Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

valavan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  1. நிறுத்தாமல் சென்ற ஒரு வாகன சாரதியின் தலையை குறிவைத்து துப்பாக்கிசூடு நடத்த இது போர் காலமும் அல்ல ,பெரும் போதைவஸ்துகூட்ட சுற்றிவளைப்பும் அல்ல, கண்டிப்பாக காவல்துறையின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது. அதேநேரம் ஒரு பதினேழு வயது சிறுவன் வண்டி ஓட்டியிருக்கிறான், அவனுக்கு சாரதி அனுமதி பத்திரம் கிடையாது, காசு கொடுத்து கொடுத்துதான் ஓடினான் என்று அவன் சித்தியே வாக்குமூலம் கொடுக்கிறார், 17 வயசுக்காரன்கிட்ட ஒரு வாகனத்தை கொடுத்தது யார்? யாருடைய வாகனம் அது? சாரதி அனுமதி பத்திரமும் இன்றி அதை ஓட்டும் வயசும் இன்றி லஞ்சம் கொடுத்து கொடுத்து வண்டி ஓட்டியிருக்கிறான் என்றால் என்றாவது ஒருநாள் எதிரே வரும் எத்தனையோபேரை கொல்லும் ஒரு அப்பட்டமான சட்டமீறலை செய்திருக்கிறான் என்பதை புரிந்துகொள்ளாமல் இதற்கு அவனின் சித்திவேறு நியாயம் கூறுகிறார். ஏற்றுக்கொள்ளமுடியாத நியாயங்கள் எந்த சபை ஏறி வாதிட்டாலும் நீதி கிடைக்காது. கொடுக்கவும் கூடாது.
  2. காலங்கள் ஓடிவிட்டது காட்சிகளும் மாறிவிட்டது. இறுதி யுத்தம் நடந்த வருடத்தில் 5 வயசு குழந்தையாக இருந்ததுக்கு இப்போ 22 வயசு வாலிப பருவம், அதற்கு இலங்கையில் என்ன நடந்தது என்றே தெரியாது எடுத்து சொல்லவும் சிங்கள படைகளுக்கும் நாலாம் மாடிக்கும் அஞ்சி எந்த உறவுகளுக்கும் துணிச்சல் இல்லை இன்றைய தலைமுறை ஓடி ஓடி இன்று பண்ணைக்கடலில் நடந்த சிங்க கொடிகளுடன் நடந்த படகுகளின் காணொலியை தரவேற்றி காசு பார்க்கிறார்கள். தமிழர் பிரதிநிதிகள் எனப்படுவோர் தமது வேலைகளில் பிஸி, இலங்கை பிரச்சனையில் பொறுப்புக்கூறல் என்று ஓரளவு நம்பிக்கை தந்த சர்வதேசமும் அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை கவனிக்கவே நேரமில்லாமல் நமது பிரச்சனையை ஏறக்குறைய மறந்துவிட்ட நிலமை. தாயகம் பற்றி பொங்கியெழுந்த புலம்பெயர் உறவுகளின் எண்ணிக்கையும் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனமாதிரி 95% பேர் எப்போவாச்சும் நேரம் கிடைச்சால் மட்டுமே இலங்கை பிரச்சனைபற்றி பேசும் நிலமை எவரும் இனப்பிரச்சனைபற்றி பேசுவதாய் காணோம் இன்றைய பிரச்சனை பற்றியே பெரும்பாலானோரின் கவலை. எந்த ஆட்சி மாறினாலும் சிங்களவன் தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதிலும் மத அடையாளங்களை நிறுவுவதிலும் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும் நிலை. கொழும்பிலிருந்து யாழுக்கும் யாழில் இருந்து கொழும்புக்குமென தமிழரும் சிங்களவரும் மாறி மாறி களியாட்டம். இனி, இலங்கை தமிழருக்கு இங்கே என்ன பிரச்சனை எதுக்கு குட்டையை குழப்புகிறீர்கள் என்று சிங்களவர்கள் அல்ல இன்றைய இளைய தமிழ் சமுதாயமே கேட்கபோகும் ஜீரணித்தே ஆகவேண்டிய கசப்பு உண்மையை காலம் வாயில் திணிக்கும் நிலை, மிக அருகில் உள்ளது , கண்டிப்பாக விழுங்கியே ஆகவேண்டிய பரிதாபம்தான் என் வசம்.
