-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
பொருளாதாரத்திலும் ஆயுத வலிமையிலும் மிகவும் பின் தங்கிய ஒரு நாட்டை பெரும் போர் செய்து கைப்பற்றியமாதிரி இவர்கள் பண்ணும் அலப்பறையை என்ன சொல்ல? வெனிசுலாவை ஆக்கிரமிக்க ட்ரம்ப் சொன்ன பிரதான காரணம் போதைபொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல்தான், ஆனால் தென்னமெரிக்காவிலேயே போதைபொருள் வர்த்தகத்திலும், அமெரிக்காவிற்குள் ஆட்கடத்தலை மேற்கொள்வதிலும் முன்னணியில் நிற்பது மெக்சிக்கோதான். போதைபொருள் வர்த்தகத்தில் ஈவிரக்கமற்ற மாபியாக்களையும் கொண்டிருப்பது அமெரிக்க எல்லையை பகிர்ந்து கொள்ளும் மெக்சிக்கோதான், அதற்கடுத்தது பிரேசில். அங்குபோய் ஆக்கிரமித்து அந்நாட்டு தலைவரை அமெரிக்கா கொண்டுவர அமெரிக்க அதிபர் நினைக்கவில்லை காரணம் இரண்டேதான், வெனிசுலா அளவிற்கு அங்கு எண்ணெய் வளமில்லை, ஒருகாலம் மெக்சிக்கோவில் எண்ணெய் வளம் இருந்தது அதையே பின்னாட்களில் அபகரித்து அமெரிக்கா லாஸ் ஏஞ்சல் எனும் பெயரில் தன்னோடு இணைத்துக்கொண்டது. இரண்டாவது மெக்சிகோ அமெரிக்காவை எதிர்த்து சுய கெளரவ ஆட்சி நடத்தவில்லை. அமெரிக்காவை எதிர்த்து ஆயுத அரசியல் பொருளாதார போர் செய்தால் உலகின் எந்த நாட்டையும் போர் செய்து முடக்க பார்க்கிறது முடியாவிட்டால் பொருளாதார தடை விதித்து ஏழ்மைக்கு தள்ளுகிறது. ஈராக்,கியூபா ஆப்கான் வடகொரியா,லிபியா ஈரானுக்கு அதுதான் நடந்தது அடுத்து வரும் காலங்களில் அதுதான் எதிர்கால வரலாறாக இருக்கும். இந்த பரிதாபமான நிலைகளுக்கு பின்னால் ஒரு ஒற்றுமையிருக்கிறது இந்த பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளின் பின்னாலும் உதவுகிறோம் என்று சொல்லி நிற்பது ரஷ்யாவும் சீனாவும்தான், அமெரிக்க எதிர் வீரவிளையாட்டுக்கு இவர்களை உசுப்பேத்திவிட்டு மேற்குலகின் கை ஓங்கிவிட்டால் சத்தமில்லாமல் தங்களை நம்பியவர்களை அம்போ என்று கைவிட்டு கழண்டுவிடும், அதுதான் ஈராக், சிரியாவில் நடந்தது. இவர்கள் அமெரிக்காவின் ஏகாதிபத்திய கொடூர சிந்தனைகளைஅவிட கேவலமானவர்கள். பொருளாதாரத்திலும் ஆயுதவலிமையிலும் உலகின்மீது தனது பலத்தை பிரயோகிக்கும் அமெரிக்காவை ஓரளவேனும் வழிக்குகொண்டுவரவேண்டுமென்றால், ஏதாவது ஒரு முனையில் சீனாவும் ரஷ்யாவும் இணைந்து அமெரிக்காவிற்கு ஆயுத ரீதியில் ஒரு பெரும் தோல்வியை வழங்கியாகவேண்டும், அதற்கு அவர்கள் ஒருபோதும் தயாராக இல்லை, முடிந்தவரை தம்மை நம்பியவர்களை பயன்படுத்திவிட்டு அமெரிக்கா வாளோடு வந்தால் சத்தமில்லாமல் நழுவி செல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். நவீன உலகம் தமது பொருளாதாரம் பாதிக்கப்படாமலே எதையும் செய்ய நினைக்கிறது. வெனிசுலாவைவிட அமெரிக்காவை நேரடியாகவே அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் ஈரானுக்குள்ளும், வடகொரியாவுக்குள்ளும் நுழைந்து அந்தநாட்டு தலைவர்களை தூக்கிக்கொண்டு அமெரிக்காவுக்கு செல்லும் தைரியம் அமெரிக்காவுக்கு இல்லை அவர்களின் ஆயுத வலிமை அமெரிக்காவுக்கு அந்த தைரியத்தை கொடுக்கவில்லை, அதனால் பொருளாதார ரீதியாக முடக்குகிறது. எம் கை கால்கள் உறுதியாக இருந்தால் எம் எதிரிகூட எம்முடன் சிரித்துக்கொண்டுதான் பேசுவான், பலவீனமானவன் என்று தெரிந்துவிட்டால் பயந்தாங்கொள்ளிகூட நம்மை அடிக்க பார்ப்பான். உலக வளங்களை சுரண்டும் அமெரிக்காவின் காலம் காலமான தலைமுறையின் புது வாரிசு ட்ரம்ப், வந்த வரத்தில் கிரீன்லாந்தை அபகரிக்க பார்த்தார், முடியவில்லை, கனடாவை அமுக்க பார்த்தார் அதுவும் கைகூடவில்லை, தலீபான்களிடம்கூட தாம் விட்டு சென்ற ஆயுதங்களுக்கு காசு கேட்டார் காமெடியா போச்சு, பின்பு உலக வரிகளில் கை வைத்தார் அடுத்ததாய் இப்போ வெனிசுலா.
