Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. பண்டாரநாயக்கா பன்னாட்டு வானூர்தி நிலையத்தையும் அதனோடான கட்டுநாயக்கா வான்படைத்தளமும் மீதான கரும்புலித் தாக்குதலின் அழிபாடுகள் 24/07/2001 Erase this watermark and use these images.
  2. பண்டாரநாயக்கா பன்னாட்டு வானூர்தி நிலையத்தையும் அதனோடான கட்டுநாயக்கா வான்படைத்தளமும் மீதான கரும்புலித் தாக்குதலின் அழிபாடுகள் 24/07/2001 "1983 முற்றுத்தெறு" (Holocaust) என்று வருணிக்கப்படும் கறுப்பு சூலை மேற்கொள்ளப்பட்ட 18 வது நினைவு நாளில் இத்தீ மூட்டப்பட்டது! 'இதில் நீங்கள் காணும் பேரூந்துகளின் சாளரங்கள் எல்லாம் சன்னங்களால் துளைக்கப்பட்டன.'
  3. .
  4. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 14/08/1990 பக்கம்: 1 வீரமுனையில்‌ 100 தமிழர்‌ கொலை கொழும்பு, ஆக. 14 சம்மாந்துறைப்‌ பகுதியில்‌ உள்ள வீரமுனைக்‌ கிராமத்‌தில்‌ கோயில்‌ ஒன்றில்‌ தஞ்சம்‌ புகுந்திருந்த தமிழ்‌ அகதிகளில்‌ 21 பேரை முஸ்லிம்கள்‌ சிலர்‌ தாக்கிக்‌ கொலைசெய்தனர்‌. இதனையடுத்து வீரமுனைக்‌ கிராமத்தில்‌ இருந்த சுமார்‌ 4 ஆயிரம் அகதிகளும் அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோயிலுக்கு இடம்மாற்றஞ் செய்யப்பட்டு வருவதாகத் தெரிகிறது இதேசமயம்‌-- வீரமுனைக்‌ கிராமத்தில்‌ சுமார்‌ நூறு தமிழர்கள்‌ முஸ்‌லிம்களினால்‌ படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தமிழ்‌ குழு ஒன்றின்‌ பிரதிநிதி ஒருவா்‌ தகவல்‌ வெளியிட்டதாக ஏஜென்ஸி செய்திகள்‌ தெரிவித்தன. செங்கலடி அரிசி ஆலை ஒன்றில்‌ இருந்த சுமார்‌ 50 தமிழர்கள்‌ முஸ்லிம்‌ குழு ஒன்‌றினால்‌ கொலை செய்யப்‌பட்டு, பின்னர்‌ அவர்கள்‌ உடல்கள்‌ எரிக்கப்பட்டன என்றும்‌ -- அவர்களில்‌ பெரும்பாலானோர்‌ பெண்கள்‌ என்றும்‌ அந்தப்‌ பிரதிநிதி கூறியதாக அச்செய்திகள்‌ மேலும்‌ தெரிவித்தன. ஏறாவூரில்‌ முஸ்லிம்‌கள்‌ கொல்லப்பட்டதற்கான பழி வாங்கல்‌ நடவடிக்கையாகவே வீரமுனை சம்பவம் அமைந்ததாக கொழும்பில் பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையில் ஏறாவூரில் இடம்பெற்ற சம்பவங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 173 ஆக அதிகரித்தது என்றும் மற்றொரு செய்தி தெரிவித்தது. வீரமுனையிலும் ஏறாவூரிலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது. *****
  5. மயிலத்தமடுவின் குரூரமான சிங்களக் குடியேற்ற வரலாறு
  6. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 12/08/1990 பக்கம்: 1 நேற்றும் 15 தமிழர்கள் அம்பாறையில் படுகொலை! சென்னை, ஆக. 12 அம்பாறை மாவட்டத்தில் நேற்றுக்காலை பதினைந்து தமிழ்ப் பொதுமக்கள் ஊர்காவல் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் அமைப்பு ஒன்றின் பிரதிநிதி ஒருவர் இத்தகவல் நேற்றுக் கொழும்பில் வெளியிட்டதாக இந்திய வானொலி நேற்றிரவு அறிவித்தது. (உ-எ) *****
