில ஆயிரம் சம்பவங்களையும் கடந்திருப்போம். சிலது ஒட்டிக்கொள்கிறது. சிலது தொலைந்து போகிறது. எது தொலையும் எது தங்கிநிற்கும் என்பதற்கு ஏதேனும் எளிய சூத்திரம் இருக்கிறதோ தெரியாது. இது இன்னும் மறையாமல் எங்கையோ ஓரமாக11 points
-
கோவிட் 19: மாறும் வைரசும், மாறாத மனிதர்களும்! தென்கிழக்கு இங்கிலாந்தின் நகரங்களில் புதிதான நிலை 4 கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப் பட்டிருக்கின்றன. இதற்குக் காரணமாக, புதிதாக விகாரமடைந்த நவீன கொரனா வைரஸ் அங்கே இனங்காணப் பட்டிருப்பது சொல்லப் பட்டிருக்கிறது. இதைப் பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம். வைரசுகளுக்கு மாற்றமே வாழ்க்கை! வைரசுகள் ஆர்.என்.ஏ (RNA) அல்லது டி.என்.ஏ (DNA) எனப்படும் நியூக்கிளிக் அமிலங்களால் ஆக்கப் பட்டவை. ஆர்.என்.ஏ வைரசுகள் இயற்கையாகவே பெருகும் போது விகாரமடைந்து புதிய விகாரிகளை உருவாக்கும் தன்மை கொண்டவை. தடுப்பூசி இது வரை கண்டு பிடிக்கப் படாத எயிட்ஸ் வைரசான எச்.ஐ.11 points
-
2020; இந்த ஆண்டைப் பலர் சாபமான ஓர் ஆண்டாகவே நினைக்கிறோம். உலகளாவிய ரீதியில் சிறந்த ஆண்டாக இது அமையாவிட்டாலும், பலருக்கு இவ்வாண்டு ஓர் restart / reset / pause buttonகளாகவே அமைந்திருக்கிறது எனக் கூறலாம்; எதற்காக ஓடிக்கொண்டு இருக்கிறோம் எனத் தெரியாமல் ஓடியவர்களை நின்று நிதானமாகச் சிந்திக்கவும், ஓடும் நோக்கத்தை, பாதைகளை தமக்குகந்தவாறு மாற்றியமைக்கவும் உகந்த ஆண்டாக இந்த 2020அமைந்திருக்கிறது. இன்னும் பலருக்கு மறந்துபோன நம் கலை, கலாசார விழுமியங்களை, வாழ்க்கை முறைகளைத் தூசி தட்டி மீண்டும் அதிசய உணர்வோடும், ஆர்வத்தோடும் அனுபவித்தும், செயற்படுத்தியும் பார்க்கும் ஆண்டாக இது அமைந்திருக்கிறது; தாய்ம10 points
-
ஐசக் நியூட்டனும் - 17ம் நூறாண்டின் லொக்டௌனும் ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது சிலை. இப்போது நாம் ஒரு பெரும் லொக்டௌன் னினுள் முடங்கப்பட்டுளோம். 17ம் நூறாண்டில், இதேபோன்ற ஒரு முடக்கத்தில் தான், விஞ்ஞான உலகத்துக்கு, நியூட்டன் எனும் சிறந்த விஞ்ஞானி கிடைத்தார். தனது தந்தையார் இறந்து, மூன்று மாதங்களின் பின்னரே நியூட்டன் பிறந்தார். அவர் ஒரே ஒரு பிள்ளை என்பதால், இறந்த தந்தையின் பெயரே அவருக்கு இடப்பட்டது. அவரது தாயார் மறுமணம் செய்து, மூன்று பிள்ளைகளை பெற்றுக் கொண்டார். நியூட்டனுக்கும், அவரது, மாற்றுத் தந்தைக்கும் ஒத்து போகாததால், தனது பாட்டியின் கவனிப்பில் வளர்9 points
-
