Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. குறிசூட்டுநர் லெப். கேணல் குயிலன் (ஹெக்லர் & கோச் பி.எஸ்.ஜி. 1 குறிசூட்டுத் துமுக்கி/ Heckler & Koch PSG1 Sniper Rifle) (வரலாற்று காப்பிற்காக நான் செய்த திரைப்பிடிப்பு) 'ஓயாத அலைகள் மூன்றின் கட்டம் மூன்றின் போது'
  2. செய்திகள் நாளேடு: ஈழநாதம் திகதி: 20/08/1990 பக்கம்: 1 அதிரடிப்படையுடன் முஸ்லிம் குண்டர் தமிழின அழிப்பு! துறைநீலாவணையில் 60 தமிழர் இரவில் வெட்டியும் சுட்டும் கொலை! (அம்பாறை) அம்பாறை மாவட்டத்திலுள்ள துறைநீலாவணையினுள் அதிரடிப்படை சகிதம் கடந்த பன்னிரெண்டாம் திகதி புகுந்த ஆயுதந் தாங்கிய முஸ்லிம் குண்டர்கள் அறுபது தமிழர்களைத் துடிதுடிக்கக் கூரிய ஆயுதங்களினால் வெட்டியும் குத்தியும் துப்பாக்கிகளால் சுட்டும் கொலை செய்தனர் என்ற தகவல் சிறிது தாமதமாகக் கிடைத்துள்ளது. இப்பகுதிகளில் சிங்கள இராணுவம், அதிரடிப்படை, முஸ்லிம் குண்டர்கள் தமிழின அழிப்பில் ஒன்றுபட்டு ஈடுபடுகின்றனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அம்பாறை மாவட்டத்தில் தமிழர் படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சிறிலங்கா இராணுவத்தினரும், சிங்கள ஊர்காவற்படையினரும், இவர்களுடன் முஸ்லிம் ஊர்காவற்படையினரும் சேர்ந்து தமிழர்களைக் கண்ட இடங்களிலெல்லாம் குத்தியும், வெட்டியும், சுட்டும் கொன்று வருகின்றனர். இதனால் தமிழர்களின் பல குடும்பங்களே முற்றாக அழிக்கப்பட்டு வருகின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 12ம் திகதி மாலை ஐந்து மணிக்கு சேனைக்குடியிருப்பிற்குள் புகுந்த முஸ்லிம் ஊர்காவற்படையினர் பத்துத் தமிழர்களைச் சுட்டுக் கொன்றுள்ளனர். அதே தினத்தில் துறைநீலாவணை கிராமத்தில் மாலை 5:30 மணிக்கு துவிச்சக்கர வண்டிகளில் சென்று கொண்டிருந்த ஐந்து தமிழ் இளைஞர்களை சிங்கள இராணுவத்தினர் சுட்டுக்கொன்றுவிட்டு இறந்தவர்களின் உடல்களை டயர் போட்டு எரித்துள்ளனர். நாளேடு: உதயன் திகதி: 20/08/1990 பக்கம்: 4 வீரமுனைச் சம்பவத்தில் தமிழர் வீடுகளும் தீக்கிரை யாழ்ப்பாணம்‌, ஆக. 20 வீரமுனைப்‌ பிள்ளையார்‌ கோவில்‌ பகுதியில்‌ கடந்த வெள்ளியன்று தமிழர்கள்‌ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் போது தமிழர்களிள்‌ பல வீடுகள்‌ மற்றும்‌ உடைமைகளும்‌ முஸ்லிம்களினால்‌ சூறையாடப்பட்ட பின்னர்‌ தீயிட்டுக்‌ கொழுத்தப்பட்‌டிருக்கின்‌றன. பத்துக்கும்‌ மேற்பட்ட குழந்‌தைகளைக்‌ கொலையாளிகள்‌ காலில் பிடித்து