Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, டார்ட் விண்வெளி திட்டத்தின் மாதிரிப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, அறிவியல் நிருபர் 8 அக்டோபர் 2024 புதுப்பிக்கப்பட்டது 9 அக்டோபர் 2024 அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையான நாசா, 2022-ல் ஏவிய 'டார்ட்' விண்கலம் விண்ணில் உள்ள ஒரு சிறுகோளில் மோதியது அனைவருக்கும் நினைவிருக்கும். தற்போது அந்த சிறுகோளைப் பார்வையிட ஒரு விண்கலம் சென்று கொண்டிருக்கிறது. ஆம், திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி 10:52 மணிக்கு (15:52 BST) புளோரிடாவில் உள்ள கேப் கேனவரலில் இருந்து `ஹெரா கிராஃப்ட்’ ( Hera craft) ஏவப்பட்டது. பூமியைத் தாக்கும் ஆபத்தான சிறுகோள்களை நம்மால் தடுக்க முடியுமா என்பதை சோதித்து பார்க்கும் ஒரு சர்வதேச ஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக இந்த விண்கலம் ஏவப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டில், நாசாவால் திட்டமிடப்பட்ட அந்த மோதல் மூலம், 'டார்ட்' விண்கலம் டிமார்போஸ் (Dimorphos) என்ற சிறுகோள் மீது மோதியது. அவ்வாறு மோதிய போது `டிமார்போஸ்’ என்ன ஆனது என்பதை ஆய்வு செய்வதே தற்போது ஏவப்பட்டுள்ள `ஹெரா கிராஃப்ட்’ விண்கலத்தின் பணி. இரண்டு ஆண்டுகளில் இலக்கை அடையும் ஹெரா விண்கலம் எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், 2026 டிசம்பரில் `ஹெரா கிராஃப்ட்’ ஏழு மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள டிமார்போஸை சென்றடையும். ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியால் மேற்கொள்ளப்படும் `ஹெரா மிஷன்’, நாசாவின் இரட்டை சிறுகோள் திசைமாற்ற சோதனை (Double Asteroid Redirection Test - DART) திட்டத்தின் ஒரு பகுதி. டிமார்போஸ் (Dimorphos) என்பது 160 மீ அகலமுள்ள ஒரு சிறிய நிலவு. இது பூமிக்கு அருகில் உள்ள டிடிமோஸ் (Didymos) எனப்படும் சிறுகோளை சுற்றி வருகிறது. டிமார்போஸ் , டிடிமோஸை சுற்றி வருவதால் இது இரட்டை சிறுகோள்கள் அமைப்பு ( binary asteroid system) என அழைக்கப்படுகிறது. 2022-ஆம் ஆண்டில் மோதல் ஏற்படுத்தியதன் மூலம் டிமார்போஸின் போக்கை வெற்றிகரமாக மாற்றியமைத்ததாக நாசா கூறியது. நாசா விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த மோதல் சிறுகோளின் பாதையை சில மீட்டர்களுக்கு மாற்றியது. டிமார்போஸ் சிறுகோள் அமைப்பு பூமியைத் தாக்கும் போக்கில் இல்லை. ஆனால், பூமியை சிறுகோள்கள் மோதும் அபாயம் வரும்போது, விண்வெளி முகமைகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை சோதிக்கவே இந்த திட்டம் செயல்படுகிறது. இரண்டு வருடங்களில் `ஹெரா கிராஃப்ட்’ இலக்கை சென்றடைந்ததும், டிமார்போஸ் சிறுகோளின் மேற்பரப்பு, நாசாவின் டார்ட் விண்கலம் மோதி ஏற்பட்ட பள்ளம் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்ய உள்ளது. பட மூலாதாரம்,SPACEX படக்குறிப்பு, ஹெரா கிராஃப்ட் டிமார்போஸ் சிறுகோளை அடைய இரண்டு ஆண்டுகள் ஆகும் இரண்டு கனசதுர வடிவிலான இரண்டு சிறிய செயற்கைக்கோள்கள் டிமார்போஸின் அமைப்பு மற்றும் நிறை அளவை பகுப்பாய்வு செய்யும். "இந்த சிறுகோள்களின் இயற்பியல் பண்புகள் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவை எதனால் ஆனவை? அவை மணலால் உருவானவையா? என அதன் அமைப்பை நாம் ஆராய வேண்டும்” என்று ஐரோப்பிய விண்வெளி முகமையின் விஞ்ஞானி நவோமி முர்டோக் கூறினார். எதிர்காலத்தில் பூமியை நோக்கி வரும் பல்வேறு அளவுகள் மற்றும் வடிவங்களைக் கொண்ட பிற சிறுகோள்களை இடைமறிக்க முயற்சிப்பதற்கான சிறந்த வழியைப் புரிந்துகொள்ள இது விஞ்ஞானிகளுக்கு உதவும். சிறுகோள்களால் டைனோசர் காலத்தில் நிகழ்ந்த அழிவு மீண்டும் நிகழுமா? ஒருவேளை சிறுகோள் பூமியைத் தாக்கினால், டைனோசர் காலகட்டத்தில் நடந்ததை போன்று நாம் அழிந்துவிடுவோம் என்பதை விஞ்ஞானிகள் நம்பவில்லை. அதுபோன்ற அபாயம் தற்போது இருப்பதாக தெரியவில்லை என்கின்றனர். பூமியை சேதப்படுத்தும் அளவுள்ள ஒரு சிறுகோள் விண்வெளியில் எளிதில் கண்டுபிடிக்கப்பட்டு விடும். டார்ட் மற்றும் ஹெரா விண்கலங்கள் இலக்கு வைக்கும் சிறுகோள்களின் அளவு சுமார் 100-200m அகலம் கொண்டது. இவற்றை நமது கிரகத்தில் இருந்து பார்ப்பது மிகவும் கடினம். சில விண்கற்கள் அவ்வப்போது பூமியைத் தாக்கும். 2013-ஆம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள செல்யாபின்ஸ்க் நகருக்கு மேலே, வானத்தில் ஒரு வீட்டளவில் இருந்த சிறுகோள் ஒன்று வெடித்துச் சிதறியது. அதன் விளைவாக அப்பகுதியில் கட்டடங்கள் சேதமடைந்தன. மேலும், 1,600 பேர் காயமடைந்தனர். இதுபோன்ற சிறுகோள்களை எதிர்காலத்தில் அடையாளம் கண்டு அவற்றை திசைதிருப்ப முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். "இது மனித இனத்தின் அழிவைத் தவிர்ப்பதற்காக அல்ல. நம்மால் முடிந்த அளவு சேதத்தை குறைக்க ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். டைனோசர் காலத்தில் விண்வெளித் திட்டங்கள் இல்லை, ஆனால் நம்மால் அது முடியும்” என்கிறார் பேராசிரியர் முர்டோக். ஆனால், ஒரு சிறுகோளின் போக்கை மாற்றுவது சாத்தியம் என்று நாசா நிரூபித்திருந்தாலும், எல்லா விண்வெளிப் பாறைகளிலும் இவ்வளவு எளிதாக நம்மால் மோதல் நிகழ்த்த முடியாது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஒரு சிறுகோள் பூமியைத் தாக்குவதற்கு முன் இடைமறிக்க வேண்டுமெனில், முதலில் பூமியை அது நெருங்கி வருவதை நாம் முன்னதாகவே கண்டறிவது அவசியம். https://www.bbc.com/tamil/articles/cj4dze29wexo
  2. 10 OCT, 2024 | 11:17 AM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வந்தமைக்காக சில பொலிஸ் அதிகாரிகள் தன்னை கைதுசெய்ய முயல்கின்றனர் என ஊடகவியலாளர் தரிந்து ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார் பதில் பொலிஸ்மா அதிபருக்கு எழுதிய கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.அந்த கடிதத்தில் தன்னை கைதுசெய்வதற்கு பொலிஸ் அதிகாரிகள் சிலர் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக தான் தொடர்ச்சியாக வெளியிடும் செய்திகளுடன் தொடர்புபட்டதே இந்த விடயம் என அவர் தெரிவித்துள்ளார். நான் செய்திகளை வெளியிடுவது விசாரணைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என சிஐடியினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர் என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தரிந்து ஜெயவர்த்தன அது பொய்யான குற்றச்சாட்டு என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195921
  3. பொதுத்தேர்தல்; தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான திகதி குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் குறிப்பிடப்படுவதாவது, மாவட்டச் செயலக அலுவலகங்கள், தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் பிரிவின் ஏனைய அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 4 ஆகிய இரு திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும். மேலும், அரச அலுவலகங்கள் மற்றும் இராணுவ முகாம்களில் பணிபுரிபவர்கள் நவம்பர் 1 மற்றும் நவம்பர் 4 ஆகிய இரு திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும். இதேவேளை, தபால் மூல வாக்களிப்புக்காக வழங்கப்பட்டுள்ள திகதிகளில் வாக்களிக்க முடியாத அனைத்து அரச ஊழியர்களும் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 8 ஆகிய இரு திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/195909
