Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+

Everything posted by நன்னிச் சோழன்

  1. Zubin Karkaria CEO and Founder of VFS Global Born: 1968 (age 56 years) Education: R A Podar College Of Commerce & Economics, University of Mumbai Nationality: Indian https://en.wikipedia.org/wiki/VFS_Global இந்தியாக்காரன் தான்😂 (https://www.independent.co.uk/news/uk/home-news/vfs-global-home-office-outsourcing-visa-applications-a9061476.html) பிறந்தது, படிச்சது, கக்காபோனது எல்லாமே இந்தியாவிலைதான் 🤣 இந்தியாக்காரனின்ட தூதுவராலயம் வழக்கம் போல புழுகுது, பிடிபட்டவுடனை🤥😏🙄
  2. செய்திகள் நாளேடு: ஈழநாதம் திகதி: 29/12/1990 பக்கம்: 1 ஊர்காவற்படை கைது செய்த இருபத்தொரு தமிழர்கள் பொலிஸில் ஒப்படைப்பு (மட்டக்களப்பு) மட்டக்களப்பு மாவட்டத் தில் உள்ள வாழைச்சேனைப் பகுதியில் முஸ்லிம் ஊர்காவற் படையினரால் கைது செய்யப்பட்ட இருபத்தொரு தமிழர்கள் சிறிலங்காப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் முஸ்லிம் ஊர்காவற்படையினரால் பலமாகத் தாக்கப்பட்டுள்ளனர். கடந்த 17 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர்களை 20 ஆம் திகதியன்று சிறிலங்காப் பொலிஸார் விடுவித்திருப்பதாகத் தெரிகின்றது. ******
  3. செய்திகள் நாளேடு: ஈழநாதம் திகதி: 25/12/1990 பக்கம்: 1 தமிழர் சுட்டுக் கொலை (அம்பாறை) அம்பாறை மாவட்டத்தில் தமிழ்ப்பொதுமகன் ஒருவர் சிறிலங்கா ஊர்காவற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்டத்தில் உள்ள வினாயகபுரம் என்ற இடத்தைச் சேர்ந்த தவம் என்பவரையே ஊர்காவற் படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். (மு) ******
  4. செய்திகள் நாளேடு: ஈழநாதம் திகதி: 20/12/1990 பக்கம்: 1 3 தமிழர் ஊர்காவற்படையால் ஆலையடிவேம்பில் கொலை (அம்பாறை) அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா ஊர்காவற்படையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்த திங்களன்று காலை ஐந்துமணியளவில் அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு என்னுமிடத்தில் வைத்து சிறிலங்கா ஊர்காவற்படையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். (மு) *****
  5. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 17/12/1990 பக்கம்: 1 இரு தமிழர்கள் வெட்டிக்கொலை திருகோணமலை மாவட்டம் தோப்பூரில் கடந்த 14 ஆம் திகதி முஸ்லிம் ஊர்காவல் படையினர் இரு தமிழர்களை வெட்டிக்கொலை செய்துள்ளனர். உப்பூறல் பகுதியைச் சோர்ந்த ந. தம்பிராஜா (24 வயது) த.விஜயசிங்கம் (40 வயது) ஆகிய இருவருமே வெட் டிக் கொல்லப்பட்டுள்ளனர். [உ-5] ******