வீடு வந்து சேர்ந்ததும் சோகமான புன்னகையுடன் வரவேற்பு.நேரே படுக்கை தான்.எனக்கும் மிகவும் களைப்பாகவே இருந்தது.கூடுதலான இரத்தம் ஓடியிருக்குமோ என்னவோ 3 கிழமைகளாக ஓரிரு மணிக்கொரு தடவை பெருமூச்சு மாதிரி இருக்கும் ஒட்சிசன் காணாதோ தெரியவில்லை.அதனால் கூடிய நேரம் படுக்கை தான்.மனைவிக்கு முட்டை மாதிரி பொத்தி பொத்தி பார்த்தேனே எப்படி இவ்வளவு தூரம் அடைத்தது?கலிபோர்ணியாவில் ஒரே பால்அப்பம், தேங்காய்சம்பல் ,வாழைப்பழ பணியாரம் ,வடை என்று ஒவ்வொரு நாளும் வாய்க்கு இதமாக சாப்பிட்டபடியால்த் தான் இப்படி அடைத்திருக்கு என்று இன்று வரை உறுதியாக இருக்கிறா.6 மாதத்து சாப்பாடு இப்படி அடைக்காது என்று எவ்வளவோ கூறியும் கேட்பதாக9 points
-
சிகிச்சை எல்லாம் நன்றாகவே முடிந்தது.பயப்படும்படியாக எதுவுமில்லை.ஆ இது எனக்கு முதலே தெரியும் தானே என்று எனது நினைக்கிறது. ஒரு இடத்தில் 30 வீதம் அடைப்பு இருக்கிறது. மற்றைய இடம் முதல் வைத்த இரு ஸ்ரென்த்தும் ஏறத்தாள 100 வீதமும் அடைத்துவிட்டது இனிமேல் பயப்பட ஏதுமில்லை.வேறு எதாவது கேட்க போறியா?சிறிது மெளனத்தின் பின் இல்லை மிகவும் நன்றி டாக்ரர் என்றேன். இது எனது மகளின் தொலைபேசி இலக்கம் அவவும் மருத்துவதுறையில் இருப்பதால் அவவுடன் கதைப்பது நல்லதென்றேன்.பக்கத்து மேசையில் இருந்த எனது தொலைபேசியைக் காட்டினேன்.இல்லை இல்லை இலக்கத்தை சொல்லு என்று தனது கைதொலைபேசியை எடுத்தார்.9 points
-
ஜேர்மனியின் வீழ்ச்சிக்கு பிறகு பதைபதைக்க வைக்கும் செய்திகள் பல ஒவ்வொன்றாக வெளிவந்தன. வதை முகாம்கள் பற்றி. இறைந்து கிடக்கும் யூதர்களி்ன் சடலங்கள் பற்றி. சிறைகளில் எலும்பும் தோலுமாக கிட்டத்தட்ட விலங்குகளைப் போல் சுருண்டு படுத்திருந்த யூத கைதிகள் பற்றி, யூத இனவொழிப்பு பற்றி. அதுவரை யூத ஒழிப்பை ஜேர்மனியின் உள்நாட்டு பிரச்சனைகளில் ஒன்றாகவே மேற்குலகம் கருதி வந்தது. ஜுலை 23,1944 அன்று சோவியத் போலந்தில் உள்ள Majdanek என்னும் வதை முகாமை முதல் முதலாக கண்டுபிடித்தபோது அதிர்ச்சியடைந்தது ஐரோப்பா. பிரிட்டன் மற்றும் அமெரிக்கப் படைகள் மேலும் சில முகாம்களை பின்னர் விடுவித்தனர். ஹிட்லரின் இனவழிப்பு பற்றி ஐ9 points
-
தமிழர்களும் இங்கிலாந்தைப் பொறுத்தவரை வந்தேறு குடிகளே. தமழர்கள் பலவிதங்களில் இங்கு வந்து கடியேறி இருக்கிறார்கள். படிக்க என்று வந்தவர்கள். படிக்க என்ற சாட்டில் வந்து பின்பு அரசியல்தஞ்சம் கொரியவர்கள். அரசியல் தஞ்சம் பெற்றவர்கள். iரோப்பிய நாடுகளில் இருந்து ஒன்ற்யச்சட்டதிட்டங்களின் படி இங்கு வந்தவர்கள் என்று பல வகயினர். ஒரு வந்தேறு குடி இன்னுமொரு வந்தேறு குடியை வரக்கூடாது என்று சொல்வதில் என்ன தார்மீக அறம் இருக்கிறது.? தமிழர்கள் சொல்லும் குற்றச்சாட்டு கிழக்கு iரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்களால் தமிழர்களின் வேலை வாய்ப்புகள் குறைகிநதென்று.எமது அடுத்த தலைமுறைக்கு இவர்கள் போட்டியாளர்களாக இருக்கும் சாத்திய9 points
-
