-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
இன்று யேர்மனி, பேர்லினில் நடைபெற்ற தலைவர்கள் சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. அதன் சுருக்கம், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க ஆதரவுடன், உக்ரைனுக்காக ஐரோப்பிய தலைமையிலான ஒரு பன்னாட்டுப் படையை அமைக்க உறுதியளித்துள்ளன. இந்தப் படை உக்ரைன் இராணுவத்தை மீண்டும் வலுப்படுத்த, வான்வெளி மற்றும் கடல்களைப் பாதுகாக்க உதவும். எதிர்காலத்தில் உக்ரைன் இராணுவம் சுமார் 8 லட்சம் வீரர்களைக் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்கா தலைமையிலான போர்நிறுத்த கண்காணிப்பு அமைப்பு முன்மொழியப்பட்டுள்ளது. இது ரஷ்ய தாக்குதல்களுக்கு முன் எச்சரிக்கை வழங்கவும், போர்நிறுத்த மீறல்களை கண்டறியவும் பயன்படும். முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகளை உக்ரைனுக்குப் பயன்படுத்தும் எண்ணத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. போரைக் முடிக்க உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களும், பொருளாதார மறுசீரமைப்புக்கான உதவியும் தேவை என்று அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உக்ரைன் ஒருமித்த கருத்து தெரிவித்துள்ளன. ரஷ்யா அமைதிக்குத் தயாராகி, டிரம்பின் அமைதித் திட்டத்தையும் போர்நிறுத்தத்தையும் ஏற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக ரஷ்யாவிற்கு மேலதிக அழுத்தம் கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால், இந்தத் திட்டங்களை அமெரிக்கா முழுமையாக ஏற்றுக்கொள்ளுமா என்பதும், உக்ரைனில் வெளிநாட்டு படைகள் இருப்பதை ரஷ்யா ஏற்குமா என்பதும் இன்னும் தெளிவில்லை.
-
புட்டு கேட்ட கணவனை போட்டு தள்ளிய மனைவி கத்தியுடன் சரண்
வீட்டில் நான்தான் சமையல் என்பதால் எனக்கு ஆபத்து இல்லை.
-
கிறுக்கல்கள்
கிறுக்கல்கள்
-
கேலி 15.12.2025
-
கருத்துப்படம் 12.12.2025
-
கருத்துப்படம் 11.12.2025
-
கருத்துப் படம் 06.12.2025
-
கருத்துப்படம் 27.11.2025
-
கருத்துப்படம் 27.11.2025
-
கருத்துப்படம் 15.10.2025
-
கருத்துப்படம் 10.10.2025
-
கருத்துப்படம் 09.10.2025
-
கருத்துப்படம் 07.10.2025
-
கருத்துப்படம் 04.10.2025
-
ரசோதரன்-இன்னுமொரு பாலம் 22.09.2025
-
ஒரு பயணமும் சில கதைகளும் 18.09.2025
-
கருத்துப்படம் 13.09.2025
-
கருத்துப்படம் 11.09.2025
-
கருத்துப்படம் 11.11.2025
-
கருத்துப்படம் 06.09.2025
-
கருத்துப்படம் 05.09.2025
-
கருத்துப்படம் 04.02.2025
-
கருத்துப்படம் 04.09.2025
-
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
நாற்பது, ஐம்பதுகளின் இலங்கையின் இருந்த பிரதேச பாகுபாடுகள் மலையகத் தமிழர்களின் வாழ்க்கையை ஆழமாக பாதித்திருந்தது. குறிப்பாக யாழ்ப்பாணப் பகுதியில் சில யாழ்ப்பாணத் தமிழர்கள், தேயிலைத் தோட்டங்களில் இருந்து மலையகத் தமிழர்களை வீட்டு வேலைக்கும், கழிவுகளை அகற்றும் பணிகளுக்கும் அழைத்து வந்து அமர்த்திய நிகழ்வுகள் நிறைய இருக்கின்றன. அப்பொழுதெல்லாம் யாழ்ப்பாணம் வறண்ட பிரதேசம். மலையகம் செழிப்பான பூமி என்று