Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+

Everything posted by நன்னிச் சோழன்

  1. சிவாஜிலிங்கம் வலுவாக பொளக்கப்பட்டார்... என்ன இந்தாள் இப்படியெல்லாம் சுத்துமாத்து விட்டிருக்கிறார்.
  2. ‘இமயமலைப் பிரகடனத்துக்கும் எமக்கும், ஜனாதிபதிக்கும் தொடர்பு எதுவுமில்லை’ இமயமலைப் பிரகடனத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலோ அல்லது அப்பிரகடனத்துக்கும் தமக்கும் இடையிலோ எவ்விதத் தொடர்பும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும் சந்தேகப்படுதலுமின்றி சமமான உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய ஒரு இலங்கை உருவாக்கப்பட வேண்டும் என்ற தொனிப்பொருளை மையப்படுத்திய 'இமயமலைப் பிரகடனம்' உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கடந்த வாரம் கையளிக்கப்பட்டது. அப்பிரகடனத்தை முற்றாக நிராகரித்தும், உலகத் தமிழர் பேரவையின் செயற்பாட்டைக் கண்டித்தும் கருத்து வெளியிட்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 'அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் இதுவரை காணாத பாரிய சரிவொன்றைச் சந்திக்க நேரும் என்பதால் தமது வாக்கு வங்கியைப் பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளை, தமது உதிரிகளான உலகத் தமிழர் பேரவையின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அங்கீகாரத்தை வழங்கும் மறைமுக நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டிருக்கின்றது' என்று குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் வினவியபோதே எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு பதிலளித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:- “இந்தப் பிரகடனத்துக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அதேபோல் இதில் எமக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. உலகத் தமிழர் பேரவையும், பௌத்த பிக்குகளும் இணைந்து நடத்திய பேச்சுகளின் நீட்சியாக, அதனை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டதொரு செயற்றிட்டமே இந்தப் பிரகடனமாகும். “இதில் அதிகாரப் பகிர்வு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்கள் மிக முக்கியமாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக 'ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வு' என்ற சொற்பதம் பௌத்த பிக்குகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. “அதேபோன்று பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. இதுபற்றி மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடப்பட்டிருப்பதுடன் அவர்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். “எனவே, அடுத்தகட்டமாக இப்பிரகடனம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதிலேயே அதன் செயற்றிறன் தங்கியுள்ளது. அதேவேளை, உலகத் தமிழர் பேரவை எம்முடன் நடத்திய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தப் பிரகடனத்தை வரவேற்று எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருந்தார். இவற்றுக்கு அப்பால் எமக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை.' - என்றார். (காலைமுரசு) https://tamilleader.lk/news/10088-2023-12-15-03-52-59
  3. என் மனதில் உதித்தது... இந்த அண்ணாக்கள் தங்களால் இயன்றளவு வரலாறுகளை எழுதி ஆவணப்படுத்தலாம். அவை எதிர்கால தலைமுறைகளுக்குப் பயனுள்ளதாக அமையும். அன்னவர்கள் எழுதும் கட்டுரைகளை வெளியிடுவதற்குப் பல ஊடகங்கள் உண்டு; பிற ஊடகங்களுக்கு/வலைத்தளங்களுக்கு அனுப்பத் தயக்கம் இருந்தால் யாழிலையே எழுதி விடலாம். கட்டுரையாகத் தான் வேண்டுமென்றில்லை. சிறு சிறு பத்திகளாகக் கூட எழுதட்டும், ஒரே திரி திறந்து. நாசகாரிகள் வரலாறுகள் வெளியில் வரக்கூடாதென்று முக்காலத்திலும் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டிக் கொண்டேதான் இருப்பாங்கள். இருந்தாலும் இந்த அண்ணாக்களுக்கு எப்பவும் மக்களின் ஆதரவு இருந்துகொண்டே இருக்கும், அந்தக் காலத்தில் இருந்த மாதிரி. இயக்கத்தில் மெய்யாக இருந்து போராடியவர்கள் எழுதும் வரலாறுகளுக்கு எப்போதும் மக்கள் வரவேற்பு உண்டு🤩. ஆனால் இரண்டு நாட்கள் இருந்துபோட்டு, தண்டனை பெற்று வெளியேறிப் போய், வயிற்றுப் பிழைப்பிற்கு இயக்கத்தையும் விடுதலைப் போராட்டத்தையும் நக்கல் செய்து நாசமாக்கும் வண்ணமோ அல்லது இறந்தோரின் பெயராலோ புத்தகம்☢️ எழுதுகிறவங்களுக்கு🤬 எப்பையும் செருப்படி🫨 தான். அதில் மாற்றமில்லை🤪.
  4. நிராஜ் டேவிட் அவர்களின் இந்த மூன்று நிகழ்படங்களுக்கும் வந்துள்ள கருத்துக்களை வைத்துப் பார்க்கும் போது (எல்லாம் இந்த நிகழ்படங்களில் பேசுபவர்களை குறிவைத்து) இந்த துவாரகா திட்டம் என்பது ஒரு பாரிய நாசகார திட்டம் ஒன்றை பின்வைத்தே நிகழ்த்தப்பட்டுள்ளது. அத்திட்டமானது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல் முற்றாக தோற்கடிக்கப்பட்டதால் ஏற்பட்ட வெறுப்பால் பல போலிக் கணக்குகளில் வந்து பேச்சாளர்களை நோக்கித் தூசணங்களையும் பல்வேறு அருவருக்கத்தக்க குற்றச்சாட்டுகளையும் ஏவல்செய்கின்றனர், இந்த மோசடிக் கும்பலின் ஆட்கள்... எனவே, இச்சதியை முறியடிக்காமல் விட்டிருந்தால் இதனால் ஏற்பட்டிருக்கக்கூடிய தாக்கங்களை எண்ணிப் பாருங்கள். குறிப்பாக இந்தியாவிற்கான ஏதோ ஒரு வகையான நன்மையும் இந்தத் திட்ட வெற்றியின் பெறுபேறுகளில் ஒன்றாக இருந்திருக்கிறது என்பதை இந்த மித்துஜா வெளிவர முன்னர் இந்திய அரசியல் யூரியூப்பர்கள் தலைவர் மாமாவின் குடும்பம் தொடர்பில் பரப்பிய கதைகளை கவனிக்கும் போது புலப்படுகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.