Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. Link: ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு Translation: Atrocities committed by Sri Lankan Muslim Home Guards and Armed Groups against Eelam Tamils | Documentary This is an extensive Tamil documentary of approximately 200 pages compiled by me, Nane Chozhan (நன்னிச் சோழன்). The work focuses on episodes of violence against Tamil civilians in Sri Lanka, particularly in the Eastern Province, and attributes many of these incidents to armed groups identified as Muslim home guards and mobs during specific periods of the civil conflict. The documentary catalogues alleged incidents of mass killings, arson attacks, sexual violence, looting, and forced displacement affecting Tamil Hindu and Christian communities. According to the author, the material is based largely on direct compilation of primary testimonies, local records, photographs, and contemporaneous publications, rather than secondary quotation, which he argues increases its evidentiary weight. A central argument advanced in the work is a revision of the commonly cited chronology of anti-Tamil pogroms. While mainstream narratives often place the beginning of systematic violence against Tamils in 1956, the author contends that the first major pogrom occurred earlier, in 1954, citing the Veeramunai attack. In this incident, Veeramunai—described as a historically significant Tamil settlement and former regional capital—was allegedly destroyed by fire. To support this claim, the author references two contemporaneous sources: a Tamil-language book published in 1956 titled “Theeyunda Veeramunai” (Burnt Veeramunai), and a later Muslim-authored publication from 1993 that also discusses the same event. The documentary further records over 30 separate attacks on Tamil civilians by Muslims prior to the Katankudy mosque incident, attributing approximately 300 civilian deaths to Muslim home guard units, including claims that around 120 individuals were burned alive. On this basis, the author argues that these earlier episodes provide historical context for later retaliatory violence, though this interpretation remains contested and controversial. In addition to written material, the work includes photographic documentation of Muslim home guards from the pre-2009 period who were killed in clashes with the LTTE, as well as images of now-destroyed Tamil memorials erected to commemorate victims of these attacks. The documentary also incorporates video testimonies from survivors describing their experiences during the violence. The author additionally references the Tamil book “Uthikkum Thisaiyil Unnatha Payanam” (A Noble Journey in the Direction of the Dawn), which documents violence in Eastern Sri Lanka / southern regions of Tamil Eelam attributed to both Muslim and Sinhala home guard forces. This work is noted as having been written under the influence or direction of Maththaiya, described as a former Indian intelligence-linked figure. Overall, the documentary positions itself as a counter-narrative to dominant historical accounts of the Sri Lankan conflict, emphasizing incidents of violence against Tamil civilians (by the Muslims) that the author believes have been under-documented or marginalized in mainstream discourse. The English translation of the Introduction written in the document: "Introduction "In this document, only the atrocities committed against the Eelam Tamils by the Sri Lankan Muslim Home Guards and Armed Groups, who were accepted as a separate ethnic group by the Liberation Tigers of Tamil Eelam on 19th April 1988 as ‘Muslims’ (LTTE-Muslim Accord, the satanic force, Part-1, page: 747), will be recorded. I also make it clear in advance that nothing will be recorded about the atrocities committed by the LTTE against the Muslims (although the LTTE has denied them). "One of the main reasons for compiling this is that Sri Lankan Muslims always deliberately hide all the massacres committed by their side against the Tamils in the articles and books they write, and spread the blame for the murders on the Tamil side. In those statements, they have created the impression that they did not attack the Tamils first, pretending to be good children, and that the Tamils attacked them while they were idle. That is, they have created a false impression contrary to the truth. Moreover, they have written a little about the massacres they instigated against the Tamils that led to the murders accused of the Tamil side. Therefore, this document will try to highlight the justifications of the Tamil side instead of only demanding justice for the Muslim side, which has existed for a long time. "Furthermore, it is a weakness of our side that the Tamil side has not taken the effort to document the atrocities committed by Muslims as vigorously as it has documented the massacres committed by the Sinhalese people. Therefore, this document is being written to remedy that deficiency and to highlight the atrocities suffered by the Tamil side. "Only the 'Preface' is my own writing with the support of sources. Everything else that will be posted is articles, news and reports published by various reliable websites, magazines, newspapers and some specific international organizations about the atrocities committed by Muslim armed groups, Home Guards, & Goons against Tamils during the Eelam War. It will be a collection of short words. "This archive will be continuously updated by me and will be preserved as a vast historical archive and a historical knowledge repository for future generations regarding the atrocities committed against our Tamil nation by the racism of Sri Lankan Muslims." *****
  2. Tamil Genocide Memorial inside the Jaffna University Built in the year: 2021 Version: 2 The above monument was destroyed by the Sri Lankan military in the year January 2021, and after a protest by the campus students, a new one was built within fewdays after the incident.