யாரும் பேசவில்லை. தாய் தந்தையை உறவுகளை மலையகத்திலேயே விட்டு விட்டு,சிறுமியையோ, சிறுவனையோ பிரித்து கூட்டிக் கொண்டு வந்து வேலை செய்ய விட்டு தன் பிள்ளைகளை படிக்க விட்ட போது யாருமே ‘குய்யோ முறையோ’ என்று கத்தவில்லை. தாயக விடுதலைக்காக கரும்புலியாகப் போனவனை, “இது எங்கள் போராட்டம் நீ வளமும், உன் வாழ்வும் உள்ள உன் மலையகத்துக்குப் போ” என்று சொல்ல பிரபாகரனே சொல்லவில்லை. புலிகள் அறிவித்தவுடன், “ஊரில் உழாத மாடு வன்னியில் எப்படி உழும்” என்று சொன்னவர்கள் வன்னிக்கு இடம் பெயர்ந்து வாழவில்லையா? புகையிலைத் தோட்டம், மிளகாய் தோட்டம் என்று வாழ்ந்தவன் இடம் பெயர்ந்து 10,000 கிலோ மீற்றர்கள் பறந்து வந்து சீமையிலே வாழ முடிந்தது என்றால்,தேயிலைத் தோட்டத்தில் வாழ்ந்தவன் உள்ளூரில் இடம் பெயர்ந்து வாழ முடியாதா? சுமந்திரனை நீங்கள் தூற்றுங்கள். பாரளுமன்றத்தில் யாராவது பிரபாகரனுக்கு பிறந்தநாள் சொன்னால் போற்றுங்கள். அது உங்கள் விருப்பம். சுமந்திரன் சொன்னார் என்பதற்காக நல்லதை எதிர்ப்பது எந்தவகையில் நியாயம்? ஒன்று நிச்சயம் கால் மேல் கால் போட்டு மல்லாக்காகப் படுத்திருந்து வானத்தை நோக்கி துப்பிக் கொண்டிருப்பவர்களால் ஈழத் தமிழர்களுக்கு எந்த பிரயோசனமும் கிடையாது.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
அவர்களும் தமிழர்கள்தானே. அவர்களுக்கு நேர்ந்த அனர்த்தங்களைப் பார்த்து நாங்கள் வாருங்கள் என்றழைப்பதுதானே முறை. வருவதும் வராமல் இருப்பதும் அவர்களது விருப்பம். அது தவிர சிங்களவர்கள் தங்கள் இடங்களில் அவர்களை குடியேற அழைப்பது அவர்களது பிரச்சினை. நான் கொழும்பில் இருந்த போது அவதானித்தேன், மலையகத்தில் இருந்த தமிழர்கள் பஸ் ஓட்டுனர்களாக, வியாபாரிகளாக, பல தொழில்கள் செய்பவர்களாக, மூன்று மொழி பேசும் ஆற்றலுடையவர்களாக இருந்தார்கள். கொழும்பும் சிங்களப் பகுதிதான். இன்னுமொன்று ஊரில் பார்த்தேன் பல வீடுகள் இடிந்து பாழடைந்து, காணிகள், காடுகள் போல் இருந்தன. சமீபத்தில் கூட சாவகச்சேரி உபய பாராளுமன்ற உறுப்பினர் சபையில் உரையாற்றும் போது சொன்னார், “ யாழ்ப்பாணத்துக்கு நிதி ஒண்டும் வேண்டாம். உங்களுக்குத் தேவை எண்டால் நாங்கள் தருகிறோம்” என்று. இன்று மீனவர்கள் போராட்டத்தில் கூட,” உங்களுக்கு நாங்கள் அரிசி, பருப்பெல்லாம் தாறம்” என்று, நீங்கள் என்னவென்றால் அங்கே வாழ்வாதாரப் பிரச்சினை என்று சொல்கிறீர்கள். புரியவில்லை. ஒரு தடவை நான் பயணித்த வாகனத்தை ஓட்டி வந்தவர் அப்புத்தளையைச் சேர்ந்தவர். அவர் என்னிடம் கேட்டார், “ நாகர்கோவில் திருவிழாவுக்கு, வெளிநாட்டில் இருந்து வந்த ஆக்களைக் கூட்டிக் கொண்டு போனன். நல்ல சனம். சனங்கள் போறதுக்கு ஒரு பாதை திரும்ப வாறதுக்கு ஒரு பாதை எண்டு பிரிச்சு , பொலீஸ் ரேப் கட்டி தடுப்புகள் போட்டிருந்தார்கள். கொஞ்ச நேரம்தான் இரண்டு பக்கங்களாலேயும் சனம் போக வரத் தொடங்கிட்டிது. பொலீஸும் எவ்வளவோ சொல்லிப் பாத்தும் அவையள் தங்கட இஸ்டத்துக்கு போய் வந்து கொண்டிருந்திச்சினம். ஏன் அப்பிடி?” பதில் நான் சொல்லவில்லை. ஆக நாங்கள் வருந்தி அழைத்தாலும்…. அந்த நாள் முதல் இந்த நாள்வரை நாங்கள் மாறவில்லை.