  3. யூடியூப் பேஸ்புக் இரண்டுமே பின் தொடர்பவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பகிர்பவர்களுக்கும் அலையும் கோஷ்தான், அடுத்தவனின் தனிப்பட்ட விஷயங்களில் நுழைந்து விமர்சனம், ஆய்வு வாய்வு செய்யும் அசிங்கம் பேஸ்புக்கிலேயே அதிகம். அதனால் பக்கங்கள் முடக்கப்படுவதும் பேஸ்புக்கில்தான் அதிகம். இந்த செய்தியை பகிர்ந்த பேஸ்புக்காரர் சமுதாயத்துக்கு ஆற்றிய அறிவுபூர்வமான தொண்டுதான் என்ன? ஒவ்வொருவரும் உங்கள் ஆதாயத்திற்காக ஏதோஒன்று பண்ணுகிறீர்கள் , உங்களின் அதே தொழிலை செய்யும் இன்னொருவரை விமர்சிக்க அதிகாரம் எங்கிருந்து பெற்றீர்கள்? பேஸ்புக் காரருக்கும் யூடியூப் காரருக்கும் உள்ள ஒரேயொரு வித்தியாசம் பேஸ்புக் காரர் அதனையே முழுநேர தொழிலாக செய்வதில்லை, யூடியூப் காரர் அதுவே தொழிலாக வைத்திருக்கிறார்கள், அது வருத்ததுக்குரிய விஷயம் மட்டுமல்ல எதிர்காலம் குறித்த அச்சம் தரும் தொழிலும்தான்.
  4. இலங்கை நிலவரம் பற்றியதுதான் செய்தி, இலங்கையில் மருத்துவராக வருவதற்கு சாதாரண சித்தி போதுமா? இது தெரிஞ்சிருந்தா நானும் எப்பவோ டாக்டர் சுங்கப்பா ஆகியிருக்கலாம்.
  5. பெண் நிர்வாணபடத்தை ஆண் பகிர்ந்தாலோ, அல்லது ஆண் நிர்வாணபடத்தை பெண் பகிர்ந்தாலோ பெயர் அடிவாங்க போவது பெண்ணோடதுதான். ஒன்று இவவின் அந்த படத்தைதான் அவன் வாட்சப்பில் போட்டவனாம் என்று பேசும், அல்லது இவவுக்குத்தான் அந்த படத்தை அவன் அனுப்பினவனாம் என்று பேசும். கத்திமீது அப்பிள் விழுந்தாலும் அப்பிள்மீது கத்தி விழுந்தாலும் சேதம் என்னவோ அப்பிளுக்குத்தான் என்ற நிலையில் இன்றுவரை இருக்கிறது யாழ் மண்ணின் பெண் உரிமை.
  6. துணையை இழந்து போவதென்பது மொத்த உலகில் பாதி இருண்டுபோன துயரம், துயரில் மூழ்கியிருக்கும் மோகன் அண்ணா குடும்பத்தினர் அனைவருக்கும் மனவுறுதி வேண்டியும் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்தனைகள்.
