Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. தமிழீழ வரைபடங்கள் | Tamil Eelam maps: கீழ்கண்டதுதான் தமிழீழத்தின் ஐந்தாவது வரைபடம். புத்தளத்தை கழற்றிவிடுவதா இல்லையா எனப் புலிகள் சிந்தித்ததால் வெளியான வரைபடமிது. சமாதான காலத்தில் வெளியானது. இறுதிவரை புத்தளத்தை சேர்ப்பதா இல்லையா எனப் புலிகள் சிந்தித்தனர். ஏனெனில் அது முற்றிலும் ஒரு சிங்கள மயப்படுத்தப்பட்ட இடமாக மாறிவிட்டதாலும்(கற்பிட்டி மற்றும் அதன் சுற்றுப்புறத்திலும் மட்டுமே தமிழர்கள் வாழ்கின்றனர் என அறிகிறேன். குறிப்பாக அந்த கச்சாயப்(cape) பகுதியானது தமிழர்கள்/முஸ்லிம்கள் ஐதாக வாழும் ஒரு இடம்.) அதை உள்வாங்குவதால் பல சிக்கல்கள் ஏற்படும் என்பதாலும் அதை கழற்றி விட்டனர்(சிந்திக்கத் தொடங்கிவிட்டனர் என்பதே என்னைப் பொறுத்தமட்டில் நல்லம்) அவர்கள் ஒப்பந்தக் காலத்தில் கூட புத்தளத்தை ஆட்சி வரையறைக்குள் சேர்க்கவில்லை. எனவே அப்போதே தமிழீழ-புத்தளம் மீதான புலிகளின் பார்வை மாறத்தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
  2. தமிழீழ வரைபடங்கள் | Tamil Eelam maps: கீழ்கண்டதுதான் தமிழீழத்தின் நான்காவது வரைபடம். இதுதான் உலகத் தமிழர்களின் கனவுத் தமிழீழம். இதைத்தான் தவிபுவினர் எல்லா இடங்களிலும் பயன்படுத்தினர். ஆனால்... (ஐந்தாவதைக் காணவும்) முதலாவது "மாமனிதர்" ஆ. இராசரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட "Tamil Need a Nation, Why" என்ற நூலின் அட்டையில் இதே வரைபடத்திற்கு கூடுதலாக ஒட்டுமொத்த அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அதை அவர் சேர்த்ததிற்கான காரணம் சோழர்களின் தொடர்ச்சியாக பேண விரும்பியமையாக இருக்கலாம் என்பது என் துணிபு! படிமப்புரவு(Image Courtesy) : நோர்வேயில் உள்ள தமிழர் ஒருவர். பெயர் ஞாபகமில்லை
  3. தமிழீழ வரைபடங்கள் | Tamil eelam maps: இலங்கையிலுள்ள தொழிற்சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் கிருஷ்ண வைகுந்தன் ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றிய போது சமர்ப்பித்த தமிழீழத்தின் வரைபடம் 5 ஒக். 1978 கீழ்கண்டதுதான் தமிழீழத்தின் மூன்றாவது வரைபடம். இதில் தற்போதைய புத்தளத்தின் சில பகுதிகள் இல்லாமலும் - பழைய சிலாபம் மாவட்டம் 1953இல் மீண்டும் இணைக்கப்பட்டது. - அதே நேரம் தலைநகரில் அதிகளவான ஆட்புலத்துடனும், வில்பத்து அடவியை மன்னாருடனும் பதவிக்குளத்தை வவுனியாவுடனும் சேர்க்கப்பட்டதாக தமிழீழத்தின் ஆட்புலமாக உள்ளடங்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  4. தமிழீழ வரைபடங்கள் | Tamil Eelam maps: கீழ்கண்டதுதான் தமிழீழத்தின் இரண்டாவது வரைபடம். இது கவிஞர் காசி ஆனந்தன் அவர்களால் காட்டப்பட்ட வரைபடம். இங்கு கதை என்னென்றால் இந்த வரைபடத்தினை விடுதலைப்புலிகள் இறுதி வரை பயன்படுதினர் என்பதே ஆகும். பாடசாலைகளுக்கும் ஜெனிவா உடன்படிக்கை காலத்தில் இவையே வழங்கப்பட்டன. ஏனென்று எனக்குத் தெரியவில்லை. மேலும், சிறிலங்காவின் நில அளவைத் திணக்களத்தின் பிரதிமா அதிபராக பணியாற்றி இளைப்பாறிய ஜே.