-
இந்திய தூதகரத்தை விரட்டி,சீன தூதரகம் திடீரென சுற்றிவளைத்த மக்களால் பரபரப்புl
படத்தை வலது பக்கமாக 90°இல் திருப்பிப் பார்க்கவும்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
- ஜேர்மனியில் யாழ் இளைஞர் விபரீத முடிவு.!
எண்பதுகளில் நாங்கள் பட்ட துன்பங்கள் பெரிது. விசா இல்லாமல், வேலையில்லாமல், ஊரில் உள்ளவர்களோடு தொடர்பு கொள்ள முடியாமல், கரிகளைப் போட்டு எரித்து குளிர் காய்ந்து, புரியாத மொழியில் விழி பிதுங்கி, மூன்று வருடங்கள் முகாம்களில் முடங்கிக் கிடந்து……. “உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்தது நிம்மதி தேடு..” என்ற பழைய பாடல் வரியொன்றுதான் நினைவுக்கு வந்தது.- உலகின் மிக அழகான பெண்களின் பட்டியல்
அன்ரிமாருக்கெல்லாம் அழகிப் போட்டி வைப்பதில்லையே சிறி- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
உள்நாட்டு யுத்தத்தால், புலம் பெயர்ந்து தமிழர்கள் இலட்சக்கணக்கில் இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழமுடியுமென்ற நிலை இருக்கும் போது. இது முடியாதா என்ன? சுமந்திரனுக்கு ஒரு ‘சபாஸ்’👏- வாழைப்பூ வடை
ஆக வாழைப்பூ ( வடை) நீரழிவு நோய்க்கு மருந்தாக பாவிப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை. மருத்துவர் தந்த மாத்திரைகளை ஒழுங்காக எடுத்திருந்தால் ஒருவேளை உங்கள் நண்பர் இன்னும் கொஞ்ச நாட்கள் வாழ்ந்திருக்கலாமோ என்னவோ. அதுசரி விமானத்தைப் பிடிக்கும் அவசரத்த்தில் உங்கள் நண்பரின் வாகனத்துக்கான பணத்தை கொடுக்க மறக்கவில்லைத்தானே. முன்பெல்லாம் மூங்கில் கதிரைகள் பாவனையில் இருந்தன. இப்போ பிளாஸ்ரிக் காலம். இயற்கைப் பொருட்களை பாவனைப் படுத்துவதை விட்டு நாங்கள் வெகு தூரம் வந்து வட்டோம். கதையோடு பல விடயங்களை சொல்லியிருக்கிறீர்கள்.👏🏽- அம்மனும் அமிர்தமும் (நாடகம்)
- மாவளி கண் பார்
கனா, கினா ஆனதில் அவ்வளவாகப் பிரச்சினை இல்லை. கடைசியாக வரும் கனாவுக்கு ஒற்றைக் கொம்பும் அரவும் போடாமல் விட்டீர்களே அதற்காக பேசாமல் விட்டு விடலாம்- பூரணநாயகி
அழைப்பு மணியின் சத்தம் கேட்டு அவசரமாகக் கதவைத் திறந்தாள், றீட்டா காபென்பிறாண்ட்ல். கதவைத் திறந்தவள் முன்னால் எட்டுப் பேர்கள் நின்றிருந்தனர். நிறத்தால் வேறுபட்ட அந்நிய நாட்டவர்கள். அந்த எண்மரில் ஒருவர் பெண்ணாக இருந்தார். அந்தப் பெண்ணின் முகத்தில் ஒட்டியிருந்த சோகம், குளமாயிருந்த அவளது கண்கள், றீட்டாவின் மனதை கலங்க வைத்தது. "நாங்கள்….."