தாயகக் கனவுகளுடன் ....... [26]
"எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த
பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை.எமது கடின
உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்கவேண்டும். எமது
வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம்.
அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போராட்டத்தைக்
கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு."
"சுதந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக
வாழவேண்டும்.தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும்.
பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும்.படிப்படியாக
அழிந்து போகவேண்டும்.ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடு
வதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை."
"எமது மக்கள் சுதந்திரமாகவும்,கௌரவமாகவும்,பாதுகாப்பாகவும்
வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேற வேண்டுமாயின்
நாம் போராடியே ஆகவேண்டும்."
"இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவெடுத்த வேளையில், வெற்றி தோல்வி என்ற பிரச்சனைபற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த யுத்தத்தை எதிர் கொள்ளும் உறுதியும் துணிவும் எம்மிடம் உண்டா என்பதுபற்றியே சிந்தித்தேன். தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைளையும் விட்டுக்கொடுப்பதில்லை. "
"சாவையும் அழிவையும் துன்பத்தையும் பரிசாகக் கொடுத்துத்தான் சுதந்திரம் எனும் சுவர்க்கத்தை நாம் காணமுடியும். "
--- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன்
---------------------------------------------------------------------------------------------------