வணக்கம், யாழ் கருத்துக்களம் உலகத் தமிழரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாகவும் படைப்புத் திறனைக் காட்டவும் கூடிய ஒரு பொதுவான தளமாக 1999 மார்ச் 30 முதல் இயங்கிவருகின்றது. இவ்வாண்டு கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே பாரிய நெருக்கடிக்கு ஆளாகிய வேளையில், வழமையான பதிவுகள், கருத்தாடல்களுடன் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகளையும் முக்கிய தகவல்களையும் கருத்துக்கள உறவுகளின் ஆதரவுடன் கருத்துக்களத்தில் பகிர்ந்துகொண்டு வருகின்றது. இந்த வகையில் 2020 ஆம் நிறைவுபெறும் இவ்வேளையில் யாழ் கருத்துக்களத்தில் அலசப்பட்ட திரிகளினதும், புதிதாக யாழுடன் இணைந்து கருத்தாடல்களில் பங்குபற்றோர9 points
-
அம்மாவின் அன்பான அழைப்பும் துயில் எழுப்பலும் எதுவும் இல்லை. தங்கையின் அலட்டல் ஆர்ப்பாட்டம் இல்லை. அப்பாவின் கம்பீரக் குரல் இல்லை. எனக்குப் பிடித்த இன்னும் பலதும் இங்கில்லைத்தான். ஆனாலும் அவர்கள் எல்லோருடனும் இருக்கும்போது இல்லாத ஒருவித நிம்மதியும் அதனூடே தெரியும் வெறுமையுமே இப்ப எனக்கு இருந்தாலும் சுவாசக் காற்றில் எதோ ஒரு சுகத்தை கவலையினூடும் என்னால் உணர முடியிது. நான் இரண்டு நாட்களாக என் அறையில் ஒருவித இலயிப்போடு சுருண்டு படுத்திருக்கிறேன். ஏழாம் மாடியின் அறை ஒன்றில் திரைச்சீலையற்ற யன்னலினூடே தெரியும் வானத்தையும் அப்பப்போ கடந்து போகும் மேகங்களையும் சில பறவைகளையும் கூட பல காலத்துக்குப்9 points
-
நாம் மாறுபட்ட கருத்து உள்ள நண்பர்களுடன் வாழ்க்கை பயணம் செய்கின்றோம்.அவ்வளவுதான் மற்றும் படி அவர்கள் எதிரிகள் அல்ல.8 points
-
நாம் கடவுளர்க்குக் தூபம் காட்டும்போது இடும் சாம்பிராணியும்[Frankincense ] மரத்தில் இருந்து வடிந்து காய்ந்த பாற்கட்டியே. ஐயாயிர வருடங்களுக்கு மேலாகச் சாம்பிராணியை மனிதர் பயன்படுத்துகின்றனர். சிலர் குங்கிலியமும் சாம்பிராணியும் ஒன்று என்று கருதுகின்றனர். வெவ்வேறு விதமான மரங்களில் இருந்தே இரண்டும் கிடைக்கின்றன. இவற்றிலிருந்து வெவ்வேறு அமிலங்கள் கிடைக்கின்றறன. குங்கிலியத்தில் Stearic acid [C18H36O2] இருக்கிறது. சாம்பிராணியில் Boswellic acid [C30H48O3]இருக்கிறது. அவை பலவைகையான நோய்களை நீக்கின்றன. நம் முன்னோர் பெண்களின் கர்ப்பப்பைக் கட்டிகளையும் கர்ப்பப்பையில் ஏற்படும் புற்றுநோயையும் சாம்8 points
-
பூர்வீக சமயம் என்று ஒன்றில்லை. இயற்கைதான் பூர்வீகம். இயற்கை படைத்தவையில் மனிதர் உண்டு. மனிதர் படைத்தவையில் மதங்கள் உண்டு. மதங்கள் படைத்தவையில் கடவுள்கள் உண்டு. வலிமை உள்ள மனிதர்களால் மதங்களும், கடவுள்களும் பாதுகாக்கப்படுகின்றன.7 points
-