  4. பிறப்பு முதல் இறப்பு வரை நல்ல மன ஆரோக்கியத்தை பேணுவது முக்கியம் என மனநல தினச் செய்தியில் பிரதமர் ஹரிணி அமர சூரிய தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 2024 உலக மனநல தினம், பணியிடத்தின் பௌதீக சூழல் நிலைமை, மன அழுத்த மேலாண்மை செய்தல் முதல் செயல்படுத்தல் மற்றும் சமூகதிற்கு இயைவாக்குதல் வரையான முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. பணியிடத்தில் மனநலத்திற்கு முதலிடம் கொடுப்போம் என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருள். மன ஆரோக்கியத்திற்கும் பணியிடத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவைப் புரிந்துகொள்வதும் முக்கியம். ஆரோக்கியமான பணியாளர்கள் கூட மோசமான பணிச்சூழலில் உடல் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். பணியாளர்கள் உணர்ந்து மனநலத்தில் கவனம் செலுத்தினால், அது ஊழியர்களின் மன அழுத்தம் குறைதல், பணிக்கு வராமல் இருப்பது குறைவடைதல் மற்றும் அவர்களின் வேலையில் ஈடுபாடும் அதிகரிக்கும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மனநல சுதந்திரத்தை அனுபவிப்பதன் மூலம் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பது எனது எண்ணம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195910
  5. இந்தியா - வங்கதேசம்: நிதிஷ் குமார் ரெட்டியின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் டி20 தொடரை வென்ற இந்திய அணி பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி, ரிங்கு சிங்கின் அற்புதமான பேட்டிங் டெல்லியில் நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற உதவியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் சேர்த்தது. 222 ரன்கள் எனும் இமாலய இலக்கைத் துரத்திய வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்து 86 ரன்களில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையுடன், தொடரை வென்றது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்த அனைத்து டி20 தொடர்களையும் இந்திய அணி வென்று வருகிறது. அந்த வகையில் உள்நாட்டில் இந்திய அணி வெல்லும் 16வது டி20 தொடர் இது. இளம் கூட்டணி இந்திய அணி ஒரு கட்டத்தில் 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி, ரிங்கு சிங் கூட்டணி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு பெரிய ஸ்கோருக்கு அழைத்துச் சென்றனர். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா(32), ரியான் பராக்(15) அருமையான கேமியோ ஆடி பெரிய ஸ்கோருக்கு இட்டுச் சென்றனர். ஆட்டநாயகன் நிதிஷ் குமார் ரெட்டி நிதிஷ் குமார் ரெட்டி அறிமுகமாகி 2வது போட்டியிலேயே இந்திய அணியை இக்கட்டான சூழலில் இருந்து மீட்டு முத்தாய்ப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஆட்டத்தில் நிதிஷ் குமார் தனது முதலாவது டி20 அரைசதத்தைப் பதிவு செய்து, 34 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். நிதிஷ் குமார் 217 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். அவரது கணக்கில் 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அற்புதமான ஆட்டத்தையும், பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய நிதிஷ்குமார் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்திய டி20 அணிக்கு நீண்டகாலத்துக்குப்பின் அற்புதமான ஆல்ரவுண்டராக நிதிஷ் குமார் ரெட்டி கிடைத்துள்ளார். இதுபோன்ற ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, அபிஷேக் ஷர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர் என நீண்ட பட்டியல் இந்திய அணிக்கு இருப்பது மிகப்பெரிய பலம். வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் பேசியபோது, “மூன்று விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் என்ற நிலையை நான் விரும்பினேன். அப்போதுதான் நடுவரிசை பேட்டர்கள் எவ்வாறு பேட் செய்வார்கள், அணியை தூக்கி நிறுத்துவார்கள் என்பதைப் பார்க்க முடியும்," என்று கூறினார். 7 பந்துவீச்சாளர்களுக்கும் விக்கெட் பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லி மைதானம் அளவில் சிறியது, பேட்டர்களுக்கு சொர்க்கபுரி, இந்த மைதானத்திலும் தங்களால் சிறப்பாகப் பந்துவீச முடியும் என்பதையும் இந்திய பந்துவீச்சாளர்கள் வெளிப்படுத்தினர். கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக வந்தபின் அணியில் பந்துவீசும் திறமையுள்ள பேட்டர்கள் அனைவரும் பந்துவீச வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு ஏற்றாற்போல் எப்போதுமில்லாத வகையில் நேற்று 7 பந்துவீச்சாளர்களை இந்திய அணி பயன்படுத்தியது. ஏழு பந்துவீச்சாளர்களும் ஏமாற்றமின்றி விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதில் நிதிஷ்குமார் ரெட்டி, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் ஷர்மா, அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், மயங்க் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்திய அணியை எந்த நிலையிலும் தூக்கி நிறுத்தக்கூடிய இளம் பேட்டர்கள், ஆல்ரவுண்டர்கள் அதிகமான அணி, பந்துவீச்சு தேர்வுக்குப் பஞ்சமில்லாத வீரர்கள் என வேறு கட்டத்துக்கு இந்திய டி20 அணி முன்னேற்றப்படுகிறது. இந்திய அணியின் இந்த உருமாற்றம், நிச்சயம் உலக அணிகளுக்கு எதிர்காலத்தில் பெரிய சவாலாக மாறக்கூடும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணிக்கின்றனர். வங்கதேச அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் 12 ஓவர்கள் வீசி 102 ரன்களையும், சுழற்பந்துவீச்சாளர்கள் 8 ஓவர்கள் வீசி 116 ரன்களையும் வாரி வழங்கினர். ஆனால், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் 9 ஓவர்கள் வீசி 49 ரன்களை மட்டுமே வழங்கி, 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் எந்த ஆடுகளத்திலும் பந்துவீச முடியும் என்பதை இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் நிரூபித்து வருகிறார்கள். டாப் ஆர்டர் தடுமாற்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES டாஸ் வென்ற வங்கதேச அணி இரவுநேரப் பனிப்பொழிவை பயன்பபடுத்தும் நோக்கில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதற்கு ஏற்றாற்போல் இந்திய டாப் ஆர்டர் பேட்டர்கள் சஞ்சு சாம்ஸன்(10) தஸ்கின் அகமது பந்துவீச்சிலும், ஹசன் சஹிப் பந்துவீச்சில் அபிஷேக் ஷர்மா(15), முஸ்தபிசுர் ரஹ்மான் வேகத்தில் கேப்டன் சூர்யகுமார் யாதவ்(8) என பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். பவர்ப்ளே முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் சேர்த்து தடுமாறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட வங்கதேசம் அதன் பிறகு 4வது விக்கெட்டுக்கு நிதிஷ் குமார் ரெட்டி, ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கினர். அதிலும் நிதிஷ் குமார் ரெட்டியை ஆட்டமிழக்கச் செய்ய வங்கதேசத்துக்கு கிடைத்த இரு வாய்ப்புகளையும் அந்த அணி வீரர்கள் கோட்டைவிட்டனர். நிதிஷ் குமார் 6 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், தன்ஜிம் வீசிய ஓவரில் லிட்டன் தாஸ் கைக்கு ஒரு கேட்ச் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தவறவிட்டார். பிறகு நிதிஷ் குமார் 19 ரன்களில் இருந்தபோது, கால்காப்பில் வாங்கியபோது, நடுவர் அதை நோ-பால் என அறிவித்தார். அது நோபாலாக இல்லாமல் இருந்திருந்தால் நிதிஷ் குமார் ஆட்டமிழந்திருப்பார். மெகமதுல்லா வீசிய 9வது ஓவரில் நிதிஷ் குமார் ஒரு சிக்ஸர், பவுண்டரி என 15 ரன்களும், ரிஷாத் ஹூசைன் வீசிய 10வது ஓவரில் ரிங்கு சிங் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரும், நிதிஷ் குமார் 2 சிக்ஸர்களும் விளாசி, அணியின் ஸ்கோரை 100 ரன்களுக்கு உயர்த்தினர். ரிஷாத் ஓவரில் மட்டும் 24 ரன்களை இந்திய பேட்டர்கள் சேர்த்தனர். முதல் டி20 அரைசதம் பட மூலாதாரம்,GETTY IMAGES அதிரடியாக பேட் செய்த நிதிஷ் குமார் ரெட்டி 27 பந்துகளில் தனது முதலாவது டி20 அரைசதத்தை நிறைவு செய்தார். அதேபோல மெஹதி ஹசன் வீசிய 13வது ஓவரில் நிதிஷ் குமார் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 26 ரன்கள் சேர்த்தார். அதன்பின் முஸ்தபிசுர் வீசிய 14வது ஓவரில் மெஹதி ஹசனிடம் கேட்ச் கொடுத்து நிதிஷ் குமார் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா, தனது பங்கிற்கு கேமியோ ஆடி வங்கதேசத்தின் பந்துவீச்சை சிதறடித்தார். ரிஷாத் ஹூசைன் 15வது ஓவரில் ஒரு சிக்ஸர், பவுண்டரியும் விளாசினார். தன்சிம் ஹசன் வீசிய 16வது ஓவரில் ரிங்கு சிங் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி 26 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்து, தஸ்கின் பந்துவீச்சில் 53 ரன்களில் ரிங்கு சிங் ஆட்டமிழந்தார். கடைசியில் களமிறங்கிய ரியான் பராக்(15), ஹர்திக் பாண்டியா(32) இருவரும் கேமியோ ஆடி ஸ்கோரை 221 ரன்களுக்கு உயர்த்திச் சென்றனர். இதில் ரிஷாத் ஹூசைன் வீசிய கடைசி ஓவரில் மட்டும் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் என 3 விக்கெட்டுகள மளமளவென இழந்தது சற்றுப் பின்னடைவாகும். போராடாத வங்கதேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES வங்கதேச அணி 222 ரன்கள் எனும் மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கியது. அர்ஷ்தீப் வீசிய 2வது ஓவரிலேயே வங்கதேசம் முதல் விக்கெட்டை இழந்தது. அதன்பின் ஓவருக்கு ஒரு விக்கெட் வீதம் பவர்ப்ளே முடிவுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் எனத் தடுமாறியது. வருண் வீசிய ஓவரில் கேப்டன் ஷாண்டோ(11), வாஷிங்டன் சுந்தர் ஓவரில் லிட்டன் தாஸ்(14), அபிஷேக் ஷர்மா ஓவரில் ஹர்தாய்(2) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. வங்கதேச அணி 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் சேர்த்தது. ரியான் பராக் வீசிய 11வது ஓவரில் மெஹதி ஹசன்(16) விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் வந்த கடைசி வரிசை பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக மெஹமதுல்லா (41) ரன்கள் சேர்த்து நிதிஷ்குமார் ரெட்டி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் வங்கதேசம் அணி 33 ரன்கள் மட்டுமே சேர்த்து 2 விக்கெட்டுகளை இழந்தது. வங்கதேச அணி டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 2018ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 215 ரன்கள் சேர்த்தது. இந்த ஸ்கோரை இதுவரை அந்த அணியாலேயே கடக்க முடியவில்லை. ஏறக்குறைய 6 ஆண்டுகளாகப் பல்வேறு டி20 போட்டிகளில் வங்கதேசம் ஆடியிருந்தாலும், 215 ரன்கள்தான் அதன் அதிகபட்ச ஸ்கோர். இந்த ஆட்டத்திலும் அது தொடர்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj9j4zlvgvdo
  6. இந்தியாவிடம் சரணடைந்த ஆசிய சம்பியன் இலங்கை முதல் சுற்றுடன் வெளியேறுகிறது; இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பு ஊசலாடுகிறது (நெவில் அன்தனி) துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (09) இரவு நடைபெற்ற ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் இந்தியாவிடம் சரணடைந்த ஆசிய சம்பியன் இலங்கை முதல் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாயிற்று. இந்தப் போட்டியில் இலங்கையை விஞ்சும் வகையில் சகலதுறைகளிலும் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய இந்தியா 82 ஓட்டங்களால் வெற்றியீட்டிய போதிலும் அதன் அரை இறுதி வாய்ப்பு ஊசலாடிய வண்ணம் இருக்கிறது. இந்தியாவின் கடைசிப் போட்டி, 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரானதாகும். அதேவேளை இலங்கையையும் பாகிஸ்தானையும் 2 புள்ளிகள் பெற்றுள்ள நியூஸிலாந்து எதிர்த்தாடவுள்ளது. இன்றைய வெற்றியுடன் இந்தியா 4 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இலங்கையுடனான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 172 ஓட்டங்களைக் குவித்தது. இந்தியாவின் முன்வரிசை வீராங்கனைகள் அனைவரும் சிறந்த பங்களிப்பை வழங்கி மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர். ஷபாலி வர்மா, ஸ்ம்ரித்தி மந்தனா ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 76 பந்துகளில் 98 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். எனினும் இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர். ஸ்ம்ரித்தி மந்தனா 38 பந்துகளில் 50 ஓட்டங்களையும் ஷபாலி வர்மா 40 பந்துகளில் 43 ஓட்டங்களையும் பெற்றனர். அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர், ஜெமிமா ரொட்றிக்ஸ் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 30 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ரொட்றிக்ஸ் 16 ஓட்டங்களுடன் வெளியேறினார். அதன் பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாமன்ப்ரீத் கோர் 27 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட ஆட்டம் இழக்காமல் 52 ஓட்டங்களை விளாசினார். ரிச்சா கோஷ் 6 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 20 பந்துகளில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பந்துவீச்சில் அமா காஞ்சனா 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் சமரி அத்தபத்து 34 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். மிகவும் கடினமான 173 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 90 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இந்த வருட ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இலங்கை இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் 100 ஓட்டங்களைப் பெறத் தவறியது. இலங்கை துடுப்பெடுத்தாடியபோது இந்தியாவின் வழமையான அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் களத்தடுப்பில் ஈடுபடவில்லை. அவருக்கு பதிலாக உதவி அணித் தலைவி ஸ்ம்ரித்தி மந்தனா தலைவர் பதவியை பொறுப்பேற்று அணியை சிறப்பாக வழிநடத்தினார். ஹாமன்ப்ரீத் கோருக்குப் பதிலாக ராதா யாதவ் களத்தடுப்பில் ஈடுபட்டார். அவர் மிகவும் சிரமமான பிடி ஒன்று உட்பட மூன்று பிடிகளை எடுத்தார். இந்தப் போட்டியிலும் இலங்கையின் ஆரம்பம் மோசமாகவே இருந்தது. விஷ்மி குணரட்ன (0) இரண்டாவது பந்திலும் சமரி அத்தபத்து (1) இரண்டாவது ஓவரிலும் ஹர்ஷித்தா சமரவிக்ரம (3) மூன்றவாது ஓவரிலும் ஆட்டம் இழக்க இலங்கையின் மொத்த எண்ணிக்கை வெறும் 6 ஓட்டங்களாக இருந்தது. இந் நிலையில் துணிச்சலுடன் எதிர்த்தாடுவதே சிறந்தது என்ற கோட்பாட்டிற்கு அமைய கவிஷா டில்ஹாரியும் அனுஷ்கா சஞ்சீவனியும் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை 43 ஓட்டங்களாக உயர்த்தினர். அந்த சந்தர்ப்பத்தில் சற்று அவசரப்பட்ட அனுஷ்கா சஞ்சீவனி 20 ஓட்டங்களுடன் ஸ்டம்ப் செய்யப்பட்டு விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து நிலக்ஷிகா சில்வா (8) ஆட்டம் இழந்தார். (57 - 5 விக்.) மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த கவிஷா டில்ஹாரி 21 ஓட்டங்ளைப் பெற்ற நிலையில் பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்து பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் சுகந்திகா குமாரி (1), இனோஷி ப்ரியதர்ஷனி (1) ஆகிய இருவரும் விரைவாக ஆட்டம் இழந்தனர். (65 - 5) மறுமுனையில் ஓரளவு திறமையாக துடுப்பெடுத்தாடிய அமா காஞ்சனா 19 ஓட்டங்களைப் பெற்றார். உதேஷிக்கா ப்ரபோதனி 9 ஓட்டங்களுடன் கடைசியாக ஆட்டம் இழந்தார். பந்துவீச்சில் அருந்ததி ரெட்டி 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஆஷா சோபனா 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரேணுகா சிங் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: ஹாமன்ப்ரீத் கோர் https://www.virakesari.lk/article/195900