அவர்களில் ஒரு ஆண் அங்கு நிலவிய நிசப்தத்தை நீக்க முயற்சித்தான். றீட்டா அந்த சத்தம் வந்த திசையை நோக்கித் தன் பார்வையைத் திருப்பினாள். வந்திருந்த பெண் மட்டுமல்ல, ஆண்களும் சோகத்தில்தான் இருந்தார்கள். “இலங்கைத் தமிழர்கள். பாரிசிலிருந்து வருகின்றோம். பூரணநாயகியின் விசயம் கேள்விப்பட்டு….” பேச்சை அவர்கள் முடிக்கவில்லை. இல்லை, அவர்களால் மேற்கொண்டு பேச முடியவில்லை என்பதே சரியாக இருக்கும். இதயத்தின் அடியில் இருந்து எழுந்த அந்தச் சோகம், தொடர்ந்து சொற்களை வரவிடாமல், விழுங்கிக் கொண்டிருந்தது. றீட்டா புரிந்து கொண்டாள், இவர்கள் ஏன் வந்திருக்கிறார்கள் என்று. “உள்ளே வாருங்கள்” அன்பாக அவர்களை அழைத்தாள். மேற்கொண்டு றீட்டா எதுவும் பேசவில்லை. பேசக்கூடிய நிலையில் அவளும் இப்போதில்லை. அவர்களது சோகம் அவளிடமும் சேர்ந்து கொண்டது. சூடான உணவுகளையும், தேநீரையும் அவர்கள் முன் கொண்டு வந்து வைத்தாள் றீட்டா. "நீண்ட தூரப் பயணத்துக்கும், குளிரான இந்த நேரத்துக்கும், இச்சூடான உணவும், தேநீரும் உங்களுக்கு இதமாக இருக்கும். தயவு செய்து உணவருந்துங்கள். “நீங்கள் உணவருந்தி முடிவதற்குள் நான் 'போன்' செய்து பாதர் அம்ரொஸ் றூமரை இங்கு வரவழைக்கிறேன். அவர் உங்களுக்கு முழு விபரமும் தருவார். நான் அவரது வீட்டுச்சமையல் வேலை செய்பவள். எனது பெயர் ரீட்டா காபென்பிறான்ட்ல்." டிசம்பர் 7ம் திகதி செக் நாட்டில் இருந்து ஜேர்மனியில் உள்ள பயர்ன் மாநில எல்லையை நோக்கி முழங்கால் வரை புதையும் உறைபனியூடாக நால்வர் நடந்து வந்து கொண்டிருந்தனர். அதில் பூரணநாயகியும் இருந்தாள். அவளுடன் இன்னும் ஒரு தமிழ் இளைஞனும், இரண்டு ஏஜென்சிகளும் நடந்து வந்தனர். இரண்டு ஈழத் தமிழர்களதும் அணிந்திருந்த உடைகள் குளிர்காலத்திற்கு ஏற்றவை அல்ல. . பனிக்குளிர், பூரணநாயகி அணிந்திருந்த மெல்லிய உடுப்புகளுக்கூடாகவும், அவளது சாதாரண சப்பாத்துக்கூடாகவும் உட்புகுந்து, அவளது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் உறையச் செய்து கொண்டிருந்தது. இவர்களது திசை ஓசர் மலையை நோக்கிய குறுகிய ஒரு பாதையாக இருந்தது. ஒரு கிலோமீற்றர் உயர மலையை ஒரு விதமாகச் சென்றடைந்தார்கள். அந்த மலையின் முடிவில் ஆரம்பமாகியது ஜேர்மனிய எல்லை. முழங்கால் வரை உள்ள பனியில் காலை வைத்து திரும்ப எடுத்து நடப்பதே பெரும் சிரமமாக இருந்தது. இப்படி ஒரு தடவை காலை பனியில் வைத்து எடுக்கும் போது காலில் போட்டிருந்த இளைஞனின் சப்பாத்து பனிக்குள் புதைந்து போனது அதைத்தேடி எடுக்க அந்த இளைஞனுக்கு அவகாசமில்லை. முன்னால் சென்று கொண்டிருக்கும் அந்த ஏஜென்சிகள் தங்கள் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். பின்னால் வரும் இவ் இருவரைப் பற்றிய கவலைகள், அவர்கள் படும் வேதனைகள் அவர்களுக்குத் தேவையில்லாதிருந்தது. அவர்களுக்குத் தேவையான 'தரகு'ப் பணம் அவர்களுக்குக் கிடைத்து விட்டது. ஜெர்மனிய எல்லைக்குள் இருவரையும் விட்டுவிட்டால் ஏஜென்சிகளின் வேலை முடிந்து விடும். இருட்டுநேரம் பார்வையைத் தவறவிட்டால் ஏஜென்சிகள் மறைந்து விடுவார்கள். இளைஞன் சப்பாத்தைப் பனிக்குள் விட்டுவிட்டு