-
கனடாவில் சிகிச்சைக்கு சென்ற யுவதியிடம் தமிழ் மருத்துவர் பாலியல் சேட்டை..!
முன்பு வாடகை கார்கள், பீட்சா டெலிவரி, உணவு விடுதிகளில் காசு கொடுக்காமல் விட பாலியல் சீண்டல்கள் குற்றச்சாட்டை ஒரு ஆயுதமாக பயன்படுத்தியிருக்கிறார்கள், குறிப்பாக லத்தீன் மற்றும் கறுப்பின ஒருசில பெண்கள்தான் இதில் ஈடுபடுவது அதிகம், தாங்களாகவே கையை பிடித்துவிட்டு காசு வேணுமா இல்லை ஏற்கனவே நமக்கிடையே வாய்க்கால் தகராறு இருக்கும்போது நீ கையை பிடிச்சு இழுத்தாய் என்று பொலிசுக்கு அடிக்கவா என்று கேக்க, மானம் மருவாதை பயம் கருதி ஆத்தா காசு வேணாம் ஆளைவிடுனு ஓடிதப்பிய குறித்த துறையில் பணியாற்றிய தமிழர்கள் அதிகம். அதேநேரம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட/ஈடுபடும் பொறுப்பான பதவிகள், தொழில்களில் உள்ள நம்மவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.
-
டக்ளஸ் தேவானந்தாவின் கைதுக்கு பின்னால்…..!
நீங்கள் சொல்வது சரிதான், டக்ளஸ்மேல யாரும் கை வைத்தால் பொங்கியெழும் நிலையில்தான் வடபகுதி மக்கள் உள்ளனர். அடுத்த தேர்தலில் என்பிபி மட்டுமல்ல ஏனைய தமிழ்கட்சிகளும் ஈபிடிபியிடம் தோற்றுபோவது உறுதி. 90 களிலிருந்து மக்களின் அமோக ஆதரவுடன் ஒவ்வொரு தேர்தலிலும் அனைத்து தொகுதிகளிலும் வென்று வடமாகாணத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த டக்ளசின் வாக்குவங்கி வலிமை பற்றி தெரியாமல் என்பிபி நடந்து கொள்கிறது. ஏதோ போன தேர்தலில்தான் அநுர அலை கொஞ்சம் ஓவராக அடித்ததால் டக்ளசின் வாக்கு வங்கிக்குள்ள கொஞ்சம் தண்ணி போயிரிச்சு, அடுத்த தேர்தலில் அந்த நிலை வராது.
-
டக்ளஸ் தேவானந்தாவின் கைதுக்கு பின்னால்…..!
டக்ளஸ் விசுவாச கட்டுரையாளருக்கு இப்போ என்ன வேணும்? டக்ளஸ் எந்த தவறுமே செய்யாத யோக்கியர்னு சொல்லணும் அவ்வளவுதானே? நேரடியா கெஞ்சி கேட்டால் உங்கள் மனசை சந்தோசபடுத்தி பார்க்கவென்றாலும் சொல்லிட்டு போறோம் அதுக்கு எதுக்கு இவ்வலவு நீளமா மூச்சு வாங்க வாங்க எழுதிக்கொண்டு. ஆனா அந்த யோக்கிய சிகாமணிபற்றி சிறப்பான கட்டுரை வரைந்த விசுவாசியிடம் இரண்டே இரண்டு கேள்வி ஓடாமல் ஒளியாமல் பதில் சொன்னால் கோடி புண்ணியம் அது, பயங்கரவாதங்களை அடியோடு வெறுக்கும் பெருந்தகை டக்ளஸ் அவர்கள், அரசுகள் செய்வது பயங்கரவாதம் என்று தெரிந்தும் எப்படி அமைச்சராக பயங்கரவாத அரசுகளில் இருந்தார்? பயங்கரவாதம் செய்யும் அரசிடமிருந்து ஆயுதம் பெற்றால் டக்ளஸ் அப்போ யார்?