  7. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நாடின் யூசிப் பதவி, பிபிசி நியூஸ் 9 அக்டோபர் 2024 அமெரிக்காவின் மூத்த மற்றும் பிரபல நிருபர் பாப் உட்வர்டின் புதிய புத்தகம் ஒன்று, ‘டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் கோவிட்-19 சோதனை இயந்திரங்கள் பற்றாக்குறையாக இருந்தபோது, அவற்றை ரஷ்ய அதிபர் புதினின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ரகசியமாக அனுப்பி வைத்தார்’ என்று கூறுகிறது. ஆனால் இந்தக் கூற்றை டிரம்பின் பிரச்சாரக் குழு நிராகரித்துள்ளது. 'வார்' (War) என்று பெயரிடப்பட்ட அந்த புத்தகத்தில், டிரம்ப் அதிபர் பதவியை விட்டு வெளியேறிய பிறகும் கூட ரகசியமாக புதினுடன் தொடர்பில் இருந்தார் என, அமெரிக்க ஊடகங்கள் மேற்கோள் காட்டிய பகுதிகளைக் குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது. இதற்குப் பதிலளித்த அதிபர் டிரம்ப், "அவர் (பாப் உட்வர்ட்) ஒரு கதைசொல்லி, அதிலும் மோசமானவர். அவர் தன்னிலையை இழந்துவிட்டார்," என ஏ.பி.சி நியூஸ் சேனலிடம் கூறினார். இவை கற்பனைக் கதைகள் என்றும், இதில் எந்த உண்மையும் இல்லை என்றும் டிரம்ப்-இன் பிரசாரக் குழு கூறியுள்ளது. 'புதினுடன் தொடர்பில் இருந்த டிரம்ப்' டிரம்ப் பிரசாரக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் செவ்வாயன்று (அக்டோபர் 😎 பிபிசிக்கு அளித்த பதிலில், “தள்ளுபடி விலையில் புத்தகங்களை விற்கும் ஒரு கடையின், புனைகதைப் பிரிவில் இருக்கவேண்டிய புத்தகம் இது. அல்லது கழிவறை டிஷ்யூக்களாக இது பயன்படுத்தப்படும். இந்தக் குப்பை புத்தகத்தை எழுதுவதற்காகத் தன்னைச் சந்திக்க டிரம்ப் ஒருபோதும் அந்த எழுத்தாளருக்கு அனுமதி வழங்கவில்லை,” என்று கூறினார். அடுத்த வாரம் வெளிவரும் இந்த ‘வார்’ எனும் புதிய புத்தகம், முன்னாள் அதிபர் டிரம்புக்கும் புதினுக்கும் இடையேயான தொடர்புகள் குறித்த தகவல்களை டிரம்பின் உதவியாளர் ஒருவர் அளித்தார் என்று கூறுகிறது. அந்த உதவியாளரின் பெயர் வெளியிடப்படவில்லை. 'தி நியூயார்க் டைம்ஸ்' நாளிதழின் செய்தி அறிக்கையின், ஒருமுறை மார்-ஏ-லாகோவில் உள்ள (புளோரிடாவில் உள்ள கடற்கரைப் பகுதி) டிரம்பின் அலுவலகத்தில் இருந்து அவரது உதவியாளர் வெளியேற உத்தரவிடப்பட்டது குறித்து அந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப், புதினுடன் தொலைபேசியில் தனியாகப் பேச வேண்டும் என்பதற்காகவே அந்த உதவியாளர் வெளியேற்றப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. 2021-ஆம் ஆண்டு, டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியதில் இருந்து இருவரும் குறைந்தது 6 முறை பேசியிருக்கலாம் என்று அந்த உதவியாளர் தெரிவித்துள்ளார். ஆனால் ரஷ்ய அரசு கடந்த புதன்கிழமை (அக்டோபர் 2) அன்று இந்தக் குற்றச்சாட்டை மறுத்தது. டிரம்ப், புதின் இருவரும் என்ன விவாதித்தார்கள் என்று புத்தகம் கூறவில்லை, ஆனால் இருவருக்கும் இடையேயான தொடர்பு குறித்து டிரம்ப் பிரசாரக் குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் சந்தேகங்கள் எழுப்பியதை மேற்கோள் காட்டி அது விவரிக்கிறது. புத்தகத்தின் பிரதியை பிபிசி இன்னும் பார்க்கவில்லை. டிரம்பின் உதவியாளரது கூற்றைத் தன்னால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று பாப் உட்வர்ட் கூறியதாக டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. மேலும் டிரம்ப் பதவியை விட்டு வெளியேறிய பிறகு, அவரும் புதினும் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டது பற்றி வேறு நபர்கள் அறிந்திருக்கவில்லை என்றும் அந்த செய்தித்தாள் கூறுகிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன், அதிபர் பதவியிலிருந்து விலகுவதற்கு காரணமாக இருந்த வாட்டர்கேட் (Watergate) ஊழலை வெளிக்கொணர்வதில் பெரும் பங்காற்றியவர் மூத்த நிருபர் பாப் உட்வர்ட். உயர்மட்ட நபர்களை அணுகி, தகவல்களைப் பெறுவதன் அடிப்படையில் பல புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். அவை அதிகளவில் விற்பனையும் ஆகியுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நவம்பர் 05 தேர்தலுக்கு சில வாரங்களே இருக்கும்போது, டிரம்புக்கும் புதினுக்கும் இடையிலான உறவு பற்றிய கேள்விகளை இந்த கூற்றுக்கள் மீண்டும் எழுப்பியுள்ளன புதினுக்கு கோவிட் சோதனைக் கருவிகள் அனுப்பினாரா டிரம்ப்? உட்வர்டை ‘மனவளர்ச்சி குன்றியவர்’ என்றும் 'குழப்பமடைந்தவர்’ என்றும் விவரித்த டிரம்ப் பிரசாரக் குழுவின் செய்தித் தொடர்பாளர், “உட்வர்ட் மலிவான எண்ணங்கள் கொண்ட மனிதர். மேலும் அவர் முன்பு டிரம்புடன் செய்த நேர்காணல் பதிவுகளை அங்கீகாரம் பெறாமல் வெளியிட்டார். இதனால் டிரம்ப் அவர் மீது வெற்றிகரமாக வழக்குத் தொடுத்துள்ளதால், உட்வர்ட் வருத்தத்தில் இருக்கிறார் போல," என்று கூறினார். 'ரேஜ்' (Rage) என்ற, 2021-ஆம் ஆண்டு புத்தகத்திற்காக டிரம்ப் முன்பு உட்வர்டிடம் பேசியிருந்தார். இருவருக்குமான நேர்காணல்களின் பதிவுகளை அனுமதி இன்றி உட்வர்ட் வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் டிரம்ப், உட்வர்ட் மீது வழக்குத் தொடர்ந்தார். ஆனால் உட்வர்ட் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தார். தனது ‘வார்’ புத்தகத்தில் இப்படி எழுதுகிறார் உட்வர்ட்: “முன்னாள் அதிபர் டிரம்ப் பதவியில் இருந்தபோது, புதினுக்கு அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ‘அபோட் பாயிண்ட் ஆஃப் கேர் கோவிட் சோதனை இயந்திரங்களை’ ரகசியமாக அனுப்பி வைத்தார்". அமெரிக்க ஊடகங்களில் வெளியான உட்வர்டின் புத்தகத்தின் மறுபரிசீலனையின் படி, அப்போது கொரோனா வைரஸால் நோய்வாய்ப்படுவதைப் பற்றி புதின் அதிகம் கவலைப்பட்டதாகக் கூறப்படுகிறது. 'டிரம்பின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்ற அச்சத்தில், தனக்கு கோவிட் சோதனை இயந்திரங்களை அனுப்பியதை பகிரங்கமாக கூற வேண்டாம்' என்று புதின் டிரம்பைக் கேட்டுக் கொண்டதாக அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாக டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது. “ ‘நீங்கள் யாரிடமும் இதைப் பற்றி சொல்வதை நான் விரும்பவில்லை, ஏனென்றால் மக்கள் உங்கள் மீது தான் கோபப்படுவார்கள். என் மீது அல்ல’ என்று புதின் டிரம்பிடம் கூறியதாக” ‘வார்’ புத்தகத்தை மேற்கோள் காட்டி டைம்ஸ் செய்தித்தாள் கூறுகிறது. அதற்கு டிரம்ப், "நான் அது குறித்து கவலைப்படவில்லை.” என்று பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. நவம்பர் 5 அமெரிக்க அதிபர் தேர்தலுக்குச் சில வாரங்களே இருக்கும்போது, டிரம்புக்கும் புதினுக்கும் இடையிலான உறவு பற்றிய கேள்விகளை இந்தக் கூற்றுக்கள் மீண்டும் எழுப்பியுள்ளன. முன்னாள் அதிபர் டிரம்ப், அமெரிக்கத் தேர்தல்களுக்காக ரஷ்யாவுடன் கூட்டுச் சேர்ந்ததாக கடந்த காலங்களில் குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும் நீதித்துறையின் விசாரணையில் இதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அதேபோல டிரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த குற்றச்சாட்டின் விசாரணையைத் தடுத்தாரா என்பது குறித்தும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 'தி வாஷிங்டன் போஸ்ட்' செய்தித்தாளின் படி, ‘கடந்த நான்கு வருடங்களில் நிகழ்ந்த வெளிநாட்டு மோதல்கள் மற்றும் அப்போது இருந்த மோசமான அமெரிக்க அரசியல் சூழல்கள், ஆகியவற்றில் டிரம்பிற்கு இருந்த பங்கையும் இந்த புத்தகம் ஆராய்கிறது’. மெர்ரிக் கார்லண்டை அட்டர்னி ஜெனரலாக தேர்வு செய்தது போன்ற, தனது சொந்த தவறுகள் குறித்த அதிபர் ஜோ பைடனின் வெளிப்படையான விமர்சனமும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. சிறப்பு வழக்கறிஞர் கார்லண்ட், ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீதான வழக்கின் விசாரணையை முன்னெடுத்தார். இந்த விவகாரம் குறித்து தனது உதவியாளர் ஒருவரிடம் பேசியபோது, "ஒருபோதும் நான் கார்லண்டைத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடாது," என்று ஜோ பைடன் கூறினார் என்று 'தி வாஷிங்டன் போஸ்ட்' செய்தித்தாள் தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1jd7ly1p34o
  8. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான வரைவு தீர்மானம் வாக்கெடுப்பின்றி ஐ. நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான A/HRC/57/L.1 தீர்மான வரைவு வாக்கெடுப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 57வது கூட்டத்தொடரில் குறித்த தீர்மான வரைவு நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195895