காலில் போட்டிருந்த காலுறையுடன் தனது பயணத்தைத் தொடர்ந்தான் பூரண நாயகியால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. ஜேர்மனிய எல்லைக்குள், 500 மீட்டர் தூரத்தில் இருந்த ஹோட்டல் ஒன்றின் வெளிச்சம் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. பூரணநாயகியால் மேற்கொண்டு நடக்க முடியாத நிலையில் அந்த பனிக்குள் தள்ளாடியபடி இருந்து விட்டார். மறுநாள் பொழுது வழமைபோல் விடிந்தது. ஹோட்டல் உரிமையாளர் யூர்கன் கோல்ஸ், தனது ஹோட்டலின் முன்பாக நின்ற இளைஞனை உற்று நோக்கினார். ஒரு காலில் Cowboy Stiefelம், மறுகாலில் வெறும் காலுறையும் அணிந்து கொண்டு, பயத்துடன் என்ன செய்வது? என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த அந்த இளைஞனை அநுதாபத்துடன் அணுகினார். "ஏதாவது உதவி வேண்டுமா?" என்று அந்தத் தமிழ் இளைஞனை பார்த்து அவர் ஜேர்மனிய மொழியில் கேட்டதை, அந்த தமிழ் இளைஞன் விளங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.ஆனாலும் தான் ஒரு தடவை தொலைபேசியில் கதைக்கவேண்டுமென்று தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அந்த இளைஞன் கேட்டான். அதைப் புரிந்து கொண்ட யூர்கன் கோல்ஸ், அவனைத் தனது தொலைபேசியைப் பாவிக்க அநுமதித்தாரர். தொலைபேசியில் அந்த இளைஞன் கதைத்து முடித்தபின் யூர்கன் கோல்ஸிற்கு தனது நன்றிகளைத் தெரிவித்து விட்டு வெளியில் நடக்கத் தொடங்கினான். காட்டுப் பாதையொன்றில் திடீரென வந்த ஜேர்மனியப் பொலிஸாரின் கண்களில் அந்த இளைஞன் பட்டு விடுகிறான். கேள்விகளுக்கு மேல் அவர்கள் அந்தத் தமிழ் இளைஞனை கேட்கத் தொடங்கினார்கள். அவனும் எதையும் மறைக்க விரும்பவில்லை நடந்தவற்றை அப்படியே. ஒப்புவித்தான். பூரணநாயகியைத் தனது சகோதரியெனச் சொல்லி வைத்தான். ஆனால் உண்மையிலேயே பூரணநாயகி அவன் சொந்தச் சகோதரியல்ல. நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட பொலிஸார், அந்த இளைஞனையும் கூட்டிக் கொண்டு பூரணநாயகியைத் தேடிச் சென்றார்கள். அவர்கள் கண்டது, பனிகளுடன் உறைந்து போயிருந்த பூரணநாயகியின் உடலைத்தான். ஜேர்மனியப் பத்திரிகைகள், இத்தகவலை பத்திரிகைகளில் பிரசுரித்த போதும், யாருமே பூரணநாயகியைப் பற்றி உரிமை கோராத பட்சத்தில், அவரது பூதவுடல் கிறிஸ்தவ தேவாலயத்தின் பின்புறமாக இருந்த சேமக் காலையில் டிசம்பர் 14ந் திகதி கத்தோலிக்க முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. அவளின் கல்லறையில் "அமைதியாக உறங்கு" என்ற வாசகங்கள் பொருந்திய மரத்தினால் செய்த சிலுவையை வைத்து, அந்த நகரத்து மக்கள் பூக்களினால் அஞ்சலி செய்தனர். "நான் கத்தோலிக்க பாதிரியார் அம்புரோஸ் ரூமர்" பாதிரியார் தன்னை அந்த எட்டுப் பேருக்கும்" அறிமுகம் செய்து