  3. நூல் உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... இந்நெடுந்தொடரானது ஈழநாதம் நாளேட்டில் 1990ம் ஆண்டு காலப்பகுதியில் வெளிவந்த தொடராகும். இது தென் தமிழீழத்தில் முஸ்லிம் ஊர்காவல் படையினர், முஸ்லிம் காடையர்கள் மற்றும் சிங்கள படைத்துறை இயந்திரத்தால் அம்மாவட்ட மக்கள் கண்ட அவலங்களை எடுத்துரைக்கிறது. இதனை மூத்த விடுதலைப் போராளி பசீர் காக்கா அவர்கள் எழுதியுள்ளார். இக்கட்டுரையானது 1993இற்கு முன்னர் நூல் வடிவம் பெற்று தமிழீழத்தில் வெளியிடப்பட்டது. எனினும் இதில் தேசத்துரோகி மாத்தையா தொடர்பிலும் வருவதால், அவனது வஞ்சகத்தால், அவன் தொடர்பான அனைத்து ஆவணங்களும் புலிகளால் பொது வெளிப்பரப்பிலிருந்து நீக்கப்பட்ட போது இந்நூலும் மெள்ள மறைந்து போனது. தற்போது காலத்தின் தேவை கருதி, குறிப்பாக முஸ்லிம்கள் தனியினமாக தம்மைக் கருதி எம்மினத்திற்கு இழைத்த கொடூரங்களை வெளிக்காட்டும் முகமாக இந்நூல் மீளவும் எழுத்துணரியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. ஆயினும் இக்கட்டுரையின் இரு பத்திகள் கிடைக்கப்பெறவில்லை. கொழுவி:
  4. முதற் கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் தாயார் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கிறார்.
  5. பாகம் - 14 திரு. மாத்தயா அவர்கள் அகதிகளிடம் விடைபெற்று வாகனத்தில் ஏறினார். செல்லும் வழியெங்கும் சிறு குடில்களை அமைத்து ஏரானமான அகதிகள் தங்கியிருப்பது தெரிந்தது. வாகரையை அடைந்ததும் மதிய உணவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் தங்கினோம். அப்போது ஒரு செய்தி வந்தது. யாழ் கோட்டையைப் போராளிகள் கைப்பற்றி விட்டார்கள் என்று. அன்று திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு சில இடங்களில் நினைவுக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. மட்டக்களப்பு நகர் முழுவதும் விழாக்கோலம் பூணுகிறது. மக்கள் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றார்கள் என்றும் செய்தி வந்தது. மாத்தயாவை ஊர் மக்கள் பலரும் மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளில் மகளிர்படைப் பிரிவுக்குப் பொறுப்பாக இருக்கும் ஜெயாவும் வந்து சந்தித்துச் சென்றனர். அங்கிருந்து நாம் நீண்ட தூர பிரயாண த்தின் பின் ஒரு முகாமைச் சென்றடைந்தோம். 