  9. வெளிப்புற பொறிமுறையை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – மனித உரிமை பேரவை தீர்மானத்தை நிராகரித்தது இலங்கை எந்தவொரு இறையாண்மையுள்ள அரசாலும்; அதன் அரசமைப்பிற்கு முரணான மற்றும் அதன் உள்நாட்டு சட்ட செயல்முறைகளின் அர்ப்பணிப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் வெளிப்புற பொறிமுறையை கட்டாயமாக திணிக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, குறிப்பிட்ட தீர்மானத்தின்[57/L.1] நகல்வடிவம் ஐக்கிய நாடுகள் தீர்மானத்தின் மூலம் வழங்கப்பட்ட ஆணையை மேலும் நீடிக்கின்றது. மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்மானத்தையும் 51/1அதற்கு முந்தைய தீர்மானத்தையும் 46/1 இலங்கை நிராகரித்துள்ளது. இந்த தீர்மானத்தின் மூலமே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்குள் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை ஏற்படுத்தப்பட்டது. நாங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையிலிருந்து எங்களை விலக்கிக்கொள்கின்றோம்; அதற்கான காரணங்களை ஏற்கனவே சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளோம். தொடர்புபட்ட நாடு என்ற அடிப்படையில் இலங்கையின் சம்மதம் இன்றியே 51/1 தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது. வாக்கெடுப்பின் போது உலக நாடுகள் அந்த தீர்மானம் குறித்து பிளவுபட்டிருப்பது வெளிப்பட்டது. இதன் காரணமாக அந்த 51/1 தீர்மானத்தின் மூலம் வழங்கப்பட்ட ஆணையை மேலும் நீடிக்கும் தீர்மானம் மனித உரிமை பேரவையின் பொது உடன்பாடு அற்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்குள் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை ஏற்படுத்துவது முன்னர் ஒருபோதும் இடம்பெறாத விடயம். எந்தவொரு இறையாண்மையுள்ள அரசாலும் அதன் அரசமைப்பிற்கு முரணான மற்றும் அதன் உள்நாட்டு சட்ட செயல்முறைகளின் அர்ப்பணிப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் வெளிப்புற பொறிமுறையை கட்டாயமாக திணிக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. https://www.virakesari.lk/article/195898
  10. பட மூலாதாரம்,GETTY IMAGES 9 அக்டோபர் 2024, 19:27 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் புகழ்பெற்ற இந்தியத் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவை டாடா குழுமம் ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. அந்த அறிக்கையில், டாடா சன்ஸ்-இன் தற்போதைய தலைவர் நடராஜன் சந்திரசேகரன், ரத்தன் டாடா ‘உண்மையிலேயே அசாதாரணமான தலைவர்’ என்று கூறியிருக்கிறார். மேலும் அந்த அறிக்கையில், "ஒட்டுமொத்த டாடா குடும்பத்தின் சார்பாக, அவரது அன்புக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் மிகவும் ஆர்வத்துடன் போராடிய கொள்கைகளை நிலைநிறுத்த பாடுபடும்போது, அவரது மரபு தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்கும்," எனக் குறிப்பிட்டுள்ளார். டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடா இருந்த காலத்தில், ஆங்கிலோ-டச்சு எஃகு உற்பத்தியாளர் கோரஸ், பிரிட்டனைச் சேர்ந்த கார் பிராண்டுகளான ஜாகுவார், லேண்ட் ரோவர், மற்றும் உலகின் இரண்டாவது பெரிய தேயிலை நிறுவனமான டெட்லி ஆகியவை உட்பட பல பெரிய நிறுவனங்களை டாடா குழுமம் தன்வசப்படுத்தியது. இன்று டாடா குழுமத்தின் ஆண்டு வருமானம் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் (இந்திய மதிப்பில் சுமார் 8.4 லட்சம் கோடி ரூபாய்) மேலாக உள்ளது. பொது மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு ரத்தன் டாடாவின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக இன்று மும்பையின் தேசிய கலை மையத்தில் வைக்கப்படும். மகாராஷ்டிர அரசு அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளது. அவரது உடல் காலை 10 மணி முதல் மாலை 3:30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக என்.சி.பி.ஏ-வில் வைக்கப்படும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். அவரது மறைவுக்கு ஜார்கண்ட் மாநில அரசும் ஒருநாள் அரசு துக்கம் அறிவித்துள்ளது. அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிப் பிரியாவிடை அளிக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியத் தொழிற்துறைக்கு அவரது சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக 2008-ஆம் ஆண்டு அவருக்கு இந்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கியது உதவியாளராக இருந்து தலைவராக உயர்ந்தவர் ரத்தன் டாடா 1937ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். அவரது தந்தை ஜாம்ஷெட்ஜி டாடாவின் பேரனான நாவல் டாடா. கடந்த 1955ஆம் ஆண்டு ரத்தன் டாடாவுக்கு 17 வயதானபோது, கட்டுமானமும் பொறியியலும் கற்க அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். உயர்கல்விக்குப் பிறகு, 1962ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தில் உதவியாளரகச் சேர்ந்தார். அதில் பல பதவிகளை வகித்த பின் 1974-இல் டாடா நிறுவனத்தின் இயக்குநரானார். கடந்த 1975ஆம் ஆண்டு, அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் மேம்பட்ட வணிக மேலாண்மைப் பட்டம் பெற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டாடா குழுமத்தின் தற்போதைய தலைவர் நடராஜன் சந்திரசேகரன், ரத்தன் டாடா ‘உண்மையிலேயே அசாதாரணமான தலைவர்’ என்று கூறியிருக்கிறார் பின்னர் 1981ஆம் ஆண்டு டாடா நிறுவனங்களின் தலைவராக நியமிகப்பட்டார் ரத்தன் டாடா. அதன்பின் 1991ஆம் ஆண்டு, ஜே.ஆர்.டி டாடாவுக்குப்பின் டாடா சன்ஸ் மற்றும் டாடா அறக்கட்டளைகளுக்குத் தலைவரனார். அந்த பதவியில், டாடா நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்யத் துவங்கினார். கடந்த 2008ஆம் ஆண்டு ‘டாடா நானோ’ என்ற சிறிய காரை அறிமுகப்படுத்தியது அவரது பெரும் திட்டங்களில் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. இந்தியத் தொழிற்துறைக்கு அவரது சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக 2008ஆம் ஆண்டு அவருக்கு இந்திய அரசு பத்ம விபூஷன் விருது வழங்கியது. கடந்த 2012ஆம் ஆண்டு, 50 ஆண்டுகள் டாடா குழுமத்தின் தலைவராக இருந்தபின்னர், அவர் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் டாடா சன்ஸ்-இன் கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்டார். https://www.bbc.com/tamil/articles/cew17xxwd5jo
  11. இன்னுமொரு இனப்படுகொலையை தவிர்ப்பதற்கு தமிழ் மக்களிற்கு சர்வதேசநீதியும் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்ட புலம்பெயர் தமிழர் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, சிங்கள தேசியவாதம் தமிழர்களிற்கு எதிரான பௌத்த அடிப்படைவாதம் காரணமாக இலங்கை தொடர்ச்சியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களையும் தமிழர்களிற்கான உரிமைகளையும் எதிர்த்துவந்துள்ளது. இன்னுமொரு இனப்படுகொலையை தவிர்ப்பதற்கு தமிழ் மக்களிற்கு சர்வதேசநீதியும் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம். இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதை எதிர்கொள்வதற்கும் தென்னாசியாவில் பாதுகாப்பு ஸ்திரதன்மைக்காகவும் அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் அதற்கு ஆதரவளிக்கவேண்டும். https://www.virakesari.lk/article/195916
  12. (எம்.நியூட்டன்) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுக்களை இன்று புதன்கிழமை (09) தாக்கல் செய்தது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சங்கு சின்னத்தில் களமிறங்குகிறது. வேட்பாளர் பட்டியலின்படி, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன், குருசுவாமி சுரேந்திரன், கனகலிங்கம் சிவாஜிலிங்கம், பாலச்சந்திரன் கஜதீபன், சிங்கபாகு சிவகுமார், சசிகலா ரவிராஜ், சிவநாதன் ரவீந்திரா, ஜெயரத்தினம் ஜெனார்த்தனன் ஆகியோர் களமிறங்குகின்றனர். https://www.virakesari.lk/article/195875