இதில் என்ன தனிப்பட்ட பிரச்சனை இருக்கிறது, நுணா. எனது தனிப்பட்ட வாழ்வை அறிந்திருந்தால், நீங்கள் இப்படிக் கூறி இருக்க மாட்டாரகள். இருப்பினும் ஒருவரது கருத்தை தொடர்ந்து அவதானிக்கும் போது அவர் தனிப்பட்ட ரீதியில் கூறுகிறாரா, அல்லது கோட்பாட்டு ரீதியில் கருத்தியலை கூறுகிறாரா என்பதை கணிப்பது மிக இலகு. ஆனால் கருத்தியல் ரீதியிலான எதிர்க்கருத்தை வைக்க முடியாத சிலர் இங்கு இப்படி தனிப்பட்ட ரீதியானது என்று வசை பாடுவது வழமை. ஆனால் உங்களிடம் இருந்து இதை உண்மையில் நான் எதிர் பாரக்கவில்லை. மக்கள் போராட்டங்கள் நடுநிலையான அமைப்புக்கள் மூலம் முன்னடுக்கப்படும் போது அதன் பெறுமதி அதிகம் என்பது நான் சொல்லி தெ7 points
-
இப்போது இடிக்கப்பட்டிருப்பது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கானதும், பல்கலைக்கழக மாணவர்களுக்கானதுமான நினைவித்தூபி. ஆகவே, அதை இருந்த இடத்தில், இருந்த வடிவில் மீள அமைப்பதே நியாயம். பிறகு வேண்டுமென்றால் கொல்லப்பட்ட அனைவருக்காகவும் ஒரு பொதுவான இடத்தில் ஒரு நினைவுத்தூபியினைக் கட்டலாம். முள்ளிவாய்க்காலில் நடந்தது மற்றைய இடங்களில் நடந்ததைப் போல ஒன்றல்ல. அது ஒரு திட்டமிட்ட இனவழிப்பு , ஆகவே வேறுபடுத்திக் காட்டப்படவேண்டியது அவசியம். அப்படி அவசியம் இல்லை, கொல்லப்பட்ட அனைத்து இலங்கையர்களுக்காகவும் தூபி கட்டுங்கள் என்று கேட்பது திட்டமிட்ட இனவழிப்பினை மறைக்கும் நடவடிக்கையே. இதை டக்கிளஸ் க7 points
-
7 points
-
Just married... watch how quickly the “ control system “ gets activated...!!7 points
-
சிங்களம் வடகிழக்கு பகுதிகளிலை மரத்துக்கு மரம் வைரவர் கோவில் மாதிரி புத்தர் சிலையையும் வைச்சு பெரிய பெரிய விகாரைகளையும் கட்டேக்கை வராத ரோசம் மானம் நற்சிந்தனை வளைவுகள் கட்ட மட்டும் வருகுதாக்கும்...7 points
-
'முழுச் சிங்கள அரசு' தம்மை முழுமையாக ஆட்சி செய்யவேண்டும் என்று என்று சிங்கள மக்கள் நினைத்து வாக்களித்தனரோ அதே சிங்கள அரசு நாட்டை இனி மீட்கவே முடியாத நிலைக்கு கொண்டு வந்து விடுகின்றது. 65 இலட்சம் சிங்கள மக்களால் வாக்களித்து ஆட்சிக்கு வந்த அரசு, எல்லாருக்கும் வாய்க்கரிசி போடப் போகின்றது. பெளத்த பேரினவாதம் அது செல்லக் கூடிய அதி உச்சி வரைக்கும் அடைந்த பின் கீழே விழத் தொடங்கி இருக்கு. Curve இனி flat ஆகி பின் இல்லாமல் போகக் கூடிய காலம் விரைவில் வரும். ஆனால் அப்படி விழும் போது அதன் பாதிப்புகள் தமிழ் மக்களின் தலையில் இரட்டிப்பாக விழும் என்பது தான் கவலைக்குரிய விடயம். புலம்பெயர் தமிழ் மக்களால7 points
-
சோவியத் யுத்தம் ஜேர்மனியின் ராணுவத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் சிதைக்க ஆரம்பித்திருந்தது. இந்தப் போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று ஒருவராலும் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. எப்படிப் பார்த்தாலும் நீ்ண்டதொரு போருக்கு ஏற்ற பொருளாதார பலம் ராணுவத்திடம் இல்லை. 1930களில் இருந்தே ராணுவத்தை ஜேர்மனி செழுமைப்படுத்த ஆரம்பித்து விட்டது என்றாலும் சோவியத் யுத்தம் ஏற்படுத்திய பின்னடைவு ஜேர்மனியை சோர்வாக்கியது. கரி, எண்ணெய், இரும்பு உள்ளிட்ட மூலப்பொருள்கள் கிடைத்தபாடில்லை. ஆயுதங்கள் தயாரிப்பிலும் சுணக்கம். 1941 அரை ஆண்டில் மட்டும் 1823 போர் விமானங்களை ஜேர்மனி இழந்திருந்தது. இழப்பை ஈடுகட்ட 1600 வி7 points