ஆர் சின்னத்தம்பி அவர்கள் 1977 வெளியிட்ட "தமிழ் ஈழம் - நாட்டு எல்லைகள்" என்னும் நூலிலும் இதே வரைபடமே பாவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் 7 மண்டலங்களாவன (இடமிருந்து வலமாக) : முத்து மண்டலம் , மேல் மண்டலம், யாழ் மண்டலம், வன்னி மண்டலம், நடு மண்டலம், கிழக்கு மண்டலம், தென் மண்டலம். என்பனவாகும். எனக்கு இதுதான் பிடிக்கும். ஏனென்றால் தலைநகரத்தைச் சுற்றிலும் நிறைய ஆட்புலங்கள் உண்டு. நேரடி ஊறு எதுவும் ஏற்படாது. மேலும் இதில் காட்டப்பட்டுள்ள கிழக்குதான் மெய்யான கிழக்கு மாகாணம்; ஆங்கிலேயர்களால் பிரிக்கப்பட்டது. பதவிக்குளம் எல்லாம் தமிழரின் தோற்றுவாய் நிலங்களே. இதில் உள்ள பல நிலங்கள் பிடுங்கப்பட்டு சுற்றியிருந்த சிங்கள் மாகாணங்களோடு இணைக்கப்பட்டு விட்டன. Pix: 3500x5000: https://srilankancivilwar.quora.com/The-proposed-third-map-of-Tamil-Eelam 2002/ 2003/ 2004 இல் எடுக்கப்பட்ட இப்படத்தில் தலைவர் மாமாவிற்கு பின்னால் இவ்வரைபடம் தெரிவதை கவனிக்குக: இதேபோல இன்னுமொரு படிமம் வைத்திருந்தனான். அதில் தலைவர் மாமா இந்த வரைபடத்தை தனது கையால் சுட்டிக் காட்டுவது போன்று(இதே பின்புலத்தில்). அதை எங்கோ தொலைத்து விட்டேன். கீழ்கண்டது தவிபு இன் ஒரு படைத்தளத்தில் இருந்து 2009 சிங்களவன் எடுத்தது. (3 திரைப்பிடிப்புகளை ஒன்றாக்கியுள்ளேன்)
  5. வான்காப்பில் புலிவீரர்கள் இரண்டாம் ஈழப்போர் காலம் PK GPMG
  6. பெண் போராளி 'படிமப்புரவு: தோமஸ் காகேர்சுவீன்'
  7. தமிழீழ வரைபடங்கள் | Tamil eelam maps: கீழ்கண்டதுதான் தமிழீழத்தின் முதலாவது வரைபடம். இது பிரித்தானியாவின் அரோசிமித்தின் வரைபடத்தை அடிப்படையாக வைத்து வரையப்பட்டது. இது வரையப்பட்ட காலத்தில் இதில் காட்டப்பட்டுள்ள தென் பகுதிகளில் தமிழர் வாழ்ந்திருந்தாலும் நடைமுறையில் பல சிக்கல்களைக் கொண்ட சாத்தியமில்லாத வரைபடம் ஆகும். இவ்ரைபடத்தை முதன் முதன் முதலில் காட்டியவர் "அடங்காத் தமிழர்" செ.சுந்தரலிங்கம் ஆவார். இவரே முதன் முதலில் தமிழீழத்தை கோரிய தமிழரும் ஆவார் (அதற்காக இவரொன்றும் உத்தமர் அன்று. இவர் சொந்த இனத்தின் ஆசைகளை புறந்தள்ளி தன் தன்னிச்சைகளுக்காக செயற்பட்ட காலங்களும் உண்டு, கோருவதற்கு முன்னர், என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்). படிமப்புரவு: fb
  8. சந்திரிக்கா அம்மையாரின் தூதுக் குழுவினர் யாழிற்கு வருகை புரிந்த போது, 1994 திரைப்பிடிப்புப் புரவு(courtessy): Gettyimages
  9. 2005 மாவீரர் நாளில் அந்நாளைய நிகழ்படங்கள்:- https://eelam.tv/watch/கடற-ப-ல-கள-sea-tigers-heroes-day-2005-p1_hxQXBETvu2UJjd7.html https://eelam.tv/watch/கடற-ப-ல-கள-sea-tigers-heroes-day-2005-p2_vc9OnI4GwQOzCdG.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.