  13. பெருந்தொகை இலத்திரனியல் சாதனங்களுடன் சிக்கிய சீன பிரஜைகள் மேற்கு புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாணந்துறை, கோரக்கன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 20 சீன பிரஜைகள் பாணந்துறை வடக்கு காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 5 மடிக்கணனிகள், 437 கையடக்கத் தொலைபேசிகள், தராசுகள், 332 USB கேபிள்கள், 133 கையடக்க தொலைபேசி சார்ஜர்கள், 21 USB வயர் கோட், 17 ரவுட்டர்கள், 2 ஐபோன்கள் மற்றும் பல சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹோட்டலுக்கு இருபது இலட்சம் மாத வாடகை இவர்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து உணவு எடுத்து வந்ததாகவும், இருபது இலட்சம் மாத வாடகை அடிப்படையில் அந்த விடுதியில் தங்கியிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். நீதிமன்றில் முன்னிலை இவர்கள் அனைவரும் இன்று (09) பாணந்துறை நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர். நிதிக்குற்றத்தை அவர்கள் செய்துள்ளார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. https://ibctamil.com/article/chinese-nationals-arrested-with-437-laptops-1728454387?itm_source=parsely-api
  14. அதிகளவில் பெண்களை நாடாளுமன்றுக்கு அனுப்புங்கள் : முன்னாள் பெண் அமைச்சர் கோரிக்கை “எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கட்சிவேறுபாடின்றி அதிகமான பெண்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப மக்கள் ஆர்வம் காட்ட வேண்டும். பெண்களை மதிக்கும் நபர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புங்கள்” என முன்னாள் அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே(sudarshini fernandopulle) மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பொரளையில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். மேலும் உரையாற்றிய முன்னாள் அமைச்சர்: அதிக பெண்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பட்டும் “இம்முறை பொதுத்தேர்தலில் கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடின்றி அனைவரும் மன உறுதியுடன் அதிக பெண்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பட்டும். பெண்களிடம் பேசத் தெரியாதவர்களுக்கும், பெண்களை துஷ்பிரயோகம் செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பும் மக்களுக்கும் வாக்களிக்காதீர்கள். ஊழல், மோசடிகள் குறையும் பெண்களை மதிக்கும் நபர்களை மட்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்புங்கள். அதிக அளவில் பெண்கள் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் ஊழல், மோசடிகள் குறையும். எந்தக் கட்சியானாலும் முக்கியமான பதவிகளுக்கு பெண்களை நியமித்தால் அவர்கள் மீதான வன்முறைகள் குறையும் என்றார். முன்னாள் அமைச்சரான சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/send-more-women-to-parliament-1728476192
  15. 75 வருடங்களுக்கு மேலாக தமிழ் தேசியத்தை கட்டி காப்பாற்றுவதற்காக பாடுபட்ட தமிழரசுக் கட்சி தற்போது தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமாக மாறியுள்ளதாக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை லங்காசிறின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ சுமந்திரன் (M. A. Sumanthiran) மற்றும் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) ஆகியோராலேயே வடக்கு மற்றும் கிழக்கு கட்சிகள் தற்போது துன்பகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தனிநபரின் அடாவடித்தனம் தலைமைத்துவத்தை மதிக்காமல் தாங்களே கட்சிகளை கையிலெடுத்து செயற்படும் ஒரு எதேட்சையான போக்கு கட்சிகளில் காணப்படுகின்றது. சுமந்திரனின் எதேட்சையதிகார தனித்துவ சிந்தனையால்தான் இன்று தமிரசுக் கட்சியானது படும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அத்தோடு, தனிநபரின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்தாத தலைமை இருந்து என்ன பயன் ?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், தமிழரசுக்கட்சியின் தற்போதைய நிலை அத்தோடு சுமந்திரன், மாவை சேனாதிராஜா மற்றும் சாணக்கியனின் கட்சிகள் மீதான ஆதிக்கம், பாதிக்கப்படும் தமிழ் மக்களின் எதிர்காலம், தமிழரசுக் கட்சியில் எதிர்காலம் மாற்றம் என்பவை தொடர்பில் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய நாளுக்கான ஊடறுப்பு, https://ibctamil.com/article/the-allegation-leveled-against-sumanthiran-1728471832
  16. ஜேர்மனியில் (Germany) அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பில், "தமிழ் இளையோர் மாநாடு 2024" இளையோர்களின் பேரிணைவோடு சிறப்பாக நடைபெற்றுள்ளது. குறித்த மாநாடானது ஜேர்மனி என்னபெட்டல் (Ennepetal) நகரில் கடந்த 05 மற்றும் 06 ஆகிய 2 நாட்கள் பேரெழுச்சியோடு ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளது. இளையோர்களின் பேராதரவோடு இரு நாட்களிலும் ஆரம்ப நிகழ்வுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இம் மாநாட்டில், முதல் நாளில் அனைத்துலக தொடர்பாக பொறுப்பாளரால் தொடக்கவுரை நிகழ்த்தப்பட்டது. தெளிந்த பார்வை மாநாட்டின் இலக்கு மற்றும் தமிழீழம் சார்ந்த தெளிந்த பார்வை தொடர்பாக தெளிவாக தொடக்கவுரை அமைந்திருந்தது. மாநாட்டின் முதலாவது நாளில்,தொழில் முறை தொடர்பு திறன் (Career boosting soft skills), இளையோர் அமைப்பின் நோக்கம் மற்றும் வேலைதிட்டங்கள் தொடர்பான ஒரு கண்ணோட்டம், எமது வரலாறு, தமிழீழ அரசியல் மற்றும் பூகோள அரசியல் போன்ற தலைப்புகளும் இரண்டாவது நாளில்,சிங்கள அரசின் திட்டமிட்ட ஆக்கிரமிப்பால் பறிபோகும் தமிழர் தாயகம், பொருளாதார வலுவூட்டல் போன்ற தலைப்புக்களில் வளவாளர்களால் கருத்தூட்டல் வழங்கப்பட்டது. அவர்கள் தங்கள் அனுபவங்களூடாக விடயப்பரப்புக்களை எடுத்துரைக்க, இளையோர்களும் அவர்களுடன் இணைந்து கருத்துக்களை பரிமாற்றிக்கொண்டனர். அத்தோடு,இளையோர் அமைப்பினரால் ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகளை ஒவ்வொரு இடைவேளையின் போதும் இளையோர்கள் மிக ஆர்வத்துடன் படித்து குறிப்புக்கள் எடுத்து கொண்டதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. தமிழ் இளையோர் மாநாடு இரண்டு நாட்களின் முடிவில் இளையோர் மாநாட்டில் பங்கு பற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் அனைத்துலக இளையோர் அமைப்பினால் வழங்கிவைக்கப்பட்டது. இரண்டாம் நாளின் இறுதி நிகழ்வுகளோடு, உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்ட இளையோர்களின் அகநிறைவோடு உறுதியேற்று “தமிழ் இளையோர் மாநாடு 2024” சிறப்போடு நிறைவுபெற்றது. தமிழீழத் விடுதலைப்போராட்டத்தை இளையோர் கரமேற்று தொடர்ந்தும் முன்னகர்த்த வேண்டுமென்ற தமிழீழத் தேசியத்தலைவரின் அறைகூவலை உளமேற்று இளையோர்கள் பயணிக்கிறார்கள் என்பதை இந்த இளையோர் மாநாடு கட்டியம் கூறிநிற்கிறது. இம் மாநாட்டில் யேர்மனி, நோர்வே, பெல்சியம், பின்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, பிரித்தானியா, சுவிஸ் ஆகிய நாடுகளில் இருந்து, 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/tamil-youth-conference-2024-in-germany-1728477833
  17. இங்கிலாந்து சார்பாக அதிக டெஸ்ட் ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்தார் ஜோ ரூட் (நெவில் அன்தனி) டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து சார்பாக அதிக ஓட்டங்களைக் குவித்தவர் என்ற சாதனையை ஜோ ரூட் இன்று புதன்கிழமை (09) படைத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக முல்தானில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 71ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் அலிஸ்டெயா குக்கின் 12472 ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடித்து ஜோ ரூட் முன்னிலை அடைந்தார். கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்டுவரும் அப் போட்டியில் ஜோ ரூட் சதம் குவித்து அசத்தினார். தனது 147ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜோ ரூட் 35ஆவது சதத்தைப் பூர்த்திசெய்ததுடன் இதுவரை 12578 ஓட்டங்களை மொத்தமாக பெற்று இங்கிலாந்துக்கான சாதனையாளரானார். அவருக்கு பக்கபலமாகத் துடுப்பெடுத்தாடி வரும் ஹெரி ப்றூக் தனது 6ஆவது சதத்தைக் குவித்து அசத்தினார். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 243 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர். போட்டியின் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 492 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஜோ ரூட் 277 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள் உட்பட 176 ஓட்டங்களுடனும் ஹெரி ப்றூக் 173 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 141 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். அவர்களைவிட பென் டக்கட் 84 ஓட்டங்களையும் ஸக் க்ரோவ்லி 78 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 556 ஓட்டங்களைக் குவித்தது. பாகிஸ்தான் சார்பாக அணித் தலைவர் ஷான் மசூத் 151 ஓட்டங்களையும் சல்மான் அகா ஆட்டம் இழக்காமல் 104 ஓட்டங்களையும் அப்துல்லா ஷக்கிப் 102 ஓட்டங்களையும் சவூத் ஷக்கீல் 82 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜெக் லீச்160 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்றய்டன் காஸ் 74 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கஸ் அட்கின்சன் 99 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/195896