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
1954 வரை கிரிமியா ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே இருந்தது என்று தரவுகள் கூறுகின்றன. பின்பு குருஷேவினால் உக்ரேனுடன் இணைக்கப்பட்டதாகவும், சோவியத் உடைவின் பின்னர் உக்ரேனிடம் இருந்த கிரிமியா மேற்குலகினூடான உக்ரேனின் நெருக்கத்தின் காரணமாக கருங்கடலில் ரஷ்யாவின் ஆதிக்கம் கையைவிட்டு போய்விடுமோ என்ற அச்சமும் கனிமங்களின் சுரண்டலும் கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமிக்க காரணங்களில் ஒன்றாக இருந்தது என்பது நான் சொல்லி கிருபன் அறியும் நிலையில் இருக்காது என்று நினைக்கிறேன், அதன் தொடர்ச்சியே மறைமுக மேற்குலகுக்கெதிராக ரஷ்யா தொடுத்த கீவ் நோக்கிய ரஷ்யாவின் படையெடுப்பும் என்பது பின்னாளில் அனைவரும் அறிந்த வரலாறு. உக்ரேன் ரஷ்ய பலத்துடன் ஒப்பிடும்போது நோஞ்சான்தான், ஆனால் உக்ரேனுக்கு பின்னாலிருந்த மேற்குலகும் நேட்டோ ஆதரவும் நிச்சயமா நோஞ்சான்கள் இல்லை என்பது நம் அன்னைவரையும்விட ரஷ்யாவுக்கு நல்லாவே தெரியும். அதுவே போராக வெடித்தது. ஆக்கிரமிப்புகள் நியாயப்படுத்த முடியாதவை, இங்கே காரணங்களைதான் சொல்கிறேன், மற்றும்படி ரஷ்ய &உக்ரேன் பக்கம் நிக்கவோ நியாயப்படுத்தவோ எந்த நிமிடமும் முயற்சிக்கவில்லை, ஒரு இன ஆக்கிரமிப்புபோரில் இருவருமே எமக்கெதிராய் நின்றவர்கள். இந்த நான்கு சந்தர்ப்பங்களிலும் 1987ல் வந்த உடன்படிக்கையும் அதன் பின்னரான புலிகள் நிலைப்பாடு பற்றியும் சிலமாதங்களின் முன்னர் ஏற்கனவே நீண்ட விளக்கம் ஒன்றை உங்களுக்கு தந்திருந்தேன் அதனை மீண்டும் பதிவு செய்ய விரும்பவில்லை நீங்கள் விரும்பினால் தேடி பிடித்து சரிபார்த்து கொள்ளுங்கள். அப்புறம் 1990,94,2002ல் எந்த வகையான சிங்கள அரச உள சுத்தியான பாலைபழம்போன்ற தீர்வுகள் தமிழர்களை நோக்கி நெருங்கி வந்தன , எப்படி அநியாயமாக அந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டோம் என்பதை உங்களிடமிருந்து அறியவிரும்புகிறேன்.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
உக்ரேன் என்பது அனைத்து வளங்களையும் சொந்த அரசியலையும் நாடு மொழி ராணுவம் ஆட்சியென்று அனைத்தையும், உலகதேவையின் பெரும்பங்கை கொண்ண்ட தானியங்கள், எண்ணெய்வளம், கனிமங்கள், பல்கலைகழகங்கள்,உலகத்திலேயே பெரிய சரக்கு விமானத்தை கொண்ட பெருமை ஆயுத உற்பத்தி என்று பலவற்றை கொண்டு தனியாக இயங்கியநாடு. அத்தனையும் இருந்தும் தனது பாதுகாப்பு என்று சொல்லிக்கொண்டு வேற்று வல்லரசு சக்திகளுடன் இணைந்து ரஷ்யாவை எதிர்க்க கிளம்பியதால்தான் இந்த போரே ஆரம்பித்தது. தமிழர்கள் இத்தனை வசதிகள் தம் வசம் இருந்தும் இந்திய வல்லரசுடனும் உலக வல்லரசுகளுடனும் இணைந்து இலங்கையை அழிக்க நினைத்து இறுதியில் தோற்று போனார்களா? அதைதான் கண்ணாடிமுன் நின்றூ கேட்கவேண்டுமென்று நீங்கள் அர்த்தப்படுத்துகிறீர்களா? உக்ரேன் மேற்குலகுடன் இணைந்து ரஷ்யாவை மிரட்ட வேண்டுமென்று போர் செய்த நாடு, தமிழர்கள் எவர் உதவியும் இன்றி சிங்களவனிடம் அடிவாங்கி செத்ததால் வேறுவழியின்றி போர் செய்த இனம் இந்த இரு பிரிவுகளையும் ஒப்பிட்டுபார்க்க எந்தரீதியிலான பெளதீக அறிவு உங்களை தூண்டியது? உக்ரேன் சொந்தநாடு இருந்தும் போருக்கு வழி தேடிய இனம், தமிழர்கள் வேறி வழி இல்லாததால் சொந்தநாடுவேண்டி போராடி தோற்றுபோன இனம் இந்த இரண்டையும் ஒப்பிட்டு எகத்தாளமாய் சிரிக்க உங்கள் ஒரு சிலரால் முடிகிறது அது உலகின் பார்வைக்கு கண்டிப்பாக ஏளனமாய் அமையாது. 