Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

valavan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  1. சுருக்கமா கிழக்கில் தமிழர் நிலங்களை அரச உதவியுடன் முன்புபோல ஆக்கிரமிக்க முடியவில்லை, தமிழ் இளைஞர் யுவதிகளை காதல் எனும் பெயரில் லவ் ஜிகாத் பண்ண முடியவில்லை, தமிழர் வியாபார நடவடிக்கைகளை கறையான் அரித்ததுபோல் அரிக்க முடியவில்லை, விவசாய வயல் நிலங்களை அபகரிக்க முடியவில்லை, கிழக்கு எங்களுக்குத்தான் என்று மிரட்டல் விட முடியவில்ல....இப்படி சமூக நல்லிணக்கம் பண்ண முடியாமல் உங்க மனம் வாடுவதை புரிந்து கொள்ள முடியுது. மனசுக்கு ரொம்ப சங்கடமாயிருக்கு ஹிஸ்புல்லாஹ்.
  2. இங்கே பேசப்பட்டுக்கொண்டிருப்பது ஆயுதங்கள் பற்றியல்ல, அணு ஆயுதங்கள் பற்றியதே இரண்டு ஆயுதங்களும் ஒன்றல்ல, இரண்டும் வேறுவேறானவை. இரண்டாம் உலக போரின் பின்னர் அணுஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள் அனைத்துமே அணுஆயுத ஒப்பந்தத்தை உறுதியாக கடைப்பிடித்தே நடந்து வந்திருக்கின்றன, அவை அணு ஆயுத போரில் ஈடுபட்டதாக உங்களிடம்கூட ஆதாரங்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆயுதமோதல்களில் உலகில் யார்தான் ஈடுபடவில்லை அதுவும் அணுஆயுதபோரும் ஒன்றல்ல. புலிகள் அமைப்பிடம் கடற்படை வான்படை இருந்த காரணத்தினால்தான் உலகம் அது ஆபத்தானது என்று சொல்லி அவர்களை அழித்தது என்று நீங்கள் படித்த ஆதாரத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் நாங்களும் அறிந்தால் தவறில்லையே. செப்11ன் பின்னர் உலகின் போக்கே மாறியதால்தான் எம் போராட்டமும் சுற்றி வளைக்கப்பட்டது, அதேநேரம் புலிகளை முழு பயங்கரவாதிகள் என்று உலகம் முடிவு செய்திருந்தால் ஜெனீவா தாய்லாந்து நோர்வேக்கெல்லாம் ராஜதந்திரிகளுக்குரிய கெளரவத்துடன் அழைத்து பேசியிருக்காது. அவர்களிடம் அணு ஆயுதமோ ரசாயன ஆயுதங்களோ இருந்திருந்தால் கதை ஒருபோதும் அப்படி அமைந்திருக்காது. காலங்கள் சிறிது ஓடிவிட்டால் கண்முன்னே கண்டதெல்லாம் சிறிது மறந்து போய்விடுகிறது. அது மனித இயல்புதான். புலிகளிடம் அன்றைய போர் சூழலில் இலங்கை அரசைவிட வலுவான ஆயுதங்கள் ஆளணி இருந்திருந்தால் உலகம் தூர நின்று வேடிக்கைதான் பார்த்திருக்கும். பேச்சு வார்த்தைக்கு போக சொல்லி அழுத்தம் கொடுத்திருக்கும், அதற்கும் அணுஆயுத தயாரிப்புக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