  7. மன்னாரில் அடிக்கடி இந்து கிறிஸ்தவ உரசல்கள் நடைபெறுகின்றன, முன்பும் வளைவு வைத்ததில் முரண்பாடு ஏற்பட்டதாக ஒரு ஞாபகம். போராட்ட காலத்தில் எந்தவித பாகுபாடின்றி இணைந்திருந்த இனம் இன்று இந்தியாவில் உள்ளதுபோல், கடத்திக்கொலை, அடித்து கொலை, வெட்டிக்கொலை போதை வியாபாரிகளிடை மோதல்,கஞ்சா பொதிகளுடன் கைது, இந்து கிறிஸ்தவ மோதல் என்று ஆரம்பித்திருக்கிறது. ஒன்றாக இருந்த ஒரு இனத்திற்குள் இந்த சிந்தனையை விதைத்ததில் மதமாற்ற அல்லுலோயா கோஷ்டிக்கு பெரும்பங்குண்டு. ஒரு இனத்திற்குள்ளேயே மோதிக்கொண்டு கிடக்க, மன்னாரின் பெரும்பகுதி இஸ்லாமியர்களிடம் பறிபோய் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஒரு சில வருடங்களில் மன்னார் முழுமையாக பறிபோகும். நல்லாயிருந்து நாசமா போங்க.
  8. பொருளாதாரத்திலும் ஆயுத வலிமையிலும் மிகவும் பின் தங்கிய ஒரு நாட்டை பெரும் போர் செய்து கைப்பற்றியமாதிரி இவர்கள் பண்ணும் அலப்பறையை என்ன சொல்ல? வெனிசுலாவை ஆக்கிரமிக்க ட்ரம்ப் சொன்ன பிரதான காரணம் போதைபொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல்தான், ஆனால் தென்னமெரிக்காவிலேயே போதைபொருள் வர்த்தகத்திலும், அமெரிக்காவிற்குள் ஆட்கடத்தலை மேற்கொள்வதிலும் முன்னணியில் நிற்பது மெக்சிக்கோதான். போதைபொருள் வர்த்தகத்தில் ஈவிரக்கமற்ற மாபியாக்களையும் கொண்டிருப்பது அமெரிக்க எல்லையை பகிர்ந்து கொள்ளும் மெக்சிக்கோதான், அதற்கடுத்தது பிரேசில். அங்குபோய் ஆக்கிரமித்து அந்நாட்டு தலைவரை அமெரிக்கா கொண்டுவர அமெரிக்க அதிபர் நினைக்கவில்லை காரணம் இரண்டேதான், வெனிசுலா அளவிற்கு அங்கு எண்ணெய் வளமில்லை, ஒருகாலம் மெக்சிக்கோவில் எண்ணெய் வளம் இருந்தது அதையே பின்னாட்களில் அபகரித்து அமெரிக்கா லாஸ் ஏஞ்சல் எனும் பெயரில் தன்னோடு இணைத்துக்கொண்டது. இரண்டாவது மெக்சிகோ அமெரிக்காவை எதிர்த்து சுய கெளரவ ஆட்சி நடத்தவில்லை. அமெரிக்காவை எதிர்த்து ஆயுத அரசியல் பொருளாதார போர் செய்தால் உலகின் எந்த நாட்டையும் போர் செய்து முடக்க பார்க்கிறது முடியாவிட்டால் பொருளாதார தடை விதித்து ஏழ்மைக்கு தள்ளுகிறது. ஈராக்,கியூபா ஆப்கான் வடகொரியா,லிபியா ஈரானுக்கு அதுதான் நடந்தது அடுத்து வரும் காலங்களில் அதுதான் எதிர்கால வரலாறாக இருக்கும். இந்த பரிதாபமான நிலைகளுக்கு பின்னால் ஒரு ஒற்றுமையிருக்கிறது இந்த பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளின் பின்னாலும் உதவுகிறோம் என்று சொல்லி நிற்பது ரஷ்யாவும் சீனாவும்தான், அமெரிக்க எதிர் வீரவிளையாட்டுக்கு இவர்களை உசுப்பேத்திவிட்டு மேற்குலகின் கை ஓங்கிவிட்டால் சத்தமில்லாமல் தங்களை