28.09.90 வரை இந்த முகாமிலேயே தங்கினோம், 28 09.90 மாலை அந்த முகாமிலிருந்து புறப் பட்டோம். எம்மை அழைத்துச் செல்ல மட்டக்களப்புத் தளபதி கருணா புறப்பட்டு வந்தார். வழியில் எம்மைச் சந்தித்து அழைத்துச் சென்றார். ஒருமணித்தியாலம் நடக்க வேண்டியிருந்தது. வயல் வெளிகளுக்குள்ளாக நடத்து சென்றோம். நன்றாக விளைந்திருந்த வயலை யானை அழித்திருந்தது. அறுவடை செய்யாமல் இப்படி அழித்திருக்கும் வயல் வெளிகளைப் பார்க்கும் போது வயிறுபற்றி எரித்தது. எனக்கே இப்படி யென்றால் சொந்தக்காரனுக்கு எப்படி இருந்திருக்கும்? ஏன் இந்த வயல்கள் அறுவடை செய்யப்படவில்லை? என்று கேட்டேன். சுதந்திரமாக மனிதர்கள் நடமாட முடியாத நிலையில், வயல்கள் அறுவடை செய்யப் படவில்லை. இராணுவத்துக்குப் பயந்து வயல் பக்கம் மக்கள் செல்ல வில்லை என்றார். இராணுவத்துடனான மோதல்கள் தொடருகின்றனவா? என்று கேட்டேன். என்ன நடத்தாலும் அது மட்டும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். கடந்த 22 ஆந் திகதி கூட சிங்கபுர முகாமிலிருந்து கண்டக்காடு முகாமுக்கு சென்ற இராணுவத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பத்து இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். தொலைத் தொடர்பு சாதனம் ஒன்றும் பத்து றைபிள்களும் உருப்படியாகக் கிடைத்தன என்றார். கண்டக்காடு பொலனறுவை மாவட்டத்திலல்லா இருக்கிறது. நானும் தான் அடிக்கடி கேள்விப்படுகிறேன். அனுராதபுரம் மாவட்டத்தில் தாக்குதல் நடக்கிறது, பொலனறுவைறுவை மாவட்டத்தில் தாக்குதல் நடக்கிறது என்று, பதுமனும் நீங்களும் ஏதோ தீர்மானம் எடுத்திருக்கிறீர்கள் போல இருக்கிறது. வாகனத்தில் ஏறினார். நான் அறிந்தவரை வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தான் தமிழீழம் என்று எண்ணியிருக்கிறேன், நீங்களோ பொலனறுவை மாவட்டத்திலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் தாக்குதல் நடத்துகிறீர்கள். ஈரோஸுக்கு பதுளை தேவைப்பட்டது போல உங்களுக்கு இந்த இரண்டு மாவட்டங்களும் தேவைப்படுகின்றதோ? என்றேன். சிரித்தார். “அப்படியில்லை. இராணுவமோ, குடியேற்றமோ நாம் அதைத்தேடிப் போகாவிட்டால் அவை நம்மைத் தேடி வரும்.” தமிழீழம் எமது சொந்தநாடு, எமது நாட்டிற்குள் சிங்களவன் அத்துமீறும் போது நாமும் எல்லை தாண்டுவது தவிர்க்க முடியாததாகின்றது. அதைவிட கண்டக்காடு பகுதி தமிழரின் பூர்வீக நிலம்தான். பொலனறுவையில் கூட இந்து ஆவயங்கள் இருந்திருக்கின்றன. கண்டக்காடுபகுதியை அண்டிச் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதால் இன்று நீங்கள் அதைச் சிங்களவருடைய பிரதேசமென்று எண்ணுகின்றீர்கள் காலப்போக்கில் மொறவேவா, சாலியபுர என்பதெல்லாம் சிங்களக் கிராமங்கள் என்ற் வேறு இடத்தில் உள்ள தமிழர்கள் சொல்லக்கூடும். ஏனெனில் அந்தப் பெயர்கள் பழக்கத்தில் வந்துவிடும். இராணுவத்தின் கொடுமைகளால் அந்த இடத்துக்குச் சொந்த மான மக்கள் வேறு இடங்களில் குடியமரும்போது இப்படியான நிலை