  3. அவர்கள் பக்கம் இழப்பு என்றால் அவனிடமிருந்து வந்தோம் அவனிடமே போகிறோம் என்று சொல்லி தாளிப்பார்கள், அவர்கள் பக்கம் வெற்றி என்றால் அல்லாஹு அக்பர் என்று குமுறுவார்கள் காசா போரின்போது சின்வார் தளபதியாக நியமிக்கப்பட்டபோது அவர் சிங்கம் இஸ்ரேலால் அவரை நெருங்ககூட முடியாது என்று கதறினார்கள், எண்ணி மூன்றேநாளில் இஸ்ரேல் அவர் கதையை முடித்தபோது என்ன இழவை சொல்லி சமாளிக்குறது எண்டு தெரியாமல் இது ஒன்றும் இழப்பில்லை அவனிடமிருந்து வந்தோம் அவனிடமே போகிறோம் என்று சடைஞ்சார்கள், அப்போ காசாவில் மக்கள் சாகிறார்கள் ஐநா காப்பாத்து அல்லாஹ் காப்பாத்து என்று ஏன் கதறுகிறீர்கள் அவனிடம்தானே போகிறார்கள் என்று கேட்டேன், அதுக்கு செத்துபோன எங்கவீட்டு கிழவியிலிருந்து சித்தி பெரியம்மா வரை தோண்டி எடுத்து சிறப்பான தமிழில் திட்டினார்கள். சரி அவங்க மார்க்க கடமையைதானே செய்கிறார்கள் என்று பேசாமலே வந்துட்டேன். மக்கள் உயிர் இழப்பை கேலி செய்யும் எந்த நோக்கமும் இல்லை, ஆனால் மக்கள் இழப்பைபற்றி அவர்கள் கவலைபடுவது அவர்கள் பக்கம் அதிக இழப்பு என்றால் மட்டுமே மக்களை இழுத்து திசை திருப்புவார்கள். மற்றும்படி மற்றவர்களை கொன்றுவிட்டு இறைவன் பெரியவன் என்பதே கோஷமாக இருக்கும். எந்த ஒரு விஷயமும் தமக்கு சாதகமாக இல்லையென்றால் அப்படியே எந்த திசைக்கு வேணுமென்றாலும் மாற்றி உருட்டுவார்கள், உருட்டுவதில் இவர்களிடம் பிதாமகன் சூர்யா தோற்றுபோனார் என்றே சொல்லவேண்டும் .
  4. சர்வதேச விதிகளுக்கும் ஒப்பந்தங்களுக்கும் கட்டுப்படாத எந்த நாட்டிடமும் அணு ஆயுதம் இருப்பது இஸ்ரேல் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல உலகின் எந்த நாட்டுக்குமே ஆபத்தானது. ஆன்மீகம் என்ற பெயரில் பழமைவாத மத அரசியல் செய்யும் அவர்கள் தம்முடன் முரண்படும் எவருக்கெதிராகவும் அவர்களின் ஏக இறைவன் இத்தாலி இறைவன் பெயரால் இறைவன் நாடிவிட்டான் என்று சொல்லிவிட்டு அணு ஆயுதங்களை ஏவ துளிகூட தயங்கமாட்டார்கள். ஈரானின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதன் ஒருநாட்டின்மீது மேற்கொள்ளப்படும் அத்துமீறல் என்று ஒருபோதும் கொள்ள முடியாது , அவர்களை வழிக்கு கொண்டுவர பலநூறு சந்தர்ப்பங்களும் பல ஆண்டுகள் கால அவகாசமும் வழங்கப்பட்டும் எந்த பணிதலுக்கும் உடன்படாமல் பாலிஸ்டிக் ஏவுகணை நம்பியே வீம்பு செய்தார்கள், அதனால் இப்போது அவர்கள் எதிர்கொள்ளும் அழிவு பரிதாபத்திற்குரியதல்ல. ஈரானின் இழப்புக்களை பரிதாப கண்ணோடு நோக்குகிறவர்கள் ஒரு நிமிடம் கண்ணைமூடி இஸ்ரேலும் அமெரிக்காவும் இல்லையென்றால் இந்த மதவெறிக்கூட்டம் உலகம் முழுவதும் என்ன ரத்தவெறி ஆட்டம் ஆடும் என்பதை சிந்தையில் எடுத்து பார்க்காவிட்டால் எதிர்கொள்ளபோகும் காலத்தில் அவர்களின் சிரசும் இந்த மதவாத கால்பந்தாட்ட வீரர்களின் காலில் பந்தாய் உருள நிறையவே வாய்ப்பிருக்கு.