1958 ,1977, 1983 வரை எந்த தமிழர்களும் ஆயிரக்கணக்கில் ஆயுதம் ஏந்தி சிங்களவனுக்கெதிராய் போராட நினைத்ததில்லை, அவன் அரசியல் யாப்பையும் ஆயுதபடைகளையும் ஏற்றும், சொல்லபோனால் படைபலத்தை வைத்து சிங்களவன் எங்களை நீங்கள் வேறு நாங்கள் வேறூ என்று மிதி மிதியென்று மிதித்தபோதும் துடைத்துவிட்டு காவல்துறை ராணுவம் கடற்படை விமானபடை என்று சிங்களவனின் படைகளில் சேவையாற்றியும் வாழ்ந்தார்கள். கல்வி சுகாதாரம் பாதுகாப்பு, மொழி, அரசியல் என்று அனைத்திலும் வலிகளை மட்டுமே அவன் எமக்கு தந்தாலும்முடிந்தவரை சிங்கள தேசத்துடன் முரண்படாமலே வாழ நினைத்தார்கள். 83ல் ஜேஆர் எனும் மனிதகுலவிரோதி இலங்கையில் இனக்கலவரம் என்ற ஒன்றை உருவாக்காமல் விட்டிருந்தால் தமிழர் ஆயுத போராட்ட இயங்கங்களின் உறுப்பினர் தொகை இரண்டு இலக்கங்களுக்கிடையே மட்டுமே இருந்து தானாகவே காணாமல் போயிருக்கும். லட்சக்கணக்கான தமிழர்கள் ஆயுதபோராட்ட இயக்கங்களுக்கு பின்னால் போக வைத்த பெருமை சிங்கள இனத்தையும் ஆட்சியாளர்களையுமே சேரும். உக்ரேன் அப்படியா வாழ்ந்துவிட்டு நேட்டோவுடன் இணைந்து ரஷ்யாவை எதிர்த்து போர் செய்து பேரழிவின் முடிவில் போரை நிறுத்த சம்மதம் தெரிவித்தது? எங்கள் காயங்கள் உங்களுக்கு சிரிப்புக்கிடமானதாக தெரிந்தால் விலகி நில்லுங்கள் அதனை பார்த்து கைகொட்டி சிரிக்காதீர்கள், பிற விலங்குகள் குட்டி ஈன்று கொண்டிருக்கும்போதே தன்பசியாற தாயின் பிறப்புறுப்பிலிருந்து இழுத்தெடுத்து உண்ணுமாம் ஹயினாஸ் எனும் விலங்கு அதுபோல் எமக்கு வசதியென்றால் எது வேண்டுமென்றாலும் பேசலாமென்ற மனபாங்கில் பேசி பழகுவான் மனிதன். அது விலங்குகள் பரவாயில்லை அப்படித்தான் அவற்றின் இயற்கை சுழற்சி இருக்கும், நாம் அப்படியா? அழகானமனிதர்கள். அழகான மனிதர்கள் அந்த கொடூர இனத்தில் சேராமல் சுயமாக சிந்தித்து வாழ்ந்தால் அதில் தவறென்று எதுவும் இருக்க போவதில்லை.
-
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
தமிழக அரசியல் தலைவர்கள் குரல்கொடுத்தால் இலங்கைக்கு அழுத்தம் ஏற்படும் என்ற ஈழதமிழரின் காதுல பூ சுத்தும் கதைகள் இன்னும் தொடருது என்றால் இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அவசரமா அரசியல் செய்ய வேறு எதுவும் கிடைக்கவில்லையென்றே அர்த்தம். ஆனால் உங்கள் துரதிர்ஷ்டம் நீங்கள் சுத்தும் பூவை ஏற்க பெரும்பாலான ஈழதமிழர்களின் காதுகள் தயாராக இல்லை என்பதே யதார்த்தம்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
பாசத்தோடு அவர்களை அழைத்தால் மட்டும் போதாது, எந்தவித பொருளாதார கல்வி வேலைவாய்ப்பு வதிவிடங்கள் இல்லாத மக்களுக்கு இதெல்லாம் ஏற்படுத்தி தர சுமந்திரன் ஐயா தயாராவும் இருக்கணும். இலங்கையின் பொருளாதாரத்தின் உயிர்நாடியே தேயிலை ஏற்றுமதிதான், தேயிலை தோட்ட தொழிலை மலையக தமிழரை தவிர இலங்கயில் வேறு எந்த பிரிவினரும் தேடி சென்று செய்யபோவதில்லை தேடி போனாலும் அவர்களால் அரைவயிறு கஞ்சியுடன் அடுத்து மாற்று துணியும், நாள்முழுக்க உழைத்துவிட்டு வீட்டுக்கு போனால் கால்நீட்டிக்கூட படுக்க முடியாத அளவிற்கு லயன் வீட்டு வாழ்க்கையுடனுமோ வாழ முடியாது. அப்படி எவரும் இலகுவாக செய்யமுடியாத ஆனால் இலங்கைக்கு காசை கொட்டும் ஒரு தொழிலை செய்யும் மக்கள் கூட்டத்தை வேறு இடங்களில் குடியேற விட்டுவிட்டு முதுகில் கூடையை கட்டிக்கொண்டு தேயிலை