தான் தோன்றும் என்றார். பொதுமக்களின் நிலை என்னமாதிரி என்று கேட்டார் மாத்தயா. நாளாந்தம் சராசரியாக இருபது, முப்பது என்று செத்துக்கொண்டே இருந்தபடியால் அகதிமுகாம் வாழ்க்கை வாழ்ந்து நாளாந்தம் அழிவதை விட முகாம்களைவிட்டு வெளியேறி அவரவர்களுக்கு வசதியான இடங்களில் குடியமருங்கள் என்று மக்களிடம் சொல்லி விட்டோம் என்றார். இவ்வளவு மக்களும் முகாம்களை விட்டு வந்தால் அவர்களால் சமாளிக்க முடியுமா? கேட்டேன். “வேறென்னவழி ஊர்காவற்படையின் கொடுமை அதிகரித்து வருகிறது. மக்களை வெட்டிக் கொல்கிறார்கள். பெண்களைக் கற்பழிக்கிறார்கள். கற்பழிக்கப்படும் பெண்கள் உயிரோடு விடப்படுவதில்லை. இவ்வளவு காலமும் கலவரம் நடந்ததுதான். தமிழ்ப் பெண்களைக் கற்பழிப்பதும் கொலை செய்வதும் இப்போதுதான் ஆரம்பித்துள்ளது. அவர்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள். இனி நாம் என்ன செய்ய வேண்டும். என்பதுதான் பிரச்சினை. அதற்கு முடி வெடுத்தாக வேண்டும்" என்றார். இயக்கத்தில் நிறைய முஸ்லிம் இளைஞர்கள் இருந்தார்களே! அவர்கள் இது தொடர்பாக, என்ன நிலைப் பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்றேன். இயக்கத்தில் இருந்தவர்கள் இருவகை. ஒருசாரார் வேண்டுமென்றே ஊடுருவியவர்கள். அவர்கள். சண்டை தொடங்கியதுமே ஆயுதங்களுடன் ஓடிவிட்டார்கள். அவர்கள் தான் தமிழரைக் கொல்வதில் தீவிரமாயிருக்கிறார்கள். அடுத்தவர்கள் விசுவாசமாகவே இயக்கத்துடன் இருந்தவர்கள். இந்தச் சண்டையில்கூட இராணுவத்துடன் மோதி உயிரிழந்துள்ளார்கள். ஓட்டமாவடியில் நிகழ்ந்த தாக்குதல், களுவாஞ்சிக்குடியில் நிகழ்ந்த தாக்குதல் எல்லாவற்றிலும் முஸ்லிம் போராளிகள் களத்தில் இறந்துள்ளார்கள். இராணுவம் பிரதான பாதையினுள் நுழையவிருந்த சமயத்தில் ஜெட்வேகத்தில் நிலைமை மாறியது என்றார். 'நிலைமைக்கேற்ற மாதிரி மாறி விட்டார்கள் என்று கருதுகிறீர்களா?” என்று கேட்டேன். இல்லை, ஏற்கனவே வகுத்ததிட்டம் செயற்படத் தொடங்கியது” என்றார். “என்ன அது?” என்றேன். “எல்லாக் கிராமங்களிலும் இருந்த பள்ளிவாசல்கள் ஒரேநாளில் இயக்கத்தில் இருந்த முஸ்லிம் இளைஞர்களைக் கூப்பிட்டுக் கதைத்தன. அதைத் தொடர்ந்து அனைவரும் உடனே விலகிவிட்டார்கள். இதன் பின்னணி மிகப் பயங்கரமானது” என்றார். என்ன அது? என்றேன். (தொடரும்)