  6. செய்திகள் நாளேடு: ஈழநாதம் திகதி: 14/12/1990 பக்கம்: 1 திருமலையில் தமிழர்கள் கடத்தல் படுகொலைகள் தொடர்கின்றன (யாழ்ப்பாணம்) திருமலை நகரில் தமிழர்கள் பதின்நான்குபேர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார்கள். இவர்களில் மூதூர் தபால் நிலைய அதிபரும், கட்டைபறிச்சானைச் சேர்ந்த குணசீலதாஸ், தம்பலகாமத்தைச் சேர்ந்த ராஜி என்பவரும் கு றிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் பற்றிய தகவல் ஒன் றும் இதுவரை தெரியவில்லை. மேலும் திருக்கோணமலை நகரப்பகுதியில் பொலிஸார் அடிக்கடி சுற்றி வளைத்து இளைஞர்களையும், யுவதிகளையும் விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றார்கள். அதேவேளை கிண்ணியா உப்பாறு பகுதியில் மூன்று தமிழர்களும், கிண்ணியா இறங்குதுறையில் ஒரு தமிழரும் ஊர்காவல்படையால் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளனர். *****
  7. மாவீரரான மதிமகள் (துவாரகா பிரபாகரன்) அவர்களின் க.பொ.த. (உ.தர.) பரீட்சை பெறுபேற்று அட்டவணை
  8. மாவீரரான சாள்ஸ் (பிரபாகரன் சாள்ஸ் அன்ரனி) அவர்களின் க.பொ.த. (உ.தர.) பரீட்சை பெறுபேற்று அட்டவணை
  9. மாவீரரான மதிமகள் (பி.ம. துவாரகா) அவர்களின் பிறப்புச் சான்றிதழ் அன்னார் தமிழ்நாட்டில் பிறந்துள்ளார்.
  10. மாவீரரான சாள்ஸ் (பி.ம. சாள்ஸ் அன்ரனி) அவர்களின் பிறப்புச் சான்றிதழ் அன்னார் தமிழீழத்தில் பிறந்துள்ளார்.
  11. வெள்ளை அன்ரி மற்றும் பாலா அங்கிளோடு மதி மாமியும் பாலா தலைவர் மாமாவின் மடியிலும் 2002
  12. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 07/12/1990 பக்கம்: 1 300 முஸ்லிம் இளைஞருக்கு தொண்டர் படை பயிற்சி கொழும்பு, டிச. 7 முந்நூறு முஸ்லிம் இளைஞர்கள் தேசிய பாதுகாப்புப்படை தொண்டர்களாக பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களில் முதலாவது தொகுதியினரின் பயிற்சி முடி வடைந்து விட்டது. பயிற்சி முடிந்து இரண்டாவது தொகுதித் தொண்டர்கள் இம்மாதம் 10 ஆம் திகதி வெளியேறுகின்றனர். இவர்கள் மன்னார் மாவட்டத்தில் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என்று அமைச்cஅர் ரஞ்சன் விஜேரத்தின சொன்னார். (உ-எ) *****
  13. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 21/11/1990 பக்கம்: 4 ராணுவ முகாமில் முஸ்லிம்களுக்கு ஆயுதப் பயிற்சி கொழும்பு, நவ. 21 மன்னாரில் உள்ள தள்ளாடி இராணுவ முகாமில் வைத்து 58 முஸ்லிம் இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடிந்ததும் இவர்கள் ஊர்காவலர்களாகக் கடமை புரிவார்கள் என்று அமைச்சர் பெஸ்டஸ் பெரேரா கூறியுள்ளார். ******
  14. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 14/11/1990 பக்கம்: 1 ஊர்காவலர் உதவியுடனேயே முஸ்லிம் மீளக் குடியேற்றமாம் கொழும்பு, நவ. 14 மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களை ஊர்காவல் படையினாாக முதலில் அனுப்பிவிட்டே, அகதிகளாக இருக்கும் முஸ்லிம் மக்கள் சொந்த கிராமங்களுக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்படுவர். அமைச்சர் பெரேரா, புத்தளம் கற்பிட்டி பகுதிகளில் தங்கியுள்ள மன்னார் முஸ்லிம் அகதிகள் மத்தியில் பேசுகையிலேயே முன் கண்டவாறு கூறி உள்ளார். (இ-எ) *****