நம்பியவர்களை அம்போ என்று கைவிட்டு கழண்டுவிடும், அதுதான் ஈராக், சிரியாவில் நடந்தது. இவர்கள் அமெரிக்காவின் ஏகாதிபத்திய கொடூர சிந்தனைகளைஅவிட கேவலமானவர்கள். பொருளாதாரத்திலும் ஆயுதவலிமையிலும் உலகின்மீது தனது பலத்தை பிரயோகிக்கும் அமெரிக்காவை ஓரளவேனும் வழிக்குகொண்டுவரவேண்டுமென்றால், ஏதாவது ஒரு முனையில் சீனாவும் ரஷ்யாவும் இணைந்து அமெரிக்காவிற்கு ஆயுத ரீதியில் ஒரு பெரும் தோல்வியை வழங்கியாகவேண்டும், அதற்கு அவர்கள் ஒருபோதும் தயாராக இல்லை, முடிந்தவரை தம்மை நம்பியவர்களை பயன்படுத்திவிட்டு அமெரிக்கா வாளோடு வந்தால் சத்தமில்லாமல் நழுவி செல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். நவீன உலகம் தமது பொருளாதாரம் பாதிக்கப்படாமலே எதையும் செய்ய நினைக்கிறது. வெனிசுலாவைவிட அமெரிக்காவை நேரடியாகவே அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் ஈரானுக்குள்ளும், வடகொரியாவுக்குள்ளும் நுழைந்து அந்தநாட்டு தலைவர்களை தூக்கிக்கொண்டு அமெரிக்காவுக்கு செல்லும் தைரியம் அமெரிக்காவுக்கு இல்லை அவர்களின் ஆயுத வலிமை அமெரிக்காவுக்கு அந்த தைரியத்தை கொடுக்கவில்லை, அதனால் பொருளாதார ரீதியாக முடக்குகிறது. எம் கை கால்கள் உறுதியாக இருந்தால் எம் எதிரிகூட எம்முடன் சிரித்துக்கொண்டுதான் பேசுவான், பலவீனமானவன் என்று தெரிந்துவிட்டால் பயந்தாங்கொள்ளிகூட நம்மை அடிக்க பார்ப்பான். உலக வளங்களை சுரண்டும் அமெரிக்காவின் காலம் காலமான தலைமுறையின் புது வாரிசு ட்ரம்ப், வந்த வரத்தில் கிரீன்லாந்தை அபகரிக்க பார்த்தார், முடியவில்லை, கனடாவை அமுக்க பார்த்தார் அதுவும் கைகூடவில்லை, தலீபான்களிடம்கூட தாம் விட்டு சென்ற ஆயுதங்களுக்கு காசு கேட்டார் காமெடியா போச்சு, பின்பு உலக வரிகளில் கை வைத்தார் அடுத்ததாய் இப்போ வெனிசுலா.
  9. முன்பு வாடகை கார்கள், பீட்சா டெலிவரி, உணவு விடுதிகளில் காசு கொடுக்காமல் விட பாலியல் சீண்டல்கள் குற்றச்சாட்டை ஒரு ஆயுதமாக பயன்படுத்தியிருக்கிறார்கள், குறிப்பாக லத்தீன் மற்றும் கறுப்பின ஒருசில பெண்கள்தான் இதில் ஈடுபடுவது அதிகம், தாங்களாகவே கையை பிடித்துவிட்டு காசு வேணுமா இல்லை ஏற்கனவே நமக்கிடையே வாய்க்கால் தகராறு இருக்கும்போது நீ கையை பிடிச்சு இழுத்தாய் என்று பொலிசுக்கு அடிக்கவா என்று கேக்க, மானம் மருவாதை பயம் கருதி ஆத்தா காசு வேணாம் ஆளைவிடுனு ஓடிதப்பிய குறித்த துறையில் பணியாற்றிய தமிழர்கள் அதிகம். அதேநேரம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட/ஈடுபடும் பொறுப்பான பதவிகள், தொழில்களில் உள்ள நம்மவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.