அடித்‌துக்‌ கொன்றதாகவும்‌-- எட்டு வயதுக்கு உட்பட்ட 22 சிறுவர்கள்‌, 16 வயதுக்கும்‌ 18 வயதுக்கும்‌ உட்பட்ட 9 பெண்கள்‌, திருமணமான பெண்கள்‌ 33பேர்‌, மற்றும்‌ வயோதிபர்கள்‌ உட்பட 19 ஆண்கள்‌ இந்தச்‌ சம்பவத்தில்‌ குத்தியும்‌, வெட்டியும்‌, சுட்‌டும் கொல்லப்பட்டிருப்பதாகவும் - விடுதலைப்‌ புலிகள்‌ வட்டாரங்களில்‌ இருந்து தெரியவந்திருக்கிறது. (உ-5) *****
  3. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 19/08/1990 பக்கம்: 1 வீரமுனைப் பகுதியில் 91 தமிழர்கள் சுட்டுக்கொலை! 125 பேர் வரை காயமுற்றனர் அம்பாறை மவட்டம் வீரமுனையில் நேற்று முந்தினம் அப்பாவித் தமிழர்கள் 91 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சுமார் 125 பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமுற்றனர். இப்பகுதியில் உள்ள ஊர்காவல் படையினருக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு சிலமணி நேரத்துக்குள் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. விடுதலைப் புலிகள் வட்டாரங்களிலிருந்து இத்தகவல் தெரியவந்தது. காயமுற்ற தமிழர்ளை இராணுவத்தினர் அம்பாறைக்கு கொண்டுசென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது (உ- 5) *****
  4. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 18/08/1990 பக்கம்: 1 ஏறாவூரில் அமெரிக்கரான கத்தோலிக்க மதகுருவை முஸ்லிம் குழு கடத்தியது மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்ப் பகுதியில் இருந்து கத்தோலிக்க மதகுரு ஒருவரை முஸ்லிம் ஆயுதக் குழு ஒன்று கடத்திச் சென்றுவிட்டதாகக் அறிவிக்கப்படுகிறது. அமெரிக்க நாட்டைக் சேர்ந்தவரான அந்த மதகுருவை முஸ்லிம் குழுவிடமிருந்து மீட்பதற்காக, அரசுப்படையில் தனிப் பிரிவு ஒன்று ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்ததாக ஏஜென்சிச் செய்திகள் தெரிவித்தன. (அ-எ) *****
  5. செய்திகள் நாளேடு: ஈழநாதம் திகதி: 17/08/1990 பக்கம்: 1 & 2 முஸ்லிம் மக்களுக்கு வேண்டுகோள் தமிழீழத்தில்‌ இன்று சிங்‌கள அரசு பெருமளவில்‌ இனப்‌படுகொலையை நடத்துகின்‌றது. தமிழீழமெங்கும் தொடர்ந்து ஆகாய விமானங்கள்‌ குண்டுகள்‌ வீசுகின்றன. அகதிகள்‌ முகாம்கள்‌ பாடசாலைகள்‌, வைத்தியசாலைகள்‌, சந்தைகள்‌, மின்சார நிலையங்கள்‌, பொதுமக்களின்‌ வீடுகள்‌ என எங்கும்‌ குண்டுகள்‌ வீசப்படுகின்றன. எங்கும்‌ உணவு இல்லை, மின்சாரம்‌ இல்லை, எரிபொருள்‌ இல்லை, மருந்துகள்‌ இல்லை, எந்த மாவட்ட வைத்தியசாலைகளும்‌ இயங்கவில்லை. கிழக்கு மாகாணத்தில்‌ மட்‌டக்களப்பிலும்‌, வடக்கு மாகாணத்திலும்‌ கிளிநொச்சியிலும்‌ பல மக்கள்‌ பட்டினியால்‌ இறந்துள்ளனர்‌. தமிழீழமெங்கும்‌ மருத்துவ வசதியின்றி இறந்தவர்‌ பலர்‌. சிங்கள அரசு திட்டமிட்டு தமிழீழ மக்களை பட்டினிபோட்டு அழிக்க, அடிபணிய வைக்க முயல்கின்றது. இங்கு வயல்‌ நிலங்கள்‌ எல்லாம்‌ எரிக்கப்பட்டுள்ளன; சொத்துக்கள்‌ எல்லாம்‌ அழிக்‌கப்படுகின்றன. வீடுகளிலிருக்கும்‌ நெல்லு, அரிசி எல்லாம்‌ எரிக்கப்படுகின்றன அல்லது சிங்கள இராணுவம்‌ எடுத்துச்சென்று சிங்கள மக்‌களுக்குத் தருகின்றது. சர்வதேச அமைப்புக்குழு ஊடாக தமிழீழ மக்களுக்கு உதவுவது போல் அரசு நடிக்கின்றது. உதாரணமாக யாழ், குடாநாட்டுக்கு மாதம் ஒன்றிற்கு 20,000 மெற்றிக் தொன் உணவுப்ப் பொருட்கள் தேவை. யூன் 14ம் திகதியில் இருந்க்டு இன்று வரை குடாநாட்டுக்கு வந்த உணவுப்பொருட்கள் 1173 மெற்றிக் தொன்கள் மட்டுமே. தமிழீழ மெங்கும்‌ இனப்படுகொலையை நடத்திக்‌ கொண்டு அதை மறைக்க கிழக்கில்‌ தமிழ்‌, முஸ்லிம்‌ கலவரத்தை திட்டமிட்டு அரசு தூண்டிவிடுகின்றது. வட மாகாணத்தின்‌ மீது அரசு நடத்தும்‌ தாக்குதலைத்‌ தடுத்து கிழக்கிற்கு மேலும்‌ படைகளை அனுப்பவே முஸ்‌லிம்களை விடுதலைப்‌ புலிகள்‌ கொல்வதாக அரசு கூறுகின்றது. உண்மைநிலை என்னவெனில்‌ தமிழீழம்‌ எங்கும்‌ நடக்கும்‌ இனப்படுகொலையை மறைக்கவும்‌ விடுதலைப்‌ புலிகளின்‌ பெயரைக்‌ களங்கப்படுத்தவுமே அரசு திட்டமிட்ட முஸ்லிம்‌ மக்கள்‌ - தமிழ் மக்கள்‌ கலவரத்‌தைத்‌ தூண்டி வருகின்றது. முஸ்லிம்‌ காங்கிரஸ்‌, ஐ. தே. ௧., சிறிலங்கா சுதந்திரக்‌ கட்சி, ஈ. பி. ஆர்‌. எல்‌. எவ்‌., புளொட்‌, ரெலோ, ஈ. என்‌. டி. எல்‌. எவ்‌. மற்றும்‌ ஊர்‌காவல்படையைச்‌ சேர்ந்த முஸ்லிம்கள்‌ என்று எல்லோரும்‌ இப்போது ஒன்று சேர்ந்து தமிழ் மக்களை அழிக்கும்‌ நடவடிக்கைகளிலும்‌ விடுதலைப்புலிகளைக்‌ காட்டிக்‌ கொடுக்கும்‌ நடவடிக்கைகளிலும்‌ இறங்கியுள்ளனர்‌. முஸ்லிம்‌ மக்களின்‌ உரிமைகளை, நிலங்களைப்‌ பறிக்‌கச்‌ சிங்கள அரசு தயங்கியதில்லை. பல இடங்களில்‌ முஸ்லிம்‌ மக்களின்‌ தனித்‌துவத்தைப்‌ பறிக்கவும்‌ சிங்கள அரசு தயங்கியதில்லை. தமிழீழப் பகுதிகளில் குறிப்பாகத் தமிழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் பிரதேசங்களில் மட்டும் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகவோ, கலாசார ரீதியாகப் பாதிக்கப்படாமல் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் முஸ்லிம் மக்கள் முழுமையான