  7. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 11/08/1990 பக்கம்: 1 3 தமிழர்கள் வவுனியாவில் கொலை! கொழும்பு, ஆக. 11 வவுனியா மாவட்டத்தில் சமன்குளம் என்னுமிடத்தில் முஸ்லிம் கோஸ்டி ஒன்று நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் 3 தமிழர் கொல்லப்பட்டனர் என்றும் - 6 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன என்றும் ஏஜென்ஸி செய்திகள் தெரிவித்தன. (உ-எ) பக்கம்: 3 காத்தான்குடிச் சம்பவங்களுக்குப் பழிவாங்கல்: 107 தமிழர் கொலை யு.என்.ஐ. செய்தி குறித்து இராணுவம் மௌனம் காத்தான்குடிக்‌ கொலைகளுக்கு பழிவாங்கும்‌ நடவடிக்கையாக கிழக்கு மாகாணத்தில்‌ 107 தமிழர்கள்‌ கொல்லப்பட்டனர்‌ என்று தெரிவிக்கப்படுகிறது. கல்லாறு பகுதியில்‌ 26 தமிழர்‌ வரிசையாக நிறுத்தப்‌பட்டு சுட்டுக்‌ கொல்லப்பட்‌டனர்‌. அம்பாறையில்‌ 12 தமிழர்‌ கொல்லப்பட்டனர்‌. சவளக்‌கடையில்‌ 12 தமிழர்‌ ஊர்காவல்‌ படையினரால்‌ கொல்லப்பட்டனர்‌. யு. என்‌. ஐ. செய்தியாளருக்கு மட்டக்களப்பில்‌ இருந்து தொலைபேசி மூலம்‌ அளித்த பேட்டி ஒன்றில்‌ விடுதலைப்‌ புலிகள்‌ மட்டக்‌களப்பு மாவட்டத்‌ தலைவர்‌. கரிகாலன்‌ இவ்விவரங்களைத்‌ தெரிவித்தார்‌. காத்தான்குடி, சம்பவத்துக்‌கும்‌ விடுதலைப்‌ புலிகள்‌ இயக்‌கத்திற்கும்‌ தொடர்பே கிடையாது என்றும்‌ திரு. கரிகாலன்‌ சொன்னார்‌. கிழக்கில்‌ தமிழர்‌ கொலைசெய்யப்பட்டனர் என்ற செய்தியை இராணுவத்தினர் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லையென்றும் 'யு.என்.ஐ.' தெரிவித்தது. (இ- எ) *****
  8. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 08/08/1990 பக்கம்: 1 அம்பாறையில் 40 தமிழர் படுகொலை அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழர் கிராமம் ஒன்றில் வைத்து 40 தமிழ்ப் பொதுமக்கள் ஆயுதம் தாங்கிய முஸ்லிம் குழு ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டனர். ரெலோ இயக்கப் பிரமுகர் ஒருவர் கொழும்பில் இத் தகவலை வெளியிட்டார். கிழக்கிலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலைக்குப் பின்னர் இருநூறுக்கும் அதிகமான முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதனையடுத்து அம்பாறையில் தமிழர் படுகொலைசெய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனிடையில் - விடுதலைப்புலிகள் அல்லாத மற்றையை ஆறு தமிழ் குழுக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று கொழும்பில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் கிழக்கு நிலைமை பற்றி பேச்சுவார்த்த நடத்தியதாகக் கூறப்பட்டது. ***** தொகுப்பாளர் குறிப்பு: இப்படுகொலையின் பெயர் திராய்க்கேணி படுகொலை என்பதாகும். இது தொடர்பில் மேலும் வாசிக்க:
  9. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 04/08/1990 பக்கம்: 6 15 தமிழர் வெட்டிக்கொலை? யாழ்ப்பாணம், ஆகஸ்ட் 4 பொத்துவில் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றிலிருந்த 15 தமிழர்களைக் கடந்த திங்களன்று 'ஜிகாத்' அமைப்பைச் சேர்ந்தோர் என்று கருதப்படுபவர்கள் வெட்டிக்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. [உ- 9] *****
  10. இல்லை திண்ணை நல்லம். புதியவர்களை கவரும். ஏதேனும் அவசரமெனில் உடனேயே தெரிவிக்கலாம்.இவ்வாறாக சில நன்மைகள் உண்டு
  11. நியானி சொன்னது போன்று திண்ணை நீக்கப்பட்ட பின்னர் யாழ் களம் நல்ல வேகமாக இயங்குகிறது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.