கொண்டார். தன்னுடன் கூடவந்த அந்த நகரத்து மேயர் ஜோகன் முல்பவுரையும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் எல்லோருமாக பூரண நாயகியை அடக்கம் செய்த இடத்துக்குச் சென்றனர். நன்றாக இருண்டு விட்ட நேரத்திலும், பயங்கரமான குளிருக்கு மத்தியிலும் எல்லோரும் பூரணநாயகியின் கல்லறை முன் நின்றனர். எண்மரில் ஒருவரான ஒரு பெண், இவர் பூரண நாயகியின் மூத்த சகோதரி, கல்லறை மேல் விழுந்து கதறியழுத காட்சி மேஐரை கரைத்துவிட்டது. "ஒரு பெண்ணின் சடலம். இறந்தது டிசம்பர் 7ந் திகதி காலை 9.45 மணிக்கு, என்ற தகவலே எனக்குத் தெரியும். ஆனால்...... இப்படி ....இதன் பின்னால் ஒரு மனித சோகத்தை நான் எதிர்பர்க்க வில்லை." என்று மேஜர் கண்கள் கலங்க அந்த இடத்தில் கூறினார். "பூரண நாயகி ஒரு இந்துவாக இருந்த போதிலும், அவரை அடக்கம் செய்து அஞ்சலி செய்வது எங்களது கடமை. நான் அரசியல்வாதியாகவோ, காவல் துறையிலோ இருக்க விரும்பவில்லை. அகதிகளாக அல்லல் பட்டு, உயிர் வாழ நம்பிக்கையுடன் ஓடி வரும் மக்களை அரவணைத்து ஆதரவு தரவே விரும்புகிறேன" எனப் பாதிரியார் அம்புரோஸ் ரூமர் தனது உரையில் தெரிவித்தார். ஏஜென்சிகளை நம்பி, ஜேர்மன் எல்லையில் ஆற்றைக் கடக்கும் போதும், குளிரினாலும் பல அகதிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள் லொறிகளில் அடைத்து வரப்பட்டு மூச்சுத்திணறியும் பலர் இறந்திருக்கிறார்கள். 1995ம் ஆண்டு ரூமேனியாவில் இருந்து ஹங்கேரி ஊடாக ஜேர்மனிக்கு கொண்டு வரப்பட்ட 18 அகதிகள் லொறிக்குள் மூச்சுத் திணறி இறந்திருக்கிறார்கள். கண்மூடித்தனமாக ஏஜென்சிகளை நம்பி, பெரும் பணத்தைக் கொடுத்து, உயிரைப் பணயம் வைக்கும் செயல் இதுவென ஜேர்மனிய காவல்துறை தெரிவித்திருந்தது. ஐரோப்பிய நாடுகள், அகதிகளாக வரும் வெளி நாட்டவர்கள், தங்கள் நாடுகளுக்குள் நுளைய முயலும் ஒவ்வொரு வழிகளையும் கண்டறிந்து மூடி வருகிறார்கள். ஆனாலும் அகதிகளாக வருபவர்கள் ஏதாவது வழியில் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். கிருபன் இணைத்திருந்த ஷோபா சக்தியின் “பொப்பி என்பது புனை பெயர்” கதையை வாசித்த போது, எனக்கு நினைவுக்கு வந்தது பூரணநாயகியின் சம்பவம்தான். 1995ம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவம். நான் நினைக்கிறேன், ஐரோப்பிய நாட்டுக்குள் நுளையும் ஈழத் தமிழர்களின் முதல் மரணம் பூரணநாயகியினுடையதாகவே இருக்க வேண்டும். 07.12.1995இல் நிகழ்ந்த அந்த மரணத்தைப் பற்றி அப்பொழுது நான் எழுதியது இது. சரியாக முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு (07.12.2025) கிருபன் பூரணநாயகியை நினைவூட்டியிருக்கின்றார்.- நாயகி
- ஜேர்மனியில் யாழ் இளைஞர் விபரீத முடிவு.!
Important Information
By using this site, you agree to our Terms of Use.