கொழுந்து பறிக்க சிங்களவன் தயாரா இருப்பான்னா நினைக்கிறீங்க? எக்காரணம் கொண்டும் அந்த மக்களை அந்த நிலத்தைவிட்டும் நகர தொழிலை விட்டும் சிங்களவன் ஒருபோதும் அனுமதிக்கமாட்டான். வேண்டுமென்றால் ஒரு சில குடும்பங்கள் இடம் பெயரலாம். நிலசரிவில் பாதிக்கப்பட்டு வசிப்பிடம் இல்லாமல் நிப்பது மலையக தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர் முஸ்லீம்களும் அடங்கும். மலையக மக்கள் ஏறக்குறைய இருநூறு வருடங்களாய் வாழ்ந்த புவிசார்பை விட்டு நீங்கமறுத்தால், அங்கு பாதிக்கப்பட்ட சிங்களவரும் முஸ்லீம்களும் மலையக மக்கள் தமிழர்பகுதியில் குடியேறலாம் என்றால் நாங்கள் மட்டும் ஏன் அங்கு குடியேற கூடாது என்று கேள்வி எழுப்புவார்கள், அவர்களுக்கு சிங்கள அரசுகளும் எதிர்கட்சி அமைப்புகளும் முடிந்தவரை உதவி செய்தே ஆவார்கள், ஆனால் தமிழர்களுக்கு அதனை எதிர்பார்க்க முடியாது. அப்போது நிலமை சும்மாபோன தேரை சுமந்திரன் சொரிஞ்சுவிட்டு நடு ரோட்டில இழுத்து விட்டமாதிரி ஆகும் நிலமை.சுமந்திரன் கற்றறிவில் மேலானவரா இருக்கலாம், ஆனால் பட்டறிவில் சுத்த ஞான சூனியம். அதற்கப்பால் வடகிழக்கு மண்ணில் அவர்கள் குடியேறுவதில் எந்த தவறும் இல்லை, ஆனால் குடியேறவிட்டுவிட்டு இவங்கள் ஏசி காரில் தங்கட அலுவல்களை பாத்துக்கொண்டு திரிவார்கள், வாக்களித்த தமிழர்களைபற்றியே நினைக்காத இந்த தத்தி தலைவர்கள் வாழ்வோடு தினமும் போராடும் அந்த மக்கள் தம் காலில் நிக்கும்வரை துணையாக நிப்பார்கள் என்றா நினைக்கிறோம்? அடுத்து பார்க்கவேண்டிய விடயம், ஏற்கனவே கிளிநொச்சி வன்னி, யாழ்ப்பாணத்தில் மலையக மக்கள் வாழ்ந்தார்கள்தான், அவர்களை வடகிழக்கு சமூகம், தோட்ட வேலைக்கும், தேத்தண்ணி கடையில் கிளாஸ் கழுவுற வேலைக்கும், பண்ணைகளை கவனிக்கவும், மேலே ரசோதரன் குறிப்பிட்டதுபோல் மனித மல வண்டிகளை தள்ளுற வேலைகளுக்கும், லொறியில் இருந்து சாமான் இறக்குற வேலைக்கும் அமர்த்தி இன்று மலையக மக்கள் அரசிடம் இருந்து பெறும் மாத வருவாயில் பாதிகூட வருஷ வருவாயாக கொடுக்காது, ஒரு வேட்டி சேலை, ஒரு சில ஆயிரம் அவர்களின் இரத்தத்தை உறிஞ்சியதுக்கு கூலியாக கொடுத்து போதாக்குறைக்கு வீட்டுக்கு வெளியே நிக்க வைத்தும் , வயசு முதிர்ந்தவர்கள் பெண்களாக அவர்கள் இருந்தாலும் மரியாதையே துளியும் கொடுக்காமல் ஒருமையில் வாடா போடி என்று அழைத்தும் அவமானபடுத்தியும் மனித குலத்தில் என்னமோ அவர்கள் இவர்களுக்கு சேவகம் செய்ய பிறந்தவர்கள் போல் நடத்தும் அடிமைதன வாழ்வை வடக்கு கிழக்கில் பெறுவதைவிட சொந்த நிலத்தில் தமக்கு தெரிந்த தொழிலை செய்து வாழ்வதே அவர்களுக்கு சுய கெளரவம். வடக்கு கிழக்கில் குடியேறிய மலையக மக்கள் இன்றுவரை தமது சொந்த உழைப்பில் கல்வி பொருளாதாரத்தில் முன்னேறி வெற்றிபெற்ற தமிழர்களாக வாழ்ந்த ஒரு குடும்பத்தை கண்டதுண்டா? அதற்கு பிளடி வடகிழக்கு தமிழன் அவர்களை அனுமதித்ததுண்டா? மலையமக்கள் தொழிலை பார்க்கும் இடத்திற்கு செல்லகூடிய வகையில் பாதுகாப்பான இடங்களில் குடியேறுவதே சிறப்பானதாக இருக்கும். மறுபார்வையில் மலையக எம் தமிழ்மக்கள் தமது இடத்தைவிட்டு லட்சங்களில் வெளியேறினால் தமிழர்கள் வாழ்ந்த அப்பிரதேசம் முற்றுமுழுதாக சிங்கள முஸ்லீம்களால் நிரப்பபட்டுவிடும், வடக்க்கு கிழக்கில் எம் நிலங்களை பறிகொடுத்தது போதாதென்று இலங்கை முழுவதும் தமிழர் இருப்பை முற்றுமுழுதாய் கைவிட்டு போகவேண்டுமா? நாலு நல்ல வார்த்தையா பேசி பழகு சுமந்து.