பாதுகாப்போடு வாழக்கூடியதாக இருந்தது. ஆனால்‌ இன்று பல முஸ்‌லிம்கன்‌ சிங்கள இராணுவத்‌தோடு சேர்ந்து தமிழ் மக்‌களை அழிக்கவும்‌, தமிழீழப்‌ போராட்டத்தைக்‌ காட்டிக்‌ கொடுக்கும்‌ முயற்சியிலும்‌ இறங்‌கியுள்ளார்கள்‌. இந்திய இராணுவமும்‌ அதன்‌ கூலிப்படைகளும்‌ முஸ்‌லிம்களைக்‌ கொலை செய்த போது இவர்கள்‌ யாருமே குரல்‌ எழுப்பியது கிடையாது. சமூக கலவரம்‌ நடந்ததும்‌ கிடையாது. இந்திய இராணுவத்துக்கு பயந்து ஐ.தே. கட்சியும்‌, சி.ல.சு. கட்சியும்‌, முஸ்லிம்‌ காங்கரசும்‌ விசுவாசமாக இருந்தும் மெளனம்‌ சாதித்தன. இன்று அதே சக்திகள்‌ தமது சுயநலன்களுக்‌காக சமூகக்‌ கலவரத்தைத்‌ தூண்டிவிட்டு முஸ்லிம் மக்கள்‌ கொல்லப்படுகிறொர்கள்‌ என்று முதலைக்‌ கண்ணீர்‌ வடிக்கின்றார்கள். முஸ்லிம்‌ மக்கள்‌ சிங்கள இராணுவத்தால்‌, கிழக்கு மாகாணத்தில்‌ மட்டுமல்ல வடக்கு மாகாணத்திலும்‌ கொல்லப்படுகிறார்கள்‌. முஸ்லிம்கள்‌ தமது பிரதேசமெனக்‌ கூறிக்கொண்டு இப்‌போது தமிழ்‌ மக்களைக்‌ கொன்று வரும்‌ அம்பாறை மாவட்டத்தில்‌ எமது போராட்‌டத்தின்‌ மூலமே சிங்களக்‌ குடியேற்றம்‌ பெரும்‌ அளவில்‌ தடுக்கப்பட்டன. அங்கு 50,000 சிங்களக்‌ குடும்பங்‌களை குடியேற்றும்‌ திட்டமொன்று இருந்தது. எமது போராட்டத்தின்‌ மூலமே இன்று வழங்கப்பட்டிருக்கும் பல சலுகைகளையும் முஸ்லிம் மக்கள் பெற்றிருக்கிறார்கள். தமிழ் மொழி அரசகரும மொழி, இனவிகிதாசார அடிப்படையில் வேலை வாய்ப்பு, பதவி உயர்வு என்பன. தமிழீழப்‌ போராட்டத்தோடு இணைந்து போராடிக்கொண்டு முஸ்லிம்‌ மக்கள்‌ உரிமைகளைப்‌ பேசுவதை விட்டுவிட்டு, தமிழீழப்‌ போராட்டத்தை காட்டிக்‌ கொடுத்துக்கொண்டு இவ்வாறு சிங்கள அரசோடு கூட்டுச்‌ சேர்வதன்‌ மூலம்‌, தமிழீழப்‌ போராட்டத்திலிருந்து முஸ்‌லிம்‌ மக்கள்‌ தனிமைப்‌படுத்‌தப்படுகின்றார்கள்‌. நாளை சிங்கள அரசு உங்களை அழிக்‌கும் போது உங்கள்‌ தலைமைகள் இன்று எவ்வாறு தமிழீழப்‌ போராட்டத்தைக்‌ காட்டிக்கொடுக்‌கின்றனவோ அது போலவே உங்களையும்‌ காட்டிக்‌ கொடுக்கத்‌ தயங்காது. இன்று தமிழ்‌ மக்களைக்‌ கொலை செய்ய சிங்கள அரசு தரும்‌ ஆயுதங்கள்‌ நாளை உங்களையே அழிக்கத் தயங்காது. இன்று தமிழ்‌ மக்‌களை அழிக்கும்‌ சிங்கள அரசு, தமிழ்‌ அகதி முகாம்களைத்‌ தாக்கும்‌ சிங்கள அரசு, முஸ்லிம்‌ மக்‌களுக்கு தென்‌ இலங்கையில்‌ உணவும்‌ உடையும்‌ வழங்கிப்‌ பாதுகாக்கிறது. இது உங்கள்‌ மீது கொண்ட அன்பினால் அல்ல. இன்று தமிழர்களை அழித்த பின்பு நாளை உங்‌களை அழிப்பது சுலபமானது என்பதாலேயே