  15. செய்திகள் நாளேடு: ஈழநாதம் திகதி: 12/11/1990 பக்கம்: 1, 4 17 வீதமான முஸ்லிம்களுக்கு 30 வீதத்தை நாம் கொடுக்க முன்வந்தோம்; அவர்கள் காட்டிக்கொடுத்தனர் மக்கள் முன்னணி செயலாளர் யோகி தெரிவிப்பு (கிளிநொச்சி) முஸ்லிம்களுடன் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை மட்டும் கருத்திற் கொண்டு வடக்கு கிழக்கு மக்கள் தொகையில் பதினேழு வீதம் மட்டுமுள்ள அவர்களுக்கு முப்பது வீதத்தை விட்டுக் கொடுப்பதாக அவர்களுடன் நல்ல முறையில் அணுகி பேச்சுவார்த்தை நடாத்தினோம். அப்படியிருந்தும் கிழக்கில் அவர்கள் செய்த துரோகத்தினால் நாம் பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது. இவ்வாறு கிளிநொச்சியி லுள்ள அரச உயர் அதிகாரிகள் மத்தியில் பேசிய விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணிச் செயலாளர் திரு. யோகரட்ணம் யோகி கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் வன்னி மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திரு. சீலன் தலைமையில் கிளிநொச்சி இந்து மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் திரு. யோகி மேலும் பேசுகையில்: அண்மையில் கிழக்கு மாகாணத்தில் நாலாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். திருமலையிலிருந்து நான்கு இலட்சம் தமிழ் மக்கள் தமது சொத்துக்களை, உயிர்களை, கற்பை இழந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர். அம்பாறை மாவட்டத்திலிருந்து ஒரு இலட்சம் மக்கள் வெளியேறியுள்ளனர். கொலை செய்யப்பட்ட நாலாயிரம் தமிழர்களில் இரண்டாயிரம் தமிழர்கள் முஸ்லிம்களாலும், மிகுதி இரண்டாயிரம் பேர் இராணுவத்தினராலும் கொலை செய்யப்பட்டனர். தற்போது கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தைக் கண்டுபயப்படுவதிலும் பார்க்க முஸ்லிம்களைக் கண்டே தமிழ் மக்கள் கூடுதலாகப் பயப்படுகிறார்கள். கிழக்கு மாகாணத்திலுள்ள அகதி முகாம்களிலிருந்து தமிழ்ப் பெண்கள் முஸ்லிம்களால் கடத்திச் செல்லப்பட்டு மானபங்கப்படுத்தப்படுகிறார்கள். அண்மையில் தமிழ்ப் பெண் ஒருத்தி முஸ்லிம்களால் மானபங்கப்படுத்தப்பட்ட பின் கல்லால் எறிந்து கொலை செய்யப்பட்டிருக்கிறாள். எமது இயக்கத்திலிருந்த பல முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதங்களுடன் இயக்கத்தை விட்டு ஓடி இராணுவத்துடன் சேர்ந்து எமது முகாம்களைக் காட்டிக் கொடுப்பதிலும், எம்மை அழிப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தமிழருக்கு எதிராகச் செயற்படும் முஸ்லிம்களுக்கு அரசு சகல உதவிகளையும் செய்து வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் நிலங்கள் அரசாங்கத்தினால் பறிக்கப்பட்டன. அப்போதும் முஸ்லிம்களோ, அன்றி அவர்களின் தலைவர்களோ அரசிற்கு எதிராகப் போராட்டம் ஒன்றை நடாத்த முன்வரவில்லை. போராட் டத்திற்குப் பதிலாக முஸ்லிம் தலைவர்கள் சிங்களக் கட்சிகளின் பின்னாலேயே சுற்றிச் சுற்றி வந்தார்கள். இன்று அவர்களின் பின்னால் நின்று கொண்டு தமிழர்களைப் படுகொலை செய்து அவர்களை கிழக்கு மாகாணத்தில் இல்லாது செய்வதற்காக ஆயுதம் ஏந்திப் போராடுகிறார்கள் என்றும் தெரிவித்தார். பக்கம்: 