  6. பாகம் - 13 15-11-1990 என்ன நடந்தது? என்று விசாரித்தேன். அப்போது அருகில் நின்ற ஒருவர் குறுக்கிட்டு நாலாயிரத்து ஐநூறு ரூபாவுடன் வெருகலில் இருந்து இந்தப் பிள்ளைகளின் தந்தை வாழைச்சேனைக்குப் பொருள்கள் கொள்வனவு செய்யப் போனதாகச் சொன்னார். இங்கிருந்து வாகனம் எதுவும் போவதாகத் தெரியவில்லையே? என்றேன். 'சைக்கிளில் தான் சென்றார். எல்லா வியாபாரிகளுமே சைக்கிளில் சென்றுதான் பொருள்களை வாங்குகின்றார்கள்' என்றார். ஏதாவது சின்னப் பிரச்சினைகளென்றாலும் ஓட்டமாவடிப் பாலத்தில் தான் முஸ்லிம் காடையர்கள் சண்டித்தனம் செய்வதும், ஆட்களைக் கடத்துவதும் வழக்கம். வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள். 85 ஆம் ஆண்டுக் கலவரத்தின் போதும் (தமிழ் - முஸ்லிம்) இவ்வாறு பல சம்பவங்கள் நடந்தன. "எனவே ஓட்டமாவடிப்பாலத்தால் போவது பிரச்சினை தானே!. ஏன் அந்த வழியால் போகிறார்கள்?" என்று விசாரித்தேன். ஓட்டமாவடி வழியாக இல்லை. வாழைச்சேனைக்கு நேர்எதிரே உள்ள நாசிவன் தீவு என்னும் இடத்திற்குச் சென்று அங்கிருந்து தோணி மூலம் வாழைச்சேனைக்குச் செல்வார்கள் என்றார். வாழைச்சேனையில் பொருள்கள் வாங்கத் தடையில்லையா? என்று கேட்டேன். வாழைச்சேனையில் தற்போது முஸ்லிம்களின் கடைகள் மட்டுமே உள்ளன. இக்கடைகளுக்கு பள்ளிவாசல்கள் சில நிபத்தனைகளை விதித்துள்ளன. வழக்கமாக ஒரு பொருளுக்கு ஒரு விலையென்றால் தமிழர்களுக்கு விற்கும்போது ஒரு விசேட வரியையும் சேர்த்து கடைக்காரர் வசூலிக்கவேண்டும். குறிப்பிட்ட அந்த வரிப் பணத்தை பள்ளிவாசலுக்கான உண்டியலில் உடனே போட்டுவிட வேண்டும். இதற்காக ஒவ்வொரு கடைகளுக்கும் பள்ளி வாசல்கள் 'வரி உண்டியல்' என்று ஒன்றைக் கொடுத்துள்ளார்கள் என்றார். தேங்காய்க்கு வரி எவ்வளவு? என்றேன். ஒரு தேங்காய் தமிழருக்கு விற்றால் ஒரு ரூபாய் வரி. அந்தக் காசையும் தமிழரிடம் அறவிட்டுப் போட வேண்டியதுதான். இப்படியே ஒவ்வொரு பொருள்களுக்கும் வேறுபட்ட வரி என்றார். கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் போராளிகள் சாராயம். சிகரெட் போன்ற பொருள்களுக்கு வரிவசூலிப்பது போல் ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட செயற்பாட்டில் பள்ளி வாசல்கள் இப்படியான முடிவுகளை எடுத்துள்ளன என்பதை உணரமுடிந்தது. எனவே “வரிதான் அறவிடுகின்றார்களே, பின்பு ஏன் தமிழர்களைக் கொல்கிறார்கள்” என்றேன். “கிழக்கு மாகாணத்தில் தமிழர்களைக் கொல்வதென்பது இப்போது சமூக மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு” என்றார். எல்லா' முஸ்லிம்களும் இதற்குச் சம்மதிப்பார்களா? அவர்களுக்கு தமிழ் மக்களின் நிலங்களுக்கு மத்தியில் காணி உள்ளது அதில் தான் விவசாயம் செய்ய வேண்டும். தமிழர் மத்தியில் தான் கடை நடத்தவேண்டும். விறகுக்குப் போவதானால் கூட தமிழர் நிலங்களுக்குள்ளால் தானே செல்ல வேண்டும். அப்படியானால் எல்லா முஸ்லிம்களும் இதற்குச் சம்மதிப்பார்களா? நீண்ட காலம் ஒன்றாக வாழ்ந்தவர்களை அழிப்பது சாத்தியமா? என்றேன். அதற்கு அவர் “முஸ்லிம்கள் மத்தியில் ஒரு