மாவீரர் நாள். கார்த்திகை27
************************
தென்றலாய்,தேமாங்காய்
ஈழ தேசத்தின் சுவாசமதாய்
உயிர் விதைத்து,உணர்வளித்து
உலக முகப் பரப்பில்
தமிழீழம் எனப் பொட்டுவைத்த
உங்கள் தியாகத்தின்
உயிர்நட்ட கோயில்களை
என்றும் மறப்போமா?
கார்த்திகை மலர் நடுவே
கல்லறை தொட்டிலாகும்
நீங்கள்..
கண்களைத் திறக்கும் போது
தமிழ் ஈழ..
தாயவள் கையணைக்கும்
அவளுயிர் காக்க நீங்கள்
ஆகுதியானவர்கள்-மீண்டும்
அவள் மடி பிறக்கையிலே
ஆனந்தமாயிரங்கள்.
“வீர வணக்கம்”
-பசுவூர்க்கோபி-