1 புத்தளத்தில தமிழர் லொறிகள் முஸ்லிம்களால் கொள்ளை (கிளிநொச்சி) தமிழர்களின் லொறிகளை வழிமறிப்பதிலும், பணங்களைக் கொள்ளையடிப்பதிலும் தற்போது முஸ்லிம்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். ஆயுதப்படையினரும் இம் முஸ்லிம்களுக்கு உதவியாகச் செயற்படுகிறார்களாம். யூரியா பசளையைக் கொள்வனவு செய்வதற்காகக் கிளிநொச்சியிலிருந்து கொழும்பு சென்ற லொறி ஒன்று முஸ்லிம்களால் வழிமறிக்கப்பட்டுப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் புத்தளத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சியில் பசளை, கிருமிநாசினி முதலியவற்றை விற்பனை செய்யும் ஸ்தாபனம் ஒன்று சிளிநொச்சியில் பசளை, உரம் ஆகியவற்றிற்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால் அப்பொருள்களைக் கொழும்பில் இருந்து கொண்டுவருவதற்காகச் சென்றதாம். மேற்படி ஸ்தாபன லொறி புத்தளத்தில் வைத்து வழிமறிக்கப்பட்டு ஒன்றரை இலட்சம் ரூபா ரொக்கப்பணமும் காசோலைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாம். இது சம்பந்தமாகப் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாம். (49) *****
  16. செய்திகள் நாளேடு: ஈழநாதம் திகதி: 10/11/1990 பக்கம்: 1 அகதி முகாமிலிருந்து 60 தமிழர் இழுத்துச் செல்லப்பட்டனர் (திருமலை) சென்ற மாத கடைசிப் பகுதியில் கிழப்பன்பே அகதி முகாமிலிருந்து பிடித்துச் சென்ற தமிழர்கள் இருபத்திமூன்றுபேரை சுட்டுக் கொன்றுவிட்ட சிறிலங்கா ஆயுதப்படையினரும், முஸ்லிம் ஊர்காவற் படையினரும் மீண்டும் அதே முகாமினுட் புகுந்து அறுபது அப்பாவி ஆண்களை இழுத்துச் சென்றுள்ளனர். இந்த ஆட்கடத்தல் பற்றி தெரியவருவதாவது: கடந்த ஏழாம் திகதி சீனன் குடாப் பகுதியில் கிழப்பன்பே என்ற இடத்தில் அமைந்துள்ள அப்பாவிப் பொதுமக்களின் முகாமை சிங்கள இராணுவ அணியினரும், முஸ்லிம் ஊர்காவற்படையினரும் சுற்றி வளைத்தனர். இவ்விரு படையினரும் ஏற்கனவே அயற் கிராமங்களில் குடியிருந்த மக்களின் வாழ்விடங்களில் அட்டகாசம் புரிந்து கொடுமைகள் பல செய்ததால் தமது வீடுவாசல்களை விட்டு மக்கள் எல்லோரும் ஒன்றாக இந்த முகாமில் வந்து தங்கியிருந்தனர். இவர்களை சுற்றிவளைத்ததுடன் அப்பாவிகளான அறுபது பேரை தெரிந்தெடுத்து தமது இராணுவ முகாம்களுக்கு இந்த அறுபது பேரின் உறவினர்களும் கதறி அழஅழ இழுத்துச் சென்றுள்ளனர். இவர்கள் பற்றிய விபரம் எதுவும் இன்னும் தெரியவரவில்லை. (க) நாளேடு: உதயன் திகதி: 10/11/1990 பக்கம்: 3 மட்டக்களப்புப் பகுதியில் மட்டும் 1,115 பேர் காணாமற் போயினர்! மட்டக்களப்பு, நவ.10 கடந்த ஜூன் மாதத்தின் பின்னர், மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 1,115 பேர் காணாமற்போயுள்ளார்கள் என இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை வந்தாறு மூலை அகதிகள் முகாமில் இருந்து 158க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட போதிலும் 32 பேரை மட்டுமே கைது செய்ததாகப் பாதுகாப்புப் படையினர் இப்போது தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களில் சரி அரைப்பங்கினருக்கு மேல் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்களில் 90சத வீதத்தினர் நிவாரணப் பொருள்களைக் கொண்டே காலத்தைக் கழிக்க வேண்டியுள்ளது. இதேவேளை திருகோணமலையிலும் 278 பேர் படையினரால் கைதுசெய்யப்பட்ட பின்னர் காணாமற்போயுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. முஸ்லில் ஊர்காவல் படையினரால் கூட்டிச் செல்லப்பட்டுக் காணாமற் போனவர்களின் எண்ணிக்கை இன்னமும் சரியாக ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை. மலையில் தமிழர் பகுதிகளில் உள்ள கோவில் காணிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்படுவதாகவும் அறியவந்துள்ளது. (அ) *****
  17. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 03/11/1990 பக்கம்: 1 ஆரையம்பதி ராணுவ முகாமினுள் முப்பது அப்பாவித் தமிழர்கள் ரயர் போட்டு உயிருடன் எரிப்பு ராணுவத்தினதும் முஸ்லிம் ஊர்காவல்படையினதும் வெறித்தனம் (மட்டக்களப்பு) மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி இராணுவ முகாமிற்குள் வைத்து முப்பது அப்பாவித் தமிழரைச் சிறிலங்கா இராணுவமும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும் சேர்ந்து உயிருடன் ரயர் போட்டுக் கொளுத்தினர். இச் சம்பவம் நேற்று முன்தினம் காலை இடம்பெற்றது. இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது: ஆரையம்பதி, கல்லடி, தாளங்குடா, புதுக்குடியிருப்பு, கிரான்குளம் ஆகிய இடங்களை கடந்த முப்பத்தோராம் திகதி சுற்றிவளைத்த சிங்கள இராணுவத்தினரும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும் அக்கிராமங்களில் இருந்த அப்பாவிப் பொது மக்களான முப்பது பேரை ஆரையம்பதி இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து அன்று இரவு முழுவதும் முகாமிற்குள் வைத்து முப்பது பொதுமக்களையும் அடித் துத் துன்புறுத்தியதன் பின் னர் அடுத்த நாட் காலை நவம்பர் முதலாம் திகதி அன்று முகாமிற்குள்ளேயே வைத்து உயிருடன் துடிக்கத் துடிக்க ரயர் போட்டு சிறிது சிறிதாக எரித்துக் கொலை செய்துள்ளனர். புலிகள் தாக்கு இதனைத் தொடர்ந்து நேற்றுக் காலை ஆறு பதினைந்து மணியளவில் விடுதலைப் புலிகள் அதே ஆரையம்பதி இராணுவ முகாம் மீது தாக்குதல் தொடுத்தனர். இத்தாக்குதல் சம்பவங்களின் போது அருள் 89 ரக ரொக்கட் ஷெல் தாக்குதலில் முகாமின் பாதுகாப்புக்கு அமைக்கப்பட்டிருந்த காவல் அரண்கள் சேதமாயின. அதற்குள் இருந்த இராணுவத்தினரின் சேத விபரங்கள் எதுவும் தெரியவில்லை. பின்பு ஆத்திரம் கொண்ட இராணுவத்தினர் அகோர ஷெல் தாக்குதல்களையும், துப்பாக்கி வேட்டுக்களையும் தீர்த்த வண்ணம் வெளியே வந்தனர். இவ்வாறு வெளியே வந்த இராணுவத்தினரை நோக்கி விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பதில் துப்பாக்கித் தாக்குதல்களில் மீண்டும் படையினர் முகாமிற்குள் ஓடி முடங்கிக்கொண்டனர். (க) *****

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.