Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+

Everything posted by நன்னிச் சோழன்

  1. 1986
  2. நிதர்சனம் களப் படப்பிடிப்பாளர்களிற்கான பயிற்சி 2002 ஆனையிறவு இக்களப்பை நோக்கித்தான் சூட்டாளர்கள் சுடுகின்றனர்:
  3. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 21/07/1990 பக்கம்: 2 சுட்டுக்‌ கொலை! யாழ்ப்பாணம்‌, சூலை 21 கடந்த ஞாயிற்றுக்கிழமை (15/07) கல்முனையைச்‌ சேர்ந்த சண்‌முகம்‌ என்பவர்‌ ஜிகாத்‌ இயக்‌கத்தினரால்‌ சுட்டுக் கொல்லப்‌பட்டதாகத்‌ தெரிவிக்கப்பட்‌டது. [உ-9] *****
  4. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 20/07/1990 பக்கம்: 4 சேனைக்குடியிருப்பில் பல வன்செயல் சம்பவங்கள் அம்பாறையிலுள்ள சேனைக்‌குடியிருப்புப்‌ பகுதியில்‌ கடந்த 10 ஆம்‌ திகதி முதல்‌ பல வன்‌செயல்‌ சம்பவங்கள்‌ இடம்‌பெற்றதாக விடுதலைப்‌ புலிகள்‌ வட்டாரங்கள்‌ தெரிவித்‌தன. 10 ஆம்‌ திகதியன்று ஜிகாத்‌ அமைப்பைச்‌ சேர்ந்தவர்களும்‌ இராணுவத்தினரும்‌ இணைந்து 25 வீடுகளையும்‌, இரு கடைகளையும்‌ எரித்துள்ளனர்‌. கோவில்‌ ஒன்றும்‌ கொள்ளையிடப்பட்டபின்‌ தீ இட்டு எரிக்கப்பட்டது. 11ம் திகதி அங்கு போர் விமானங்கள்‌ நடத்திய குண்டு வீச்சில்‌ 3 விவசாயிகளுக்குச்‌ சொத்தமான வயல்‌ நிலங்கள்‌ சேதமடைந்தன. கடத்த ஞாயிற்றுக்கிழமை நான்கு பிள்ளைகளின்‌ தந்‌தையான பொன்னையா பேரின்‌பன்‌ [வயது 35], சிதம்பரம்‌ பாஸ்கரன்‌ [வயது 19] ஆகிய இருவரை படையினர்‌ சுட்டுக்‌கொன்றனர்‌. வேறு மூன்று பேரை உயிருடன்‌ தீயிட்டுக்‌ கொழுத்தினர்‌. - இப்படி அந்த வட்டாரங்‌கள்‌ மேலும்‌ தெரிவித்தன. (உ - 9) *****
  5. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 19/07/1990 பக்கம்: 1 திருமலையில் இடம்பெற்ற அத்துமீறல் சம்பவம் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஒருவார காலத்தில் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் அத்துமீறல் சம்பவங்கள் குறித்து விடுதலைப்புலிகள் வட்டாரங்கள் நேற்று தகவல் வெளியிட்டன. விவரம் பின்வருமாறு: கடந்த வியாழனன்று சீனக்குடாவில்‌ வைத்து குருசாமி துரைரத்‌தினம்‌, அழகையா ஆனந்தன்‌, ஷெல்டன்‌, கந்தையா அந்தோனி, சிவராஜா, அ.