  5. நிறுத்தாமல் சென்ற ஒரு வாகன சாரதியின் தலையை குறிவைத்து துப்பாக்கிசூடு நடத்த இது போர் காலமும் அல்ல ,பெரும் போதைவஸ்துகூட்ட சுற்றிவளைப்பும் அல்ல, கண்டிப்பாக காவல்துறையின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது. அதேநேரம் ஒரு பதினேழு வயது சிறுவன் வண்டி ஓட்டியிருக்கிறான், அவனுக்கு சாரதி அனுமதி பத்திரம் கிடையாது, காசு கொடுத்து கொடுத்துதான் ஓடினான் என்று அவன் சித்தியே வாக்குமூலம் கொடுக்கிறார், 17 வயசுக்காரன்கிட்ட ஒரு வாகனத்தை கொடுத்தது யார்? யாருடைய வாகனம் அது? சாரதி அனுமதி பத்திரமும் இன்றி அதை ஓட்டும் வயசும் இன்றி லஞ்சம் கொடுத்து கொடுத்து வண்டி ஓட்டியிருக்கிறான் என்றால் என்றாவது ஒருநாள் எதிரே வரும் எத்தனையோபேரை கொல்லும் ஒரு அப்பட்டமான சட்டமீறலை செய்திருக்கிறான் என்பதை புரிந்துகொள்ளாமல் இதற்கு அவனின் சித்திவேறு நியாயம் கூறுகிறார். ஏற்றுக்கொள்ளமுடியாத நியாயங்கள் எந்த சபை ஏறி வாதிட்டாலும் நீதி கிடைக்காது. கொடுக்கவும் கூடாது.
  6. காலங்கள் ஓடிவிட்டது காட்சிகளும் மாறிவிட்டது. இறுதி யுத்தம் நடந்த வருடத்தில் 5 வயசு குழந்தையாக இருந்ததுக்கு இப்போ 22 வயசு வாலிப பருவம், அதற்கு இலங்கையில் என்ன நடந்தது என்றே தெரியாது எடுத்து சொல்லவும் சிங்கள படைகளுக்கும் நாலாம் மாடிக்கும் அஞ்சி எந்த உறவுகளுக்கும் துணிச்சல் இல்லை இன்றைய தலைமுறை ஓடி ஓடி இன்று பண்ணைக்கடலில் நடந்த சிங்க கொடிகளுடன் நடந்த படகுகளின் காணொலியை தரவேற்றி காசு பார்க்கிறார்கள். தமிழர் பிரதிநிதிகள் எனப்படுவோர் தமது வேலைகளில் பிஸி, இலங்கை பிரச்சனையில் பொறுப்புக்கூறல் என்று ஓரளவு நம்பிக்கை தந்த சர்வதேசமும் அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை கவனிக்கவே நேரமில்லாமல் நமது பிரச்சனையை ஏறக்குறைய மறந்துவிட்ட நிலமை. தாயகம் பற்றி பொங்கியெழுந்த புலம்பெயர் உறவுகளின் எண்ணிக்கையும் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனமாதிரி 95% பேர் எப்போவாச்சும் நேரம் கிடைச்சால் மட்டுமே இலங்கை பிரச்சனைபற்றி பேசும் நிலமை எவரும் இனப்பிரச்சனைபற்றி பேசுவதாய் காணோம் இன்றைய பிரச்சனை பற்றியே பெரும்பாலானோரின் கவலை. எந்த ஆட்சி மாறினாலும் சிங்களவன் தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதிலும் மத அடையாளங்களை நிறுவுவதிலும் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும் நிலை. கொழும்பிலிருந்து யாழுக்கும் யாழில் இருந்து கொழும்புக்குமென தமிழரும் சிங்களவரும் மாறி மாறி களியாட்டம். இனி, இலங்கை தமிழருக்கு இங்கே என்ன பிரச்சனை எதுக்கு குட்டையை குழப்புகிறீர்கள் என்று சிங்களவர்கள் அல்ல இன்றைய இளைய தமிழ் சமுதாயமே கேட்கபோகும் ஜீரணித்தே ஆகவேண்டிய கசப்பு உண்மையை காலம் வாயில் திணிக்கும் நிலை, மிக அருகில் உள்ளது , கண்டிப்பாக விழுங்கியே ஆகவேண்டிய பரிதாபம்தான் என் வசம்.