ஆகும்‌. தமிழீழப்‌ போராட்டத்தை அடக்க எனக் கொண்டுவரப்பட்ட சட்டங்‌கள்‌ எல்லாமே இன்று சிங்கள மக்களைக்‌ கொலை செய்து ரயர்‌போட்டு எரிக்கப்‌ பயன்‌படுத்தப்படுகின்றன என்பதை முஸ்லிம்‌ மக்கள்‌ மறந்துவிடக்‌ கூடாது. இன்று உலகில்‌ நடுநிலையாக நின்று செய்திகளை வழங்கும்‌ அமைப்புகள் கூட அரசு சார்பான செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து உண்மை நிலையைக்‌ கண்டறிவதற்காக வருவோரும் கொழும்போடு திரும்பிச் செல்லும் நிலையே காண்கிறோம் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் 14/06/1990 இல் இருந்து 05/08/1990 வரை நடந்த சில தகவல்களை மட்டும் நாம் இங்கே தருகின்றோம். குறிப்பாக அம்பாறை மாவட்ட நிகழ்வுகளைத் தருகின்றோம். சிலவற்றை இலங்கையில் வாழும் முஸ்லிம்களினதும், உலகில் வாழும் முஸ்லிம்களினதும் கவனத்துகுக் கொண்டு வருகின்றோம். இச்செய்திகளை இலங்கைத் தீவில் வாழும் முஸ்ளிம் மக்களினதும் உலகில் வாழும் முஸ்லிம் மக்களினதும் பார்வைக்கு வைக்கின்றோம். தமிழீழத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் யார் உண்மையான நண்பர்கள் என்பதை விரைவில் உணர்ந்து சரியான முடிவை எடுக்கவேண்டுமென விரும்புகிறோம். அவர்களை சமூக விரோதிகளையும் காட்டிக்கொடுக்கும் தலைமைகளையும் கைவிட்டு, எம்முடன் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில்‌ 19/06/90இல்‌ இருந்து 5/8/90 வரை 1679 அப்பாவித்‌ தமிழ்‌ மக்கள்‌ கொல்லப்பட்டனர்‌. 4420க்கு மேற்பட்ட வீடுகள்‌ எரிக்கப்பட்டன. 159க்கு மேற்‌பட்ட கடைகள்‌ எரிக்கப்பட்‌ டன. பல பெண்கள்‌ பாலியல்‌ வன்முறைக்கு உள்ளாக்கப்பட்‌டனர்‌. இதே காலகட்டத்தில்‌ மட்‌டக்களப்பில்‌ 779 தமிழர்கள்‌ கொல்லப்பட்டனர்‌. 1697 வீடுகள் எரிக்கப்பட்டன. இச்செயல்களை எல்லாம்‌ சிங்கள இராணுவத்தோடு சேர்ந்து எஸ்‌. எல்‌. எப்‌. பி, யூ. என்‌. பி, எம்‌. சி. கட்சிகளைச்‌ சேர்ந்த ஊர்காவல்‌ படையினரான முஸ்லிம்‌களே செய்தார்கள்‌. பல தமிழ்ப்‌ பெண்கள்‌ முஸ்லிம்‌ சமூக விரோதிகளால்‌ பாலியல்‌ வன்‌முறைக்குள்ளாக்கப்பட்‌டார்‌கள்‌. பொத்துவில்‌ 19.6.90: 85 கடைகள்‌ கொள்ளையடிக்கப்பட்டு எரிக்‌கப்பட்டன. 16 பேர் கொல்லப்‌பட்டு எரிக்கப்பட்டனர்‌. 20.6.90 பொத்துவிலில்‌ 1000 வீடுகள்‌ கொள்ளையடிக்‌கப்பட்டு சேதமாக்கப்பட்‌டன. 28.6.90 லகுகல காட்டில்‌ அகதிகளாக இருந்த 25 இளைஞர்கள்‌ கொல்லப்பட்டு எரிக்‌கப்பட்டனர்‌. 29.6.90 பொத்துவில்‌ காவல்துறை நிலையம்‌ திறக்கப்பட்டது. 