சமூகக்கட்டுப்பாடு உண்டு அதாவது பள்ளிவாசல்கள் என்ன முடிவை எடுக்கின்றனவோ அந்த முடிவுக்கு அந்தப் பள்ளி வாசல்களைச் சேர்ந்தவர்கள் கட்டுப்பட்டே ஆகவேண்டும். தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு என்ன கருத்தும் இருக்கலாம். ஆனால் பள்ளிவாசல்களின் முடிவை எந்தக் காரணத்தாலும் மீற முடியாது. கிழக்கு மாகாணத் தில் இருந்து தமிழர்கள் ஒழிகப்பட வேண்டியவர்கள். எனவே அந்த நடவடிக்கை தொடர்ந்த வண்ணமே இருக்கும். அதுவரை இடைக்கால ஏற்பாடாகத்தான் இந்த வரி வசூலிப்பு முறையை அமுல் படுத்தியுள்ளார்கள்” என்றார். “இதுசாத்தியமாகக் கூடிய விடயமா முஸ்லிமகள் மத்தியில் எத்தனை கல்விமான்கள் உள்ளனர். அவர்கள் இதற்கு சம்மதிப்பார்களா?” என்று சந்தேகத்துடன் கேட்டேன். அவர்களின் கூற்றை யார் மதிக்கிறார்கள். மதவெறியை ஊட்டி ஓரணியில் திரள வைக்கிறார்கள். 85 ஆம் ஆண்டும் இது போல கலவரங்கள் ஏற்பட்டபோது இதே பள்ளிவாசல்கள்தான் முஸ்லிம் காடையர்களிடம் பிடிபடும் தமிழர்களை விடுவிப்பதிலும் சமூக உறவுகளை சீராக்குவதிலும் ஈடுபட்டிருந்தன. ஆனால் இன்று நிலைமை எவ்வளவு தலைகீழாகப் போய்விட்டது” என் றார். “இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் ஒன்று இருக்க வேண்டுமே என்னவென்று தெரியவில்லையா?” என்று கேட்டேன் நிச்சயமாக இதற்கு ஒரு பெரிய பின்னணி உண்டு. இது என்னவென்று எமக்குப் புரியவில்லை. ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். தமிழர்களைக் கொல்வதற்கு முன் அனைவரும் பள்ளிவாசல்களில் கூடுகின்றார்கள். அங்கு சில கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. சிறிது நேரத்தில் இராணுவம் அந்த இடத்துக்கு வரும். இராணுவத்துடன் இணைந்து முஸ்லிம் ஊர்காவல் படையினர் அனைவரும் செல்கின்றார்கள். அப்படிப் புறப்படும் நாளில் பாரிய இன அழிவு நிச்சயம் என்றார். பள்ளிவாசல்களில் என்ன கருத்து முன்வைக்கப்படுகிறது என்று தெரியுமா? என்றேன். அது தெரியவில்லை. அந்தளவுக்கு பள்ளிவாசல்களை நெருங்கிப் பார்க்கவோ, அவதானிக்கவோ முடியாது. முன்பு போல எம்மோடு நெருங்கிப் பழகிய முஸ்லிம்களும் இந்த விடயங்கள் பற்றி எதுவும் கதைப்பதில்லை. ஆனால் ஒரு விடயம் மட்டும் தெரிந்து கொண்டோம் என்றார். “என்ன அது?” என்று கேட்டேன். இப்போது கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்களால் எடுக்கப்படும் நடவடிக்கைக்கு “புனிதப்போர்” என்று பெயரிட்டிருக்கிறார் கள் என்றார். “மனிதத்துவத்துக்கு சமாதிகட்டும் ஈனச் செயலுக்கு புனிதப்போர் என்று பெயரிட்டிருக்கிறார்கள். இதற்கு ஏதோ பின்னணி இருக்க வேண்டும்” என்று நினைத்துக்கொண்டேன். சில நாட்களின்பின் அதற்கு விடை கிடைக்கத்தான் செய்தது. (தொடரும்)