-
முதுமையின் பிடிக்குள் இருக்கும் போதுதான் பழைய நினைவுகளை ஆறுதலாக அசை போட முடிகிறது. எனது மாமி அதாவது எனது மனைவியின் தாயார் (சிவா தியாகராஜா) 87வது வயதை நோக்கி இப்போ பயணித்துக் கொண்டிருக்கிறார். அவர் தனது வாழ்க்கையின் பெரும் நினைவுகளை அசை போடும்போது மனதில் தட்டுப் படுவதை அப்பப்போ எழுதி வைத்துவிடுவது அவரது வழக்கம். அப்படி அவர் எழுதிக் குவித்திருப்பது ஏகத்துக்கு இருக்கிறது. ஒருவர் எங்களை விட்டு மறைந்ததன் பின்னால் முப்பத்தியொரு நாளிலோ அல்லது ஓராண்டு நினைவிலோ அவரைப் பற்றி அஞ்சலிப் புத்தகம் அச்சடித்து ஊருக்குத் தந்துவிடுகிறோம். அதில் அவரைப் பெருமைப் படுத்துகிறோம் என்ற திருப்தி எங்களுக்கு கிடைத்து6 points
-
தமிழ் சிறி ,சனம் திட்டி அவருகு மரணம் வந்தது உண்மை என்றால், கோட்டபாயவும், மகிந்தவும் எப்பவோ இறந்து போயிருக்கவேண்டும். இந்த இருவருக்கும் கிடைக்காத திட்டா?6 points
-
ரதி, எனக்கும் இதே உணர்வு வருவதுண்டு, குறிப்பாக நம்மோடு படித்தோர்க்கு வளர்ந்த பிள்ளைகள் இருப்பதைப் பார்க்கும்போது. எனினும் பலரும் சொல்வதுபோல 'வயது சும்மா ஒரு எண்ணிக்கை மட்டுமே' என்று நினைத்து அமைதிகொள்வேன். ஒரே வயதில் இருக்கும் இருவர் வெவ்வேறு விதமாக முதுமையடையலாம்; ஒருவருக்கு 50 வயதிலேயே தலைநரைத்து, தளர்ச்சியடைந்து, நோயாளியாகலாம்; மற்றவர் அதே வயதில் இன்னும் இளைஞனாக இருக்கலாம், உடலளவிலும், மனதளவிலும். இன்னொரு விதமாகப்பார்த்தால், ஒரு 70 வயதுடையவரையும், இன்னொரு 95 வயதுடையவரையும் நாம் வயோதிகர் என்றே சொல்கிறோம். ஆனால் இவர்களுக்கிடையில் ஒரு தலைமுறை இடைவெளியே இருக்கு; 25 வருஷ வித்திய6 points
-
Monday, December 28, 2020 றைன் நதியோடு நானொருநாள் --------------------------------------------------- (4/2019 எழுதப்பட்ட கதை. 2020 நவம்பர் தேசத்தின் குரல் இணையஇதழில் வெளியானது) நேரத்தைப் பார்க்கிறேன். காலை 6.56. இன்னும் 2 மணித்தியாலங்கள் இருக்கிறது என் பயணத்தின் இலக்கையடைவதற்கு. இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று மகளிடம் போகிறேன். ஒரு குழந்தையென்ற எனது கனவுகள் விலக்கி அவள் 4வது செமஸ்ரர் தொடக்கத்தில் நிற்கிறாள். இன்னும் இரண்டு செமஸ்ரர் முடிந்தால் அவளது கற்றலின் இளமானிப் பட்டப்படிப்பை நிறைவு செய்வாள். காலமே என் குழந்தையைக் காத்திடு. அவள்6 points
-
6 points
-