-
யாழ். சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து பாராளுமன்றம் வந்தவர் இன்றுவரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்ய செல்லவில்லை - இளங்குமரன்
இவர்தான் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒருமுறை வடக்குக்கு ஒதுக்கப்பட்ட பணம் பயன்படுத்தப்படாமல் திரும்பி சென்றது இதுகளை எல்லாம் எலெக்சனில் வென்று மாற்றி காட்டோணும் எண்டு பேசியதாக நினைவு இப்போ இவரே வடக்குக்கு பணம் வேண்டாம் எங்கிறார். கடந்த தேர்தலில் வடக்கில் அதிக ஆசனங்களை வென்றது தேசிய மக்கள் சக்தி அவர்களிடம் பணத்தை கொடுக்காமல் யாரிடம் கொடுப்பார்கள்? ஓரிருவாரங்கள் முன்னர்தான் தேசிய தலைவருக்கும் மாவீரர்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன் என்று பாராளு மன்றத்தில் குதியோ குதியெண்டு குதிச்சார் இப்போ அதே வாயால தலைவரையும் போராளீகளையும் மக்களையும் கொன்று குவித்தவர்களை ராணுவவீரர்கள் என்று அவர்களை மரியாதையாக அழைக்கோணும் எண்டுறார். ஒரு தொகுதியில் மாத்திரம் வென்ற இவர் முழு வடக்குக்கும் பணம் தேவையில்லை என்று சொல்ல யாரிடமிருந்து அதிகாரத்தை பெற்றார்? அத்துடன் அநுர ஒருதடவை யாழ்வந்து நகரசபை கூட்டத்தில் கலந்து கொண்டபோது தையிட்டியில் விகாரை அமைத்தது சரி அதை வரவேற்கிறோம் அகற்ற தேவையில்லைஎன்று அர்ச்சுனா கூறியது காணொலி பதிவாக வந்தது. இந்த மூன்று விஷயங்களுமே கடந்தகால ஆட்சியாளர்கள் செய்ய நினைத்த ஒன்று, அர்ச்ச்சுனாவை உள்ளே போட்டபோது நாமல் ஓடி வந்தார் இப்போலாம் அரசல் புரசலாக அர்ச்சுனா நாமலின் பினாமி என்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தி உலாவருகிறது , அறிஞ்சு தெரிஞ்சவனுகதான் அப்படி உலவவிடுறாங்களோ யார் அறிவாரோ? இப்போலாம் வடக்கின் பிரதிநிதிகள் என்று பாராளுமன்றத்தில் குதிப்பவர்கள் வடக்கு மக்களுக்காக பேசுகிறார்கள் என்றா நினைக்கிறோம்? உண்மையில் அங்கே நடப்பது இளங்குமரனுக்கும் அர்ச்சுனாவுக்கும் இடையில் உள்ள தனிப்பட்ட வன்மம். ஒரு இயற்கைகோரத்தின் பின்னர் தமது பாகுதிகளை சீரமைக்க வேறுபாடுகளை மறந்து சிங்களவர்கள் முஸ்லீம்கள் எதிர்கட்சிகள் என அனைவருமே ஒன்றிணைந்து நிக்கிறார்கள், நமது வெண்ணெய்வெட்டி வீரர்கள் மூண்டுநாலுபேர் இருந்துகொண்டு இந்த நேரத்திலும் தங்கட பிரச்சனைகளை பேசுறதுக்கு பாராளுமன்றத்தை பாவிக்கும் நகைச்சுவை செய்துகொண்டிருக்கிறார்கள். காலங்களும் காட்சிகளும் ஆட்சிகளும் மாறிக்கொண்டேயிருக்கு ஆனால் அந்தகாலத்திலிருந்து இந்தக்காலம்வரை தமிழர் பிரதிநிதிகள் என்று தெரிவு செய்யப்பட்டு சிங்கள சபைக்கு செல்லும் தமிழர்கள் அன்றிலிருந்து இன்றுவரை அதே குணங்களுடன் தான் அலைகிறார்கள். நாட்கள்தான் மாறிவிட்டது ஆட்கள் மாறவில்லை. இந்த லட்சணத்தில் எங்களுக்கு எதுவும் செய்யவில்லையென்று அமிர்தலிங்கம், சிவ சிதம்பரம் மாவை சம்பந்தனை திட்டி என்ன பிரயோசனம், அவர்களை திட்டிய அதே இளம் தலைமுறையும் அவர்களைவிட கேவலமாகதானே நடக்கிறது. இந்த கோமாளி கூட்டத்தின் செயற்பாடுகளால் எதிர்காலத்தில் யாழ்மண்ணில் சிங்களவனே நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
-
கோவை கமலா
- தமிழர்களின் குடித்தொகைப் பெருக்கத்தில் பாரிய வீழ்ச்சி - ச.லலீசன் சுட்டிக்காட்டு