டக்ளஸ்‌ ஆகிய ஆறு பேரை இராணுவத்தினர் கைது செய்தனர். கடந்த வெள்ளியன்று, சீனக்குடாவில்‌ சசி என்ற இளம்‌ பெண்ணை சிங்கள ஊர்காவல்‌ படையினர்‌ கடுமையாகத்‌ தாக்கியுள்ளனர்‌. அதே தினம்‌ கப்பற்‌றுறை கடலில்‌ மீன்‌ பிடித்துக்‌கொண்டிருந்த 6 பேரை கடற்‌படையினர்‌ கைது செய்துள்‌ளனர்‌. கடந்த ஞாயிறன்று ஆலங்கேணியில்‌ வைத்து சிதம்பரநாதன்‌ என்பவரை இராணுவத்தினர்‌ சுட்டுக்‌ கொன்றனர்‌. கடந்த திங்களன்று ஆலங்கேணி அகதி முகாமில்‌ வைத்து செல்லையா றேமன்‌, சின்னையா கனகசிங்கம், சிவஞானம்‌, கோணமலை செல்‌லத்தம்பி ஆகிய நான்குபேரை இராணுவத்தினர்‌ கைது செய்‌தனர்‌. அதே தினத்தில்‌ ஆலங்‌கேணியைச்‌ சேர்ந்த சீனித்‌தம்பி கனகசாமி என்பவரை கிண்ணியாவில்‌ வைத்து இராணுவத்தினர்‌ சுட்டுக்‌ கொலை செய்தனர்‌. கடந்த செவ்வாயன்று தம்பலகாமம்‌ 18ஆம்‌ கட்டையைச்‌ சேர்ந்த பரமு என்பவரை கிண்ணியாவில்‌ வைத்து முஸ்லிம்‌ ஊர்காவல் படையினர்‌ சுட்டுக்‌ கொன்றுள்ளனர்‌. - இப்படி விடுதலைப்புலிகள் வட்டாரங்களால் தகவல் தெரிவிக்கப்‌பட்டது. பக்கம்: 3 3 தமிழர்‌ வெட்டிக்கொலை யாழ்ப்பாணம்‌, ஜூலை 19 மட்டக்களப்பு மாவட்டத்‌திலுள்ள நாவிதன்வெளி என்ற இடத்தில்‌ 3 தமிழ்ப்‌ பொதுமக்களை ஜிகாத் இயக்கத்தினர் வெட்டிக் கொன்றனர்‌ என்று விடுதலைப்‌புலிகள்‌ வட்டாரங்கள்‌ தெரிவித்‌தன. வயலுக்கு சென்றுகொண்டிருந்த வேளையில்‌ பின்வருவோர்‌ கொலை செய்யப்பட்‌டனர்‌ என்று அறிவிக்கப்பட்‌டது:-- கறுவல்‌தம்‌பி [சவளக்கடை], ஆனந்தன்‌ [சவளக்கடை], புஸ்பராஜா [நாவிதன்வெளி] (அ- 9) *****
  6. தலைவரின் பாதுகாப்புப் பொறுப்பிலிருந்து வீரச்சாவடைந்த போராளிகள் சிலரின் பெயர் விரிப்பு இவையாவும் தலைவரின் மெய்க்காவலராகக் கடமையாற்றிய பிரியன் என்ற ராதா வான்காப்புப் படையணிப் போராளின் வாக்குமூலம் ஆகும். பெயர் (பதவி நிலை) சிலம்பு/சிலம்பரசன் (ராதா வான்காப்புப் படையணியின் முன்னாள் சிறப்புக் கட்டளையாளர். ஆனந்தபுரம் முற்றுகையினை உடைத்து உணாவில் களித்தரைப் பகுதிக்குள்ளால் பிரிகேடியர் பானுவுடன் வெளியேறியோரில் இவரும் ஒருவர். எனினும் ஆனந்தபுரத்தில் காயமடைந்திருந்தார்.) செந்தில் (ராதா வான்காப்புப் படையணியின் சிறப்புக் கட்டளையாளர். சிலம்பரசன் அவர்களுக்குப் பின்னர் நியமிக்கப்பட்டார்.) சுவர்ணன் (வட்டப் பொறுப்பாளர்) ரட்ணம் மாஸ்டர் சேந்தன் (ஜேசுதாஸ் தாக்குதல் அணியின் நிதிப் பொறுப்பாளர்) குறிஞ்சிக்குமரன் (தலைவரின் முதன்மை மருத்துவர்) ஈழவாணன் (தலைவரின் தனிப்பட்ட உதவியாளர்) வண்ணம் (இரண்டாம் வட்டப் பொறுப்பாளர்.) இகைவேந்தன் (தலைவரின் முதன்மை சமையல்காரர்) தென்றல் (தலைவரின் சமையலோடு