ஜனாசாக்களை எரிப்பதன் மூலம் முஸ்லிம்களையும் நினைவுகளை அழிப்பதன் மூலம் தமிழ் மக்களையும் சினம் கொள்ளவும், அதன் மூலம் திருப்தி கொள்ளவும் எது அவர்களை இட்டுச் செல்கின்றது போர் வெற்றி அது ஊட்டுகின்ற வெறி, அதனால் மேலும் மேலும் பிரவாகம் எடுக்கும் இனவாதம், எம்மை இனி எவராலும் தட்டிக் கேட்க முடியாது எனும் ஆணவம் யுத்த வெற்றி என்பது ஆயிரம் ஆண்டுகள் வடிக்கப்பட்ட மதுவின் போதை. அது பல்லாயிரம் குவளைகளில் பகிரப்பட்டு வெற்றி பெற்றவர்களால் மட்டுமே அருந்தப்பட்டு வெற்றி பெற்றவர்களின் ஆசனவாயில் இருந்து தோற்றவர்களின் தோள்களிலும், தலைகளிலும், உடல்களின் மேலும் இன்று கொட்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. எரி6 points
-
கூப்பிடுபவர்கள் இன்னும் பொறுப்பான மேட்டுக்குடிகள் ஆனால் நான் எதிலும் கொஞ்சம் கவனம்6 points
-
நட்பென்ன உறவென்ன ! - சுப. சோமசுந்தரம் எனது இந்த அறுபதாம் அகவையில் சமூக விலங்காக எல்லோரையும் போல் நான் வாழ்ந்ததைத் திருப்பிப் பார்க்கிறேன். எத்தனை உறவுகள் எத்தகைய நட்புகள், அத்தனையும் ஒரு பெரிய புத்தகமாக எழுதித் தள்ளும் அளவிற்கு என் மனத்திரையில் ஓடுகின்றன. வாசிப்பவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு என்னால் எழுத முடியும் என்ற தன்னம்பிக்கை, ஏன் இறுமாப்பே உண்டு என வைத்துக் கொள்ளலாம். புத்தக அளவிற்கு எழுத வேண்டியதை ஒரு கட்டுரையில் சுருக்க நினைக்கும் பேராசை இப்போது. உறவோ நட்போ, நம் வாழ்வில் இவை ஏற்படுத்தும் தாக்கங்கள் (படுத்தும் பா6 points
-
அன்ரி, யூகே, அமெரிக்கா, கனடாவில் பிள்ளைகள் தமிழில் உரையாடுகிறார்கள் ஆனால் எழுத வாசிக்க முடிவதில்லை என்று ஆரம்பிக்கும் கட்டுரை(?), பெற்றார் பிள்ளைகளுடன் தமிழில் உரையாடுவதில்லை என முடிகிறது! முதலில் உங்கள் பிரச்சனை என்ன? இந்த பிள்ளைகள் தமிழில் உரையாடுகிறார்கள் ஆனா எழுத வாசிக்க முடிவதில்லை என்பதா? அல்லது தமிழில் உரையாடவே முடிவதில்லை என்பதா? 2வது எனில் அப்படியான பிள்ளைகள் மிக குறைவாகவே உள்ளனர். தக்கி தயங்கினாலும் தமிழ் பிள்ளைகள் பலர் தமிழில் உரையாட கூடியவரே. வாசிப்பது, எழுதுவது என்றால் கடினம்தான். மற்றைய ஐரோப்பிய நாடுகள் போலன்றி யூகேயில் இரெண்டு பெற்றாரும் முழு நேர வேலைக6 points
-
குணாவின் ஆய்வை நான் பார்க்கவில்லை. ஆனால் சொல்லக் கூடியது: 1. இலங்கையரசை தீர்வுக்கு இணங்க வைக்கும் உறுதியான துருப்புச் சீட்டு யாரிடமும் இல்லை. சீனாவிடமிருந்து பிரிக்க அமெரிக்கா ஏதாவது செய்யும் என்றும் இதன் பக்க விளைவாக தமிழருக்கு ஏதாவது கிடைக்கும் என்று எழுதுகிறார்கள். அமெரிக்காவில் இருந்து பைடன் நிர்வாகப் பேச்சுக்களை அன்றாடம் பார்க்கிறேன். எனக்கு விளங்குவது அடுத்த 2 வருடங்கள் பொருளாதாரத்தை மீள நிமிர்த்தத் தான் முன்னுரிமை கொடுப்பார்கள். இதற்கு சீனாவுடன் ஒட்டிப் போகா விட்டாலும் win-win என்ற போக்குத் தான் பைடனின் அதிகாரிகளால் எடுக்கப் படும். 2. சர்வதேச விசாரணைகளின் பயன் என்ன?பாகிஸ்தான6 points