  10. நீங்கள் சொல்வது சரிதான், டக்ளஸ்மேல யாரும் கை வைத்தால் பொங்கியெழும் நிலையில்தான் வடபகுதி மக்கள் உள்ளனர். அடுத்த தேர்தலில் என்பிபி மட்டுமல்ல ஏனைய தமிழ்கட்சிகளும் ஈபிடிபியிடம் தோற்றுபோவது உறுதி. 90 களிலிருந்து மக்களின் அமோக ஆதரவுடன் ஒவ்வொரு தேர்தலிலும் அனைத்து தொகுதிகளிலும் வென்று வடமாகாணத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த டக்ளசின் வாக்குவங்கி வலிமை பற்றி தெரியாமல் என்பிபி நடந்து கொள்கிறது. ஏதோ போன தேர்தலில்தான் அநுர அலை கொஞ்சம் ஓவராக அடித்ததால் டக்ளசின் வாக்கு வங்கிக்குள்ள கொஞ்சம் தண்ணி போயிரிச்சு, அடுத்த தேர்தலில் அந்த நிலை வராது.
  11. டக்ளஸ் விசுவாச கட்டுரையாளருக்கு இப்போ என்ன வேணும்? டக்ளஸ் எந்த தவறுமே செய்யாத யோக்கியர்னு சொல்லணும் அவ்வளவுதானே? நேரடியா கெஞ்சி கேட்டால் உங்கள் மனசை சந்தோசபடுத்தி பார்க்கவென்றாலும் சொல்லிட்டு போறோம் அதுக்கு எதுக்கு இவ்வலவு நீளமா மூச்சு வாங்க வாங்க எழுதிக்கொண்டு. ஆனா அந்த யோக்கிய சிகாமணிபற்றி சிறப்பான கட்டுரை வரைந்த விசுவாசியிடம் இரண்டே இரண்டு கேள்வி ஓடாமல் ஒளியாமல் பதில் சொன்னால் கோடி புண்ணியம் அது, பயங்கரவாதங்களை அடியோடு வெறுக்கும் பெருந்தகை டக்ளஸ் அவர்கள், அரசுகள் செய்வது பயங்கரவாதம் என்று தெரிந்தும் எப்படி அமைச்சராக பயங்கரவாத அரசுகளில் இருந்தார்? பயங்கரவாதம் செய்யும் அரசிடமிருந்து ஆயுதம் பெற்றால் டக்ளஸ் அப்போ யார்?
  12. 1954 வரை கிரிமியா ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே இருந்தது என்று தரவுகள் கூறுகின்றன. பின்பு குருஷேவினால் உக்ரேனுடன் இணைக்கப்பட்டதாகவும், சோவியத் உடைவின் பின்னர் உக்ரேனிடம் இருந்த கிரிமியா மேற்குலகினூடான உக்ரேனின் நெருக்கத்தின் காரணமாக கருங்கடலில் ரஷ்யாவின் ஆதிக்கம் கையைவிட்டு போய்விடுமோ என்ற அச்சமும் கனிமங்களின் சுரண்டலும் கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமிக்க காரணங்களில் ஒன்றாக இருந்தது என்பது நான் சொல்லி கிருபன் அறியும் நிலையில் இருக்காது என்று நினைக்கிறேன், அதன் தொடர்ச்சியே மறைமுக மேற்குலகுக்கெதிராக ரஷ்யா தொடுத்த கீவ் நோக்கிய ரஷ்யாவின் படையெடுப்பும் என்பது பின்னாளில் அனைவரும் அறிந்த வரலாறு. உக்ரேன் ரஷ்ய பலத்துடன் ஒப்பிடும்போது நோஞ்சான்தான், ஆனால் உக்ரேனுக்கு பின்னாலிருந்த மேற்குலகும் நேட்டோ ஆதரவும் நிச்சயமா நோஞ்சான்கள் இல்லை