தொடர்புடையவர்) பெருவாணன் (தலைவரின் சமையல்காரர்) நக்கீரன் (இரண்டாம் வட்டப் போராளி) அழகரசன் (இரண்டாம் வட்டப் போராளி) தயாளன் (முதன்மை மெய்க்காவலர்களில் ஒருவர். தேவைப்படும் நேரங்களில் இரண்டாம் வட்டப் போராளியாகவும் கடமையாற்றினார்.) ஈகை விடியல் (முதன்மை மெய்க்காவலர்களில் ஒருவர்) கதிரேஸ் (பெறுநர்/ தலைவருக்கு வருபவற்றை பெற்றுக்கொள்பவர்) வள்ளுவன் மாஸ்டர் (சமையளாராகவும் நீண்ட காலம் தலைவரின் மெய்க்காவலராகவும், பின்னர் முதலாம் வட்டப் பொறுப்பாளராகவும் கடமையாற்றினார்) இளங்கோ (முதன்மை மெய்க்காவலர்களில் ஒருவர்) புரட்சி காசி அறிவுமாறன் வள்ளல் (தலைவரின் முதன்மை நிழற்படக்காரர்) பொன் (மெய்க்காவலர்களில் ஒருவர்) முரசு (மெய்க்காவலர்களில் ஒருவர்) தென்னவன் (மெய்க்காவலர்களில் ஒருவர்) மொழியறிவு (மெய்க்காவலர்களில் ஒருவர்) ஐயன்னா அமரர் பி. மதிவதனி அவர்களின் வழங்கல் போராளி: இளந்தீ எண் 1 முதல் 17 வரையுள்ள போராளிகள் யாவரும் இறுதிநாளில் விழிமூடினர். 17 முதல் 28 வரையுள்ள போராளிகள் ஒடுவில் நிலைக்கு முன்னரே சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சில் புலிகளின் படைமுகாம்களினுள் வித்தாகினர். இவர்களில் சிலம்பரசன் அவர்கள் ஏற்கனவே விழுப்புண் அடைந்திருந்து மே 16இற்குப் பின்னர் வீரச்சாவடைந்தார் என்று அறிகிறேன். ரட்ணம் மாஸ்டர் அவர்களோடு வண்ணம் அவர்களும் மே 17 அதிகாலை நடைபெற்ற கேப்பாப்புலவு நோக்கிய ஊடறுப்புச் சமரில் வீரச்சாவடைந்தார். வள்ளுவன் மாஸ்டர் வீரச்சாவடைந்த அந்நிகழ்விலேயே இளங்கோவும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். வள்ளல் அவர்கள் ஏற்கனவே ஒருகாலை இழந்திருந்த நிலையில் தான் களமாடிக்கொண்டிருந்தார். ஆனந்தபுரத்தில் நடந்த சமரொன்றில் காயப்பட்டதால் முற்றுகைக்குள்ளிருந்து வெளியேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அங்கேயே விடுபட வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். ஆதாரம்: மெய்ப்பாதுகாவலர் கூறும் அதிர்ச்சி தகவல் தொகுப்பு & வெளியீடு நன்னிச் சோழன்
  7. கோப்பாய் மாவீரர் துயிலுமில்லக் கட்டுமானப் பணியின் போது
  8. நிதர்சனம் களப் படப்பிடிப்பாளர்களிற்கான பயிற்சி 2002 ஆனையிறவு அற்றை நாளின் மேற்பார்வையாளர் & முதன்மை பயிற்றுநர்: நிதர்சனத்தின் மிரேஸ் (கறுப்புக் கண்ணாடி அணிந்துள்ளவர்)
  9. மாலதி நினைவுதினம் 2004

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.