  7. யூடியூப் பேஸ்புக் இரண்டுமே பின் தொடர்பவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பகிர்பவர்களுக்கும் அலையும் கோஷ்தான், அடுத்தவனின் தனிப்பட்ட விஷயங்களில் நுழைந்து விமர்சனம், ஆய்வு வாய்வு செய்யும் அசிங்கம் பேஸ்புக்கிலேயே அதிகம். அதனால் பக்கங்கள் முடக்கப்படுவதும் பேஸ்புக்கில்தான் அதிகம். இந்த செய்தியை பகிர்ந்த பேஸ்புக்காரர் சமுதாயத்துக்கு ஆற்றிய அறிவுபூர்வமான தொண்டுதான் என்ன? ஒவ்வொருவரும் உங்கள் ஆதாயத்திற்காக ஏதோஒன்று பண்ணுகிறீர்கள் , உங்களின் அதே தொழிலை செய்யும் இன்னொருவரை விமர்சிக்க அதிகாரம் எங்கிருந்து பெற்றீர்கள்? பேஸ்புக் காரருக்கும் யூடியூப் காரருக்கும் உள்ள ஒரேயொரு வித்தியாசம் பேஸ்புக் காரர் அதனையே முழுநேர தொழிலாக செய்வதில்லை, யூடியூப் காரர் அதுவே தொழிலாக வைத்திருக்கிறார்கள், அது வருத்ததுக்குரிய விஷயம் மட்டுமல்ல எதிர்காலம் குறித்த அச்சம் தரும் தொழிலும்தான்.
  8. இலங்கை நிலவரம் பற்றியதுதான் செய்தி, இலங்கையில் மருத்துவராக வருவதற்கு சாதாரண சித்தி போதுமா? இது தெரிஞ்சிருந்தா நானும் எப்பவோ டாக்டர் சுங்கப்பா ஆகியிருக்கலாம்.
  9. பெண் நிர்வாணபடத்தை ஆண் பகிர்ந்தாலோ, அல்லது ஆண் நிர்வாணபடத்தை பெண் பகிர்ந்தாலோ பெயர் அடிவாங்க போவது பெண்ணோடதுதான். ஒன்று இவவின் அந்த படத்தைதான் அவன் வாட்சப்பில் போட்டவனாம் என்று பேசும், அல்லது இவவுக்குத்தான் அந்த படத்தை அவன் அனுப்பினவனாம் என்று பேசும். கத்திமீது அப்பிள் விழுந்தாலும் அப்பிள்மீது கத்தி விழுந்தாலும் சேதம் என்னவோ அப்பிளுக்குத்தான் என்ற நிலையில் இன்றுவரை இருக்கிறது யாழ் மண்ணின் பெண் உரிமை.
  10. துணையை இழந்து போவதென்பது மொத்த உலகில் பாதி இருண்டுபோன துயரம், துயரில் மூழ்கியிருக்கும் மோகன் அண்ணா குடும்பத்தினர் அனைவருக்கும் மனவுறுதி வேண்டியும் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்தனைகள்.