என்பது நம் அன்னைவரையும்விட ரஷ்யாவுக்கு நல்லாவே தெரியும். அதுவே போராக வெடித்தது. ஆக்கிரமிப்புகள் நியாயப்படுத்த முடியாதவை, இங்கே காரணங்களைதான் சொல்கிறேன், மற்றும்படி ரஷ்ய &உக்ரேன் பக்கம் நிக்கவோ நியாயப்படுத்தவோ எந்த நிமிடமும் முயற்சிக்கவில்லை, ஒரு இன ஆக்கிரமிப்புபோரில் இருவருமே எமக்கெதிராய் நின்றவர்கள். இந்த நான்கு சந்தர்ப்பங்களிலும் 1987ல் வந்த உடன்படிக்கையும் அதன் பின்னரான புலிகள் நிலைப்பாடு பற்றியும் சிலமாதங்களின் முன்னர் ஏற்கனவே நீண்ட விளக்கம் ஒன்றை உங்களுக்கு தந்திருந்தேன் அதனை மீண்டும் பதிவு செய்ய விரும்பவில்லை நீங்கள் விரும்பினால் தேடி பிடித்து சரிபார்த்து கொள்ளுங்கள். அப்புறம் 1990,94,2002ல் எந்த வகையான சிங்கள அரச உள சுத்தியான பாலைபழம்போன்ற தீர்வுகள் தமிழர்களை நோக்கி நெருங்கி வந்தன , எப்படி அநியாயமாக அந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டோம் என்பதை உங்களிடமிருந்து அறியவிரும்புகிறேன்.
  13. உக்ரேன் என்பது அனைத்து வளங்களையும் சொந்த அரசியலையும் நாடு மொழி ராணுவம் ஆட்சியென்று அனைத்தையும், உலகதேவையின் பெரும்பங்கை கொண்ண்ட தானியங்கள், எண்ணெய்வளம், கனிமங்கள், பல்கலைகழகங்கள்,உலகத்திலேயே பெரிய சரக்கு விமானத்தை கொண்ட பெருமை ஆயுத உற்பத்தி என்று பலவற்றை கொண்டு தனியாக இயங்கியநாடு. அத்தனையும் இருந்தும் தனது பாதுகாப்பு என்று சொல்லிக்கொண்டு வேற்று வல்லரசு சக்திகளுடன் இணைந்து ரஷ்யாவை எதிர்க்க கிளம்பியதால்தான் இந்த போரே ஆரம்பித்தது. தமிழர்கள் இத்தனை வசதிகள் தம் வசம் இருந்தும் இந்திய வல்லரசுடனும் உலக வல்லரசுகளுடனும் இணைந்து இலங்கையை அழிக்க நினைத்து இறுதியில் தோற்று போனார்களா? அதைதான் கண்ணாடிமுன் நின்றூ கேட்கவேண்டுமென்று நீங்கள் அர்த்தப்படுத்துகிறீர்களா? உக்ரேன் மேற்குலகுடன் இணைந்து ரஷ்யாவை மிரட்ட வேண்டுமென்று போர் செய்த நாடு, தமிழர்கள் எவர் உதவியும் இன்றி சிங்களவனிடம் அடிவாங்கி செத்ததால் வேறுவழியின்றி போர் செய்த இனம் இந்த இரு பிரிவுகளையும் ஒப்பிட்டுபார்க்க எந்தரீதியிலான பெளதீக அறிவு உங்களை தூண்டியது? உக்ரேன் சொந்தநாடு இருந்தும் போருக்கு வழி தேடிய இனம், தமிழர்கள் வேறி வழி இல்லாததால் சொந்தநாடுவேண்டி போராடி தோற்றுபோன இனம் இந்த இரண்டையும் ஒப்பிட்டு எகத்தாளமாய் சிரிக்க உங்கள் ஒரு சிலரால் முடிகிறது அது உலகின் பார்வைக்கு கண்டிப்பாக ஏளனமாய் அமையாது. 