-
FUNNY BOY - திரைப்படம் மற்றும் திரைப்படத்தை எதிர்ப்பவர் குறித்த எனது பார்வை. ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு பிரபலமான நாவலை தழுவிய திரை கதையே funny boy . சியாம் செல்வதுரை என்பவரின் பதின்ம வயது வாழ்க்கை அனுபவம். ஆண் உடலுக்குள் அடைக்கப்பட்ட பெண் உணர்வின் பிரதிபலிப்பே இந்த திரைப்படம்.குடும்பத்தாரிடமும் சமூகத்தில் இருந்தும் அவருக்கு கிடைக்கும் எதிர்ப்புகள்; நாட்டில் நிலவிக் கொண்டிருந்த அரசியல் அசாதாரண சூழ்நிலைகள்; ஒரு தமிழராக சியாம் செல்வதுரை அவர்கள் சந்தித்த அனுபவங்கள் ; கடைசியாக நாட்டை விட்டுப் பிரிந்து இன்னும் ஒரு நாட்டிற்கு அகதியாக இடம்பெயர்வது இதுதான் இந்த திரைப்படம். இந்த திரைப்படத்த6 points
-
போளி யாழ்ப்பாணத்திலும் பிரபலமாக இருந்தது.....மாலயன் கபே அதுக்கு பிரபல்யம். மற்றும் தாமோதர விலாஸ், லக்சுமி விலாஸ், பரிசித்து விலாஸ் போன்ற எல்லா இடங்களிலும் கிடைக்கும்......! முன்பு போண்டா என்றால் உருளைக்கிழங்குதான் உள்ளுடன் ஆக இருக்கும். பின்பு ஸ்ரீமாவின் அரசாங்கத்தில் என். எம் பெரேரா நிதி அமைச்சராய் இருந்தபோது உள்ளூர் உற்பத்தியை பெருக்குவதற்கு பல பொருட்களின் இறக்குமதியை தடை செய்து விட்டார்கள். அதனால் உருளைக்கிழங்கின் இடத்தை மரவள்ளிக்கிழங்கு பிடித்து விட்டது. சும்மா சொல்ல கூடாது, அக்காலத்தில்தான் சிரமபட்ட பல விவசாயிகள் நிறைய பயிர் செய்து பெரிய வசதியானவர்களாக வந்தார்கள்.மிளகாய் செய்கை நாடு6 points
-
5 points
-
இனிய பொங்கல் வாழ்த்துகள் ....... இனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள் இனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள் இனிய மகர ஜோதி வாழ்த்துக்கள் இனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........!!! இனிக்க இனிக்க பொங்கல் பொங்கி..... இன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து... இல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க...... இல்லாதருக்கும் அள்ளிக்கொடுத்து...... இல்லறம் நல்லறமாக செழித்திட....... இனியவனின் இனிய வாழ்த்துக்கள்.....!!! இல்லங்களில் பொங்கலை பங்கிட்டு...... இல்லத்தாரோடும் உறவுகலோடும்..... இன்முகத்தோடு பொங்கலை உண்டு..... இன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்.5 points
-
5 points
-
யாழ் இனிது, குழல் இனிது என்பார், தம் மக்கள் மழலை சொல் கேளாதோர். என்பது பழ மொழி. புது மொழி என்ன என்றால், சிங்கப்பூர் என்பார், துபாய் என்பார், மொனோக்கோ அறியாதோர். உலகில் மிகவும் அதிக விலை கூடிய ஹோட்டல் ரூம் எங்கே இருக்கிறது என்று கேட்டால், ஓ அதுவா, டுபாயில் உள்ள 7 நச்சத்திர ஹோட்டல், ஒரு இரவுக்கு $7,500 வசூலிக்கிறார்களாமப்பா என்று சொல்வதை கேட்ப்போம். ஹோட்டல் டீ பாரிஸ் என்னும் மொனோக்கோ ஹோட்டலின், றோயல் சூட்டின் ஒரு நாள் இரவுக்கு, 35,000 யூரோ வசூலிக்கிறார்கள். HOTEL DE PARIS இந்த ஹோட்டலின் முன்னே உள்ள கார் பார்க்கில் இடம் கிடைப்பதில்லை. இருக்கும் இடத்த5 points