  11. மன்னாரில் அடிக்கடி இந்து கிறிஸ்தவ உரசல்கள் நடைபெறுகின்றன, முன்பும் வளைவு வைத்ததில் முரண்பாடு ஏற்பட்டதாக ஒரு ஞாபகம். போராட்ட காலத்தில் எந்தவித பாகுபாடின்றி இணைந்திருந்த இனம் இன்று இந்தியாவில் உள்ளதுபோல், கடத்திக்கொலை, அடித்து கொலை, வெட்டிக்கொலை போதை வியாபாரிகளிடை மோதல்,கஞ்சா பொதிகளுடன் கைது, இந்து கிறிஸ்தவ மோதல் என்று ஆரம்பித்திருக்கிறது. ஒன்றாக இருந்த ஒரு இனத்திற்குள் இந்த சிந்தனையை விதைத்ததில் மதமாற்ற அல்லுலோயா கோஷ்டிக்கு பெரும்பங்குண்டு. ஒரு இனத்திற்குள்ளேயே மோதிக்கொண்டு கிடக்க, மன்னாரின் பெரும்பகுதி இஸ்லாமியர்களிடம் பறிபோய் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஒரு சில வருடங்களில் மன்னார் முழுமையாக பறிபோகும். நல்லாயிருந்து நாசமா போங்க.
  12. பொருளாதாரத்திலும் ஆயுத வலிமையிலும் மிகவும் பின் தங்கிய ஒரு நாட்டை பெரும் போர் செய்து கைப்பற்றியமாதிரி இவர்கள் பண்ணும் அலப்பறையை என்ன சொல்ல? வெனிசுலாவை ஆக்கிரமிக்க ட்ரம்ப் சொன்ன பிரதான காரணம் போதைபொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல்தான், ஆனால் தென்னமெரிக்காவிலேயே போதைபொருள் வர்த்தகத்திலும், அமெரிக்காவிற்குள் ஆட்கடத்தலை மேற்கொள்வதிலும் முன்னணியில் நிற்பது மெக்சிக்கோதான். போதைபொருள் வர்த்தகத்தில் ஈவிரக்கமற்ற மாபியாக்களையும் கொண்டிருப்பது அமெரிக்க எல்லையை பகிர்ந்து கொள்ளும் மெக்சிக்கோதான், அதற்கடுத்தது பிரேசில். அங்குபோய் ஆக்கிரமித்து அந்நாட்டு தலைவரை அமெரிக்கா கொண்டுவர அமெரிக்க அதிபர் நினைக்கவில்லை காரணம் இரண்டேதான், வெனிசுலா அளவிற்கு அங்கு எண்ணெய் வளமில்லை, ஒருகாலம் மெக்சிக்கோவில் எண்ணெய் வளம் இருந்தது அதையே பின்னாட்களில் அபகரித்து அமெரிக்கா லாஸ் ஏஞ்சல் எனும் பெயரில் தன்னோடு இணைத்துக்கொண்டது. இரண்டாவது மெக்சிகோ அமெரிக்காவை எதிர்த்து சுய கெளரவ ஆட்சி நடத்தவில்லை. அமெரிக்காவை எதிர்த்து ஆயுத அரசியல் பொருளாதார போர் செய்தால் உலகின் எந்த நாட்டையும் போர் செய்து முடக்க பார்க்கிறது முடியாவிட்டால் பொருளாதார தடை விதித்து ஏழ்மைக்கு தள்ளுகிறது. ஈராக்,கியூபா ஆப்கான் வடகொரியா,லிபியா ஈரானுக்கு அதுதான் நடந்தது அடுத்து வரும் காலங்களில் அதுதான் எதிர்கால வரலாறாக இருக்கும். இந்த பரிதாபமான நிலைகளுக்கு பின்னால் ஒரு ஒற்றுமையிருக்கிறது இந்த பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளின் பின்னாலும் உதவுகிறோம் என்று சொல்லி நிற்பது ரஷ்யாவும் சீனாவும்தான், அமெரிக்க எதிர் வீரவிளையாட்டுக்கு இவர்களை உசுப்பேத்திவிட்டு மேற்குலகின் கை ஓங்கிவிட்டால் சத்தமில்லாமல் தங்களை