  18. இலங்கையில் தொழுநோயை கட்டுப்படுத்த ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என சிவபூமி அறக்கட்டளை தலைவர் ஆறு திருமுருகன் தெரிவித்ததுடன் யாழில்(jaffna) சங்கானையில் அதிகளவான நோயாளர்கள் இருப்பது கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டார். இலங்கையில்(sri lanka) தொழுநோயாளர்களின் நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டிற்காக உழைத்து வரும் மாற்று மக்கள் சபை அங்கத்தவர்களை சந்திக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள தொழு நோயாளர்களை மலர்ச்சி காண வைப்பதற்காக உருவாக்கப்பட்ட நோயாளர்களுக்கான மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு மற்றும் (மாற்றும் மக்கள் சபை) காவேரி கலா மன்றத்தின் கூட்டு முயற்சிகளை பாராட்டுகிறேன். இலங்கையில் தொழுநோய் இலங்கையில் தொழுநோய் என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்காமல் பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். ஆரம்ப காலங்களில் சரியான மருந்து இன்மை, மற்றும் முறையான ஆற்றுப்படுத்தல் இன்மை காரணமாக தொழுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மரணத்தை சந்திக்கும் வாய்ப்புகள் காணப்பட்டது. ஆனால் தற்போது தொழுநோயினால் பாதிக்கப்பட்டவர்களை வெறுக்காமல் இருப்பதற்கும், வைத்தியசாலையில் கிடைக்கக் கூடிய இலவச மருத்துவ வசதிகளை பெற்றுக் கொடுக்கவும் தொழுநோயாளர்கள் மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு எல்லா வகையிலான முயற்சிகளையும் மேற்கொள்கின்றமை வரவேற்கதக்கது. பாடசாலை மட்டங்களில் விழிப்புணர்வு மேலும் இலங்கை அரசாங்கம், குறிப்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் தொழுநோயாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆக்கபூர்வமான புதிய அணுகுமுறைகளை உருவாக்கி பாடசாலை மட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோளாகும். அது மட்டுமல்ல கிராமிய ரீதியிலும் தொழுநோயாளர்கள் மற்றும் விழிப்புணர்வு சார் அக்கறை ஏற்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக யாழ் மாவட்டத்தில் சங்கானை பகுதியில் அதிகளவான தொழு நோயாளர்கள் இருப்பதை அறியும் போது வருத்தமளிக்கிறது. உரிய காலத்தில் சரியான மருத்துவம் உரிய காலத்தில் சரியான மருத்துவம் மேற்கொள்ளும் போது தொழு நோயை முற்றாக தடுக்க முடியும் என்ற போதிலும் கூட, உள்ளூர் வைத்தியர்களின் பாரம்பரிய முறைசாரா வைத்திய முறைகளை பின்பற்றி நோயின் தாக்கம் அதிகரிக்கும் தன்மையும் காணப்படுகின்றது. எனவே அரச வைத்தியசாலைகளில் முறையாக கிடைக்கப்பெறும் இலவச வைத்திய உதவிகளை பெற்றுக் கொள்வதன் ஊடாக தொழுநோயிலிருந்து முறையாக விடுதலை பெறலாம் என்பதை உணர வேண்டும். எனவே வைத்தியதுறையில் உள்ளவர்கள், அரசியல் தலைவர்கள், பல்கலைக்கழக மருத்துவ பீடம் சார்ந்தவர்கள் தொழுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆக்கபூர்வமான முடிவுகளை எடுக்கவும் முன்வர வேண்டும் என தெரிவித்தார். https://ibctamil.com/article/leprosy-on-the-rise-in-sri-lanka-including-jaffna-1728469333#google_vignette
  19. மன்னார் சதொச மனித புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மன்னார் சதொச மனித புதைகுழி அகழ்வு பணி இவ்வாரம் மீண்டும் இடம் பெறவுள்ள நிலையில் தடய பொருட்களை பிரித்தெடுத்தல், புதைகுழியை சூழ உள்ள பகுதியை ஸ்கேன் செய்தல், அகழ்வு செய்யும் பணிகள் முதற்கட்டமாக இடம்பெற்று வருகின்றது. மன்னார் சதொச வளாகத்திற்கு அருகில் இராணுவ முகாம் அமைந்திருந்த பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடம் அமைந்துள்ள பகுதியிலும் அகழ்வு பணிகள் புதன்கிழமை (9) இடம்பெற்றன. இருப்பினும் குறித்த அகழ்வு பணி தொடர்பான செயற்பாடுகளையோ, ஸ்கேன் செயற்பாடுகளையோ புகைப்படம் எடுக்க, காணொளியாக பதிவு செய்யவோ மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே சதொச மனித புதைகுழி அகழ்வு பணியை செய்தி சேகரிக்க பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக குறித்த அகழ்வு பணி தொடர்பான உண்மையான விடையங்களை அறிக்கையிடவும் அகழ்வு செயற்பாடுகளை ஆவணப் படுத்தவும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. என்ற போதிலும் புதிய நீதிபதியினால் தற்போது அகழ்வு பணியையோ அல்லது புதைகுழி தொடர்பிலான ஏனைய செயற்பாடுகளையோ கணொளியோ புகைப்படமே எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த அகழ்வு தொடர்பிலும், புதைகுழி வழக்கு தொடர்பிலான செயற்பாடுகள் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணிகள் குரல் பதிவுகளை வழங்க மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/310491
  20. அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த குற்றச்சாட்டின் கீழ் ஆப்கானிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட நபர் ஐஎஸ் அமைப்பின் பெயரால் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார் என அமெரிக்க நீதி திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒக்லஹோமா நகரில் வசிக்கும் 27 வயது நசீர் தவ்ஹெடி என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். ஐஎஸ் அமைப்பினால் உணர்வூட்டப்பட்ட இந்த நபர் தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று வன்முறையில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டார் என எவ்பிஐ தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நபர் ஆயுதங்களை சேமிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார் என எவ்பிஐ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195840
  21. தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகள் கூட தங்களின் சுய இலாபத்திற்காக ஒற்றுமையாக செயல்பட்டு பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தாங்கள் சுயநலத்திற்காக தங்களது கட்சி பிரபல்யம் அடைய வேண்டும் என்பதற்காக வடக்கு கிழக்கில் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் நடந்து கொண்டுள்ளார்கள் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று புதன்கிழமை (09) அங்கீகரிக்கப்பட்ட இரண்டு அரசியல் கட்சிகள் தமது பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்தன. தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியி; சங்கு சின்னத்தில் வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். பெண் பிரதிநிதி ஒருவர் உட்பட எட்டுப்பேர் கொண்ட வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டன. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கோவிந்தன் கருணாகரம், தமிழ் மக்கள் கடந்த கால முதல் இந்த நாட்டிலே எப்படித்தான் வாழ்ந்து வந்தார்கள் என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. எங்களது மக்களது உரிமைகளை பெறுவதற்கு நாம் ஆணித்தனமாக ஒற்றுமையாக இருக்க வேண்டிய தேவைள்ளது, வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக ஜனநாயக தமிழ் தேசியக் முன்னணி செயற்படுகின்றது. எங்களது வாக்குகளை பிரிப்பதற்காக சில சுயாட்சிக் குழுக்களும் இங்கு களமிறங்கியுள்ளது . அவர்கள் பெரும்பான்மையினரின் தூண்டுதலால் தமிழ் மக்களின் வாக்கை பிரிப்பதற்கு சிதைப்பதற்கு களம் இறக்கப்பட்டுள்ளனர். தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகள் கூட தங்களின் சுய இலாபத்திற்காக ஒற்றுமையாக செயல்பட்டு பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தாங்கள் சுயநலத்திற்காக தங்களது கட்சி பிரபல்யம் அடைய வேண்டும் என்பதற்காக வடக்கு கிழக்கில் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் நடந்து கொண்டுள்ளார்கள். எங்களால் தமிழ் மக்களுக்கு தெரிவிக்கக் கூடிய விடயம் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எங்கள் எட்டு பேரில் யார் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவார் என்பது எமக்கு முக்கியமல்ல் சங்கு சின்னம் அமோக வெற்றி பெற வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/195856