-
நீங்கள் தியானம் என்று கூறும்போதுதான் ஞாபகம் வருகுது....! தியானத்துக்கு அமைதியான இடங்கள் நல்லதுதான். ஆனால் சன சந்தடி நிறைந்த இடங்களிலும் தியானத்தை அப்பியாசிக்க முடியும். முயன்று பாருங்கள். "பத்துபேர் ஹாலில் இருந்து வள வள என்று கதைத்துக் கொண்டிருப்பார்கள்.அங்கு ஒரு சிறு குழந்தை 3 வயதென்று வைத்துக் கொள்ளுங்கள். அது தன் பாட்டுக்கு ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு அதனுடன் பேசி விளையாடிக்கொண்டிருக்கும். அருகில் இருக்கும் சத்தங்கள், கூத்துக்கள் அக் குழந்தையைப் பாதிப்பதில்லை.அதுபோல்தான் இதுவும். நீங்கள் உங்களுக்குள் அமைதிக்குள் இறங்க இறங்க புறசத்தங்கள் எல்லாம் தானாக விலகிப் போகும். இது மனமும் உட5 points
-
வங்காளம் தந்த அருமையான ஒரு அழகான இசைக்குயில். எந்த ஒரு இளம் பாடகியும் அடைந்திராத குரலுக்கு சொந்தமானவர் இவர். பல விருதுகளை வென்று சாதனை படைக்கும் இந்த குரல் இந்தியாவுக்கு வெளியேயும், சிங்களத்துக்கும், ஆங்கிலத்துக்கும் அறிமுகமானது. இவரது குரலை கேட்டு மெய் மறந்து போன அமெரிக்க ஒஹயோ மாநில ஆளுநர், ஸ்ரேயா கோஷல் தினம் என்னும் ஒரு தினத்தினை ஜூலை மாதத்தில் வரும் வகையில் அறிவித்து உள்ளார். லண்டனின் புகழ் மிக்க மெழுகு சிலைக்கூடத்தில், மெழுகு சிலையாக இருக்கும் ஒரே அழகான, இந்திய இசைக்குயில் இவர் மட்டுமே. வங்காளத்தில் ஆரம்பித்து, பாஞ்சாலி எனும் இசை அமைப்பாளரால் இ5 points
-
நாங்கள் எல்லாம் அந்தக்காலத்திலை லேடீஸ்ன்ரை கையை டச் பண்ண மாட்டம். அவ்வளவுத்துக்கு ஒழுக்க சீலர்மார்.5 points
-
காலம் எவ்வளவு விசித்திரமானது, அன்று யாழில் ஈபிடிபி என்ற பெயரை கேட்டாலே அருவெருப்பும், காறி துப்பும் அளவிற்கு மரியாதை கொடுத்த யாழ் சமூகம் இன்று அவர்களின் பெரும்பான்மையுடன் யாழ் நகரை அதிகாரம் செய்ய கையறு நிலையில் நின்று வேடிக்கை பார்க்கிறது. வரலாறுகள் ஒட்டு மொத்தமா நம் பக்கம் இப்போ இல்லை என்பதன் யதார்த்ததை எம் புலம் பெயர் தட்டச்சு போராளிகள் உணர்வது எப்போ?5 points
-
அழகான அருமையான பதிவு. எங்கள் நாட்டுக் கடற்கரைகளும் அழகோ அழகு. அதுவும் இரவு வேலை முடிந்த அதிகாலையில் நண்பர்களுடன் பாசிக்குடா வந்து தென்னம் கள் அடித்துவிட்டு, அந்தக் குடாக் கரையில் நடந்த அனுபவத்தின் இனிமையை வார்த்தைகளில் சொல்லி அடங்காது. அங்கு கரைவலை இழுக்க உதவிய அனுபவம். பெரும் அலைகளுக்கும், சுளிகளுக்கும் பயமற்று நீண்ட தூரம் நீந்தக்கூடிய குடாக்கடல். சின்னக் காம்பு தாங்கும் மலரை நான் தாங்கமாட்டேனா என்று தெரிவிக்கும் சாய்ந்த தென்னைமரம்.5 points