மலையக தமிழர்கள் எப்போது இலங்கை தமிழர்களாக அடையாளப்படுத்தப்பட்டார்கள்? இலங்கை தமிழர் என்று அரசால் வரையறை செய்யப்பட்ட தமிழர்கள் பிறக்கும்போதே இலங்கை குடியுரிமை கொண்டவர்களாக பிறக்கிறார்கள், மலையக தமிழர்கள் எனப்படுவோர் காலம் காலமாக இலங்கைக்கு பொருளாதார ரீதியாக தமது ரத்தத்தை செலவிட்டாலும் காலம் காலமாக சிங்கள தேசியகட்சிகளுடன் இணைந்தே அவர்கள் பயணித்திருந்தாலும் பல தசாப்தங்களாக அவர்களுக்கு இலங்கை பிரஜை என்ற குடியுரிமை இல்லாமலிருந்ததே வரலாறு. ஒரே இனம் மொழி என்ற ரீதியில் மானசீகமாக மலையக தமிழர் எமது இனம் என்று நோக்கப்பட்டாலும், சட்டரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ இலங்கை தமிழரும் மலையக தமிழர்களும் சேர்ந்து பயணித்ததாக வரலாறே இல்லை. அவர் யாழ்ப்பாண மக்கள் தொகையை குறிப்பிடபோய் இலங்கை தமிழர்களுடன் குழப்பிக்கிட்டார் என்று தோன்றுகிறது, 2023 கணக்கின்படி 6 லட்சத்து 30 ஆயிரமாக இருந்த யாழ்மக்கள் தொகை படிபபடியாக குறைந்து செல்கிறது என்பதே யதார்த்தம். யாழுக்கென்று ஒரு சிறப்பு உண்டு யாழ்மண்ணில் வாழும் மக்கள் தொகையைவிட இந்தியா அமெரிக்க ஐரோப்பிய மற்றும் வேலைவாய்ப்புக்காய் மத்திய கிழக்கு என்று புலம்பெயர்நாடுகளில் வசிக்கும் யாழ் மக்கள் தொகை ஏறக்குறைய அதிகம். போதாக்குறைக்கு படித்துவிட்டு வேலைதேடி கொழும்பு நோக்கி பெயரும் தமிழர்களும் கணிசம் அவர்களில்பெரும்பாலானோர் யாழுக்கு திரும்பி அங்கே வாழ்வதில்லை. ஆனால் ஒன்று இன்னும் ஓரிரு தசாப்தங்களில் இலங்கையில் முதல் சிறுபான்மையினம் முஸ்லீம்களே, அவர்களுக்கும் எமக்குமான சனதொகை வித்யாசம் வெறும் மூன்றரை லட்சங்கள் என்றே நினைக்கிறேன். அதைவிட முக்கியம் முஸ்லீம்களும் சிங்களவர்களும் தமிழர்களைபோல் பெரும் எடுப்பில் நாட்டைவிட்டு வெளியேறிவதில்லை, போதாகுறைக்கு பெரும்பான்மை தமிழர்களால் யாழ்ப்பாணம் நிறைந்திருப்பது சிங்களவர் முஸ்லீம்களின் கண்களை உறுத்திக்கொண்டே இருக்கிறது. அதனால்தான் மஹிந்த கோத்தபாய, மைத்திரி ஆட்சியில் சிங்களவர்களை யாழ்ப்பாணத்தில் திணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, இன்று முஸ்லீம்கள் அதனை முயற்சிக்கிறார்கள், அதன் பிரதிபலிப்பே எந்த தடையும் இல்லாதபோதும் இன்றும் வாராவாரம் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்று கூவுகிறார்கள். அதன் அப்பட்டமான சூழ்ச்சியே யாழிலிருந்து வெளியேற்றதாக சொல்லப்படும் முஸ்லீம்களைவிட அதற்கு சம்பந்தப்படாத முஸ்லீம்களே வெளியேற்றம்பற்றி அப்பப்போ தூண்டிவிடுவதும் துவேசத்தை வளர்ப்பதும். யாழின் மக்கள் தொகையை பேண இந்தியாவில் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி தகர கொட்டகைகளிலும் தவிக்கும் வெய்யிலிலும் வாழும் எம்மக்கள் தாயகம் திரும்பலாம், ஆனால் ஏற்கனவே தாயகத்தை விட்டு விலகிய நாம் அவர்களை திரும்பு என்று சொல்லும் தகுதியை இழந்துவிடுகிறோம், ஆனாலும் அங்கு படும் கஷ்டத்தைவிட, வெளியேற்றப்பட்டோம் வெளியேற்றப்பட்டோம் என்று சொல்லி யாழை செல்லரிக்க காத்திருக்கும் கூட்டத்தின் சதியை முறியடிக்கவாவது அங்கு துயரப்படும் எம் மக்கள் சுய விருப்பில் தாயகம் திரும்பலாம் என்பது மனக்கிடக்கை, கட்டளை அல்ல. இன்று இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்கபோவதா சொல்கிறார்கள், அப்படி கொடுத்தாலும் எத்தனை தலைமுறையாக அங்கு வாழ்ந்தாலும் சிலோன் அகதிகள் என்றே தமிழகத்தில் பெரும்பாலானோர் அழைப்பார்கள். அது அவர்களில் பெரும்பாலானோர் குணம்.- யாழ்.பல்கலை நூலகத்தில் இருந்து மகசீன்கள் மீட்பு ; சோதனை நடவடிக்கைக்கு பொலிஸ் முஸ்தீபு
அதுதானே அநியாயமாக பழி போட்டிருப்பார்கள். முஸ்லீம்களுக்கு வெடிகுண்டு துப்பாக்கி என்றால் என்னவென்றே தெரியாது என்று செத்துபோன சஹ்ரானில் இருந்து கமாஸ் ஹிஸ்புல்லா, தலீபான்வரை சொல்லியிருக்காங்க.- யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
சின்மயி வைரமுத்து பற்றி பேசினாலும் அதற்குள் தனிநாட்டை கொண்டுவந்து சொருவுறது உங்கள் தவறணைக்காலம்.- தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