நம்பியவர்களை அம்போ என்று கைவிட்டு கழண்டுவிடும், அதுதான் ஈராக், சிரியாவில் நடந்தது. இவர்கள் அமெரிக்காவின் ஏகாதிபத்திய கொடூர சிந்தனைகளைஅவிட கேவலமானவர்கள். பொருளாதாரத்திலும் ஆயுதவலிமையிலும் உலகின்மீது தனது பலத்தை பிரயோகிக்கும் அமெரிக்காவை ஓரளவேனும் வழிக்குகொண்டுவரவேண்டுமென்றால், ஏதாவது ஒரு முனையில் சீனாவும் ரஷ்யாவும் இணைந்து அமெரிக்காவிற்கு ஆயுத ரீதியில் ஒரு பெரும் தோல்வியை வழங்கியாகவேண்டும், அதற்கு அவர்கள் ஒருபோதும் தயாராக இல்லை, முடிந்தவரை தம்மை நம்பியவர்களை பயன்படுத்திவிட்டு அமெரிக்கா வாளோடு வந்தால் சத்தமில்லாமல் நழுவி செல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். நவீன உலகம் தமது பொருளாதாரம் பாதிக்கப்படாமலே எதையும் செய்ய நினைக்கிறது. வெனிசுலாவைவிட அமெரிக்காவை நேரடியாகவே அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் ஈரானுக்குள்ளும், வடகொரியாவுக்குள்ளும் நுழைந்து அந்தநாட்டு தலைவர்களை தூக்கிக்கொண்டு அமெரிக்காவுக்கு செல்லும் தைரியம் அமெரிக்காவுக்கு இல்லை அவர்களின் ஆயுத வலிமை அமெரிக்காவுக்கு அந்த தைரியத்தை கொடுக்கவில்லை, அதனால் பொருளாதார ரீதியாக முடக்குகிறது. எம் கை கால்கள் உறுதியாக இருந்தால் எம் எதிரிகூட எம்முடன் சிரித்துக்கொண்டுதான் பேசுவான், பலவீனமானவன் என்று தெரிந்துவிட்டால் பயந்தாங்கொள்ளிகூட நம்மை அடிக்க பார்ப்பான். உலக வளங்களை சுரண்டும் அமெரிக்காவின் காலம் காலமான தலைமுறையின் புது வாரிசு ட்ரம்ப், வந்த வரத்தில் கிரீன்லாந்தை அபகரிக்க பார்த்தார், முடியவில்லை, கனடாவை அமுக்க பார்த்தார் அதுவும் கைகூடவில்லை, தலீபான்களிடம்கூட தாம் விட்டு சென்ற ஆயுதங்களுக்கு காசு கேட்டார் காமெடியா போச்சு, பின்பு உலக வரிகளில் கை வைத்தார் அடுத்ததாய் இப்போ வெனிசுலா.
  13. முன்பு வாடகை கார்கள், பீட்சா டெலிவரி, உணவு விடுதிகளில் காசு கொடுக்காமல் விட பாலியல் சீண்டல்கள் குற்றச்சாட்டை ஒரு ஆயுதமாக பயன்படுத்தியிருக்கிறார்கள், குறிப்பாக லத்தீன் மற்றும் கறுப்பின ஒருசில பெண்கள்தான் இதில் ஈடுபடுவது அதிகம், தாங்களாகவே கையை பிடித்துவிட்டு காசு வேணுமா இல்லை ஏற்கனவே நமக்கிடையே வாய்க்கால் தகராறு இருக்கும்போது நீ கையை பிடிச்சு இழுத்தாய் என்று பொலிசுக்கு அடிக்கவா என்று கேக்க, மானம் மருவாதை பயம் கருதி ஆத்தா காசு வேணாம் ஆளைவிடுனு ஓடிதப்பிய குறித்த துறையில் பணியாற்றிய தமிழர்கள் அதிகம். அதேநேரம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட/ஈடுபடும் பொறுப்பான பதவிகள், தொழில்களில் உள்ள நம்மவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.