  7. யாழில் மகளிர் கரும்புலிகள் வீரவணக்க நினைவாலயம் 1995/04/13 இடமிருந்து... முதலாவது: கடற்கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணி - அலுவல்சார் முதற் பெண் கரும்புலி, முதற் பெண் கடற்கரும்புலி, முதல் நீரடி நீச்சல் கரும்புலி, முதற் பெண் நீரடி நீச்சல் கரும்புலி. நடு மற்றும் கடைசி முறையே: கடற்கரும்புலிகளான லெப் கேணல் நளாயினி மற்றும் மேஜர் மங்கை - முதற் பெண் நீர்மேற் தாக்குதல் கடற்கரும்புலிகள். ============================
  8. கரும்புலி மாவீரர்கள் வீரவணக்க நினைவாலயம் யாழ்:- 1/11/1994 ========================= திறப்பு விழாவில் 'புலிகளின் குரல்' பொறுப்பாளர் ஜவான் கலந்துகொண்டார்
  9. தமிழீழ நடைமுறையரசின் சிற்பக்கலை செய்யும் குறிப்பிட்ட பிரிவு ஆல் மரத்தில் வடிக்கப்பட்ட ஓர் சிற்பம். இதே போன்ற சிற்பம் ஒன்று கட்டுநாயக்கா கரும்புலிகளுக்கும் தாக்குதல் முடிந்து 24 மணிநேரத்திற்குள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதே மாதிரி ஆறு சிற்பங்கள் புலிகளின் காலத்தில் வடிக்கப்பட்டன .
  10. தரைக்கரும்புலி லெப். கேணல் போர்க் அவர்களின் சிலை வவுனியா 2003 (படிமம் கிடைக்கப்பெறவில்லை)
  11. வீரவணக்க நினைவாலயம் சத்தியநாதன் சிலையடி, கம்பர்மலை, வல்வெட்டித்துறை (இதனது நல்ல நிலையிலுள்ள படிமம் ஒன்றை ஆவணப்படுத்த தந்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்) இது லெப். சங்கர் அவர்களின் வீட்டிலிருந்து சில மீட்டர்கள் தொலைவில் 1980களின் பிற்பகுதியில் கட்டப்பட்டது ஆகும். இச்சிலையில் பெயரால் அப்பகுதி "சத்தியநாதன் சிலையடி" என்றே வழங்கப்பட்டு வந்தது. சிதிலமடைந்த நிலையிலுள்ள மூல நினைவாலயம் 2017ம் ஆண்டு இதனது மூல நினைவாலயத்தின் எஞ்சியுள்ள பகுதிகளில் சுடரேற்றப்பட்டுள்ளதைக் காண்க. அந்த பெட்டிகளுக்குள் முந்தைய காலத்தில் திருவுருவப்படங்கள் (லெப். சங்கர், கப்டன் பண்டிதர் மற்றும் வேறுசிலர்) வைக்கப்பட்டிருந்தனவாம். 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உள்ளூர் இளைஞர்களால் பழைய வடிவத்திலேயே சிதிலமடைந்த பகுதிகள் சரிசெய்யப்பட்ட பின்னர்: "மாவீரர்களின் நினைவாலயம்" என்ற சொற்றொடர் பழையதிலையும் எழுதப்பட்டிருந்தது.
  12. தீருவில் நினைவுத்தூண் ~90களின் முற்பகுதி இந்திய சிறிலங்காக் கூட்டுப் படைகளின் நயவஞ்சகத்திற்கு இலக்காகி தீருவிலிலே காவியமான 12 வேங்கைகளின் நினைவாக தவிபுவினரால் எழுப்பப்பட்ட சின்னம்.... ''கீழே நிற்கும் மனிதரின் உயரத்தை வைத்து இதன் உயரத்தை கணக்கிடுக''

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.