  22. கடிதங்கள் கையில் கிடைக்கவில்லை; சசிகலாவிற்கு ஒழுக்காற்று நடவடிக்கை - சத்தியலிங்கம் தெரிவிப்பு தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் ஏனையவர்களின் ராஜினாமா கடிதங்கள் எவையும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை என்று கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம் புதன்கிழமை (09) தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் விடயங்களை கையாள்வதற்கான நியமனக்குழு வவுனியாவில் புதன்கிழமை (09) கூடியது. இதன்பின்னர் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…. வன்னியின் மூன்றுமாவட்டத்தினதும் வேட்பாளர் பட்டியல் இறுதிசெய்யப்பட்டுள்ளது. நாளை காலை இறுதி விபரம் அறிவிக்கப்படும். தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் ராஜினாமா கடிதம் எவையும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. அதுபோலவே சசிகலா மற்றும் தவராசா ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேறியதாக ஊடகத்தின் வாயிலாகவே அறியமுடிகின்றது. அவர்களது கடிதமும் இதுவரை கிடைக்கவில்லை. பத்திரிகைகள் ஊடாக்கடிதம் அனுப்ப பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. எனவே இது தொடர்பாக நான் கருத்து கூற முடியாது அவ்வாறான நிலமை ஏற்ப்படுமாக இருந்தால் கட்சியின் யாப்பின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுப்போம். அத்துடன் இதுவரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்களில் மாற்றம் செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை. கட்சியின் மத்திய குழுவே தேர்தல் நியமனக்குழுவை நியமித்தது. அந்த குழுவானது எவ்வாறான அடிப்படையில் வேட்பாளர்களை தெரியவேண்டும்என்று தீர்மானம் எடுத்ததோ அந்த அடிப்படையில் நியமனங்களை வழங்கியிருக்கிறது. இம்முறை தேர்தலில் புதியவர்கள் அனைத்து மாவட்டத்திலும் உள்வாங்கப்பட்டுள்ளனர். விண்ணப்பித்த அனைவருக்கும் கொடுக்கமுடியாத துர்பாக்கிய நிலமை எமக்கு உள்ளது. அத்துடன் இம்முறை தேர்தலில் கொழும்பில் போட்டி இடுவது தொடர்பாகவும் மத்தியகுழுவில் கதைக்கப்பட்டது.தற்போதைய களநிலவரங்களின் அடிப்படையில் அங்குள்ள ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக ஆராய்ந்துள்ளோம். அந்த அடிப்படையில் கொழும்பில் இம்முறை தமிழரசுக்கட்சி போட்டியிடாது என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை வேறு ஒரு கட்சியூடாக தேர்தலில் போட்டியிடும் சசிகலா ரவிராஜ் தமிழரசுக்கட்சியில் இருந்து முற்றாக வெளியேறாமல் இருக்கும் பட்சத்தில் கட்சியின் யாப்பிற்கமைய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/195885
  23. 'கூகுள் டீப் மைண்ட்' இணை நிறுவனருக்கு வேதியியல் நோபல் பரிசு - எதற்காக? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கூகிள் டீப் மைண்ட் இணை நிறுவனர் டெமிஸ் ஹசாபிஸ் கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜீனா ரன்னார்டு பதவி, அறிவியல் நிருபர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த வருடம் வேதியியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பேக்கர், ஜான் ஜம்பர், மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த டெமிஸ் ஹசாபிஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. புரதங்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக இந்தப் பரிசு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. டெமிஸ் ஹசாபிஸ், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனவனமான ‘கூகுள் டீப் மைண்ட்’-இன் இணை நிறுவனராவார். புரதங்கள் என்பன மனித உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவையாகும். அவை உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்களிலும் காணப்படுகின்றன. புரதங்களை நன்கு புரிந்துகொள்வது மருத்துவத்தில் பெரும் முன்னேற்றங்களை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியரான டேவிட் பேக்கர் அமினோ அமிலங்களைப் பயன்படுத்தி புதிய வகை புரதத்தை வடிவமைத்துள்ளார். இந்த முறை மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பல அறிவியல் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் புதிய புரதங்களை உருவாக்க வழிவகுத்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புரதங்கள் என்பன மனித உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை வேதியியல் துறையில் 'முழுமையான புரட்சி' "இந்த பரிசு பெற்றது மிகவும் மகிழ்ச்சியாகவும், மிகவும் கௌரவமாகவும்" இருப்பதாக வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் டேவிட் பேக்கர் கூறினார். லண்டன் பல்கலைகழகத்தில் பேராசிரியராக உள்ள ஜான் ஜம்பர் மற்றும் டெமிஸ் ஹசாபிஸ் ஆகியோர் இணைந்து செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, ஏற்கனவே அறிந்த புரதங்களின் வடிவமைப்புகளை கணித்து, 'ஆல்பாஃபோல்ட்2' என்ற கருவியை உருவாக்கினர். இந்த கருவி வேதியியல் துறையில் 'முழுமையான புரட்சி' செய்ததாகத் தேர்வு குழு குறிப்பிட்டது. இது தற்போது உலகம் முழுவதும் 20 கோடி புரதங்களை ஆராய பயன்படுத்தப்படுகிறது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் புதன்கிழமை (அக்டோபர் 9) அன்று இந்த அறிவிப்பை வெளியிட்டது. வெற்றியாளர்கள் 1.1 கோடி ஸ்வீடிஷ் க்ரோனர், இந்திய மதிப்பில் சுமார் 9 கோடி ரூபாய் பரிசுத் தொகையை சமமாகப் பகிர்ந்து கொள்வார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கணினி அறிவியலில் பட்டம் பெறுவதற்கு முன்னும் பின்னும், டெமிஸ் ஹசாபிஸ் கணினி வீடியோ கேம் வடிவமைப்பில் பணியாற்றினார் யார் இந்த டெமிஸ் ஹசாபிஸ்? பேராசிரியர் ஹசாபிஸ், லண்டனில், கிரேக்கஂ மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த தனது பெற்றோருடன் வளர்ந்தார். சிறுவயதிலேயே அவர் சதுரங்கத்தில் நட்சத்திர ஆட்டக்காரராக இருந்தார். 13 வயதில் ‘மாஸ்டர்’ தரநிலையை அடைந்தார். கணினி அறிவியலில் பட்டம் பெறுவதற்கு முன்னும் பின்னும், அவர் கணினி வீடியோ கேம் வடிவமைப்பில் பணியாற்றினார், அதற்காகப் பல விருதுகளை வென்றார். பின்னர், லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் முனைவர் பட்டத்தை முடித்து, பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்தார். 2010-இல் அவர் இணைந்து நிறுவிய இயந்திர கற்றல் நிறுவனமான ‘DeepMind’-ஐ 2014-இல் கூகுள் வாங்கப்பட்டது. இது, பல்வேறு சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த வழிமுறைகளை உருவாக்க, இயந்திரக் கற்றல் தொழில்நுட்பத்துடன் நரம்பியல் அறிவியலைப் பயன்படுத்துகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cm249ne0ym4o
  24. அதுக்கு முதலில் வெல்லவேணுமே அண்ணை! இப்ப வந்துள்ள ஆட்சியாளர்கள் வேற சலுகைகளை குறைக்கப் போகினமாம், சேவை செய்ய வருவோர்களுக்குத் தான் நிலமை சரிவரும் போல இருக்கு.
  25. பாய்மரக் கப்பலாம்! அது தான் பாக்க வந்தவர்!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.