30.6.90இல்‌ இருந்து 25.7.90 வரை 75 பேர்‌ வரை கொலை செய்யப்பட்‌டனர்‌. 01.8.90 பொத்துவில்‌ அகதி முகாம்‌ சுற்றிவளைக்கப்பட்டு 200 பேர்‌ கைது செய்யப்பட்டனர்‌. அதில்‌ 100பேர்‌ சுடப்பட்‌டனர்‌. 2.8.90 பொத்துவிலில்‌ மேலும்‌ இரு தமிழர்கள்‌ கொல்‌லப்பட்டனர்‌. கோமாரி 28.7.90 கோமாரி அகதிகள்‌ முகாமில்‌ இருந்து 18 தமிழர்‌கள்‌ படுகொலை செய்யப்பட்‌டனர்‌. 20.6.90 கோமாரியில்‌ 15 வீடுகளும்‌ 2 கடைகளும் கொள்ளை அடிக்கப்பட்டன. 4 இளைஞர்‌கள்‌ கொல்லப்பட்டனர்‌. திருக்கோயில்‌ 27.6.90 திருக்கோயிலில்‌ 25 இளைஞர்கள்‌ இரகசிமாக கைதுசெய்யப்பட்டு கொல்லப்பட்டனர்‌. 8.7.90 சாகாமப்‌ பகுதியில்‌ 75 வீடுகள்‌ எரிக்கப்பட்‌டன. 9.7.90 கஞ்சிக்குடியாறு, தங்கவேலாயுதபுரத்தில்‌ 150 வீடுகள்‌ கொள்ளையடிக்கப்‌பட்டு எரிக்கப்பட்டன. 10 தமிழர்கள்‌ கொல்லப்பட்டனர்‌. 2000க்கு மேற்பட்ட ஆடுகள்‌, மாடுகள்‌ பிடித்துச்‌ செல்‌லப்பட்டன. 2.8.90: 15 பொதுமக்கள்‌ சுடப்பட்டு இறந்தனர்‌. அக்கரைப்பற்‌று 24.06.90: 85 பொதுமக்கள்‌ கொல்லப்பட்டனர்‌. 25.06.90: 76 பொதுமக்கள்‌ கொல்லப்பட்டனர்‌. 26.6.90 ஆலையடிவேம்பில்‌ வைத்து 5 பொதுமக்கள்‌ கொல்லப்பட்டனர்‌. 28.60.90: 10 தமிழர்கள் கொல்‌லப்‌பட்டனர்‌. 03.07.90ல்‌ இருந்து 20.7.90 வரை 103 தமிழர்கள்‌ கொல்‌லப்பட்டனர்‌. 1529 வீடுகள்‌ சேதமாக்கப்‌பட்டன. 129 வீடுகள்‌ முற்றாக எரிக்கப்பட்டன. 20 கடைகளும்‌, 2 அரவை ஆலைகளும் எரிக்கப்பட்டன. நிந்தவூர்‌ 8.7.90: 89 தமிழர்கள்‌ நிந்‌தவூர்‌ முருகன்‌ ஆலயத்தில்‌ வைத்து சுடப்பட்டு ஆலயத்‌துள்‌ போட்டு எரிக்கப்பட்டுள்‌ளனர்‌. 2.8.90 அட்டப்பள்ளத்தில்‌ 40 தமிழர்கள்‌ கைது செய்யப்‌பட்டனர்‌. 5 பேர்‌ சுடப்பட்டு கொல்லப்பட்டனர்‌. வயலில்‌ அரிவு வெட்ட சென்ற 7 பேர்‌ கொல்லப்பட்டனர்‌. 2.8.90 வரை காரைதீவு கிராமத்தில்‌ 108 தமிழர்கள்‌ கொல்லப்பட்டனர்‌. கல்‌முனை 14.6.90 - 20.0.90 வரை மல்வத்தை இராணு முகாமில்‌ இருந்து நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதலில்‌ 85 பொதுமக்கள்‌ கொல்லப்பட்டனர்‌. 60 பேர்‌ காயமடைந்தனர்‌. கல்முனை 1ஆம்‌ 2ஆம்‌ குறிச்‌சியில்‌ 65 வீடுகளும்‌ பாண்டிருப்பில்‌ 30 வீடுகளும்‌ 35 அரசாங்கக் கட்டிடங்களும்‌ சேதத்‌திற்குள்ளாகின. 21.6.90 நீலாவணையில்‌ 25 தமிழர்கள்‌ கொல்லப்பட்‌டனர்‌. 