ஐயா ஒரு ஆய்வு ஒரு ஆய்வு எங்கிறாரேயொழிய இறுதிவரை அது என்ன ஆய்வு என்று எவரால் எங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு என்பதை சொல்லாமலே போய்க்கொண்டிருக்கிறார். வடக்கிலிருந்து முஸ்லீம்கள் அவர்களால் எடுத்து செல்லக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட பொருட்களுடனும் கணிசமான பணத்துடனும் வெளியேற அனுமதிக்கப்பார்கள் என்பதே காலம் காலமாக சொல்லப்பட்டுவரும் கதை. இந்த 35 ஆண்டுகால முஸ்லீம்களின் யாழிலிருந்து வெளியேற்றம் எனும் வன்ம பரப்புரையில் தங்கத்திற்காகவே முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்ற கதை இதுவரை வெளியேறிய முஸ்லீம்களாலேயே சொல்லப்பட்டதில்லை, ஆனால் இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். காலம் காலமாக வடக்கிலிருந்து 72 ஆயிரம் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர் என்று அவர்கள் வாயாலேயே அடிக்கடி சொல்லப்பட்டதுண்டு, இப்போது ஒரு லட்சமாகி நிற்கிறது, அந்த எக்ஸ்ட்ரா 28 ஆயிரமும் தங்கம் ஆய்வுபோல ஒரு ஆய்வா? உலகம் முழுவதும் குண்டு,கத்திகுத்து, வாகனமோதல், துப்பாக்கிச்சுடு என்று வகை வகையாக கொலை செய்யும் இந்த இனம் என்றாவது உண்மையை பேசியதுண்டா? தாமும் தவறு செய்தோம் என்று ஒத்துக்கொண்டதுண்டா? வேண்டுமென்றால் அடுத்த இனம்மீதும், நாட்டுக்காரன் மீதும் பழிபோடும். பழிபோடுதல் அவர்கள் மார்க்க கடமைகளிலொன்றா யாமறியோம். முஸ்லீம்களை வெளியேற்றியது தவறென்று புலிகளும் ஒத்துக்கொண்டனர் தமிழனும் ஒத்துக்கொண்டான், அதன் பின்பும் ஆறிய காயங்களை சுரண்டி சுரண்டி இனங்களுக்கிடையே தீமூட்டுகிறது இந்த இனம். போர் காலத்தில் வியாபாரம் அழிந்தது சொத்து அழிந்தது என்று கதறும் இனம், திருமலை மட்டக்களப்பு என தமிழர்களுக்கு மட்டும் இவர்களால் அந்த நிலமை ஏற்பட்டதில்லையென்று ஒரு ஆய்வு செய்து சொல்லுமா? முடிந்தவற்றை முடிந்தவையாக பார்த்து முறுகலின்றி வாழ முற்படுகிறது எம் இனம். இன்று புலிகள் இருந்தாலாவது ஆற்றாமையில் பேசுகிறார்கள் என்று ஒத்துக்கொள்ளலாம், ஆனால் யாருமே இல்லாத நிலையில் இன்றும் விஷம் கக்குகிறார்கள் என்றால் தமிழர்களை எதிரிகளாகவே எப்போதும் கருதவேண்டுமென்று அவர்களின் அடுத்த தலைமுறைக்கும் சொல்லி வளர்க்கிறார்கள் என்பதைதவிர அடுத்தொரு கருத்து கிடையாது. இன்று நல்லூர் திருவிழாவிலிருந்து முற்றவெளி உட்பட வடக்கின் அனைத்து பகுதிகளிலும் தமிழர்விழா காலங்களில் வியாபாரம் பணம் அள்ளல் என்று 90% முஸ்லீம்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன, அந்த மண்ணும் மக்களும் அவர்களை வேறொருவராக பார்க்கவில்லை, ஆனால் அவர்கள் எங்களை காசு தேவையை தவிர்த்து விரும்ப தகாதவர்களாகவே பார்க்கிறார்கள் என்பதற்கு அப்பப்போ வரும் அவர்களின் அறிக்கைகளே சாட்சி. ஆனாலும் காசுக்கு மட்டுமே தமிழன் வேண்டும், மற்றும்படி கருநாகம்போல் எம்மை போட்டு தள்ளி சந்தர்ப்பம் பாத்து காத்துக்கொண்டிருக்கிறது இந்த சமூகம், அதன் வெளிப்பாடே எண்ணெய் ஊற்றி ஊற்றி வக்கிர புத்திகொண்டு வெறிகொண்டு நிற்கிறது. இவர்கள் குணம் அறிந்தே மாறி மாறி வரும் அரசுகளுக்கு தாளம் போட்டு அரச உயர்பதவிகளை பெற்று அதனை தமது மதமும் இனமும் வளர்க்க பயன்படுத்தும் இவர்களுக்கு எந்த அரச உச்ச பதவியும் தராமல் தூரத்தே வைத்திருக்கும் அநுர அரசை இதற்காக என்றாலும் பாராட்டலாம்.- யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
காலங்கள் ஓட ஓட தொட்டுவிடும் தூரத்தில்தான் நான் நீ நாம் உட்பட எவரையும் விட்டு வைக்காத மரணம். யாழ்கள மூத்த கருத்தாளர் அஜீவன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள். - தமிழர்களின் குடித்தொகைப் பெருக்கத்தில் பாரிய வீழ்ச்சி - ச.லலீசன் சுட்டிக்காட்டு
Important Information
By using this site, you agree to our Terms of Use.