1958 ,1977, 1983 வரை எந்த தமிழர்களும் ஆயிரக்கணக்கில் ஆயுதம் ஏந்தி சிங்களவனுக்கெதிராய் போராட நினைத்ததில்லை, அவன் அரசியல் யாப்பையும் ஆயுதபடைகளையும் ஏற்றும், சொல்லபோனால் படைபலத்தை வைத்து சிங்களவன் எங்களை நீங்கள் வேறு நாங்கள் வேறூ என்று மிதி மிதியென்று மிதித்தபோதும் துடைத்துவிட்டு காவல்துறை ராணுவம் கடற்படை விமானபடை என்று சிங்களவனின் படைகளில் சேவையாற்றியும் வாழ்ந்தார்கள். கல்வி சுகாதாரம் பாதுகாப்பு, மொழி, அரசியல் என்று அனைத்திலும் வலிகளை மட்டுமே அவன் எமக்கு தந்தாலும்முடிந்தவரை சிங்கள தேசத்துடன் முரண்படாமலே வாழ நினைத்தார்கள். 83ல் ஜேஆர் எனும் மனிதகுலவிரோதி இலங்கையில் இனக்கலவரம் என்ற ஒன்றை உருவாக்காமல் விட்டிருந்தால் தமிழர் ஆயுத போராட்ட இயங்கங்களின் உறுப்பினர் தொகை இரண்டு இலக்கங்களுக்கிடையே மட்டுமே இருந்து தானாகவே காணாமல் போயிருக்கும். லட்சக்கணக்கான தமிழர்கள் ஆயுதபோராட்ட இயக்கங்களுக்கு பின்னால் போக வைத்த பெருமை சிங்கள இனத்தையும் ஆட்சியாளர்களையுமே சேரும். உக்ரேன் அப்படியா வாழ்ந்துவிட்டு நேட்டோவுடன் இணைந்து ரஷ்யாவை எதிர்த்து போர் செய்து பேரழிவின் முடிவில் போரை நிறுத்த சம்மதம் தெரிவித்தது? எங்கள் காயங்கள் உங்களுக்கு சிரிப்புக்கிடமானதாக தெரிந்தால் விலகி நில்லுங்கள் அதனை பார்த்து கைகொட்டி சிரிக்காதீர்கள், பிற விலங்குகள் குட்டி ஈன்று கொண்டிருக்கும்போதே தன்பசியாற தாயின் பிறப்புறுப்பிலிருந்து இழுத்தெடுத்து உண்ணுமாம் ஹயினாஸ் எனும் விலங்கு அதுபோல் எமக்கு வசதியென்றால் எது வேண்டுமென்றாலும் பேசலாமென்ற மனபாங்கில் பேசி பழகுவான் மனிதன். அது விலங்குகள் பரவாயில்லை அப்படித்தான் அவற்றின் இயற்கை சுழற்சி இருக்கும், நாம் அப்படியா? அழகானமனிதர்கள். அழகான மனிதர்கள் அந்த கொடூர இனத்தில் சேராமல் சுயமாக சிந்தித்து வாழ்ந்தால் அதில் தவறென்று எதுவும் இருக்க போவதில்லை.
  14. தமிழக அரசியல் தலைவர்கள் குரல்கொடுத்தால் இலங்கைக்கு அழுத்தம் ஏற்படும் என்ற ஈழதமிழரின் காதுல பூ சுத்தும் கதைகள் இன்னும் தொடருது என்றால் இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அவசரமா அரசியல் செய்ய வேறு எதுவும் கிடைக்கவில்லையென்றே அர்த்தம். ஆனால் உங்கள் துரதிர்ஷ்டம் நீங்கள் சுத்தும் பூவை ஏற்க பெரும்பாலான ஈழதமிழர்களின் காதுகள் தயாராக இல்லை என்பதே யதார்த்தம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.