14 கடைகள்‌ கொள்‌ளையடிக்கப்பட்டன. கல்‌முனை நகரில்‌ 40 தமிழர்கள்‌ தீயிட்டுக்‌ கொளுத்தப்பட்டனர்‌. கல்முனை 1ஆம்‌ 2ஆம்‌ குறிச்சிகளில்‌ 340 வீடுகள்‌, பாண்‌டிருப்பில்‌ 210 வீடுகள்‌, நற்‌பிட்டிமுனையில்‌ 35 வீடுகள்‌, சேனைக்குடியிருப்பில்‌ 20 வீடுகள்‌ கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்டன. கல்முனைநகரில்‌ 36 பலசரக்‌குக்‌ கடைகளையும்‌ 10 நகைக்‌ கடைகளையும்‌ கொள்ளையிட்டபின்‌ சேதப்படுத்தினர்‌. 21.6.90 பாண்டிருப்பில்‌ 80 தமிழர்கள்‌ சுற்றிவளைக்கப்‌பட்டு கல்முனையில்‌ உள்ள தமிழர்களின்‌ கடைக்குள்‌ போட்டு எரிக்கப்பட்டனர்‌. இவர்களைத்தேடி இராணுவ முகாமுக்குச்‌ சென்ற 60 பெண்‌கள்‌ பாலியல்‌ வன்முறைக்குள்‌ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்‌. பாத்திமா நகர்‌ அகதிமுகாமில்‌ இருந்து கைது செய்யப்‌பட்ட 90 பொதுமக்கள்‌ கல்‌முனை நகரில்‌ எரிக்கப்பட்டனர்‌. 3. 7. 90 பாண்டிருப்பு மீண்‌டும்‌ சுற்றிவளைக்கப்பட்டு பாண்டியூரன்‌ உட்பட 65 பொதுமக்கள்‌ சுட்டுக்‌ கொல்‌லப்பட்டனர்‌. 28.7.90 மீண்டும்‌ கல்முனையையும்‌, பாண்டிருப்பையும்‌ சுற்றிவளைத்து 35 பொதுமக்களை சுட்டுக்கொன்றனர்‌. இம்‌ 35 பேரும்‌ கல்முனை நகரில்‌ கடை வைத்திருந்த தமிழர்கள்‌ ஆவர்‌. சம்மாந்துறை வீரமுனையில்‌ கைதுசெய்‌யப்பட்ட 40 தமிழர்கள்‌ சம்‌மாந்துறை காவல்‌ நிலையத்‌திற்கு அருகில்‌ உள்ள வீதிகளில்‌ எரிக்கப்பட்டனர்‌. 21.6.90: 20 தமிழர்கள்‌ சுடப்பட்டனர்‌. பின்‌ வீரமுனையில்‌ கைது செய்யப்‌பட்ட 90 தமிழர்கள்‌ சம்மாந்‌துறை சந்தியில்‌ வைத்து எரிக்கப்பட்டனர்‌. 60 வீடுகள் எரிக்கப்பட்டன. 25.6.90 சம்மாந்துறையில்‌ 80 தமிழ்‌ மக்கள்‌ வெட்டியும்‌, சுட்டும்‌ கொல்லப்பட்டனர்‌. 30.6.90 சவளக்கடையில்‌ 6 தமிழர்கள்‌ கொல்லப்பட்‌டனர்‌. 25 வீடுகள்‌ எரிக்கப்‌பட்டன. 1.7.90 சம்மாந்துறையில்‌ 52 தமிழர்கள்‌ கொல்லப்பட்‌டனர்‌. 40 வீடுகள்‌ எரிக்கப்‌பட்டன. சொறிக்கல்முனையில்‌ 85 வீடுகள்‌ எரிக்கப்பட்டன. 2 பெண்கள்‌ பாலியல்‌ வன்‌ முறைக்குள்ளாக்கப்பட்டனர்‌ . 27.6.90 வீரமுனையில்‌ 360 வீடுகள்‌ எரிக்கப்பட்டன. 69 தமிழர்கள்‌ கொல்லப்பட்‌ டனர்‌. 4ஆம்‌ காலணி என்ற கிராமம்‌ முற்றாக அழிக்கப்பட்டது. 35 தமிழர்கள்‌ சுடப்பட்டனர்‌. 280 வீடுகள்‌ எரிக்கப்படடன. மல்வத்தை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி போன்ற கிராமங்கள்‌ முற்றாக அழிக்கப்‌பட்டன. மல்வத்தையில்‌ 170 வீடுகளும்‌ மல்லிகைத்தீவில்‌ 35 வீடுகளும்‌ வளத்தாப்பிட்டியில்‌ 115 வீடுகளும்‌ கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்‌டன. தலைமைச்‌ செயலகம்‌ வி.பு.ம.மு. *****

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.